Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts

February 27, 2014

விராட் கோளியின் மணிக்கூடு


காலை சூரிய ராகங்களின் பிறகு சாப்பாட்டு அறையில் வீட்டிலிருந்து கொண்டு வந்த ரொட்டியைப் பிய்த்து போராடிக் கொண்டிருக்கும் நேரம், கஞ்சிபாயின் தொலைபேசி அழைப்பு..

நேற்றைய விருதுகள் - பரிந்துரைப்பு பற்றி ஏதாவது மேலதிக சந்தேகம் கேட்கப் போகிறாரோ என்று யோசித்துக்கொண்டே "ஹெலோ" சொன்னேன்...

"இண்டைக்கு சுஜாதா நினைவு தினம் தானே?" தெரிந்துகொண்டே மீண்டும் கேட்கும் அதே கஞ்சிபாய்த்தனம்.

"அதான் காலையிலேயே சொன்னேனே? ஏன்? சுஜாதா பற்றி ஏதாவது விசேஷமா விஷயம் இருக்கா?"

"சீச்சீ.. சும்மா தான்.. சாப்பிடுறீங்க போல?" 

"ம்ம்ம். பசிக் கொடுமை அய்யா. அப்புறம்?" வைக்கமாட்டாரா என்ற அங்கலாய்ப்புடனும் வாயில் மென்று கொண்டிருக்கும் ரொட்டியுடனும் நான்.

"நேற்று இரவு award functionல இருந்தபடியா விராட் கோளிட அடி பார்த்திருக்க மாட்டீங்க என்ன?"

"இல்லை கொஞ்சம் கொஞ்சம் பார்த்தேன்... செம form. அணியைத் தனிய நிண்டு தாங்குறான் போல இருக்கு"



"தோனி fansக்கெல்லாம் நல்ல நோண்டி என்ன? இனி கோளி தான் தொடர்ந்து கப்டன். இந்தியா இனி உருப்படும். நீங்க என்ன சொல்றீங்க?" ஸ்ரீனிவாசன் இதைக் கேட்டால் என்ன சொல்வாரோ என்றெல்லாம் யோசிக்காமலேயே கஞ்சிபாய் அள்ளிக் கொட்டிக்கொண்டிருந்தார்.

விளக்கம் சொல்லி வேலையும் இல்லை, கஞ்சிபாய் விளங்கிக் கொள்ளும் 'கிரிக்கெட் ரசிகரும்' இல்லை என்பதை விட அகோரப் பசியுடன் வாயில் இருந்து வயிற்றுக்குள் அவசரமாக தாவிக்கொண்டிருந்த ரொட்டிகள் சொல்ல விடாமல்,

"ம்ம் பார்ப்போம் பார்ப்போம் அடுத்த போட்டிகளில்" என்று சொல்லி வைத்தேன்.

"அதுசரி, கோளியோட பாகிஸ்தான்காரங்கள் ரெண்டு பேரை ஒப்பிட்டு எதோ tweet பண்ணீங்களாம்" அதே கஞ்சிபாய்த்தனம்.

"ஓமோம்.. அனேக shots, aggression, அடித்தாடுற நேரம் உறுதி, timing  எல்லாம் ஒரே மாதிரி தான் எனக்குத் தெரியுது"

"ஆனா கோளிய நெருங்க முடியாது.அடுத்த சச்சின் கோளி தான்" உறுதியாக கஞ்சிபாய் என்னை இப்போதைக்கு பசியாற்ற விடமாட்டார் என்று தெரிஞ்சு போச்சு.

"அப்பிடியா?" கஞ்சிபாயின் பதில் நீ......ளமா வாறதுக்கு இடையில் இன்னும் ரெண்டு ரொட்டித் துண்டுகளை சம்பலில் தொட்டு வயித்துக்கு அனுப்பலாம் என்று இந்தக் கொக்கி.

"பின்ன? என்ன அடி.. அசுர அடி. அவர்ட்ட battingகு கிட்ட அவனும் இல்ல. அடுத்த Mr.Cricket. லோஷன், நேற்று match பார்த்திருந்தீங்கன்னா விளங்கி இருக்கும்"

"ம்ம்ம் பார்த்தேன் சில shots. பார்த்தவரைக்கும் நேற்று கோளிட Timing சூப்பர்" உண்மையாக நேற்று ரசித்த கோளி இன்னிங்க்ஸை பாராட்டினேன்.

"அட ஆமா... அதான் அவர் அடிக்கடி கையில் கட்டியிருந்த கடிகாரத்தைப் பார்த்து பார்த்தே batting செய்துகொண்டிருந்தார்"

தொண்டைக்குள்ளிருந்த ரொட்டி சளேர் என்று நேரே வயிற்றுக்குள் விழ, காதில் சரித்து வைத்திருந்த மொபைல் சரிந்து சம்பல் அப்பிக்கொண்டது.

---- 
கஞ்சிபாய் என்பதை வேறு யாராவதாக பிரதியீடு செய்துகொண்டால் பதிவர் பொறுப்பாளியல்ல.
உருவகக் கதையாக இதை நினைத்தாலும் பதிவர் பொறுப்பெடுக்க மாட்டார்.
மனைவி சம்பலுக்கு சேர்த்த உப்பு, ரொட்டிக்கு சேர்த்த தேங்காய்ச் சொட்டு போல உண்மை சம்பவத்தில் கொஞ்சம் மேலதிக சுவை சேர்க்கப்பட்டது.


May 17, 2012

நல்ல வடிவா எழுதுங்கப்பா #ஹர்ஷு

ஹர்ஷு


"எனக்கு போர் அடிக்குது அப்பா.. என்னோட விளையாட வாங்களேன்.." சரியாகக் களைத்து விழுந்து வீட்டுக்கு வரும் என்னை ஹர்ஷு எக்கச்சக்க ப்ளீஸ் போட்டு அழைக்கும்போது தட்ட முடிவதில்லை. அதுவும் இந்த IPL ஆரம்பித்த பிறகு ஒன்பது அணிகளின் பெயர்களையும் மனப்பாடமாக சொல்லிச் சொல்லியே, தான் ஒரு அணி, நான் ஒரு அணிஎன்று பந்து வீசச் சொல்லித் தான் துடுப்பெடுத்தாடுவதும், பின் தான் வீசும் பந்துகளுக்கு ஆட்டமிழக்கச் சொல்வதும் நாளாந்தம் நடப்பவை. 

ஒரு நாள் சரியான களைப்போடு சொன்னேன் "ஹர்ஷு, அப்பாக்கு கொஞ்ச வேலை இருக்கு.. நீங்க ஒருநாளைக்கு உங்கட பிரென்ட்சைக் கூட்டிக்கொண்டு வந்து 
விளையாடலாமே"

உடனே பதில் வந்தது சலிப்புடன் " இல்லையப்பா அவங்கல்லாம் சரியான பிசி.. வர மாட்டாங்க"

எனக்கு சிரிப்பும் வந்துவிட்டது .. "அப்படி என்னடா அவங்களுக்கு பிசி?" 

"இல்லையப்பா ஸ்கூல்ல (நேர்சரி) நிறைய எழுத்து வேலை குடுக்கிறாங்களே.. English writing, Tamil hand writing எண்டு அப்பா... அவங்க பாவம்" 

அட.. என்று நினைத்துக்கொண்டே " அப்போ உங்களுக்கு? நீங்க எல்லாம் முடிச்சிட்டீங்களா?" என்று கேட்டேன்..
"இல்லையப்பா... அதெல்லாம் விளையாடி முடிச்ச பிறகு தானே செய்யலாம்.. அது study timeல தானே"

ம்ம்ம்ம்... நாலரை வயசில கதைக்கிற கதையைப் பாருங்களேன்.. 
இப்போதெல்லாம் என்னை விட அவன் தான் IPL அட்டவணையை எல்லாம் சரியா ஞாபகம் வைத்திருக்கிறான். 


ஹர்ஷுசென்னை சுப்பர் கிங்க்சின் தீவிர ஆதரவாளன். சென்னை அல்லது அவன் ஒரு நாளில் ஆதரவளிக்கும் அணி தோற்றுவிட்டால் கொஞ்சம் அப்செட் ஆக இருப்பான். நான் "இதெல்லாம் சும்மா விளையாட்டுத் தானே அப்பன்.. இன்றைக்குத் தோற்றால் நாளைக்கு வெல்வார்கள்" என்று சொல்லி சொல்லி இப்போ 
"அப்பா இண்டைக்கு சென்னை தோத்தா நான் கவலைப்பட மாட்டேனே.. நான் இப்போ Big Boy தானே.. its just a game தானே"என்கிறான்.


---------------------------

அன்றொரு ஞாயிற்றுக்கிழமை... எந்தவொரு வேலையும் வைத்துக்கொள்ளாமல் வீட்டிலிருக்கும் நாள் என்பதால் ஹர்ஷுவுடன் அவன் ஆசைப்படும் விளையாட்டு எல்லாம் விளையாடி அவனைக் குஷிப்படுத்துவது வழக்கம்.
திடீரென்று கேட்டான் "அப்பா நாங்க சண்டைப்பிடிப்போமா? நான் விஜய் நீங்க வில்லன் ஓகேயா?"
சரி என்று சொல்லி முடிக்க முதல் சரமாரியாக தன் பிஞ்சுக்காலாலும்கையாலும் மெத்து மெத்து என்று மொத்த ஆரம்பித்தான்.. 

நான் சும்மா விழுவது போல நடிக்க, "வில்லன் வில்லன், ப்ளீஸ் கொஞ்சம் இங்கே வெயிட் பண்ணுங்கோ, நான் என்டை கண்ணை (Gun) எடுத்துக்கொண்டு வந்து உங்களை ஷூட் பண்றேன்" என்று தனக்கேயுரிய மழலையில் சொல்லிவிட்டு ஓடினான்.

---------------------
அசதியாக, வசதியாக சோபாவில் சாய்ந்துகொண்டே கிரிக்கெட் போட்டி பார்த்துக்கொண்டிருந்தேன்.. இவன் கிரிக்கெட் விளையாடுகிறேன் என்று சொல்லி ஓடி வந்து எனக்கு மேலே விழுந்துகொண்டிருந்தான்.. எனது இரு கால்களினாலும் அமுக்கி ஆளைப் பிடித்துக்கொண்டே " You are under arrest" என்றேன்.
"I'm cricket player. Leave me" என்று பதிலுக்கு சொன்னான் ஹர்ஷு.


"So what?" என்று பிடியை விடாமல் நான் கேட்டேன்..
உடனே அவனிடமிருந்து பதில் " என்ன குற்றம் செய்தேன் நான்?"


-------------------------------
அன்றொருநாள் எனது மனைவி எதையோ காணவில்லை என்று முமுரமாகத் தேடி, கிடைக்கவில்லை என்றவுடன் கவலையுடன் புலம்பிக்கொண்டிருந்திருக்கிறார்.
பெரிய மனுஷத்தமாக நம்ம ஹர்ஷு சொன்னாராம் " விட்டுத் தள்ளுங்கம்மா.. எப்ப பார்த்தாலும் சும்மா யோசிச்சுக் கொண்டு"

எங்கே இருந்து தான் இதெல்லாம் பொறுக்கிறானோ...

---------------------------------

இப்போதெல்லாம் இவன் செய்யும் குறும்புகள் கொஞ்சம் அதிகமாகும்போது என் மனைவி கேட்பார் "ஹர்ஷுவின் இந்தக் குழப்படி பற்றி எழுதப்போறீங்களா?"
ஒருநாள் இவன் உடனே என்னைப் பார்த்து சொல்கிறான் " நல்ல வடிவா எழுதுங்கப்பா.. எல்லாருக்கும் சொல்லுங்கப்பா வாசிக்க சொல்லி"

இன்னும் வ(ள)ரும் ஹர்ஷு குறும்புகள்.... 

May 09, 2012

கிளுகிளு & கிக்கான பரீட்சை

மீண்டும் ஒரு IPL காலம்.....

எங்கள் மாலைப் பொழுதுகள் எல்லாம் IPL உடன் மூழ்கிக் கிடக்கின்றன. 
Twitter, Facebook Timeline எல்லாம் IPL இனால் நிறைந்து கிடக்கின்றன..
விலைவாசி முதல் தலைபோகும் அரசியல் பிரச்சினைகளும், வாழ்க்கையின் வேதனைகளும் தற்காலிமாக மறக்கவும் IPL தான் துணை....

இந்த நேரத்தில் தான் முன்னைய இடுகையொன்று ஞாபம் வந்தது...

இதோ ரிப்பீட்டு...

பரீட்சைகள் என்றாலே கசப்பு மருந்தாக, கண்ணில் காட்டாத ஜந்துவாக ஓடி ஒளிக்கும் மாணவர்களுக்கு அதை சுவையாக மாற்றித் தர சில வழிகளை இப்போது இளைஞர் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ள IPL பாணியில் யோசித்தோம்....


உலகம் முழுக்க IPL மூலமாக கிரிக்கெட் பரபர விற்பனைப் பொருளாக மாறியது போல, பரீட்சையையும் மாணவர்கள் விரும்புகிற ஒரு சுவாரஸ்யமான விஷயமாக மாற்ற நம்மால் முடிந்த சில ஐடியாக்கள்...

IPL பாணியில் பரீட்சைகள்..

1. பரீட்சை நேரத்தை ஒரு மணித்தியாலமாக மாற்றி,புள்ளிகளை 50ஆக மாற்றிவிடுவது..
2. பதினைந்தாவது நிமிடத்தில் Strategy break அறிமுகப்படுத்தப்படும்.
3. மாணவர்களுக்கு ப்ரீ ஹிட் (Free hit) கொடுப்பது; அவர்களுக்கான கேள்விகளை அவர்களே எழுதி விடைகளையும் அவர்களே எழுத ஒரு வாய்ப்பு
4. முதல் பதினைந்து நிமிடங்கள் Power Play... பரீட்சை அறைக்குள் மேற்பார்வையாளர் இருக்கமாட்டார்.. மாணவரகள் இஷ்டப்படி புகுந்து விளையாடலாம்.
5. கொப்பி அடிக்காமல், பிட் அடிக்காமல் எழுதும் மாணவர்களை ஊக்கப்படுத்த Fair Play விருதுகளை அறிமுகப்படுத்தல்.. (ரொம்ப நல்லவங்களுக்கும் ஒரு வாய்ப்புக் கொடுப்போமே)
6. பரீட்சைத் தாளில் பிழையான வினா ஒன்று கேட்கப்பட்டிருந்தால் அடுத்த கேள்விக்குத் தவறான விடை சொன்னாலும் புள்ளிகள் கழிக்கப்படாது..
இதுவும் ஒரு வகை Free hit தான்.


எல்லா மாணவர்களும் விரும்பப்போகின்ற முக்கியமான விஷயம் இது....

ஒவ்வொரு சரியான விடை எழுதும் நேரமும் ஊக்குவித்து உற்சாகப்படுத்த பரீட்சை மண்டபங்களில் Cheer Girls  இருப்பார்கள்...
மாணவிகள் விரும்பினால் Cheer Boysஉம் ஏற்பாடு செய்யலாம்....





ஹலோ.. எங்கேப்பா எல்லாரும் பரீட்சைகளுக்குப் படிக்கத் தயாராகிறீங்களா? இன்னும் அமுல்படுத்தலீங்க.. நீங்கள் எல்லாம் ஆதரவளித்து இந்த ஐடியாவை வரேவேற்று வெற்றிபெறச் செய்தால் வந்திடும் விரைவில்.
(வாக்குக் குத்துங்கன்னு மறைமுகமாக சொல்றேனாக்கும்)



இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஒருநாள் காலை விடியலில் ஏக வரவேற்பைப் பெற்ற விஷயம் இப்போ இடுகையாக..

இதன் ஒரிஜினல் ஆங்கில வடிவம் ;)


April 15, 2012

ஒரு கல் ஒரு கண்ணாடி - OKOK


இரண்டரை மணித்தியாலம் இடைவிடாமல் சிரித்து (எதையும் பற்றி யோசிக்காமல்) படம் ஒன்றை ரசித்து எவ்வளவு காலம் ஆச்சு.. அந்தக் குறையைத் தீர்த்து வைத்தது இந்த OKOK .


இயக்குனர் ராஜேஷ் + சந்தானம்.. இவர்களின் இணைப்பில் ஹட் ட்ரிக் இது. சிவா மனசுல சக்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருக்கவில்லை.. ஆனால் கதையும் நகைச்சுவையும் சேர்ந்து கலக்கியது. அந்த வெற்றியையும் பெற்ற நல்ல பெயரையும் தக்கவைத்துக்கொள்ள கொஞ்சமே கொஞ்சம் கதையைத் தொட்டு ஆர்யா + நயன்தாராவின் நட்சத்திர அந்தஸ்தோடு சந்தானத்தின் நகைச்சுவை சேர்த்துக் கலக்கி மீண்டும் வென்றார் ராஜேஷ்.

இம்முறை கதாநாயகன் புதுசு.. அவரே தயாரிப்பாளர்; நடிப்பார் என்று எதிர்பார்க்கவும் முடியாது. முதல் இரு படங்களிலும் ஹிட் பாடல்களில் கை கொடுத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவும் இல்லை.

இதையெல்லாம் யோசித்த கெட்டிக்காரர் ராஜேஷ் OKOKயில் முழுக்க முழுக்க சந்தானத்தை ஆட, ஆள,அதிகாரம் செலுத்த விட்டிருக்கிறார்.
கதை என்று எதையும் எதிர்பார்க்காமல், லொஜிக், யதார்த்தம், இப்படியெல்லாம் நடக்குமா என்றெல்லாம் கேள்வி கேட்காமல் பார்த்தோமானால் கொடுத்த காசுக்கு குதூகலமாக சிரித்துவிட்டு வரலாம்.

உதயநிதி கதாநாயகனாக முன்னிறுத்தப்பட்டாலும் சந்தானம் திரையில் வரும்போது தான் படத்துக்கே ஒரு கிக்கு.. சந்தானமே சரணம் என்று விழுந்த இயக்குனர் & தயாரிப்பாளர் கம் கதாநாயகனுக்குக் கை கொடுத்து கை தூக்கி விடுகிறார் சந்தானம்.

ஊர் சுற்றி அலையும் நாயகனுக்கு ஹன்சிகாவை வீதியில் சந்தித்த உடனேயே காதல் பற்றிக்கொள்ள, எதற்கும் துணிந்த எப்போதும் பலிக்கடா ஆக்கப்படுகிற நண்பன் இருக்கையில் என்ன கவலை?
ஆனால் படம் எப்படிப் போகப் போகிறது என்று கதைப் போக்கு தெரிந்தபிறகும் தொய்வில்லாமல், சலிப்பில்லாமல் கொண்டு செல்ல இயக்குனருக்கு நிறைய மசாலாவும் இன்னும் நிறைய தில்லும் வேண்டும்..
ராஜேஷ் அதிலும் ஜெயித்திருக்கிறார்.

உதயநிதி ஒரு மாதிரியாக ஒப்பேற்றிவிட்டார். பவர் ஸ்டாரும் ரித்தீஷும் நம்ம விமர்சக, பதிவுலக சகாக்களிடம் பட்ட பாட்டை இவரும் படுவாரோ என்று பார்த்தால், பாடல் காட்சிகளைத் தவிரவும் ஒரு சில சீரியஸ் காட்சிகள் தவிரவும் உதயநிதி நன்றாகவே செய்திருக்கிறார். கண்கள் தடுமாறுவதைத் தவிர்க்க முக்கால்வாசிக் காட்சிகளில் கூலிங் க்ளாஸ் உதவுகிறது.
நகைச்சுவைக் காட்சிகளில் உதயநிதியை சந்தானம் overtake / dominate செய்து பாஸ் பண்ண வைக்கிறார். தொடர்ந்தும் தானே தயாரித்து நடிக்கப் போகிறாரா என்று தான் தெரியவில்லை.

ஹன்சிகா - சின்னத்தம்பி குஷ்பு என்று ஐஸ் வைக்கிறார்கள்; கிடைக்கிற நேரத்தில் எல்லாம் குண்டு, பூசணிக்கா, ஆடை சரியில்லை என்று வசனங்களில் வாரி விடுகிறார்கள். வேலாயுதத்தில் பார்த்ததை விடக் கொஞ்சம் ஊதிப் பெருத்திருக்கிறார் போல. தமிழ் ரசிகர்களுக்கு இப்படி ஊதிப்பெருத்த உப்பு மூட்டைகளைத் தான் பிடிக்கும் என்று ஏதாவது இலக்கணம் ஏதாவது இருக்கா ஏன்னா?

வழமை போலவே ஹன்சிகாவிடம் நடிப்பைத் தேடவேண்டியே இருக்கிறது. கவர்ச்சியும் அவரிடம் ஹூம்.. அதை ஆபாசம் என்றே சொல்லவேண்டி இருக்கிறது.
அதனாலோ என்னவோ சில காட்சிகளில் பார்க்கப் பாவமாக இருக்கிறது.

சந்தானம் - இவர் தானே படத்தின் 'ரியல்' ஹீரோ.. இவரது டைமிங் கொமெடிகளும் சரமாரியான பஞ்சுகளும் திரையரங்கில் பயங்கரமாக ரசிக்கப்படுகின்றன.
நண்பனுக்கு உதவப்போய் ஒவ்வொருமுறையும் அகப்பட்டு ஆப்படிக்கப்படும்போதும் அப்பாவியாக நிற்கும் சந்தானத்தின் முகம் கலக்கல்..

அதிலும் ஹீரோ, ஹீரோயின் அணிந்துள்ள ஆடைகளை விட, சந்தானம் அணிந்து வரும் கண்ணைக்குத்தும் கலர் கலர் ஆடைகளும் அதைவிட கலர் கலர் பெல்ட்டும் அலாதி. சந்தானமே தெரிவு செய்ததா என்று அறிந்துகொள்ள ஆசை. Santhanam, I liked your belts, :)
காதல் பற்றியும் காதலர் பற்றியும் நண்பர்கள் பற்றியும் சந்தானம் அடிக்கும் தத்துவங்கள் இனி Twitter, Facebook முழுக்கப் பரவிக் கிடக்கப் போகும் பாருங்கள்.
அதிலும் 'தண்ணி'யையும் தண்ணீரையும் வைத்து நண்பனின் காதலையும் நட்பையும் விளக்கும் இடம் கலக்கல்.
கடைசிக் காட்சிகளில் ஹீரோ பேசும் அரைகுறை ஆங்கிலத்தைத் தமிழில் மொழிபெயர்க்கும் இடமும் நச்.

இந்த மூன்று முக்கியமானவருக்குப் பிறகு முக்கியமான இடம் சரண்யாவுக்கு..
எம் மகனுக்குப் பிறகு இன்னொரு அப்பாவி அம்மா பாத்திரம். பரிதாபத்தைத் தேடிக்கொள்கிறார்.அழகம்பெருமாளுக்கும் இவருக்கும் இடையிலான கணவன்-மனைவிப் பாசப் போராட்டம் தான் படத்தின் நெகிழ்வுக்கான வெகு சில இடங்களில் முக்கியமானது. ஆனால் அது இல்லாமல் இருந்தாலும் தெரிந்திருக்காது. ராஜேஷ் இதைக் கவனிக்கவில்லையா?

தாயும் மகனும் சேர்ந்து ஹன்சிகாவைக் கலாய்க்கும் இடம் படத்தின் கலகல இடங்களில் முக்கியமான ஒன்று.

அழகம்பெருமாளும், ஷாயாஜி ஷிண்டேயும் கவனிக்கக் கூடிய இன்னும் இரு பாத்திரங்கள்.

சினேகா, ஆன்ட்ரியா ஆகியோர் நட்புக்காக ஒவ்வொரு காட்சிகளில் வருகிறார்கள்.
சினேகா கொஞ்சம் மனசில் நிற்கிறார்.
சந்தானத்தின் "புன்னகை அரசி - புழுங்கல் அரிசி " நக்கல் இருக்கிறது.

ராஜேஷின் முன்னைய படத்தின் ராசி போலவே - பாஸ் என்கிற பாஸ்கரனில் ஜீவா வந்தது போல - இந்தப்படத்தின் கடைசிக் காட்சியில் ஏன் என்று தெரியாமலே ஆர்யா வருகிறார்.
(அட அதான் லொஜிக் எல்லாம் பார்க்காதீங்கன்னு ஆரம்பத்திலேயே லோஷன் சொல்லிட்டாரில்லா)

ஒளிப்பதிவு - வழமை போல பாலசுப்பிரமணியெம். அருமையாக செய்துள்ளார். குறிப்பாக அழகே அழகே பாடல் காட்சியில் வரும் அந்தப் பாலைவன, மலைப் பிரதேசங்களை காட்டியுள்ள விதம அருமை. மற்றும்படி பெரிதாகக் கமெரா வித்தை காட்டக் கூடிய காட்சிகள் அமையாதது இவர் குற்றம் இல்லையே.

நடனம் - தினேஷ். பாராட்டியே ஆகவேண்டும். தினேஷ் குழுவோடு ஆடும் நடனம் கலக்கல்; அதை விட உதயநிதி பற்றித் தெரிந்து அவரையும் கஷ்டப்படுத்தாமல், எங்களையும் எரிச்சல் படுத்தாமல் நடனம் அமைத்து புண்ணியம் தேடிக்கொள்கிறார்.
'வேணாம் மச்சான் வேணாம்' பாடல் காட்சி பாராட்டுக்களை அள்ளிக் கொள்கிறது.

ஹரிஸ் ஜெயராஜ் பாடல்கள் மூலமாக வென்ற பாராட்டுக்களைப் பின்னணி இசையில் சமாளித்து தக்க வைத்துக்கொள்கிறார். பெரிதாக வேலை இல்லை. பாடல்களின் இசையை வைத்த ரீ ரேக்கொர்டிங் செய்திருக்கிறார்.

ராஜேஷின் அடுத்த படம், ஆல் இன் ஆல் அழகு ராஜாவாம்.. வெயிட்டிங்.

ஒரு கல் ஒரு கண்ணாடி - எல்லாம் ஓகே :))))



November 09, 2011

வந்தி மாமா 16


பதிவுலக பச்சிளம் பாலகன்...
இருபத்தைந்தாவது தடவையாகப் பதினாறாவது பிறந்த நாள் கொண்டாடும் என்றும் மார்க்கண்டேயன்..
பாதிப் பெண்களை தங்கையாகவும் மீதிப் பெண்களை மகள்மாராகவும் ஆக்கி மனோதர்ம வாழ்வு வாழும் மகாத்மா..
எங்கள் ஆன்மீக குரு வந்தியானந்தா மாமாவுக்கு (பெரி.மயூரன் என்ற இயற்கைப் பெயர் கொண்ட வந்தியத்தேவர் ) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..



வந்தி பற்றிப் பதிவுலகமும், பாருலகமும் அறிந்தும் அறியாத விஷயங்கள் 16....

1.ஒருவர், இருவருக்கென்று இல்லாமல் ஊருக்கே மாமாவாக அறியப்பட்டாலும், இவர் மனதார மாமா என்று அழைக்க நினைப்பது இந்த மாமாவுக்கு இரண்டு நாட்கள் முன்னர் பிறந்த/பிறந்த நாளைக் கொண்டாடிய உலக நாயகனைத் தான்.
(ஏழாம் அறிவு ஹீரோயின் தான் காரணம் என்று விளக்கவும் வேண்டுமா?)

2.லண்டன் போனாலும் லங்காவில் இருந்தது போலவே சுத்த சைவமாக (சாப்பாட்டில்) இருந்து கூதல் குளிரையும் ஒரு கை பார்த்த சிங்கம்.

3.எத்தனை விதமாக எங்கெங்கெல்லாமோ தெரிந்த தெரியாதவர்களிடம் மொத்து வாங்கி, சிக்கல் சின்னாபின்னப் பட்டாலும் இந்த 'சிரட்டை' சிங்கத்துக்கு கோபம் கொஞ்சம் கூட எட்டிப் பார்க்காது.

4.அதிகமாகக் கோபம் ஏறி ஆத்திரத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போனால் "பொறுங்கடா, உங்களைப் பற்றிப் புனைவு போட்டுக் கிழிக்கிறேன்" என்று காமெடியாகக் கொந்தளிப்பார்.
ஆனால் அது ரணிலின் 'அரசாங்கத்தைக் கவிழ்க்கப் போறோம்' என்பது போலத் தான்.
அதற்காக வைக்கப்பட்ட ஆயிரமாவது பட்டம் தான் 'பு.மாமா' - புனைவு மாமா (வேற ஏதாவது விவகாரமா நீங்கள் இதுவரை காலம் யோசித்திருந்தால் கும்மி டெரர் சங்கம் பொறுப்பில்லை)

5.இப்போது அடிக்கடி முணுமுணுக்கும் இரு பாடல்கள்
"வாழ்க்கையில் ஆயிரம் தடைக்'கல்'லப்பா தடைக்'கல்'லும் உனக்கொரு படிக்'கல்'லப்பா"
"ஒரு 'குண்டு'ச் சட்டிக்குள்ளே வந்து குதிரையோட்டும் புள்ள"

6.கணிதம் படித்திருந்தாலும், கணினிப் பக்கம் இருந்தாலும் இலங்கை இம்முறை வந்த பிறகு வைத்தியத் துறையில் ஒரு தனியான ஈடுபாடும் தணியாத தாகமும் சேர்ந்திருக்கிறதாம்.

7.கடற்கரையில் நண்பர்களோடு நின்ற நேரம், எங்கிருந்தோ முளைத்த சாத்திரக்காரி தேடி வந்து இழுக்காத குறையாகக் கையை இழுத்து (நம்புங்கப்பா மாமா இழுக்கேல்லை) "நீங்க சொல்லடியையும் கல்லடியையும் நின்று தாங்கும் பிள்ளை" என்று நெற்றிப் பொட்டில் அடித்த மாதிரி எப்படிப் பட்டென்று சொன்னாள் என்று வெவ்வேறு இடங்களில் ரூம் போட்டு (தனியாத்தானா?)யோசிக்கிறார்.


8.இப்போ ஸ்ருதி ஹாசன், தமன்னா பிடிக்கும் என்று சொல்லி வயசைக் குறைச்சுக் காட்ட எத்தனித்தாலும் நம் மாமாவின் all time favorites பூர்ணிமா(பாக்கியராஜ் கோவிச்சாலும் பரவாயில்லையாம்), ராதா (அதான் கோ கதாநாயகியின் அம்மா), சுஹாசினி (மணிரத்னத்தின் அம்மணி) & அம்பிகா (சொல்லணுமா?) தான்.

9.லண்டனில் இருந்தும் எங்கள் திருமலைக் குஞ்சு கேட்டபடி ஜிம்மி அன்டர்சனின் அண்டர் வெயரை வாங்கி வர முடியவில்லை என்பதே அண்மைய சறுக்கல்.

10.லண்டனில் இருந்து பிளைட்டில் வந்த நேரம் ரொம்ப நேரமா இவரையே ஒரு ஆண்டி வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்ததும், என்னடா இது மகள் ஏதாவது இருக்குமோ என்று நம் மாமா யோசிக்க, கட்டுநாயக்க Airport வந்ததும் அந்த ஆண்டி இவரைப் பார்த்து "Excuse me Uncle, Are you Mr.வந்தியத்தேவன்?" என்று கேட்க நம் மாமா அரை மணித்தியாலம் உள்ளே மயங்கி வீழ்ந்து கிடந்தது வரவேற்கச் சென்ற நாம் வெளியே காத்திருந்த கதை இன்று தான் வெளியே விடப் படுகிறது.

11.புலம்பெயர் பதிவர்களின் லண்டன் பிராந்தியத் தலைவராக இருந்தும் அதுபற்றி இன்னமும் காவல்துறை தன்னை அழைத்து விசாரிக்காதது கௌரவக் குறைவு என்னும் மன உளைச்சலால் மட்டக்களப்பு போய் தனியாக, ரகசியமாக இரு நாள் மாநாடு போட்டு வந்திருக்கிறார் மாமா.

12.நாடு திரும்பிய பதிவுலக சிங்கத்தைக் கௌரவிக்கும் வகையில் 'இலங்கைப் பதிவர்களின் நாலாவது பதிவர் சந்திப்பு' பற்றி குழுமத்தில் யாராவது மடல் இடுவார்கள் என்று ஒவ்வொரு மணித்தியாலமும் தன் ஜிமெயிலை refresh செய்து refresh செய்தே களைத்துவிட்டாராம்.

13.(இங்கிலாந்து) அரச குடும்பத்தில் இணையும் வாய்ப்பு சில வருடங்களுக்கு முன் கிடைத்தபோதும் அது கிடைக்காமல் கை நழுவிப் போன சோகம் இப்போதுவரை மனதில் இருந்தாலும் இன்னும் (இன்றும் கூட) மனதில் கோபமில்லாமல் ரசிக்கிறார் இந்தப் பிஞ்ச/பிஞ்சு மனசுக்காரர்.

14.அண்மையில் நடந்த கொலையொன்றில் சம்பந்தப்பட்டு சர்ச்சைக்குரிய ஒரு அரசியல்வாதி, இலங்கையின் பர பர மங்களமான அரசியல் வாதி ஆகியோருக்கும் சரித்திரக் காதலன் சலீமுக்கும் நம் மாமாவுக்கும் ஒரே வித ரசனை.. ஹி ஹி ஹி.. ;)

15.வாசிப்புப் பிரியர் நம்ம வந்தி மாமா அதிக தடவை வாசித்த நூல் - பொன்னியின் செல்வன் அப்பிடின்னு நீங்க நெனச்சா தப்பு.
ஒவ்வொரு நாளும் வாசித்த பின்னரும் இன்னும் அடங்கவில்லை தாகம் என்று மாமா சொல்லும் நூல் - சீரோ டிகிரி
ஆமாம் நம்ம ஹீரோ சாருவின் சீடர்.

16.வந்தியானந்தா என்ற சிறப்புப் பெயரோடு இவர் உபதேசம் செய்து உலகப் புகழ் பெற்று விளங்க வாழ்க்கையில் அடிபட்ட ஞானமும், வாய்த்த முதலாவது சீடன் கன்கோனின் ராசியும் தான் காரணம் என்கிறார்.


மீண்டும் மனதார்ந்த வாழ்த்துக்கள் மாமா + அட்வான்ஸ் நன்றிகள் இன்று மாலை தரப்போகும் விருந்துக்கு ....
அடுத்த பிறந்த நாள் விழாவுக்கு எங்கள் மாமியுடனும், மருமகனுடனும் எங்களை லண்டனுக்கு அழைத்துக் கொண்டாடவுமென்று குதூகலமாக வாழ்த்துகிறோம்..



July 08, 2011

டொன்ட்ட டொன்ட்ட டொன்ட்ட டொய்ங்


கஞ்சிபாயிடம் இருநூறு ரூபாய் இருக்கிறது.
ஆனால் அவருக்கு நான்கு நண்பர்கள். ரொம்பவே நல்லவரான கஞ்சிபாய் அந்த நாலு பேருக்குமே ஆளுக்கு நூறு ரூபா வீதம் அதைப் பகிர்ந்து கொடுத்ததாக எனக்கு சொன்னார்.

இருந்த இருநூறு ரூபாயை எப்படி ஆளுக்கு நூறு ரூபாயாக நான்கு பேருக்குக் கொடுக்க முடியும்?
அது எப்படி சரியாகும் என்று நம்ம கஞ்சிபாயிடம் கேட்டேன்..
கஞ்சிபாய் சொன்னது " நாலு பேருக்கு நல்லது செஞ்சா எதுவுமே தப்பில்லை லோஷன்"
டொன்ட்ட டொன்ட்ட டொன்ட்ட டொய்ங் டொன்ட்ட டொய்ங்...

கமல் மாதிரி நான் ஓவென்று வாயைத் திறந்து அழ ஆரம்பித்தேன்..
------------------------

கஞ்சிபாயும் சிங்கப்பூர் சீலனும் சேர்ந்து அப்பாவி லோஷனின் ஆயிரம் ரூபாவை ஆட்டையைப் போட்டுட்டாங்க.

சிங்கப்பூர் சீலன் கஞ்சிபாயிடம் சொன்னார் "இதை நாங்க ரெண்டு பெரும் பிப்டி பிப்டியா எடுத்துக் கொள்ளுவம்"
கஞ்சிபாய் சந்தேகமாகக் கேட்டார் "சரி பிப்டி பிப்டி போனா மிச்ச தொள்ளாயிரம் ரூபா?"

-----------------------------------


கஞ்சிபாயும் மனைவியும் ஒருநாள் வீதியில் நடந்து போய்க்கொண்டிருந்தார்கள்..ஒரு மூலையில் ஒரு குடிகாரன்.. 

அவனைக்காட்டி.. 

கஞ்சிபாயின் மனைவிஎன்னங்க அதோ அங்க உக்காந்து தண்ணியடிக்கிறாரே அவர் என்னை பொண்ணு பார்க்க வந்தாருநான் அவரை கல்யாணம் பண்ணமாட்டேன்னசொல்லிட்டேன். பாருங்களேன் அதை நினைச்சே அவரு இத்தனை வருஷமா தண்ணியடிக்கிறாரு.


கஞ்சிபாய் அவன் கொடுத்து வச்சவன்... அந்த சந்தோஷத்தை இத்தனை வருஷமா கொண்டாடிக் கொண்டிருக்கானேன்னு தான் ஆச்சர்யமா இருக்கு.


-----------------------------
கஞ்சிபாய் எனக்கு சொன்ன ஒரு விஷயம் 

கணவன் மனைவிக்கு கார் கதவை திறந்து கொடுத்தால் அதற்கு மூன்றுகாரணங்களே இருக்க முடியும்.

1. புது மனைவியாக இருக்கும்
2. புது காராக இருக்கும்
3. அந்த பெண் மனைவியாக இருக்க முடியாது.



******

அண்மையில் விடியலில் போட்ட கஞ்சிபாய் மொக்கைகள்..
சிரிக்க முடிந்தால் சிரித்துக்கொள்ளுங்கள்.. 


June 27, 2011

ஆன்டி பேர் டார்லிங் ????


இன்று காலை விடியலில் சொன்ன ஜோக்ஸ்....
எங்கேயாவது  கேட்டிருந்தாலோ, வாசித்திருந்தாலோ கூடப் பரவாயில்லை..
மீண்டும் சிரித்தாலும் ஒன்றும் நஷ்டம் இல்லை...



1.உங்க தாத்தாவா?

நீண்ட காலத்துக்கு முன்பு...
கஞ்சிபாயின் வகுப்பு ஆசிரியர்... "உங்க பொது அறிவை சோதிக்க ஒரு கஷ்டமான கேள்வி...
ஆழமான கடல்.. நீந்தித் தான் போகவேண்டும்..
அந்தக் கடல் நடுவில ஒரு மாமரம் அதுல இருக்கிற ருசியான மாங்காயை எப்படி பறிப்பாய்?

கஞ்சி பாய் : பறவை போல மாறி பறந்து போய் பறிப்பேன்.

ஆசிரியர் : பறவை போல உன்னை உன் தாத்தாவா மாத்துவாரு?

கஞ்சி பாய் : அப்ப கடல் நடுவில மரம் உங்க தாத்தாவா வச்சாரு?

கஞ்சி பாய் என்னிடம் அடித்த பஞ்ச் -
ஒரு பாடம் சொல்லிக் கொடுக்கிற அவருக்கே இவ்வளவுன்னா............, 10 பாடம் படிக்கிற எனக்கு எவ்வளவு இருக்கும்......!


2. பத்து ரூபா 

கஞ்சிபாயின் மகன் : அப்பா, எனக்கு ஒரு பத்து ரூபா வேணும்..

கஞ்சி பாய் :எதுக்கு?

கஞ்சிபாயின் மகன் : சொக்லெட் வாங்கி சாப்பிட அப்பா..

கஞ்சி பாய் : இதப் பாரு மகனே.. நான் எல்லாம் அப்பாவின் காசி இப்பிடி அநியாயமாக்கினது இல்லை. அந்தக் காலத்திலேயே ஒவ்வொரு சதமா எண்ணி, எண்ணி சிக்கனமா செலவளிச்சென் தெரியுமா? அந்தக் காலத்திலேயே எனக்கு ஒவ்வொரு சதத்தின் அருமையும் தெரிஞ்சிருந்தது.. தெரியுமா?
(இப்படியே ஒரு அரை மணி நேரம் லெக்சர் அடித்து மகனின் காதால் ரத்தம் வர்றா மாதிரி செய்த பிறகு.....)

கஞ்சிபாயின் மகன் : சரிப்பா.. இவ்வளவு நீங்க சொல்ற நேரம் நான் அப்பிடிக் கேட்டது தப்புத் தான்.. எனக்கு ஒரு ஆயிரம் சதம் தாங்களேன் ;)



விடியலில் சொல்லாத, சொல்ல விரும்பாத ஆன்டி ஜோக் ;)

ஆன்டி பேர் டார்லிங் 



கஞ்சி பாயின் மகன் : அம்மா! எதிர் வீட்டு ஆன்டி பேர் என்னம்மா?

கஞ்சி பாயின் மனைவி : ஹன்சிகா டா...

கஞ்சி பாயின் மகன் : அப்பாவுக்கு இது கூட தெரிய மாட்டேங்குதும்மா. அந்த ஆன்டியை "டார்லிங்"னு கூப்புடுறார்....



June 21, 2011

வில்லங்கமான கதை - அப்பிடி & இப்படி


எச்சரிக்கை - வாசிக்கும்போதும், வாசித்து முடித்தபின்பும் அகிம்சையையே மனதில் கொள்ளுங்கள்..
யாரும் அதிரடியா,கொலைவெறியா ஆட்டோ,கீட்டோ, அரிவாள், பொல்லு என்று தேடிப் புறப்படக்கூடாது.. ஆமா..



ஒரு ஊரில அப்பிடி, இப்பிடின்னு ரெண்டு பேர் இருந்தாங்களாம்..
ஒரு நாள் அப்பிடி, இப்பிடியைப் பார்த்து "எப்பிடி இருக்கீங்க" என்று கேட்டார்.
அதுக்கு இப்பிடி "எப்பிடியோ இருக்கன்" என்று சொன்னார்.
அப்பிடி"இப்பிடி சொன்னா எப்பிடி? அப்பிடி இருக்கேன் இல்லை இப்பிடி இருக்கேன்னு இல்லையா சொல்லணும்" என்றார்.
உடனே இப்படிக்கு அப்படியொரு கோபம் வந்திட்டு.. "டே அப்பிடி, நான் எப்படி இருந்தா உனக்கென்ன" என்று கோபமாகக் கேட்டார்.
அதற்கு அப்படி "அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை..சும்மா தான் எப்பிடி இருக்கீங்கன்னு கேட்டேன்" என்று இப்பிடியை சமாதானப்படுத்தினார்.
அப்பாடா, எப்படியோ அப்பிடியும் இப்பிடியும் மறுபடி நட்பாகிட்டாங்க..

அப்புறம் நீங்க எப்பிடி?


நண்பர் ஒருத்தர் அனுப்பிய கடி எஸ் எம் எஸ் இது..
காலையிலேயே விடியலில் பலரைக் கடித்து ஒன்ஸ்மோர் கேட்கப்பட்டது..
எப்பூடி? ;)


May 24, 2011

ஒபாமா - ஐயோ அம்மா... இலங்கையின் மிகச் சிறந்த கிரியேட்டிவ் ஆன நகைச்சுவைப் பதிவு ;)


ஜாலியான தமிழில் தான் இந்த ஜோக் வேண்டும் என்றால் நல்ல ஜாலியான பதிவர் யாரையாவது அணுகி மொழிபெயர்த்துக்கொள்ளுங்கள் ஜாலி மக்காள்ஸ்.. 



அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் கனேடியப் பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பரும் ஒருநாள் சந்தித்துக் கொண்டார்கள்..
நம்ம கஞ்சிபாய் கண்டுபிடித்த ஒரு காலயந்திரம் - Time Machineஅவர்களுக்குக் காட்சிப்படுத்தப்பட்டது.

இந்தக் கால யந்திரத்தின் ஸ்பெஷல் என்னவென்றால் ஐம்பது வருடங்களுக்குப் பின்னதான எதிர்காலத்தைத் துல்லியமாக சொல்லும் ஆற்றல் இருந்தது தான்.

ஒபமா முதலில் அதன் அருகே போய் " ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர் அமெரிக்கா எப்படி இருக்கும்" எனக் கேட்டார்..

உடனே அந்தக் கால யந்திரம் ஒரு சீட்டை வெளியே தள்ளியது..

அதில்...

நாடு புதிய ஜனாதிபதி ஜோஸ் பெர்னாண்டேசின் ஆட்சியில் மிகுந்த பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் தன்னிறைவு பெற்றதாகவும் இருக்கும். பாதுகாப்புப் பிரச்சினைகள், வன்முறைகள் இருக்காது..

எந்தவொரு பிரச்சினையும் இல்லை. பொருளாதாரமும் சீராக இருக்கிறது.
உப ஜனாதிபதி ஜின் டவோ சீன மொழியைக் கட்டாய மொழியாக எல்லாப் பாடசாலைகளிலும் அறிமுகப்படுத்தியிருக்கிறார்"

வாசித்து முடித்த ஒபமா நெற்றியில் துளிர்த்த வியர்வையைக் கைக்குட்டையால் துடைத்துக் கொண்டே போய் அமர்ந்துகொண்டார்.

அடுத்து கனேடிய பிரதமர், "ஐம்பது ஆண்டுகளின் பின்னர் கனடா எப்படி இருக்கும்?"

கால யந்திரம் - Time Machine முன்பு தந்தது போலவே ஒரு துண்டு சீட்டை வெளியே தள்ளுகிறது..
அதை எடுத்த ஹார்ப்பர் அப்படியே வெறித்துப் பார்த்துக் கொண்டு நிற்கிறார்.

"யோவ் ஹார்ப்பர் என்னைய்யா இது? நான் சொன்னனே தானே? நீரும் சொல்லும் என்ன எழுதியிருக்கெண்டு" ஒபாமா ஆர்வத்துடன் கேட்கிறார்.

"தெரிஞ்சா சொல்ல மாட்டேனா? எல்லாமே 'தமிழில்' இருக்கே.. .. ஒண்ணுமே புரியல"



பி.கு - விடியலில் இன்று காலை சொன்னது

சிரிப்பு வரலேன்னாக் கூட எனக்காகக் கொஞ்சம் சிரிச்சுக்கோங்க.. வோட்டுப் போடாமல் போனாலும் பின்னூட்டம் போடமால் போனாலும் கூட நான் கோபித்துக்கொள்ள மாட்டேன் ;)
ஆனால் கிரியேட்டிவ் இல்லையென்று மட்டும் சொல்லப்படாது..
அழுதிருவேன்..


December 22, 2010

பரீட்சை மண்டபத்தில் Cheer girls????

இப்போது பரீட்சைகள் காலம் இல்லையா?
ஆனால் பரீட்சை எப்படி என்று கேட்டாலே, பொறி கலங்கி பூமி அதிருவது போல எல்லாரது மூஞ்சிகளும் மாறிவிடும்.. (எங்களது கடந்த கால அனுபவமும் இதுவே தானே)

இதற்காக பரீட்சைகளை எப்படி சுவாரசியமாக மாற்றுவது என்று ரூம் போட்டு யோசித்துப் பார்த்தேன்...

உலகம் முழுக்க IPL மூலமாக கிரிக்கெட் பரபர விற்பனைப் பொருளாக மாறியது போல, பரீட்சையையும் மாணவர்கள் விரும்புகிற ஒரு சுவாரஸ்யமான விஷயமாக மாற்ற நம்மால் முடிந்த சில ஐடியாக்கள்...

IPL பாணியில் பரீட்சைகள்..

1. பரீட்சை நேரத்தை ஒரு மணித்தியாலமாக மாற்றி,புள்ளிகளை 50ஆக மாற்றிவிடுவது..
2. பதினைந்தாவது நிமிடத்தில் Strategy break அறிமுகப்படுத்தப்படும்.
3. மாணவர்களுக்கு ப்ரீ ஹிட் (Free hit) கொடுப்பது; அவர்களுக்கான கேள்விகளை அவர்களே எழுதி விடைகளையும் அவர்களே எழுத ஒரு வாய்ப்பு
4. முதல் பதினைந்து நிமிடங்கள் Power Play... பரீட்சை அறைக்குள் மேற்பார்வையாளர் இருக்கமாட்டார்.. மாணவரகள் இஷ்டப்படி புகுந்து விளையாடலாம்.
5. கொப்பி அடிக்காமல், பிட் அடிக்காமல் எழுதும் மாணவர்களை ஊக்கப்படுத்த Fair Play விருதுகளை அறிமுகப்படுத்தல்.. (ரொம்ப நல்லவங்களுக்கும் ஒரு வாய்ப்புக் கொடுப்போமே)
6. பரீட்சைத் தாளில் பிழையான வினா ஒன்று கேட்கப்பட்டிருந்தால் அடுத்த கேள்விக்குத் தவறான விடை சொன்னாலும் புள்ளிகள் கழிக்கப்படாது..
இதுவும் ஒரு வகை Free hit தான்.

எல்லா மாணவர்களும் விரும்பப்போகின்ற முக்கியமான விஷயம் இது....

ஒவ்வொரு சரியான விடை எழுதும் நேரமும் ஊக்குவித்து உற்சாகப்படுத்த பரீட்சை மண்டபங்களில் Cheer Girls  இருப்பார்கள்...
மாணவிகள் விரும்பினால் Cheer Boysஉம் ஏற்பாடு செய்யலாம்....



ஹலோ.. எங்கேப்பா எல்லாரும் பரீட்சைகளுக்குப் படிக்கத் தயாராகிறீங்களா? இன்னும் அமுல்படுத்தலீங்க.. நீங்கள் எல்லாம் ஆதரவளித்து இந்த ஐடியாவை வரேவேற்று வெற்றிபெறச் செய்தால் வந்திடும் விரைவில்.
(வாக்குக் குத்துங்கன்னு மறைமுகமாக சொல்றேனாக்கும்)

* IPL 4 பரபரப்பு ஆரம்பித்திருக்கும் நேரத்தில் இப்படியொரு மொக்கை போடலாமேன்னு தான்.. அடுத்த இரு பதிவுகள் கொஞ்சம் சீரியசாக இருப்பதால்...

* இன்று காலை விடியலில் ஏக வரவேற்பைப் பெற்ற விஷயம் இப்போ இடுகையாக..

இதன் ஒரிஜினல் ஆங்கில வடிவம் ;)

IPL style Exams ;)

December 17, 2010

சின்ன மாமாவின் லீவு லெட்டரும் பதிவர் கிரிக்கெட்டும்

இலங்கையில் எதிர்வரும் ஞாயிறு இடம்பெறும் பதிவர் சந்திப்புப் பற்றிய பரபரப்பில் பதிவர்கள் அனைவரும் மும்முரமாகிக் கிடக்க, எம்மால் சின்ன மாமா என்று அழைக்கப்படும் இலக்கியவாதி பதிவர்/பொறியியலாளர் சுபாங்கன் மட்டும் மிகக் கவலையில் இருந்தார்.
அவர் பணிபுரியும் அலுவலகத்தின் முகாமையாளர் கடுமையானவர். சம்பளத்தில் தாராளம் போலக் காட்டிக்கொண்டே கறாராக வேலை வாங்கிவிடுவார்.
ஒரு வேலை கொடுத்தால் சனி,ஞாயிறு ஆனாலும் முடிக்காமல் விடுமுறையில் செல்ல விடமாட்டார்.


கும்மிகள்,பின்னூட்டங்களால் பிசியாகிப் போனதால் முகாமையாளர் கொடுத்த முக்கியவேலையை முடிக்க முடியாமல் போனதால் சனி,ஞாயிற்றுக் கிழமைகளில் விடுமுறையை அவரிடம் கேட்கமுடியாது என்று சின்ன மாமாவுக்குப் புரிஞ்சு போச்சு.
ஆனால் எப்படியாவது சந்திப்புக்கும், சனிக்கிழமை கிரிக்கெட் போட்டிக்கும் போகணுமே..
விடுமுறை கேட்டால் கத்துமே ஆள்..
தனது கவிதை,இலக்கிய மூளையைக் கசக்கிப் பிழிந்து ஐடியா எடுத்தார்..
முகாமையாளரும் தமிழ் பேசுபவர் தானே..

பேனாவை எடுத்தார் விறு விறு என்று கடிதம் எழுத ஆரம்பித்தார்.
கடிதம் எழுதும் கவிஞர் சி.மா 

From - 
நான் தான், 
உன் பிரிவு தான், 
உன் நிறுவனம் தான், 
உன் நகரம் தான். 
  
To -
உனக்கு தான், 
இந்த பிரிவு தான், 
இந்த நிறுவனம் தான், 
இந்த நகரம் தான். 
  
  
அன்புள்ள ஐய்யா , 
          
          என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ, நான் இந்த சனிக்கிழமையும்,ஞாயிற்றுக்கிழமையும் வேலைக்கு  வரமாட்டேன். 
  
                                       நன்றிகள். 
  
  
  
Date: இன்னைக்கு தான் 
Place: இந்த நகரம் தான் 


என்றும் உண்மையுள்ள
முடிஞ்சாக் கண்டுபிடிச்சுக்கோ


இதன் விளைவு --------

பதிவர் சந்திப்புக்குப் பிறகு திறமையுள்ள இளமையான,அறிவுடைய ஒரு பொறியியலாளருக்கு வேலை தேவைப்படுகிறது.
கொடுக்கிற சம்பளத்தை எடுத்துகொள்வார்.
ஆனால் என்ன மாதத்தில் இரு பதிவு போடக் கொஞ்ச நேரமும், நாள்தோறு இரு மணித்தியாலம் மெயிலில் கும்மக் கொஞ்ச மணித்தியாலங்களும்,மாதத்தில் இரு தடவை சாவகச்சேரி போய்வர விடுமுறையும் கொடுக்கவேண்டும். அவ்வளவு தான்.

சின்ன மாமாவும் நாளை பதிவர் கிரிக்கெட் போட்டியில் விளையாடுகிறார் என்றவுடன் நீங்கள் ஆச்சரியப்பட்டாள் அடுத்து நான் சொல்லப் போகும் செய்தியை வாசித்தால் மயக்கமே அடைவீர்கள்.

நாளைக் காலை ஒன்பது மணியிலிருந்து இடம்பெறப்போகும் பதிவர் கிரிக்கெட் போட்டியைப் பார்ப்பதற்காக பேர்த் டெஸ்ட் போட்டியை ஒரு நாள் ஒத்தி வைக்கிறார்களாம்.

பின்னே?
எத்தனை விதமான ஆற்றல்கள் கொண்ட வீரர்கள் நாளை விளையாடவுள்ளார்கள்..

நோட் பாடில் கேம் ஆடும் 'வேகப்' பந்துவீச்சாளர் பவன்
கால்பந்தையே கண்ணாடியில் கையால் சுழற்றக் கூடிய ஆதிரை(தானே சுழல் பந்துவீசி தானே அந்தப் பந்தை விக்கெட் காப்பாளராகப் பிடிக்கும் ஆற்றல் எங்கள் சித்தப்பூவுவால் மட்டுமே முடிந்த சாதனை.)
அரிவாள் கட்டினால் (Square Cut இருக்கலாம் அரிவாள் கட் இருக்கக்கூடாதா?) அசர வைக்கும் இலங்கையின் ரிக்கி பொன்டிங் யோ
ரிக்கியும் நானும் இதை விட நல்லாவே அடிப்போம் - நூடில்ஸ் யோ 

கூக்ளி போல கூல் போல் போடும் கூல் போய்
இடி தாங்கி போல எங்கள் பிடி தாங்கி கன்கோன்
ஆறு கொடுக்காமல் விடமாட்டேன் என்று அடம்பிடிக்கும் அனுத்தினன்
13 வருடங்களுக்குப் பிறகு ஓய்விலிருந்து மீண்டும் துடுப்புப் பிடிக்க யாழில் இருந்து வரும் ஜனா
ஒழுங்கமைப்புக் குழுவில் இருப்பதால் விளையாடாமல் ஒதுக்கிவிடுவான்களோ என்று அவசர அவசரமாக
கிரிக்கெட் தெரியும் என்று காட்டுகின்ற அஷ்வின்
சுடு சோறு போல சுறு சுறு விறு விறு வீரர் சுதா
திருமலைக் குஞ்சின் 'வேகப்' பந்துவீச்சுக்குப் பயத்தில் இரு டசின் Ball Guards வாங்கிக் கொண்டே நாளை வரும் சேது அய்யா
பூகோள மயமாக்கலில் சமுதாயத்தை அடிமையாக்கி, இளைஞரின் நேரத்தை சுரண்டும் கிரிக்கெட்டை இளைஞரைப் பாதிக்காமல் விளையாடுவது எப்படி என்று செயன்முறையில் காட்டும் சமவுடமை ஆட்டக்காரர் மு.மயூரன்
டென்னிஸ் பந்து என்றாலும் கால் காப்புக் கட்டியே களம் இறங்குவேன் என்று அடம்பிடிக்கும் வதீஸ்
கிரிக்கெட்டில் பிடித்ததே Fine leg தான் என்று சொல்லும் மது இச மது
லண்டனில் இங்கிலாந்து வீரர்களுடன் நெட் பயிற்சி எடுத்து இங்கே பூல் மேசையில் கிரிக்கெட் ஆடும் நிரூஜா
இது நிரூஜாவின் டீ ஷேர்ட்டா என்று கேட்கிறார் முனனால் பதிவர் புல்லட்  

(மற்ற வீரர்களின் 'விளையாட்டுத் திறமை' நமக்குத் தெரியாதுங்கன்னாவ்.. )
இன்னும் பல 'வீரர்கள்' விளையாடுவதால் இதுவும் ஒரு சர்வதேசக் கண்காட்சிப் போட்டி ஆகிவிடுகிறது.

ரசிகர்கள் திரண்டு வந்துவிடுவார்களோ என்ற பயத்தில் ஒழுங்கமைப்பாளர்கள் போக்குவரத்துப் போலீசாருடன் போக்குவரத்து ஒழுங்குகள் பற்றி இன்று பேச்சுவார்த்தைக்குப் போகிறார்களாம்.

இந்த வேளையில் இலங்கையில் பதிவர் சந்திப்பு சம்பந்தமாக லண்டன் அதிகார மையத்தின் தலைவரும் லண்டனில் உள்ள இலங்கை சிரேஷ்ட பதிவருமான பச்சிளம் பாலகர் சங்கத் தலைவர் வந்தியத் தேவன் அவர்கள் ஒரு கண்டன அறிக்கையையும் வெளியிட்டுள்ளார்..

ஆண் பதிவர்களுக்காக கிரிக்கெட் போட்டியை ஒழுங்கு செய்த நீங்கள் பெண் பதிவர்களுக்காக வலைப் பந்தாட்டப் போட்டியையும் ஏற்பாடு செய்திருக்கலாமே. இது ஆணாதிக்க செயல் அல்லவா?
லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் அடுத்த மாதம் இரண்டாம் திகதி இதை ஏற்பாடு செய்யும் முயற்சியில் நாம் (லண்டன் பதிவர்கள்) மும்முரமாக செயற்படுகிறோம்.

பார்த்து செய்யுங்கப்பா.. அடுத்து சந்திப்பு யாழ்ப்பாணத்தில் என்று ஆரூடம் சொல்லி வைத்திருப்போர் லண்டன் பதிவர்களால் கோபமடையக் கூடும்.
அடுத்த வீடியோ போடும் நேரம் சொல்லிட்டு செய்தீங்கன்னு சொன்னா கிரிக்கெட் விளையாடுற படம் அனுப்பி வைக்கிறோம்.

வாங்க நாளைக்கு விளையாடலாம். ஞாயிறு சந்திக்கலாம்..

December 06, 2010

பதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்

ஹாய் விக்கிலீக்ஸ் வாசகப் பெரும் கோடிகளே(பக்த கோடிகளே மாதிரி)..

இருக்கிறேனா? சுகமாக இருக்கிறேனா என்ற சந்தேகங்கள் இருந்தால்(இதற்கு முந்திய பதிவின் உபயத்தால்) நலமே உள்ளேன் எனக் கூறிக்கொண்டு,நீங்கள் அளித்துள்ள பாரிய ஆதரவால் 
புதிய லீக்சோடு உங்களை சந்திக்கிறேன்..


இனி பரபர பதிவுலக லீக்ஸ்..

பதவியுயர்வு கிடைத்தும் தன் சொந்தப் பாஸ்வோர்டைப் பாதுகாக்க முடியாது பழைய பரபர பதிவரை தண்ணியில்லாக் காட்டுக்கு மாற்ற அவரது அமெரிக்க முகாமை முடிவெடுத்திருக்காம்.
இதை அறிந்த பின் ஆவேசமடைந்த அந்த அமைதிப் பதிவர் சுதந்திரப் போரை முன்னெடுத்து கடவுச் சொல்லை எப்படியாவது பெற்றே ஆவேன் என்று இன்று சபதம் இட்டுள்ளார்.
நாளையிலிருந்து கடல் அலை வீசிப் பின் ஒரு பார்வையால் முடங்கிப்போன தன் தளத்திலிருந்து பதிவுகள் வருமென்று விக்கிலீக்சுக்கு அளித்த ரகசியப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
 (பதிவுகள் அவரது மேலிடத்தால் சென்சார் செய்யப்படுமா என்பதை விக்கிலீக்ஸ் அவதானிக்கும்)

ராமராஜன் கலர் ஆடை அணிந்தும் தன்னை தெரியாமல் தன் இசம் பற்றி மட்டுமே அறிந்திருக்கும் பலரால் கடுப்பாகி இருக்கும் முன்னாள் முடி வளர்த்த பதிவர் இம்முறை பதிவர் சந்திப்பில் தன் இசம் பற்றி நேரடி டெமோ செய்து தன்னைப் பிரபலமாக்கும் விபரீத முயற்சியில் இறங்கியுள்ளார்.
இதனால் (பெண்)பதிவர்களின் வருகை பெருகிவிடும் என்றும் வேறெங்காவது பெரிய இடத்தில் சந்திப்பை வைக்கலாமோ என்றும் யோசிக்கிறார்கள் ஏற்பாட்டு உயர்மட்டக் குழுவினர்.

பெட்டி வைத்திருந்து அங்கமாக மாற்றி,அடிக்கடி கச்சேரி செய்து சிறுகதை,கவிதை எல்லாம் எழுதி இலக்கியவாதியாக அவதாரம் எடுத்தும் ஐந்துவருடக் காத்திருப்பின் கடைக்கண் பார்வை முழுமையாகப் படாமையினால் தான் 'கொலை'காற்றாக.. மன்னிக்க கொலைகாரனாக மாறும் முடிவில் அமைதியான கவிஞப் பதிவர் மாறினார் என்கிறார்கள் அவரின் நெருங்கிய சகாக்கள்.
எங்கே போய் முடியப்போகுதோ?

பதிவர் சந்திப்பு நிகழ்ச்சிநிரலில் இடைவேளை இசைவேளை என்று போட்டது தான் தாமதம் பாடப் போகிறோம் என்று பலர் தொடர் மெயில் அனுப்புவதால் தாங்க முடியவில்லை என்று புலம்புகிறார் லண்டன் ரிட்டர்ன் பெண் பெயர் முகமூடியில் உள்ள பதிவர் சந்திப்பு ஏற்பாட்டின் பொறுப்பாலப் பதிவர்.
அவரது பெயரைப் பார்த்துத் தான் அத்தனை மடல் என்று இன்னும் தெரியவில்லையா என்று கேட்கிறார்கள் நண்பர்கள்.

ஏற்பாட்டு உயர்மட்டக் குழுக் கூட்டம் என்று அடிக்கடி நடப்பதால் கொழும்பு Duplication வீதியில் உள்ள ஒரு Snooker Clubக்குத் தான் கொழுத்த வருமானமாம்.
இதனால் நிதி சேகரிக்கப்பட்டால் கணக்குக் காட்டவேண்டும் என்று கட் அண்ட் ரைட்டாக ஒரு பிரேரணையை முன்வைக்கலாம் என்கிறார் பிரபல நூடில்ஸ் விற்பனையாளரும் இலங்கையின் அனைத்து சங்கம்+கழகங்களிலும் பொருளாளர் பதவி கேட்கும் அரிவாள் பதிவர்.


 எம்மா வோட்சனைக் காதலித்து அது கூடாமல் போனதால் முளைக்காத தாடியை சொரிந்தாவது முளைக்கப் பண்ணுவோம் என்று அதுவும் சரிவராமல் பக்கத்து வீட்டு ஆட்டின் தாடியைப் பார்த்து ஏங்கிய குஞ்சுப் பதிவர்(சிறியவராக இருப்பதால் குழும சிறப்புப் பெயர்) இப்போது எம்மா வராவிட்டாலும் பரவாயில்லை சும்மா வோட்சனாவது வந்தாலும் பரவாயில்லை எனும் முடிவுக்கு வந்துள்ளாராம்.
எத்தனை சோகத்தைத் தான் தாங்குறது என்று தான் இந்தத் தீர்மானம்.
இறுதியாக வேகப் பந்துவீச்சாளர் என்று தன்னை அறிமுகப்படுத்த புதிய அணியின் தலைவர் மயக்கம் வரும்வரை விழுந்து விழுந்து சிரித்த அவமானமும்,முன் வீட்டு ஐந்து வயசுப் பையன் தன் 'வேகப்' பந்துவீச்சில் அடித்த ஆறு சிக்சர்களும் கிரிக்கெட்டைத் துறக்க செய்யும் அளவுக்குப் போய்விட்டனவாம்.
இனிமேலும் படப்பதிவும் பப்புமுத்து கவிதைகளுமாக இருக்கலாம் என்று முடிவெடுத்துவிட்டாராம்.

இதைவிட அவர் பயப்படக் காரணம், இவர் பற்றிய படப்பதிவை எதீர் காளத் டமில் இணத் தளைவர் லண்டன் இளைய தளபதி ரசிகர் மன்றத் தலைவர் பேஸ்புக் புகழ் பதிவர் தன் அலகு தமிலில் இடப் போவது தானாம்.         

தானும் பதிவர் தானுங்கோ என்று மீண்டும் தலை காட்டிய அவரின் டமில் சிரந்து விலங்கக் காரணம் யார் எனத் தான் புதிரோடு பார்க்கிறோம் யாம்.

சுடு சோற்றுப் பதிவர் இந்தக் குளிரான காலநிலையிலும் சூடாகக் காணப் படுகிறார்.
அவர் அனல் பறக்க இரு காரணங்கள்..
காத்திருந்தவன் எதையோ நேற்று வந்தவன் கொத்திய மாதிரி இதற்கு முந்திய விக்கிலீக்ஸ் பதிவில் சுடுசோற்றை நிரூஜா கொத்திய காரணம் ஒன்று..
பரிசு கொடுக்கிறோம் என்று பல தளங்கள் ஏமாற்றுவது இரண்டு..
இதற்காக இனிமேலும் தானே பரிசு கொடுக்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறாராம்.
பணப்பரிசு கொடுக்க முடியாவிட்டால் தானே பொங்கி உலைவைத்து சுடு சோறு தரப் போகிறாராம்.


பலமான பருமனான அரசியல்+சட்டப் பதிவர் அஞ்ஞான வாசம் முடிந்தது மீண்டிருக்கிறார்.கலகல 'ஜனா'ரஞ்சக யாழ் பதிவர் தனக்கும் சீயர்ஸ் சொன்ன பிறகும் அடக்கி வைப்பது நல்லமில்லை என்று அதிரடியாக அரசியல் விளக்கப் பதிவைக் கொடுத்த பிறகு அடுத்து தன் கொள்கை விளக்கத்தைக் கொடுக்கலாமோ என யோசிக்கிறாராம்.
அதற்கான தகுந்த இடமாக பதிவர் சந்திப்பைப் பயன்படுத்தலாம் என்று வாசகர்களின் மதியூக ஆலோசனைகளால் டிசெம்பர் 19ஐ எதிர்பார்த்துள்ளாராம்.
பெண் பதிவர்கள் பற்றிய தகவல்கள் காணோமே என்று கேட்கும் அன்பர்களுக்கு....
அவர்கள் பதிவு வேளைகளில் அல்லாமல் பதிவர் சந்திப்புக்காகத் தம்மை மேம்படுத்தும் பணிகளில் பிசி என்பதால் இலங்கையின் அழகு சாதன நிலையங்கள் அல்லோல கல்லோலப் படுகின்றன என்கிறார் எம் ரகசிய செய்தித் தொடர்பாளர்.


என்னடா இது பதிவர்கள் பற்றிப் பதிவு வந்தாலே ரத்தம் வரும் அளவுக்கு வதைக்கு உள்ளாக்கப்படுகிற இருவரையும் காணவில்லையே என்று தேடுவோருக்கு...
அந்த இருவரையும் எவ்வளவு என்று தான் மொக்கை போடுவது?
இங்கேயும் லீக் செய்தால் ஓவர் லீக் ஆயிடும் என்பதால் அவர்களுக்கு ஓய்வு..
விக்கிலீக்ஸ் உங்கள் பங்களிப்பையும் எதிர்பார்க்கிறது..(பதிவர் சந்திப்புக்கு முன் இன்னொரு பதிவுலீக்சுக்காக) எம் ரகசிய மின்னஞ்சலில் உங்கள் பதிவுலகத் தகவல்கள் வந்தால் ரகசியம் காக்கப்படும் என்ற விக்கிரமாதித்தன் உத்தரவாதமும் வழங்கப்படுகிறது.

*முற்றுமுழுதான மொக்கைப் பதிவு என்பதால் யாராவது சூடாகி என்னைக் கொத்துக் கரி போடத் தேட வேண்டாம் எனப் பணிவோடு வேண்டிக் கொள்கிறேன்.
ஏதாவது பிரச்சினை என்றால் 19 ஆம் திகதிக்கு முன் பேசித் தீர்த்துக் கொள்ளலாம்.



December 04, 2010

கங்கோன் - நடமாடும் விஸ்டன், உருண்டோடும் கூகிள்

நடமாடும் விஸ்டன், உருண்டோடும் கூகிள் என்று நான் /நாம் அழைக்கும் கறுப்பு சிங்கம், சிரிப்பு சிங்கம், கிரிக்கெட்டே இவனது அங்கமான கங்கோனின்(கனகலிங்கம் கோபிக்ருஷ்ணா முழுப்பெயர்.. அப்பப்பா என்னுடன் நீளத்தில் போட்டிக்கு வருவார் போல) பிறந்த நாள் இன்று..

நாளை பார்ட்டி எமக்கு பிரத்தியேகமாகத் தருவதாக சொன்னவருக்காக தனிப்பதிவு போடாவிட்டால் சரியில்லையே..
ஆனாலும் ஒரு அரங்கேற்ற நிகழ்வைத் தொகுத்துவழங்கும் வேலையினால் சில நாட்களாக பிசி.

அதனால் என்ன? முன்பே இட்ட ஒரு பிரம்மாண்டப் பதிவை சில மாற்றங்களுடன் புதுப்பித்து வாழ்த்துகிறேன்..
கங்கோனின் அண்மைக்கால சாதனைகள்,மைல் கற்களும் படங்களும் முன்னைய பதிவான கறுப்பு சிங்கம் - கங்கோனில் சேர்க்கப்பட்டு இந்தப் பதிவு..

அண்ணே இதையும் விட அப்பாவியா சிரிக்க முடியாதுன்னே..

எதிர்கால சகலதுறையாளனே சில விஷயங்களில் தன்னடக்கத்துடன் பின்னிர்பதை விடுத்து,தயக்கங்கள் தாண்டி முன்னுக்கு வா.. மிளிர்வாய்.

அண்ணன்களில் ஒருவனாக வாழ்த்துகிறேன்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
உன் வாழ்க்கையை இந்த வருடத்திலிருந்து திட்டமிட்டு ஆரம்பி.

*****************

முன்னைய பதிவு.. மாற்றங்களுடன் மீள் பதிவாக..


நீண்ட நாட்களாக இன்று,நாளை என்று நானே எனக்கும்,சக நண்பர்களுக்கும் எதிர்பார்ப்பை அளித்து அளித்து ஏமாற்றிய பிரம்மாண்டப் பதிவு இது..
என் வார்த்தைகளில் சொல்லப் போனால் இலங்கைப் பதிவுலகில், இது ஒரு ராவணன்,ஒரு எந்திரன்..
நான் என்னையே மணிரத்தினம்,ஷங்கர் என்பவர்களோடு ஒப்பிடுவதற்காகவல்ல..
இந்தப் பதிவின் நாயகன் ஒரு சூப்பர் ஸ்டார் ரஜினி, இல்லாவிட்டால் சீயான் விக்ரம் ரக பிரபலம் என்பதனால்.. ;)




                              சொன்னா நம்ப மாட்டீங்களே..  எப்பூடி?

பதிவர்களைக் கலாய்த்து மொக்கைப் பதிவு இடுவதென்பது ஒரு கலாசாரம் ஆகிப் போனதால் நானும் சக நண்பர்களான வந்தியத்தேவன்(இவர் சொந்த செலவில் சூனியம் வைத்து எமக்கெல்லாம் ஒரு களிப்பூட்டும் நட்சத்திரம் ஆகின்றவர்- அது பதிவு,கும்மி,ட்விட்டர்,நேரில் என்று சகல வகையிலும்),ஆதிரை (கொஞ்சம் சீரியஸ் பதிவரேன்றாலும் எலிக் குஞ்சுப் பதிவினால் எல்லா நாட்டிலும் பிரபலமானவர்), புல்லட்(கல கல பதிவர்-இப்போதெல்லாம் எப்போதாவது எழுதினாலும் அப்போதைக்கு ஹிட் அடிப்பவர் - லேட்டஸ்ட் தகவலொன்று அண்மைக்காலமாக வாழ்க்கையின் வளப்படுத்தலுக்கு மிக முக்கியமான விடயமொன்றில் ரொம்பவே மும்முரமாம் இவர்) ஆகியோரை கலாய்த்து சிறப்புப் பதிவுகள் இட்டுள்ளேன்.

ஏனைய சகலரையும் அடிக்கடி பின்னூட்டங்கள்,கும்மிகள்,சில பதிவுகளினிடையே கடிப்பது கல கலப்பது வழக்கம்..

இந்தப் பதிவில் எம்மால் சிறப்பிக்கப்படும் இவர்...
உண்மையிலேயே நான் பார்த்து வியந்து,சில வேளை கொஞ்சம் பொறாமைப்பட்ட ஒரு இளம் பதிவர்..



கடலை ஆச்சிக்கும் கடன் வைத்த கர்ணப் பிரபுவாக..

யாரையாவது பிடித்து உரித்து,பின்னி எடுக்க பல விஷயமும் தெரிய வரணுமே..இவர் பற்றித் தான் ஒவ்வொரு நாளும் புதுசு புதுசா பலபல விஷயங்கள் வெளி வரும்..
சகல துறை விஷயம் பற்றியும் இவரோடு நாளின் இருபத்து நான்கு மணி நேரமும் அரட்டலாம்.. (பயல் வெட்டி என்று சொல்லி கேலி பேசப்படாது.. உயர்வு நவிற்சி மட்டுமே எடுக்கப்படவேண்டும்)

இந்தப் பதிவு எங்கள் இன்றைய நாயகன், வந்தி லண்டன் சென்ற பிறகு இலங்கைப் பதிவுலகில் என்றுமே எங்கள் நாயகனாகியுள்ள சின்ன வந்தி என்ற சிறப்புப் பெயரையும் தாங்கியுள்ள கங்கோன்,கோபி என்றெல்லாம் தேவைக்கேற்ப,நேரத்திற்கேற்ப அழைக்கப்படும் இப்போதைய 'க்ரிஷ்' இன் பாராட்டுப் பத்திரம் என்பதைக் கருத்தில் கொள்க.. ;)
(மெய்யாலுமே பாராட்டுத் தாங்கோ)



கங்கோன் - ஒரு கறுப்பு சிங்கம் 



Kangon - The Black Lion





கண்ணாடி போட்டால் நானும் ஒரு கமலகாசன் தானுங்கோ..
(இது கமலுக்குத் தெரியுமா?)

கனக கோபி என்று அறியப்பட்ட கங்கோன் (அண்மைக்காலம் வரை இப்படித் தான் எம் அனைவருக்குமே என் இவர் போகின்ற இணைய உலா வழியாக உலகம் முழுவதுமே இவரைத் தெரியும்) இப்போது தன்னை முன்னர் தானே வைத்துக் கொண்டது போல கோபி என்றோ, கனக கோபி என்றோ அல்லது கங்கோன் கோபி என்றோ அழைக்காமல் கிரீஸ் சாரி.. க்ரிஷ் என்று தன்னை அழைக்க வேண்டும் என்று விரும்புகிறார்..

காரணம் நிச்சயமாக நுமேரோலோஜி அல்ல.. அப்படியானால்?

ஒவ்வொரு மணி நேரமும் மாறும் Facebook மற்றும் G chat statusக்கும் இந்தப் பெயர் மாற்றத்துக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ என கிரிஷின் நட்பு வட்டாரம் இன்னும் புலனாய்கிறது.



கமெராக் கண்ணனாக.. கோபியர் கவனம்..

கங்கோனின் இன்னொரு ஆயுதம் கமெரா.. ஆனால் சில சமயம் இவனுக்கே அது சொ.செ.சூ வைத்து விடுகிறது..


இணையத்தின் இண்டு இடுக்கு எல்லாம் தெரிந்த ஒரு டேக்னோலோஜி குண்டு இவன் ;)
வலைப்பதிவின் சூட்சுமம் எல்லாம் விரல்களில் வைத்துள்ள நம்ம ஹீரோ, இணையத்தின் சகல தொடர்பு சமூகத் தளங்களிலும் நாள் முழுதும் குடியிருப்பார் (வேற வேலை??)

ட்விட்டர் இவரின் பாரம் தாங்காமல் அடிக்கடி Too much of load.. Try in a few minutes என்று அலறும்..
ஆனானப்பட்ட லலித் மோடியும் இவருக்குப் பின் தான்..
கொஞ்சக் காலத்திலேயே 14 500 twits அடித்தாடியுள்ளார் என்றால் சும்மாவா?



புஜபலத்தை நிரூபிக்கும் போட்டியில் எங்கள் இணையப் புலி..

Facebook இவர் வருகை பார்த்ததுமே குய்யோ முறையோ என்று கூச்சலிட ஆரம்பிக்கும்.
பின்னே இவரின் பட லோடுகள் ஒரு பக்கம்.. பண்ணும் status மெசேஜ் லொள்ளுகள் ஒரு பக்கம்..

ஆனால் ஒரே ஒரு பாச உறவுக்கு மட்டும் தம்பியர் பயமோ பெரும் பயம்..
எந்தப் புயலுக்கும் அசையாத இந்த ஆல மரம் அந்தப் பெயர் சொன்னால் மட்டும் அனைத்திலும் Log out ஆகிவிடும்..

அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்.. ;)

இணையத்தில் என்ன வேண்டும்.. அத்தனையும் தெரியும் இவனுக்கு.. ;)
இவன் உடல் போலவே இவன் அறிவும் ஒரு பரந்த கடல்.. ;)
ஹக்கிங்,பிஷிங் தொடக்கம் கண்டன காணாதன எல்லாம் அறிவான்..
சில சமயம் ரஷ்யாவிலும் கூட கங்கோன் இணையம் மேய்ந்து கொண்டிருப்பான்..
கூகிள் ஆண்டவரின் ஆசியில் டச்சு,ஸ்பானிஷ் மொழிகளிலும் ஆன்டிமாருடன் கடலை போடும் வித்தையும் அறிந்தவன் ;)
நாங்கள் எல்லாம் தமிழ் போரம்களில் தடுமாறிக் கொண்டிருக்க சோமாலியா,சுவாசிலாந்து,செர்பியா என்று பேரே அறியாத இடங்களிலெல்லாம் கங்கோனின் பெயர் அறிந்திருக்கும்.

இப்பிடிக் கவித்திட்டாங்களே ஆஸ்திரேலியா .. 
அடுத்து அனலைஸ் செய்து ஆப்கானிஸ்தானுக்கு சப்போர்ட் பண்ணலாமோ?


வெட்டிப் பயல் கங்கோன் என்று தன்னை நாவடக்கத்தோடு சொல்லிக் கொண்டாலும் வெட்டி வா என்றால் கட்டி வருவான் தம்பி.
இலங்கையில் இரண்டாவது பதிவர் சந்திப்பில் வியர்வை ஆறாக ஓட ஓட உழைத்துக் களைத்த உழைப்பாளி இவனே..
நனைந்து இவனின் கட்டழகு உடலோடு ஓட்டிப் போன நீல சேர்ட் சான்று.



                     உழைப்பாளி - இம்முறை பதிவர் சந்திப்புக்கும் சரீர உழைப்புக்குத் தயார் ;)

கிரிக்கெட் சபைகள் எல்லாம் நம்ம ஹீரோவின் பெயரைக் கேட்டாலே அதிர்ந்து போய் விடும்..
பின்னே, எல்லா விதிகளையும் விளக்கங்களையும் தெரிந்து வைத்துக் கொண்டு ஒரு போல நடமாடித் திரிந்தால் சும்மாவா?
ஒரு போட்டியில் ஒரு பந்து வீசி முடிய முதல் நம்ம கங்கோன் ஐந்து ட்விட் பந்துகளை வீசி அசரடிப்பான்..
cricinfo கூட செய்திகளைப் போட முதல் இவனுக்கு தனியாக மின்னஞ்சல் செய்து உறுதிப் படுத்திக்கொள்ளுமாம்..

இலங்கை அணி அடுத்த சனத்தாக கருதி ஒவ்வொரு நாளும் அழைப்பு விடுத்துக் கொண்டிருக்காம்.. (ஹே என்னா நக்கல்.. சகலதுறை வீரர்னு சொன்னேன்)



சீனியர் போனபின் வலையுலகில் சிஷ்யன் நானே சிங்கம் ;)

 ஒரு பிரபல பதிவராக இருந்து அதில் தடம் பதித்த ஈரம் (!) காய முதலே பிரபல பின்னூட்டவாதியாக மாறி 'me the first' போட்டே சாதனை நடத்த வேறு யாரால் முடியும்?

எங்கிருந்து தான் வருகிறாரோ.. எல்லாப் பதிவுகளிலும் 'me the first' கங்கோன் தான்..

எவ்வளவோ பண்ணிட்டம் இதைப் பண்ண மாட்டோமா என்று வந்தி சென்ற பிறகு அந்த இடத்தைத் தனதாக்கி சளைக்காமல் சொந்த செலவில் சூனியம் வைக்கும் வித்தையிலும் கை தேர்ந்து குருவை மிஞ்சிக் கொண்டிருக்கும் சிஷ்யன்..



                 காதலுக்கு மரியாதை செய்யும் கறுப்புத் தங்கம்..(இது எத்தனையாவது என்று கணக்குக் கேட்கிறார் பப்புமுத்து)


தினமும் கும்மியில் சளைக்காமல் எட்டுத் திக்கிலும் வரும் அடிகளை தன பஞ்சு மெத்தை உடலில் பவுன்ஸ் பண்ண விட்டு சிரிப்பார் இந்தக் கறுப்புக் கட்டழகர்.

உடலமைப்பால் தான் இவருக்கு கறுப்பு நமீதா என்ற பெயரும் வந்தது என்று தப்பாக யாரும் தப்பர்த்தம் செய்து விடக் கூடாது.. ;)
இவர் மனசும் பெரிசு..

யாருக்கு என்ன உதவி எப்படி தேவையோ உயிரைக் கொடுத்தாவது செய்யக் கூடியவர்..




ஊராரின் ஊட்டல் ஊட்டசத்தின் ரகசியம்.
பாவம் இந்த அப்பாவி நண்பன்.. ;)
ஏண்டா கூப்பிட்டோம் என்று ஆயிருப்பான்..


தன வீட்டருகில் உள்ள குழந்தைகளுக்கு உணவூட்டும் தாய்மாருக்கு இவன் ஒரு நடமாடும் பூச்சாண்டி..
ஹம்ப்டன் லேனில் உள்ள விற்கமுடியா மரவள்ளிக் கிழங்குப் பொரியல்,முறுக்கு,வடை போன்றவற்றின் ஏகபோக சீரண மெசின் இவனே..
பக்கத்து வீட்டுக் குழந்தைகளுக்கு கிரிக்கெட் பழக்கிறேன் என்று தினமும் பயமுறுத்தி பயமுறுத்தியே அதெல்லாம் இப்போது ஒரு நாளும் ஸ்கூலுக்கு கட் அடிக்காமல் போவதாகத் தகவல்..

இதெல்லாம் போதாமல் தபால் மூலப் பட்டப் படிப்பு போல, மின்னஞ்சல் மூலம் கிரிக்கெட் பயிற்சி என்று திருகோணமலை,வவுனியா,யாழ்ப்பாணப் பக்கம் உள்ள அப்பாவிப் பதிவர்களைஎல்லாம் போட்டுப் படுத்தி எடுக்கிறாராம் நம்ம கிரிக்கெட் ஞானி.

கையடக்கத் தொலைபேசியை இவன் வயதொத்த பச்சிளம் பாலகர்கள் காதலுக்கும் அரட்டைக்கும் பயன்படுத்த, இணையத்தில் 24 மணிநேரமும் தங்கி பாய் விரித்துப் படுத்திருக்கும் நம் ஹீரோவோ, இணையத்திலே அதுக்கெல்லாம் நேரம் ஒதுக்கி எங்கு வந்தாலும் தன் கையிலுள்ள மொபைலை அமுக்கு அமுக்கியே உலக கிரிக்கெட்டைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்.

பில் கட்டுகிற அப்பா போல அந்த டப்பா மொபைலும் நசுங்கி அவதிப்பட்டுத் திணறும்..

இருக்கிற,நிக்கிற சிக்கலில் எல்லாம் நேரடியாக தில்லுடன் மோதி தான் கருத்தை சொன்னதில் எப்போதுமே கங்கோன் பின் நிற்றதில்லை.(இப்படியான கட்டுமஸ்தான உடல் இருந்து பின் என்ன பலன்?)
இவர் வழி தனி வழி..



                       எப்பிடி இருந்தவன்.... ;)


ஆனால் இப்போ கொள்கை மாறி விட்டார் என்று அண்மைக் காலத்தில் எழுந்த சில சல சலப்புக்களை எல்லாம் மறுதலித்து கங்கோன் சொன்ன வார்த்தைகள் சரித்திரப் பிரசித்தி வாய்ந்தவை
"உதவி கேட்டால் யாருக்கும் உயிரையும் கொடுப்பான் இந்த கிரீஸ்..
மறப்போம் மன்னிப்போம்"

ஒரே ஓவரில் இருபத்தெட்டு ஓட்டங்கள் கொடுத்த பிறகு ஸ்னூக்கர் பழகும் அனலிஸ்ட்


பிரபல பின்நூட்டவாதியாகவே வெற்றிப் பயணம் போய்க் கொண்டிருந்தவரை எப்படியாவது தடுத்து நிறுத்தி பதிவுப் பக்கம் அழைத்து வரவேண்டும் என இந்தக் கலாய்ப்புக்கு முயற்சி செய்கின்ற போதே, யாராலும் முடியாத அந்த விடயத்தை சாதித்தார் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் சனத் ஜெயசூரிய.

T 20 உலகக் கிண்ணப் போட்டிகளில் சனத்தின் அபார ஆட்டம் பார்த்த கங்கோன் கொதித்தெழுந்து தன் மௌனம் கலைத்துப் பதிவிட்டார்..
அடுத்தடுத்து இரு பதிவு..

அம்மா பகவான் பக்தர்களுக்குப் பிறகு இப்போது சனத் ஜெயசூரிய ரசிகர்களும் கண்கோனைத் தேடித் திரிகிறார்களாம்.. அவர்களுக்கும் இவரது திருமுகம் காட்டவே இந்தப் பதிவு..


அண்மைக் காலமாகப் பதிவுகள் போடுவதிலிருந்து கொஞ்சம் விலகி இருந்தாலும் G Chat statusஇலேயே மினி பதிவுகள் இட்டு தம்பியர் அசத்தி இருக்கிறார்.. அவையெல்லாம் வெறும் மெசேஜ்களா இல்லை இல்லை.. தனியான தவிப்பும்,தாபமும் நிறைந்த காதல் காவியங்கள்..






போய்ச் சேர வேண்டியவரிடம் போய்ச் சேர்ந்ததா என்பதே இப்போது முக்கியமான கேள்வி..



                  நீங்க எல்லாம் ஏறினா எந்தக் கப்பல் தான் கவிழாது சாரே..


கங்கோனின் காவிய வரிகளில் தெரிந்தெடுக்கப்பட்டவை..

வைகாசி நிலவே வைகாசி நிலவே, மை பூசி வைத்திருக்கும் கண்ணில் நீ பொய் பூசி வைத்திருந்ததென்ன....


சமூகம், கட்டமைப்பு, விழுமியம் இவற்றை விட எனக்கு நான் முக்கியமானவன்.... என் தேடல் தொடங்குகிறது உறவகளுக்காய்...


கொக்கக் கோலா பிறவுணு கலருடா.... என் அக்காப் பொண்ணு வேற கலருடா....


நீ தோலைப் பார்த்து மாடு பிடிச்சா தொழிலுக்காகாது..


மனசு மட்டும் வெள்ளையாக இருந்தாலாகாதா?
நான் கண்ணீராலே கழுவிப் பார்த்தால் கறுப்பும் அழியாதா?


நான் நிராகரித்த நபர்களைத் தேடிய என் பயணம் நிராகரிக்கப்படுகையில் வரும் வலி நான் நிராகரிக்கப்படுவதை விடக் கொடியது.... #காதலேதும் இல்லை....


ஆண்டவா ஆண்டவா ஆறுபடை ஆண்டவா.... நாட்டுக்குள்ள எல்லாருமே நடிக்கிறாங்க ஆண்டவா....


நேசமில்லாத வாழ்வில் பாசமண்டாகுமா?


என் தாயின் மீது ஆணை, எடுத்த சபதம் முடிப்பேன்.............


கதறக் கதறக் காதலிப்பேன், உன்னைச் சிறுகச் சிறுக சிறைபிடிப்பேன்.... #அழகாயிருக்கிறது #பிடித்துப்போய்விட்டது


பூப்பூக்கும் தருணம், பூங்காற்றும் அறியாது... காதல் வரும் தருணம், கண்களுக்குத் தெரியாது....


உசுரே போகுதே உசுரே போகுதே உதட்ட நீ கொஞ்சம் சுழிக்கையில...


அனைவரும் உறங்கிடும் இரவெனும் நேரம் எனக்கது தலையணை நனைத்திடும் நேரம்...




இந்த வண்டி போதுமா?(வண்டி என்பதன் இருபொருள் விளக்கம் கேட்கக் கவிஞர் சுபாங்கனை அணுகவும்)

யாழ்ப்பாணம் நல்லூர் வீதி ஆச்சியின் ஓசிக் கடலையும், மணியம் காரச் சுண்டலும்,ஹம்ப்டன் லேன் மரவள்ளிக் கிழங்கு சிப்சும், சிந்து கபே தோசையும், நல பாகம் பிட்டும் அப்பமும் இருக்கும் வரை கங்கோன் எனப்படும் கருப்பு நமீதாக் கிரீஸ் இன்னும் பல சாதனைகள் நிகழ்த்தி இலங்கைப் பதிவுலகில் என்ன உலகப் பதிவுலகிலேயே ஒரு தனி முத்திரை பதித்து தான் 'கறுப்பு சரிதத்தை' எழுதுவார் என எம் குழு சார்பாக வாழ்த்துகிறோம்..

இவர் பற்றி எழுதினால் எழுத்து கொட்டிகிட்டே இருக்கு.. ஆனால் எந்தவொரு பதிவுக்கும் ஒரு முடிவு வேண்டும் இலையா..
So.....
                                             THE END

அண்மைக்கால கங்கோன் சாதனைகள்..

நீந்திய காலம் பதிவேழுதாமலேயே பிரபல 'பதிவராக' இருப்பது..
அசைக்க முடியாத பின்னூட்ட வாதி..
மெகா சைஸ் பந்துபோல இருந்துகொண்டும் களத்தடுப்பில் பந்துகளை லபக் என்று கைப்படுத்தும் அழகு.
காதல் மன்னனாக நண்பர்ஸ் என்ற சதிகாரர்கள் முனையும்போதும் சமாளித்து 'நல்லவனாகவே' இருப்பது.
ஆர்ம்ஸ்ட்ரோங் என்றான போதும் கூட இதயம் மட்டும் சொப்ட் ஆகவே இருப்பது.
பந்துவீசி ஒரே ஓவரில் 28 ஓட்டங்களைக் கொடுத்து ஒரு போட்டியில் கவிழ்த்த அணியை
அடுத்த போட்டியில் 30 அடித்துக் காப்பாற்றியது.
தோற்றுக் கொண்டிருக்கும் ஆஸ்திரேலியாவையே கும்மி வாதங்களில் ஜெயிக்க செய்யும் அழகில் ரிக்கி பொண்டிங்குக்கு அடுத்து தலைவராகக் கங்கோனை ஆஸ்திரேலியா தேர்வாளர் அழைத்திருப்பது.
தூங்கி வழிந்து வீட்டுக் கதிரையில் விழுந்தும் கதிரை இன்னும் உடையாமல் இருப்பது.
இன்னமும் என்றும் ஒரே அனலிஸ்ட் என்ற பெயருக்கு உண்மை அர்த்தம் கொடுப்பது.
இணையத்தின் சகல தேவைகளுக்கும் ஒரே சகலரோக நிவாரணியாக இருப்பது.

அதான் சொன்னேனே பந்துவீச மட்டும் கூப்பிடாதேங்கன்னு..
சின்னப் பையனிடமே பந்தைப் பறிகொடுத்த உண்மையான பச்சிளம் பாலகனப்பா


இது ஒன்று பட்ட ஒரு கூட்டுக் கலாய்த்தல் படைப்பு..

இயக்கம் - A .R .V .லோஷன்


உதவி இயக்கம் - பவன் ;) - எரியாத சுவடிகள்..

ஆலோசனைக் குழு - ஒன்றா ரெண்டா.. ;)

பவனின் வரிகளில் எங்கள் கங்கோன் 

பி.கு - தம்பி கங்கோன் நாளை தர இருக்கும் பார்ட்டியை மறக்காதீர் ;)

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner