January 31, 2010

இளையவர்கள் வருகிறார்கள் கவனம் .. 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் உலகக் கிண்ணம்-ஒரு சிறிய அலசல்



நடந்து முடிந்த 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டித் தொடரை நேற்று ஆஸ்திரேலியா தன் வசப்படுத்தியுள்ளது.

இத் தொடர் ஆரம்பிக்கு முன் ஆஸ்திரேலிய இளைஞர் அணியை விடப் பலரும் அதிகம் பேசிக்கொண்ட அணிகள் இந்தியா, தென் ஆபிரிக்கா மற்றும் இங்கிலாந்து. இவை மூன்றுமே அரை இறுதியைக் கூட எட்டவில்லை.

சொந்த ஆடுகளங்களில் மிக எதிர்பார்க்கப்பட்ட நியூ சீலாந்து அணிக்கு கிடைத்தது ஏழாம் இடமே.
இலங்கை அணியும் மேற்கிந்தியத் தீவுகளும் காட்டிய திறமை இந்த இரு அணிகளுக்குமே எதிர்காலம் பிரகாசமானது என்பதைக் காட்டியுள்ளது.

ஆரம்பத்தில் தடுமாறிய மேற்கிந்தியத் தீவுகள் இறுதியில் மூன்றாம் இடத்தை வசப்படுத்தியது.

இலங்கை அணி இத்தொடர் முழுவதும் இறுதிவரை போராடிய அணிகளுள் ஒன்றாகத் தடம் பதித்து பெருமையோடு நான்காம் இடத்தைப் பெற்று நாடு திரும்பியுள்ளது.
இவர்களில் பல வீரர்களுக்கு நட்சத்திர அந்தஸ்து இப்போதே கிடைத்துள்ளது.

அரை இறுதியில் ஆஸ்திரேலிய அணியுடன் கடுமையாகப் போராடி இறுதிவரை விறுவிறுப்பாக சென்ற போட்டியில் ஆஸ்திரேலியா மயிரிழையில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு சென்றது.

மேற்கிந்தியத் தீவுகளுடனும் மிகப் பெரிய ஓட்ட எண்ணிக்கையைப் பெற்றும் கடைசிக் கட்டம் வரை சென்ற மூன்றாம் இடத்துக்கான போட்டியில் தோற்றுப் போனது.

கடந்த முறை சாம்பியனான இந்தியாவுக்கு ஆறாம் இடம் கிடைத்தது.
ஒரு சுவாரஸ்ய படம்
உயர வித்தியாசம் பாருங்கள்.. உயரமானவர் ஆஸ்திரேலிய அணித்தலைவர் மிட்செல் மார்ஷ், குள்ளமானவர் பாகிஸ்தானிய அணித்தலைவர் அசீம் கும்மான்

இறுதிப் போட்டி ஆஸ்திரேலிய பாகிஸ்தானிய அணிகளின் இளையவர்களின் மனத்திடம், நிதானம்,நம்பிக்கை போன்றவற்றை சோதிக்கும் ஒரு களமாக அமைந்தது.

ஆரம்பத்தில் விக்கெட்டுக்களை இழந்து தடுமாறிய ஆஸ்திரேலியா 207 ஓட்டங்களை தட்டுத் தடுமாறி எட்டிப் பிடிக்க, அந்த சிறிய ஓட்ட எண்ணிக்கையை துரத்திப் பிடிக்க முடியாமல் பாகிஸ்தான் சுருண்டு தோற்றுப் போனது.

ஒரு பக்கம் தங்கள் மூத்தவர்கள் டாஸ்மன் நீரிணை தாண்டி பக்கத்து நாட்டிலே ஆஸ்திரேலியாவிடம் அடி மேல் அடி வாங்குவதற்கு நேற்றைய இறுதிப் போட்டியிலே பாகிஸ்தான் இளையவர்கள் பதிலடி கொடுப்பார்கள் என்று பார்த்தால், மூத்தவர்களுக்கு தாங்கள் சளைத்தவர்கள் என சுருண்டுவிட்டார்கள்.

ஆஸ்திரேலிய அணி இளையவர்கள் காட்டிய பொறுப்புணர்ச்சியும், வெள்ளவேண்டியதன் தீவிரமும் அவர்களது எதிர்கால இலட்சியங்களையும், சமகால ஆஸ்திரேலிய கிரிக்கெட் கட்டமைப்பையும் காட்டுகின்றன.

பொருத்தமான அணி தான் சம்பியனாகியுள்ளது.
இளம் வேகப்பந்துவீச்சாளர் ஹேசில்வூட்

இந்த அணியில் நேற்று 4 விக்கெட்டுக்களை வீழ்த்தி போட்டியை வென்று கொடுத்து போட்டியின் சிறப்பாட்டக்காரர் விருதை வென்ற ஹேசில்வூட், அலிஸ்டயர் மக்டர்மொட்(முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளரின் புதல்வரே தான்),அணித் தலைவரான மிட்செல் மார்ஷ் (இவரும் ஒரு வாரிசே.. தந்தையார் ஜெப் மார்ஷ், தமையன் ஷோன் மார்ஷ் ஆஸ்திரேலியாவின் தற்போதைய ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்) ஆகியோரும் இன்னும் சிலரும் இப்போதே உள்ளூர் பிராந்தியப் போட்டிகளில் தத்தம் மாநில அணிகளில் விளையாடி வருகின்றார்கள்.
உலகக் கிண்ணத்துடன் மிட்செல் மார்ஷ்

பாகிஸ்தானின் சர்மாத் பாட்டி பந்துவீச்சில் நேற்று பிரகாசித்தது போல ஆஸ்திரேலியாவின் ஹேசில்வூட் மற்றும் சுழல் பந்துவீச்சாளர் டோரனும் ஜொலித்தனர்.

ஆஸ்திரேலியாவின் சகலதுறை வீரர் ரிச்சர்ட்சனின் துடுப்பாட்டம் என்னைக் கவர்ந்தது. அவரது இறுதிநேர முக்கியமான ஓட்டங்கள் தான் போட்டியை ஆஸ்திரேலிய பக்கம் மாற்றி இருந்தது.

சகலதுறைவீரர் கேன் ரிச்சர்ட்சன்

19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணத்தை ஆஸ்திரேலியா வென்றிருப்பது இது மூன்றாவது தடவை.

19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணம் பற்றிய எனது முன்னைய பதிவையும் வாசியுங்கள்.


ஆஸ்திரேலிய அணியின் வாய்ப்புக்கள் குறித்து அப்போதே சொல்லிவைத்திருந்தேன்.

இந்த உலகக் கிண்ணம் தந்துள்ள களம் எத்தனை எதிர்கால நட்சத்திரங்களைத் தரப்போகிறது பார்க்கலாம்..

நியூ சீலாந்தின் ஸ்விங் ஆடுகளங்களில் உலகின் பிரபல துடுப்பாட்ட வீரர்களே தடுமாறும்போது சிறப்பாகப் பிரகாசித்த தென் ஆபிரிக்காவின் ஹென்ரிக்ஸ் (391 ஓட்டங்கள்) தொடரின் சிறப்பாட்டக்காரர் விருதைப் பெற்றார்.

அத்துடன் சிறப்பான நேர்த்தியான துடுப்பாட்டங்களை வெளிப்படுத்தியிருந்த இலங்கை,பாகிஸ்தானிய துடுப்பாட்ட வீரர்களையும், ஆசிய அணிகளின்(பங்களாதேஷையும் சேர்த்தே) வேகப் பந்துவீச்சாளர்களையும் மன நிறைவோடும்,நம்பிக்கையோடும் பாராட்டலாம்.

சிரேஷ்ட வீரர்களே கவனமாயிருங்கள்.. உங்கள் இடங்களைக் குறிவைத்து திறமையும்,வேகமும் கொண்ட இளைஞர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள்.


இன்று நடந்த இரு முக்கிய விளையாட்டு நிகழ்வுகளான பெடரரின் ஆஸ்திரேலிய வெற்றி, ஆஸ்திரேலியாவின் 5-0 whitewash பெரு வெற்றி பற்றி அடுத்த பதிவிலே தருகிறேன்.

January 30, 2010

ஜனாதிபதி தேர்தல் - சில சந்தேகங்கள்


தேர்தல் ஆணையாளரால் வெற்றியாளருக்கு வாழ்த்து..
நல்லா சிரிக்கிறாங்கப்பா..


ஜனாதிபதித் தேர்தல் முடிந்தது.

மீண்டும் மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகியுள்ளார்.

வடக்குத் தமிழர்கள் புறக்கணித்த 2005 தேர்தலில் மிக சொற்ப வாக்குகளால் வென்றவர். இம்முறை (வடக்குத் தமிழர்கள் பலபேர் பலவிதமாக வாக்களிக்க மறுக்கப்பட்ட நிலையிலும்) 19 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பெரு வெற்றியீட்டியுள்ளார்.

அரசுக்கு எதிரான – பொன்சேகா ஆதரவு அலை மிக வலுவாக வீசுகிறது என்று பரவலாக நம்பப்பட்டு, அரச தரப்பு அமைச்சர்களே பயந்து நடுங்கிக்கொண்டிருந்த வேளையிலும் தப்பித்தவறி மகிந்த மீண்டும் வென்றாலும் அது மிக சொற்ப சதவீதத்தாலோ அல்லது மீள் எண்ணுகையாலோ மட்டுமே சாத்தியம் எனக்கருதப்பட்ட நிலையில் இந்தப் பாரிய வெற்றி அனைவருக்குமே ஆச்சரியம் தந்துள்ளது.

புல்லட்டின் பதிவிலிருந்து சுட்டபடம்..
புல்லட்டின் நச் கமென்ட்
பச்சை பொன்சேகா வென்ற இடங்கள் .. நீலம் மஹிந்த வென்ற இடங்கள்..
பச்சையை பாத்தால் முந்தி எங்கேயோ பார்த்த இடம் போல இருக்கிறது... :P


எந்தவித மோசடிகளுமில்லாத வாக்களிப்பு எனச்சர்வதேச கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். தேர்தல் ஆணையாளரும் நீதியும் சுதந்திரமுமான தேர்தல் என்றுள்ளார். ஜனாதிபதியையும் அரசையும் கடுமையாக விமர்சித்து வந்த பல ஊடகங்களும் மிகச்சொற்ப முனுமுனுப்புக்களோடு அமைதியாகிவிட்டன.

மகிந்த அரசின் மீது எப்போதுமே எதிர்ப்பு, திருப்தியின்மை காட்டி வரும் தமிழ் பேசும் பிரதேசங்களில் படுதோல்வி கண்டுள்ள மகிந்த ராஜபக்ஷ (வடகிழக்கு மட்டுமல்ல, நுவர எலிய, கொழும்பில் தமிழ் பேசும் பிரதேசங்களிலும் தான்) மற்றைய இடங்களிலெல்லாம் அதற்கெல்லாம் பலமடங்கு வாக்குகளை குவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகளும், தோற்றுப்போன ஜெனரல் சரத் பொன்சேகாவும் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், தேர்தல் முடிவுகளில் நம்பிக்கை இல்லை என்றும் கூக்குரல் எழுப்புவதைத் தோற்றுப்போனவர்களில் ஏமாற்றப் புலம்பல் என்று இலகுவாகத் தட்டிக்கழித்துவிட்டாலும்
சில சந்தேகங்கள் எழுவதைத் தவிர்க்க முடியாதுள்ளது.

இப்போது ஒவ்வொரு பக்கத்தால் கிளம்பும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இன்னும் பல சந்தேகங்களை எழுப்பலாம்

1.தேர்தலுக்கு முந்திய வாரம் வரை வந்த சகல கருத்துக்கணிப்புக்களும் தலைகீழாகப் பொய்த்துப் போனது எவ்வாறு?

2. ரணில் விக்ரமசிங்க 2005இல் பெற்றதைவிட, அவரைவிட அதிகளவு ஆதரவும், வரவேற்பும் பெற்றவராகக் கருதப்பட்ட, சரத் பொன்சேகா இம்முறை குறைவாக வாக்குகள் பெற்றது எப்படி?

3. தேர்தலுக்கு முதல்நாள் கூட அரச ஆதரவு ஊடகங்கள், அரசாங்கம், அரச ஆதரவுக் கட்சிகள் முறைகேடாக நடப்பதாகவும், நீதியாகவும் சுதந்திரமாகவும் தேர்தலை நடத்த முடியாது தடையாக இருப்பதாகவும், தான் பொறுமையை இழந்துவிட்டதாகவும் கடுமையாகக் கவலை தெரிவித்து, இந்தக்காரணங்களுக்காக பதவி விலகுவதாகத் தெரிவித்த தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க, தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு - இது நீதியாகவும் சுதந்திரமாகவும் நடந்த தேர்தல் என அமைதியாகவும் கூறியது ஏன்?

4.அப்படியிருந்தும் அவர் இன்னும் பதவி விலகும் முடிவை மாற்றாததும், அதற்காக அவர் குறிப்பிட்ட காரணங்களை இன்னும் மாற்றாமைக்கும் என்ன காரணம்?

5.தேர்தல் ஆணையாளர் பற்றி இடை நடுவே எழுந்த பல்வேறு பரபரப்புக்கள்,அவரது கையெழுத்துக் குழப்பம் பற்றி இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லையே?

6.இம்முறை தேர்தல் முடிவுகளை வெளியிட்ட முறை மாற்றப்பட்டது ஏன்?

7.அதிகாலையிலேயே வெளியிட்டிருக்கப்படக்கூடிய பல முடிவுகள் வேண்டுமென்றே காலதாமதப்படுத்தப்பட்டமைக்கான காரணம் எது?
வழமையாக ஆளும் தரப்புக்கு சாதகமான முடிவுகள் முதலில் வெளியிடப்பட்டு பின்னர் ஆளும் தரப்பு தோல்வியுற்ற முடிவுகள் வெளியிடப்படுவது வழமை தானெனினும் இம்முறை பல குழப்பங்களை இது ஏற்படுத்தியது.


தேர்தல்கள் செயலகத்தால் அனுப்பப்பட்ட உத்தியோகபூர்வ தேர்தல் முடிவு ஒன்று

8.தமிழர்கள் ஒருவரேனும் இருப்பது சந்தேகமான பிபிலை, மொனராகலை, மஹியங்கனை, தென் மாகாணத்தின்,சபரகமுவா மாகாணத்தின் பல இடங்களில் சிவாஜிலிங்கத்துக்கு கணிசமான வாக்குகள் கிடைத்தது எப்படி? சிங்களவர் இனபேதம் மறந்து சிவாஜியாரைத் தெரிவு செய்தனரா?

9.வன்னி மாவட்டம், யாழ்ப்பாண மாவட்டம் போன்ற சிங்களவர் அரிதான மிக அரிதான இடங்களில் கூட சீலரத்ன தேரருக்கும், மகிமன் ரஞ்சித், அச்சல சுரவீர போன்றோருக்கும் கணிசமான வாக்குகள் கிடைத்தது எப்படி?

10.அத்துடன் தபால் வாக்குகள் தவிர ஏனைய எல்லா வாக்குப் பதிவுகளிலும் ஒரு வேட்பாளருக்கும் ஒரு வாக்கேனும் கிடைக்காமல் போகவில்லையே? அது எப்படி?

11.இம்முறை சரத் போன்செக்காவுக்கு தேர்தலில் கிடைத்த வாக்குகள்
மகிந்த அரசுக்கு எதிரான வாக்குகளா?
பொன்சேகாவுக்கு ஆதரவான வாக்குகளா?
தமிழ் தேசியக் கூட்டமைப்பும்,முஸ்லிம் காங்கிரசும் கேட்டதற்காக மக்கள் அவர்களைத் தம் பிரதிநிதிகளாக ஏற்றுக் கொடுத்த வாக்குகளா?

12.கணினிமயப்படுத்தப்பட்ட வாக்கு எண்ணிக்கையில் மோசடி செய்யப்பட்டுள்ளது என எதிர்க்கட்சிகள் சுற்றம் சுமத்துவது போல செய்ய இயலுமா? அவ்வாறு செய்யப்பட்ட மோசடி நிரூபிக்கப்பட்டால் (எப்படி நிரூபிக்கலாம் என்பது இன்னொரு சந்தேகம்) மீண்டும் தேர்தல் நடத்தப்படுமா அல்லது உண்மையான வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் வெற்றியில் மாற்றம் வருமா?

13.மறுபக்கம் தமிழ்பேசும் மக்களின் வாக்குகள் பெரியளவில் இல்லாமலேயே மீண்டும் அசுர பலத்தோடு பதவியேற்கும் ஜனாதிபதி தமிழ் பேசுவோரைக் கவர நடவடிக்கை எடுப்பாரா? அல்லது தமிழில் பேசுவதை இனிக் குறைத்து தமக்கு வாக்களித்தோரை மட்டும் கவனிக்கப் போகிறாரா?

14.நேற்று இந்தியாவின் NDTV தொலைக்க்காட்சிக்கு வழங்கிய பேட்டியில் ஜனாதிபதி ஒரு விஷயம் சொன்னார் " தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு தீர்வு என்னிட்ம் இருக்கிறது. எனினும் அதை பெரும்பான்மையானவர்களான சிங்களவரின் சம்மதத்துடனேயே வழங்கவேண்டும். எனவே பெரும்பான்மையினரின் சார்பாக சிந்தித்தே அது பற்றி நடவடிக்கை உள்ளேன்" .. அப்படியானால் 13வது திருத்த சட்டத்துக்கு மேலாக எதுவுமே நடக்காதோ?

15.தன்னுடன் சேர்ந்திருக்கும் சிறுபான்மை அரசியல் தலைவர்கள்,கட்சிகள் பெற்றுத் தராத சிறுபான்மை வாக்குகளைப் பெறுவதற்காக அதிக மக்கள் ஆதரவு பெற்ற ஏனைய சிறுபான்மைக் கட்சிகளை ஜனாதிபதி நாடுவாரா?

இதெல்லாம் அரசியலில் அப்பாவியான எனக்கு வந்த சந்தேகங்கள்..
உங்களையெல்லாம் விட்டால் யார் உள்ளார்கள்? தெரிந்தவர்கள்,தெளிந்தவர்கள் (தீர்த்துக்கட்டாமல்) தீர்த்துவைக்கலாம்..

January 27, 2010

மக்கள் தலைவன் மகிந்த வாழ்க


வெளிவந்துகொண்டிருக்கும் தேர்தல் முடிவுகளில் பாதிக்கு மேலே வெளிவந்துள்ள நிலையில், இப்போதே 15 லட்சம் வாக்குகளால் முன்னிலை பெற்றுள்ளார் அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச.தனது இரண்டாவது பதவிக்காலத்தை வளமான எதிர்காலம் நோக்கியதாக ஆரம்பிக்க இருக்கின்ற மக்களின் மன்னனுக்கு வாழ்த்து சொல்லும் பதிவு இது.

சதவீத அடிப்படையிலும் இனி ஜெனரல் சரத் பொன்சேகாவினால் நெருங்க முடியாது.
சிறுபான்மையினரின் வாக்குகள் பெருமளவில் பொன்செகாவுக்குக் கிடைத்தும், பெரும்பான்மை மக்களின் நம்பிக்கை வென்ற மக்கள் தலைவன் மகிந்த ராஜபக்ச மிகப் பிரமாண்டமான வெற்றியைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா 94ஆம் ஆண்டு நிகழ்த்திய வாக்குகளின் சாதனையை இப்போது நெருங்கிக் கொண்டிருக்கிறார்.மகத்தான வெற்றி இது..

மோசடி,வன்முறை என்று யார் இனிக் கூப்பாடு போட்டாலும் எடுபடாது.. இத்தனை பெரிய வித்தியாசத்தை மோசடிகளால் ஏற்படுத்த முடியுமா?

சிறுபான்மை அவ்வளவும் ஒன்றாக சேர்ந்தும் பெரும் பெரும்பான்மையை தோற்கடிக்க முடியாது என்பது தெளிவு. இனியாவது நான் முன்னைய பதிவில் சொன்னது மாதிரி பின் மண்டையைப் பாதுகாப்போம்..

தேர்தல் கடமையில் நேற்றிரவில் இருந்து ஒரு வினாடி கூட உறங்காமல் வானொலியில் முடிவுகளை சொல்லிக் கொண்டே, ட்விட்டர், Facebook மூலமாக நண்பர்கள்,நேயர்களோடும் முடிவுகளைப் பகிர்ந்துகொண்டேன்.(ஜனநாயகக் கடமை)

ஜனாதிபதி வெற்றிக் கனி பறிக்கிறார் என்றவுடனேயே ஆனந்தக் கூத்தாடிய எம்மில் பலருள் நானும் ட்விட்டர், Facebook மூலமாக வழங்கிய தகவல் துளிகளை, மன்னருக்கு வழங்கிய வாழ்த்துக்களை இங்கே தொகுப்பாகத் தருகிறேன்..

தூக்கம் வராமல் ஜாலியாக இருக்க எத்தனைஎல்லாம் செய்யவேண்டி இருந்தது.. ;)

ஜனநாயக நாட்டில் இராணுவ ஆட்சி நடக்க விடுவமா? நாங்கல்லாம் யாரு? மக்கள் தலைவன் மகிந்த வாழ்க..

பேசாமல் பொது வேட்பாளரா நம்மசிவாஜி சிங்கத்தையே போட்டிருக்கலாமோ.. பெரிசா வித்தியாசம் இருந்திருக்காது

தோளில் துண்டு போட்டவர் தலையில் துண்டு போடுவார்னு பார்த்தா, எல்லோரது மண்டையிலும் குண்டு போட்டிட்டாரே.. ;)

மனுஷன் மாத்தறை,மொனராகலையில் எல்லாம் பத்து பதினைந்து வாக்கு எடுத்திருக்கு.பொது வேட்பாளரா இருந்திருந்தால் கலக்கி இருக்கும் #Sivajilingam

இந்த ஒருநாள் கூத்துக்கு எத்தனை நாள் கஷ்டப்பட்டோம்.. பாவம் எங்கள் ஜனாதிபதி.. நிறையக் காசை செலவழிக்க வச்சுப் போட்டாங்கள்.. ;)

ஆகா. இதைத் தான் ஜனாதிபதி அவர்கள் எமது வானொலிக்காக அன்று சொன்னார்.வெற்றியின் சின்னம் வெற்றிலை சின்னம்.. வெற்றிலை சின்னம் வெற்றியின் சின்னம்

எனது நண்பர் திரிகரன் என்பவர் சொன்னவை..

நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள்..., குழந்தைகளின் பாசம் தெரிந்த தந்தையான எம் தலைவர் அதிமேதகு மகிந்த ராஜபக்ஷ அவர்களே எங்கள் வளமான எதிர்காலம்....

போரை வென்ற மாதிரி எங்கள் ஜனாதிபதி நாட்டையும் அபிவிருத்தி செய்வார்... அவர் அன்றைக்கு சொன்னார் “போரை முடிவுக்கு கொண்டு வருவன்” என்று... முடிவுக்கு வந்திச்சா?... இன்றைக்கு சொல்லுறார் “இனி அபிவிருத்தி தான் இலக்கு” என்று... அதையும் நிச்சயம் பண்ணுவார்... நம்புங்க சார்... நம்பிக்கை தானே வாழ்க்கை...

இன்னும் பல வாழ்த்துக்கள் பார்க்கவிரும்புவோர், என் facebookஐயோ, ட்விட்டரையோ பாருங்கள்..

'ஸ்தூதி' சொல்லவே உனக்கு என்கிட்டே வார்த்தை இல்லையே..

ஜனாதிபதியின் வெற்றி மேலும் பிரம்மாண்டமாகி,உறுதியாகிக் கொண்டிருக்கும் நிலையில், இன்னும்பல பரபரப்பு செய்திகளும், புதிய தகவல்களும் வெளிவந்தவண்ணம் உள்ளன.

எனக்கும் வளமான எதிர்காலம் ஒன்றின் மீது ஆசை இருக்கு.. :) ஆனபடியால் வாழ்த்தோடு நிறுத்திக் கொள்கிறேன்..

கடந்த முறையைவிட மிகப்பெரும்பான்மையோடு ஆட்சிக்கு வருகின்ற எங்கள் மன்னர் அதிமேதகு ஜனாதிபதி வாழ்வாங்கு வாழ்க.. அவர் தயவில் நாமும் வளமோடு வாழ்வோம்.

இலங்கையில் இனி மீண்டும் வளமான எதிர்காலம் தொடரும்;தொடங்கும்.



மக்கள் தலைவன் மகிந்த வாழ்க

எல்லாம் ஒரு பக்கம் இருக்க, கொழும்பில் சிங்கத்தமிழன் சிவாஜிலிங்கத்துக்கு 548 வாக்குகளும் , நாடு முழுவதும் 3000க்கு கிட்டவாக வாக்குகளும் போட்ட வள்ளல்களை யாராவது எனக்குக் காட்டுங்களேன்.. பார்க்க ஆசையா இருக்கு..

இன்னும் கொஞ்சம் நேரத்தில் எல்லா முடிவுகளும் வந்திடும்.. வீட்டுக்கு போய் கும்பகர்ணத்தூக்கம் ஒன்று போடப் போகிறேன்.. உங்களுக்கும் எனக்கும் வளமான எதிர்காலம்.


January 25, 2010

நான் உண்மைத்தமிழன் அல்ல..


அண்மைக்காலமாக எனக்கு 'இலங்கையின் உண்மைத்தமிழன்' என்று பட்டமே கொடுத்துவிட்டார்கள் இங்கேயுள்ள பதிவுலகத் தங்கங்கள்.

ஏதாவது அரசியலா எல்லாம் யோசிக்காதீங்கோ..

உ.த அண்ணாச்சி மாதிரி ரொம்ப நீள,நீளமாக பதிவுகளை நீட்டுகிறேன் என்பது தான் காரணமாம்.
என்ன செய்வது, ஏதாவது எழுதவென்று அமர்ந்தால் நினைத்த அத்தனை விஷயங்களையும் அறிந்த, சொல்லக்கூடிய அத்தனை விஷயங்களையும் கொட்டாவிட்டால் மனம் ஆறுதில்லையே...

பதிவுகள் நீண்டதால் எனது ஓடைகளிலும்(feeds) பெரும் பிரச்சினை ஏற்பட்டும் தமிழ்மணம் திரட்டியில் பதிவுகள் சேர்க்க முடியாமல், என்னுடைய பல நண்பர்கள்,வாசகர்கள் வாசிக்க முடியாமல் நிறைய சிக்கல் எல்லாம் ஏற்பட்டு, நண்பர்கள் பலரின் ஆலோசனையால் எல்லா சிக்கல்களையும் மூன்று நாட்கள் போராடி இன்று தான் தீர்த்தேன்.

முக்கியமாக நன்றிகள் கங்கோன் கனக கோபிக்கு.

இந்த சிக்கலால் தான் இன்னொரு ஆச்சரியமான விஷயமும் எனக்கு தெரியவந்தது.. ஓடைகள் மூலமாக என் பதிவுகளை 510 பேர் வாசிக்கிறார்களாம். அட.. :)

பதிவுகள் நீளமாவதால் வாசிப்போர் குறைந்ததாக இதுவரை தெரியவில்லை. அப்படியா என்று பின்னூட்டத்தில் சொல்லுங்கப்பா..மாற முயல்கிறேன்.. ;)

நான் உண்மைத்தமிழன் இல்லை என நிரூபிக்க இன்றைய 'சிறிய' பதிவு..


நாளை ஜனாதிபதி தேர்தல்.. மாறுமா மாறாதா என்பதே கேள்வி..
மாறாதைய்யா மாறாது என்கிறது அண்மைய நிலவரம்.
மாற்ற நினைத்தால் மாற்றலாம் எனும் நம்பிக்கை எல்லோருக்கும் இருக்குமோ தெரியாது..

வன்முறைகள் அதிகரித்துக் கொண்டே போகிறது..
நாளை வாக்களிப்பின்போது இன்னும் மோசமாகும் என நினைக்கிறேன்.
பாவம் அப்பாவி மக்கள் & வாக்காளர்கள்.
ஏற்கெனவே லட்சக் கணக்கானோருக்கு வாக்காளர் அட்டைகளும், அடையாள அட்டைகளும் கிடைக்கவில்லையாம்.
மோசடி வாக்குகள்,வாக்குப் பெட்டிகள் பற்றிய செய்திகள் எல்லாம் வருகின்றன.

புதன் கிழமை பொது,வங்கி விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எங்களுக்கு அந்த அதிர்ஷ்டமும் இல்லை.. வர்த்தக விடுமுறை இல்லையாம்..

தேர்தல் ஒலிபரப்பு என்றாலே எனக்கு இருக்கும் உற்சாகமும் இம்முறை தேர்தல் ஆணையகத்தால் விதிக்கப்பட்டுள்ள சில கட்டுப்பாடுகளால் கொஞ்சம் வடிந்துபோயுள்ளது.

மிச்சச் சொச்சங்களை சொல்றதுக்குத் தான் செய்தி தளங்களும், வானொலிகள்,பத்திரிகைகளும் இருக்கே..

அன்பான இலங்கை மக்களே.. வாக்கு உள்ளோர்.. ஏதோ பார்த்து பொறுப்பா, மனசாட்சிப்படி, எதிர்காலத்தையும் சிந்தித்து வாக்களியுங்கோ..
பின்மண்டையில் சேதம் வராமல் பக்குவமா நடந்து கொள்ளுங்கோ..

என்னுடைய 'சிறிய' பதிவை முடிக்கு முன்..

அண்மையில் பரபரப்பைக் கிளப்பியிருக்கும் செம நக்கல் திரைப்படமான (இனித் தான் வெளிவர இருக்கும்) 'தமிழ்ப்படம்' திரைப்படத்திலிருந்து ஒரு பாடல்..

நம் நாட்டு தேர்தல் சூழ்நிலையில் யாரோ ஒருவருக்கு பிரசாரப்பாடல் போலவும் இருக்கு..
கொஞ்சம் அவதானமாக வரிகளைக் கேட்டு ரசியுங்களேன்..




இந்தப்பாடல் இயற்றியவரும், பாடியவரும் சம்பந்தப்பட்டவர்களுமே இதுக்கெல்லாம் பொறுப்பு..

மீண்டும் அடித்து சொல்கிறேன்..

நான் உண்மைத்தமிழன் அல்ல..


January 23, 2010

இளைஞர் உலகக்கிண்ணம் & இன்னும் சில கிரிக்கெட் விஷயங்கள்..


நியூசிலாந்தில் நடைபெற்று வருகின்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கிண்ணப் போட்டிகள் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளன.

இன்றைய தினம் நடைபெற்ற இரு காலிறுதிப்போட்டிகளுமே எதிர்பார்த்ததற்கு மாறான முடிவுகளைத் தந்துள்ளன.

கிண்ணத்தை வெல்லக்கூடிய அணிகளாகக் கருதப்பட்ட இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகியவை மண்கவ்வியுள்ளன.

இன்று பகலில் வீட்டில் இருந்ததால் இந்திய – பாகிஸ்தான் காலிறுதியைப் பார்க்கக்கிடைத்தது. காலநிலை சீர்கேட்டினால் தலா 23 ஓவர்களாக மாற்றப்பட்ட இந்தப்போட்டியில் தான் எத்தனை விறுவிறுப்பு.

இறுதி ஓவர் வரை விறுவிறுப்பைத் தந்த இந்தப்போட்டி எதிர்கால வீரர்களான அந்த இளைஞர்களின் திறமை, அனுபவம், ஆற்றல் என்று அனைத்தையும் சோதிப்பதாக அமைந்திருந்தது.
இன்றைய போட்டியில் பாகிஸ்தானின் சுழல் பந்துவீச்சாளர் ராசாவும்,இந்தியாவின் பந்துவீச்சாளர் சந்தீப் ஷர்மாவும் என்னைக் கவர்ந்திருந்தார்கள்.

பாகிஸ்தான் 2 விக்கெட்டுக்களால் வென்ற இந்தப்போட்டியில் வழமையான இந்திய – பாகிஸ்தானிய விறுவிறுப்பு, பரபரப்புக்கும் குறைவில்லை. இரண்டு அணிகளில் சீனியர் அணிகளிடம் உள்ள அதே சிறப்பம்சங்களும் அதேவேளை குறைபாடுகளும் காணப்படுகின்றன.

அதிரடி,ஆற்றல்,நுட்பம்,improvisation எனப்படும் சிறப்பாற்றல் போன்ற பல நல்ல விஷயங்கள் காணப்பட்டாலும், தேவையற்ற அவசரம்,சில தடுமாற்றங்கள்,மோசமான களத்தடுப்பு போன்ற குணாம்சங்களும் காணப்படுகின்றன.
இளையவர்கள் தானே போகப் போக சரியாகிவிடும் என நம்புவோம்.

ஆனால் இப்போதே வளைக்கவேண்டும்.. பின்னர் வளையாது. தற்போதைய பாகிஸ்தான் களத்தடுப்பு போல..

இன்றைய காலிறுதித் தோல்வியுடன் 2008இல் விராட் கோளி தலைமையில் இந்தியா கைப்பற்றிய 19வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கிண்ணத்தை மீளப்பெறும்வாய்ப்பை இந்தியா இழந்துள்ளது.

முதல் சுற்றின் கடைசிப்போட்டியில் இங்கிலாந்திடமும், இன்று பாகிஸ்தானிடமும் அடுத்தடுத்து தோற்றது இந்திய இளையவர்களின் கடைசிநேரப் பதற்றத்தினாலா? ஆனால் இறுதிவரை போராடியது பாராட்டப்படவேண்டிய விஷயம்.

மறுபுறம் பாகிஸ்தானுக்கு இது பெரியதொரு ஊட்டச்சத்து. பங்களாதேஷிடம் மிகவும் தடுமாறி கடைசி ஓவரில் வென்று காலிறுதிக்குள் வந்து இன்றும் தடுமாற்றத்துடன் ஒரு வெற்றி. சீனியர் அணியின் இயல்புகள் அப்படியே இருக்கின்றன.

முதற்சுற்றில் கலக்கிய இங்கிலாந்து இன்று பரிதாபமாக மேற்கிந்தியத்தீவுகளிடம் தோற்றுப்போனது.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு முன்னர் இருந்த Big Bird ஜோஎல் கார்னர் போலவே இன்னொரு உயரமான வேகப் பந்துவீச்சாளராக ஜேசன் ஹோல்டர் கிடைத்துள்ளார்.சிறப்பாக வருவார் என நினைக்கிறேன்.


இந்தியாவுக்கெதிராக அதிரடியாக அடித்து நொறுக்கியும், பின் பந்துவீச்சில் அசத்தியும் பிரகாசித்த ஸ்டோக்ஸ் எதிர்கால இங்கிலாந்து அணியில் வருவார் என நம்புகிறேன்.

நாளை இலங்கை – தென்னாபிரிக்காவை சந்திக்கிறது.

முதல் சுற்றில் பிரகாசித்தாலும் நியூசிலாந்திடம் இலங்கை தோற்றிருந்தது. எனினும் சகலதுறைவீரர் பானுக ராஜபக்ச (ஜனாதிபதியின் உறவினரல்ல) போன்ற வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகிறார்கள்.

தென்னாபிரிக்காவிலும் அசத்தும் நட்சத்திரங்கள் உள்ளனர்.

அடுத்த காலிறுதியில் விளையாடவுள்ள இரு அணிகளில் ஒன்றுதான் கிண்ணத்தை சுவீகரிக்கும் எனக்கருதுகிறேன்.

நியூசிலாந்து & அவுஸ்திரேலியா

முதற்சுற்றில் பிரகாசித்த நியூசிலாந்தின் இளையவர்களுக்கு பழக்கமான ஆடுகளங்களும் கைகொடுக்கின்றன.

ஆஸ்திரேலிய அணியின் இளைய வீரர்கள் தங்கள் சீனியர்கள் போலவே அசத்துகிறார்கள். ஒருவர் விட்டால் இன்னொருவர் போட்டியைக் கொண்டுசெல்லும் திறனை இவ்விரு அணிகள் விளையாடிய போட்டிகளைப் பார்த்தபோதெல்லாம் கண்டு மகிழ்ச்சிப்பட்டேன்.

பலவீனமான அணிகள் என்று கருதப்படும் அயர்லாந்து, பங்களாதேஷ் அணிகளிலும் திறமையான பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு மற்றைய அணிகளின் வீரர்களைவிட வெகுவிரைவிலேயே தங்கள் தேசிய அணியில் இடம் கிடைத்துவிடும்.

இந்தத் தொடரில் நான் வியந்து ரசித்த, சிறப்பான பெறுபேறுகள் தந்துள்ள சில வீரர்கள்..
எதிர்கால சர்வதேசக் கிரிக்கெட்டில் இவர்களை எதிர்பார்த்திருங்கள்..மிக விரைவில்.. சில வேளைகளில் 2011 உலகக் கிண்ணப் போட்டிகளிலேயே..

துடுப்பாட்டவீரர்களில்..
ஆஸ்திரேலியாவின் ஆர்ம்ஸ்ட்ரோங், கீத், இங்கிலாந்தின் வின்ஸ்,ஸ்டோக்ஸ், தென் ஆபிரிக்காவின் ஹென்ரிக்ஸ், மேற்கிந்தியத்தீவுகளின் ப்ராத்வேயிட், பாகிஸ்தானின் பாபர் அசாம், நியூ சீலாந்தின் போம்,இலங்கையின் ராஜபக்ச,இந்தியாவின் மன்தீப் சிங்..

பந்துவீச்சாளர்களில்..

இலங்கையின் சத்துர பீரிஸ், இந்தியாவின் சந்தீப் ஷர்மா, பாகிஸ்தானின் பாயாஸ் பட்,மேற்கிந்தியத் தீவுகளின் ஹோல்டர், இங்கிலாந்தின் பெய்ன், பக் ஆகியோரைக் குறிப்பிடுவேன்.

தொடர்ந்துவரும் போட்டிகளை மேலும் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளேன்.


மேலும் சில சுவாரஸ்ய கிரிக்கெட் குறிப்புக்கள்...

#
IPL 3இல் பாகிஸ்தானிய வீரர்களை ஒதுக்கிய/வாங்காது விட்ட செயல் அரசியலா, அல்லது பண சிக்கனமா என்பது எல்லோரைப் போலவே எனக்கும் சந்தேகம் தான்..

அப்ரிடி,ஆமீர்,குல்,உமர் அக்மல் போன்ற ட்வென்டி 20 களையும் யாரும் வாங்காதுவிட்டதையும், காயமுற்றுக் கொண்டிருக்கும் பொன்ட் , அதிகம் அறியப்படாத ரோச்சுக்கு அள்ளிக் கொடுத்ததையும் பார்க்கும்போது இது அரசியலே என்று தோன்றுகிறது.

ஏதோ நடத்துங்கப்பா..

#
ஆஸ்திரேலியாவின் கமெரோன் வைட் தன மீது ஆஸ்திரேலிய தேர்வாளர்கள் வைத்த நம்பிக்கையை மீண்டும் காப்பாற்றினார். பாகிஸ்தானுக்கெதிராக நேற்று என்ன ஒரு அபார சதம்.

ஆஸ்திரேலியாவின் உள்ளூர் போட்டிகளை அவதானித்துவந்த நேரத்தில் இவரின் அதிரடிகளும் தலைமைத்துவ நுட்பமும் எப்போதும் என்னைக் கவர்ந்தவை.
என்னைப் பொறுத்தவரை கிளார்க்கை விட ஆஸ்திரேலியாவின் தலைமைப்பதவிக்கு அடுத்ததாக இவரே பொருத்தமானவர் என்று சொல்வேன். ஆனால் டெஸ்ட் போட்டிகளில் முதலில் வைட் தொடர்ந்து விளையாடவேண்டும்.

#
பங்களாதேஷுக்கேதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா பெற்ற வெற்றியைவிட அதிகமாகப் பேசப்பட்டது சேவாகின் வாய்ப் போர்முரசு தான்.ஆனால் நாளைய போட்டிக்கு மீண்டும் தோனி காயத்திலிருந்து மீண்டு அணிக்குள் வந்துள்ளார்.
லக்ஸ்மனின் காயம் தமிழக வீரர் முரளி விஜய்க்கு ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது.

ஆனால் விஜய் விளையாடிய முதல் இரு போட்டிகளைப் போலல்லாமல் நாளை ஆரம்பிக்கும் டெஸ்ட் போட்டியில் மத்தியவரிசை வீரராகவே களமிறங்கப் போகிறார். பிரகாசிப்பாரா பார்க்கலாம்.சொதப்பினால் இடத்தைக் கொத்திக்கொள்ளப் பெரிய வரிசையே பார்த்துக் கொண்டிருக்கிறது.

#
இலங்கையில் சத்தமில்லாமல் இரு வெளிநாட்டு அணிகள் மூன்று நாட்களாக கிரிக்கெட் போட்டியில் விளையாடிவருகின்றன.
ICC நடாத்தும் INTERCONTINENTAL போட்டிகளுக்காக தம்புள்ளை மைதானத்தில் அயர்லாந்து-அப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
நாளை போட்டியின் இறுதி நாள்.

#

ஆஸ்திரேலியாவின் உள்ளூர் ட்வென்டி 20 சாம்பியன் போட்டித் தொடரான KFC BIG BASHஇல் விக்டோரியா சாம்பியனாகியுள்ளது. அவர்களின் வழமையான அணித் தலைவரான கமெரோன் வைட் இல்லாமலேயே இறுதிப் போட்டியில் தென் ஆஸ்திரேலிய அணியைத் தோற்கடித்துள்ளது.

தென் ஆஸ்திரேலியாவின் மேற்கிந்திய இறக்குமதியான கீரன் பொல்லார்ட் இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடியும் பயனில்லை.


விசேட குறிப்பு - இலங்கை ஜனாதிபதி தேர்தல்களின் இறுதிப் பிரசாரக் கூட்டங்கள் இன்று நிறைவு பெறுகின்றன.ஆனால் விளையாட்டுக்கள் இன்னும் குறையவில்லை..

இலங்கை ஜனாதிபதித் தேர்தல் - இருவரில் யார்? - மீண்டும்

முதலில் இட்ட இடுகையை வாசிப்பதில் பலர் சிக்கலை எதிர்நோக்கியதால் மீளவும் பிரசுரிக்கிறேன்... எந்தவொரு மாற்றமும் செய்யாமல்..

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் சரியாக 4 நாட்கள் இருக்கின்றன.
எப்போதோ எழுதவேண்டும் என நினைத்திருந்தாலும் அலுவலக வேலைகளும், சில பல முக்கிய கடமைகளும் இன்றுவரை இழுக்கவைத்து விட்டன.
ஒவ்வொரு நாளும் கட்சித் தாவல்களுக்கும், குற்றச் சாட்டுக்களுக்கும், அடிதடிகள்,வன்முறைகளுக்கும் குறைவேயில்லாமல் நாட்கள் நகர்ந்துகொண்டே இருக்கின்றன.
தேர்தல் ஆணையாளர் ஒருபக்கம் நியாயமான தேர்தல்,நீதியான அணுகுமுறை எனக் கூவிக் கொண்டே இருக்கிறார்..
கட் அவுட்டுகள்,சுவரொட்டிகளைக் கழற்றுமாறு அவர் காவல்துறைக்கு உத்தரவிட்டும்,பின்னர் கோரிக்கை முன்வைத்தும், அதன் பின் இப்போது கெஞ்சிக்கேட்டும் பயனில்லை..
இன்னமும் வீதிக்கு வீதி ஜனாதிபதி சிரிக்கிறார்..
ஏதோ போனால் போகட்டும் என்று 23ஆம் திகதிக்குப் பின்னர் எல்லா சுவரொட்டிகளும்,பதாதைகளும் கழற்றப்படும் எனப் போலீஸ் பிரதானி தெரிவித்துள்ளார்.
சில இடங்களில் பெரியவரின் ஆளுயர,ராட்சத கட் அவுட்ட்க்கள் அகற்றப்படுவதை ஆதரவாளர்கள் எதிர்த்ததையும் போலீஸ் வாய்மூடி மௌனிகளானதையும், போலீஸ் நிலையங்களருகேயே அமைக்கப்பட்ட இத்தகைய கட் அவுட்டுகள் அப்படியே இருப்பதையும் நானே கண்டுள்ளேன்.
பொறுமையின் எல்லையை மீறிவிட்ட தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க மிக விரக்தியுடன் இந்தத் தேர்தல்களின் பின்னர் தான் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளமை எவ்வளவு தூரம் இந்தத் தேர்தல் வன்முறைகள் நிறைந்தது என்பதையும், சட்டவிதிகளை மீறியது என்பதையும் காட்டுவதாக உள்ளது.
நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்தக்கூடிய சூழல் இல்லை எனவும், நீதியாக தேர்தலை நடத்த தான் எடுக்கின்ற முயற்சிகளை அரசியல் கட்சிகள்,குறிப்பாக ஆளும் தரப்பு மீறிவருவதாகவும் தேர்தல் ஆணையாளர் சொல்லி இருப்பது இலங்கை அரசின் மீது வைக்கப்பட்டுள்ள மற்றுமொரு கறுப்புப் புள்ளியாகும்.
ஏற்கெனவே அரச ஊடகங்கள் ஜனாதிபதிக்கு பக்கசார்பாக செயற்படுகின்றன என்பதை வெளிப்படையாகவே சொல்லி இருந்த தேர்தல் ஆணையாளர், அரச ஊடகங்களைக் கண்காணிக்க தகுதிவாய்ந்த அதிகாரி ஒருவரையும் நியமித்திருந்தார்.
அந்த அதிகாரி விடுக்கின்ற கோரிக்கைகளை(கவனிக்க உத்தரவுகளை அல்ல)யும் அரச ஊடகங்கள் செவிமடுக்காமல், ஜனாதிபதியின் புகழ் மட்டுமே பாடியும், எதிரணி வேட்பாளர் மீது சேறுபூசுவதுமாக இருக்கையில் அதிகாரியின் நியமனம் பயனில்லை என அவரை விலக்கியும்விட்டார்.
அரச ஊடகங்களின் இந்த செயற்பாடு முழுக்க முழுக்க சட்டவிரோதமானது என அனைவருக்குமே தெரிந்தும் வாய்மூடித் தான் இருக்கவேண்டியுள்ளது.
இன்னொருபக்கம் வன்முறைகளின் அளவு இம்முறை தேர்தலில் முடிவுகளில் தாக்கம் ஏற்படுத்தும் அளவுக்கு உக்கிரமாகியுள்ளது.
வேட்புமனுத்தாக்கல் செய்யப்பட்ட நாளிலிருந்து இன்றுவரை 3 கொலைகள்;800 க்கு மேற்பட்ட வன்முறை சம்பவங்கள்..
போலீஸ் என்ன செய்கிறது என்ற கேள்விக்கு எம்மைப் போலவே தேர்தல் ஆணையாளராலும் பதில் சொல்ல முடியாது.
இந்த நிலை அரசுக்கு எதிரான மக்கள் அதிருப்தியாகவும் மாறலாம்..அதேநேரம் வாக்களித்தும் என்ன பயன் என்ற விரக்தி நிலைக்கு அவர்களை ஆளாக்கி வாக்குகளின் மூலமாக தம் விருப்பத்தை சொல்லவிடாமலும் செய்யலாம்.
கட் அவுட்டுகள்,பதாதைகள்,சுவரொட்டிகளில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச,சரத் பொன்சேகாவை மிகப் பெரிய வித்தியாசத்தில் வென்றுள்ளார் என்பதை இலங்கையில் உள்ளோர் மிக நன்கறிவர்.
அரச வளங்களை எவ்வளவு உச்சபட்சமாகப் பயன்படுத்தலாமோ அவ்வளவுக்குப் பயன்படுத்தி உச்சப்பலனைப் பெற்றுக் கொள்ள ஜனாதிபதி மற்றும் குழுவினர் முயல்கின்றனர்.
22 பேர் போட்டியிடும் இந்த ஜனாதிபதித் தேர்தல் உண்மையில் இருவருக்கிடையிலான தேர்தல் தான் என்பது அனைவருக்குமே தெரியும். மற்ற இருபதுபேரும் தமக்கே தாம் போடுவரா என்பதே பெரிய சந்தேகம்.
மூன்றாமிடத்தைப் பெறுவதோடு கட்டுப்பணத்தைக் காப்பாற்றிக் கொள்ள சிவாஜிலிங்கமும், விக்ரமபாகு கருணாரத்னவும் போட்டிபோடக் கூடும்.
பிடித்த வேட்பாளரோ, கொள்கையில் நல்லவரோ என்பதைவிட வெற்றி பெறுபவராகவும் இதன் மூலம் இயல்பான,சகஜ வாழ்க்கைக்கான நம்பிக்கையைப் பெற்றுக் கொள்ளத் தமது வாக்கைப் பயன்படுத்தவேண்டும் என்பதை தமிழ்மக்கள் மட்டுமல்லாமல் அனைத்து வாக்காளர்களும் நன்றாகவே உணர்ந்துள்ளார்கள் என்பது மகிந்த-சரத் போட்டியின் முக்கியத்துவத்தில் தெரிகிறது.
ஜனாதிபதியா ஜெனரலா என்ற மிக முக்கியமான கேள்விக்கு யாராலும் அவ்வளவு இலகுவாக விடைகூற முடியாத நிலை இப்போதும் நிலவுகிறது. 26 ஆம் திகதி வாக்களிப்புக்குப் பிறகு இறுதி முடிவுகள் வரைகூட இந்த நிலை தொடரலாம்.
அந்தளவுக்கு மிக நெருக்கமான விறுவிறுப்பான ஒரு தேர்தலாக இது மாறியுள்ளது.
மகிந்த ராஜபக்ச - பிரகாசமான எதிர்காலம்
பத்திரிகையில் வந்த முழுப்பக்க விளம்பரம்
ஒவ்வொரு நாளுமே காட்சிகளும்,பலம் பலவீனங்களும் மாறிக் கொண்டுள்ளன.
கடைசி நேரங்களில் கட்சி தாவுவோரும், தளம்பல் நிலை வாக்காளர்களும் இதனால் முடியைப் பிய்த்துக் கொள்கிறார்கள்.
பிரசாரங்களில் யுத்த வெற்றியே பிரதானப்படுத்தப்பட்டிருந்தாலும், அந்த வெற்றியின் பிரதான காரணம் யார் என்பதை முன்னிறுத்தியே இரு பிரதான வேட்பாளர்களும் முன்னிறுத்தப்பட்டிருந்தாலும், பொருளாதாரம், இனப்பிரச்சினைக்கான எதிர்காலத் திட்டங்கள் என்பன பற்றியும் வாக்காளர்கள் சிந்திக்காமலில்லை.
இனப்பிரச்சினைக்கான எதிர்காலத் தீர்வுத் திட்டம் பற்றி இருவருமே எதையும் தெளிவாக தமது விஞ்ஞாபனத்தில் கூறாவிட்டாலும் கூட, தமிழரைப் பொறுத்தவரை இதுவரை பதவியிலிருந்து எதுவும் செய்யாதவருக்கு சந்தர்ப்பம் கொடுத்தாயிற்று.. எனவே இம்முறை மாற்றலாம் எனத் தெளிவாக இருக்கிறார்கள் எனத் தெரிகிறது.
சரத் பொன்சேக்கா - நம்பிக்கைக்குரிய மாற்றம்
பத்திரிகையில் வந்த முழுப்பக்க விளம்பரம்
எனினும் தமிழரின் இந்த ஒட்டுமொத்த தெளிவும்(மொத்தமாகவா என்பது முடிவுகளில் தான் தெரியும்) தமிழ் தேசியக் கூட்டமைப்பு சரத் போன்செக்காவுக்கே தங்கள் ஆதரவு என்று தெரிவித்தபின்பும்,அமுங்கியிருந்த இனவாதம் மீண்டும் தலைதூக்கியுள்ளதைக் காணக்கூடியதாகவுள்ளது.
குறிப்பாக பொன்சேக்கா - சம்பந்தன் ஒப்பந்தம், ஹக்கீம்-பொன்சேக்கா ஒப்பந்தம் என்று ஜனாதிபதியின் பிரசார மேடைகளில் இனவாதம் கக்கப்படுவது, சிங்களக் கிராமிய மக்களின் வாக்கைக் குறிவைத்து என்பதும்,சிங்களப் பேரினவாத அடிப்படைவாதிகளை திருப்திப்படுத்தவும் என்று புரிகிறது.
ஜனாதிபதி தொடர்ந்து தமிழ்மக்கள் கூடும் மேடைகளில் தமிழில் பெசிவந்தும் கூட இன்னமும் அவருடன் கூட இருப்பவர்கள் தமிழ் மக்களை, தமிழ்பேசும் மக்களை நெருங்கி வரமுடியாமல் உள்ளது அவரது வெற்றிக்கு மிகப் பாதகமாக அமையலாம்.
இன்னொரு உறுத்தலான,கேவலமான விடயம்.. ஆசிய நாடுகளுக்கு குறிப்பாக இலங்கை,இந்தியா போன்ற நாடுகளின் தேர்தல்களுக்கான சாபம்.. சேறுபூசும் குற்றச்சாட்டல் பிரசாரம்.
மாறி மாறி எதிரிகள் மீது அள்ளி இறைக்கப்படும் குற்றச்சாட்டு சேறுகளுக்கு அளவில்லை.
இவற்றுள் பல அடிப்படை இல்லாதவை என்றபோதிலும், இலங்கையின் வாக்காளர்களில் 47 வீதமான கிராமப்புற வாக்காளர்கள் இவற்றை நம்பி, இவற்றையே ஆதாரமாகக் கொண்டு தம் வாக்குகளை வழங்கும் கொடுமையும் உள்ளது.
பொன்சேக்கா இராணுவப் பின்னணி கொண்டவராக இருப்பதால் அவரது ஆட்சி சர்வாதிகார ஆட்சி என்ற வகைப் பிரசாரங்கள் நகைச்சுவைக்கு மட்டுமே உதவுகின்றன.
அதுபோல அவர் மீது சுமத்தப்படுகின்ற பல குற்றச்சாட்டுக்களுக்காக ஏன் அவரைக் கைது செய்யவில்லை என்ற கேள்வி எழாமலும் இல்லை.
சரத் பொன்சேக்கா - நம்பிக்கைக்குரிய மாற்றம் என்று தம்பக்கம் சேர்ந்துள்ள பலதரப்பட்ட கட்சிகளையும் அரவணைத்துப் பிரசாரங்களை முன்னெடுத்து வருகிறார்.கறை(ஊழல்) படியாத கரம் என்பதும்,மாற்றம் ஒன்று வேண்டும் நினைப்பவர்களது ஒரே தெரிவு என்பதும் இவருக்கான பலங்கள்..
தமிழர்களின் அதிக வாக்குகளைத் தீர்மானிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் (இப்போதும் கூட இவர்களைத் தான் முன்னணி தமிழ் பிரதிநிதித்துவமாகக் கருதவேண்டியுள்ளது) முஸ்லிம்களின் வாக்குவங்கிகளை அதிகம் தமதாக்கியுள்ள முஸ்லிம் காங்கிரசும் இருப்பது பெரும் பலம்.
கொள்கையளவில் எதிரிகளான JVPஉம், ஐக்கிய தேசியக் கட்சியுமே ஒன்றாக இணைந்து பொன்செக்காவுக்கான பிரசாரத்தை மேற்கொள்வது மக்களை அதிகளவில் ஈர்த்துள்ளது.
இன்னொரு சுவாரஸ்ய விடயம், மகிந்த ராஜபக்சவைப் பதவியில் அமர்த்தப் பாடுபட்ட மங்கள சமரவீர+JVP கூட்டணி இம்முறை அவரை அகற்றப் பாடுபடுவது. இவர்களின் தீவிர,அதிரடி பிரசாரங்கள் கடந்தமுறை ஏராளமானோரைக் கவர்ந்திருந்தன.
இம்முறை ???
இவர்கள் எடுத்துள்ள பிரதான ஆயுதமாக ராஜபக்ச குடும்பத்தினரின் ஊழல்கள் கொள்ளைகள் அமைந்துள்ளன.
மறுபக்கம் பதவியிலுள்ள ஜனாதிபதி மீண்டும் அதைத் தக்கவைக்கப் படும்பாட்டை சில மாதங்களுக்கு முன்னர் அவரே நினைத்திருக்கமாட்டார்.
புலிகளுக்கெதிரான யுத்தவெற்றி என்ற ஆயுதம் அவருக்கு எதிராகவே மாறியுள்ளது.
மகிந்த சிந்தனை 2 என அவர் வெளியிட்டுள்ள விஞ்ஞாபனத்தில் தமிழரைத் திருப்திப்படுத்தும் விடயங்கள் இல்லை. எனினும் அவசர அவசரமாக கொடுத்து வரும் சலுகைகள்,தனது ஆளுமை, கோடிக்கணக்கான விளம்பரங்கள் மூலமாக சிங்கள மக்களின் வாக்குவங்கியைக் குறிவைத்துள்ளார்.
எனினும் அதன் பின்னருள்ள பல ஊழல்கள்,சொத்துக் குவிப்புக்கள் போன்றவை தான் மக்களை சிந்திக்க வைக்கின்றன.
மலையகத்தின் இருபெரும் கட்சிகள், தமிழ் பேசும் மக்களின் பல்வேறு பிரதிநிதிகள்(இவர்களில் அநேகர் மகிந்தரின் குயுக்தி,யுக்தியினால் பிரித்தெடுக்கப்பட்டவர்கள்) ஆகியோர் மூலமாக கிடைக்கும் வாக்குகளும் பிரதானமானவை.
ஜனாதிபதி தனது சாணக்கியத்தினால் உடைத்து எடுத்தோரைவிட அதிக அங்கீகாரத்தை அந்தந்த மக்களிடம் பெற்றவர்களின் முக்கியத்துவத்தை இன்னும் உணராமை இம்முறை தேர்தல் முடிவுகளில் தெரியவரும்.
இலங்கையின் சில இடங்களில் துரித அபிவிருத்திக்கான சில முன்னெடுப்புக்களும், வீதிகளின் விஸ்தரிப்புக்களும் ஜனாதிபதியின் சாதனைகளாக சொல்லப்பட்டாலும் யுத்தவெற்றியும், இலங்கை வெளிநாடுகளுக்கு அடிபணியாத ஒன்று எனக் காட்டப்படும் வீரப்பிரதாபங்களுமே சிங்களமக்கள் முன்னிலையில் பெரிதாக்கப்பட்டு 'பிரகாசமான எதிர்காலம்' என பிரசாரப்படுத்தப்படுகிறது.
ஒரு சில மாதங்களுக்கு முன்னாள் அசைக்கமுடியாதவராகக் காணப்பட்ட ஜனாதிபதியின் செல்வாக்கு சரிவு அவரால் முன்னெடுக்கப்படாத பல வாக்குறுதிகளையும் இப்போது ஞாபகப்படுத்தி இருக்கும்.
மார்ச் மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்தியே ஆகவேண்டும் என அவர் வகுத்த வியூகம் எல்லாம் சரி. ஆனால் தொடர் தோல்விகளால் சுருண்டுகிடந்த ரணில் விக்ரமசிங்க தான் இறங்காமல் பொதுவேட்பாளராக இராணுவ யுத்த வெற்றியினால் மக்கள் மத்தியில் கதாநாயகனாக மாறிய ஜெனரல் சரத் பொன்சேக்காவை இறக்கிய அதிரடி தான் எல்லாக் கணிப்புக்களையும் உடைத்துப் போட்டது.
இந்திய,அமெரிக்க அவதானிப்புக்கள்,திரைமறைவு திட்டங்களும் ஓரளவு முக்கிய பங்குகளை இம்முறை தேர்தலில் வகிக்கின்றமை தெளிவாகவே தெரிகிறது.
மக்களுக்கும் பல விஷயங்கள் தெளிவாகத் தெரிகின்றன..
கறுப்புப் பணத்தை வெளியே கொண்டுசெல்லும் நோக்கில் தளர்த்தப்பட்டுள்ள வெளிநாட்டுப் பணத்தின் கொடுக்கல்-வாங்கல் சட்டம்
பொருட்களின் விலைகள் குறைக்கப்பாடல்
அவசர அதிரடி சலுகைகள்
பாதை திறந்தது
யாருமே எதிர்பாராத ஊடகவியலாளர் திசைநாயக்த்தின் பினைவிடுதலை
இப்படி பல விஷயங்கள்..
எனினும் திட்டமிட்ட பல விஷயங்களும் நடைபெறாமல் இல்லை.
பலருக்கு வாக்காளர் அட்டைகள் இன்னும் கிட்டவில்லை.
வடபகுதியில் பலருக்கு இன்னும் வாக்காளர் அட்டைகளும் இல்லை;அடையாள அட்டைகளும் இல்லை. அவர்களது வாக்குகள் அவ்வளவு தான்.
தேர்தல் முடிவுகளை அறிவிப்பதிலும் எமக்கு (ஊடகங்களுக்கு) பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தேவையற்ற சிக்கல்களைத் தவிர்ப்பதற்கு தேர்தல் ஆணையாளர் எடுத்துள்ள நடவடிக்கையாம்.
இறுதி முடிவுகளை (மொத்த எண்ணிக்கை) அரச ஊடகங்கள் உத்தியோகபூர்வமாக வழங்கியபிறகே தனியார் ஊடகங்கள் வெளியிடமுடியுமாம்.
இருவருக்கிடையில் பின்னணியான முக்கியமான அந்த ஒருவர் !
இப்போது பிரசாரங்கள் நிறைவு பெற இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில் இரண்டு பேரிடம் இருந்தும் அதிரடியான கடைசி நேர மர்ம அஸ்திரங்களை எதிர்பார்க்கலாம்.
நேற்று ஜனாதிபதி திறந்துவைத்த ஹோமாகம ராஜபக்ச சர்வதேச விளையாட்டரங்கு போல திட்டமிட்ட மறைமுகப் பிரசாரங்களும், அதிரடி சலுகைகளும் வரலாம்.
மறுபக்கம் பொன்சேக்கா தரப்பில் அதிரடியாக சிலர் மேடைஎரலாம் என ஊகிக்கப்படுகிறது.
பொன்சேக்கா பக்கம் உள்ள முன்னால் நீதியரசர் சரத் என்.சில்வா(இவர் தான் முதலில் எதிர்கால ஜனாதிபதி வேட்பாளர் என ஊடகங்களால் ஊகிக்கப்பட்டவர்) போல இன்னும் சிலரின் அதிரடிப் பிரவேசம் ஜனாதிபதிக்கு சரிவை வழங்கலாம்.
வாக்களிப்பில் அனைத்துக் கணிப்புக்கள் கட்சிகளின் வாக்குத் தளங்களை அடிப்படையாக வைத்துப் பார்த்தால், இம்முறையும் சிறுபான்மை வாக்காளரின் வாக்குகள் தான் தீர்மானமிக்க பங்கை வகிக்கப்போகின்றன.
ஒருமுறை பட்டது போதும் என்ற நிலையில் உள்ள வாக்காளர்கள் இப்போதே தீர்மானம் எடுத்திருப்பார்கள்.
எனினும் மாற்றம் என்ற ஒன்றினால் எல்லாமே மாறிவிடும் என்று நினைப்பது மிகப்பெரிய முட்டாள் தனம் என்பது அனைவருக்குமே தெரிந்தாலும், இப்படியான தீர்மானமிக்க சந்தர்ப்பங்களில் சில குறுகியகால நோக்கம் கொண்ட நீண்ட காலத் திட்டங்களுக்கான அரசியல் தீர்மானங்களை எடுக்கவேண்டி இருக்கும். இதற்கு எமது வாக்குப் பலத்தைப் பயன்படுத்தவேண்டிய அவசியத்தை நாம் உணரவேண்டும்.
நடந்தவை,நடக்கின்றவை,நடக்க இருப்பவை பற்றி நன்றாக சிந்தித்து வாக்களிப்போம்.. நல்லவர் யாரோ அவரைத் தெரிவு செய்வோம்..
இதுவே குறைந்தபட்ச தற்காலிக நிம்மதி,இருப்பு,எதிர்காலத்துக்கான ஒரே வழி.
26ஆம் திகதி வருவதற்கிடையில் இன்னும் அரசியலரங்கு கொண்டுவரபோகும் அதிரடிகள்,ஆச்சரியங்களுக்காக உங்களோடு நானும் காத்திருக்கிறேன்.

January 22, 2010

இலங்கை ஜனாதிபதித் தேர்தல் - இருவரில் யார்?


இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் சரியாக 4 நாட்கள் இருக்கின்றன.
எப்போதோ எழுதவேண்டும் என நினைத்திருந்தாலும் அலுவலக வேலைகளும், சில பல முக்கிய கடமைகளும் இன்றுவரை இழுக்கவைத்து விட்டன.

ஒவ்வொரு நாளும் கட்சித் தாவல்களுக்கும், குற்றச் சாட்டுக்களுக்கும், அடிதடிகள்,வன்முறைகளுக்கும் குறைவேயில்லாமல் நாட்கள் நகர்ந்துகொண்டே இருக்கின்றன.

தேர்தல் ஆணையாளர் ஒருபக்கம் நியாயமான தேர்தல்,நீதியான அணுகுமுறை எனக் கூவிக் கொண்டே இருக்கிறார்..

கட் அவுட்டுகள்,சுவரொட்டிகளைக் கழற்றுமாறு அவர் காவல்துறைக்கு உத்தரவிட்டும்,பின்னர் கோரிக்கை முன்வைத்தும், அதன் பின் இப்போது கெஞ்சிக்கேட்டும் பயனில்லை..
இன்னமும் வீதிக்கு வீதி ஜனாதிபதி சிரிக்கிறார்..
ஏதோ போனால் போகட்டும் என்று 23ஆம் திகதிக்குப் பின்னர் எல்லா சுவரொட்டிகளும்,பதாதைகளும் கழற்றப்படும் எனப் போலீஸ் பிரதானி தெரிவித்துள்ளார்.
சில இடங்களில் பெரியவரின் ஆளுயர,ராட்சத கட் அவுட்ட்க்கள் அகற்றப்படுவதை ஆதரவாளர்கள் எதிர்த்ததையும் போலீஸ் வாய்மூடி மௌனிகளானதையும், போலீஸ் நிலையங்களருகேயே அமைக்கப்பட்ட இத்தகைய கட் அவுட்டுகள் அப்படியே இருப்பதையும் நானே கண்டுள்ளேன்.

பொறுமையின் எல்லையை மீறிவிட்ட தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க மிக விரக்தியுடன் இந்தத் தேர்தல்களின் பின்னர் தான் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளமை எவ்வளவு தூரம் இந்தத் தேர்தல் வன்முறைகள் நிறைந்தது என்பதையும், சட்டவிதிகளை மீறியது என்பதையும் காட்டுவதாக உள்ளது.

நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்தக்கூடிய சூழல் இல்லை எனவும், நீதியாக தேர்தலை நடத்த தான் எடுக்கின்ற முயற்சிகளை அரசியல் கட்சிகள்,குறிப்பாக ஆளும் தரப்பு மீறிவருவதாகவும் தேர்தல் ஆணையாளர் சொல்லி இருப்பது இலங்கை அரசின் மீது வைக்கப்பட்டுள்ள மற்றுமொரு கறுப்புப் புள்ளியாகும்.

ஏற்கெனவே அரச ஊடகங்கள் ஜனாதிபதிக்கு பக்கசார்பாக செயற்படுகின்றன என்பதை வெளிப்படையாகவே சொல்லி இருந்த தேர்தல் ஆணையாளர், அரச ஊடகங்களைக் கண்காணிக்க தகுதிவாய்ந்த அதிகாரி ஒருவரையும் நியமித்திருந்தார்.

அந்த அதிகாரி விடுக்கின்ற கோரிக்கைகளை(கவனிக்க உத்தரவுகளை அல்ல)யும் அரச ஊடகங்கள் செவிமடுக்காமல், ஜனாதிபதியின் புகழ் மட்டுமே பாடியும், எதிரணி வேட்பாளர் மீது சேறுபூசுவதுமாக இருக்கையில் அதிகாரியின் நியமனம் பயனில்லை என அவரை விலக்கியும்விட்டார்.

அரச ஊடகங்களின் இந்த செயற்பாடு முழுக்க முழுக்க சட்டவிரோதமானது என அனைவருக்குமே தெரிந்தும் வாய்மூடித் தான் இருக்கவேண்டியுள்ளது.

இன்னொருபக்கம் வன்முறைகளின் அளவு இம்முறை தேர்தலில் முடிவுகளில் தாக்கம் ஏற்படுத்தும் அளவுக்கு உக்கிரமாகியுள்ளது.

வேட்புமனுத்தாக்கல் செய்யப்பட்ட நாளிலிருந்து இன்றுவரை 3 கொலைகள்;800 க்கு மேற்பட்ட வன்முறை சம்பவங்கள்..
போலீஸ் என்ன செய்கிறது என்ற கேள்விக்கு எம்மைப் போலவே தேர்தல் ஆணையாளராலும் பதில் சொல்ல முடியாது.
இந்த நிலை அரசுக்கு எதிரான மக்கள் அதிருப்தியாகவும் மாறலாம்..அதேநேரம் வாக்களித்தும் என்ன பயன் என்ற விரக்தி நிலைக்கு அவர்களை ஆளாக்கி வாக்குகளின் மூலமாக தம் விருப்பத்தை சொல்லவிடாமலும் செய்யலாம்.

கட் அவுட்டுகள்,பதாதைகள்,சுவரொட்டிகளில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச,சரத் பொன்சேகாவை மிகப் பெரிய வித்தியாசத்தில் வென்றுள்ளார் என்பதை இலங்கையில் உள்ளோர் மிக நன்கறிவர்.
அரச வளங்களை எவ்வளவு உச்சபட்சமாகப் பயன்படுத்தலாமோ அவ்வளவுக்குப் பயன்படுத்தி உச்சப்பலனைப் பெற்றுக் கொள்ள ஜனாதிபதி மற்றும் குழுவினர் முயல்கின்றனர்.

22 பேர் போட்டியிடும் இந்த ஜனாதிபதித் தேர்தல் உண்மையில் இருவருக்கிடையிலான தேர்தல் தான் என்பது அனைவருக்குமே தெரியும். மற்ற இருபதுபேரும் தமக்கே தாம் போடுவரா என்பதே பெரிய சந்தேகம்.
மூன்றாமிடத்தைப் பெறுவதோடு கட்டுப்பணத்தைக் காப்பாற்றிக் கொள்ள சிவாஜிலிங்கமும், விக்ரமபாகு கருணாரத்னவும் போட்டிபோடக் கூடும்.

பிடித்த வேட்பாளரோ, கொள்கையில் நல்லவரோ என்பதைவிட வெற்றி பெறுபவராகவும் இதன் மூலம் இயல்பான,சகஜ வாழ்க்கைக்கான நம்பிக்கையைப் பெற்றுக் கொள்ளத் தமது வாக்கைப் பயன்படுத்தவேண்டும் என்பதை தமிழ்மக்கள் மட்டுமல்லாமல் அனைத்து வாக்காளர்களும் நன்றாகவே உணர்ந்துள்ளார்கள் என்பது மகிந்த-சரத் போட்டியின் முக்கியத்துவத்தில் தெரிகிறது.

ஜனாதிபதியா ஜெனரலா என்ற மிக முக்கியமான கேள்விக்கு யாராலும் அவ்வளவு இலகுவாக விடைகூற முடியாத நிலை இப்போதும் நிலவுகிறது. 26 ஆம் திகதி வாக்களிப்புக்குப் பிறகு இறுதி முடிவுகள் வரைகூட இந்த நிலை தொடரலாம்.
அந்தளவுக்கு மிக நெருக்கமான விறுவிறுப்பான ஒரு தேர்தலாக இது மாறியுள்ளது.


மகிந்த ராஜபக்ச - பிரகாசமான எதிர்காலம்
பத்திரிகையில் வந்த முழுப்பக்க விளம்பரம்

ஒவ்வொரு நாளுமே காட்சிகளும்,பலம் பலவீனங்களும் மாறிக் கொண்டுள்ளன.

கடைசி நேரங்களில் கட்சி தாவுவோரும், தளம்பல் நிலை வாக்காளர்களும் இதனால் முடியைப் பிய்த்துக் கொள்கிறார்கள்.

பிரசாரங்களில் யுத்த வெற்றியே பிரதானப்படுத்தப்பட்டிருந்தாலும், அந்த வெற்றியின் பிரதான காரணம் யார் என்பதை முன்னிறுத்தியே இரு பிரதான வேட்பாளர்களும் முன்னிறுத்தப்பட்டிருந்தாலும், பொருளாதாரம், இனப்பிரச்சினைக்கான எதிர்காலத் திட்டங்கள் என்பன பற்றியும் வாக்காளர்கள் சிந்திக்காமலில்லை.
இனப்பிரச்சினைக்கான எதிர்காலத் தீர்வுத் திட்டம் பற்றி இருவருமே எதையும் தெளிவாக தமது விஞ்ஞாபனத்தில் கூறாவிட்டாலும் கூட, தமிழரைப் பொறுத்தவரை இதுவரை பதவியிலிருந்து எதுவும் செய்யாதவருக்கு சந்தர்ப்பம் கொடுத்தாயிற்று.. எனவே இம்முறை மாற்றலாம் எனத் தெளிவாக இருக்கிறார்கள் எனத் தெரிகிறது.


சரத் பொன்சேக்கா - நம்பிக்கைக்குரிய மாற்றம்
பத்திரிகையில் வந்த முழுப்பக்க விளம்பரம்

எனினும் தமிழரின் இந்த ஒட்டுமொத்த தெளிவும்(மொத்தமாகவா என்பது முடிவுகளில் தான் தெரியும்) தமிழ் தேசியக் கூட்டமைப்பு சரத் போன்செக்காவுக்கே தங்கள் ஆதரவு என்று தெரிவித்தபின்பும்,அமுங்கியிருந்த இனவாதம் மீண்டும் தலைதூக்கியுள்ளதைக் காணக்கூடியதாகவுள்ளது.

குறிப்பாக பொன்சேக்கா - சம்பந்தன் ஒப்பந்தம், ஹக்கீம்-பொன்சேக்கா ஒப்பந்தம் என்று ஜனாதிபதியின் பிரசார மேடைகளில் இனவாதம் கக்கப்படுவது, சிங்களக் கிராமிய மக்களின் வாக்கைக் குறிவைத்து என்பதும்,சிங்களப் பேரினவாத அடிப்படைவாதிகளை திருப்திப்படுத்தவும் என்று புரிகிறது.
ஜனாதிபதி தொடர்ந்து தமிழ்மக்கள் கூடும் மேடைகளில் தமிழில் பெசிவந்தும் கூட இன்னமும் அவருடன் கூட இருப்பவர்கள் தமிழ் மக்களை, தமிழ்பேசும் மக்களை நெருங்கி வரமுடியாமல் உள்ளது அவரது வெற்றிக்கு மிகப் பாதகமாக அமையலாம்.

இன்னொரு உறுத்தலான,கேவலமான விடயம்.. ஆசிய நாடுகளுக்கு குறிப்பாக இலங்கை,இந்தியா போன்ற நாடுகளின் தேர்தல்களுக்கான சாபம்.. சேறுபூசும் குற்றச்சாட்டல் பிரசாரம்.
மாறி மாறி எதிரிகள் மீது அள்ளி இறைக்கப்படும் குற்றச்சாட்டு சேறுகளுக்கு அளவில்லை.

இவற்றுள் பல அடிப்படை இல்லாதவை என்றபோதிலும், இலங்கையின் வாக்காளர்களில் 47 வீதமான கிராமப்புற வாக்காளர்கள் இவற்றை நம்பி, இவற்றையே ஆதாரமாகக் கொண்டு தம் வாக்குகளை வழங்கும் கொடுமையும் உள்ளது.

பொன்சேக்கா இராணுவப் பின்னணி கொண்டவராக இருப்பதால் அவரது ஆட்சி சர்வாதிகார ஆட்சி என்ற வகைப் பிரசாரங்கள் நகைச்சுவைக்கு மட்டுமே உதவுகின்றன.
அதுபோல அவர் மீது சுமத்தப்படுகின்ற பல குற்றச்சாட்டுக்களுக்காக ஏன் அவரைக் கைது செய்யவில்லை என்ற கேள்வி எழாமலும் இல்லை.

சரத் பொன்சேக்கா - நம்பிக்கைக்குரிய மாற்றம் என்று தம்பக்கம் சேர்ந்துள்ள பலதரப்பட்ட கட்சிகளையும் அரவணைத்துப் பிரசாரங்களை முன்னெடுத்து வருகிறார்.கறை(ஊழல்) படியாத கரம் என்பதும்,மாற்றம் ஒன்று வேண்டும் நினைப்பவர்களது ஒரே தெரிவு என்பதும் இவருக்கான பலங்கள்..

தமிழர்களின் அதிக வாக்குகளைத் தீர்மானிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் (இப்போதும் கூட இவர்களைத் தான் முன்னணி தமிழ் பிரதிநிதித்துவமாகக் கருதவேண்டியுள்ளது) முஸ்லிம்களின் வாக்குவங்கிகளை அதிகம் தமதாக்கியுள்ள முஸ்லிம் காங்கிரசும் இருப்பது பெரும் பலம்.
கொள்கையளவில் எதிரிகளான JVPஉம், ஐக்கிய தேசியக் கட்சியுமே ஒன்றாக இணைந்து பொன்செக்காவுக்கான பிரசாரத்தை மேற்கொள்வது மக்களை அதிகளவில் ஈர்த்துள்ளது.

இன்னொரு சுவாரஸ்ய விடயம், மகிந்த ராஜபக்சவைப் பதவியில் அமர்த்தப் பாடுபட்ட மங்கள சமரவீர+JVP கூட்டணி இம்முறை அவரை அகற்றப் பாடுபடுவது. இவர்களின் தீவிர,அதிரடி பிரசாரங்கள் கடந்தமுறை ஏராளமானோரைக் கவர்ந்திருந்தன.
இம்முறை ???

இவர்கள் எடுத்துள்ள பிரதான ஆயுதமாக ராஜபக்ச குடும்பத்தினரின் ஊழல்கள் கொள்ளைகள் அமைந்துள்ளன.

மறுபக்கம் பதவியிலுள்ள ஜனாதிபதி மீண்டும் அதைத் தக்கவைக்கப் படும்பாட்டை சில மாதங்களுக்கு முன்னர் அவரே நினைத்திருக்கமாட்டார்.
புலிகளுக்கெதிரான யுத்தவெற்றி என்ற ஆயுதம் அவருக்கு எதிராகவே மாறியுள்ளது.
மகிந்த சிந்தனை 2 என அவர் வெளியிட்டுள்ள விஞ்ஞாபனத்தில் தமிழரைத் திருப்திப்படுத்தும் விடயங்கள் இல்லை. எனினும் அவசர அவசரமாக கொடுத்து வரும் சலுகைகள்,தனது ஆளுமை, கோடிக்கணக்கான விளம்பரங்கள் மூலமாக சிங்கள மக்களின் வாக்குவங்கியைக் குறிவைத்துள்ளார்.
எனினும் அதன் பின்னருள்ள பல ஊழல்கள்,சொத்துக் குவிப்புக்கள் போன்றவை தான் மக்களை சிந்திக்க வைக்கின்றன.

மலையகத்தின் இருபெரும் கட்சிகள், தமிழ் பேசும் மக்களின் பல்வேறு பிரதிநிதிகள்(இவர்களில் அநேகர் மகிந்தரின் குயுக்தி,யுக்தியினால் பிரித்தெடுக்கப்பட்டவர்கள்) ஆகியோர் மூலமாக கிடைக்கும் வாக்குகளும் பிரதானமானவை.
ஜனாதிபதி தனது சாணக்கியத்தினால் உடைத்து எடுத்தோரைவிட அதிக அங்கீகாரத்தை அந்தந்த மக்களிடம் பெற்றவர்களின் முக்கியத்துவத்தை இன்னும் உணராமை இம்முறை தேர்தல் முடிவுகளில் தெரியவரும்.

இலங்கையின் சில இடங்களில் துரித அபிவிருத்திக்கான சில முன்னெடுப்புக்களும், வீதிகளின் விஸ்தரிப்புக்களும் ஜனாதிபதியின் சாதனைகளாக சொல்லப்பட்டாலும் யுத்தவெற்றியும், இலங்கை வெளிநாடுகளுக்கு அடிபணியாத ஒன்று எனக் காட்டப்படும் வீரப்பிரதாபங்களுமே சிங்களமக்கள் முன்னிலையில் பெரிதாக்கப்பட்டு 'பிரகாசமான எதிர்காலம்' என பிரசாரப்படுத்தப்படுகிறது.

ஒரு சில மாதங்களுக்கு முன்னாள் அசைக்கமுடியாதவராகக் காணப்பட்ட ஜனாதிபதியின் செல்வாக்கு சரிவு அவரால் முன்னெடுக்கப்படாத பல வாக்குறுதிகளையும் இப்போது ஞாபகப்படுத்தி இருக்கும்.

மார்ச் மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்தியே ஆகவேண்டும் என அவர் வகுத்த வியூகம் எல்லாம் சரி. ஆனால் தொடர் தோல்விகளால் சுருண்டுகிடந்த ரணில் விக்ரமசிங்க தான் இறங்காமல் பொதுவேட்பாளராக இராணுவ யுத்த வெற்றியினால் மக்கள் மத்தியில் கதாநாயகனாக மாறிய ஜெனரல் சரத் பொன்சேக்காவை இறக்கிய அதிரடி தான் எல்லாக் கணிப்புக்களையும் உடைத்துப் போட்டது.

இந்திய,அமெரிக்க அவதானிப்புக்கள்,திரைமறைவு திட்டங்களும் ஓரளவு முக்கிய பங்குகளை இம்முறை தேர்தலில் வகிக்கின்றமை தெளிவாகவே தெரிகிறது.

மக்களுக்கும் பல விஷயங்கள் தெளிவாகத் தெரிகின்றன..

கறுப்புப் பணத்தை வெளியே கொண்டுசெல்லும் நோக்கில் தளர்த்தப்பட்டுள்ள வெளிநாட்டுப் பணத்தின் கொடுக்கல்-வாங்கல் சட்டம்
பொருட்களின் விலைகள் குறைக்கப்பாடல்
அவசர அதிரடி சலுகைகள்
பாதை திறந்தது
யாருமே எதிர்பாராத ஊடகவியலாளர் திசைநாயக்த்தின் பினைவிடுதலை

இப்படி பல விஷயங்கள்..

எனினும் திட்டமிட்ட பல விஷயங்களும் நடைபெறாமல் இல்லை.
பலருக்கு வாக்காளர் அட்டைகள் இன்னும் கிட்டவில்லை.
வடபகுதியில் பலருக்கு இன்னும் வாக்காளர் அட்டைகளும் இல்லை;அடையாள அட்டைகளும் இல்லை. அவர்களது வாக்குகள் அவ்வளவு தான்.

தேர்தல் முடிவுகளை அறிவிப்பதிலும் எமக்கு (ஊடகங்களுக்கு) பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தேவையற்ற சிக்கல்களைத் தவிர்ப்பதற்கு தேர்தல் ஆணையாளர் எடுத்துள்ள நடவடிக்கையாம்.
இறுதி முடிவுகளை (மொத்த எண்ணிக்கை) அரச ஊடகங்கள் உத்தியோகபூர்வமாக வழங்கியபிறகே தனியார் ஊடகங்கள் வெளியிடமுடியுமாம்.


இருவருக்கிடையில் பின்னணியான முக்கியமான அந்த ஒருவர் !


இப்போது பிரசாரங்கள் நிறைவு பெற இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில் இரண்டு பேரிடம் இருந்தும் அதிரடியான கடைசி நேர மர்ம அஸ்திரங்களை எதிர்பார்க்கலாம்.

நேற்று ஜனாதிபதி திறந்துவைத்த ஹோமாகம ராஜபக்ச சர்வதேச விளையாட்டரங்கு போல திட்டமிட்ட மறைமுகப் பிரசாரங்களும், அதிரடி சலுகைகளும் வரலாம்.

மறுபக்கம் பொன்சேக்கா தரப்பில் அதிரடியாக சிலர் மேடைஎரலாம் என ஊகிக்கப்படுகிறது.
பொன்சேக்கா பக்கம் உள்ள முன்னால் நீதியரசர் சரத் என்.சில்வா(இவர் தான் முதலில் எதிர்கால ஜனாதிபதி வேட்பாளர் என ஊடகங்களால் ஊகிக்கப்பட்டவர்) போல இன்னும் சிலரின் அதிரடிப் பிரவேசம் ஜனாதிபதிக்கு சரிவை வழங்கலாம்.

வாக்களிப்பில் அனைத்துக் கணிப்புக்கள் கட்சிகளின் வாக்குத் தளங்களை அடிப்படையாக வைத்துப் பார்த்தால், இம்முறையும் சிறுபான்மை வாக்காளரின் வாக்குகள் தான் தீர்மானமிக்க பங்கை வகிக்கப்போகின்றன.
ஒருமுறை பட்டது போதும் என்ற நிலையில் உள்ள வாக்காளர்கள் இப்போதே தீர்மானம் எடுத்திருப்பார்கள்.

எனினும் மாற்றம் என்ற ஒன்றினால் எல்லாமே மாறிவிடும் என்று நினைப்பது மிகப்பெரிய முட்டாள் தனம் என்பது அனைவருக்குமே தெரிந்தாலும், இப்படியான தீர்மானமிக்க சந்தர்ப்பங்களில் சில குறுகியகால நோக்கம் கொண்ட நீண்ட காலத் திட்டங்களுக்கான அரசியல் தீர்மானங்களை எடுக்கவேண்டி இருக்கும். இதற்கு எமது வாக்குப் பலத்தைப் பயன்படுத்தவேண்டிய அவசியத்தை நாம் உணரவேண்டும்.

நடந்தவை,நடக்கின்றவை,நடக்க இருப்பவை பற்றி நன்றாக சிந்தித்து வாக்களிப்போம்.. நல்லவர் யாரோ அவரைத் தெரிவு செய்வோம்..
இதுவே குறைந்தபட்ச தற்காலிக நிம்மதி,இருப்பு,எதிர்காலத்துக்கான ஒரே வழி.

26ஆம் திகதி வருவதற்கிடையில் இன்னும் அரசியலரங்கு கொண்டுவரபோகும் அதிரடிகள்,ஆச்சரியங்களுக்காக உங்களோடு நானும் காத்திருக்கிறேன்.

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner