December 10, 2008

யாழ்ப்பாணம் - யார் கொடுத்த சாபம்?.. மழையின் தாண்டவம்..

அண்மையில் இலங்கையிலும் இந்தியாவிலும் புயலுடன் கூடிய மழை செய்த அட்டகாசங்கள் கொஞ்ச நஞ்சமல்ல!

சென்னையில் மழையின் அசுரதாண்டவம் பற்றி நானும் பல பதிவுகள்,புகைப்படங்கள் பார்த்தேன்.

யாழ்ப்பாணம் குடாநாட்டுப் பகுதியில் மழை புயலின் கோர தாண்டவத்தின் பதிவுகள் இதோ.

ஓவ்வொரு இடத்தினதும் குறிப்புக்களையும் தந்திருக்கின்றேன்.

நான் வாழ்ந்த இணுவிலின் வெள்ள சேதங்களும் இங்கு காணப்படுகின்றன.

பார்க்கும் போதே மனதை எதுவோ செய்தது – பிரிந்து வந்த 18 ஆண்டுகள் கழிந்த பின்னும் மனதில் நிற்கின்ற இடங்கள் இவை.

அதிலும் எமது வீட்டின் (அப்பா 83 – 84இல் கட்டியது) மேல் மாடிக் கூரை (அடிக்கடி அப்பாவின் 'வசந்த மாளிகை' என்று நாம் கேலி செய்வதுண்டு) அப்படியே புயலில் பறந்து விட்டதாம்.

பெருமையும் புகழும் பெற்ற இணுவில் ஆஸ்பத்திரியின் முன்னால் ஒரு அரசமரமும் கீழே பிள்ளையாரும் காட்சியளிக்கும் (என்னை விட அதிக காலம் இணுவிலில் வாழ்ந்தவர்கள் இது பற்றி நன்கு அறிவார்கள்.) அந்த அரசமரம் இந்தப் பாரிய புயலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் வேரறுந்து வீழ்ந்து விட்டதாம்!

வெள்ள சமுத்திரத்தில் மிதக்கும் யாழ்ப்பாணக் கோலம் இதோ!

யுத்தத்தை தொடர்ந்து யாழ்வாசிகளுக்கு மீண்டும் இந்த அவலங்கள்!

யார் கொடுத்த சாபமோ?

யாழ்ப்பாணம் பிரதான வைத்தியசாலை
                             

                                  அம்மன் வீதி - நல்லூர்
     யாழ் நகர ஸ்டான்லி வீதி

            யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதி
              யாழ் நகர ஸ்டான்லி வீதி

                       யாழ் புனித பரியோவான் கல்லூரி மைதானம்
                       யாழ் புனித பரியோவான் கல்லூரி மைதானம்
                     யாழ் புனித பரியோவான் கல்லூரி வளாகம்
                               யாழ்ப்பாணம் பிரதான பஸ் நிலையம்
                        யாழ்ப்பாணம் பிரதான பஸ் நிலையம்
                                        புராதனப் பெருமையும் அழிவுறா வரமும் பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வீதி
                   நல்லூர் கந்தசுவாமி ஆலய வெளிவீதி
                              பருத்தித்துறை வீதி - நல்லூர்
               ஆலய வீதி -  நல்லூர்
                          யாழ் unicef அலுவலக வெளிப் பகுதி - ஆலய வீதி
                      யாழ் சேவா லங்கா அலுவலகப் பகுதி
                                              நல்லூர்     
                               வேம்படி மகளிர் கல்லூரி - யாழ்ப்பாணம்
                   புராதனப் பிரசித்தி பெற்ற இணுவில் கந்தசுவாமி ஆலய முன்றல்
                          இணுவில் - எங்கள் அழகிய கிராமம் ஒரு சமுத்திரமாக
                         
                              இணுவில் கடைத் தொகுதி - காங்கேசன்துறை வீதி
                              இணுவில் கடைத் தொகுதி - காங்கேசன்துறை வீதி
                                  யாழ்ப்பாணம் பிரதான அஞ்சலகம்
                              இணுவில் கந்தசுவாமி கோவிலடி
                                     யாழ் நகர ஹட்டன் நஷனல் வங்கி 

                                  இணுவில் பொது நூலக முன்றல் 

                                இணுவில் பொது நூலக முன்றல் 
                             இணுவில் பொது நூலக முன்றல்
                                    இணுவில் - எங்கள் அழகிய கிராமம் ஒரு சமுத்திரமாக
    இந்தப் படங்களை எனக்கு அனுப்பிவைத்த என் தம்பி தவமயூரனுக்கும்,தம்பியின் நண்பரும் என்னுடைய தம்பி போன்றவருமான ரெஷாங்கனுக்கும் நன்றிகள்.                       

19 comments:

ஆட்காட்டி said...

பாத்திருக்கன். வேற எல்லா இடத்திலேயும் பண்டடிச்சா தண்ணி எப்படி ஓடும்?

KarthigaVasudevan said...

மழையின் கோரத் தாண்டவம் ஒவ்வொரு வருடமும் இருக்கத்தான் செய்கிறது...அதற்கான முன்னேற்ப்பாடுகள் குறித்த சமயோசிதம் தான் எப்போதுமே நம் மக்களிடம் இல்லை.எதையும் தாங்கி வாழப் பழகுவது ஒரு சில நேரங்களில் ஏற்றுக் கொள்ளத் தக்கதாக இல்லை என்பதை இத்தகைய இயற்க்கை சீற்றங்களின் போது மக்கள் படும் அவலங்கள் உணர்த்துகின்றன.

Anonymous said...

முறையான வடிகால் வசதி இல்லை என்று நினைக்கிறேன்! நீங்கள் திரு மகிந்த அன்ட் பிரதர்ஷ் பிரைவேட் லிமிட் டில் புகார் செய்யவும்!அவர் பரிசீலனை என்று ஏதாவது பம்மாத்து காட்டுவார்.. படங்களை பார்க்கும் போது யாழ்பாணம் எங்க ஊர் திருவண்ணாமலை போல இருக்கும் என நினைக்கிறேன்..

ஆட்காட்டி said...

இல்லை. திருவண்ணமலை மாதிரி இருக்காது. நான் அங்கு வந்திருக்கன்,இங்கு வாழ்ந்திருக்கன்.

கானா பிரபா said...

இயற்கையும் தன் ஆட்டத்தைக் காட்டுது :(

உண்மைத்தமிழன் said...

லோஷன்..

இயற்கையை யாரால் வெல்ல முடியும்..?

ஒவ்வொரு நாட்டிலும், ஏதாவது ஒரு காலத்தில் இயற்கை தன் கைவரிசையைக் காட்டித்தான் ஆகும்.

புகைப்படங்கள் அனைத்தும் அருமை. இவ்வளவு கஷ்டமான சூழ்நிலையிலும் அதனை எடுத்து அனுப்பியிருக்கும் தம்பிகளுக்கு எனது நன்றிகளைத் தெரிவியுங்கள்.

Anonymous said...

அண்ணா Bangladesh வந்து இன்னும் ஒரு வருடம் கூட ஆகவில்லை.
We didn't hear any good news from there but we can heat so much bad news from there. Not only human make many problem there but also nature make many problems.

Anonymous said...

யாழ்ப்பாணத்தில் இவ்வளவு வெள்ளத்துக்கும் காரணம் வடிகால்களை மூடியது தான். இதிலும் பிரதான பங்கு சிறிலங்காவின் இராணுவத்தையே சாரும்.

Barathy

ARV Loshan said...

ஆட்காட்டி, மிஸஸ்.டவுட்,attack pandiyan, கானா பிரபா, உண்மைத் தமிழன்,Sinthu,anony

வருகைகளுக்கும் ஆதங்கப் பகிர்வுகளுக்கும் நன்றிகள்..

சி தயாளன் said...

சனம் தான் பாவம். எல்லாப் பக்கத்திலும் அடிவாங்க வேண்டியதாக இருக்கு.

(படங்களில் இருப்பவர், என் நண்பர். அப்போது யாழில் இருந்த அவரால் இந்தப் படங்கள் எனக்கு கிடைத்திருந்தன)

Hisham Mohamed - هشام said...

ஒரு அனர்த்தம் அல்லது ஒரு சம்பவம் நிகழ்ந்தவுடன் அதற்கான காரணங்களை தேடும் நம் சமூகம் அதற்கான தீர்வை அடுத்த கட்ட நடவடிக்கையைப்பற்றி யோசிப்பது குறைவு. அதனாலோ என்னவோ பாதிப்புகள் அதிகரிக்கின்றன.... (பாதிக்கப்பட்ட மக்களைப்பற்றி கொஞ்சம் யோசிங்கப்பா)
(எவன் செஞ்சிருப்பான். எதற்காக செஞ'சிருப்பான் எவனால நடந்திருக்கும் இப்படி பல பிரச்சினைகள் நம்ம ராமசாமிக்கு...)

Anonymous said...

Oh God!
Water everywhere. நண்பரே, கவலை வேண்டாம். இயற்கை எப்போதுமே ஒரு சமநிலை கொண்டிருக்கும். தற்போதுள்ள பயங்கரவாதத்திற்கு தன்னாலான வகையில் இயற்கை தடை ஏற்படுத்தி மக்களின் கவனத்தை திசை திருப்பிக் கொண்டிருக்கிறது போலும்.

Anonymous said...

வாழ்வில் ஒவ்வொரு இன்பம் வரும் முன்பும் ஒரு துன்பம் வந்தே அகும் இதுவே உலக நியதி ஆகும். நல்ல காலங்கள் பிறக்கும் முன்பு துன்பங்கள் வருவது இயற்கை விதித்த எழுதா விதி. விடியலை எதிர்பார்த்து காத்திருப்போம் நம்பிக்கையுடன்.....

ARV Loshan said...

நன்றி டொன் லீ, ஹிஷாம், அனானி,இயற்கையன் (பெயரிலேயே ஒரு மலைப்பா?)

அப்படியா, நானும் யாரடா இந்த வெள்ளத்திலும் நனைவதிலும் ,வெள்ள மட்டம் பார்ப்பதிலும் அக்கறையான ஒருத்தான் என்று பார்த்தேன்.. உங்கள் நண்பர் தானா? ;)

ஆமாம் ஹிஷாம், எதுவும் வந்த பிறகு தானே நம்மவர் எல்லோரும் யோசிக்கிறோம்?வரமுதல் எதுவும் செய்யும் எண்ணம் வராதே..
அதுசரி, ராமசாமி யாரு?உங்க கிட்ட காரை வாங்கிட்டு ஏமாந்து போய் நிக்கிறாரே அவரா? ;)

அனானி,ம்ம்ம்ம் நீங்கள் சொல்வதும் இயற்கையின் கோணத்தில் சரியாய் இருக்கலாம்.. ஆனால் மக்களின் அவதி எப்படியும் உண்டு தானே..

இயற்கையன், என்னால் விடியலை வெற்றி FM மூலமாக மட்டுமே இப்போது தமிழ் பேசும் மக்களுக்கு ஒவ்வொரு நாளும் தரமுடிகிறது.. ;)

Anonymous said...

மரத்துப்போன இதயம் கொண்ட மக்களுக்கு இது ஒன்றும் பெரிய பாதிப்பாக இருக்காது!!!!!!
குண்டு மழைக்கு பதில்?????
மீண்டு வருவார்கள்

Anonymous said...

உள்ளதினூடாக தான் உலக சமாதானம். வெற்றி எப் எம் இன் அளப்பரிய பணிக்கு நன்றிகள். முதலில் தமிழ் மக்களிடையே உள்ள களைகளை களைய வேண்டும். அனைவரின் மனதிலும் உறுதியான ஒற்றுமையை விதைக்க வேண்டும். அந்த கணத்தில் தான் இயற்கையும் எம் வலிமைக்கு தலை வணங்கும். எம்மிடம் இருந்த அனைத்தையும் தொலைத்தும் எம்மிடம் இன்னும் எஞ்சியிருப்பது உறுதி தளரா தன்னம்பிக்கை மட்டுமே. அந்த அரும் பெரும் செல்வத்துடன் நம்பிக்கையாய் நடப்போம்.....விடியும் சூரியன் அந்தோ தெரிகிறது.....

தமிழ் விரும்பி said...

இயற்கை கூட எம்மை விட்டுவைக்கவில்லை. இருந்தும் போதிய வடிகால் வசதி இல்லை என்ற குறை பரவலாக கதைக்கப்படுகிறது. ஆனால் காரணம் தேடினால் யாழ்.கோட்டைக்கு அருகான பிரதேசங்களில் எல்லாம் "உள்ளுக்க புகுந்துடுவாங்களோ" எண்ட பயத்தில போடப்பட்ட "அணைகள்(பண்ட்)" தான் காரணம் என சொல்லப்படுகிறது. முட்கம்பி வேலிகளுக்குள் குப்பைகள் அகப்பட்டு தண்ணீரை தடுத்தது என்பதுதான் நிலைப்பாடு. இயற்கையா? செயற்கையா?

Rajashahul said...

pathu nimisathuku pinnadi vara rayiluku gate moodarom.adutha masam vara examku ippave padikarom.Ana oru varam munnadiye puyal varudhu terindhum aduku endha munnerpadum yarum panrathila.Anubavikirom.

Anonymous said...

வெற்றுத் தகரத்திலும் கப்பல் கட்டித் தமிழினம் வாழும் என்பது தெரிகிறது. அது தெரிந்துதானே இத்தனை தொல்லைகள்.
துணிந்து நில் தொடர்ந்து தமிழினம் வாழ்ந்து கொண்டிருக்கும் எங்கள் சொந்த ஊர்களில்.
வெள்ள நிவாரணப் பணிகள் செய்ய ஆசை.முடியவில்லையே எங்களால்.
என்னசெய்ய?
ஆறுதல் வார்த்தைகள் பலப் பல......

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner