"இருக்குமிடத்தில் இருந்து கொண்டால்.." என்ற கண்ணதாசனின் வரிகளை அடிக்கடி நாம் எடுத்துக்காட்டுகளாக கையாண்டாலும், எல்லா விஷயங்களுமே இருக்கும் இடத்தில் எங்கள் கண்களுக்கு அழகாகத் தோன்றுவதேயில்லை..
எங்கள் பூமியின் அழகு கூட அவ்வாறு தான்.. பூமியின் ஒவ்வொரு அம்சமும் அழகானது. எனினும் வெற்றுக் கண்களுக்கு அந்த அழகு புரிவதும் இல்லை;அந்த அழகை ரசித்து பருகுவதற்கு எமது பரபரப்பான சூழலில் நேரமும் வாய்ப்பதில்லை..
இந்தப்படங்கள் மின்னஞ்சல் மூலமாக எனது வெளிநாட்டு நண்பர் ஒருவர் அனுப்பியது.. வான்பரப்பில் இருந்து எடுக்கப்பட்ட இந்த ஒளிப்படங்களில் எங்கள் பூமியின் ஒவ்வொரு கோணமும் எத்தனை அழகு பாருங்கள்..
இந்தப் படங்கள் எவற்றுக்கும் மேலதிக வர்ண சேர்க்கை எவையும் செர்க்கப்படவோ,கணினியால் graphix வித்தைகள் எவையும் காட்டப்படவோ இல்லையாம்...
மேலிருந்து பார்க்கையில் மேலும் அழகு எமது பூமி.. ஒவ்வொரு இடமுமே கை தேர்ந்த ஓவியன் ஒருவனால் தீட்டப்பட்டு, அழகான,பொருத்தமான வர்ணக்கலவை கொடுக்கப்பட்ட சிறந்த ஓவியம் போல..
ரசியுங்கள்;வாழ்த்துங்கள் அந்தப் பெயர் அறியா கமெராக் கவிஞனை ..
10 comments:
Wow simply amazing! He must really be a cool photopgrapher! Though I couldn't quite place the 3rd photo...Hmm..thinking what it is.
:-))
:-)) :-)) :-))
Wow Really Super
அழகான படங்கள்..
கிராபிக்ஸ் தொழில்நுட்பம் போல இருக்கிறது லோசன். என்னதான் இந்தப்படங்களை இயல்பாக எடுத்திருந்தாலும், கணினி வரைகலை மூலம் தான் இப்படி மாற்றியிருக்க முடியும். சரிதானே?
வணக்கம் லோசன்
முதல்த்தடவை உங்கள் வாசலேறி வந்திருக்கிறேன்
அந்தப் பெயர் அறியா கமெராக் கவிஞனை .. வாழ்த்துவதோடு
வானொலிக்க் கலைஞர் உங்களையும் வாழ்த்துகிறேன்
சிநேகத்துடன்
ப.அருள்நேசன்
Mikka Azhagu
ஏன்னா டபிள் மீனிங்ல ஒரு தலைப்பு
Tx Mathu, That photo s a mountain top covered by ice glacier..
’டொன்’ லீ - :) :)
கலை - இராகலை :) :)
Anonymous - tx
VIKNESHWARAN நன்றி
tamil cinema //கிராபிக்ஸ் தொழில்நுட்பம் போல இருக்கிறது லோசன். என்னதான் இந்தப்படங்களை இயல்பாக எடுத்திருந்தாலும், கணினி வரைகலை மூலம் தான் இப்படி மாற்றியிருக்க முடியும். சரிதானே?//
நானும் அப்படித் தான் நினைத்தேன்.. ஆனால் எனக்கு அனுப்பிய நண்பர் இது ஒரிஜினல் படங்கள் தான்.. எந்த ஒரு செயற்கை சேர்க்கையும் இல்லை என்றார்..
நன்றி சகாராவின் புன்னகை/அருள்நேசன்
மிக்க நன்றி.. தொடர்ந்தும் அடிக்கடி வாருங்கள்.. எனது முன்னைய பதிவுகளையும் வாசித்துக் கருத்து சொலலுங்கள்
vetri நன்றிகள்
என்ன கொடும சார் - //ஏன்னா டபிள் மீனிங்ல ஒரு தலைப்பு//
உங்க பார்வையில பார்த்தா அப்பிடித் தான் தெரியுமையா.. என்ன கொடுமைடா இது.. (பரவால்லையே பசங்க ரொம்பத் தெளிவா இருக்காங்க..)
Post a Comment