December 31, 2008

2008இன் சாதனை அணி தென் ஆபிரிக்கா

அவுஸ்திரேலியாவின் 16வருட சொந்த மண்ணில் தோல்வியுறாப் பெருமையைத் தவிடுபொடியாக்கிய தென்னாபிரிக்கா தான் இந்த 2008இன் அசகாயசூர அணி.

இந்த வருடத்தில் கிரேம் ஸ்மித்தின் தலைமையில் தென்னாபிரிக்கா 11 போட்டிகளில் வெற்றியை ருசி பார்த்துள்ளது. இரண்டே இரண்டு போட்டிகளில் மாத்திரமே தோல்வி. வேறெந்த ஒரு டெஸ்ட் கிரிக்கெட் அணியும் இந்த ஆண்டில் தென்னாபிரிக்காவை நெருங்க முடியவில்லை.

             மெல்பேர்னில் வென்ற உற்சாகத்தில் தென் ஆபிரிக்க வீரர்கள்

ஒரு வருடத்தில் ஒரு அணியால் வெல்லப்பட்ட அதிகமான போட்டிகள் டெஸ்ட் வரலாற்றிலேயே 11 தான். 1984இல் மேற்கிந்தியத் தீவுகளும், 2004இல் இங்கிலாந்தும் இதே சாதனையைப் புரிந்திருந்தன.

இதற்கு அடுத்த படியாக 10 டெஸ்ட் வெற்றிகளை ஓராண்டில் 3 தடவைகள் அவுஸ்திரேலியா பெற்றுள்ளது. 2002, 2004, 2006

இதுவரையில் தென்னாபிரிக்காவின் எந்தவொரு அணித்தலைவரம் அடையாத அரிய டெஸ்ட் தொடர் வெற்றி அவுஸ்திரேலியாவில் வைத்து டெஸ்ட் தொடரை வென்ற ஒரே தென்னாபிரிக்க தலைவர் ஸ்மித் மட்டும் தான்.

மெல்பேர்ன் மைதானத்தில் தென்னாபிரிக்கா 90களில் பின்னர் (இன ஒதுக்கல கொள்கைகளின் பின் மீள் வருகை புரிந்த பின் ) பெற்ற முதலாவது வெற்றியும் இதுவே.

இன்னமொரு குறிப்பிடத்தக்க விடயம் - கடந்த இரண்டாண்டுக்கும் மேலாக தென்னாபிரிக்கா எந்தவொரு டெஸ்ட் தொடரிலும் தோல்வி அயைவில்லை. இறுதியாக தென்னாபிரிக்காத் தோல்வியடைச் செய்த ஒரே அணி இலங்கை. 2006 ஜீலை மாதம்.

இந்தக் காலகட்டத்தில் 9 தொடர்களை வென்றதுடன், ஓரே ஒரு தொடரை சமநிலையில் முடித்துக்கொண்டது.

                            வேக இரட்டையர் - ந்டினி & ஸ்டைன்

இன்னுமொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால்,இந்த வருடத்தை எவ்வாறு தென் ஆபிரிக்கா ஆரம்பித்தோ அதே போலவே நிறைவு செய்துள்ளது.. 2008இல் அவர்களது முதலாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத்தீவுகளுக்கேதிராக கேப்டவுனில் 185என்ற இலக்கை மூன்று விக்கெட்டுக்களை இழந்து அடைந்தது..நேற்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 183என்ற இலக்கு.. ஒரே விக்கெட்டை இழந்து..

இதுபோல தென் ஆபிரிக்க அணித் தலைவரான ஸ்மித்துக்கு மேலும் ஒரு சாதனை கிடைத்துள்ளது.. நான்காவது இன்னிங்க்சில் வெற்றிகளைப் பெரும் வேளையில் கூடுதலான ஓட்டங்கள் பெற்றவர் என்பதே அது..
அவர் இவ்வாறு பெற்ற ஓட்டங்கள் 919.

அடுத்த படியாக வருகிறார்கள் ஹெய்டன் மற்றும் பொன்டிங் .

                                         சாதனைத் தலைவன் ஸ்மித்

இந்த வருடத்தில் அதிக ஓட்டங்கள் பெற்றவர் என்ற பெருமையும் ஸ்மித்துக்கே .. அவர் குவித்த 1656ஓட்டங்கள்(15 டெஸ்ட் போட்டிகளில்) இதுவரை கிரிக்கெட் வரலாற்றில் மூன்றாவது அதிகூடிய ஓட்டங்கள்..
மொகமட் யுஸுப் - 1788 (2006) 
விவ் ரிச்சர்ட்ஸ் - 1710 (1976) 

இவர் மட்டுமில்லாமல் இந்த ஆண்டில் தென் ஆபிரிக்காவின் எல்லாத் துடுப்பாட்ட வீரர்களுமே ஓட்டங்கள் குவிக்கும் மேஷின்களாக மாறியுள்ளார்கள்..இந்த ஆண்டில் ஆயிரம் டெஸ்ட் ஓட்டங்களைத் தாண்டியவர்கள் பத்துப் பேரில் நால்வர் தென் ஆபிரிக்கர்கள்..
ஸ்மித்,மக்கென்சி,டீ வில்லியர்ஸ், அம்லா..(ஏனைய அறுவரில் மூவர் இந்தியர்,மூவர் ஆஸ்திரேலியர்)

நாளை பிறக்க இருக்கும் 2009 தென் ஆபிரிக்க்காவுக்கு எப்படி இருக்கும் என்பதை எதிர்வரும் சனிக்கிழமை சிட்னியில் ஆரம்பமாக உள்ள டெஸ்ட் போட்டி எதிர்வு கூறும் என நம்பலாம்.. 


தோனியைக் காப்பாத்துங்க..


இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் மகேந்திர சிங் தோனிக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே கொலை அச்சுறுத்தல் இவருக்கு இருந்த நிலையில் தனக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு போதவில்லையென தோனி குறைப்பட்டத்தை அடுத்தே அவரது பாதுகாப்புக்கு இந்தியாவில் அதியுயர் பிரமுகர்களுக்கு வழங்கப்படும் இசட் (Z)பிரிவு பாதுகாப்பாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதையடுத்து தோனியைச் சூழ எந்நேரமும் பேர் கொண்ட ஆயுதம் தாங்கிய காவல் படையினர் காவல் காப்பர் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.

தோனிக்கு தாவூத் கும்பல் என்று கருதப்படும் ஒரு மர்மக் கும்பலிடம் இருந்து வந்த மிரட்டல் கடிதத்தை அடுத்தே இந்த உடனடி பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.அந்த மர்மக் கடிதத்தில் ஐம்பது லட்சம் இந்திய ரூபாய்கள் தங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று மிரட்டியுள்ளதாகவும் தோனி தெரிவித்துள்ளார்.

  நேற்று முன்தினமே தோனியின் வீட்டுக்கு இந்தக் கடிதம் வந்து சேர்ந்துள்ளது. அண்மையில் ஒரு நாள் தோனி தனது பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக தனியாகவே ராஞ்சி விமான நிலையத்திற்கு சென்றதாகவும், அதன் பின் தனது தனிப்பட்ட பாதுகாப்புக்காக 9 mm கைத் துப்பாக்கி ஒன்றைக் கோரியுள்ளதாகவும் தோனியின் நட்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எதிரணிப் பந்து வீச்சாளர்களை துப்பாக்கி இல்லாமல் துடுப்பாலேயே மிரட்டுகிற தோனிக்கே மிரட்டலா? 

கேப்டன் விஜயகாந்த் இந்தியாவில தானே இருக்கார்? கூப்பிடுங்க அந்தக் கேப்டனை இந்தியக் கேப்டனை காப்பாத்த..  

சரிந்தது அவுஸ்திரேலிய சாம்ராஜ்யம்


நேற்று மெல்போன் மைதானத்தில் தென்னாபிரிக்காவுக்கெதிராகக் கண்ட 9 விக்கெட் தோல்வியுடன் அவுஸ்திரேலியாவின் சொந்த மண் ஆதிக்கம் முடிவுக்கு வந்துள்ளது. 

16 ஆண்டுகளாக சொந்த நாட்டில் வைத்து எந்தவொரு தொடரையும் தோற்காதிருந்த டெஸ்ட், மற்றும் ஒருநாள் போட்டிகளில் முடிசூடி அணி அவுஸ்திரேலியா தென்னாபிரிக்கா அணியிடம் மண் கவ்வியுள்ளது.

இறுதியாக அவுஸ்திரேலியாவில் வைத்து டெஸ்ட் தொடரொன்றில் அவுஸ்திரேலியாவைத் தோற்கடித்த அணி மேற்கிந்தியத்தீவுகள். 1992 – 1993 பருவகாலத்தில் ரிச்சி ரிச்சட்ஸனின் தலைமையிலான அணி.

அந்த தொடரில்தான் இறுதியாக அவுஸ்திரேலியா, அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் தோற்றிருந்தது. நேற்றைய தோல்வியுடன் 16 ஆண்டுகளில் பின் மீண்டும் அடுத்தடுத்த இரு தோல்விகள்.

ஜாம்பவான்களின் விலகலுடன் (வோர்ன், மக்கிரா, லங்கர், மார்ட்டின்) அவுஸ்திரேலியாவின் தளம்பல் படிப்படியாக,வெளிப்படையாத் தெரிகிறது.

இந்திய மண்ணில் கண்ட தோல்விக்குப்பின் - இப்போது கிரேம் ஸ்மித்தின் - உத்வேகமிக்க இளைய தென்னாபிரிக்க அணியிடமிருந்து மரண அடி கிடைத்திருக்கிறது.

                 இந்தக் காலம் மறுபடி எப்போ வரும்? ஆஷஸ் வெற்றிக் கிண்ணத்துடன் - 2007 இல்

இன்னும் ஒரு போட்டி எஞ்சியிருக்கும் நிலையில் டெஸ்ட் தொடரை இழந்துவிட்டுப் பரிதாபமாக இருக்கும் அவுஸ்திரேலியாவில் பல பலிக்கடாக்கள் காவு கொடுக்கப்பட வரிசையாக நிற்கிறார்கள்.

மத்தியூ ஹேய்டனும், மைக்கேல் ஹசியும் நேற்று அறிவிக்கப்பட்ட சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ள சிட்னி டெஸ்ட் போட்டிக்கான 12 கொண்ட குழுவில் பெயரிடப்பட்டாலும் இவர்களுக்கான இறுதிவாய்ப்பாக அமையலாம்.

மக்கிராவுக்குப் பின் அவுஸ்திரேலியாவின் பிரதான வேகப்பந்து வீச்சாளராக மாறிய பிரெட்லீக்கும் மோசமான காலம். அணியிலிருந்து தூக்கப்படப் போகிறார் என்று பார்த்திருந்த வேளை அவரது பாதத்தில் ஏற்பட்ட காயம் வேறொரு புதியவருக்கு வாய்ப்பை வழங்கியுள்ளது.

ரிக்கி பொன்டிங் தலைமைக்கு இப்போதைக்கு ஆபத்தில்லை என்றாலும், இன்னனொரு மோசமான தொடர் நிகழும் பட்சத்தில் மைக்கேல் கிளார்க் அவுஸ்திரேலியாவின் புதிய தலைவராகலாம். இவ்வளவுக்கும் பொன்டிங் - மெல்பேர்ன் போட்டியில் பெற்ற ஓட்டங்கள் முதல் இனிங்சில் 101, இரண்டாம் இனிங்சில் 99.

காயங்களும் தம்பங்குக்கு அவுஸ்திரேலிய அணியை உலுப்பியெழுக்கின்றன. சகலதுறைவீரர் ஷேன் வொட்சன் முதுகு உபாதையால் 6 மாதம் விளையாடமுடியாது. அன்ட்ரூ சைமன்ட்ஸ் முழங்கால் உபாதையால் இருவாரம் ஓய்வு + சத்திரசிகிச்சை.

தொடர்ந்து அண்மைக்காலமாக சிறப்பாக பந்துவீசி வந்த ஸ்டுவார்ட் கிளார்க்கும் காயத்துடன் விலகி இருக்கிறார்.

இப்போதைக்கு சிறப்பாக விளையாடி வருவோர் நான்கே நான்கு பேர் தான்.. ரிக்கி பொண்டிங்,மைக்கேல் கிளார்க்,மிட்செல் ஜோன்சன்,சைமன் கடிச் ஆகியோரே அவர்கள்..

இந்திய அணிக்கெதிராகவும் இப்போது தென் ஆபிரிக்க அணிக்கெதிராகவும் பெற்றுள்ள தோல்விகளுக்குப் பிறகும் ஆஸ்திரேலிய அணி இன்னமும் முதலிடத்தில் இருந்தாலும் தோல்விகள்,காயங்கள் இவ்வாறே தொடர்ந்தால் வெகுவிரைவிலேயே இந்தியாவோ தென்னாபிரிக்காவோ முதலாமிடத்தை சுவீகரித்துக் கோள்ளப்போவது உறுதி. 

வானத்திலிருந்தாவது ஒரு சூப்பர் ஹீரோ வரமாட்டானா என்று ஆஸ்திரேலிய அணியும் எங்கும் காலம் இது.. 

வயதேறிச் செல்லும், வெற்றிபெறும் வழியறியாது தவிக்கும் அவுஸ்திரேலியாவுக்கு புது இரத்தம் பாய்ச்ச வேண்டிய நேரம் இது.

December 30, 2008

2008இல் அதிகம் தேடப்பட்டவர்கள்

இவ்வாண்டு (2008) இணையத் தேடுதளங்களில் ஒன்றான YAHOO – யாஹு மூலம் அதிகம் தேடப்பட்ட நபர்கள் / விஷயங்கள் இவை தான்.


1. பிரிட்னி ஸ்பியர்ஸ் : பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்தத ஒரு காலம் ( அந்தப் பாடல் வீடியோவாக வரும் போது சின்னத் துண்டு மட்டுமே அணிந்து வருவது எங்களுக்கு மேலும் குழுமை தரும் விஷயம் ) எனினும் அந்த வருடத்திலே இந்த பொப் தேவதை அதிகம் பிரபலமானத வேறு பல விடயங்கள் மூலமாக.
பொலிசால்
கைது, வைத்தியசாலையில் அனுமதி, மனநோய் இருக்கிறதா? எனப் பரிசோதனை, பின் தந்தையின் பாதுகாப்பு, முன்னாள் காதலருடன் மீண்டும் கும்மாளம் என்று பிரிட்னியின் வழியே தனிவழி.
இவ்வளவுக்குப் பின்னும் MTV விருதை
வென்றார். வுமனைசர் (Womanizer) என்ற இசைத்தொகுப்பு மூலம் சாதனைபடைத்தார். 27 வயதுக்குள் எத்தனை பரபரப்பு; எத்தனை ஆட்டங்கள்;

2. WWE : ரெஸ்லிங் (Wrestling) .போட்டிகளில் 2ம் இடத்தைப்பிடித்துள்ள WWE இந்த வருடம் ஏற்படுத்திய பரபரப்புகள் கொஞ்ச நஞ்சமில்லை. ஜீன் மாதம் மேடையில் ஏற்பட்ட குண்டு வெடிப்பு, கவர்ச்சி அழகிகளை மேடைகளில் தாராளமாகத் திரியவிட்டது, திட்டமிட்டு பரபரபாக்கி ஏற்படுத்தப்பட்ட சண்டைகள், புதிய வீடியோ கேம்ஸ், திரைப்பட வெளியீடுகள் என்று றுறுநு இணையத்தளங்களை அதிகமாகவே ஆக்கிரமித்தது.


3. பராக் ஒபாமா : 2008இன் மிகப்பெரிய கதாநாயகர்களில் ஒருவர். ஹிலரி கிளின்டனில் ஆரம்பித்து, இறுதியில் மக்கெய்ன் வரை தோற்கடித்த ஒபாமாவால், பிரிட்னியையும், றுறுநுயையும் மட்டும் இணையத் தேடலில் தோற்கடிக்க முடியவில்லை எனினும் ஒபாமாவின் இளைஞரைக் குறிவைத்த இணையத்தளம்/Facebook மூலமான பிரசார யுக்திகள் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்களில் புதுசு ஒபாமா புதுசு.

4.மிலே சிரஸ் (Miley Cyrus) : இந்த ஆண்டுக்கு முன்னர் டிஸ்னி தொடரான ஹன்னா மொன்டான (Hanna Montana) கதாநாயகியாகவே அறியப்பட்டிருந்த 15 வயது மட்டும் நிரம்பிய மிலே சிரஸ் - இவ்வருடத்தின் பரபரப்பு நாயகிகளில் ஒருவராக மாறியது ஒர சுவாரஸ்யமான கதை.
எதிர்கால ஹொலிவூட் நாயகி எனக் கருதப்பட்டவர். வனிட்டிஃபெயார் (Vanity Fair) என்ற சஞ்சிகையில் கொடுத்த மிகக் கவர்ச்சியான போஸ்கள் மூலம் பெரும் பரபரப்பைக் கிளறிவிட்டார். வெறுமனே ஒரு படுக்கை விரிப்புடன் இந்தப் பதினெட்டு வயது நிரம்பாத சிறுமி காட்டிய ஆபாச போஸ்களுக்கு – அமெரிக்காவிலேயே கடும் எதிர்ப்பு. பகிரங்க மன்னிப்பு கேட்டுத்தப்பித்தார். எனினும் இளைஞர் மத்தியிலும், இணையத்திலும் அதிகம் தேடப்படுபவரில் ஒருவராகிவிட்டார்.


5.RuneScape : (இணையத்தள விளையாட்டு) : பழைய வகைக் கணினிகளிலும் செயற்படக்கூடியது என்பது ஒரு மேலதிக தகுதி. புதிய கிராபிக்ஸ் யுக்திகள் மூலம் இவ்வருடத்தில் அதிகம் பேரை ஈர்த்தது. பலபேர் விளையாடக்கூடியது இதன் சுவாரஸ்யத்தை அதிகரித்துப் பலபேரைத் தேடவைத்தது. இதில் வெற்றிபெற உண்மையிலேயே பணத்தைச் செலவழிக்கும் கறுப்புச் சந்தை உருவானது பற்றிய சாச்சை ஒரு தனிக்கதை.

6.ஜெசிக்கா ஆல்பா : இவர் நடித்திருந்த 2007 திரைப்படங்கள் எவையுமே நன்றாகப் போகவி;ல்லை. அதைவிட மோசம், மிக மோசமான நடிகை விருதுக்காக 3 தடவைகள் நியமனம் பெற்றார். எனினும் இவர் பரபரப்பானதும், பிரபல்யமானதும் இவரது திருமண மற்றும் குழந்தையின் புகைப்படங்கள் வெளியான பின்தான். இந்தப்படங்கள் ழுமு சஞ்சிகையில் வெளியிடுவதற்கு இவர் பெற்றதொகை 1.5 மில்லியன் டொலர்கள்.

7.நருட்டோ - NARUTO : ஒரு கேம்; ஒரு மிருகம்; ஒரு பாத்திரம்; எது வேண்டுமானாலும் சொல்லலாம். நின்ஜாவில் வருகின்ற கற்பனாபாத்திரங்களில் ஒன்றான இந்த நருட்டோ இணையப் பாவனையாளர்களில் அதிக ரசிகர்களையுடைய பாத்திரமாக மாறியிருப்பது சாதனையே. நம்ம நமீதா, மேலைத்தேயக் கவர்ச்சி மொடல்கள் பலபேரையும் முந்தியிருப்பதானது பெரிய விஷயமில்லையா?

8.லின்ட்ஸே லோஹான் : கடந்த வருடங்களில் மிகப் பிரபலமாக இருந்து, பின் மிக மோசமான அவமானங்களுக்கு உட்பட்டு, தனது புகழின் இறங்குமுகத்தில் இருந்;து, 2005இல் ஓரளவு தன்னை சீரமைத்துள்ளார். லின்ட்ஸே லோஹான் அதிகம் தேடப்பட நல்ல காரணங்களுக்கும் உண்டு. விவகாரமான விஷயங்களும் உண்டு. அவர் அரசியல் பற்றிப் பதிவுகள் எழுதியது, புதிய மர்லின் மன்றோவாக போஸ் கொடுத்தது போன்றவையும். விவகாரமான விஷயங்களில் இரு திரைப்படங்களிலிருந்து நீக்கப்பட்டது, உலக இசைத்திருவிழாத் தொகுப்பாளராக இருந்து இடைநடுவே வெளியே அனுப்பப்பட்டது, பல புதிய காதல்கள் என்பவற்றையும் சொல்லலாம்.

9.ஏஞ்சலினா ஜோலி : ஒரு கனவு தேவதை, ஹொலிவூட்டின் அழகுராணி என்பதெல்லாம் கடந்து அன்பு அம்மாவாகப் பெருமைப் பெயர் பெற்றது. உலகின் பெருமை மிகுந்த ஃபோர்ப்ஸ் (Forbes) , கின்னஸ் போன்ற பதிவுகளிலும் இடம்பிடித்தவர். பல்வேறு பாத்திரங்களில் - ஒரு அதிரடி நாயகியாக – கார்ட்டூன் பின்னணிக்குரலாக புகழ்பெற்று மில்லியன் கணக்கான டொலர்களை உழைத்தாலும், ஒஸ்கார் (Oscar) விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டாலும் - எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிடும் புகழினை ஏஞ்சலினாவிற்கு தந்தது. இவரும் இவரது நட்சத்திரக் கணவர் பிராட் பிட்டும் இணைந்து நல்லகாரியங்களுக்கு வழங்கிய நன்கொடைதான்.
அந்தத்தொகை இலேசுப்பட்டதல்ல – 14 மில்லியன் டொலர்கள்.


10.அமெரிக்கன் ஐடல் - American Idol : 2007ம் ஆண்டின் அமெரிக்கன் ஐடல் தொலைக்காட்சி நிகழ்ச்சியை விட இவ்வாண்டு அமெரிக்க FOX தொலைக்காட்சி அதிக நேயர்களைப் பெற்றுத்தந்தது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ஏராளமான புதிய இளையவர்கள் வெளிவந்ததன் மூலம் இணையத்தேடுதலிலும் டொப் டென்னில் இடம்பெற்றுள்ளது.

December 28, 2008

நட்சத்திரமாய் ஒரு வாரம்..

மிகக் குறுகிய காலத்திலே தமிழ் மணத்தினால் நட்சத்திரப்பதிவராகும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு ஆனந்த அதிர்ச்சி!

ஒரு சில மாதங்களிலேயே எனது வலைத்தளமானது நிரந்தரமான வருகையாளர்களையும் நண்பர்களையும் ஈர்ந்தது எனக்குத் தெரிந்தாலும் கூட, பல பிரபல பதிவர்களுக்கே இதுவரை கிடைக்காத இந்த கௌரவம் வாய்ப்பு எனக்கு கிடைத்திருப்பதை தமிழ்மண நிர்வாகி மின்னஞ்சல் மூலமாக அறியத்தந்தபோது மிகவும் சந்தோஷமாக இருந்தது.

இந்த நத்தார் – புது வருட வாரம் வானொலியைப் பொறுத்தவரை மிகப்பரபரப்பான, வேலை கூடிய வாரம் என்ற காரணத்தினால் உடனடியாகவே எனக்கு ஒரு வார காலமாவது பிற்போட்டு இந்த வாய்ப்பைத் தருமாறு கேட்டேன்! எனினும் அன்பாக அதை மறுத்துவிட்டார். நானும் 23ம் திகதி எனது நட்சத்திர வாரம் ஆரம்பமாவதை மறந்தேவிட்டேன்!

எந்தவித முன்னாயத்தமும் இல்லை; தயாரிப்புகளோ, ஏற்கனவே எழுதி வைத்த பதிவுகளோ கைவசமிருக்கவில்லை. 23ம் திகதி பகலில் நான் போட்ட பதிவுக்கு (கிரிக்கெட் வீரர் பதிவரான ராசி..)
நண்பர்கள் பலர் "நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள்" எனப்பின்னூட்டம் போடத்தான் உறைத்தது! ஆகா... மறந்திட்டனே... இந்த ஒரு வார காலம் ஓடியதே தெரியவில்லை!

உண்மையில் தரமான பதிவுகளை நான் இட்டேன் என நம்பவில்லை! அதேவேளை நட்சத்திரமாகத் தெரிவுசெய்த தமிழ்மணத்தையோ, அங்கிருந்து வரும் அன்பர்களையோ ஏமாற்றி, சலிப்படையச் செய்துவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தேன்.
(வழமையாகவே வரும் தமிழிஷ்;, தமிழ்மண, என் நண்பர்கள், இதர வழிகள் மூலம் வருவோரையும் தான்)  

இதற்காகவே கொஞ்சமென்ன, அதிகமாகவே உழைத்தேன்!  
வழமையாக 10 -11 மணி நேரம் அலுவலக வேலை செய்பவன் மேலதிகமாக இன்னும் சிலமணிநேரம் அதிகம் செலவழித்தேன்; வீட்டிலும் இணையத்தில் கொஞ்சம் அதிகமாகவே இணைந்தேன். 
(புரிந்துணர்ந்து வழமைபோல் சகித்துக்கொண்ட மனைவி, குடும்பத்தினர், அலுவலக சக ஊழியர்களும் நன்றிக்குரியவர்களே )  

இந்த தமிழ்மண நட்சத்திர வாரத்தில் இந்த நன்றிப் பதிவுடன் மொத்தமாக நான் இட்ட பதிவுகள் 12.
அனைத்தையும் ரசித்தீர்களோ,சகித்தீர்களோ உங்கள் ஒவ்வொருவரது வருகையையும்,பின்னூட்டங்களையும் நான் சுகித்தேன்.. 
நன்றிகள்!!!
 
இந்த ஏழு நாட்களில் எனது தளப் பக்கம் வருகைகள் அதிகரித்திருப்பது உண்மையே! பல புதிய நண்பர்கள் கிடைத்துள்ளனர். புதிய அங்கீகாரம் கிடைத்திருப்பதாய் உணர்கிறேன்.
 
இன்னும் என்னிடம் நிறைய எதிர்பார்க்கிறீர்கள் - ஆனால் என்னால் முடிந்தளவு முயல்கிறேன்! எல்லாத் தரப்பினரையும் திருப்தி செய்வது என் நோக்கமில்லை! எனினும், என் தொழிலுக்கான முன்னுரிமை காரணமாக மேலுமிருக்கையிலேயே என் பதிவுகள் அரங்கேறும்.
 
இந்த வேளையில் எனது வருகைச் சுட்டி – வருகைகள் 50,000 தாண்டியிருப்பதை காட்டுகிறது.
மகிழ்ச்சி!  

இந்த நட்பு தொடர்ந்திருக்கட்டும்! உங்கள் வருகைகள் என் தளத்திற்கு எப்போதும் இருக்கட்டும்! (bookmark பண்ணிக்கோங்க! )
 
நல்லா இருந்தா பாராட்டுங்க (உண்மையிலேயே நல்லா இருந்தா) 
இல்லைன்னாலும் பின்னூட்டத்தில் திட்டுங்க! 

எனது வலையுலக எழுத்துப் பயணத்தில் நீங்கள் அனைவருமே மறக்கமுடியாதவர்கள்!
 
பி.கு : நான் உண்மை ஜனநாயகத்திலே மதிப்புள்ளவன் என்பதனாலேயே பின்னூட்டங்களை மட்டுறுத்தாமல் - பயன்படாமல் - யார் வேண்டுமானாலும் தங்கள் கருத்திடலாம் எனத்திறந்துவிட்டுள்ளேன்.  

இதனைத் தவறாகப் பயன்படுத்தி – பிரசாரம் கொண்டு செல்வதற்கும், வம்பிழுப்பதற்கும் - பிறரைப் புண்படுத்தவும் பயன்படுத்தாதீர் என நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
 
அத்துடன் அனானிகள் முடிந்தவரை பெயர்களையும் வெளியிடுமாறும் உரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
 
என்னைத் திட்டி வரும் பின்னூட்டங்களையும் கூட நான் வெட்டாமல் விட்டு வைக்கிறேன்.. அவை தகாத வார்த்தைகளாக இருக்காதவரை..

என் ஆக்கங்கள் பற்றிய காட்டமான விமர்சனங்களையும் ஏற்றுக் கொள்கிறேன். அவை வேறு யாரையும் பாதிக்காத வரை..

எனென்றால் நான் அடிக்கடி எழுவது போல, விமர்சனங்களுக்குப் பயப்படுவான் எந்த செயலையும் செய்யவும் கூடாது.. யார் பற்றியும் விமர்சிக்கவும் கூடாது..

நன்றிகள்..  
நட்புடன் லோஷன்!

கமல் தயவுசெய்து வேண்டாமே..

உலக நாயகன் கமல்ஹாசனின் மர்மயோகி திரைப்படம் முடக்கப் பட்டுவிட்டது என்ற அறிவித்தல் வந்து சில வாரங்கள் ஆகின்றன.. அடுத்த திரைப்படம் ஹிந்தியில் வெளிவந்தது பாராட்டுக்கள் வென்ற புதன்கிழமை அதாங்க The Wednesday என்ற திரைப்படத்தின் தமிழாக்கம் என்று நம்ம கேபிள் சங்கர் எழுதியிருந்தார்.. அதற்கு முதல் பிரபல தெலுங்கு,மலையாள நடிகர்களோடு 'தலைவன் இருக்கிறான்' என்ற படம் வெளிவர இருப்பதாக பேச்சுக்கள் அடிபடுகின்றன..

எனினும் இந்த அறிவிப்புக்கள் எல்லாம் வந்த நேரத்தில் நான் வேண்டிக் கொண்டதெல்லாம், (யாரை,எந்தக் கடவுளை என்றெல்லாம் கேக்காதீங்க.. எனக்கே யாரிடம் வேண்டினேன் என்று தெரியாது.. அதுவும் நாத்திகரான கமல் படத்துக்கேயா? ) அடுத்த கமல் படத்துக்காவது மானா('ம') எழுத்தில் பெயர் வைக்கக் கூடாதென்று தான்.. 

காரணம் அண்மையில் 'ம' எழுத்தில் ஆரம்பிக்கப் பட்ட இரண்டு கமல் படங்களுமே முடங்கிவிட்டன.. முதலில் மருதநாயகம், பின்னர் இப்போது மர்மயோகி..

இரண்டுமே பிரம்மாண்டத் தயாரிப்புக்கள் என்று பரபரப்புக் கிளப்பியவை.. இரண்டுமே கமலின் கனவுப் படைப்புக்களாகக் கருதப்பட்டவை.

பொன்னியின் செல்வன் போன்றதொரு தமிழ்க்காவியத்தை, அல்லது கிளாடியேட்டர் போன்றதொரு பிரம்மாண்டப் படத்தை தமிழில் எதிர்பார்த்த எம் போன்றோருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.. மொக்கைத் திரைப்படங்களுக்கும், மசாலாக் குப்பைகளுக்கும் கோடிக் கணக்கில் கொட்டிக் கொடுப்பவர்களால் இது போன்ற நல்ல,சவாலான முயற்சிகளுக்குக் கை கொடுக்க முடியாமல் இருப்பது தமிழரினதும்,நல்ல தமிழ்த் திரைப்பட ரசிகர்களினதும் தலைவிதியே அன்றி வேறொன்றும் இல்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது..

கமலின் 'ம' வரிசைத் திரைப்படங்களை எடுத்துக் கொண்டால், நல்ல திரைப்படமாக பாராட்டுக்களை வென்றாலும், வசூலில் படு மோசமாகத் தோற்றுப்போன 'மகாநதி' தான் ஞாபகத்துக்கு வரும்..அவ்வளவு அற்புதமான திரைப்படத்தை வெற்றி பெற வைக்க முடியாததற்கு ரசிகர்களான நாமே தான் வெட்கப்பட வேண்டும்..அதே திரைப்படம் இந்தக் காலகட்டத்தில் வெளிவந்தால் வெற்றி பெற்றிருக்கக் கூடும்.. 

அதே போல 'ம' வரிசையில் , 'மு' எழுத்தில் வெளியான மும்பை எக்ஸ்ப்றேசும் தோல்வியுற்றது.. அந்தத் திரைப்படத்தின் நகைச்சுவைகளும், சொல்லப்பட்ட சில சமூக நியாயங்களும் நம்மவருக்கு ஏற்புடையதாக இல்லை.. பல பேருக்கு திரைப்படம் புரியவே இல்லை.. 

