மு.கு - எழுத ஆரம்பித்து பின் முடித்த நேரத்துள் நள்ளிரவு கடந்ததால் நேற்று,இன்று,நாளைகள் குழம்பி இருக்கலாம்.. குழம்பாமல் வாசியுங்கள் நண்பர்ஸ்.. :)
காலி டெஸ்ட் போட்டி மழை காரணமாக நேற்றைய ஒரு முழு நாள் தின்னப்பட்டும் கூட இன்னும் உயிருடன் இருக்கிறது.
ஒரே காரணம் பந்துவீச்சாளர்கள்.
இஷாந்த் ஷர்மா இன்றைய நாளின் ஆரம்பத்தில் இலங்கையின் துடுப்பாட்ட மத்திய வரிசையை சிதறடித்து இந்தியாவுக்கு தெம்பூட்டி இருந்தார்.
இலங்கை நானூறு ஓட்டங்கள் தாண்டவே நாய் படாப்பாடு படவேண்டி இருக்கும்போல என்று எண்ணியவேளையில் தான்(393/7) இலங்கையின் பந்துவீச்சாளர்கள் தமது துடுப்பால் இலங்கையை முதலில் காப்பாற்றி,பின்னர் இந்தியாவைக் காத்திருக்க வைத்துக் கடுப்பாக்கினர்.
வேகமாகத் துடுப்பெடுத்தாட முற்பட்டு பிரசன்னா ஜெயவர்த்தன ஆட்டமிழந்த பிறகு (அண்ணே பிரசன்னா கொஞ்சம் பார்த்து விளையாடுங்க.. அனலிஸ்ட் கங்கோன் சொன்னது போல சந்திமால் பின்னாலேயே வெயிட்டிங்) வழமையான பந்துவீச்சாளர்கள் ரங்கன ஹேரத்தும்,லசித் மாலிங்கவும் துடுப்பாட்ட வீரர்களாக மாறி வெளுத்து வாங்கினர்.
இடத்தும் வலதுமாக 23 ஓவர்களில் 115 ஓட்டங்கள்.
இப்படியொரு அணியும் வாய்ப்பும் கிடைக்குமா?
கிடைக்கிறபோதே அடிச்சுக்கலாம்..
இவர்கள் இருவருமே தமது கன்னி அரைச் சதங்களைப் பூர்த்தி செய்துகொண்டார்கள்.
ஏற்கெனவே ஒருநாள் முழுதாகத் தீர்ந்துபோன நிலையில் ஹேரத்தை சங்கா சதம் அடிக்க வாய்ப்புக் கொடுக்கவில்லை.
முரளியின் வாணவேடிக்கை கொஞ்ச நேரம் பார்க்கலாமென்றால் அதுவும் ஏமாற்றம்.
ஆனால் வந்து நின்ற கொஞ்சம் நேரத்தில் தனது Trademark shotகளை கொஞ்சம் கொஞ்சம் sampleகாட்டினார்.
மைதானமெங்கும் விஸ்வரூபமாய் முரளி..
முரளிக்கு மரியாதை...
இன்று பந்துவீச்சாளர்களுக்கான நாள் என்பதை மீண்டும் நிரூபித்தனர் மாலிங்க &முரளி.
மாலிங்க துடுப்பாட்ட வீரர் கம்பீரை LBWஇல் இரண்டே ஓட்டங்களுடன் அனுப்பிவைத்தார்.
சச்சின் இலங்கை ஆடுகளங்களில் தொடர்ந்து தடுமாறி வருவதை முரளி மீண்டும் நிரூபித்தார்.
சாதனை மன்னர் சச்சின் இலங்கையில் வைத்து 2000ஆம் ஆண்டுக்குப் பிறகு இன்னும் டெஸ்ட் சதத்தை பெறவில்லை.
ஏன் ஒரு அரைச் சதம் கூட இல்லை.
கடந்த பத்து ஆண்டுகளில் இலங்கையில் அவரது டெஸ்ட் சராசரி அண்ணளவாக 15.
ஒரு உலக சாதனையாளரை இன்னொரு உலக சாதனையாளர் வீழ்த்தி இருக்கிறார்.
முரளிக்கு இன்னும் எண்ணூறுக்குத் தேவை ஏழு :)
இன்று கலக்கியிருந்த மற்றுமொரு பந்துவீச்சாளர் அறிமுக வீரர் அபிமன்யு மிதுன்.
நான்கு விக்கெட்டுக்கள்.
இஷாந்த் சர்மாவையே வெளு வெளு என்று விளாசித் தள்ளிய நேரமும் மிதுன் கட்டுப்பாடாக பந்துவீசியிருந்தார்.
ஹேரத்,மாலிங்க தவிர இன்று துடுப்பாட்டத்தில் கலக்கிய இன்னொருவர் பந்துவீச்சிலும் ஒரு விக்கெட் எடுத்த சேவாக்.
நான் முன்பே நினைத்தது,யாரோ ஒருவரின் பதிவில் பின்னூட்டத்தில் சொன்னது போல சேவாக் காலியில் கலக்கி இருக்கிறார்.
தனியோருவராக நின்று அதிரடித்தார்.
முரளியை ஆறு ஒன்றோடு வரவேற்றார்.
அந்த நேரம் தொலைக்காட்சியில் முரளியின் மனைவி மதிமலரின் முகம் போன போக்கு.. அது ஒரு கவிதை :)
98 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 85 ஓட்டங்கள். இலங்கை வெல்வதைப் பற்றி எண்ணுவதாக இருந்தால் நாளை ஆட்டம் ஆரம்பித்தவுடனேயே சேவாகை சரித்துவிட வேண்டும்.சதம் அடித்தாரோ பிடிக்க முடியாது.
மழை விட்டுக் கொடுத்தால் இலங்கை வெல்ல இங்கிருந்து முயலலாம்.320 ஓட்டங்களுக்குள் இந்தியாவைக் கட்டுப்படுத்தி Follow on வழங்கி கடுமையாக முயன்றால் மட்டுமே ஒரு முடிவைப் பெறக் கூடிய வாய்ப்பு.
அத்தோடு முரளிக்கும் விடை பெறும்போது 800 தாண்டிய பெருமையும் கிட்டும்.
நாளையும் மழை பெய்யாமல் ஆட்டம் நடந்தால் வியாழன் இறுதிநாள் ஆட்டம் பார்க்க காலி செல்லும் ஐடியா உண்டு.
முரளியின் டெஸ்ட் வாழ்க்கையின் இறுதி நாளில் மைதானத்தில் நிற்க ஆசைப்படுகிறேன்.
-------------------------
இன்று மாலையில் இன்னொரு பரபர விஷயமும் கிடைத்தது..
ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டுக்கும் வீரர்களுக்கும் இடையில் இருந்துவந்த பேரம்பேசும் போட்டி ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டினால் வெற்றி கொள்ளப்பட்டுள்ளது.
கிரிக்கெட் வீரர்கள் தமக்கு பத்துவீத ஊதிய உயர்வு வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். அது முடியாது ஐந்துவீதம் தான் தரலாம் என்று சபை தெரிவித்திருந்தது.
இப்போது ஐந்துவீதமே வழங்கப்படும். மீதி பிறகு பார்க்கலாம் என்ற இறுதி முடிவு எட்டப்பட்டு விட்டது.
வீரர்கள் ரொம்பவே நல்லவர்கள். மேற்கிந்தியத் தீவுகள் மாதிரி பிடிவாதம் பண்ணி ஸ்ட்ரைக் அடிக்க மாட்டார்கள்.
சும்மா விசாரித்துக் கணக்குப் பண்ணியதில், ஒப்பந்த அடிப்படையில் முதலாம் தரத்துள் வரும் சங்கா,முரளி,மஹேல முதலானோருக்கு மாதமொன்றுக்கு சம்பளம் மட்டும் இலங்கை ரூபாயில் பத்து லட்சம் கிடைக்குமாம்.
போட்டிக்கான ஊதியங்கள்,அலவன்ஸ்,விளம்பரப் பணம் இதெல்லாம் வேறு..
ம்ம்ம்ம் கொடுத்து வைத்த playboys .. sorry players என்று சொன்னேன்..
சின்ன வயதிலேயே cricket practice போன நேரமெல்லாம் படி படி என்று A/L காலத்தில் தடுத்து நிறுத்திய அப்பாவே,அம்மாவே.. இதையும் வாசியுங்கள்..
17 comments:
செவாக் காலியில் அடிக்கலாம் என்று நீங்கள் சொன்னது என் பதிவின் பின்னூட்டத்தில் தால். :(
எனக்கு வெலகெதர இன்று பெரும் ஏமாற்றம். :(
மலிங்க செவாக்கிற்கு drive செய்ய பந்தே கொடுக்காமல் செவாக்கை பவுண்சர்களால் பின்நகர்த்த, செவாக் மறுமுனையால் ஓட்டங்களைப் பெற்றது தான் மலிங்கவிற்கு செவாக்கின் விக்கற் வாய்ப்பு இல்லாமல் போனது. :(
ஹம்பீரின் விக்கற் - வழமையான ஹம்பீர் பாணி ஆட்டமிழப்பு.
// இஷாந்த் ஷர்மா இன்றைய நாளின் ஆரம்பத்தில் இலங்கையின் துடுப்பாட்ட மத்திய வரிசையை சிதறடித்து இந்தியாவுக்கு தெம்பூட்டி இருந்தார். //
நிறைய நாட்களுக்குப் பிறகு அழகாக பந்துவீசினார். :)
மலிங்கவின் முதலாவது முதற்தரப்போட்டி அரைச்சதம் என்று நினைக்கிறேன். :)
முரளியின் கட் அவுட் அருமை.
வர்ணவீர(?) இற்கு நன்றிகள்...
மைதானத்தை அழகாக்கி இருக்கிறார்.
இந்திய வீரர்களின் மரியாதை சிறப்பு.
நன்றிகள். ;)
// இலங்கை இரண்டாம் இன்னிங்க்ஸ் ஆடாது.. அப்பிடியே ஆடினாலும் முரளிக்கு துடுப்பெடுத்தாடக் கிடைக்காது என்று அவ்வளவு நம்பிக்கையா தோனி & கோ? //
Lol... :D
// சாதனை மன்னர் சச்சின் இலங்கையில் வைத்து 2000ஆம் ஆண்டுக்குப் பிறகு இன்னும் டெஸ்ட் சதத்தை பெறவில்லை.
ஏன் ஒரு அரைச் சதம் கூட இல்லை. //
கடைசி 5 இனிங்ஸ்களில் 4 முறை LBW... :D
//மழை விட்டுக் கொடுத்தால் இலங்கை வெல்ல இங்கிருந்து முயலலாம்.320 ஓட்டங்களுக்குள் இந்தியாவைக் கட்டுப்படுத்தி Follow on வழங்கி கடுமையாக முயன்றால் மட்டுமே ஒரு முடிவைப் பெறக் கூடிய வாய்ப்பு. //
அதே...
சம்பளம் -
:)))
ஆனால் மனரீதியாக நிறையப் பாதிக்கப்படுவார்கள்.
மற்றும்படி இப்படித்தான்... கண்டுக்கப்படாது. :D
சொல்ல மறந்த பின்னூட்டம் -
நல்ல பதிவு... :)))
<>...
:P
<<>>
nalla kaalam naanga thappicham..!!!! avavnga mattum thaduthu irukkatti...!!!!! ninaikkave kannakattuthe..!!!!
சங்காவும் மகேலவும் வார விளம்பரங்களில உங்கள நினச்சு பார்த்தன் அவ்வளவு தான்....
லோஷன்... 2000ம் ஆண்டுக்குப் பிறகு சச்சின் இதுவரை இலங்கையில் 7 இன்னிங்ஸ் மட்டுமே (டெஸ்ட்) ஆடியிருக்கிறார். அவரது தரத்துக்கு அரைச்சதம் இல்லை என்பது கொஞ்சம் உதைக்கிறதுதான்... ஆனால் இன்னும் (ஆகக்கூட) 5 இன்னிங்ஸ் இந்தத் தொடரிலேயே இருக்கிறது இல்லையா. (ஒரு நாள் போட்டிகளில் பெருமளவு தடுமாற்றம் இருப்பதாய் தெரியவில்லை)
சின்ன வயதிலேயே cricket practice போன நேரமெல்லாம் படி படி என்று A/L காலத்தில் தடுத்து நிறுத்திய அப்பாவே,அம்மாவே.. இதையும் வாசியுங்கள்..
..பார்டா லொள்ள்ள,,,,
அதான் வீரர்களுக்கு தண்ண்ணீர் கொடுக்க நிறைய பேர் இருக்கே... நீங்களுமா அண்ணா ?
சும்மா பகிடிதான்.
இந்தியா-இலங்கைப் போட்டிகள் பற்றி நோ கமெண்ட்ஸ் (ஃபாலோ செய்யாததால்).
//சின்ன வயதிலேயே cricket practice போன நேரமெல்லாம் படி படி என்று A/L காலத்தில் தடுத்து நிறுத்திய அப்பாவே,அம்மாவே.. இதையும் வாசியுங்கள்.//
கிரிக்கெட் ப்ராக்டீஸ் போயிருந்தா மட்டும் டீம்ல எடுத்துருப்பாங்களாண்ணா? முரளியைத்தவிர வேற தமிழன் யாரும் இலங்கைக்கு ஆடினதா தெரியலையே. (உண்மையிலயே வேற யாராவது ஆடியிருந்தா சொல்லுங்கண்ணா).
//சின்ன வயதிலேயே cricket practice போன நேரமெல்லாம் படி படி என்று A/L காலத்தில் தடுத்து நிறுத்திய அப்பாவே,அம்மாவே.. இதையும் வாசியுங்கள்.//
;))
முரளி இறுதிப்போட்டியில் சச்சினின் விக்கெட்டை எடுத்தது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி
முரளியைத்தவிர வேற தமிழன் யாரும் இலங்கைக்கு ஆடினதா தெரியலையே. (உண்மையிலயே வேற யாராவது ஆடியிருந்தா சொல்லுங்கண்ணா).
முகிலனுக்காக -
சிலோன் ஆக சர்வதேச அந்தஸ்து கிடைக்கு முன்பே சதாசிவம்,இலங்கரத்தினம் போன்ற பலர்..
அதன் பின்னர் வினோதன் ஜோன், சிறீதரன் ஜெகநாதன், ரசல் ஆர்னோல்ட், பிரதீப் ஜெயப்ப்ரகாஷ்தரன்.
தமிழ் பேசுவோர் - உவிசுல் கர்நெய்ன்,நவீட் நவாஸ்,பார்வீஸ் மஹ்ரூப்,டில்ஷான் (சமயம் மாறியவர்)
சுராஜ் ரண்டிவ் - முன்னர் இஸ்லாமிய மதம்.. ஆனால் தமிழ் பேசுவாரோ தெரியாது.
உடனடியாக ஞாபகம் வந்தவர்கள் இவர்கள் தான்..
இனியும் வருவார்கள்
நன்றி லோசன் அண்ணா. ரசல் அர்னால்ட் தமிழன் என்பது எனக்கு செய்தி.
சுராஜ் ரண்டிவ் சிங்களப் பெயர் போலத்தான் தெரிகிறது. சிங்களர்களின் முஸ்லிம்கள் இல்லையோ?
நிஜமாகவே அறியாமையால்தான் கேட்கிறேன்.
மற்ற தமிழ் வீரர்களின் (இலங்கைக்கு சர்வதேச அந்தஸ்து கிட்டிய பின்னர்) க்ரிகின்ஃபோ தொடுப்பு இருந்தால் கொடுங்கள்.
புலம்பெயர்ந்த ஒரு இலங்கைத் தமிழர் (1980களின் ஆரம்பத்தில்) எனக்குப் பழக்கம்.
அவர் ஆஸ்திரேலிய அணியின் ரசிகர். அவரிடம் ஏன் நீங்கள் இலங்கையை ஃபாலோ செய்வதில்லை என்று கேட்ட போது இலங்கை அணியில் தமிழர்களுக்கு இடமில்லை. அதனால் நான் அதை ஃபாலோ செய்வதில்லை என்று என்னிடம் பதிலளித்தார். அதனாலேயே இதைக் கேட்டேன்.
மற்றபடி உடனே “சங்காபிஷேகம்” செய்யாமல் விளக்கமளித்ததற்கு நன்றீ.
சுராஜ் ரண்டிவ் சிங்களப் பெயர் போலத்தான் தெரிகிறது. சிங்களர்களின் முஸ்லிம்கள் இல்லையோ?//
சுராஜ் முஹம்மத் ரண்டிவ் என்பது அவரின் முழுப்பெயர்.
சிங்களவர்களில் முஸ்லிம்கள் இல்லையா என்பதை விட, முஸ்லிம்கள் அதிகமாக வீடுகளில் பேசிக் கொள்வது தமிழ் மொழியிலேயே.. கல்வி சிங்களத்தில் கற்றாலும் என்பதே விளக்கமாக இருக்கலாம்.
ஒரு சில பிரதேசங்களில் வாழும் முஸ்லிம்கள் தமிழ் பேசமுடியாவிட்டாலும் கூட தமிழ் புரியும்.
அவர் ஆஸ்திரேலிய அணியின் ரசிகர். அவரிடம் ஏன் நீங்கள் இலங்கையை ஃபாலோ செய்வதில்லை என்று கேட்ட போது இலங்கை அணியில் தமிழர்களுக்கு இடமில்லை. அதனால் நான் அதை ஃபாலோ செய்வதில்லை என்று என்னிடம் பதிலளித்தார். அதனாலேயே இதைக் கேட்டேன்.//
ஒவ்வொருவர் விருப்பம்.
தமிழக வீரர்கள் இல்லாத இந்திய அணியை நீங்கள் விரும்ப மாட்டீர்களா?
//“சங்காபிஷேகம்” செய்யாமல் விளக்கமளித்ததற்கு நன்றீ//
இதற்கெல்லாம் சந்காபிஷேகமா? ஹா ஹா..
அததுக்கு அப்படி அப்படி :)
அண்ணா பதிவை ரசித்தேன்!!! எல்லாமே நன்று!!!
//சின்ன வயதிலேயே cricket practice போன நேரமெல்லாம் படி படி என்று A/L காலத்தில் தடுத்து நிறுத்திய அப்பாவே,அம்மாவே.. இதையும் வாசியுங்கள்.//
என்னுடைய அம்மா இன்றுதான் முதலாவது பதிவு இணையத்தில் வாசிக்க போறா??? அதுவும் இந்த பந்திக்காக......!
//சின்ன வயதிலேயே cricket practice போன நேரமெல்லாம் படி படி என்று A/L காலத்தில் தடுத்து நிறுத்திய அப்பாவே,அம்மாவே.. இதையும் வாசியுங்கள்.. //
லோஷன் அண்ணாவின் அப்பாவும் அம்மாவும் உங்களை உண்மையிலேயே தடுத்து நிறுத்தியிருந்தால் அவர்களுக்கு எனது கோடானு கோடி நன்றிகள்.
( பின்ன உங்களை கிரிக்கெட் விளையாட விட்டிருந்தால் எங்களுக்கு பல்கலை வேந்தன் ( பல்கலைக்கழக வேந்தர் அல்ல ) அறிவிப்பாளர் "என்றும் எங்கள் அன்பின் A.R.V. லோஷன் கிடைச்சிருக்கமாட்டார்.)
லோஷன் அண்ணாவின் அப்பாவும் அம்மாவும் உங்களை உண்மையிலேயே தடுத்து நிறுத்தியிருந்தால் அவர்களுக்கு எனது கோடானு கோடி நன்றிகள்.
( பின்ன உங்களை கிரிக்கெட் விளையாட விட்டிருந்தால் எங்களுக்கு பல்கலை வேந்தன் ( பல்கலைக்கழக வேந்தர் அல்ல ) அறிவிப்பாளர் "என்றும் எங்கள் அன்பின் A.R.V. லோஷன் கிடைச்சிருக்கமாட்டார்.)
/////சின்ன வயதிலேயே cricket practice போன நேரமெல்லாம் படி படி என்று A/L காலத்தில் தடுத்து நிறுத்திய அப்பாவே,அம்மாவே.. இதையும் வாசியுங்கள்.. ....////
என் அப்பா அம்மாவுக்கும் இது பொருந்தும்
என்னது நீங்கள் கிரிக்கெட் விளையாடப்போரியலா ஏன் இந்த கொலை வெறி...அப்புறம் சேவாக் என்னும் எரிமலை குமுற தொடக்கி இருக்கிறது அடுத்த டெஸ்டிலும் பார்ப்போம். வாழ்த்துக்கள் முரளிக்கு இலங்கை அணிக்கும்.
Post a Comment