அண்மையில் ஒரு உணவகத்துக்குக் குடும்பமாக இரவு உணவுக்காகச் சென்றிருந்தோம். வாரத்தில் ஒருநாள் அல்லது நேரமில்லாவிட்டால் சிலவேளை மாதத்தில் ஒருநாள் எப்போதாவது இவ்வாறு வெளியே போய் உற்சாகமாக இருப்பதுண்டு. கிட்டத்தட்ட இருமாத காலத்துக்குப் பின் இவ்வாறு இரவு உணவுக்காக ஒன்றாக வெளியே போயிருந்தோம்!
அந்த உணவகம் ஆரம்பித்தக் கொஞ்ச நாள் (வழமை போல் இம்முறையும் பெயர் சொல்லமாட்டேன்) இடம் சிறிதாக இருந்தாலும் பெரிதாகக் கூட்டம் இல்லாததால் நிம்மதி! உணவும் ஓடர் செய்து கொஞ்ச நேரத்திலேயே வந்தது ருசியும் மோசமில்லை.
பரிமாறியவர் எங்களுக்கு கட்டணத்துக்கான பில்லைக் கொண்டு வர முன் என்னுடைய அருமைத் தந்தையார் கழிவறைக்கு செல்ல வேண்டுமென்று கேட்டுப் போனார்.
அவர் போய் வரவும் பில்லைக் கடைச் சிப்பந்தி கொண்டு வரவும் நேரம் சரியாக இருந்தது.
அந்த நேரம் பார்த்து கழிவறை சென்று வந்த மனமார்ந்த நிம்மதியுடன் என்னுடைய அப்பா அந்த சிப்பந்தியைப் பார்த்து அப்பாவித்தனமாக சொன்னார்.
'தம்பி இண்டைக்குத்தான் முதல் தடவையாக இங்கே வந்தனாங்கள் - சாப்பாடு அருமை – உங்கடை டொய்லெட் - அதைவிட அருமை!'
11 comments:
அந்த சிப்பந்தி அதற்கென்ன பதில் சொன்னார்?
ஹாஹாஹா...உங்கட தந்தையாருக்கு உங்கள விட குசும்பு தான் போங்க..
நல்ல இருந்தது என்கிறீங்களா, இல்ல ரொம்ப மோசம் என்கிரீங்கள? அது என்ன ரணகளம்?
அந்த சொல்லை பதிவில் ஒரு இடத்திலும் பார்க்க முடியவில்லையே? நீங்களும் தமிழ் சினிமா ஸ்டைல் இல் சம்பந்தமில்லா தலைப்பு கொடுக்கணும் என்று முடிவு எடுத்தாச்சா? வாரணம் ஆயிரத்துல வார அஞ்சல ஏன்டா பெயர் மாதிரி குழப்புது..
:D
//வழமை போல் இம்முறையும் பெயர் சொல்லமாட்டேன்\\
சரி சரி, அதுதான் சூடு கொஞ்சம் கம்மி!
:(
வஞ்சப் புகழ்ச்சி அணி என்றொண்டு உள்ளது அல்லவா? அதைப்போல் உள்ளது.
குழப்பம் இருக்கு ஆனால் இல்லை...
அந்த கடையின் பெயரை சொன்னா நாங்களும் போய் இருந்துட்டு மன்னிக்கவும் சாப்பிட்டு வரலாம் தானே??
athu sari loshan appathane apdi than comedy panuvar.. son also knw.
ok i write a link here dont delete pls...
http://2009tamil.blogspot.com/2009/01/blog-post_29.html
ஈழத்தமிழருக்காய் தன் உயிர் நீத்த அந்த மாமனிதருக்கு முத்துக்குமார் என் கண்ணீர் அஞ்சலி.அவர் பிரிவால் வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு ஈழத்தமிழர் சார்பில் என் ஆழ்ந்த அனுதாபங்கள்
ஆதித்தன் .
//அந்த சிப்பந்தி அதற்கென்ன பதில் சொன்னார்?//
வேற என்ன சொல்லி இருப்பார்.. அசடு வழிந்த படி நன்றி சொன்னார்..
தியாகி
//ஹாஹாஹா...உங்கட தந்தையாருக்கு உங்கள விட குசும்பு தான் போங்க..//
அங்கே இருந்து தானே இங்கேயும் வந்திருக்கும்.. ;)
என்ன கொடும சார் -
//வாரணம் ஆயிரத்துல வார அஞ்சல ஏன்டா பெயர் மாதிரி குழப்புது..//
அந்த அஞ்சலா உங்களை விடுற மாதிரி இன்னும் இல்லை.. ;) (ஒரு வேளை அஞ்சலா ஜவேரியை சொல்லி இருப்பாங்களோ???)
//அது என்ன ரணகளம்?//
ரணகளம் என்றால் என்ன என்று நம்ம வைகைப் புயல்,எதிர்கால பத்மஸ்ரீயைக் கேட்டுப் பாருங்கோ..
//அந்த சொல்லை பதிவில் ஒரு இடத்திலும் பார்க்க முடியவில்லையே? நீங்களும் தமிழ் சினிமா ஸ்டைல் இல் சம்பந்தமில்லா தலைப்பு கொடுக்கணும் என்று முடிவு எடுத்தாச்சா? //
ஐயா பதிவுலகில இதெல்லாம் சகஜமப்பா.. ;)
நன்றி ஆதிரை,டொன் லீ, கலை - இராகலை
சுபாங்கன்,
////வழமை போல் இம்முறையும் பெயர் சொல்லமாட்டேன்\\
சரி சரி, அதுதான் சூடு கொஞ்சம் கம்மி!//
பெயரை சொன்னா சுடுமா? சும்மா போங்கையா..அடுத்தமுறை அந்தப் பக்கம் எனக்குப் போக முடியாமப் போயிடும்.. ;)
நன்றி ஆ இதழ்கள்..
//வஞ்சப் புகழ்ச்சி அணி என்றொண்டு உள்ளது அல்லவா? அதைப்போல் உள்ளது.//
உயர்வு நவிற்சி என்றும் சொல்லலாமா/ ;)
Sinthu
//குழப்பம் இருக்கு ஆனால் இல்லை...//
இதிலேயே குழம்பின்நீங்கன்னா எதிர்காலத்திலே வலையுலகம் உங்களை மேலும் குழப்பிக் குதறியெடுக்கும்.. ;)
கார்த்தி
//அந்த கடையின் பெயரை சொன்னா நாங்களும் போய் இருந்துட்டு மன்னிக்கவும் சாப்பிட்டு வரலாம் தானே??//
அதுக்காகத் தானே சொல்ல மாட்டேன் என்று சொன்னேன்.. ;) அஸ்கு புஸ்கு.. நீங்க எல்லாம் அதை public toiletஆ பாவிச்சா?நான் இல்லையா சாபம் வாங்குறது..
2009 Tamil
//athu sari loshan appathane apdi than comedy panuvar.. son also knw.//
அப்படிங்களா? ;)
நண்பரே கீழே நீங்கள் குறிப்பிட்டுள்ள அஞ்சலி விஷயத்தை அதற்கான என் பதிவுள்ள பகுதியிலேயே போட்டிருந்தால் பொருத்தமாகவும் இருந்திருக்கும்.. நகைச்சுவைக் கதைக்குக் கீழ் வந்துள்ளது சரியில்லை இல்லையா?
Post a Comment