கமலுக்கு அப்போ 'ம' சறுக்கல் தருகிற ராசியில்லாத எழுத்தா என்று அவசர அவசரமாக தேடியதில் சில விஷயங்கள் அகப்பட்டன..

ஆரம்ப காலத்தில் கமலின் சகல 'ம' எழுத்தில் ஆரம்பித்த திரைப்படங்களும் பேரு வெற்றியும் ,பாராட்டுக்களும் பெற்றன..

பாலச்சந்தரின் இயக்கத்தில் 'மரோசரித்திரா' (தெலுங்கு), மன்மதலீலை', 'மூன்று முடிச்சு', 'மூன்றாம் பிறை' என்று வரிசையாக எல்லாமே வெற்றி பெற்றவை..

அதன் பின் கமல் எடுத்த மிகப் பெரிய நகைச்சுவை திரைப்படம் மைக்கல் மதன காம ராஜன் கூட ம வரிசையில் இடம் பெரும் திரைப்படம் தான்..

கமல் ஒரு வித்தியாசமான வேடம் ஏற்று நகைச்சுவையில் பின்னியெடுத்த மகாராசன் கூட 'ம' வில் ஆரம்பித்த படம் தான்.. அதுவும் வர்த்தக ரீதியில் எதிர்பார்த்த வெற்றி தரவில்லை என அறிந்தேன்.. 

எனினும் அண்மைக்கால பெரிய சறுக்கல்கள் 'ம' எழுத்து கமலுக்கு ராசியில்லை என்ற கருத்தையே தருகின்றன..

இதைக் கமல் ஏற்றுக் கொள்வாரா தெரியவில்லை.. அவர் தான் மூட நம்பிக்கை மீது பெரிதாக நாட்டமில்லாதவர் ஆயிற்றே.. (ஆகா.. அது கூட 'ம' வரிசை தான்)

ஆனால் 
அன்புள்ள கமல், என்ன தான் இருந்தாலும் தயவுசெய்து அடுத்த படத்துக்கு 'ம' எழுத்திலே பெயர் வைக்காதீங்க.. கோடி புண்ணியமாகும்.. 

இதற்கிடையில் மர்மயோகியை சண் பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கி மீண்டும் எடுப்பதாக அறிந்தேன்... தமிழக நண்பர்கள் யாராவது உறுதிப் படுத்தினால் நல்லது..

     

மடோனா.. புதிய பரபரப்பு..

எவ்வளவு வயதானாலும் இன்னமுமே உலகின் கவர்ச்சிக் கடலாக (ஆகா, இதை விட நல்ல உவமை எனக்குக் கிடைக்கலப்பா) திகழ்ந்து கொண்டிருப்பவர் மடோனா! ஐம்பது வயதானாலும் அழகும்,கவர்ச்சியும் கூடுகிறதே தவிர குறைவதாக இல்லை..

எத்தனையோ பாடல்கள், நடனங்கள்.. அவையெல்லாம் உலகம் முழுவதிலுமே இளைஞர்களைக் கிரங்கடித்துள்ளன.. 
ஆனாலும் இவையெல்லாவற்றையும் விட மடோனாவைப் பற்றி எழுந்த பரபரப்புக்கள்,கிசு கிசுக்கள்,அவரது நிர்வாணப் படங்கள் தான் அதிகளவான பிரபல்யத்தை அவருக்கு வழங்கின என்று சொன்னால் யாரும் மறுக்கப் போவதில்லை. 

அதுவும் அண்மையிலும் கூட பிரபல அமெரிக்க சஞ்சிகையில் மடோனாவின் நிர்வாணப் படங்கள் வந்து பரபரப்பைக் கிளப்பின.. (நான் பார்த்துட்டனே.. ஆனாலும் இங்கே போட மாட்டேனே.. ;))

அதுவும் அண்மைக்காலத்தில் மற்றொரு பின்னணிப்பாடகியான பிரிட்னி ஸ்பியர்ஸுடன் பகிரங்கமாக மேடையில் உதட்டோடு உதடு முத்தம், தனது அரை நிர்வாண பொப் வீடியோவில் சம்ஸ்கிருதம் மந்திரம் பயன்படுத்தியது போன்ற சர்ச்சைகள் வேறு.

இதன் பின்னர் கடந்த மாதமளவில் இவர் இறுதியாக மணந்திருந்த இயக்குனர் கய் ரிச்சியை விவாகரத்து செய்ததுடன், அவருக்கு இழப்பீடாக (!) 76 மில்லியன் டொலர்களை பணமாகவும், சொத்தாகவும் வழங்கியதாகவும் பேச்சு அடிபட்டது.

இவ்வளவும் நடந்த பின்பும் இப்போது நத்தார் சிறப்பு நிகழ்ச்சிக்காக பிரேசில் சென்றிருக்கும் இந்தக் கவர்ச்சி கன்னி ( ஹீ... ஹீ கிழவி என்று சொல்லலாமா? ) ஒரு கட்டுமஸ்தான, இளமைத்துடிப்புள்ள, அழகான வாலிபன் மீது மையல் கொண்டு அவனுடன் ஊர் சுற்றிக் கும்மாளமடிப்பதாக பரவலான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த இளைஞன் பெயர் ஜீசஸ் லுஸ் (Jesus Luz).ஒரு அழகான, வளர்ந்துவரும் மொடல்.

                                                                           ஜீசஸ் லுஸ்
மடோனா இவன் மீது ரொம்பவே கிறங்கியுள்ளதாகவும், காணுமிடமெல்லாம் கடற்கரைகளில், கடைத்தெருக்களில் சுற்றுவதாகவும், பகிரங்கமாகவே முத்த மாரி பொழிவதாகவும் மடோனாவின் Sticky & Sweet நிகழ்ச்சியின் பிரேசில் ஏற்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

இவ்வளவுக்கும் ஜீசஸ் லுசுக்கு வயது 20!(அவனது அம்மாவை விட மடோனாவுக்கு வயது அதிகம்!!) 

இதிலேயுள்ள வேடிக்கையான அல்லது விவகாரமான விடயம், ஏற்கனவே மூன்று பிள்ளைகளுடைய மடோனாவுக்கு, வயிற்றில் இன்னுமொரு பிள்ளை உருவாகியுள்ளதாம். அதற்க மடோனா வைக்கவுள்ள பெயரும் ஜீசஸ் தானாம். (நத்தார் காலத்தில் ஜீசஸுக்கு வந்த சோதனை)

                                         பிரேசிலிய நிகழ்ச்சியில் மடோனா

இதற்கிடையே, மடோனாவுடன் உத்தியோகபூhவமாக எதிர்வரும் 2ம் திகதி விவாகரத்து வாங்கிய பின் இயக்குனரான கய் ரிச்சி, இம்ரான் கானின் முன்னாள் மனைவியும், பிரபல ஹொலிவுட் நடிகர் ஹக் கிரான்டின் முன்னாள் காதலியுமான ஜெமீமா கானுடன் சேர்ந்து வாழப்போவதாக லண்டன் கிசு கிசு வட்டாரங்கள் கூறுகின்றன.

இப்போதே இரண்டு பேரும் காதல் வளர்க்கின்றனராம்.

உண்மையிலேயே உலகம் கெட்டுத்தான் போச்சுப்பா.

December 27, 2008

அர்ஜுன ரணதுங்கவின் தில்லு முல்லுகள்

உலகக் கிண்ணத்தை இலங்கைக்கு பெற்றுக் கொடுத்தவர் என்ற ஒரே பெருமையுடன் பிரபல அரசியல்வாதியாக மாறியவர் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவரான அர்ஜுன ரணதுங்க.
ஏற்கெனவே அவரது தந்தையார் அரசியல்வாதியாகவும்,பிரதி அமைச்சராகவும் இருந்தாலும் அர்ஜுன தேர்தலில் நின்று பெருமளவு விருப்பு வாக்குகளை வெல்வதற்கு அவருக்குத் துணை வந்தது அவரது கிரிக்கெட் புகழே..

கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு அதிக விருப்பு வாக்குகளை வென்றவர்களில் ஒருவரான அர்ஜுனவிற்குப் பிரதி அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது. எனினும் தனக்கு விளையாட்டுத்துறை அமைச்சு வழங்கப்படவில்லை என்ற மனஸ்தாபத்தைப் பகீரங்கமாகவே வெளிப்படுத்தினார்.

அதன் பின்னர் தான் அர்ஜுனவின் கவனம் அவரது நீண்ட கால குறியான ஸ்ரீ லங்கா கிரிக்கெட் மீது திரும்பியது. அப்போது இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையாக லட்சக்கணக்கான ரூபாய் நட்டத்திலிருந்த அமைப்பை ஒரு கம்பெனியாக மாற்றி வெற்றிகரமாக இலாபகரமாக இயக்கிக்கொண்டிருந்தவர் திலங்க சுமதிபால.

சுமதிபால மீது பல ஊழல் குற்றச்சாட்டுக்கள் இருந்தபோதும் (யார் மீது தான் குற்றம் இல்லை) இவர் காலத்திலேதான் இலங்கையிலே கிரிக்கெட் துரித அபிவிருத்தி கண்டதும், அதிக லாபமீட்டியதும், சர்வதேச ரீதியில் இலங்கையின் கிரிக்கெட் அமைப்பிற்கு பெரும் அங்கிகாரம் கிடைத்ததும். (இந்தியாவின் ஜக்மோகன் டல்மியா போல)
 ஊடகவியலாளர்களைக் கேட்டால் சுமதிபாலவின் காலத்திலே கிடைத்த சலுகைகள், வசதிகளைப் புகழ்ந்து தள்ளுவார்கள். நல்லதொரு நிர்வாகி.

அவருடன் அவரது நிர்வாகக்குழுவில் இலங்கை அணியின் முன்னாள் உலகப்புகழ் பெற்ற துடுப்பாட்ட வீரர் அரவிந்த டீ சில்வாவும் இருந்தார்.

அர்ஜுன, திலங்க சுமதிபாலவுடன் தேர்தலில் போட்டியிட்டு படு தோல்வியடைந்தார். 
அப்படியிருந்தும் அர்ஜுனவின் தூண்டுதலில் பல்வேறு துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு சுமதிபால தலைமையிலான நிர்வாகக்குழு அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சினால் கலைக்கப்பட்டது.

பின்னர் இடைக்கால நிர்வாகக்குழுவின் கோமாளித்தனமான நிர்வாகம் ஆரம்பமானது.

அர்ஜுன இடைக்கால நிர்வாக சபைத்தலைவரானது இந்த ஆண்டில் ஜனவரி மாதத்தில். அனுபவம் வாய்ந்த ஒரு தலை சிறந்த கிரிக்கெட் வீரர் பொறுப்பேற்கிறார்ளூ இலங்கை கிரிக்கெட் உருப்படும் என்று நம்பிக்கை வைத்தோர் பலர்.

எனினும் அர்ஜுன ஆரம்பம் முதலே எடுத்த அதிரடி நடவடிக்கைகள் எல்லாமே குறுகிய நோக்குடையனவாகவும், பெரும்பான்மையோரின் அதிருப்தியையும் சம்பாதித்துக்கொடுத்தன.

அணித்தலைவராக இருந்தபோது ஒவ்வொரு வீரரதும் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருந்து, கட்டுக்கோப்பானதும், வெற்றிகரமானதுமான அணியைக் கட்டியெழுப்பிய அர்ஜுன கிரிக்கெட் சபையை பொறுப்பேற்ற பின் ஒரு சர்வாதிகாரியாகவே மாறினார்.

இலங்கையின் கிரிக்கெட் வளர்ச்சியில் பெரிய பங்களிப்பு செலுத்திய இந்திய கிரிக்கெட் சபையோடு பல தடவைகள் மோதி ஒற்றுமையை சீர்குலைத்தார்.


அர்ஜுன ரணதுங்கவின் மிக முக்கியமான தில்லுமுல்லுகள் - மாதவாரியாக


ஏப்ரல் : ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் ஊடகமுகாமையாளராகக் கடமையாற்றி வந்த (சிறப்பாக) சமந்த அல்கிம என்பவரை காரணமேதுமில்லாமல் பதவி நீக்கி, தனது கழகமான SSCயின் முன்னாள் கிரிக்கெட் வீரரான ஷேன் பெர்னான்டோ  என்பவரை அந்தப் பதவியில் அமர்த்தினார். 
பொறுப்பான பதவியில் ஒரு கறுப்பாடு வந்து சேர்ந்தது.

முதல் தடவையாக அரங்கேற்றப்பட்ட IPL உடன் மோதும் விதத்தில் பாகிஸ்தானுடன் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் ஏற்பாடு செய்யப்பட்டது.

IPL பற்றி கடுமையாக அர்ஜுன விமர்சித்து – சரத் பவாரைச் சீண்ட ஆரம்பித்தார்.

20-20 கிரிக்கெட் போட்டிகளை இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் என்று கிண்டல் வேறு!

ஜீலை – ஆகஸ்ட் : மீண்டும் இந்திய கிரிக்கெட் சபையைய் கோபமூட்டுகிறார். இலங்கையில் இடம்பெற்ற இந்தியாவுடனான டெஸ்ட் - ஒரு நாள் தொடர்களின் பரிசளிப்பு நிகழ்வுகளின் போது தடைசெய்யப்பட்ட அமைப்பான ICLஇல் விளையாடி வரும் இலங்கை வீரர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.

எதிர்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியின் தொகுதிவாரி அமைப்பாளர்களில் ஒருவரான, முன்னாள் இலங்கை விரர் ஹஷான் திலகரட்ணவை அர்ஜுன இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளராக நியமித்து இரு நாட்களில் அமைச்சர் பதவி விலக்குகிறார்.

செப்டெம்பர் : இது தான் அர்ஜுன சம்பந்தப்பட்ட மிகப்பெரிய சர்ச்சையாக கருதப்படுகின்றது. இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களின் கருத்துக்களைக் கேட்காமலே, யாருடைய ஆலோசனையையும் பெறாமல், 2009ம் ஆண்டு ஏப்ரல் - மே மாதங்களில் இங்கிலாந்துக்கு இலங்கை அணியை அனுப்புவதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபையுடன் (ECB) உடன்படிக்கை அர்ஜுனவினால் செய்யப்படுகின்றது.

இந்தக் காலகட்டத்திலேயே 2009ம் ஆண்டுக்கான IPL அணிக்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர்கள் அதிருப்பதியடைந்து, இங்கிலாந்திற்கு செல்வதற்கு மறுப்புத்தெரிவிக்கின்றார்கள்.

அர்ஜுன, கோமாளித்தனத்தின் உச்சத்திற்கே போய், அப்படியானால் இரண்டாவது கட்ட அணியொன்றை தான் இங்கிலாந்துக்கு அனுப்பப்போவதாக எச்சரிக்கை விடுத்தார்.

இவ்வளவும் விளையாட்டுத்துறை அமைச்சருக்குத் அறிவிக்கப்படாமலேயே நடந்தது.

மஹேல ஜெயவர்தன உட்பட வீரர்கள் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு முறையிட, அமைச்சரும், பின் ஜனாதிபதியும் தலையிட்டு இங்கிலாந்துக்கான தொடர் இரத்து செய்யப்பட்டது.

IPL ஒப்பந்தம் முலம் - பணத்தட்டுப்பாடுகொண்ட ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு பத்து வருஷத்தில் இந்தியக்கிரிக்கெட் சபை 70 மில்லியன் டொலர்கள் வழங்குவதாகவும் சொல்லியிருக்கிறது.

எனினும் ரணதுங்கவின் இந்தியத்துவேஷ நடவடிக்கைகள் மூலமும், சரத்பவர், IPLஐ உசுப்பேற்றியது மூலமும் ரணதுங்க தலைவராக இருக்கும் வரை இந்த ஒப்பந்தம் சாத்தியப்படாது என்று காட்டமாக அறிவிக்கின்றது.


ஒக்டோபர் : அர்ஜுன கிரிக்கெட் சபைத்தேர்தலில் போட்டியிட்ட போது ஆதரவு தந்த கழகங்களில் ஒன்றான (5 கழகங்கள் மாத்திரமே) பதுரெலிய 2ம் பிரிவிற்குத் தரமிறக்கப்பட வேண்டிய நேரத்தில் அர்ஜுனவின் தலையீட்டால் இடைக்கால நிர்வாக சபை தடுமாறுகிறது. 5 வார இழுபறிக்குப்பின் அர்ஜுன பணிந்து பேசுகிறார்.

இதற்கிடையே கனடா சென்ற இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளராக நிஷாந்த ரணதுங்க(இவர் அர்ஜுனவின் இளைய சகோதரர்) தெரிவுசெய்யப்பட்டது போன்ற பல சர்ச்சைக்குரிய நிகழ்வுகள்.


டிசெம்பர்: SLC(ஸ்ரீலங்கா கிரிக்கெட்) 16 ஊழியர்கள் காரணம் சொல்லப்படாமல் அர்ஜீனவினால் பணிநீக்கம் செய்யப்படுகிறார்கள். SLCயில் உடனடிமாற்றங்கள் தேவை என்பதே அர்ஜுன சொன்ன காரணம். அந்தப் 16 பேரும் விளையாட்டுத்துறை அமைச்சர் காமினி லொக்குகே, ஜனாதிபதியிடம் முறையிட, அர்ஜுனவின் உத்தரவு ரத்து ஆகிறது. 
அர்ஜுனவின் பதவி பறிக்கப்படுகின்றது. இடைக்கால நிர்வாக சபையும் கலைக்கப்படுகிறது. மீண்டும் ஒரு இடைக்கால நிர்வாக சபையா அல்லது தேர்தலா என்பதை இன்னும் ஒரு சில தினங்களில் விளையாட்டுத்துறை அமைச்சர் காமினி லொக்குகே அறிவிக்கவுள்ளார்.

அர்ஜுன ஆடிய ஆட்டங்கள், இலங்கைக் கிரிக்கெட்டையே அண்மைக்காலங்களில் ஆட்டங்காண வைத்திருந்தன.

இனியொரு கிரிக்கெட் தேர்தல் வந்தாலும் அர்ஜுன ரணதுங்கவால் வெற்றி பெறவே முடியாது என்பது வெளிப்படை.

எடுத்த கெட்ட பெயர்கள் போதும் அரசியலோடு மட்டும் நின்று கொள்ளலாம் என அர்ஜுநல்ல (எங்களுக்கும் கிரிக்கெட்டுக்கும்) முடிவு எடுப்பாரா?

மென்மேலும் சண்டித்தனங்கள் காட்டி இலங்கை கிரிக்கெட்டை தனிமைப்படுத்தி அதல, பாதாளத்தில் தள்ளப்போகிறாரா?

இதற்கிடையில் அண்மைய பதவி நீக்கத்தில் அதிருப்தியடைந்துள்ள அர்ஜுன ரணதுங்கவிற்கு, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அமைச்சர் பதவியொன்றை வழங்கலாம் என பரவலான பேச்சுக்கள் அடிபடுகின்றன.

அந்தப் பதவி விளையாட்டுத்துறை அமைச்சராக இல்லாதவரை நிம்மதிதான்.




December 26, 2008

வேற்றுக்கிரக ஜந்துக்கள் பூமியில் !!!


வேற்றுக் கிரகவாசிகள் என்றவுடனேயே வானத்தை அண்ணாந்து பார்த்து வானத்திலிருந்து பறக்கும் தட்டில் வந்திறங்கும் மனிதரைப் பற்றியே நாம் சிந்திக்கிறோம்.ஹாலிவுட் திரைப்படங்களில் வரும் வேற்றுக்கிரக வாசிகள் தான் எங்கள் கண் முன் நிற்கும் உருவங்கள்..ஆனாலும் பூமியிலே எங்கள் கால்களுக்குக் கீழே மில்லியன் கணக்கான கண்ணுக்குத் தெரியாத(இலகுவில் தெரியாத
),சில மில்லி மீட்டர்களே நீளமான பல உயிர்கள் (ஜந்துக்கள்,பூச்சிகள்) உலா வருகின்றன.. எனினும் நாங்கள் அவற்றைக் கூர்ந்து நோக்குவதில்லை..அவ்வாறான வேற்றுக்கிரக ஜந்துக்கள் போன்ற சில சிறிய உயிரினங்களை இன்று நாங்கள் அறிமுகம் செய்து கொள்ளலாம்.. (பயப்படாதீங்க.. கை குலுக்க எல்லாம் தேவை இல்லை)



வெளிநாடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட நவீன மினி ரோபோ மாதிரியுள்ள இந்த பூச்சி,சிகோபெத்ரா(Zygopetra) என்ற வகையைச் சேர்ந்த ஒரு வகைத் தும்பியினம்.. கண்கள் இரண்டும் பிரிந்து வேறு வேறு திசைகளைப் பார்க்கக் கூடியது..



ஆங்கில மாயாஜாலத் திரைப்பட வில்லன்கள் போலக் காணப்படும் இந்த அசிங்கமான மஞ்சள் ஜந்து, டசிசிரா புடிபுண்டா(Dasychira Pudibunda) என்ற பெயருடையது.. 




மனிதர்களை நீண்டகாலமாக ஏமாற்றிவரும் ஒரு அபாயமான ஜந்து இது..மஞ்சளாகவும், கருப்பாகவும் நிறம் மாறக்கூடியது... அப்பாவி விலங்கு என்று நினைத்து விஷக்கடிக்கு மனிதர் பலர் ஆளாகியுள்ளனர்.
இதன் பெயர் அப்பிடே(Apidae)



மம்மி ரிடர்ன்ஸ்/ லோட் ஒப் த ரிங்க்ஸ் படங்களில் வரும் உருவம் போன்ற இது ஒருவகை வெட்டுக்கிளி இனம். இதன் பெயர் டேட்டிகோனிடே(Tettigoniidae)



இன்னுமொரு வெட்டுக்கிளி வகை இது.. கொஞ்சம் வேகம்,துறுதுருப்பானது 



பார்க்கவே புதிராக இருக்கும் இது ஒருவகை தாவர சத்து உறிஞ்சி.. மேம்ப்ராசிடே(Membracidae)குடும்ப வகையைச் சேர்ந்த இந்த ஜந்து, தனது அலகுகளால் தாவரத்தின் தண்டுகளில் உள்ள சத்தை உறிஞ்சி எடுத்துவிடும்..



யாராவது ஹாலிவுட் இயக்குனர்கள் பார்த்தால் தமது அடுத்த வேற்றுக்கிரக வாசிகள் படத்தின் பிரதான பாத்திரத்துக்கு ஒப்பந்தம் செய்யும்படி இருக்கும் இந்த ஜந்து மிகவும் கபடமானது.. ஒரு பூ போல நடித்து தனது இரைகளை கப்பென்று பிடித்து விடும்..  



குழவிகளில் ஒரு வகை.. இந்தக் குழவிகள் பூமியில் பல மில்லியன் கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து வருபவை.
 

வெட்டுக்கிளியும், தும்பியும் கலந்த ஒரு வகை இது. கவசம் அணிந்த இராணுவ வீரன் போல இதன் தோற்றம் இருப்பது தான் இதன் விசேடம்.எனினும் பரிதாபமான விஷயம்,அதிகப் புரதச் சத்து நிறைந்த இந்த ஜந்து மேலை நாடுகளில் பல பேரின் உணவுத் தட்டுக்களில் விருப்பத்துக்குரிய உணவாக மாறிவருகிறது.


சதுரங்கக் காய்களில் மந்திரி போலவோ, லோட் ஒப் ரிங்க்ஸ் படத்தில் வரும் ஒரு மந்திரவாதி போலவோ காணப்படும் இது சுவர்க்கோழி இனங்களில் ஒன்று.. 

 

December 25, 2008

நான் ஹீரோ- வறுவல்கள்-கிளம்பீட்டான்யா

நான் ஏற்கெனவே காலையில் எழுதியிருந்ததைப் போல இன்று நானே வறுவல்களின் நாயகன் ஆன சம்பவங்கள் பற்றி எழுதுகிறேன்..
என்னோடு கௌரவ வேடங்களில் பிரபல இந்திய நட்சத்திரங்கள்.. 

#############

மெமரி பவர் 

99ஆம் ஆண்டு.. நான் ஷக்திFM இல் தொழில் புரிந்துகொண்டிருந்தேன்.. ஒரு மாபெரும் இசை நிகழ்ச்சிக்காக இசை அமைப்பாளர் தேவாவின் முழுமையான குழுவும் வந்திருந்தது. இவர்களோடு பாடகி சுஜாதா,பாடகர் கிருஷ்ணராஜ்,பாடகர் திப்பு (அப்போது அவர் மின்னலே,விரும்புகிறேன் படங்களில் மட்டுமே பாடியிருந்தார்) ஆகியோரும் வந்திருந்தனர்.

தேவா,கிருஷ்ணராஜ்,சுஜாதா ஆகியோரை நான் கலையகத்தில் நேரடியாக பேட்டி கண்டுகொண்டிருந்தேன்..
ரொம்ப சுவாரஸ்யமாக பேட்டி போய்க் கொண்டிருந்தது..
தேவா ஒரு இயல்பான மனிதர்.. எந்தக் கேள்வி கேட்டாலும் சளைக்காமல் பதில் சொல்லிக் கொண்டிருந்தார்..

அவர் பல பாடல்களை காப்பி அடிப்பது பற்றிக் கேட்டபோது கூட சளைக்காமல் "எல்லாக் கடைகளிலுமே தோசை தான் போடுகிறார்கள்.. ஆனால் எல்லாக் கடைத் தோசையும் ஒரு மாதிரி இல்லையே" என்று ஒரு போடு போட்டார். 

அவருடைய பல பாடல்களையும்,திரைப்படங்களையும் ஞாபகப் படுத்திய நேரம்,என்னுடைய தேடலையும்,தமிழ் உச்சரிப்பையும் தேவா மட்டுமல்லாது, கூட இருந்த கிருஷ்ணராஜ்,சுஜாதா இருவருமே மெச்சிப் பாராட்டினர்.

உச்சி குளிர்ந்து போனாலும், தொடர்ந்து கேள்விகளைத் தொடுத்துக் கொண்டிருந்தேன்..

அந்த நேரத்தில் என் உயிர் நீ தானே திரைப்படத்தில் இடம் பெற்ற தேவாவின் இசையில் கிருஷ்ணராஜ்,சுஜாதா பாடிய "ஜனவரி நிலவே நலம் தானா?" என்ற பாடல் எனக்கு மிகவும் மனம் கவர்ந்த பாடலாக இருந்தது;நேயர்கள் மத்தியிலும் அந்தப் பாடல் ரொம்பவே பிரபல்யம்..
அந்தப் பாடலுக்கு இசையமைத்தவர், பாடியோர் இருவர் என்று மூவருமே இருந்த காரணத்தால் பாட சொல்லி கேட்டேன்.. வரிகள் தெரியாதென்று சொல்ல, நானே எனக்கு மிகப் பிடித்த பாடலேன்ற காரணத்தால் ஞாபகித்து எல்லா வரிகளையும் எழுதிக் கொடுக்க, என்னைப் பாராட்டியபடியே நான் ரசிக்க,ரசிக்க பாடினார்கள்..

அந்த பாராட்டின் போதையிலே அதே போன்றதொரு பாடலைத் தேடிப் பிடித்து பாடச் சொல்லலாமென ஐடியா வந்தது.

அப்போது பிரபலமாகவிருந்த "எந்தனுயிரே..எந்தனுயிரே" என்ற உன்னருகே நானிருந்தால் திரைப்படப் பாடலை ஞாபகப் படுத்தி பாடச் சொன்னேன்.

"ஆகா.. உங்க மெமரி பவரே பவர்" என்று தேவாவும், க்ரிஷ்ணராசும் பாராட்டினார்கள். சுஜாதாவோ தனக்கு அந்தப் பாடல் வரிகள் ஞாபகம் இல்லை என்றார். மறுபடி ஐயா ஹெல்ப் பண்ணினார். 

பாடினார்கள்.. பேட்டியும் முடிந்தது..

ரொம்ப நட்போடு மறுபடி மாலையில் அடுத்த நாள் நிகழ்ச்சி ஒத்திகையில் சந்திக்கலாம் என்று விடை பெற்றுப் போனார்கள்..

அன்று பகல் அடுத்த நாள் இடம்பெறவிருந்த மாபெரும் மேடை நிகழ்ச்சிக்கான தொகுப்புக்காக தயார்படுத்திக் கொள்ள இசைத் தட்டுக்கள் வைக்கப்பட்டிருக்கும் களஞ்சிய அறைக்குள் சென்றபோது, தற்செயலாக உன்னருகே நானிருந்தால் பட இசைத்தட்டு கண்ணில் பட்டது..

அதில் எந்தனுயிரே பாடல் பாடியவர்கள் என்று அச்சிடப்பட்டிருந்த பெயர்கள்.. கிருஷ்ணராஜ்,சித்ரா.. 

####################

கிளம்பீட்டான்யா...

2006ஆம் ஆண்டு சூரியன் FMஇல் நான்.  அப்போது நான் முகாமையாளர்.ஒரு மேடை நிகழ்ச்சிக்காக நகைச்சுவை நடிகர் (விஜயகாந்துக்கு மட்டும் இவர் வில்லன்) வடிவேலு வந்திருந்தார்..

இரவு நேரம் எங்கள் பிரபலமான மாலை நிகழ்ச்சியில் இவரை நான் பேட்டி காண்பதாக ஏற்பாடு..கொஞ்சம் தாமதமாகத் தான் வந்தார்.. வரும் போதே பேட்டி களை கட்டும் என்பது அவர் கண்களிலே தெரிந்தது.. 

கண்களைக் குருடாக்கும் பிரகாசமான செம்மஞ்சள் சட்டையுடன் (இதுமாதிரியான நிறத்தில் ஆடைகளை அண்ணன் ராமராஜனும்,வடிவேலுவும் மட்டுமே அணிவார்கள்) வந்தார் வடிவேலு..

அவரது வழமையான கலகலப்புடன் பேட்டி களை கட்டியது.. தொலைபேசியில் நேயர்களும் வந்து வடிவேலுவிடம் கேள்விகள் கேட்டார்கள். தனது பிரபலமான திரைப்பட வசனங்களை வடிவேலு தனக்கே உரிய பாணியில் பேசி,நடித்து கலக்கினார். 

எனது கேள்விகளை ரொம்ப அவதானித்து சுவாரஸ்யமாகப் பதில் சொல்லிக் கொண்டிருந்தார்..ஒரு கொஞ்ச நேரத்தில் குரல் தழு தழுத்து, ரொம்பவே உணர்ச்சி வசப்பட்டவராக அவருக்கே உரிய மதுரைத் தமிழில் "உன் தமிழுக்கு நான் அடிமைய்யா..ரொம்ப அருமையா தமிழ் பேசுறே.. "அப்பிடி இப்பிடின்னு ஒரு பாராட்டு விழாவே நடத்தீட்டார்.

எனக்குப் பெரிய பெருமை தான்.. உற்சாகம் ரொம்பவே கூடிப் போச்சு..

வடிவேலுவின் சில வசனங்களை நானும் சொல்லிக் காட்டினேன்.. அவரும் ரசித்தார்..

சற்று நேரத்தில் தொலைபேசி வழியாக ஒரு பெண் நேயர்..

"வடிவேலு அண்ணனிடம் ஒரு கேள்வி" என்று கேட்டார்..

"என்னம்மா கேக்கப் போறே" - வடிவேலு.

"உங்க பிரபலமான வசனம் ஒன்று சொல்லுங்களேன்" அந்த நேயர்.

"என்ன வசனம்மா?" - வடிவேலு..

"கிளம்பீட்டான்  எண்டு சொல்லுவீங்களே ..அது " என்றார் அந்தப் பெண்..

அது என்ன வசனம் என்ற மாதிரி ,குழப்பமாய் என்னைப் பார்த்தார் வடிவேலு..அவருக்கு உதவி செய்யும் நோக்கில், கிட்டத் தட்ட அவரது ஸ்டைலில் "கிளம்பீட்டான்யா கிளம்பீடான்யா" என்று நான் சொன்னது தான் தாமதம்,தொலைபேசி அழைப்பிலிருந்த அந்தப் பெண்"நன்றி வடிவேலு அண்ணா.. அப்படியே படத்துல சொன்னது மாதிரியே இருந்துது" என்று அழைப்பை வைத்து விட்டார்..

வடிவேலு என்னைப் பார்த்த பார்வை இருக்கே,கிட்டத் தட்ட இப்ப விஜயகாந்தை அவர் பார்க்கிற மாதிரி.. 

நல்ல காலம் அவர் கவுண்டமணி இல்லை.. ;)


 

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner