இது சிலருக்கு பாடம், சிலருக்கு விடைகள், சிலருக்கு செய்திகள்.. சிலருக்கு எச்சரிக்கை..
எனக்கும் இன்னும் ஒரு சிலருக்கும் மனதின் பாரம் குறைதல்..
கடந்த ஒரு மாத காலமாக எங்கள் சிலரின் வலைப் பதிவுகளை, வலைப்பதிவுகளோடும் தொடர்புபட்ட கடவுச் சொற்களைக் கைப்பற்ற யாரோ ஒரு வேலையற்ற ஒரு கும்பல் அல்லது ஒருவர் முயன்று கொண்டே இருக்கிறார்.
எனக்கு மட்டும் என்றில்லாமல், சக இலங்கைப் பதிவர்களான ஆதிரை(ஸ்ரீகரன்),கண்கோன்,சுபாங்கன் ஆகியோருக்கும், லண்டனில் வசிக்கின்ற வந்தியத்தேவன்,சதீஷ் ஆகியோருக்கும் இந்தத் தொல்லை சில காலமாக இருந்துவருகிறது.
ஒரு தடவை என்றால் பரவாயில்லை.. இது பல தடவை பல விதமாக..
ஆனால் இந்த Hacking வேலையில் ஈடுபடுவோர்(இவர்கள் செய்யும் சிறுபிள்ளைத் தனமான,முட்டாள் தனமான முயற்சிகளை Hacking என்று சொல்வது உண்மையான Hackersக்கு கேவலமாக அமையலாம்) இலக்கற்ற முட்டாள்கள்.
காரணம், எந்தவொரு மேலதிகமான தொழிநுட்ப அறிவும் இல்லாமல் சும்மா மேம்போக்காகக் குருட்டு இலக்கில் கடவு சொல்லுக்கு முயற்சி செய்தால் வேறு என்ன சொல்வது?
கடந்த புதன் கிழமை மட்டும் என்னுடைய மின்னஞ்சல்(ஜீமெயில்) கடவுச் சொல்லை உடைப்பதற்கு மட்டும் ஒன்பது தடவை முயன்றுள்ளார்கள் இந்த புத்திஜீவிகள்.
அதன் பின் என்னுடைய பேஸ் புக்க்குள்ளும் நுழைய முயன்றுள்ளார்கள்.
பாவம்.. இவ்வளவு முட்டாள்களாக இருப்பார்கள் என்று தெரிந்திருந்தால் என்னிடம் நேரே கேட்டிருந்தாலே கொடுத்திருப்பேன்.. பாவம்.
கண்கோனுக்கும் மற்றோருக்கும் கூட இவ்வாறே முயன்றுள்ளார்கள்.
எம்மைப் பற்றி எம் ரசனைகள் பற்றியாவது கொஞ்சம் தெரிந்திருந்தால் கடவுச் சொற்களை ஊகிப்பது இலகுவாக இருந்திருக்கும்..
அதுசரி மற்றவர்களின் மின்னஞ்சலகளைத் தோண்டித் துருவி என்ன செய்யப் போகிறார்கள்? ஏன் மற்றவர்கள் பற்றி ஆராய்வதே இவர்களின் வேலையாக இருக்கிறது?
இந்த கடவுச் சொல் களவாடும் வேலை ஆரம்பித்தது இன்று நேற்று அல்ல.. ஆரம்பத்தில் அநாமதேயப் பின்னூட்டங்கள் மூலமாகக் கேவலமான விஷயங்களைப் பரப்ப, சிலருக்கிடையில் பிளவுகளை பிரச்சனைகளை ஏற்படுத்த முனைந்தவர்கள் தான் பின்னர் இப்படி முயல்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.
பின்னூட்டங்கள் மூலமாக இதில் குறிப்பிடப்பட்டவர்கள் தவிர வேறு பலரைப் பற்றியும் அவதூறு பரப்ப முற்பட்டவர்/முற்பட்டவர்களின் IP + இதர விபரங்கள் எங்களுக்குத் தெரிந்தே இருந்தன ..
(ஆனால் எரிச்சல்.தாழ்வு மனப்பான்மை தவிர வேறு என்ன நோக்கம் அவர்களுக்கு இருந்தது என்று இன்று வரை தெரியவில்லை)
ஆஸ்திரேலியாவில் இருந்தே ஒரே குறித்த IPஇல் இருந்தே இந்த விஷம/தகாத பின்னூட்டங்கள் சிலரைக் குறிவைத்து எமதும் பலரதும் பதிவுகளுக்கு அனுப்பப்பட்டுக் கொண்டிருந்தன.
(இதுக்குள் வலைப்பதிவை முடக்குகிறேன், ஹக் செய்கிறேன் என்று மிரட்டல்கள் + முடிஞ்சாக் கண்டுபிடி என்று ஜம்பங்கள் வேறு)
VISITOR ANALYSIS | |
Referrer | http://www.blogger.com/ |
Host Name | 123-243-127-139.static.tpgi. |
IP Address | 123.243.127.139 [Label IP Address] |
Country | Australia |
Region | Victoria |
City | Hawthorn |
ISP | Tpg Internet Pty Ltd. |
Returning Visits | 0 |
Visit Length | Multiple visits spread over more than one day |
VISITOR ANALYSIS Referrer http://www.blogger.com/
Tpg Internet Pty Ltd. (123.243.127.139) [Label IP Address]

இத்தோடு இலங்கையின் கொழும்பிலிருந்தும், இடையிடையே யாழ்ப்பாணத்திலிருந்தும் சில குறித்த IPகளில் இருந்து சில விஷமப் பின்னூட்டங்கள் வந்துகொண்டே இருந்தன.
எனவே குறைந்தது இரண்டு பேர் இந்த வலையில் இருக்கிறார்கள் என்பது தெரிந்தே இருந்தது.
ஒன்றும் தெரியாத அப்பாவிகள் போல, நல்லவர்கள் போல இவர்கள் நட்புறவாடியது கண்டும் சிரித்துக் கொண்டேன்/டோம்.
சில மாதங்களுக்கு முன்னர் இருந்த பரபரப்பான (வேண்டத்தகாத சூழலில்) இவர்களை அப்பட்டமாக ஆதாரங்களோடு காட்டியும் இருக்கலாம்.
ஆனால் அதற்கும் ஆதாரங்களைப் பொய்யானவை என்று கூசாமல் கூறவும் இவர்கள் தயங்கார் என உணர்ந்தோம். தேவையில்லாமல் சேற்றுக்குள் உருள நான்/நாம் தயாரில்லை.
இவை பற்றியெல்லாம் பெரிதாக நாம் யாரும் அலட்டிக்கொள்ளாமைக்கான காரணம் தேவையில்லாமல் பதிவுலகில் இருக்கும் சர்ச்சைகளில் ஏன் நாமும் எங்கள் பங்குக்கு குழப்பத்தை ஏற்படுத்தவேண்டும்; பிரித்துக்கொண்டு அடிபட வேண்டும் என்று.
பதிவுலகப் பின்னூட்டங்கள், போலிக் கணக்குகள், அநாமதேயப் பின்னூட்டங்கள் சகஜமானவை;தவிர்க்க முடியாதவை என்பதனால் இவ்வளவு காலமும் அலட்டிக் கொள்ளவில்லை.
ஆனால் கொஞ்சம் அடங்கி இருந்த வெளிநாட்டு IPகாரர் இப்போது கொஞ்சம் தொழினுட்பத்தை/கறள் பிடித்துள்ள மூளையைத் தட்டி மீண்டும் விஷம அனானிப் பின்னூட்ட வேலைகளை ஆரம்பித்துள்ளார். நாள் ஒரு நாட்டு IPஇல் இருந்து..
இதே நபர் தனது வேலையை போலி Profileமூலமாக கன்கோனுடன் வாலாட்டுவதும் குறிப்பிடத் தக்கது.
எம்மில்/உங்களில் பலரின் பதிவுகளில் கன்கோன் என்ற போலி Profile மூலமாக பின்னூட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்.
http://www.blogger.com/profile/10226248193881788515
(இவரது அதிமேதாவித்தன வேலைகளை IP இல்லாமலும் இவரது வழமையான சில அடையாளங்கள் (?), உடைந்துபோன ஆங்கிலம் மூலமாக யாவரும் இனம் கண்டுகொள்ளலாம்)
இப்போது மின்னஞ்சல்/வலைப்பதிவுகளின் கடவுச் சொற்களைக் களவாடும் நடவடிக்கையையும் ஆரம்பித்த பிறகு எல்லோரையும் எச்சரிப்பது எனது கடமையாகிறது.
எனவே தான் இந்த வருடத்தின் இறுதி நாளில் இதைப் பதிவாக அல்லாமல் அனைவருக்கும் ஒரு எச்சரிக்கையாகக் கொடுத்துள்ளேன்.
இவர்கள் திருந்திவிட்டோம்;வருந்துகிறோம் என்று சொல்லிப் பழக வந்தால் கூடப் பரவாயில்லை.
பிழையே செய்யவில்லை என்று போக்குக் கட்டி,நடித்து,விளக்கங்கள் சொல்லிக் கொண்டு போலி நட்புப் பூணும் நேரத்தில் என்னால் மனதில் இருப்பதை மறைத்துப் போலியாக வார்த்தைகளில் கனிவு+இனிப்பு தடவிப் பொய்யாக என்னால் பழக முடியாது.
மனதில் இருப்பதை நேரே கொட்டுபவன் நான். அதையே வலைப்பதிவுகளிலும் கடைக் கொண்டு வருகிறேன்.
நல்லவர்கள் என்று எல்லோரையும் நம்பிப் பழகும் அப்பாவிகள் பலரும் எம் வலைப்பதிவு சமூகத்தில் இருக்கும் நிலையில் இந்த நடிப்பு சிகாமணி நரிகள் யாரோ,எவரோ என்று அடையாளம் கண்டுகொள்வது உங்களுக்கும் நல்லது இல்லையா?
உண்மையிலேயே நல்லவர்களுக்கு கொஞ்சம் தொழிநுட்ப அறிவைப் பயன்படுத்தி உங்கள் வலைப்பதிவுகள்,மின்னஞ்சல்களைப் பாதுகாத்திடுங்கள். பல நூறு நல்லவர்களுக்கிடையில் இருக்கும் விஷக் கலைகளை அடையாளம் கண்டிடுங்கள்.
அவர்களுக்கு, புது வருடத்திலாவது திருந்துங்கப்பா..
இதை இந்த வருடத்தின் இறுதிப் பதிவாக இட மனம் ஒப்பவில்லை. ஆனாலும் நாளை முதல் எம் 'வெற்றி'யில் ஏற்படவுள்ள நம்பிக்கையான,புதிய மாற்றங்கள் மூலமாக தலையில் வந்து குவிந்துள்ள வேலைகளால் நேரம் தான் கைவசம் இல்லை. :)
பார்க்கலாம். நள்ளிரவு பன்னிரண்டு மணிக்குள் முடிந்தால் இன்னொரு பதிவுடன் வருகிறேன்...
எல்லா நண்பர்களுக்கும் எனது இனிய புது வருட வாழ்த்துக்கள் !!!!!
பிறக்கும் 2011 உங்கள் அனைவருக்கும் உங்கள் நல்ல மனங்கள் போல நல்ல வாழ்க்கையும் மகிழ்ச்சியும் தரட்டும்.
51 comments:
wait..
படிக்கம்போதே கண்ணைகட்டுதே சாமி... மனிதர்கள் இப்படியெல்லாம் கூடவா இருப்பார்கள்..
Wish You Happy New Year
http://sakthistudycentre.blogspot.com
என்னையும் கொஞ்சம் blog ல Follow பன்னுங்கப்பா...
ம்....
என்ன பின்னூட்டுவது என்று தெரியவில்லை.
பாரம் குறைந்தது போலிருக்கிறது.
நான் பழகியவரை யார் யாரின் கடவுச்சொற்களை திருட முயற்சித்தார்களோ அவர்களனைவரும் அன்பானவர்கள், சாதாரணமாக எல்லோருடனும் இலகுவாகப் பழகக்கூடியவர்கள்.
(இதில் என்னைத் தவிர்த்துக் கதைக்கிறேன்).
இவர்களோடு என்ன பிரச்சினை என்பதை ஊகிக்கவும் முடியவில்லை.
பிரச்சினைகளை நேரடியாக தீர்த்துக் கொள்ளும் தைரியம் இருக்கிறதா பார்ப்போம்.
பதிவுக்கு மிக்க நன்றிகள்.
எனக்குத் தான் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...
தங்களுக்கு எனது ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரம்..
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
அழியா வடுக்கள்
/////பாவம்.. இவ்வளவு முட்டாள்களாக இருப்பார்கள் என்று தெரிந்திருந்தால் என்னிடம் நேரே கேட்டிருந்தாலே கொடுத்திருப்பேன்.. பாவம்.////
இப்ப கேட்கிறேன் கொடுங்களேன்.... ஹ...ஹ..ஹ...ஹ...
நான் தான் அந்த யாழ்ப்பாணத்த ஐபி காரன் என்பதை இத்தால் அனைவருக்கும் அறியத் தருகிறேன் முடிந்தால் எனது ஐபியை கண்டுபிடியுங்கள் பார்ப்போம்...
// (இவரது அதிமேதாவித்தன வேலைகளை IP இல்லாமலும் இவரது வழமையான சில அடையாளங்கள் (?), உடைந்துபோன ஆங்கிலம் மூலமாக யாவரும் இனம் கண்டுகொள்ளலாம்)//
அவனா?
இவன் தேவையில்லாம கேள்விக்குறிகளும் அதிகம் போடுற ஆள்தானே..:P
//அவர்களுக்கு, புது வருடத்திலாவது திருந்துங்கப்பா..//
எத்தின வருசமானாலும் நாய் வால் நிமிருமா, நிமிர்ந்த வாலோட நாய் பிறந்தால் மட்டுமெ அது சாத்தியம்..:P
புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணே..:)
அண்ணா இனி சீரியசாக அடிக்கிறேன்... உண்மையில் இவை கசப்பான அனுபவங்களே.. உண்மையில் எம்மில் யார் நல்லவன் யார் கெட்டவன் என யாருக்குமே தெரிவதில்லை. நம்பிப் பழககிறோம் துரோகம் என்று வரும் போது தான் அவர்களின் போலி முகம் தெரிகிறது வெளிப்படையாகச் சொன்னால் எனது கடவுச் சொல் மூன்று பேரிடம் இருக்கிறது அதில் இருவர் எனது தள மேம்படுத்தல்உதவியாளர்கள் ஆனால் அவர்களின் முகமே எனக்குத் தெரியாது எல்லாம் இணைய நட்புத் தான்... இப்படியானவர்களால் அவர்களின் உறவு கூட களங்கப்படும் அல்லவா..??
ஹக் பண்ணுகிறேன் என்ற பெயரில் இவர்கள் செய்யும் காமெடிகளும், போலிப் பின்னூட்டங்களும், பொதுக் கழிப்பறையில் படம் வரைந்து பாகம் குறிப்பதற்கு ஒப்பான கீழ்த்தரமான காரியங்களும் தலையில் விழும் தூசு போலத் தட்டிவிட்டுக் கடந்துபோகக்கூடியவை என்றாலும் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. பதிவுக்கு நன்றி அண்ணா. பச்சோந்திகளை இன்னும் கொஞ்சம் தோலுரித்திருக்கலாம்.
உங்களுக்கும் இனிய புதுவருட வாழ்த்துகள் :)
நல்ல ஒரு எச்சரிக்கையான தகவல் அண்ணா இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
லோசன் இந்த ஸ்கிறீன் சொட் எப்போது எடுத்தது என்று உறுதிப்படுத்தினால் நன்றாக இருக்கும். ஆதார பூர்வமாக நிரூபித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்
Clear state Clear Mind..!!!
புது வருட வாழ்த்துக்கள் அண்ணா...!!!!
//நல்லவர்கள் என்று எல்லோரையும் நம்பிப் பழகும் அப்பாவிகள் பலரும் எம் வலைப்பதிவு சமூகத்தில் இருக்கும் நிலையில் இந்த நடிப்பு சிகாமணி நரிகள் யாரோ,எவரோ என்று அடையாளம் கண்டுகொள்வது உங்களுக்கும் நல்லது இல்லையா?//
குறிப்பா என்னைத்தானே சொன்னனீங்கள். இனி நான் கொஞ்சம் கவனமா இருக்கிறன்.
லோசன் பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்ல பழக வேண்டும். ஆதாரபூர்வமாக ஏதாவது விடயங்களை நிருபீக்க வேண்டும், இந்த ஐபி முகவரி நபர் எப்போது உங்கள் வலைப் பூவிற்கு வந்தார் என்பதை நேரம், திகதி முதலியவற்றோடு எழுதினால் உண்மை என எடுத்துக் கொள்ளலாம். வெறுமனே தங்களது பதிவுகளை பிரபலமடையச் செய்வதற்காக வேறு நபர்கள் மீது பழியைப் போடு ஆதரமில்லாத தகவல்களை வெளியிட வேண்டாம், இந்த நபர் அடிக்கடி உங்கள் வலைப்பூவிற்கு வருபவர் என்றால் நீங்கள் வைத்திருக்கும் ஐபி கண்டறியும் host இல் Hawthorn, Victoria, Australia, 2 returning visits என ஏன் காட்ட வேண்டும், இதனை வைத்து இந்தப் பதிவினை உண்மை என எடுப்பது தவறாகும், தொழில் நுட்ப ரீதியாக பார்த்தால் நீங்கள் சொல்லும் பொய் விரிவாக விளங்கும்,
எதிர்வரும் புதுவருடம் தங்களுக்கு சிறப்பானதாக அமைய அன்பான வாழ்த்துக்கள்.
அண்ணா இப்படியானவர்கள் யாரென்று தெரிந்தால் அனைவருக்கும் தெரியத்தக்கதாக பப்ளிஷ் பண்ணி விடுங்கள்..அப்போது தான் மற்றையோருக்கும் பாதுகாப்பு..களவாணிகளுக்கு ஆப்பு!!
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் லோஷன் அண்ணா.நல்ல ஒரு எச்சரிக்கை
எனது பதிவான திருட்டு போய் நான் இப்போது என்னும் புதிய முகவரியில் எழுதுகிறேன், வருமுன் காப்போம் என்னும் வாசகம் எய்ட்சுக்கு மட்டுமல்ல வலைபதிவு பாதுகாப்புக்கும் தான், காரணம் நான் திருட்டு கொடுத்த பிளாக்கர், மூஞ்சிபுத்தக , யாஹூ கணக்குகளில் பிளாக்கர் மட்டும் இன்னும் மீள கிடைக்கவில்லை. ஆகவே பதிவர்களே உங்களது இணைய கடவுசொல்களை அதிகம் பாதுகாப்புடையதாக மாற்றி கொள்ளுங்கள்.
அனைவருக்கும் எனது இனிய புது வருட வாழ்த்துகள்
// சக இலங்கைப் பதிவர்களான ஆதிரை(ஸ்ரீகரன்),கண்கோன்,சுபாங்கன் ஆகியோருக்கும், லண்டனில் வசிக்கின்ற வந்தியத்தேவன்,சதீஷ் ஆகியோருக்கும்//
இந்த வட்டங்களைத்தாண்டி நமக்கும்கூட ஏன்?????
நமக்கும் அதே. மிக அண்மையில்த்தான் இது ஆரம்பம்.
கடைசி பதிவு இப்படியா? சரி விடுவோம்
புது வருட வாழ்த்துக்கள் லோஷன் அண்ணா
என்னமோ நடக்குது உலகத்திலே..வல்லவனுக்கும் வல்லவன் வையகத்தில் இருப்பான் தானே. மற்றவருக்கு தீங்கு நினைக்காதவனை இறைவன் ஒருபோதும் கைவிடுவதில்லை.. தான் எவ்விதத் தவறுகளும் செய்யாதவிடத்து தன் மனசாட்சியே தோழன்.மனசாட்சியை தோழனாக்கியவன் தவறுகளை எதிரியாக்கிறான்.தவறுகளை எதிரியாக்கியவன் தைரியமாய் சாதிக்கிறான.தைரியமாய் சாதிப்பவன் சபையில் கூட மனதில் பட்டதை தயங்காமல் சொல்லிவிடுவான்.. லோஷன் அண்ணாவின் இந்தக் குணம் எனக்கு மிகவும் பிடிக்கும்.காரணம் நானும் அப்படித்தான். உங்கள் பதிவுக்குப் பொருத்தமான பின்னூட்டம் தான் எழுதுகிறேனா? தவறுகள் இறுப்பின் இந்த ஆண்டீடன் மண்ணித்து விடுங்கள். மனசாட்சியை தோழனாக்கி வரும் ஆண்டிலும் சாதனைகள் பல படைக்க வேண்டி புத்தாண்டுக்காய் வாழ்த்துகிறேன்
anna
you can complain about this to ICTA,
http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=29081
For complaining
http://www.slcert.gov.lk/
///நான் பழகியவரை யார் யாரின் கடவுச்சொற்களை திருட முயற்சித்தார்களோ அவர்களனைவரும் அன்பானவர்கள், சாதாரணமாக எல்லோருடனும் இலகுவாகப் பழகக்கூடியவர்கள்///
அவர்கள் அப்படி இல்லாமலேயே இருக்கட்டுமே...ஓசியாக blogger இருக்கிறது.gmail இருக்கிறது. facebook இருக்கிறது. கணக்கைத் தொடங்கி ஜமாய்க்க வேண்டியதுதானே. அதைவிடுத்துப் போலிப்பெயர்களில் விளையாடுவதும் hack பண்ணுவதும் கேவலமான வேலை.
இவங்களை பைத்தியங்கள் எண்டு சொன்னாலும் பாவம் உண்மையான பைத்தியங்களை கேவலப்படுத்துவதாக இருக்கும் ... 2010 இல நல்லவர்களுக்கு காலம் இல்லை 2011 இல் எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று நம்புவோம் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
அண்ணே நல்ல ஒரு விடயத்தினை பதிவாக இட்டுள்ளீர்கள். என்னுடைய மின்னஞ்சல் கூட ஒருமுறை இவ்வாறு முயற்சி செய்யப்பட்டிருந்தது. ஒருசிலர் இந்த வேலைகளில் மிகமும்முரமாக ஈடுபட்டுகொண்டு இருப்பதுபோலத்தான் தெரிகின்றது. இந்தபதிவு நிற்சயம் திருடனுக்கு தேள் கொட்டியதுபோலத்தான் இருந்திருக்கும் என்று நான் நம்புகிறேன் புத்தாண்டிலாவது சம்பந்தப்பட்டவர்கள் திருந்துகிறார்களா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
நல்லதொரு தகவல் அண்ணா.நல்லா பழகி விட்டு எமக்கே ஆப்படிப்பவர்கள் நிறைய பேர் எம்மை சுற்றி இருக்கின்றனர்.
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் அண்ணா
பாவம் அவர்கள்...!!!
எனது புத்தாண்டுவாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் உரித்தாகட்டும்.
இன்றும் நாளையும் யார் எந்த பதிவு போட்டாலும் அதற்க்கான பின்னூட்டம் மட்டும் டெம்ப்ளேட் பின்னூட்டம்தான். அது
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
அருமையான பதிவு அண்ணா. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...........
புதியவன் என்பதாலோ என்னவோ எனக்கு இன்னும் இந்த கசப்பான அனுபவம் இல்லை...
இருந்தாலும் இவர்களை கடிந்து கொண்டு கண்டிக்கின்றேன்...
எச்சரிக்கையுடன் எதிர்காலத்தில் சிறக்க நல் ஆலோசனை வழங்கிய தங்களுக்கு நன்றிகள்...
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்.....
நண்பர்களே கோபிக்காதீர்கள்....உங்களுக்கும் என் குடும்பத்தின் சார்பில் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்...
இதை தடுக்கும் தொழினுட்பம் பற்றி தெரிந்த பதிவர்கள் இது பற்றிய விரிவான பதிவொன்று இட வேண்டும்.
இதை தடுக்கும் தொழினுட்பம் பற்றி தெரிந்த பதிவர்கள் இது பற்றிய விரிவான பதிவொன்று இட வேண்டும்.
அடப்பாவிங்களா...என்ன கொடுமை இது?! ஏன்?
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
எதோ ஒருவகையில் நானும் பாதிக்கபட்டு இருக்கிறேன் அண்ணா!!
நானும் வலைதளத்தை இழந்தவன் என்ற முறையில் இப்போது எதோ கொஞ்சம் கூடுதல் கவனமாக இருக்கிறேன்.
உங்களுக்கு எனது இனிய புதுவருட வாழ்த்துக்கள்!!!
அப்பாடா ஒருவழியாக பூனைக்கு மணி கட்டிவிட்டீர்கள் லோஷன். செய்வதையும் செய்துவிட்டு நல்லவன் போல மாஞ்சு மாஞ்சு மற்றவர்களுக்கு பின்னூட்டம் இடுவதும் பொருத்தமில்லாத இடங்களில் கூட தனிநபர் தாக்குதல்கள் தொடங்கிவிட்டார்கள் என கூச்சல் போட்டு எங்கப்பன் குதிருக்குள் இல்லை எனக் காட்டுவதும் தனக்கு தானே போலி வலை வைச்சிருந்து உலகப் புகழ் பெற நினைப்பதும் என சிலரின் போலி முகமூடிகளை நாகரீகமாக கிழித்துவிட்டீர்கள் பாராட்டுக்கள்.
இவர்களைப்போன்றவர்களை வலையுலகத்தைவிட்டுமல்ல பொது இடங்களிலும் துஷ்டனைக் கண்டால் தூரவிலகு என்பதுபோல் ஒதுக்கவேண்டும். இல்லை என்றால் இன்னமும் சேறுபூச முயல்வார்கள்.
உங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
நான் அவனில்லை.
ஆ... ஊ... ஒரு அப்பாவி என்னையவே சந்தேகப்படுறது....
ஹா ஹா..
பெயரோடு சொல்லிருக்கலாம்.. இப்போ மத்தவங்களுக்கெல்லாம்.. யாரா இருக்கும்? அவரா இருக்குமா..? இவரா இருக்குமான்னு... ஒரே குழப்பமா இருக்கும்.
ம்ம்... மறப்போம் மன்னிப்போம்.
புது வருட வாழ்த்துக்கள் அண்ணா.
நட்புள்ளங்கள் அனைவருக்கும் புது வருட வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
http://aiasuhail.blogspot.com/2010/12/2010.html
பூக்கள் நீ தரவா
தேன் புன்னகை நீ தரவா
போர்களம் உழுதுவிடு
அங்கே பூச்செடி நட்டுவிடு
அனுகுண்டு அத்தனையும்
பசிஃபிக் கடலில் கொட்டிவிடு
மனிதர்கள் விரும்பும் வரை
மண்ணில் மனிதனை வாழவிடு
நிலவுக்கு போய் வரவே எங்கள்
எங்கள் தெம்புக்கு சிறகு கொடு
ஒவ்வொரு விடியலிலும் நெஞ்சில்
உணர்ச்சிக்கு வலிமை கொடு
வருக 2011 வருக 2011
வருக வருகவே
தகவலு(இக்)கு நன்றிகள் புத்தாண்டு வாழ்த்துக்கள்!! நாங்களும் சிலேடையா போடுவமுல்ல
நீங்கள் என்ன தான் தலை கீழாக துள்ளி குதித்து வேறு நபர்களின் ஐபி முகவரியினை காட்ட முனைந்தாலும் எங்களை இலகுவில் இனங்கண்டு கொள்ள முடியாது. இது எங்களின் ஐபி முகவரியும் அல்ல. இதில் கூறப்பட்ட browser inai நாங்கள் பயன்படுத்துவதுமில்லை. எங்களுக்காக மாட்டிக் கொண்ட அந்த புண்ணியவான் வாழ்க. கன்கொனுக்கு எதிரான எங்களின் நடவடிக்கைகள் தொடரும். you can't even plug in a hair.
புத்தாண்டு வாழ்த்துக்கள்
உங்கள் பட்டியலில் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள் ;-) ஈழத்து முற்றத்திலும் அன்பர் வந்து கக்கா போகிறார்.
இங்கிருக்கும் சைபர் கிரைம் பொலிஸ் தான் எனக்கு ஒரே வழி என்று தீர்மானித்திருக்கிறேன். 2011 ஆம் ஆண்டில் எனக்கும் அவருக்கும் விடிவு கிட்டும் என்று நினைக்கிறேன்.
லோசன் தங்களிடம் ஒரு சில விடயங்களை கேட்க விரும்புகிறோம். ஏனைய பதிவர்களின் பெயரில் போலி profile தயாரித்து ஒரு சிலர் பி்ன்னூட்டும் போது தங்களின் பின்னூட்டங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக வெளியிடுகின்றீர்களா எனக் கேட்டிருந்தோம், அந்த பின்னூட்டங்களை தாங்கள் நீக்கவும் இல்லை, அவற்றை இன்று வரை பாதுகாத்து வருகிறீர்கள். ஆகவே இவற்றின் உள் நோக்கம் என்ன? நீங்களும் இவ்வாறான செயல்களுக்கு துணை போகிறீர்களா? இல்லை ஊக்குவிக்கிறீர்களா? wordpress தளங்களில் மாத்திரம் தான் ஐபி முகவரிகளை பின்னூட்டங்களுடன் வைத்து இலகுவாக கண்டறிய முடியும். தாங்கள் கூறுவது போல blogger இல் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது. இதில் நீங்கள் கூறும் நாட்டிலிருந்து தான் உங்களின் தளத்தில் அநாமதேய பின்னூட்டங்கள் வருகின்றன என்றால் அவற்றை ஏன் தாங்கள் அந் நபர் வந்த நேரம், ஆண்டு, திகதி முதலியவற்றோடு வெளியிட முடியாது? கேக்கிறவன் கேனையன் என்றால் எருமைமாடும் aeroplane ஓட்டுமாம்.
கானா பிரபா said...
உங்கள் பட்டியலில் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள் ;-) ஈழத்து முற்றத்திலும் அன்பர் வந்து கக்கா போகிறார்.
இங்கிருக்கும் சைபர் கிரைம் பொலிஸ் தான் எனக்கு ஒரே வழி என்று தீர்மானித்திருக்கிறேன். 2011 ஆம் ஆண்டில் எனக்கும் அவருக்கும் விடிவு கிட்டும் என்று நினைக்கிறேன்.// we don't care, what ever you can do, do it from now.
இனிய புதுவருட வாழ்த்துக்கள் அண்ணா, இவர்களை பற்றி சொல்ல என்ன இருக்கு கையாலாகாதவர்கள்.
எனக்குத் தெரிந்து இந்தப் பதிவு இருவரைக் கடுமையாக சாடுகிறது போலுள்ளது.
ஏன் அந்த இருவரும் இதுவரை பதிலேதும் போடவில்லை?
நாங்கள் இருதரப்பு கருத்துக்களையும் கேட்கவிரும்புகிறோம்.
// வேறு நபர்கள் மீது பழியைப் போடு ஆதரமில்லாத தகவல்களை வெளியிட வேண்டாம் //
ஏன் வேறு ஒருவரைப் பழி சொன்னால் உங்களுக்கு வலிக்கிறது?
நீங்கள் சொந்தச் செலவில் "செய்வது யாரோ? மாட்டுவது யாரோ" என்று எழுதிய பதிவு ஞாபகம் வந்து தொலைக்கிறது?
யாரோ ஒருவர் மீது உங்களுக்கேன் இவ்வளவு கரிசனை?
நீங்கள் செய்யும் சேவலமான செயல்களுக்கு வேறொருவன் மாட்டியிருக்கிறான் என்று விட்டுவிட வேண்டியது தானே?
// இந்த நபர் அடிக்கடி உங்கள் வலைப்பூவிற்கு வருபவர் என்றால் நீங்கள் வைத்திருக்கும் ஐபி கண்டறியும் host இல் Hawthorn, Victoria, Australia, 2 returning visits என ஏன் காட்ட வேண்டும் //
தொழிநுட்ப அறிவு உங்களுக்கு மட்டும் தான் மட்டு.
cache clear பண்ணிவிட்டு வந்தால் பழைய வருகைகளை இப்படியான ip tracing இணையங்களால் புதிய வருகையாகவே காட்டும்.
ஒவ்வொரு முறையும் வந்துவிட்டு நீங்கள் cache clear செய்தால் அது புதிய வருகையாகவே காட்டும்.
// ஏனைய பதிவர்களின் பெயரில் போலி profile தயாரித்து ஒரு சிலர் பி்ன்னூட்டும் போது //
மூளைக் குறைவா உங்களுக்கு?
நீங்கள் குறிப்பிடும் பின்னூட்டங்களின் சுட்டிகளை தனித்தனியாக குறிப்பிடவும்.
திரும்பவும் காவல்துறை பிடிச்சு சாத்தீற்றாங்களா மண்டையில?
// wordpress தளங்களில் மாத்திரம் தான் ஐபி முகவரிகளை பின்னூட்டங்களுடன் வைத்து இலகுவாக கண்டறிய முடியும் //
கருவிகளால பிடிக்கலாம்.
கருவி தெரியுமோ சாமி கருவி?
// you can't even plug in a hair //
plug in எண்டா என்ன அர்த்தம் எண்டு முதல்ல போய்ப் படிச்சிற்று வா.
அதுக்குப் பிறகு plug in hair எண்டு என்னத்துக்கு சொன்னாய் எண்டு வந்து விளக்கம் சொல்லு.
ஏன் ஆங்கிலத்தையும், தமிழையும் இப்பிடி அழிக்கிறாய்?
// ஏனைய பதிவர்களின் பெயரில் போலி profile தயாரித்து ஒரு சிலர் பி்ன்னூட்டும் போது //
மூளைக் குறைவா உங்களுக்கு?
நீங்கள் குறிப்பிடும் பின்னூட்டங்களின் சுட்டிகளை தனித்தனியாக குறிப்பிடவும்.
திரும்பவும் காவல்துறை பிடிச்சு சாத்தீற்றாங்களா மண்டையில?
http://loshan-loshan.blogspot.com/2009/04/18.html
இந்த சுட்டியில் உள்ள டொன்லீ, கணினி தேசம், எக்சார், கமல் முதலிய பின்னூட்டங்களை என்ன தொழில் நுட்ப அடிப்படையில் வந்தவை?
உங்களுக்கு தான் கொழும்பிலை நாலாம் மாடியிலை கதற கதற சாத்தினாங்கள், எங்களுக்கு இதுவரை எவரும் சாத்தவும் இல்லை, இனியும் சாத்தவும் முடியாது. NO body can beat us. உண்மைகளை ஆதரப்பூர்வமாக விளக்க படங்களுடன் நிருபிக்க முடியுமா. முடியாது தானே? Edit பண்ணிய போட்டோவிற்கு எப்படி நிஜ வடிவம் கொடுப்பது. plz don't think it's a little gang, we are very bigger than you.. U have to be careful with net scissors. We are only enemy's to MR Kangon- we are Tamil scissors. Do not blame, do not chase us. leave us alone.
old man loshan wake up...making popular blog dream came to a crash landing.
// இந்த சுட்டியில் உள்ள டொன்லீ, கணினி தேசம், எக்சார், கமல் முதலிய பின்னூட்டங்களை என்ன தொழில் நுட்ப அடிப்படையில் வந்தவை? //
அடேய், திரும்பவும் ஆரம்பத்தில இருந்தா?
முடியல...
டொன் லீ - http://www.blogger.com/profile/08803041484161964351
பார், உண்மையான புரொபைல்.
மே 2008 தொடக்கம் கிடக்குது.
கணணி தேசம் - http://www.blogger.com/profile/07012534180432691514
உண்மையான புரொபைல்.
ஏப்ரல் 2008 தொடக்கம் இருக்குது.
இவை இரண்டும் login ஆகிப் பின்னூட்டப்பட்டிருக்கின்றன.
அதாவது அவர்களது கூகிள் கணக்கிலக்கமும், கடவுச்சொல்லும் தெரிந்தாலும் மட்டுமே அவ்வாறு பின்னூட்ட முடியும்.
அதைத் தவிர்த்து வேறெந்த தொழிநுட்ப முறை மூலமும் பின்னூட்ட முடியாது.
கமல்- உலகத்தில கலைஞானி தொடக்கம் காவல்துறையிற்ற அடிவாங்கிறவன் வரை அந்தப் பெயரத்தான் வச்சிருக்கிறான்.
இதில எந்தக் கமல் எண்டு நாங்கள் எப்பிடிக் கண்டுபிடிக்கிறது?
மெல்பேர்ண் கமல் எண்டா,
http://melbkamal.blogspot.com/ இற்கு விஜயம் செய்துபார்க்கவும். அந்தத் தளம் பூட்டப்பட்டிருக்கிறது, அதால அவர் புரொபைல மூடியிருக்கலாம்.
எக்சார் - எக்சார் முன்பு login ஆகி பின்னூட்டுவதில்லை, அவரது கணக்கிலிருக்கும் ஏனைய வலைப்பதிவுகள் வெளியே தெரிந்து தன்னை அடையாளப்படுத்திவிடுவார்கள் என்று இப்படித்தான் பின்னூட்டுவார்.
இப்போதுதான் login ஆகிப் பின்னூட்டுறார்.
// Edit பண்ணிய போட்டோவிற்கு எப்படி நிஜ வடிவம் கொடுப்பது. //
அவுஸ்ரேலியக் காவல்துறை மோசமானவங்கள் எண்டு கேள்விப்பட்டிருக்கிறன், ஆனா வலதுகுறைஞ்ச ஒரு பெடியன இப்பிடி மூளை குழம்பும்வரை அடிப்பாங்கள் எண்டு நினைச்சுக்கூடப் பாக்கேல.
உந்தப் பதிவில photo எங்க கிடக்குது?
clear your mind, clean state, 2011 happy new year ஆகிய மூன்றே 3 படம் தான் இருக்கு.
மற்றதெல்லாம் copy and paste செய்யப்பட்ட textகள்.
edit பண்ணி photo, edit பண்ணிய photo எண்டு ஏன் கூவிறாய்?
ஊரில உன்னப் போல எல்லாரும் மற்றவன எப்பிடி அவமானப்படுத்திறது எண்டு யோசிச்சுக்கொண்டு திரியிறான் எண்டு யோசிச்சியா?
// U have to be careful with net scissors. //
நான் துணி வெட்டுற கத்திரிக்கோல்.
// we are Tamil scissors //
I'm Chinese scissors.
// leave us alone //
ஏதோ நாங்களா உன்னட்ட தேடி வந்த மாதிரியெல்லோ கதைக்கிறாய்?
நீயே வந்துபோட்டு leave us alone எண்டா நாங்கள் என்ன செய்யிறது?
// making popular blog dream came to a crash landing. //
ஐயயோ....
அப்ப போலி ஒண்டு உருவாக்கி லோஷனுக்கு உதவுவமா?
வாவன்... மச்சி வாவன்...
எங்கட லோஷன் தானே, வாவன் அவர் பிரபலமாக உதவுவம்?
கங்கொனுக்குப் பயந்தே இப்படி பண்ணுறிங்கள். கர்த்துக்களால வந்த மோதல் என்டால் அதை கருத்துக்களால சந்தியுங்கோடா. வேற ஏதாலயும் வந்ததென்டால் வா மோதலை வேற மாதிரி சந்திப்பம். எங்களுக்கும் குறுக்கு வழிகள் தெரியும்.
உனக்குதான்டா முதலில மன்டப் பிசகு. நாலாம் மாடில கொண்டே தட்டாமலே உனக்கு பிறக்கேக்கயே மண்டை பிசகிட்டுப்போல கிடக்கு. சும்மா அருக்கிற மனுசங்களை ஏன் இப்ப சண்டைக்கிழுக்கிறாய். சாது மிரண்டால் காடு கொள்ளாது.
லோசன் அண்ணே, அல்லா மீது ஆணையாக இந்த துரோகிகள் தண்டிக்கபடுவார்கள். தனிப்பட்ட மனிதர்கள் மீது தாக்குதலை ஏற்படுத்தும் பின்னூட்டங்களை நீக்கி விடுங்கள் அண்ணா. இல்லையேல் இந்த கசாப்பு கடை நரிகளுக்கு உங்களுக்கு வித்தியாசம் புரியாம போயிடும். கடவுளு நம்மளை கைவிட மாட்டான். நா எப்பவுமே அல்லாவை நம்புறவன். இனிமேயாச்சும் திருந்துவாங்க என்று நம்புவம். தனி மனித தாக்குதல் பின்னூட்டங்களை வெளியிடுவதால் உங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் வேறுபாடு தெரியாது. ஆகவே நடு நிலையான ஊடகவியலாளன் என்ற வகையில் இந்த பின்னூட்டங்களை நீக்கி விடுங்க. மறப்போம் மன்னிப்போம். இந்த மனிசாபிமானமத்த துரோகிகளை அல்லா நிச்சயம் தண்டிப்பார்.
When you send something electronically, either via your mobile phone or over the internet,
you lose control over who sees it or what they do with it. You may never be able to
permanently delete the image or text. Before you send anything electronically, think about
where it might end up.
போலிகளே உங்களுக்கு எச்சரிக்கை...துணிச்சலுடன் உண்மை profile உடன் வந்து எச்சரிக்கின்றேன்....
ஒரு நாகரீகம் தெரிந்த சமூகத்தில் வாழ்வீர்களேயேனால் இப்படியான கேவலமான செயல்களை செய்யமாட்டீர்கள்...இப்படி செய்து விட்டும் அதற்கு விதண்டா வாத கருத்துகளையும் முன்வைக்க மாட்டீர்கள்..
எங்கே முடிந்தால் உண்மையான profile ல வந்து உங்கள் கருத்தை சொல்லுங்கள் பார்ப்போம்...முகத்திரை கிழிந்து விடும் என்று பயமா...???
Post a Comment