தூறலும் சாரலும் கண்ணிரண்டின் மோதலும் காதலும்

ARV Loshan
22
அண்மையில் வெளிவந்த புதிய திரைப்பாடல்களில் எனக்கு மேலும் பிடித்த (2+1) பாடல்களைத் தருவதாக சொல்லி ஒரு வாரத்துக்குப் பின்னர் அந்தப் பாடல்களோடு இந்த இடுகையில் சந்திக்கிறேன்.

முன்னைய பாடல் ரசனைப் பதிவுகள்...


இரும்பில் முளைத்த இருதயம் - எனக்குப் பிடித்த எந்திரன் காதல்



ஐலே ஐலே குத்துது கொடையுது !!!

(இதற்கு முந்திய பதிவில் மரண மரதன் மொக்கையில் இறங்கி சாதனை நிலை நாட்டிய நண்பர்கள்,பதிவுலக சிங்கங்களுக்கு வாழ்த்துக்கள். அதைக் கொஞ்சமாவது நிறுத்த ஒரே வழி இது தான் என்று தெரிந்தது.


தூறல் நின்றாலும் - சிக்கு புக்கு


தாத்தா வயதானாலும் இதயம் இளமையாக இருக்கும் கவி மார்க்கண்டேயர் வாலியின் காதல் வரிகளோடு இனிக்கும் பாடல் இது.
ஹரிஹரன்- லெஸ்லி லூயிஸ் ரஹ்மானின் Bombay Dreams இசையைக் கொஞ்சம் உருவிக் கொண்டாலும் இதயம் வருடும் இசை பாடலை மனசுக்குள் இறுகப் பூட்டி விடுகிறது.

ஹரிஹரனின் காந்தக் குரல் காதலின் பிரிவுத் துயரை எங்கள் மனதிலும் உணர்ச்சியோடு பிணைக்கிறது.
கூடவே சூபி (Sufi ) பாணி இசையில் உயிரைப் பிழியும் வடலி சகோதரர்களின் குரல் இனிமை.

மூன்று நிமிடங்களில் எங்களைக் காதலின் கடலில் முக்கி எடுக்கும் அருமையான பாடல் இது. ஒரு நாள் காலையில் ஒலிபரப்பினாலும் நாள் முழுக்க இந்த வரிகள் என்னை முணுமுணுக்க செய்துவிடும்.
இசையின் மந்திரமும் வாலியின் வரிகளுடன் சேர்ந்து கட்டிப்போட்டுவிட்டன என்னை.

வாலி திரை இசைப் பாடல்களில் பல ரசிகரை ஈர்க்கக் காரணமாக இருந்த சந்த சுவை நயம் இப் பாடலிலும் கலக்குகின்றன.

இனியும் உன் பேரை என் நெஞ்சோடு 
ஒட்டி வைப்பதா 
எனது பொருள் அல்ல நீதான் என்று 
எட்டி வைப்பதா

திரையில் பாடல் எப்படி எனப் பார்த்து ரசித்தவர்கள் சொல்லுங்கள்..

மனது எல்லை தாண்டி ரசித்த சில வரிகள்...

இரவில் தூங்காது இமைகள் ஓரம்
நீயே நிற்கிறாய்
எனது தூக்கத்தை நீதான் வாங்கி
எங்கே விற்கிறாய்

திரைப்படம் - சிக்கு புக்கு
பாடியவர்கள் - ஹரிஹரன்,வடலி சகோதரர்கள்
பாடல் - கவிஞர் வாலி
இசை - ஹரிஹரன்- லெஸ்லி லூயிஸ் 

உன்னை உன்னிடம் தந்து விட்டேன்
நீ என்னை என்னிடம் தந்து விடு
போதும் போதும் 
எனை போக விடு 


கண்மணி
எனை போக விடு 
கண்மணி
கண்மணி


தூறல் நின்றாலும் சாரல் நின்றாலும் 
ஈரம் மண்ணிலே
தூர சென்றாலும் தொலைவில் நின்றாலும்
எண்ணம் உன்னிலே 


இரவில் தூங்காது இமைகள் ஓரம்
நீயே நிற்கிறாய்
எனது தூக்கத்தை நீதான் வாங்கி
எங்கே விற்கிறாய்


தூறல் நின்றாலும் சாரல் நின்றாலும் 
ஈரம் மண்ணிலே
தூர சென்றாலும் தொலைவில் நின்றாலும்
எண்ணம் உன்னிலே 




உயிரே உயிரே .......


உன்னை கேட்காமல் என்னை கேட்காமல் 
காதல் உண்டானதே 


எனை போக விடு
கண்மணி


விழிகள் என்கின்ற வாசல் வழியாக 
காதல் உள்சென்றதே 
இனியும் உன் பேரை என் நெஞ்சோடு 
ஒட்டி வைப்பதா 
எனது பொருள் அல்ல நீதான் என்று 
எட்டி வைப்பதா
விடைகள் இல்லா வினாக்கள் தானடி


தூறல் நின்றாலும் சாரல் நின்றாலும் 
ஈரம் மண்ணிலே
தூர சென்றாலும் தொலைவில் நின்றாலும்
எண்ணம் உன்னிலே 


தூறல் நின்றாலும் சாரல் நின்றாலும் 
ஈரம் மண்ணிலே
தூர சென்றாலும் தொலைவில் நின்றாலும்
எண்ணம் உன்னிலே 


இரவில் தூங்காது இமைகள் ஓரம்
நீயே நிற்கிறாய்
எனது தூக்கத்தை நீதான் வாங்கி
எங்கே விற்கிறாய்


கண்ணிரெண்டில் மோதி - உத்தமபுத்திரன் 


முதல் தரம் கேட்டபோது பெரிதாக ஈர்க்காத இந்தப் பாடல்,அடுத்த தரம் மனதில் பசை போட்டு ஒட்டிக் கொண்டது.படம் பார்த்த பின் காட்சிகள்,ஜெனீலியாவின் சிரிப்பு,படபடக்கும் கண்களால் மேலும் பிடித்துக் கொண்டது.

புதிய பாடலாசிரியர் ஒருவர் ஏக்நாத்(நான் தான் முன்னர் இவர் பற்றி அறியவில்லையோ தெரியாது).அழகான வரிகளைக் கொஞ்சம் கிராமிய நயத்துடன் தந்திருக்கிறார்.
சின்ன சின்ன சிலிர்க்க வைக்கும் உவமைகளும் அழகான நயங்களும்.. அருமை.

முத்தக்கட்டு மொழி அழகில்  
குத்திக்குத்தி கொன்னவளே 
சிக்கிக்கிட்ட என் மனசை 
ஊறவச்சி தொவைச்சவளே 
ஆத்துக்குள்ள அம்மிக்கல்லா போனேனே 

இன்னுமொரு ரசித்த வரி வெகு இயல்பான வரி...
என் இரவின் நிலவே

கொஞ்சம் இருண்டிருக்கும்(!?) தனுஷுக்கும் ஒளியான ஜொலியான ஜெனீலியாவுக்கும் இருள்-நிலவு உவமை பொருந்துகிறதே..

இளையவர் என்பதால் இளமையாக இனிமையாக யோசிக்கிறார் ஏக்நாத்..

பக்கத்தில நீ இருந்தா என் வயசு நோகுதடி

கண்ணுரெண்டும் ரெக்கைக்கட்டி மேலே கீழே படபடக்க 
பட்டுப்பூச்சி பட்டாம்பூச்சி ஆனேனே 

பாடலின் இனிமையான இசைககட்டோடு நயமாக,லயமாக வரிகளும் சந்தத்துடன் பயணிப்பது அழகு.
பயணப் பாடல்கள் பொதுவாகவே மனதை ஈர்ப்பது தமிழ்த் திரைப்பாடல்களில் வழமை தானே..

பாடகர் நரேஷ் ஐயர். இவரது குரல் எல்லாப் பாடல்களிலும் எனக்குப் பிடிப்பதில்லை. குரலில் பெண் தன்மை கூடவே கலந்திருப்பதாக நினைக்கிறேன்.சில பாடல்களில் இவரை அதிகமாக ரசித்தும் இருக்கிறேன். அதில் ஒன்று இந்த உத்தமபுத்திரன் பாடல்.

விஜய் அன்டனி தன குத்து,கும்மல் பாடல்களைப் போலவே இப்படி ரசனையான நல்ல பாடல்களையும் கலந்து தருவதால் தான் இன்னும் நிலைத்து நிற்கிறார்.அருமையான மெலடி இசை தந்தமைக்கு அவருக்கும் பாராட்டுக்கள்.

வரிகளை சுவைத்து பாடலையும் ரசியுங்கள்.
தனுஷின் அப்பாவித் தனமான முக பாவங்கள் மேலும் ஒரு ரசனை.


திரைப்படம் - உத்தம புத்திரன் 
பாடியவர்கள் - நரேஷ் ஐயர்
பாடல் - ஏக்நாத்
இசை - விஜய் அன்டனி   

கண்ணிரண்டில் மோதி நான் விழுந்தேனே 
காரணம் இன்றியே நான் சிரித்தேனே  
என் மனதும் ஏனோ என்னிடம் இல்லை  
வேண்டியே உன்னிடம் நான் தொலைந்தேனே 


என் உயிரின் உயிரே 
என் இரவின் நிலவே  
என் அருகில் வரவே 
நீ தருவாய் வரமே ஓ......  


ஊருக்குள்ள கோடிப் பொண்ணே யாரையும் நெனைக்கலையே 
உந்தன் முகம் பார்த்த பின்னே எதுவும் பிடிக்கலையே  
உன்னோடைய பார்வையில என் உடம்பு வேகுதடி  
பக்கத்தில நீ இருந்தா என் வயசு நோகுதடி  


கண்ணிரண்டில் மோதி நான் விழுந்தேனே 
காரணம் இன்றியே நான் சிரித்தேனே  
என் மனதும் ஏனோ என்னிடம் இல்லை  
வேண்டியே உன்னிடம் நான் தொலைந்தேனே 


ஓ ஓ.. ஏதோ ஒண்ணு சொல்ல  
என் நெஞ்சுக்குழி தள்ள
நீ பொத்திவச்ச ஆசையெல்லாம் 
கண்ணு முன்னே தள்ளாட 
கண்ணாம்மூச்சி ஆட்டம் 
என் கண்ணுக்குள்ள ஆட 
நீ சொல்லும் சொல்லும் சொல்லை கேட்காமலே
உந்தன் உள்ளம் திண்டாட 
உள்ளுக்குள்ள பட படக்க
நெஞ்சுக்குள்ள சிறகடிக்க
கண்ணுரெண்டும் ரெக்கைக்கட்டி மேலே கீழே படபடக்க
பட்டுப்பூச்சி பட்டாம்பூச்சி ஆனேனே


ஒம்முத்து முத்து பேச்சு
என் சங்கீதமா ஆச்சு
உன் சுண்டுவிரல் தீண்டையில
நின்னுப்போச்சு எம்மூச்சு
பஞ்சு மெத்தை மேகம்
அது செஞ்சிவச்ச தேகம்
நீ தூரத்துல நின்னாக்கூட
பொங்கிடுதே என் மோகம்
முத்தக்கட்டு மொழி அழகில் 
குத்திக்குத்தி கொன்னவளே
சிக்கிக்கிட்ட என் மனசை
ஊறவச்சி தொவைச்சவளே 
ஆத்துக்குள்ள அம்மிக்கல்லா போனேனே


ஊருக்குள்ள கோடிப் பொண்ணு யாரையும் நெனைக்கலையே
உந்தன் முகம் பார்த்த பின்னே எதுவும் பிடிக்கலையே
உன்னோடைய பார்வையில என் உடம்பு வேகுதடி
பக்கத்தில நீ இருந்தா என் வயசு நோகுதடி 


கண்ணிரண்டில் மோதி நான் விழுந்தேனே
காரணம் இன்றியே நான் சிரித்தேனே
என் மனதும் ஏனோ என்னிடம் இல்லை
வேண்டியே உன்னிடம் நான் தொலைந்தேனே 


என் உயிரின் உயிரே 
என் இரவின் நிலவே
என் அருகில் வரவே
நீ தருவாய் வரமே ......


இந்தப் பாடல்களை ரசித்துக் கொண்டிருக்கையிலேயே இன்னும் ஒரு பாடல் மனசுக்குள்ளே ஆரவாரமில்லாமல் நுழைந்துகொண்டுள்ளது என்று நினைக்க இன்னொரு பாடலும் நீ என்னையும் ரசிக்கிறாயே என்கிறது.. ;)
எனது ரசனைகள் நீண்டவை.. அதனால் பதிவுகளும் நீளாமல் அந்த இரு பாடல்களையும் ஒன்றாக நாளை உருகி உருகி ரசிக்கவா?

அந்த இரு பாடல்கள் எவையென்று Any guess????
.
பி.கு - நேற்று இலங்கையில் க.பொ.த உயர்தர முடிவுகள் வெளிவந்திருந்தன. நான் அறிந்த பலருக்கு நல்ல முடிவுகள்.. ஒரு சிலர் இம்முறை தவறி விட்டார்கள்.
உங்களுக்கு எல்லாம் ஆறுதல் சொல்ல நான் அந்தர் தந்த ஒரு இடுகை.. வாசிச்சு ஆறுதல் அடையுங்க தம்பி,தங்கைகளே.. ;)


ஃபெயில் பண்ணிப்பார்




Post a Comment

22Comments

Please Select Embedded Mode To show the Comment System.*