Showing posts with label பதிவர். Show all posts
Showing posts with label பதிவர். Show all posts

November 09, 2011

வந்தி மாமா 16


பதிவுலக பச்சிளம் பாலகன்...
இருபத்தைந்தாவது தடவையாகப் பதினாறாவது பிறந்த நாள் கொண்டாடும் என்றும் மார்க்கண்டேயன்..
பாதிப் பெண்களை தங்கையாகவும் மீதிப் பெண்களை மகள்மாராகவும் ஆக்கி மனோதர்ம வாழ்வு வாழும் மகாத்மா..
எங்கள் ஆன்மீக குரு வந்தியானந்தா மாமாவுக்கு (பெரி.மயூரன் என்ற இயற்கைப் பெயர் கொண்ட வந்தியத்தேவர் ) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..



வந்தி பற்றிப் பதிவுலகமும், பாருலகமும் அறிந்தும் அறியாத விஷயங்கள் 16....

1.ஒருவர், இருவருக்கென்று இல்லாமல் ஊருக்கே மாமாவாக அறியப்பட்டாலும், இவர் மனதார மாமா என்று அழைக்க நினைப்பது இந்த மாமாவுக்கு இரண்டு நாட்கள் முன்னர் பிறந்த/பிறந்த நாளைக் கொண்டாடிய உலக நாயகனைத் தான்.
(ஏழாம் அறிவு ஹீரோயின் தான் காரணம் என்று விளக்கவும் வேண்டுமா?)

2.லண்டன் போனாலும் லங்காவில் இருந்தது போலவே சுத்த சைவமாக (சாப்பாட்டில்) இருந்து கூதல் குளிரையும் ஒரு கை பார்த்த சிங்கம்.

3.எத்தனை விதமாக எங்கெங்கெல்லாமோ தெரிந்த தெரியாதவர்களிடம் மொத்து வாங்கி, சிக்கல் சின்னாபின்னப் பட்டாலும் இந்த 'சிரட்டை' சிங்கத்துக்கு கோபம் கொஞ்சம் கூட எட்டிப் பார்க்காது.

4.அதிகமாகக் கோபம் ஏறி ஆத்திரத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போனால் "பொறுங்கடா, உங்களைப் பற்றிப் புனைவு போட்டுக் கிழிக்கிறேன்" என்று காமெடியாகக் கொந்தளிப்பார்.
ஆனால் அது ரணிலின் 'அரசாங்கத்தைக் கவிழ்க்கப் போறோம்' என்பது போலத் தான்.
அதற்காக வைக்கப்பட்ட ஆயிரமாவது பட்டம் தான் 'பு.மாமா' - புனைவு மாமா (வேற ஏதாவது விவகாரமா நீங்கள் இதுவரை காலம் யோசித்திருந்தால் கும்மி டெரர் சங்கம் பொறுப்பில்லை)

5.இப்போது அடிக்கடி முணுமுணுக்கும் இரு பாடல்கள்
"வாழ்க்கையில் ஆயிரம் தடைக்'கல்'லப்பா தடைக்'கல்'லும் உனக்கொரு படிக்'கல்'லப்பா"
"ஒரு 'குண்டு'ச் சட்டிக்குள்ளே வந்து குதிரையோட்டும் புள்ள"

6.கணிதம் படித்திருந்தாலும், கணினிப் பக்கம் இருந்தாலும் இலங்கை இம்முறை வந்த பிறகு வைத்தியத் துறையில் ஒரு தனியான ஈடுபாடும் தணியாத தாகமும் சேர்ந்திருக்கிறதாம்.

7.கடற்கரையில் நண்பர்களோடு நின்ற நேரம், எங்கிருந்தோ முளைத்த சாத்திரக்காரி தேடி வந்து இழுக்காத குறையாகக் கையை இழுத்து (நம்புங்கப்பா மாமா இழுக்கேல்லை) "நீங்க சொல்லடியையும் கல்லடியையும் நின்று தாங்கும் பிள்ளை" என்று நெற்றிப் பொட்டில் அடித்த மாதிரி எப்படிப் பட்டென்று சொன்னாள் என்று வெவ்வேறு இடங்களில் ரூம் போட்டு (தனியாத்தானா?)யோசிக்கிறார்.


8.இப்போ ஸ்ருதி ஹாசன், தமன்னா பிடிக்கும் என்று சொல்லி வயசைக் குறைச்சுக் காட்ட எத்தனித்தாலும் நம் மாமாவின் all time favorites பூர்ணிமா(பாக்கியராஜ் கோவிச்சாலும் பரவாயில்லையாம்), ராதா (அதான் கோ கதாநாயகியின் அம்மா), சுஹாசினி (மணிரத்னத்தின் அம்மணி) & அம்பிகா (சொல்லணுமா?) தான்.

9.லண்டனில் இருந்தும் எங்கள் திருமலைக் குஞ்சு கேட்டபடி ஜிம்மி அன்டர்சனின் அண்டர் வெயரை வாங்கி வர முடியவில்லை என்பதே அண்மைய சறுக்கல்.

10.லண்டனில் இருந்து பிளைட்டில் வந்த நேரம் ரொம்ப நேரமா இவரையே ஒரு ஆண்டி வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்ததும், என்னடா இது மகள் ஏதாவது இருக்குமோ என்று நம் மாமா யோசிக்க, கட்டுநாயக்க Airport வந்ததும் அந்த ஆண்டி இவரைப் பார்த்து "Excuse me Uncle, Are you Mr.வந்தியத்தேவன்?" என்று கேட்க நம் மாமா அரை மணித்தியாலம் உள்ளே மயங்கி வீழ்ந்து கிடந்தது வரவேற்கச் சென்ற நாம் வெளியே காத்திருந்த கதை இன்று தான் வெளியே விடப் படுகிறது.

11.புலம்பெயர் பதிவர்களின் லண்டன் பிராந்தியத் தலைவராக இருந்தும் அதுபற்றி இன்னமும் காவல்துறை தன்னை அழைத்து விசாரிக்காதது கௌரவக் குறைவு என்னும் மன உளைச்சலால் மட்டக்களப்பு போய் தனியாக, ரகசியமாக இரு நாள் மாநாடு போட்டு வந்திருக்கிறார் மாமா.

12.நாடு திரும்பிய பதிவுலக சிங்கத்தைக் கௌரவிக்கும் வகையில் 'இலங்கைப் பதிவர்களின் நாலாவது பதிவர் சந்திப்பு' பற்றி குழுமத்தில் யாராவது மடல் இடுவார்கள் என்று ஒவ்வொரு மணித்தியாலமும் தன் ஜிமெயிலை refresh செய்து refresh செய்தே களைத்துவிட்டாராம்.

13.(இங்கிலாந்து) அரச குடும்பத்தில் இணையும் வாய்ப்பு சில வருடங்களுக்கு முன் கிடைத்தபோதும் அது கிடைக்காமல் கை நழுவிப் போன சோகம் இப்போதுவரை மனதில் இருந்தாலும் இன்னும் (இன்றும் கூட) மனதில் கோபமில்லாமல் ரசிக்கிறார் இந்தப் பிஞ்ச/பிஞ்சு மனசுக்காரர்.

14.அண்மையில் நடந்த கொலையொன்றில் சம்பந்தப்பட்டு சர்ச்சைக்குரிய ஒரு அரசியல்வாதி, இலங்கையின் பர பர மங்களமான அரசியல் வாதி ஆகியோருக்கும் சரித்திரக் காதலன் சலீமுக்கும் நம் மாமாவுக்கும் ஒரே வித ரசனை.. ஹி ஹி ஹி.. ;)

15.வாசிப்புப் பிரியர் நம்ம வந்தி மாமா அதிக தடவை வாசித்த நூல் - பொன்னியின் செல்வன் அப்பிடின்னு நீங்க நெனச்சா தப்பு.
ஒவ்வொரு நாளும் வாசித்த பின்னரும் இன்னும் அடங்கவில்லை தாகம் என்று மாமா சொல்லும் நூல் - சீரோ டிகிரி
ஆமாம் நம்ம ஹீரோ சாருவின் சீடர்.

16.வந்தியானந்தா என்ற சிறப்புப் பெயரோடு இவர் உபதேசம் செய்து உலகப் புகழ் பெற்று விளங்க வாழ்க்கையில் அடிபட்ட ஞானமும், வாய்த்த முதலாவது சீடன் கன்கோனின் ராசியும் தான் காரணம் என்கிறார்.


மீண்டும் மனதார்ந்த வாழ்த்துக்கள் மாமா + அட்வான்ஸ் நன்றிகள் இன்று மாலை தரப்போகும் விருந்துக்கு ....
அடுத்த பிறந்த நாள் விழாவுக்கு எங்கள் மாமியுடனும், மருமகனுடனும் எங்களை லண்டனுக்கு அழைத்துக் கொண்டாடவுமென்று குதூகலமாக வாழ்த்துகிறோம்..



September 20, 2011

மங்காத்தா..... நானும் மாறிட்டேன்..

அன்புள்ள வாசக நண்பர்களே, பதிவுலக நண்பர்களே...

வலைப்பதிவராக மாறி மூன்று வருடங்கள் பூர்த்தியாகியுள்ள இந்த மாதத்தில் (என்னுடைய முதலாவது பதிவு வெளியானது 2008ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 6ஆம் திகதி. 

வணக்கம்


என்னுடைய வலைப்பதிவை இணையத்தளமாக மாற்றும் நேரம் வந்தாச்சு என்று நினைக்கிறேன்.


பல அன்பு நண்பர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க நாளை இப்போது முதல் என்னுடைய வலைப்பதிவு 
http://loshan-loshan.blogspot.com/ நான் இவ்வளவு காலமும் பெயருக்கு வைத்திருந்து re direct பண்ணி இருந்த www.arvloshan.com என்ற இணையத்தளத்தில் இயங்கும் என்பதை அன்போடும் மகிழ்ச்சியோடும் தெரிவித்துக் கொள்கிறேன்.




ஆனால்
http://loshan-loshan.blogspot.com/ ஐ மனப்பாடமாக வைத்திருந்து என் பதிவுகளை வாசித்துவரும் நீங்கள் அப்படியே வருகை தரலாம்.. அங்கிருந்தும் நேரடியாக இங்கே வரலாம் :)

இன்று என் விசாரணைகள், தொல்லைகள், சந்தேகங்களை பாதி வேலை நாளில் பொறுத்து என்னுடன் இருந்து வலைப்பதிவில் தேவையற்ற Gadgetsஐ அகற்றி, இன்னும் அகற்றுவதற்கு பரிந்துரைகளை செய்து தந்த தம்பிமார் ஜது, கன்கோன் ஆகியோருக்கு நன்றிகள்.

குறை, நிறைகள், விமர்சனங்கள், மேலதிக ஆலோசனைகளைத் தாராளமாக வரவேற்கிறேன்.

உங்கள் தொடரும் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றிகள்...


** தலைப்பு விளக்கம் - எத்தன நாளுக்குத் தான் எல்லாரும்போலவே "ஆத்தா பாஸ் ஆகிட்டேன்" "ஆத்தா பியூஸ் ஆகிட்டேன்" என்று தலைப்பு போடுவது?
அதான் சீசனுக்கு ஏற்றது போல "மங்காத்தா"வைக் கூப்பிட்டேன்.




August 08, 2011

சோதனை மேல் சோதனை.. அவ்வ்வ்வ்..


நம்ம குறும்புப் பயல் கவிஞர் பப்புமுத்து விட்ட ஒரு பகிரங்க சவாலுக்காக இந்த தில்லான, தைரியமான, ரிஸ்க்கான ஆனால் மொக்கையான பதிவு...

உள்ளே வாசிக்க இறங்க முதலே சொல்லிடுறேன்..

Caution

காது, கண்களில் ரத்தம் வாங்க தயாரா இருந்தா மட்டும் மேற்கொண்டு வாசியுங்க..
தரம், தராதரம், அஸ்கு, புஸ்கு பார்க்கிற சீரியஸ் பார்ட்டி சாரி.. டீ இன்னும் வரல..
இது வெறும் மொக்கை..மொக்கை.. மொக்கையன்றி வேறேதும் அல்ல..


உலகையே அழ வைக்கிற "சோதனை மேல் சோதனை" பாடலை சந்தோஷமான பாடல் என்றும் மகிழ்ச்சியான, மங்களகரமான தருணங்களில் அடிக்கடி ஒலிக்கும் "இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே" பாடலை சோகப் பாடல் என்றும் நிறுவ வேண்டுமாம்..

நிறுவல், தேற்றம் அப்பிடீன்னு எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே..
அட A/L காலத்தில் கஷ்டப்பட்டு ஆசிரியர்கள் சொல்லித் தந்தவை.. 
நாம தான் அப்பிடியான அஜீரனமாக்கிற விஷயங்களை காதிலேயே போட்டுக்குறதில்லையே.. 
இப்ப இந்தக் குஞ்சு கேட்குது.. 
ஏதோ நம்மால முடிஞ்சது..


இரு பாடல்களினதும் ஒவ்வொரு வரியாக எடுத்து நான்கைந்து நாளாக மாறி மாறி, பாடி வாசித்து, பகுத்து எல்லாம் பார்த்தும் அர்த்தங்களில் அனர்த்தம் புகுத்த முடியவில்லை.

ஆனால் சவால் சவால் தான்.. 
சளைக்கமாட்டான் இந்த விக்கிரமாதித்தன்..

தங்கப் பதக்கம் பட காட்சி எல்லாம் மறந்திடுங்க.. 

அதே பாடல் வரிகள்..
நம்ம வைகைப் புயல் வடிவேலுவின் இப்போதைய 'அவ்வ்வ்' நிலையை யோசித்துப் பாருங்கள்...

படமே கையில் இல்லாமல் இருப்பவரிடம் கிரி படத்தில் வந்த காட்சி மாதிரி ஆர்த்தி கேட்கிறார், "என் மாமா கையில படமே இல்லை?"
"ரொம்ப நல்லவேன்னு சொல்லிட்டாங்கம்மா" என்ற சிறிய, சிரிக்க வைத்த டயலோக்கிற்குப் பதிலாக இந்தப் பாடல்....



சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி(2)
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
சொந்தம் ஒரு கை விலங்கு நீ போட்டது
அதில் பந்தம் ஒரு கால் விலங்கு நான் போட்டது
சொந்தம் ஒரு கை விலங்கு நீ போட்டது
அதில் பந்தம் ஒரு கால் விலங்கு நான் போட்டது
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
ஆதாரம் இல்லையம்மா ஆறுதல் சொல்ல
நான் அவதாரம் இல்லையம்மா தத்துவம் சொல்ல
பரிகாரம் தேடி இனி எவ்விடம் செல்ல
எனக்கு அதிகாரம் இல்லையம்மா வானகம் செல்ல
ஒரு நாளும் நான் இது போல் அழுதவனல்ல
அந்த திருனாளை கடன் கொடுத்தவன் யாரிடம் சொல்ல
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி(2)
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
( மாமா… காஞ்சிப்போன பூமி எல்லாம் வத்தாத நதியை பாத்து ஆறுதல் அடையும்.
அந்த நதியே காஞ்சி போய்ட்டா??
துன்பப் படுறவங்க எல்லாம் அந்த கவலையை தெய்வத்துகிட்ட முறையிடுவாங்க.
ஆனா தெய்வமே கலங்கி நின்னா??
அந்த தெய்வத்துக்கு யாரால ஆறுதல் சொல்ல முடியும்??? )
நானாட வில்லையம்மா சதையாடுது
அது தந்தை என்றும் பிள்ளை என்றும் விளையாடுது
பூவாக வைத்திருந்தேன் மனமென்பது
அதில் பூநாகம் புகுந்து கொண்டு உறவென்றது
அடி தாங்கும் உள்ளம் இது இடி தாங்குமா
இடி போல பிள்ளை வந்தால் மடி தாங்குமா
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி(2)
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி 


இப்ப சிரிக்க முடிகிறதா? :)

எப்பூடி?

============

வைதேகி காத்திருந்தாள் படப் பாடல்.. துள்ளி வரும் சந்த வரிகளுக்காகவும், இனிமையான பின்னணி இசைக்காகவும் எனக்குப் பிடித்த பாடல்களில் ஒன்று இது.. 

இதை வைத்து சோகப் பாடலாக மொக்கை போட சிம்பிள் வழிகள் இரண்டு .....

ஒன்று - பாடலில் ஒரிஜினலாக நடித்த கேப்டன் விஜயகாந்தையே இப்போதுள்ள தோற்றத்துடன் இதே பாடல்க்கு நடிக்க வைத்துக் கற்பனை செய்து பாருங்கள்..
கண்களில் ரத்தக் கண்ணீர் வருதா இல்லையா?

இரண்டு - 


சர்வதேசப் பதிவர் ஆயில்யன் அண்மையில் திருமண பந்தம் புகுந்தார்.. 
இன்னொரு சித்தப்பாப் பதிவரும் விரைவாக செட்டில் ஆகப் போகிறார்.. 

அவர்களின் திருமணம் பற்றியல்ல நான் சொல்லப் போறது..
இது ஒரு நீண்ட 'டொக்கு' காதல் திருமணம் ஆவது பற்றியது.. ;)

நம்ம திருமலைக் குஞ்சுவின் ஆஸ்தான கனவு நாயகி எம்மா வொட்சன்.. 
என்னாது ஆஸ்திரேலிய கிரிக்கெட்டர் ஷேன் வொட்சனின் அம்மாவா என்று யாரும் எக்குத் தப்பாக் கேட்டுராதீங்க.. 
தன்னுடைய கனவுக் கன்னியைத் தெரியாமப் போச்சே என்ற அவமானம்+கவலையில் சிரட்டைக்குள் நீரூற்றி பவன் தற்கொலை செய்துகொள்ளப் போகிறான். 


இந்த எம்மா வொட்சன் தான் Harry Potter இல் கதாநாயகி.. 
(Harry Potter அப்பிடின்னா என்னா என்று யாராவது கேட்டால் கொலை விழும் சொல்லிப் போட்டேன்)

நம்ம குஞ்சுவும் எம்மாவும் திருமணம் முடித்தால் எப்படி இருக்கும்? 
அவர்கள் இருவருக்கும் ஆனந்தக் கண்ணீர் வந்தாலும், நமக்கென்னவோ வரப்போவது கழிவிரக்கம் தானே....

(அட இதை வாசிச்ச உடனேயே அங்கே பாருங்க லண்டன் மாமா "கருமம்.. கன்ராவி" என்று காறித் துப்புவதை)

இப்ப சரியாப் போச்சா? 

குஞ்சு - எம்மா ஜோடியைப் பார்த்து 'ரசித்துக்கொண்டே' பாடல் வரிகளை மேயுங்கள்..
கர்ண கடூரக் கவலையாகப் பாடல் இருக்கும்..



இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே இன்பத்தில் ஆடுது என் மனமே
கனவுகளின் சுயம்வரமோ கண் திறந்தால் சுகம் வருமோ

இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே இன்பத்தில் ஆடுது என் மனமே

பூங்குயில் சொன்னது காதலின் மந்திரம் பூமகள் காதினிலே
பூவினைத்தூவிய பாயினில் பெண்மனம் பூத்திடும் வேளையிலே
நாயகன் கை தொடவும் வந்த நாணத்தை பெண் விடவும்
நாயகன் கை தொடவும் வந்த நாணத்தை பெண் விடவும்
மஞ்சத்திலே கொஞ்சக் கொஞ்ச...மங்கை உடல் கெஞ்சக் கெஞ்ச
சுகங்கள்...சுவைக்கும்...இரண்டு...விழிகளில்
இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே இன்பத்தில் ஆடுது என் மனமே
கனவுகளின் சுயம்வரமோ கண் திறந்தால் சுகம் வருமோ
இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே...ஏ...ஏ
கரிமகரிஸ ரிகம கமத ஸதரி ஸதம தஸரிகமத மதமதஸரி
ஸாஸ ஸாஸ ஸாஸ ஸாஸ ஸரிகரி ரிஸஸதபமக
ரீரி ரீரி ரீரி ரீரி ரிகமககரி ரிஸஸததம

மாவிலை தோரணம் ஆடிய காரணம் தேவியின் திருமணமோ
ஆலிலையோ தொட ஆளில்லையோ அதில் ஆடிடும் என் மனமோ
காதலின் பல்லவியோ அதில் நான் அனுபல்லவியோ
காதலின் பல்லவியோ அதில் நான் அனுபல்லவியோ
அங்கத்திலே ஏழு ஸ்வரம் இன்பத்திலே நூறு வரம்
மிதந்து...மறந்து...மகிழ்ந்த...நெஞ்சத்தில்

இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே இன்பத்தில் ஆடுது என் மனமே
கனவுகளின் சுயம்வரமோ கண் திறந்தால் சுகம் வருமோ
இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே...ஏ...ஏ
 


யாரு கிட்ட?


பப்பு முத்துவுக்கே பெப்பே.. :) :) :)



June 01, 2011

நல்லவர்கள், அதிகார மையம், விசரன் + விருது - ஏன்?????



நல்லவர்களாகத் தம்மைக் காட்டிக் கொள்ளலாம்.. ஆனால் சிலர் தங்களை 'ரொம்பவே' நல்லவர்களாக காட்டிக் கொள்ள முயலும்போது அவர்களின் முகமூடிகளைக் கிழித்து மூக்கில் குத்தி உடைக்க ஆத்திரம் வருகிறது. 


இப்படி நேற்று காலையில் என் மனதில் இருந்ததை ட்விட்டரில் கொட்டி இருந்தேன்..


ஆனாலும் முன்பு சில காலம் முன் இருந்ததைப் போல எனக்குக் கோபம் வருவதில்லை. இது புதுவித நோயோ எனக் கொஞ்சம் யோசனையாக இருக்கிறது.


முன்பெல்லாம் சில விஷயங்கள் மனத்தைக் கொஞ்சமாவது சலனப்படுத்துவது போல நடந்தால் சட்டென்று வரும் கோபத்தில் ஒன்றில் நேரடியாக சம்பந்தப்பட்டவரிடம் கேட்டு விடுவதுண்டு.. அல்லது பதிவாகக் கொட்டித் தள்ளுவதுண்டு.
அது பக்குவப்படாத மனநிலையோ என இப்போது நினைத்தாலும் எனக்கு அந்த சுபாவம் பிடித்தே இருந்தது.


ஊடகங்கள் பற்றி முழுக்க அறியாதவர்கள் தப்பாக எல்லாம் தெரிந்தது போல எழுதினாலோ பேசினாலோ, சரியானவற்றை நிறுவ பாய்ந்து சென்று வாதாடிய நாட்களும் இருந்தன.
ஆனால் இப்போது யார் யார் எதைப் பற்றி எழுதுவது என்ற விவஸ்தையே இல்லாமல் போயிருப்பதால் விமர்சனங்களாக இல்லாமல், கட்டுக்கதைகளாக (அது வேறு யாராவதைப் பற்றியே இருந்தாலும் கூட) இருந்தாலும் "அப்படியா" என சிரித்து விட்டு இருக்கப் பழகி விட்டேன்.


இதற்கு என் வேலைப் பளுவும், நேரமின்மையும் கூடக் காரணமாக இருக்கலாம். 
மனதில் எழும் உணர்வுகளை சட்டென்று சுருக்கமாக ட்விட் செய்து விட்டு செல்வது நேரத்தையும் காக்கும் விடயமாக மாறிவிட்டது. 


பதிவுலகத்தில் அடிக்கடி சர்ச்சைகள் தோன்றுவதும் சிறு சிறு கருத்து மோதல்கள் பெரிய குழுரீதியான மோதலாக மாறுவதும் வெகு சகஜமான விடயங்களே.. 
நான் 2008இன் இறுதிப் பகுதியில் பதிவுலகத்துக்கு வந்ததில் இருந்து இதுவரை பார்க்காத சர்ச்சைகளா, சண்டைகளா, இடம்பெறாத ஹக்கிங்கா, அல்லது வராத போலிகளா, வம்பிழுக்காத அனானிகளா.. 


இதெல்லாம் இங்கே சகஜமப்பா.. என்று மனம் பழகிக் கொண்டது.. இறுதியாக கடந்த ஆண்டின் இறுதியில் இடம்பெற்ற மிகப்பெரிய ஹாக்கிங், போலி சர்ச்சைகளைத் தொடர்ந்து வம்பு இழுத்தவர்கள்.. போலிகளை உருவாக்கியவர்கள்.. அல்லது அடிக்கடி பலருடன் சர்ச்சைகளில் ஈடுபட்டுவந்த சிலர் காணாமல் போயினர்.



சில விஷயங்கள், சில விஷமங்கள், சில விளக்கங்கள்.. மனம் திறக்கிறேன்




இதுவும் கடந்து போகும் என அமைதியானது பதிவுலகம்..


தமிழக மீனவர் பிரச்சினை காலத்தில் மீண்டும் ஒரு வித்தியாசமான சர்ச்சை.. தமிழக - இலங்கை பதிவர்களுக்கிடையில்.. ஆனால் இது நேரடியான கருத்து மோதலாக உருவெடுத்து அடங்கிப் போனது.


ஆனால் நீறுபூத்த நெருப்பாக அடிக்கடி இருந்து வந்த, வரும் ஒரு விஷயம் தான் 'அதிகார மையம்', வட்டம், கொழும்புப் பதிவர், குழு நிலை மனப்பான்மை இப்படிப் பலவிதமான பெயர்களால் அழைக்கப்படும் ஒரு வித சர்ச்சை.


பதிவுலகுக்கு வந்த பிறகு நட்பாகி நெருக்கமாகி ஒரே அலைவரிசை கொண்டவர்களாக இருப்பதனால் (ஒரே ரசனை என்று இருப்பதில்லை) ஒத்தியங்கும் நாம் சிலர்...
நான், வந்தியத்தேவன், ஆதிரை, சுபாங்கன், கவ் போய் மது, கங்கோன், பவன், சதீஸ், புல்லட் என்று இருந்த எம்மில் இப்போது வந்தி, சதீஸ் வெளிநாட்டில்..
புல்லட் பதிவுகள் இடுவதையும் கும்மியில் கலப்பதையும் வேலைப்பளுவால் விட்டுவிட்டார்; மது வேலையில் பிசி..
இப்போது அண்மைக்காலமாக இன்னும் மூவரும் எம்முடன் நட்பாக இருக்கின்றார்கள்..
நிரூசா(நவீன அதிகார மையம்;)), வதீஸ், அனுத்தினன்.
நாம் மட்டும் என்று இல்லை. கலகலப்பாக வெளிப்படையாகப் பேசிப் பழகி இணங்கி இருக்கக் கூடிய யார் வேண்டுமானாலும் இந்த வட்டத்தில் இணையலாம்.
 அதற்காக நாம் தான் இலங்கைப் பதிவுலகை இயக்குகிறோம்.. நாம் தான் ஆசீர்வதிக்கிறோம் என்று யாராவது சொன்னால் நாம் என்ன செய்ய முடியும்? 
இதற்கெல்லாம் அடிக்கடி விளக்கப் பதிவு போட்டுக்கொண்டா இருக்க முடியும்?
 
 
                                         அதிகார மைய உறுப்பினர்கள் - பார்க்கவே டெரராக இல்லை? : p
பட உதவி - நன்றி- பவன் 



இது என்னைப் பொறுத்தவரை மற்ற எல்லோருக்குமே இருக்கின்ற ஒருவிதமான தாழ்வு சிக்கலா, அல்லது அதீத உயர்வு சிக்கலா தெரியவில்லை..
எனக்கு பதிவுலகத்துக்கு நான் வந்த பிறகு கிடைத்த மிகச் சிறந்த விஷயங்களாக நான் அடிக்கடி சொல்வது என் நண்பர்களைத் தான்.. சுகம், துக்கங்களில் நெருக்கமாகப் பங்கெடுக்கும் அந்த நட்பு வட்டாரங்கள் பதிவுலகில் கிடைத்து நாம் நெருக்கமாக இருப்பது வெளியே நோக்கப்படுவது ஒரு வட்டம் என்று.. அல்லது பதிவுலகை ஆட்டிப் படைப்போர் என்று.. என்ன வேடிக்கை இது.. 


எக்சார் தான் ஆரம்பத்திலே தொடக்கி விட்ட விஷம விதை இது.. 


பதிவுலக சந்திப்புக்கள் கொழும்பிலேயே இடம்பெறுவது பற்றி வழமையாகவே குதர்க்கமாகக் கேள்விகள் எழுப்பும் எக்சார் வைத்த முட்டாள் தனமான விஷம விதைகள் எங்கே பிரச்சினை வரும் என்று பார்த்திருந்தோருக்கு மெல்ல அவல் கிடைத்த மாதிரி ஆகிவிட்டது.

எங்களுக்கு மட்டும் ஆசையா என்ன, நேரத்தை செலவழித்து நாமே ஒவ்வொரு முறையும் கொழும்பிலே பதிவர் சந்திப்பை நடத்த?
வெளியூரில் நடத்த யாராவது முன்வாருங்கள் என பகிரங்க அழைப்புக் கொடுத்தும் யாரும் முன்வரவில்லை.

அதிகார மையம் என்று கிண்டல், அச்ச, குதர்க்கத் தொனியில் அழைக்கப்பட்ட நாம் யாரும் ஈடுபடாமலே பதிவர் சந்திப்பை வேறொரு குழு நடத்தியும் அதிகார மையம் என்ற விஷயம் பதிவர் சந்திப்பிலேயே பலராலும் கல கல விஷயமாக மாறிக் கலந்துரையாடப்பட்டது.
நாமும் அதை எவ்விதத்திலும் எம்மைக் குறைவுபடுத்த மற்றோர் குறிப்பிட்ட விஷயமாகக் கணக்கெடுக்கவும் இல்லை.

இப்போது எங்கள் மின்னஞ்சல் கும்மிகளில் 'அதிகார மையம்' என்பது பிரேம்ஜியின் என்ன கொடும சார் போல ஒரு காமெடி வார்த்தை..
அதிகார மையம் என்று இப்போது நாம் அழைக்கும் நிரூசா(மாலவன்) - இறுதியாக நடந்த பதிவர் சந்திப்பை முன்னின்று நடத்தியோரில் ஒருவர் இதனை மிக ஸ்போர்ட்டிவ்வாக எடுத்துக் கொள்கிறார் என நினைக்கிறேன்.

ஆனால் நாங்கள் சிலர் எமக்குள்ளே மாமா, மச்சான், சித்தப்பூ என்று மிக நெருக்கமாகப் பழகிக் கொள்வதும், கும்மிகளில் இணைந்துகொள்வதும் அடிக்கடி சந்தித்துக் கொள்வதும் வேறு சிலருக்கு (பலருக்கு அல்ல என்பதைக் கவனிக்கவும்) கண்ணைக் குத்துகிறது போலும்..

எமக்குள் நாமே பின்னூட்டிக் கொள்கிறோம், வாக்குகள் இட்டுக் கொள்கிறோம் என்பதுவும் இப்படியான சிலரின் வயிற்றெரிச்சல் காரணங்கள்..
ஏழோ எட்டுப் பேரால் ஒரு சொதப்பலான பதிவு சூப்பர் ஹிட்டாகி விடுமா? என்னய்யா இவர்களின் லொஜிக்?

இதிலே வேடிக்கை என்னவென்றால் எம்மில் பலர் இப்போ ரொம்பவே பிசியாகி பதிவு இட்டே நாளாகி விட்டது. எமக்குள் நாமே பின்னூட்டியும் வாக்கிட்டும் சில நாளாகிறது மக்கள்ஸ்.

இன்னொரு செம நகைச்சுவை இப்படிக் குற்றம் சாட்டுவோரே தமக்குள் தாமே பின்னூட்டி நூறு அடிப்பதும் நூற்றைம்பது அடிப்பதும் நடக்கிறது.. நடக்கட்டுமே.. :)

மைந்தன் சிவாவின் ஒரு பதிவுடன் தான் மீண்டும் புதிய சலசலப்புத் தோன்றியது.
அண்மைக்காலத்தில் கொஞ்சம் ஓய்ந்து போயிருக்கும் இலங்கைப் பதிவர்களிடையே புயல் வேகத்தில் பதிவுகளை இட்டுவரும் இருவர் மதி சுதாவும், மைந்தன் சிவாவும் தான்..

பவன், ஜனா, கார்த்தி, நிரூபன், சின்மஜன் போன்றோர் தொடர்ச்சியாக பதிவெழுதும் ஏனைய சிலர்.

மைந்தன் சிவாவின் பதிவிலே சர்ச்சைக்குரிய சில விஷயங்கள் இருந்தாலும் அந்தப் பதிவின் பின்னூட்டத்திலேயே பலரும் பலவிதமாகப் பேசி அங்கேயே அவை தீர்ந்துபோனது என்று தான் நான் நினைத்தேன்.

எந்தவொரு கசப்புணர்வும் எனக்கு அங்கே சிவாவுடன் ஏற்படவில்லை.

நான் பொதுவாகவே நேரடியாகவே எல்லா விஷயங்களையும் பேசிவிடுவதால் பின்னூட்டமாகவே மனதில் நினைத்ததை சொல்லி முடித்து வந்தும் விட்டேன்.
ஆனால் இன்னும் பல நண்பர்கள் சொன்ன சில,பல விஷயங்கள் இன்னும் சிலருக்கு மீண்டும் ஒரு 'அதிகார மையம்' பற்றிய எண்ணக் கருத்துக்களை விதைத்திருக்கின்றன போலும்.
ஒரு சிலரின் விஷமப் பின்னூட்டங்களில் தெளிவாகவே அவை புரிந்தன.

தொடர்ந்து வந்த சில பதிவுகளிலும் தோணித்து ஒரு வகை நையாண்டி, குத்தல், மொட்டைத் தலை - முழங்கால் முடிச்சுக்கள் போன்றவற்றை நான் சரியாக உணராவிட்டால் நான்காவது வருடத்தில் பதிவுலகில் நான் இருப்பதில் அர்த்தம் இல்லையே..

இதில் ஓட்டை வடை நாராயணன் என்பவர் மிக முக்கியமானவர்.
வானொலி, அறிவிப்பாளர் என்ற பதங்களை அவர் பயன்படுத்திய விதங்கள் எதற்காக என்பதை நான் அறியாது போனால் நான் அறியாதவனே..

பலதரப்பட்ட விஷயங்களை அண்மைக்காலத்தில் பதிவிட்டு வரும் நிரூபன் அண்மையில் உண்மையான சம்பவம் என்று ஒரு வானொலிக் கதையை இட்டிருந்தார்.
எனக்கும் என்னைப் பற்றி அறிந்தவருக்கும் அது என் பற்றியது அல்ல என மிகத் தெளிவாகவே தெரியும். ஆனால் இந்தப் பதிவு வெளியான சமயமும், அதில் ஒ.வ.நாராயணின் குத்தலான பின்னூட்டங்களும் என் கவனத்துக்கும் வந்தன.
சிரித்துக் கொண்டேன். எதையோ நினைத்து எங்கேயோ முட்டிய கதை தான் போலும்..

இன்றும் கூட ஜனாவின் பதிவில் ஓட்டை வடை நாராயணனின் பின்னூட்டம் விஷமம்+வம்பு மற்றும் கேவலமாக இருக்கிறது.

ஆனால் எனக்குப் புரியாத விஷயம் ஏன் இது? யார், எங்கே , எதனால் ஆரம்பித்தது?

பதிவுலகம் ஒவ்வொருவருக்குமானது.. அவரவர் தங்கள் ரசனைகளைப் பதிந்து வரட்டுமே.. ஏன் மற்றவர்களின் சிந்தனைக்குள் இன்னொருவரின் தலையீடு வரவேண்டும்?

நேற்று ட்விட்டரில் தற்செயலாக நிரூபனுடன் தகவல் பரிமாறியபோது சில விஷயங்களை நேரடியாகக் கேட்டும் சொல்லியும் தெளிந்துகொண்டோம். வாழ்க்கையும் நட்புகளும் ஆரோக்கியமாகவும், சலனங்கள் இன்றியும் செல்வதற்கு இந்த நேரடிப் பேச்சுவார்த்தைகள் மிக முக்கியமானவை.

மூன்றாம் தரப்பை நான் எங்கேயும் ஆதரிப்பதில்லை.

அதற்காகத் தான் இந்தப் பதிவும் கூட..

-----------------

அண்மையில் பதிவர் ஜனா தனது பதிவுலக மூன்றாம் ஆண்டுப் பூர்த்தியை முன்னிட்டு இட்ட பதிவில் என்னைப் பற்றியும் சொல்லி இருந்தார்.

அதற்குப் பிறகு தான் சிலகாலமாக மனதில் இருந்த சில விஷயங்களைக் கொட்டலாம், கேட்கலாம் என்று நினைத்தேன்.

எனக்குப் பதிவுலகில் இந்தப் பிராந்தியப் பதிவர், இந்த நாட்டுப் பதிவர் என்றெல்லாம் தாண்டி பல நண்பர்கள் உள்ளார்கள்.
அப்படியாக நட்பாக அறிமுகமானவர்களில் ஒருவர் ஜனா.

கொழும்பில் இறுதியாக நடந்த பதிவர் கிரிக்கெட் மற்றும் சந்திப்பில் தான் ஜனாவை அறிமுகம்.அப்போது சந்தித்தது மட்டுமே.

அவரது வலைத்தளத்தை முன்பே வாசித்து வந்தாலும், அவர் இலங்கைப் பதிவர் என்று தெரிந்தது பதிவர் சந்திப்புக்கு ஒரு ஆறு மாத காலத்துக்கு முன்பே.

கிரிக்கெட் போட்டியில் ஜனாவும் நானும் எதிரெதிர் அணிகளில்.
இரு போட்டிகளிலும் ஜனாவின் விக்கெட்டை நானே எடுத்திருந்தேன். 
அந்தவேளையில் யாரோ ஒருவர் (எனக்கு யார் என்று ஞாபகமில்லை)" எதிரிக்கு எதிரி சரியாத் தான் இருக்கு" என்று கொமென்ட் அடித்தது ஞாபகம் வருகிறது.

அட என்னடா இது இப்போ தான் முதலாவது தரம் சந்திக்கிறோம்.. இது என்ன எதிரிக் கதை என்று யோசித்து அப்படியே விட்டு விட்டேன்..

நான் யாரையுமே எதிரி என்று அழைப்பதோ, மற்றவருக்கு சொல்வதோ, ஏன் என் மனதில் நினைப்பது கூடக் கிடையாது. எனக்கு எதிரிகள் கிடையாது.. அதிக நண்பர்கள் உள்ளார்கள் என்பது எனக்குப் பெருமை.
மற்றவர்கள் எனை எதிரியாக நினைத்துக் கொள்வதற்கும் கறுவிக்கொள்வதற்கும் நான் ஒன்றும் செய்ய முடியாதே.
பலருக்கு நான் எதிரி என்றால் அதுவும் என்னிடம் உள்ள ஒரு பலம் என்றே நினைக்கிறேன்.

மீண்டும் இந்த 'எதிரி' கதை வெளியே வந்தது அனுத்தினனின் பிறந்தநாள் விருந்தின் போது.

நாம் (எம் 'அதிகார மைய'க் குழுவுடன் நடுநிலையாளர் என்று நான் வேடிக்கையாக விளிக்கும் மருதமூரானும் ) அனுத்தினனின் வீட்டில் இருந்த நேரம் அனுத்தினனுக்கு ஒரு அழைப்பு வருகிறது...

"உங்கள் எதிரி தான் " என்று எம் பக்கம் பார்த்து சொல்லிவிட்டு வெளியே போய்ப் பேசுகிறார்.
எதிரியா யாரது? என்று புதிராக யோசிக்கப் பின்னர் தான் தெரியவருகிறது அது ஜனா என்று..

அடுத்த ஓரிரு நாட்களில் ஜனாவின் பேஸ்புக் பக்கத்தில் 'எதிரி' பற்றி ஒரு ஸ்டேட்டஸ்.
ஆகா என நினைத்துக் கொண்டேன்.

ஜனா பற்றி நான் நேரடியாக அவருக்கும் பலருக்கும் சொல்லவேண்டிய விஷயம் உள்ளது.
இந்தவருடமும் கொழும்பு பல்கலைக் கழகம் பதிவர்களில் ஒருவரைத் தெரிவு செய்து வழங்கப் போகிறார்கள்.

இது சம்பந்தமாக ஆக்கங்களுக்காகவும், பதிவர்களுள் யாருக்கு வழங்கலாம் என்பது குறித்த சிபாரிசுக்காகவும் பல்கலை மாணவர்கள் எம்மில் சிலரை அணுகியிருந்தார்கள்.

கடந்த வருடம் எனக்கு இந்த விருது கிடைத்தது உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கலாம். இம்முறை நான் எனது மனம் திறந்த சிபாரிசைக் கொடுத்துள்ளேன்.

ஜனாவிடம் இது பற்றிக் கேட்டபோது "கிரிக்கெட் பதிவு எழுதும் லோஷன் போன்றோருக்குத் தானே குடுக்கப் போறீங்கள். அவன் கிரிக்கெட், சினிமாப் பதிவு எழுதும் விசரன்" என்று சொல்லியுள்ளார்.
இது ஒரு சில நாட்களின் பின்னர் பெரிய தயக்கத்தின் பின்னால் என் காதுகளுக்கு வந்தபோதும் நான் அப்போது பொருட்படுத்தவே இல்லை.

இதற்கு முதலும் பலரால் பல தடவை ஜனா என்னைப் பற்றியும், என் பதிவுகள் பற்றியும் வசை பாடியதாக எனக்கு சொல்லியபோதும் நான் கணக்கெடுக்கவில்லை.
எதோ எங்கள் அலைவரிசை ஒட்டவில்லை என தட்டிவிட்டுக் கொண்டேன்.

ஜனாவுடன் நெருக்கமாகப் பழகவேண்டிய தேவையோ, இன்றில் வேறு கொடுக்கல் வாங்கலோ இல்லாத நிலையில் இதன் உண்மைத் தன்மை, காரண காரியங்கள் பற்றி அவரிடமே விசாரிக்க வேண்டிய தேவை இருக்கவில்லை.

ஆனால் ஜனாவின் பதிவில் பார்த்த என் பற்றிய இரு விஷயங்களுக்காகவும், சில பொதுவான வார்த்தைப் பிரயோகங்களுக்காக்கவுமே இதை இங்கே வெளிக்கொண்டுவருகிறேன்.

(ஜனா யாரிடம் இவ்வாறு சொன்னாரோ, அவருக்கும் ஜனாவுக்கும் இடையில் எந்தவொரு முறுகலும் வரக்கூடாது என்பதால் ஒன்றுக்கு இருமுறை அவரிடம் கேட்ட பின்னரே இதைப் பதிவிடுகிறேன். இதை ஜனா இல்லை என்று மறுத்தால்.. என்ற கேள்விக்கே இடமில்லை)

ஜனாவை முதல் தடவையாக சந்தித்த பின்னர் அவர் பற்றி என் பதிவிலே நான் குறிப்பிட்டது...


ரோல்ஸ் போச்சே - பதிவர் சந்திப்பு தொகுப்பு


இவ்வளவுக்கும் ஜனா பற்றி அதற்குப் பின்னரும் நான் ஒற்றை வார்த்தையால் கூட அழைத்திருக்கவில்லை. அவன். இவன் என்ற விளிப்புக் கூட என்னிடம் இருந்து வரவில்லை.

இங்கே யாரும் மிக நல்லவர்கள் இல்லை. புண்ணியாத்மாக்கள் என நாம் எல்லோரையும் நம்பிப் பழகுவதில் உள்ள சிக்கலால் தான் சில வட்டங்களை நாம் உருவாக்கி எம்முடன் ஒத்த அலை வரிசையுள்ளவர்களுடன் மட்டுமே பழகுகிறோம் என்பதற்கு எடுத்துக்காட்டுக்கள் தான் இப்படியான விஷயங்கள்.

ஜனா சொன்ன இந்த விடயங்கள்...
//நான் நினைக்கின்றேன் அவர் அறிவிப்பாளராக இருப்பது பதிவுலகத்தில் அவருக்கு நன்மைகளைவிட, சாபங்களைத்தான் அதிகம் கொடுத்திருக்கின்றது என்று.//
//இப்போது எழுந்துள்ள தேவையற்ற சச்சரவுகளுக்கும் தீர்வாக லோஷன், ஜனா உட்பட அனைவரும் மீண்டும் படிக்கவேண்டிய பதிவாக அது இருக்கின்றது.//

சாபங்கள்? 
என்னைப் பொறுத்தவரை என் தொழில் எனக்கு சோறு போடுவது மட்டுமன்று; அது எனக்கான ஒரு தவம். அந்தத் தொழிலின் பாக்கியம் தான் எனக்கு வலையுலகத்திலும் வாசிப்பிலும் ஈடுபாட்டை அதிகரிக்க உதவுகிறது.
சாபங்கள் என ஜனா சொல்வது எதிரிகள் எனக்கே தெரியாமல் அதிகரிப்பதையா?

தேவையற்ற சச்சரவு - நான் எவற்றிலும் ஈடுபடாத ஒருவன்.எதையும் நான் ஆரம்பிக்கவும் இல்லை. அதிகரிக்கவுமில்லை. லோஷன், ஜனா என்ற பெயர்கள் அங்கே இருப்பதன் மூலம் ஜனா சொல்ல வருவது மறைமுகமாக இந்த சச்சரவுகள் ஆரம்பித்தது அந்த 'எதிரி' விஷயத்திலா?

அப்படியானால் மைந்தன் சிவாவின் பதிவுக்கு முன்னதாகவே ஒரு ரகசிய பூகம்பம் தயாராகிக் கொண்டிருந்ததா? இப்படியெல்லாம் நான் யோசிக்கவேண்டியுள்ளது.

(நான் எல்லோர் பதிவிலும் பின்னூட்டம் இடாததும், பலருக்கு வாக்குகள் இடாததும், என் இடுகைகளுக்கு வரும் பின்னூட்டங்களுக்கு நான் பதில் இடாததும், எனக்குப் பின்னூட்டம் இடுவோரின் இடுகைகளுக்கு நான் பின்னூட்டம் இடாததும் என்னைத் தலைக்கனம் பிடித்தவனாகக் காட்டுவதாக யாராவது எண்ணினால் அவர்கள் என்னை சரியாக அறியாதோரே.. 
அப்படி சிலர் நினைப்பதற்காக என்னை மாற்றிக் கொள்வதற்கும் நான் விரும்பவில்லை.. அல்லது விரும்பினாலும் இயலவில்லை. நேரமின்மை காரணமாக.
நான் நினைக்கின்ற பல விஷயங்களை பதிவாகக் கொண்டுவரவே நேரம் இன்றி இருக்கிறேன் மக்கள்ஸ்.
அப்படியிருந்தும் கிடைக்கின்ற நேரத்தில் வாசிக்கும் பதிவுகளில் பிடித்தவற்றுக்குப் பதில்+வாக்கு இடுகிறேன் )

நான் பரந்துபட்ட வாசிப்பாளன் என்பதால் ட்விட்டர், பேஸ்புக், பலரின் பதிவுகள் (பின்னூட்டாவிட்டாலும், என் ரசனைக்குள் அடங்காததால் வாக்கிடாவிட்டாலும் கூட) என்ன நடக்கிறது.. யார் யார் யாருடன் கூடுதலாக ஒத்து நடக்கிறார்கள் என்று தெரிந்துகொள்வது அவ்வளவு சிரமமான விடயம் அல்லவே..
சிலரது பாஷையில் சொல்லப் போனால் வேறு சில வட்டங்கள்.. :)

இதில் மருதமூரான் பற்றியும் நான் சொல்ல வேண்டும்..அவரை நான் நடுநிலையாளன் என அழைப்பது சிலருக்குக் கிண்டலாக தொனிக்கலாம்.. மருதமூரானுக்கே அது எரிச்சலூட்டலாம்.
ஆனால் முன்னைய சில சர்ச்சைகளில் (யாழ்தேவி திரட்டி குறிப்பாக) பலரது பிரச்சினைகளையும் கேட்டு அறிந்து தனித்தனியாகப் பலருடனும் பேசிப் பழகித் தனித்தனியான உறவுகளைப் பேணி வந்தவர், வருபவர் மருதமூரான்.. 

இதனால் தான் நான் இட்ட அந்தக் காரணப் பெயர்.

எல்லா வட்டங்களிலும் இடைவெட்டாக வரக்கூடிய வெகு சிலரில் ஒருவர். இவருக்கு இங்கு நடக்கும் பலது புரியும்.. இதனால் தான் அண்மையில் பேஸ்புக்கிலும் புலம்பியிருந்தார்.

மருதமூரான் மனம் திறந்தால் இன்னும் பலது வெளிவரலாம்..
இவரது பேஸ்புக் பக்கமே அண்மையில் ஹக் செய்யப்பட்டது இன்னொரு அசிங்கத்தின் உச்சம்.

இந்தப் பதிவு சர்ச்சைகளைப் புதிதாக ஏற்படுத்தலாம்.. எனக்கு நான் உருவாக்காத எனக்கே தெரியாத பல புதிய எதிரிகளைத் தரலாம்.. அல்லது எனக்கு இருக்கும் நண்பர் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கலாம்.

ஆனாலும் எதற்கும் தயாராக மனதைத் திறந்து வைத்துவிட்டேன்.. 

ஜனாவின் பதிவில் பின்னூட்டியது போல...

மனதைத் திறந்து வைத்தால் வேறு பிரச்சினைகள் எழாது என்ற எனது அசையாத நம்பிக்கையால்..


May 24, 2011

ஒபாமா - ஐயோ அம்மா... இலங்கையின் மிகச் சிறந்த கிரியேட்டிவ் ஆன நகைச்சுவைப் பதிவு ;)


ஜாலியான தமிழில் தான் இந்த ஜோக் வேண்டும் என்றால் நல்ல ஜாலியான பதிவர் யாரையாவது அணுகி மொழிபெயர்த்துக்கொள்ளுங்கள் ஜாலி மக்காள்ஸ்.. 



அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் கனேடியப் பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பரும் ஒருநாள் சந்தித்துக் கொண்டார்கள்..
நம்ம கஞ்சிபாய் கண்டுபிடித்த ஒரு காலயந்திரம் - Time Machineஅவர்களுக்குக் காட்சிப்படுத்தப்பட்டது.

இந்தக் கால யந்திரத்தின் ஸ்பெஷல் என்னவென்றால் ஐம்பது வருடங்களுக்குப் பின்னதான எதிர்காலத்தைத் துல்லியமாக சொல்லும் ஆற்றல் இருந்தது தான்.

ஒபமா முதலில் அதன் அருகே போய் " ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர் அமெரிக்கா எப்படி இருக்கும்" எனக் கேட்டார்..

உடனே அந்தக் கால யந்திரம் ஒரு சீட்டை வெளியே தள்ளியது..

அதில்...

நாடு புதிய ஜனாதிபதி ஜோஸ் பெர்னாண்டேசின் ஆட்சியில் மிகுந்த பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் தன்னிறைவு பெற்றதாகவும் இருக்கும். பாதுகாப்புப் பிரச்சினைகள், வன்முறைகள் இருக்காது..

எந்தவொரு பிரச்சினையும் இல்லை. பொருளாதாரமும் சீராக இருக்கிறது.
உப ஜனாதிபதி ஜின் டவோ சீன மொழியைக் கட்டாய மொழியாக எல்லாப் பாடசாலைகளிலும் அறிமுகப்படுத்தியிருக்கிறார்"

வாசித்து முடித்த ஒபமா நெற்றியில் துளிர்த்த வியர்வையைக் கைக்குட்டையால் துடைத்துக் கொண்டே போய் அமர்ந்துகொண்டார்.

அடுத்து கனேடிய பிரதமர், "ஐம்பது ஆண்டுகளின் பின்னர் கனடா எப்படி இருக்கும்?"

கால யந்திரம் - Time Machine முன்பு தந்தது போலவே ஒரு துண்டு சீட்டை வெளியே தள்ளுகிறது..
அதை எடுத்த ஹார்ப்பர் அப்படியே வெறித்துப் பார்த்துக் கொண்டு நிற்கிறார்.

"யோவ் ஹார்ப்பர் என்னைய்யா இது? நான் சொன்னனே தானே? நீரும் சொல்லும் என்ன எழுதியிருக்கெண்டு" ஒபாமா ஆர்வத்துடன் கேட்கிறார்.

"தெரிஞ்சா சொல்ல மாட்டேனா? எல்லாமே 'தமிழில்' இருக்கே.. .. ஒண்ணுமே புரியல"



பி.கு - விடியலில் இன்று காலை சொன்னது

சிரிப்பு வரலேன்னாக் கூட எனக்காகக் கொஞ்சம் சிரிச்சுக்கோங்க.. வோட்டுப் போடாமல் போனாலும் பின்னூட்டம் போடமால் போனாலும் கூட நான் கோபித்துக்கொள்ள மாட்டேன் ;)
ஆனால் கிரியேட்டிவ் இல்லையென்று மட்டும் சொல்லப்படாது..
அழுதிருவேன்..


December 31, 2010

சில விஷயங்கள், சில விஷமங்கள், சில விளக்கங்கள்.. மனம் திறக்கிறேன்

வருடம் விடைபெற முன்னர் மனதில் இருக்கின்ற சில விஷயங்களைக் கொட்டி விடுகிறேன்.. 
இது சிலருக்கு பாடம், சிலருக்கு விடைகள், சிலருக்கு செய்திகள்.. சிலருக்கு எச்சரிக்கை..
எனக்கும் இன்னும் ஒரு சிலருக்கும் மனதின் பாரம் குறைதல்..  

கடந்த ஒரு மாத காலமாக எங்கள் சிலரின் வலைப் பதிவுகளை, வலைப்பதிவுகளோடும் தொடர்புபட்ட கடவுச் சொற்களைக் கைப்பற்ற யாரோ ஒரு வேலையற்ற ஒரு கும்பல் அல்லது ஒருவர் முயன்று கொண்டே இருக்கிறார்.

எனக்கு மட்டும் என்றில்லாமல், சக இலங்கைப் பதிவர்களான ஆதிரை(ஸ்ரீகரன்),கண்கோன்,சுபாங்கன் ஆகியோருக்கும், லண்டனில் வசிக்கின்ற வந்தியத்தேவன்,சதீஷ் ஆகியோருக்கும் இந்தத் தொல்லை சில காலமாக இருந்துவருகிறது.

ஒரு தடவை என்றால் பரவாயில்லை.. இது பல தடவை பல விதமாக..
ஆனால் இந்த Hacking வேலையில் ஈடுபடுவோர்(இவர்கள் செய்யும் சிறுபிள்ளைத் தனமான,முட்டாள் தனமான முயற்சிகளை Hacking என்று சொல்வது உண்மையான Hackersக்கு கேவலமாக அமையலாம்) இலக்கற்ற முட்டாள்கள்.

காரணம், எந்தவொரு மேலதிகமான தொழிநுட்ப அறிவும் இல்லாமல் சும்மா மேம்போக்காகக் குருட்டு இலக்கில் கடவு சொல்லுக்கு முயற்சி செய்தால் வேறு என்ன சொல்வது?

கடந்த புதன் கிழமை மட்டும் என்னுடைய மின்னஞ்சல்(ஜீமெயில்) கடவுச் சொல்லை உடைப்பதற்கு மட்டும் ஒன்பது தடவை முயன்றுள்ளார்கள் இந்த புத்திஜீவிகள்.

அதன் பின் என்னுடைய பேஸ் புக்க்குள்ளும் நுழைய முயன்றுள்ளார்கள்.

பாவம்.. இவ்வளவு முட்டாள்களாக இருப்பார்கள் என்று தெரிந்திருந்தால் என்னிடம் நேரே கேட்டிருந்தாலே கொடுத்திருப்பேன்.. பாவம்.

கண்கோனுக்கும் மற்றோருக்கும் கூட இவ்வாறே முயன்றுள்ளார்கள்.
எம்மைப் பற்றி எம் ரசனைகள் பற்றியாவது கொஞ்சம் தெரிந்திருந்தால் கடவுச் சொற்களை ஊகிப்பது இலகுவாக இருந்திருக்கும்..

அதுசரி மற்றவர்களின் மின்னஞ்சலகளைத் தோண்டித் துருவி என்ன செய்யப் போகிறார்கள்? ஏன் மற்றவர்கள் பற்றி ஆராய்வதே இவர்களின் வேலையாக இருக்கிறது?

இந்த கடவுச் சொல் களவாடும் வேலை ஆரம்பித்தது இன்று நேற்று அல்ல.. ஆரம்பத்தில் அநாமதேயப் பின்னூட்டங்கள் மூலமாகக் கேவலமான விஷயங்களைப் பரப்ப, சிலருக்கிடையில் பிளவுகளை பிரச்சனைகளை ஏற்படுத்த முனைந்தவர்கள் தான் பின்னர் இப்படி முயல்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.

பின்னூட்டங்கள் மூலமாக இதில் குறிப்பிடப்பட்டவர்கள் தவிர வேறு பலரைப் பற்றியும் அவதூறு பரப்ப முற்பட்டவர்/முற்பட்டவர்களின் IP + இதர விபரங்கள் எங்களுக்குத் தெரிந்தே இருந்தன ..
(ஆனால் எரிச்சல்.தாழ்வு மனப்பான்மை தவிர வேறு என்ன நோக்கம் அவர்களுக்கு இருந்தது என்று இன்று வரை தெரியவில்லை)


ஆஸ்திரேலியாவில் இருந்தே ஒரே குறித்த IPஇல் இருந்தே இந்த விஷம/தகாத பின்னூட்டங்கள் சிலரைக் குறிவைத்து எமதும் பலரதும் பதிவுகளுக்கு அனுப்பப்பட்டுக் கொண்டிருந்தன.
(இதுக்குள் வலைப்பதிவை முடக்குகிறேன், ஹக் செய்கிறேன் என்று மிரட்டல்கள் + முடிஞ்சாக் கண்டுபிடி என்று ஜம்பங்கள் வேறு)


VISITOR ANALYSIS
Referrerhttp://www.blogger.com/profile/03043239239939605371
Host Name123-243-127-139.static.tpgi.com.au
IP Address123.243.127.139 [Label IP Address]
CountryAustralia
RegionVictoria
CityHawthorn
ISPTpg Internet Pty Ltd.
Returning Visits0
Visit LengthMultiple visits spread over more than one day


VISITOR ANALYSIS Referrer http://www.blogger.com/profile/03043239239939605371 Host Name 123-243-127-139.static.tpgi.com.au IP Address 123.243.127.139 [Label IP Address]Country Australia Region Victoria City Hawthorn ISP Tpg Internet Pty Ltd. Returning Visits 0 Visit Length Multiple visits spread over more than one day


Tpg Internet Pty Ltd. (123.243.127.139) [Label IP Address]

Australia Hawthorn, Victoria, Australia, 2 returning visits


இத்தோடு இலங்கையின் கொழும்பிலிருந்தும், இடையிடையே யாழ்ப்பாணத்திலிருந்தும் சில குறித்த IPகளில் இருந்து சில விஷமப் பின்னூட்டங்கள் வந்துகொண்டே இருந்தன.

எனவே குறைந்தது இரண்டு பேர் இந்த வலையில் இருக்கிறார்கள் என்பது தெரிந்தே இருந்தது.
ஒன்றும் தெரியாத அப்பாவிகள் போல, நல்லவர்கள் போல இவர்கள் நட்புறவாடியது கண்டும் சிரித்துக் கொண்டேன்/டோம்.

சில மாதங்களுக்கு முன்னர் இருந்த பரபரப்பான (வேண்டத்தகாத சூழலில்) இவர்களை அப்பட்டமாக ஆதாரங்களோடு காட்டியும் இருக்கலாம்.
ஆனால் அதற்கும் ஆதாரங்களைப் பொய்யானவை என்று கூசாமல் கூறவும் இவர்கள் தயங்கார் என உணர்ந்தோம். தேவையில்லாமல் சேற்றுக்குள் உருள நான்/நாம் தயாரில்லை.

 இவை  பற்றியெல்லாம் பெரிதாக நாம் யாரும் அலட்டிக்கொள்ளாமைக்கான காரணம் தேவையில்லாமல் பதிவுலகில் இருக்கும் சர்ச்சைகளில் ஏன் நாமும் எங்கள் பங்குக்கு குழப்பத்தை ஏற்படுத்தவேண்டும்; பிரித்துக்கொண்டு அடிபட வேண்டும் என்று.

பதிவுலகப் பின்னூட்டங்கள், போலிக் கணக்குகள், அநாமதேயப் பின்னூட்டங்கள் சகஜமானவை;தவிர்க்க முடியாதவை என்பதனால் இவ்வளவு காலமும் அலட்டிக் கொள்ளவில்லை.

ஆனால் கொஞ்சம் அடங்கி இருந்த வெளிநாட்டு IPகாரர் இப்போது கொஞ்சம் தொழினுட்பத்தை/கறள் பிடித்துள்ள மூளையைத் தட்டி மீண்டும் விஷம அனானிப் பின்னூட்ட வேலைகளை ஆரம்பித்துள்ளார். நாள் ஒரு நாட்டு IPஇல் இருந்து..

இதே நபர் தனது வேலையை போலி Profileமூலமாக கன்கோனுடன் வாலாட்டுவதும் குறிப்பிடத் தக்கது.
எம்மில்/உங்களில் பலரின் பதிவுகளில் கன்கோன் என்ற போலி Profile மூலமாக பின்னூட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்.
http://www.blogger.com/profile/10226248193881788515

 (இவரது அதிமேதாவித்தன வேலைகளை IP இல்லாமலும் இவரது வழமையான சில அடையாளங்கள் (?), உடைந்துபோன ஆங்கிலம் மூலமாக யாவரும் இனம் கண்டுகொள்ளலாம்)

இப்போது மின்னஞ்சல்/வலைப்பதிவுகளின் கடவுச் சொற்களைக் களவாடும் நடவடிக்கையையும் ஆரம்பித்த பிறகு எல்லோரையும் எச்சரிப்பது எனது கடமையாகிறது.
எனவே தான் இந்த வருடத்தின் இறுதி நாளில் இதைப் பதிவாக அல்லாமல் அனைவருக்கும் ஒரு எச்சரிக்கையாகக் கொடுத்துள்ளேன்.

இவர்கள் திருந்திவிட்டோம்;வருந்துகிறோம் என்று சொல்லிப் பழக வந்தால் கூடப் பரவாயில்லை.
பிழையே செய்யவில்லை என்று போக்குக் கட்டி,நடித்து,விளக்கங்கள் சொல்லிக் கொண்டு போலி நட்புப் பூணும் நேரத்தில் என்னால் மனதில் இருப்பதை மறைத்துப் போலியாக வார்த்தைகளில் கனிவு+இனிப்பு தடவிப் பொய்யாக என்னால் பழக முடியாது.

மனதில் இருப்பதை நேரே கொட்டுபவன் நான். அதையே வலைப்பதிவுகளிலும் கடைக் கொண்டு வருகிறேன்.

நல்லவர்கள் என்று எல்லோரையும் நம்பிப் பழகும் அப்பாவிகள் பலரும் எம் வலைப்பதிவு சமூகத்தில் இருக்கும் நிலையில் இந்த நடிப்பு சிகாமணி நரிகள் யாரோ,எவரோ என்று அடையாளம் கண்டுகொள்வது உங்களுக்கும் நல்லது இல்லையா?

உண்மையிலேயே நல்லவர்களுக்கு கொஞ்சம் தொழிநுட்ப அறிவைப் பயன்படுத்தி உங்கள் வலைப்பதிவுகள்,மின்னஞ்சல்களைப் பாதுகாத்திடுங்கள். பல நூறு நல்லவர்களுக்கிடையில் இருக்கும் விஷக் கலைகளை அடையாளம் கண்டிடுங்கள்.

அவர்களுக்கு, புது வருடத்திலாவது திருந்துங்கப்பா..

இதை இந்த வருடத்தின் இறுதிப் பதிவாக இட மனம் ஒப்பவில்லை. ஆனாலும் நாளை முதல் எம் 'வெற்றி'யில் ஏற்படவுள்ள நம்பிக்கையான,புதிய மாற்றங்கள் மூலமாக தலையில் வந்து குவிந்துள்ள வேலைகளால் நேரம் தான் கைவசம் இல்லை. :)

பார்க்கலாம். நள்ளிரவு பன்னிரண்டு மணிக்குள் முடிந்தால் இன்னொரு பதிவுடன் வருகிறேன்...

எல்லா நண்பர்களுக்கும் எனது இனிய புது வருட வாழ்த்துக்கள் !!!!!
பிறக்கும் 2011 உங்கள் அனைவருக்கும் உங்கள் நல்ல மனங்கள் போல நல்ல வாழ்க்கையும் மகிழ்ச்சியும் தரட்டும்.

December 26, 2010

கொலைக்காற்று - 05

சுபாங்கனால் ஆரம்பிக்கப்பட்டு நண்பர்களால் தொடரப்பட்டுக் கொண்டிருக்கும் 'கொலைக்காற்று' மர்மத்தொடரின் ஐந்தாவது பாகத்தில் நான் இணைந்திருக்கிறேன்.

இதற்கு முந்திய பகுதிகள்...

கொலைக்காற்று - 01  தரங்கம் - சுபாங்கன்

கொலைக்காற்று - 02  எரியாத சுவடிகள் - பவன்
கொலைக்காற்று - 03  சதீஸ் இன் பார்வை - சதீஸ்


இதோ....

கொலைக்காற்று 
கட்டிலில்..
"ஜெனி கொலை செய்யப்பட்டிருக்கிறா.. அதுக்குப் பிறகு சேகர்.. உங்கட க்ளோஸ் பிரென்ட்.ஆனால் நீங்கள் கொஞ்சமும் அப்செட் ஆனா மாதிரித் தெரியேல்லையே.."
"அப்ப, என்னை நீ சந்தேகப்படுறியா வர்ஷா?"
"சொறி கௌதம்.. எனக்குக் குழப்பமா இருக்கு.." கண்கலங்கி,தலை குனிந்துகொண்டாள் வர்ஷா.

தளர்ந்துபோய் கலங்கி இருந்தவளை, நகர்ந்துசென்று கைகளால் முதுகை அணைத்து,ஆதரவாகத் தலையைக் கோதிக்கொண்டே,மெல்லிய குரலில்
"அப்செட் ஆகாமல் இல்லை டார்லிங்.. ஆனால் எனக்கு நெருங்கின இரண்டுபேரின் கொலைகள் என்டபடியால் தான் கொஞ்சம் யோசிக்கவேண்டி இருக்கு.. ஜெனி,சேகர் ரெண்டு பேரின் mobile போனுக்கும் நேற்று யோசிக்காமல் கோல் பண்ணிட்டேன். அது ரெண்டும் பொலிஸ்சிட்ட இருக்கும் எண்டு யோசிக்கேல்லை.நாளைக்கு எப்பிடியும் பொலிஸ் ஸ்டேஷன் போகவே வேணும்"

அறையின் ஏசிக் குளிருக்கு கௌதமின் அணைப்பு இதமாக இருந்தாலும், விது -பட விவகாரம் மனசில் கறையான்களின் அரிப்பைக் கொடுத்துக் கொண்டிருந்தது.கௌதமிடம் சொல்லலாமா? சொன்னால்  தன்னை நம்புவானா? கௌதம் நம்பினாலும் விது பதிலடியாக என்ன செய்வானோ? என்று பலப்பல சிந்தனைகள் கலங்கடித்துக்கொண்டிருந்தன.

"என்ன மகாராணி இன்னும் சந்தேகம் போல இருக்கே..விட்டா கௌதம் கொலைகாரன்  எண்டு நீயே பேப்பர்,ரேடியோ,டீவீக்கு நியூஸ் குடுத்துடுவாய் போல இருக்கே" சிரித்து சிரிக்க வைக்க முயன்றான் கௌதம்.

சிரிக்கும் மனநிலையில் இல்லாவிட்டாலும் இந்தநிலையில் சிரித்துவைக்காவிட்டாலும் கௌதம் மனம் நோந்துபோகும் என்பதற்காக மெல்லியதாக சிரித்துவைத்தாள் வர்ஷா.
"அடடா இதுக்கே சிரிப்பாய் என்று தெரிஞ்சிருந்தா குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறமாதிரி ஏதாவது ஜோக் சொல்லியிருப்பேனே" என்று அர்த்தபுஷ்டியோடு சொன்ன கௌதமின் பார்வை ஆசையோடு வர்ஷாவின் வளவள கழுத்தில் இருந்து கீழிறங்கி மேய ஆரம்பித்தது.


----------------------

கழுத்தா அது? கண்ணாடிக் குடுவை.தண்ணீர் அவள் குடிக்கும் நேரத்தில் வெளியே இருந்து வழுக்கி செல்வதைப் பார்க்கலாம் போல அவ்வளவு மென்மை.

பூமியில் உள்ள அழகிய பூக்கள் எல்லாம் சேர்ந்து திரட்டி பிரம்மன் செய்த பூப்பந்துகள் என்று வைரமுத்து வர்ணித்த அளவெல்லாம் இல்லை.ஆனாலும் பார்ப்பவர்களை மூச்சுமுட்ட செய்கிற அழகுகள் வர்ஷாவிடம் இருந்தன. பல்கலை நாட்களில் அவள் விளையாடும் வலைப்பந்தைக் காணக் கூடும் கூட்டமெல்லாம் பரிமாற்றப்படும் பந்தைப் பார்த்ததை விட அவள் நெஞ்சப்பந்துகளை வட்டமிட்டதை அவளும் அறிவாள்.

உடுக்கை இடுப்பு என்று தமிழிலும் Hour Glass என்று ஆங்கிலத்திலும் வர்ணிக்கப்படும் அம்சமான இடையும், உடலின் மேற்பாதியை சமன் செய்யும் வளைவு நெளிவுகளுடைய கீழ்ப்பாதியும் தக்கதொரு சிற்பியால் செய்த உயிருள்ள சிலையோ எனப் பார்ப்பவரை பார்க்க செய்யும்.

நினைவுகளும்,சூடான பெருமூச்சுக்களும் சேர்ந்துகொண்டே,
திருமணத்தின் பின்னர் புதிய அழகு பெண்களிடம் சேர்ந்துவிடுகிறது என்பது உண்மைதான். உடலெங்கும் புதிதாக தங்கமுலாம் பூசியதுபோல மினுமினுப்பாக இருந்த வர்ஷாவை மீண்டும் மனசில் ரீவைண்ட் செய்து செய்து மனத்தைக் கிளர்வுபடுத்திக்கொண்டு குளுகுளு ஏசி அறையின் மெதுமெது மெத்தையில் தனியாகப் புரண்டுகொண்டிருந்தான் விது.

கையில் இருந்த அந்தப் புகைப்படங்களை மீண்டும் எடுத்துப் பார்த்துக்கொண்டே
"அதிர்ஷ்டக்கார கௌதம்.. இப்ப தூக்கத்தால் இடையில் எழும்பி எத்தனையாவது ரவுண்ட் போறியோ" மனதுக்குள் கருவிக் கொண்டே மீண்டும் நூற்றுப் பதினெட்டாவது தடவையாக பெருமூச்சு விட்டுக் கொண்டான்.

வர்ஷு என்ன செய்வாள்? மிரட்டலுக்கு இணங்கி நாளை தானாக வருவாளா? இன்னும் ஏதாவது தான் இறங்கி செய்யவேண்டி ஏற்படலாமா? யோசித்துக்கொண்டே ஒரு கையில் பற்றவைத்த சிகரெட்டை வாயில் அமர்த்திவிட்டு, தன் டொஷீபா லாப்டாப்பைத் திறந்து நோண்ட ஆரம்பித்தான்.

வர்ஷு என்ற folderஐத் திறந்து ரகசியமாக எடுத்த படத்தில் அரைகுறையாக ஆபாசமாகத் தெரிந்த வர்ஷுவைக் காமத்தோடு விழுங்கிக்கொண்டே,"எத்தனை பேரடி இப்பிடி ஆரம்பத்தில் டிமாண்ட் காட்டிவிட்டுப் பிறகு மடங்கி இருப்பீங்க? பார்க்கிறேனே.. இங்கே ரூமைச் check out பண்ண முதல் உன்னை check out பண்றேன்" என்று பழைய சத்யராஜாக குரல் கொடுத்துக்கொண்டே, இப்பவே நெட்டில் ஏற்றிவைக்கலாமா,பிறகு பார்த்து ஏற்றிக்கொள்ளலாமா என்று யோசித்துக்கொண்டே இணைய இணைப்பிநூடாகத் தன் ஏதோவொரு fake profileஇல் loginஆகி இணையத்தில் எதோ ஒரு வம்பு வேலையைத் தொடங்கும் நேரம் அதிகாலை 3.55.

அறைக்கதவு மெதுவாகத் தட்டப்பட்டது.

-------------------------------
காலை 7.45
'நீல வானம்... நீயும் நானும் ' கௌதமின் செல்பேசி கமலின் குரலை அறையெங்கும் பரவவிட்டு போர்வைக்குள் கலைந்து,களைத்துக்கிடந்த கௌதம்+வர்ஷாவை எழுப்பியது.

அலுத்துக்கொண்டே "ஹெலோ" சொன்ன கௌதமுக்கு மறுமுனையில் எடுத்த நண்பன் சொன்ன விஷயம்
- அதே ஹோட்டலில் அதிகாலை நேரம் பயங்கரமாக சுடப்பட்டு இறந்துபோன இளைஞன் பற்றி...

விது பற்றி எனக்கும் உங்களுக்கும் வர்ஷாவுக்கும் தெரிந்த அளவு கௌதமுக்குத் தெரிந்திருக்காது போலும்.. இளவயதிலேயே இறந்துபோனவனுக்காகப் பரிதாபப்பட்டுக்கொண்டே

"என்ன இது நாங்கள் போற இடமெல்லாம் கொலை கொலையா நடந்துகொண்டே இருக்கு" என்று வர்ஷாவிடம் அலுத்துக்கொண்டே "வர்ஷாம்மா போலீசுக்குக் கோல் பண்ணி ஜெனி,சேகர் கொலைகள் பற்றிக் கேக்கப் போறேன்.எனக்குத் தெரிஞ்ச விஷயங்களை சொல்லப்போறேன்.இனியும் லேட்டாக்கினா உன்னை மாதிரியே அவங்களும் என்னைக் கொலைகாரன் லிஸ்ட்டில் சேர்த்திடுவான்கள்"
--------------------

"ஒரு கிழமைக்குள்ள மூன்றாவது கொலை.. இவனும் ஒரு softwareகாரன். ஏதாவது தொடர்பிருக்கலாமோ?" இன்ஸ்பெக்டர் சூரியப்ரகாஷ் தன் மனதிலிருந்த சந்தேகத்தை கான்ஸ்டபிளிடம் கேட்டே விட்டார்.

"சார் கொலையுண்டிருக்கிறவன் நேற்றுத் தான் இங்கே வந்து தங்கி இருக்கிறான்.கண்மூடித்தனம சுடப்பட்டிருக்கிறான். அவனுடைய லேப்டாப் சிதறியிருக்கு.இறந்து போன விதுரன் என்றவன்ட வோலேட் (wallet) தவிர வேற தடயங்கள் இல்லை"

"இவனைப் பற்றி இன்னும் விசாரிக்கவேணும்.அதுசரி முதல் ரெண்டு கொலைகளின் கை ரேகை ரிப்போர்ட்டுக்களை மறுபடி பார்க்கணும்.அந்த மொபைல் நம்பர்களுக்கு வந்த கோல் யார்ட்ட இருந்து வந்ததெண்டு கண்டுபிடிச்சாச்சா?" கேட்டுக்கொண்டே இருந்த சூரியப்பிரகாஷின் செல்பேசி கிணு கிணுத்தது.

கான்ஸ்டபில் மேசையில் கொட்டிக்கொண்டிருந்த விதுவின் வொலேட்டிலிருந்து நான்கைந்து கிரெடிட் கார்டுகள்,சில விசிட்டிங் கார்டுகள்,சில்லறைகளுடன் முன்னைய பலகலைக்கழக அடையாள அட்டை,தேசிய அடையாள அட்டை, ஐந்தாறு சிம்களுடன் இறுதியாக விழுந்தது ஒரு போட்டோ...

கொலைக்காற்று இனி ஆதிரை(ஸ்ரீகரன்)யின் தளத்திலிருந்து வீசும்.

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner