மேலிருந்து பாருங்கள் அழகு தெரியும்

ARV Loshan
10
"இருக்குமிடத்தில் இருந்து கொண்டால்.." என்ற கண்ணதாசனின் வரிகளை அடிக்கடி நாம் எடுத்துக்காட்டுகளாக கையாண்டாலும், எல்லா விஷயங்களுமே இருக்கும் இடத்தில் எங்கள் கண்களுக்கு அழகாகத் தோன்றுவதேயில்லை.. 

எங்கள் பூமியின் அழகு கூட அவ்வாறு தான்.. பூமியின் ஒவ்வொரு அம்சமும் அழகானது. எனினும் வெற்றுக் கண்களுக்கு அந்த அழகு புரிவதும் இல்லை;அந்த அழகை ரசித்து பருகுவதற்கு எமது பரபரப்பான சூழலில் நேரமும் வாய்ப்பதில்லை..

இந்தப்படங்கள் மின்னஞ்சல் மூலமாக எனது வெளிநாட்டு நண்பர் ஒருவர் அனுப்பியது.. வான்பரப்பில் இருந்து எடுக்கப்பட்ட இந்த ஒளிப்படங்களில் எங்கள் பூமியின் ஒவ்வொரு கோணமும் எத்தனை அழகு பாருங்கள்..

இந்தப் படங்கள் எவற்றுக்கும் மேலதிக வர்ண சேர்க்கை எவையும் செர்க்கப்படவோ,கணினியால் graphix வித்தைகள் எவையும் காட்டப்படவோ இல்லையாம்...

மேலிருந்து பார்க்கையில் மேலும் அழகு எமது பூமி.. ஒவ்வொரு இடமுமே கை தேர்ந்த ஓவியன் ஒருவனால் தீட்டப்பட்டு, அழகான,பொருத்தமான வர்ணக்கலவை கொடுக்கப்பட்ட சிறந்த ஓவியம் போல.. 

ரசியுங்கள்;வாழ்த்துங்கள் அந்தப் பெயர் அறியா கமெராக் கவிஞனை ..












Post a Comment

10Comments

Please Select Embedded Mode To show the Comment System.*