December 28, 2008

கமல் தயவுசெய்து வேண்டாமே..

உலக நாயகன் கமல்ஹாசனின் மர்மயோகி திரைப்படம் முடக்கப் பட்டுவிட்டது என்ற அறிவித்தல் வந்து சில வாரங்கள் ஆகின்றன.. அடுத்த திரைப்படம் ஹிந்தியில் வெளிவந்தது பாராட்டுக்கள் வென்ற புதன்கிழமை அதாங்க The Wednesday என்ற திரைப்படத்தின் தமிழாக்கம் என்று நம்ம கேபிள் சங்கர் எழுதியிருந்தார்.. அதற்கு முதல் பிரபல தெலுங்கு,மலையாள நடிகர்களோடு 'தலைவன் இருக்கிறான்' என்ற படம் வெளிவர இருப்பதாக பேச்சுக்கள் அடிபடுகின்றன..

எனினும் இந்த அறிவிப்புக்கள் எல்லாம் வந்த நேரத்தில் நான் வேண்டிக் கொண்டதெல்லாம், (யாரை,எந்தக் கடவுளை என்றெல்லாம் கேக்காதீங்க.. எனக்கே யாரிடம் வேண்டினேன் என்று தெரியாது.. அதுவும் நாத்திகரான கமல் படத்துக்கேயா? ) அடுத்த கமல் படத்துக்காவது மானா('ம') எழுத்தில் பெயர் வைக்கக் கூடாதென்று தான்.. 

காரணம் அண்மையில் 'ம' எழுத்தில் ஆரம்பிக்கப் பட்ட இரண்டு கமல் படங்களுமே முடங்கிவிட்டன.. முதலில் மருதநாயகம், பின்னர் இப்போது மர்மயோகி..

இரண்டுமே பிரம்மாண்டத் தயாரிப்புக்கள் என்று பரபரப்புக் கிளப்பியவை.. இரண்டுமே கமலின் கனவுப் படைப்புக்களாகக் கருதப்பட்டவை.

பொன்னியின் செல்வன் போன்றதொரு தமிழ்க்காவியத்தை, அல்லது கிளாடியேட்டர் போன்றதொரு பிரம்மாண்டப் படத்தை தமிழில் எதிர்பார்த்த எம் போன்றோருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.. மொக்கைத் திரைப்படங்களுக்கும், மசாலாக் குப்பைகளுக்கும் கோடிக் கணக்கில் கொட்டிக் கொடுப்பவர்களால் இது போன்ற நல்ல,சவாலான முயற்சிகளுக்குக் கை கொடுக்க முடியாமல் இருப்பது தமிழரினதும்,நல்ல தமிழ்த் திரைப்பட ரசிகர்களினதும் தலைவிதியே அன்றி வேறொன்றும் இல்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது..

கமலின் 'ம' வரிசைத் திரைப்படங்களை எடுத்துக் கொண்டால், நல்ல திரைப்படமாக பாராட்டுக்களை வென்றாலும், வசூலில் படு மோசமாகத் தோற்றுப்போன 'மகாநதி' தான் ஞாபகத்துக்கு வரும்..அவ்வளவு அற்புதமான திரைப்படத்தை வெற்றி பெற வைக்க முடியாததற்கு ரசிகர்களான நாமே தான் வெட்கப்பட வேண்டும்..அதே திரைப்படம் இந்தக் காலகட்டத்தில் வெளிவந்தால் வெற்றி பெற்றிருக்கக் கூடும்.. 

அதே போல 'ம' வரிசையில் , 'மு' எழுத்தில் வெளியான மும்பை எக்ஸ்ப்றேசும் தோல்வியுற்றது.. அந்தத் திரைப்படத்தின் நகைச்சுவைகளும், சொல்லப்பட்ட சில சமூக நியாயங்களும் நம்மவருக்கு ஏற்புடையதாக இல்லை.. பல பேருக்கு திரைப்படம் புரியவே இல்லை.. 

கமலுக்கு அப்போ 'ம' சறுக்கல் தருகிற ராசியில்லாத எழுத்தா என்று அவசர அவசரமாக தேடியதில் சில விஷயங்கள் அகப்பட்டன..

ஆரம்ப காலத்தில் கமலின் சகல 'ம' எழுத்தில் ஆரம்பித்த திரைப்படங்களும் பேரு வெற்றியும் ,பாராட்டுக்களும் பெற்றன..

பாலச்சந்தரின் இயக்கத்தில் 'மரோசரித்திரா' (தெலுங்கு), மன்மதலீலை', 'மூன்று முடிச்சு', 'மூன்றாம் பிறை' என்று வரிசையாக எல்லாமே வெற்றி பெற்றவை..

அதன் பின் கமல் எடுத்த மிகப் பெரிய நகைச்சுவை திரைப்படம் மைக்கல் மதன காம ராஜன் கூட ம வரிசையில் இடம் பெரும் திரைப்படம் தான்..

கமல் ஒரு வித்தியாசமான வேடம் ஏற்று நகைச்சுவையில் பின்னியெடுத்த மகாராசன் கூட 'ம' வில் ஆரம்பித்த படம் தான்.. அதுவும் வர்த்தக ரீதியில் எதிர்பார்த்த வெற்றி தரவில்லை என அறிந்தேன்.. 

எனினும் அண்மைக்கால பெரிய சறுக்கல்கள் 'ம' எழுத்து கமலுக்கு ராசியில்லை என்ற கருத்தையே தருகின்றன..

இதைக் கமல் ஏற்றுக் கொள்வாரா தெரியவில்லை.. அவர் தான் மூட நம்பிக்கை மீது பெரிதாக நாட்டமில்லாதவர் ஆயிற்றே.. (ஆகா.. அது கூட 'ம' வரிசை தான்)

ஆனால் 
அன்புள்ள கமல், என்ன தான் இருந்தாலும் தயவுசெய்து அடுத்த படத்துக்கு 'ம' எழுத்திலே பெயர் வைக்காதீங்க.. கோடி புண்ணியமாகும்.. 

இதற்கிடையில் மர்மயோகியை சண் பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கி மீண்டும் எடுப்பதாக அறிந்தேன்... தமிழக நண்பர்கள் யாராவது உறுதிப் படுத்தினால் நல்லது..

     

22 comments:

சி தயாளன் said...

ஆகா..எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க..
கமல் கேட்டாரென்றால் அவ்வளவு தான்..

பெயரில் என்ன இருக்கு..தரமான படைப்பில் தான் எல்லாமே இருக்கு..

கிரி said...

//வசூலில் படு மோசமாகத் தோற்றுப்போன 'மகாநதி' தான் ஞாபகத்துக்கு வரும்//

லோஷன் மகாநதி தோல்வி படமல்ல, வசூலில் பெரிய அளவு லாபம் வேண்டும் என்றால் பெறாமல் இருக்க வாய்ப்புண்டு. அதன் தயாரிப்பாளரே தினத்தந்தி காலசுவடுகளில் நல்ல லாபத்தை கொடுத்ததாக கூறி இருந்தார்.

Anonymous said...

அண்ணா ரொம்பத்தான் பாவம் நீங்க ............
உங்களுக்காக நாமளும் வேண்டுறம் (யாரிடம் எண்டுதான் தெரியலை)

IRSHATH said...

குமுதத்தில் ஒரு முறை வந்தது

கமல் புலி மாதிரியான தயாரிப்பாளர்களை எல்லாம் ஆராய்ச்சி எலி ஆக பயன்படுத்துபவர் என்று..

இதுவே கமலின் முயற்சிகளுக்குக் கை கொடுக்க முடியாமல் ஒரு காராணமாக இருக்ககூடும். (கமல் யாராவது முதல் நடிகையை முத்தமிட தான் அவர்கள் பணம் பயன்படுகிறது :) )

மற்றும் கமல் படங்களில் அவர் வாக்களிப்பது எதுவும் இருப்பதில்லை.. சும்மா build up தான்.


இந்த brand addict மாதிரி star addict மனநிலை போனால் தான் நல்ல படம் எடுக்க நினைப்பார்கள்..

தசாவதாரத்தில் பத்து வேடத்துக்கும் எதாவஃது அர்த்தம் இருக்கிறதா.. அது பத்து நடிகர்கள் நடித்திருந்தால் குறைந்த செலவில் விரைந்து வெளியாகி லாபம் பார்த்திருக்கும். ஆளவந்தானில் மொட்டை கமல் பற்றி எவ்வலவு . ஆனால் மொட்டயில்லாமல் இருந்திருந்தால் கூட படம் அவ்வாறுதான் இருந்திருக்கும்..

இந்த விதயத்தில் அவருக்கும் ரஜனிக்கும் வித்தியாசமே இல்லை. கமல் முதலில் கதையா நம்பட்டும்..

Cable சங்கர் said...

//அதே திரைப்படம் இந்தக் காலகட்டத்தில் வெளிவந்தால் வெற்றி பெற்றிருக்கக் கூடும்.. //

கமலின் பலமும், பலவீனமும் அதுதான் பத்து வருடங்களுக்கு பின் வர வேண்டிய படங்களை முன்பே வழங்கிவிடுவார். அவர் எடுத்த ராஜபார்வையை பார்தவர்களுக்கு புரியும். இப்போது அந்த மாதிரியான படஙகள் எவ்வளவு வந்து வெற்றியடைகிறது என்று..

தமிழன்-கறுப்பி... said...

ஆஹா நல்லா சொல்றாங்கப்பா டீடெய்லு...:)

தமிழன்-கறுப்பி... said...

மஹாநதி...

என்னைப்பொறுத்தவரையில் உணர்வுகளில் பாதிப்பை கொடுத்த படம்...

குப்பன்.யாஹூ said...

லோஷன் உங்களிடம் இருந்து இப்படி ஒரு மூடப் பழ்க்கம் உள்ள பதிவை எதிர் பார்க்க வில்லை.,

கமல் நடித்த எத்தனையோ ' ம ' வெற்றி படங்கள் உள்ளன.

மைக்கேல் மதன காம ராஜன்
மகளிர் மட்டும்
மஹாநதி,
மன்மத லீலை


மகோன்னத கலைஞன் கமல் ஹாசன். இந்த மாதிரி என் கணிதத்திற்குள் அடைக்க முயல வேண்டாம் அந்த அற்புத கலைஞனை.

குப்பன்_யாஹூ

Anonymous said...

லோசன், மன்னிக்கவும் உங்களின் திறமையான அற்வுகூர்மையை இது போன்ற மூட பழக்க வழக்கங்களுக்கு செல்விடாதிர்கள்.

RAMASUBRAMANIA SHARMA said...

"NALLA PATHIVU"...ORU THEVERAMANA THIRU "KAMALAHAASAN" AVARKALIN RASIGARIDAMIRUNTHU....NAAM AVARATHU UNARVUKALAI NICHAYAM PARATTAVENDUM...DO NOT WORRY SIR, NOW A DAYS, THIRU KAMALAHAASAN, GIVES "MASTER PIECES" ONLY...OFCOURSE IT DEPENDS ON FANS OPINION, WHICH DIFFERS FROM TIME TO TIME...

RAMASUBRAMANIA SHARMA said...

Yes Pl...

Anonymous said...

கமலின் அபூர்வ சகோதரர்கள் படம் வெளியானபோது துபாயில் இருந்து வெளிவந்துகொண்டிருக்கும் ஆங்கில நாளிதழ் Khaleej Times இவ்வாறு எழுதி இருந்தது. Amithab Bachan is nothing infront of Kamal Hassen.

Sinthu said...

"மொக்கைத் திரைப்படங்களுக்கும், மசாலாக் குப்பைகளுக்கும் கோடிக் கணக்கில் கொட்டிக் கொடுப்பவர்களால் இது போன்ற நல்ல,சவாலான முயற்சிகளுக்குக் கை கொடுக்க முடியாமல் இருப்பது தமிழரினதும்,நல்ல தமிழ்த் திரைப்பட ரசிகர்களினதும் தலைவிதியே அன்றி வேறொன்றும் இல்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது.."
U r absolutely correct. This s the world.
one of Kamal fans......

Jude said...

நல்ல ஒரு பதிவு அண்ணா! அது சரி கமலின் ரசிகராக இருக்கும் உங்களுக்கு எப்படி இந்த நம்பிக்கை? irshath- நீங்கள் என்னதான் சொன்னாலும் கமல் ஒரு legend. அவரை சரியான முறையில் தமிழ் திரையுலகம் பயன்படுத்தவில்லை என்பதே உண்மை. தமிழ் திரைப்படத்துறையில் அது Mel Gibson ஆக இருந்தாலும் இதுதான் நிலைமை. :(

Anonymous said...

நான் பார்த்த கலைஞர்களில் திகைக்க வைத்தவர் கமல்.....

தசாவதாரம் பற்றி குறை கூறும் IRSHATH க்கு: chaos theory பற்றி தெரியாது என்று நினைக்கிறேன்... please read
http://anandaraj-kirukkalkal.blogspot.com/2008/06/dasavatharam-faqs-chaos-theory-and.html
http://anandaraj-kirukkalkal.blogspot.com/2008/07/dasavadharam-avatharsroles.html

தசாவதாரத்துக்கு பின்னால் எவ்வளவு research work இருக்கிறது என்று அறிந்து பேசுங்கள்....


நிலோசன் அண்ணா, "காஞ்சி வரம்" என்று ஒரு படம் வந்ததே அதை பற்றியும் பதிவு எழுதுங்கள்.... நான் அண்மையில் பார்த்து மலைக்க வைத்த அற்புதமான படங்களுள் ஒன்று.. இந்திய சுதந்திர போராட்ட காலங்களில் நெசவாளிவளின் வாழ்க்கை பற்றி பேசுவது... பிரகாஷ் ராஜின் நடிப்பு சொல்லி தெரிய வேண்டியதில்லை... Oscarக்கு தெரிவு செய்யப்பட்டதாக கேள்வியுற்றேன்... உண்மையா என தெரியாது....

Anonymous said...

கமல் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். அமரர் கல்கியின் 'பொன்னியின் செல்வன்' என்பது ஒரு அழியாக் காவியம். அதை மட்டும் தயவுசெய்து விட்டு விடுங்கள். அதைத் திரைப்படமாய் எடுக்க "யாராலுமே" முடியாது. நீங்கள் நல்ல நடிகரென்பதில் சந்தேகமேதும் இல்லை. ஆனால் இது மட்டும் வேணாம் அண்ணாத்தே...வுட்ரு. பாவம் நாங்க.

தசாவதாரம் ஒரு Chaos தியரி தான். அதான் அந்தப் படம் இப்படி ஒரு கேயோஸா இருக்கு. அந்த மேக்கப்பும் ஆளும், சேட்டைகளும், சகிக்கலை!

துபாய் நண்பரே, கமல் இஸ்லாத்தை தழுவியதாக ஒரு வதந்தி உண்டு. அதற்காகவே துபாய் பத்திரிக்கை அவருக்கு சலாம் போட்டிருக்கலாம். மைக்கேல் மதன...ஒரு மிகச்சிறந்த படம் என்பதில் ஒரு சந்தேகமும் இல்லை.

கமல் ஒரு சிறந்த நடிகர். அதுக்கு மேல ஒண்ணுமேயில்லை. ரொம்ப் பில்ட் அப் எல்லாம் குடுத்தா இப்படித்தான்.

ராஜ நடராஜன் said...

உங்கள் பதிவு முன்னுக்குப் பின் முரண்.இந்தமாதிரி பித்துக்குளித் தனமான assumption கமல் பார்த்தால் நிச்சயம் சிரிப்பை வரவழைக்கும்:)

Gajen said...

ஐயோ ஐயோ அய்யய்யோ...கையும் ஓடல காலும் ஓடல...கமல் பற்றிய பதிவு என்றதும் கட்டாயம் பதில் இடவேண்டும் என்று தோன்றியது.இதோ பதில் இட்டு விட்டேன்..நன்றி, வணக்கம்!!

லோஷன் அண்ணா, மர்மயோகியின் படப்பிடிப்பு வேலைகள் மீண்டும் தை 13 அன்று ஆரம்பிக்கவுள்ளதாக ஒரு செய்தியை வாசித்தேன்.எல்லா கமல் படங்கள் போன்று இதுவும் வதந்தியா என்று தெரியவில்லை.

கமல் பற்றிய விமர்சனங்கள் ஒன்றிரண்டை வாசிக்க முடிகின்றது.கமல் படத்தின் கதையில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூட யாரோ கூறி இருந்தார்.இதெல்லாம் எங்கு பொய் சொல்வது என்று தெரியாமல் தலையில் அடித்து கொண்டிருக்கிறேன்.

ARV Loshan said...

நன்றி நண்பர்களே.. நான் ஒன்றும் மூட நம்பிக்கைகளில் ஊறிப் போன மோட்டு ஜென்மம் அல்ல.. சும்மா யோசித்துப் பார்த்ததில் வந்த சில ஆச்சரியமான விஷயங்களை இங்கே பதிந்து,உங்களோடு பகிர்ந்து கொண்டேன்.. நிறையப் பேர் அதிருப்தியை,கோபம் கொண்டவர்களாக இங்கே பின்னூட்டம் போட்டதுடன், தனிப்பட்ட மின் அஞ்சல்கள் மூலமாகவும் தங்கள் கண்டனங்களையும் தெரிவித்தார்கள்..
எல்லோருக்கும் நன்றிகள்..

ஒரு விதத்தில் எனக்கு மிகுந்த சந்தோசம்..நம்ம உலக நாயகன் போலவே அவரது ரசிகர்களும் தெளிவான சிந்தனை உள்ளவர்களாக இருப்பது..
மகிழ்ச்சி..
வெறியர்களாகி விடாமல் ரசிப்போம்.. தெளிவாக சிந்திப்போம்..

ARV Loshan said...

டொன் லீ.. இல்லை பல தரமான படைப்புக்களும் ரசிகர்களால் நிராகரிக்கப் பட்டுள்ளன. கால,நேர சூழ்நிலைகளிலும் விஷயங்கள் உள்ளன..
மொக்கையான பல படைப்புக்கள்,பதிவுகள் கூட சூடான பெயர்களோடு ஹிட் ஆகி இருக்கின்றன..;)

கிரி, நீங்கள் சொன்ன பிறகு தான் அவ்வாறு அறிந்தேன்.. கமல் கூட என்னோடு ஒரு செவ்வியில் இந்தியாவில் விட இலங்கையில் மகாநதி,அம்பே சிவம் போன்றவை சராசரியாக ஓடியதாக சொன்னார்.

தூயா, :)

துஷா, யாரிடமாவது வேண்டினால் சரி.. ;)


இர்ஷாத்,
தயாரிப்பாளர்கள் அவ்வளவு இளிச்சவாயர்களா? நீங்கள் முதலில் சஞ்சிகைகளில் வருவதை அப்படியே வேதவாக்காக எண்ணும் மனநிலையை மாற்றுங்கள்..

இந்த முத்த விவகாரம்.. மற்றவர்கள் ஒழித்து மறைத்து செய்வதை கமல் நேரடியாகத் திரையிலே செய்கிறார்..இதையெல்லாம் இன்னமும் தூக்கிப் பிடித்து// ஹையோ ஹையோ..

தசாவதாரம்,ஆளவந்தான் எல்லாம் தமிழ் சினிமாவில் ஒவ்வொரு புதிய சோதனை முயற்சிகள்.. செய்து காட்ட ஒரு தில் வேண்டும்.. ஒன்று வெற்றி, இன்னும் ஒன்று தோல்வி.. அவவளவு தான்..

கதையை நம்பாமலா கமல் மகாநதி,அன்பே சிவம்,தேவர்மகன், இன்னமும் பல படங்கள் தந்தார்?
விருமாண்டி. மைக்கல் மதன கா.ரா , அபூ.சகோ கூட கதையுடன் கூடிய படங்கள் தான் நண்பரே..

கேபிள் சங்கர், ஆமாம் நண்பரே.. நீங்கள் சொன்னது மிகச் சரி.. ஒரு தசாப்தம் எல்லாவற்றிலும் கமல் முந்தி இருக்கிறார்.. (வாழ்க்கை நடைமுறையிலும் கூட)

நன்றி தமிழன்.. :)
மகாநதி நானும் கூடப் பலமுறை பல கோணத்துக்காகப் பார்த்த படம்(இந்தப் பதிவு போட்ட பிறக்கும் கூட)

நன்றி குப்பன்..
உண்மை தான்.. மகளிர் மட்டும் கமல் சின்ன வேடம் தான்.. மற்றப் படங்கள் பற்றி சொல்லியுள்ளேன்..
நான் அண்மைக்காலப் படங்கள் பற்றி மட்டுமே சொன்னேன்..

சித்தையா.. நன்றி எனக்கு அறிவு இருக்கு.. அதுவும் கூர்மையானது என்று சொன்னதுக்கு.. (அப்பாடா சமாளிச்சிட்டேன்)

ARV Loshan said...

நன்றி ராம்சுப்ரமனிய ஷர்மா.. ஆமாம்.. கமல் ரசிகனான என்னால் சில கமல் படங்களின் தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.. அதன் பாதிப்புத் தான் இந்த கோணம்.. ;)

செல்வராஜ், ஆமாம் பல நேரங்களில் எந்த ஒரு ஹீரோவும் கமலுக்கு ஈடாக முடியாது.. அந்த consisitency அவர் படங்களிலும் வேண்டும்.

நன்றி சிந்து..

ஜூட், அதான் நான். யார் ரசிகனாக இருந்தாலும் தனித்துவம் இருக்கும் இல்லையா? ;)
(சமாளிச்சிட்டனா?) உண்மை தான்.. அதே நேரம் கமல் அங்கிருந்தால் அவர் நிலைமையே வேற..

துஷ்யந்தன், நன்றி.. சில விஷயங்களின் ஆழங்கள் பலருக்குப் புரிவதில்லை..

காஞ்சிபுரம் பார்க்க எனக்கு இதுவரை கிடைக்கவில்லை.. கேள்விப்பட்டேன்.. ஒஸ்கார் பற்றித் தெரியாது.

ஐயா அனானி, நீங்கள் யாரென்று உங்கள் வாதங்கள்,வார்த்தைகள் மூலமாகக் காட்டிக் கொடுத்து விட்டீர்களே.. ;)
பொன்னியின் செல்வன் ஒரு அற்புதமான படைப்பு.. அதை இரு மணி நேரத் திரைப்படமாக அடக்குவது சிரமம் என்று கமலே சொல்லி இருக்கிறார்.. எனவே கவலை வேண்டாம் நண்பரே.. ;)
வெகு விரைவில் உங்களுக்குப் பிடித்த மாதிரி ரித்தீஷோ வேறு யாரோ அந்தக் கைங்கரியத்தை செய்யட்டும்.. ;)

chaos தியரி பற்றி எல்லாம் உங்களுக்கு விளங்கப்படுத்த அந்தப் பெருமானே தான் வரணும்.. ;)

பில்ட் அப்? ஹா ஹா.. இது தான் உங்க பிரச்சினையா?

நன்றி ராஜநாராயணன், எதை முரண் என்று சொல்கிறீர்கள்? cinema assumptions பித்துக்குளித்தனமாக இருக்கலாம் தானே.. ;) நன்றி வருகைக்கு,,

நன்றி தியாகி.. ஹா ஹா.. எல்லா விதமாகவும் கதைகள் வருகின்றன. எதை நம்புவது என்று தெரியவில்லை..

saravanan said...

kamal oru kalaigani.

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner