December 17, 2010

சின்ன மாமாவின் லீவு லெட்டரும் பதிவர் கிரிக்கெட்டும்

இலங்கையில் எதிர்வரும் ஞாயிறு இடம்பெறும் பதிவர் சந்திப்புப் பற்றிய பரபரப்பில் பதிவர்கள் அனைவரும் மும்முரமாகிக் கிடக்க, எம்மால் சின்ன மாமா என்று அழைக்கப்படும் இலக்கியவாதி பதிவர்/பொறியியலாளர் சுபாங்கன் மட்டும் மிகக் கவலையில் இருந்தார்.
அவர் பணிபுரியும் அலுவலகத்தின் முகாமையாளர் கடுமையானவர். சம்பளத்தில் தாராளம் போலக் காட்டிக்கொண்டே கறாராக வேலை வாங்கிவிடுவார்.
ஒரு வேலை கொடுத்தால் சனி,ஞாயிறு ஆனாலும் முடிக்காமல் விடுமுறையில் செல்ல விடமாட்டார்.


கும்மிகள்,பின்னூட்டங்களால் பிசியாகிப் போனதால் முகாமையாளர் கொடுத்த முக்கியவேலையை முடிக்க முடியாமல் போனதால் சனி,ஞாயிற்றுக் கிழமைகளில் விடுமுறையை அவரிடம் கேட்கமுடியாது என்று சின்ன மாமாவுக்குப் புரிஞ்சு போச்சு.
ஆனால் எப்படியாவது சந்திப்புக்கும், சனிக்கிழமை கிரிக்கெட் போட்டிக்கும் போகணுமே..
விடுமுறை கேட்டால் கத்துமே ஆள்..
தனது கவிதை,இலக்கிய மூளையைக் கசக்கிப் பிழிந்து ஐடியா எடுத்தார்..
முகாமையாளரும் தமிழ் பேசுபவர் தானே..

பேனாவை எடுத்தார் விறு விறு என்று கடிதம் எழுத ஆரம்பித்தார்.
கடிதம் எழுதும் கவிஞர் சி.மா 

From - 
நான் தான், 
உன் பிரிவு தான், 
உன் நிறுவனம் தான், 
உன் நகரம் தான். 
  
To -
உனக்கு தான், 
இந்த பிரிவு தான், 
இந்த நிறுவனம் தான், 
இந்த நகரம் தான். 
  
  
அன்புள்ள ஐய்யா , 
          
          என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ, நான் இந்த சனிக்கிழமையும்,ஞாயிற்றுக்கிழமையும் வேலைக்கு  வரமாட்டேன். 
  
                                       நன்றிகள். 
  
  
  
Date: இன்னைக்கு தான் 
Place: இந்த நகரம் தான் 


என்றும் உண்மையுள்ள
முடிஞ்சாக் கண்டுபிடிச்சுக்கோ


இதன் விளைவு --------

பதிவர் சந்திப்புக்குப் பிறகு திறமையுள்ள இளமையான,அறிவுடைய ஒரு பொறியியலாளருக்கு வேலை தேவைப்படுகிறது.
கொடுக்கிற சம்பளத்தை எடுத்துகொள்வார்.
ஆனால் என்ன மாதத்தில் இரு பதிவு போடக் கொஞ்ச நேரமும், நாள்தோறு இரு மணித்தியாலம் மெயிலில் கும்மக் கொஞ்ச மணித்தியாலங்களும்,மாதத்தில் இரு தடவை சாவகச்சேரி போய்வர விடுமுறையும் கொடுக்கவேண்டும். அவ்வளவு தான்.

சின்ன மாமாவும் நாளை பதிவர் கிரிக்கெட் போட்டியில் விளையாடுகிறார் என்றவுடன் நீங்கள் ஆச்சரியப்பட்டாள் அடுத்து நான் சொல்லப் போகும் செய்தியை வாசித்தால் மயக்கமே அடைவீர்கள்.

நாளைக் காலை ஒன்பது மணியிலிருந்து இடம்பெறப்போகும் பதிவர் கிரிக்கெட் போட்டியைப் பார்ப்பதற்காக பேர்த் டெஸ்ட் போட்டியை ஒரு நாள் ஒத்தி வைக்கிறார்களாம்.

பின்னே?
எத்தனை விதமான ஆற்றல்கள் கொண்ட வீரர்கள் நாளை விளையாடவுள்ளார்கள்..

நோட் பாடில் கேம் ஆடும் 'வேகப்' பந்துவீச்சாளர் பவன்
கால்பந்தையே கண்ணாடியில் கையால் சுழற்றக் கூடிய ஆதிரை(தானே சுழல் பந்துவீசி தானே அந்தப் பந்தை விக்கெட் காப்பாளராகப் பிடிக்கும் ஆற்றல் எங்கள் சித்தப்பூவுவால் மட்டுமே முடிந்த சாதனை.)
அரிவாள் கட்டினால் (Square Cut இருக்கலாம் அரிவாள் கட் இருக்கக்கூடாதா?) அசர வைக்கும் இலங்கையின் ரிக்கி பொன்டிங் யோ
ரிக்கியும் நானும் இதை விட நல்லாவே அடிப்போம் - நூடில்ஸ் யோ 

கூக்ளி போல கூல் போல் போடும் கூல் போய்
இடி தாங்கி போல எங்கள் பிடி தாங்கி கன்கோன்
ஆறு கொடுக்காமல் விடமாட்டேன் என்று அடம்பிடிக்கும் அனுத்தினன்
13 வருடங்களுக்குப் பிறகு ஓய்விலிருந்து மீண்டும் துடுப்புப் பிடிக்க யாழில் இருந்து வரும் ஜனா
ஒழுங்கமைப்புக் குழுவில் இருப்பதால் விளையாடாமல் ஒதுக்கிவிடுவான்களோ என்று அவசர அவசரமாக
கிரிக்கெட் தெரியும் என்று காட்டுகின்ற அஷ்வின்
சுடு சோறு போல சுறு சுறு விறு விறு வீரர் சுதா
திருமலைக் குஞ்சின் 'வேகப்' பந்துவீச்சுக்குப் பயத்தில் இரு டசின் Ball Guards வாங்கிக் கொண்டே நாளை வரும் சேது அய்யா
பூகோள மயமாக்கலில் சமுதாயத்தை அடிமையாக்கி, இளைஞரின் நேரத்தை சுரண்டும் கிரிக்கெட்டை இளைஞரைப் பாதிக்காமல் விளையாடுவது எப்படி என்று செயன்முறையில் காட்டும் சமவுடமை ஆட்டக்காரர் மு.மயூரன்
டென்னிஸ் பந்து என்றாலும் கால் காப்புக் கட்டியே களம் இறங்குவேன் என்று அடம்பிடிக்கும் வதீஸ்
கிரிக்கெட்டில் பிடித்ததே Fine leg தான் என்று சொல்லும் மது இச மது
லண்டனில் இங்கிலாந்து வீரர்களுடன் நெட் பயிற்சி எடுத்து இங்கே பூல் மேசையில் கிரிக்கெட் ஆடும் நிரூஜா
இது நிரூஜாவின் டீ ஷேர்ட்டா என்று கேட்கிறார் முனனால் பதிவர் புல்லட்  

(மற்ற வீரர்களின் 'விளையாட்டுத் திறமை' நமக்குத் தெரியாதுங்கன்னாவ்.. )
இன்னும் பல 'வீரர்கள்' விளையாடுவதால் இதுவும் ஒரு சர்வதேசக் கண்காட்சிப் போட்டி ஆகிவிடுகிறது.

ரசிகர்கள் திரண்டு வந்துவிடுவார்களோ என்ற பயத்தில் ஒழுங்கமைப்பாளர்கள் போக்குவரத்துப் போலீசாருடன் போக்குவரத்து ஒழுங்குகள் பற்றி இன்று பேச்சுவார்த்தைக்குப் போகிறார்களாம்.

இந்த வேளையில் இலங்கையில் பதிவர் சந்திப்பு சம்பந்தமாக லண்டன் அதிகார மையத்தின் தலைவரும் லண்டனில் உள்ள இலங்கை சிரேஷ்ட பதிவருமான பச்சிளம் பாலகர் சங்கத் தலைவர் வந்தியத் தேவன் அவர்கள் ஒரு கண்டன அறிக்கையையும் வெளியிட்டுள்ளார்..

ஆண் பதிவர்களுக்காக கிரிக்கெட் போட்டியை ஒழுங்கு செய்த நீங்கள் பெண் பதிவர்களுக்காக வலைப் பந்தாட்டப் போட்டியையும் ஏற்பாடு செய்திருக்கலாமே. இது ஆணாதிக்க செயல் அல்லவா?
லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் அடுத்த மாதம் இரண்டாம் திகதி இதை ஏற்பாடு செய்யும் முயற்சியில் நாம் (லண்டன் பதிவர்கள்) மும்முரமாக செயற்படுகிறோம்.

பார்த்து செய்யுங்கப்பா.. அடுத்து சந்திப்பு யாழ்ப்பாணத்தில் என்று ஆரூடம் சொல்லி வைத்திருப்போர் லண்டன் பதிவர்களால் கோபமடையக் கூடும்.
அடுத்த வீடியோ போடும் நேரம் சொல்லிட்டு செய்தீங்கன்னு சொன்னா கிரிக்கெட் விளையாடுற படம் அனுப்பி வைக்கிறோம்.

வாங்க நாளைக்கு விளையாடலாம். ஞாயிறு சந்திக்கலாம்..

31 comments:

நிரூஜா said...

ஐ... சுடு சோறு...!

Raja said...

///இரு தடவை சாவகச்சேரி போய்வர விடுமுறையும் கொடுக்கவேண்டும்//


Ithu nalla irukkee..

Unknown said...

கலாய்க்கிராராமாம் !!ஹிஹிஹி

Unknown said...

ஆண் பதிவர்களுக்காக கிரிக்கெட் போட்டியை ஒழுங்கு செய்த நீங்கள் பெண் பதிவர்களுக்காக வலைப் பந்தாட்டப் போட்டியையும் ஏற்பாடு செய்திருக்கலாமே. இது ஆணாதிக்க செயல் அல்லவா?//

நியாயமான கேள்வி...
பேசாமல் பெண்கள் கிரிகெட் போட்டி ஒன்னு போட்டிடுவோம்..
கிரிகெட் விளையாடத் தெரியாத நம்மள மாதிரி பசங்க அந்த டீம்'ல சேர்ந்திடிறோம்!!

Jana said...

ம்ம்ம்... கிரிக்கட் நினைத்தால் சந்தோசமாகவும், சிரிப்பாகவும் இருக்கு. விளையாடுவோம்.
கிரிக்கட், சந்திப்பு தவிர இன்று இரவு பயணப்பதிவு வேற இருக்கு சின்னமாமாவையும், கூலையும் இரண்டு சீட்டில் இருந்திவிட்டு, தூரத்தில் பின்னால்ப்போய் இருந்து நித்திரைகொண்டே கொழும்பு வருவதாக உத்தேசம்.
அதற்கு விடுவாங்களா புண்ணிவான்கள் என்பதே இப்போதைய சந்தேகம்.

Sivatharisan said...

From -
நான் தான்,
உன் பிரிவு தான்,
உன் நிறுவனம் தான்,
உன் நகரம் தான்.

To -
உனக்கு தான்,
இந்த பிரிவு தான்,
இந்த நிறுவனம் தான்,
இந்த நகரம் தான்.


அன்புள்ள ஐய்யா ,

என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ, நான் இந்த சனிக்கிழமையும்,ஞாயிற்றுக்கிழமையும் வேலைக்கு வரமாட்டேன்.
super latter super anna

ம.தி.சுதா said...

எனக்குத் தன் சுடு சோறு (வாக்கு)

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.

நனைவோமா ?

ம.தி.சுதா said...

போட்டியை கலாய்க்கப் போகிறேன் காத்திருங்கள்....

கன்கொன் || Kangon said...

ஹா ஹா...

கலக்கல். ;-)

// பூகோள மயமாக்கலில் சமுதாயத்தை அடிமையாக்கி, இளைஞரின் நேரத்தை சுரண்டும் கிரிக்கெட்டை இளைஞரைப் பாதிக்காமல் விளையாடுவது எப்படி என்று செயன்முறையில் காட்டும் சமவுடமை ஆட்டக்காரர் மு.மயூரன் //

மயூரன் அண்ணாவை வரவேற்கிறோம். :-)


// ஆண் பதிவர்களுக்காக கிரிக்கெட் போட்டியை ஒழுங்கு செய்த நீங்கள் பெண் பதிவர்களுக்காக வலைப் பந்தாட்டப் போட்டியையும் ஏற்பாடு செய்திருக்கலாமே. இது ஆணாதிக்க செயல் அல்லவா? //

ஏற்பாட்டுக்குழுவினரின் கவனத்திற்கு இதைக் கொண்டுசெல்வோம். ;-)

கலக்கல்.

நாளை சந்திப்போம். :-)

அதுசரி,
சுபாங்கன் அண்ணாவப் பற்றிக் கதைக்கும்போது ஏன் அடிக்கடி சாவகச்சேரி சாவகச்சேரி என்று கதைக்கினம்? ஏதும் விசேஷமா?

Subankan said...

அவ்வவ் அழுகிறேன்

காலேல கும்மும்போது கூட ஒரு வார்த்தை விடலயே, என்னா ஒரு வில்லத்தனம்

அவ்வவ்

கன்கொன் || Kangon said...

// கிரிக்கட், சந்திப்பு தவிர இன்று இரவு பயணப்பதிவு வேற இருக்கு சின்னமாமாவையும், கூலையும் இரண்டு சீட்டில் இருந்திவிட்டு, தூரத்தில் பின்னால்ப்போய் இருந்து நித்திரைகொண்டே கொழும்பு வருவதாக உத்தேசம்.
அதற்கு விடுவாங்களா புண்ணிவான்கள் என்பதே இப்போதைய சந்தேகம். //

என்ன நடக்குதிங்க?
சில காலங்களுக்கு முன்னர் மருதமூரான் அண்ணா எழுதிய பதிவொன்று ஞாபகம் வருகிறது. :P

டிலீப் said...

ஜயா இப்புடியும் லேட்டர் எழுதலாமா ?? கலக்கிபுட்டிக
பதிவர் சந்திப்பு திறன்பட நடப்பதுக்கு வாழ்த்துக்கள்

தகவல் உலகம்

யோ வொய்ஸ் (யோகா) said...

Cricinfoவில Ball by Ball Commentary தர போராங்களாமே உண்மையா?

Bavan said...

அவ்வ்வ்வ்.. இப்பிடி உசுப்பேத்தி விட்டுட்டீங்களே.. #நம்மகிட்ட அதிகமா எதிர்பாக்கிறாங்களோ..:P

BUSசில் வந்து இறங்கியதும் மாலை போட்டு வரவேற்ற அன்பு உள்ளங்களுக்கு நன்றி..:P

லீவ் லெட்டர் கலக்கல்ஸ்..:D

கன்கொன் || Kangon said...

// BUSசில் வந்து இறங்கியதும் மாலை போட்டு வரவேற்ற அன்பு உள்ளங்களுக்கு நன்றி..:P //

நீ நாக்கத் தொங்கப் போட்டுக்கொண்டு ஆஆஆ எண்டு பேரூந்தில நித்திரை கொள்ள அத யாரோ வேற மாதிரி நினைச்சு கடைசி அஞ்சலி செலுத்தினத வரவேற்றது எண்டு தப்பா நினைச்சுக்கொள்ளாதடா. :-)

YOGA.S Fr said...

கொழும்பில் மழை பெய்கிறதா?"வெள்ள"வத்தப் பக்கம் ஒன்றும் "வெள்ள"ம் இல்லையே?பந்தை அடித்துக் கொண்டு போய் விடப் போகிறது!!!!!!!!!!!!!!!!!!!!

வந்தியத்தேவன் said...

ஷப்பா எப்படி எல்லாம் சிந்திக்கின்றார்கள். லோஷன் தயவு செய்து மொக்கை என்பது எங்கள் ஏரியா அதிலையும் உங்கள் கீபோர்ட்டை நுழைத்துவிட்டீர்களா? பேசாமல் நாலு மேட்சைப் பார்த்து கமோன் ஆஸி கமோன் ஸ்ரீலங்கா என பதிவு போடுமைய்யா.

தானைத் தலைவன் நிருஜாவை அவ்வளவு கலாய்க்காமைக்கு லண்டன் அதிகார மையம் சார்பில் கண்டனம். என்னை இலங்கை அதிகாரமையத்தில் இருந்து இடை நிறுத்தியமைக்கு யூடூயூப் ரசிகர்கள் சார்பில் கடும் கண்டனம்.

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

மேல ரீசேட்டில பந்து எங்கே?

சாவகச்சேரி மக்கள் said...

இலங்கை சுஜாதா என்ற சின்னமாமாவின் அடைமொழியை விட்டுவீட்டீர்களே லோஷன் ஐயா

Subankan said...

// Mathuvathanan Mounasamy / மதுவதனன் மௌ. / cowboymathu said...
மேல ரீசேட்டில பந்து எங்கே?
//

அது மாமா தேடிக்கொடுத்த படமாம் :P

நிரூஜா said...

//மேல ரீசேட்டில பந்து எங்கே?
ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

Vathees Varunan said...

பதிவு சூப்பர்...தற்போது இதுக்கு மேல எதுவும் சொல்லுறதுக்கில்லை

Vathees Varunan said...

:)

YOGA.S said...

/மேலே "ரீ" சேட்டில் பந்து எங்கே?//அது.............................வந்து................................!தெரியல!

ம.தி.சுதா said...

சகோதரர்களே.. போட்டி மடிந்தது யாரக்கும் தெரியாதா இங்கே பாருங்கள்...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
இலங்கைப் பதிவர்களின் கிரிக்கேட் போட்டி ஒரு பார்வை

ம.தி.சுதா said...

உங்களுக்காகவே சுதந்திர கருத்தாடல் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது....

அஹமட் சுஹைல் said...

இந்தப் பதிவர் சந்திப்பு சிறபாக அமைய என் வாழ்த்துக்கள்.


http://aiasuhail.blogspot.com/

Vathees Varunan said...

//சாவகச்சேரி மக்கள்
இலங்கை சுஜாதா என்ற சின்னமாமாவின் அடைமொழியை//

இதை எழுதினது கோபிதானே...

K. Sethu | கா. சேது said...

//திருமலைக் குஞ்சின் 'வேகப்' பந்துவீச்சுக்குப் பயத்தில் இரு டசின் Ball Guards வாங்கிக் கொண்டே நாளை வரும் சேது அய்யா//

சும்மா பார்க்கத்தான் வருகிறேன்னு நேற்றே கன்கொனின் fb இல் நாம சொல்லிப்புட்டமுல்ல. அதனாலே வீசும் பந்தை நான் பஞ்சு பஞ்சாக விளாசித்தள்ளப் போறேன்னு எந்த குஞ்சும் பயந்துகொண்டிருக்க வேண்டாம்! சொல்லிப்புட்டேன் ஆமா. ;>)

சரி, ஆரது திருமலைக் குஞ்சு ?

~சேது

sinmajan said...

பதிவர் சந்திப்புப் பற்றிப் பிந்திக் கிடைத்த திடுக்கிடும் செய்தி..
http://nizal-sinmajan.blogspot.com/2010/12/blog-post_17.html

YOGA.S.Fr said...

அப்பவே கேட்டேன் மழை பெய்கிறதா?"வெள்ள"வத்தையில் வெள்ளமா?என்று!மழை பேய்ததாமே???????

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner