November 09, 2011

வந்தி மாமா 16


பதிவுலக பச்சிளம் பாலகன்...
இருபத்தைந்தாவது தடவையாகப் பதினாறாவது பிறந்த நாள் கொண்டாடும் என்றும் மார்க்கண்டேயன்..
பாதிப் பெண்களை தங்கையாகவும் மீதிப் பெண்களை மகள்மாராகவும் ஆக்கி மனோதர்ம வாழ்வு வாழும் மகாத்மா..
எங்கள் ஆன்மீக குரு வந்தியானந்தா மாமாவுக்கு (பெரி.மயூரன் என்ற இயற்கைப் பெயர் கொண்ட வந்தியத்தேவர் ) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..



வந்தி பற்றிப் பதிவுலகமும், பாருலகமும் அறிந்தும் அறியாத விஷயங்கள் 16....

1.ஒருவர், இருவருக்கென்று இல்லாமல் ஊருக்கே மாமாவாக அறியப்பட்டாலும், இவர் மனதார மாமா என்று அழைக்க நினைப்பது இந்த மாமாவுக்கு இரண்டு நாட்கள் முன்னர் பிறந்த/பிறந்த நாளைக் கொண்டாடிய உலக நாயகனைத் தான்.
(ஏழாம் அறிவு ஹீரோயின் தான் காரணம் என்று விளக்கவும் வேண்டுமா?)

2.லண்டன் போனாலும் லங்காவில் இருந்தது போலவே சுத்த சைவமாக (சாப்பாட்டில்) இருந்து கூதல் குளிரையும் ஒரு கை பார்த்த சிங்கம்.

3.எத்தனை விதமாக எங்கெங்கெல்லாமோ தெரிந்த தெரியாதவர்களிடம் மொத்து வாங்கி, சிக்கல் சின்னாபின்னப் பட்டாலும் இந்த 'சிரட்டை' சிங்கத்துக்கு கோபம் கொஞ்சம் கூட எட்டிப் பார்க்காது.

4.அதிகமாகக் கோபம் ஏறி ஆத்திரத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போனால் "பொறுங்கடா, உங்களைப் பற்றிப் புனைவு போட்டுக் கிழிக்கிறேன்" என்று காமெடியாகக் கொந்தளிப்பார்.
ஆனால் அது ரணிலின் 'அரசாங்கத்தைக் கவிழ்க்கப் போறோம்' என்பது போலத் தான்.
அதற்காக வைக்கப்பட்ட ஆயிரமாவது பட்டம் தான் 'பு.மாமா' - புனைவு மாமா (வேற ஏதாவது விவகாரமா நீங்கள் இதுவரை காலம் யோசித்திருந்தால் கும்மி டெரர் சங்கம் பொறுப்பில்லை)

5.இப்போது அடிக்கடி முணுமுணுக்கும் இரு பாடல்கள்
"வாழ்க்கையில் ஆயிரம் தடைக்'கல்'லப்பா தடைக்'கல்'லும் உனக்கொரு படிக்'கல்'லப்பா"
"ஒரு 'குண்டு'ச் சட்டிக்குள்ளே வந்து குதிரையோட்டும் புள்ள"

6.கணிதம் படித்திருந்தாலும், கணினிப் பக்கம் இருந்தாலும் இலங்கை இம்முறை வந்த பிறகு வைத்தியத் துறையில் ஒரு தனியான ஈடுபாடும் தணியாத தாகமும் சேர்ந்திருக்கிறதாம்.

7.கடற்கரையில் நண்பர்களோடு நின்ற நேரம், எங்கிருந்தோ முளைத்த சாத்திரக்காரி தேடி வந்து இழுக்காத குறையாகக் கையை இழுத்து (நம்புங்கப்பா மாமா இழுக்கேல்லை) "நீங்க சொல்லடியையும் கல்லடியையும் நின்று தாங்கும் பிள்ளை" என்று நெற்றிப் பொட்டில் அடித்த மாதிரி எப்படிப் பட்டென்று சொன்னாள் என்று வெவ்வேறு இடங்களில் ரூம் போட்டு (தனியாத்தானா?)யோசிக்கிறார்.


8.இப்போ ஸ்ருதி ஹாசன், தமன்னா பிடிக்கும் என்று சொல்லி வயசைக் குறைச்சுக் காட்ட எத்தனித்தாலும் நம் மாமாவின் all time favorites பூர்ணிமா(பாக்கியராஜ் கோவிச்சாலும் பரவாயில்லையாம்), ராதா (அதான் கோ கதாநாயகியின் அம்மா), சுஹாசினி (மணிரத்னத்தின் அம்மணி) & அம்பிகா (சொல்லணுமா?) தான்.

9.லண்டனில் இருந்தும் எங்கள் திருமலைக் குஞ்சு கேட்டபடி ஜிம்மி அன்டர்சனின் அண்டர் வெயரை வாங்கி வர முடியவில்லை என்பதே அண்மைய சறுக்கல்.

10.லண்டனில் இருந்து பிளைட்டில் வந்த நேரம் ரொம்ப நேரமா இவரையே ஒரு ஆண்டி வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்ததும், என்னடா இது மகள் ஏதாவது இருக்குமோ என்று நம் மாமா யோசிக்க, கட்டுநாயக்க Airport வந்ததும் அந்த ஆண்டி இவரைப் பார்த்து "Excuse me Uncle, Are you Mr.வந்தியத்தேவன்?" என்று கேட்க நம் மாமா அரை மணித்தியாலம் உள்ளே மயங்கி வீழ்ந்து கிடந்தது வரவேற்கச் சென்ற நாம் வெளியே காத்திருந்த கதை இன்று தான் வெளியே விடப் படுகிறது.

11.புலம்பெயர் பதிவர்களின் லண்டன் பிராந்தியத் தலைவராக இருந்தும் அதுபற்றி இன்னமும் காவல்துறை தன்னை அழைத்து விசாரிக்காதது கௌரவக் குறைவு என்னும் மன உளைச்சலால் மட்டக்களப்பு போய் தனியாக, ரகசியமாக இரு நாள் மாநாடு போட்டு வந்திருக்கிறார் மாமா.

12.நாடு திரும்பிய பதிவுலக சிங்கத்தைக் கௌரவிக்கும் வகையில் 'இலங்கைப் பதிவர்களின் நாலாவது பதிவர் சந்திப்பு' பற்றி குழுமத்தில் யாராவது மடல் இடுவார்கள் என்று ஒவ்வொரு மணித்தியாலமும் தன் ஜிமெயிலை refresh செய்து refresh செய்தே களைத்துவிட்டாராம்.

13.(இங்கிலாந்து) அரச குடும்பத்தில் இணையும் வாய்ப்பு சில வருடங்களுக்கு முன் கிடைத்தபோதும் அது கிடைக்காமல் கை நழுவிப் போன சோகம் இப்போதுவரை மனதில் இருந்தாலும் இன்னும் (இன்றும் கூட) மனதில் கோபமில்லாமல் ரசிக்கிறார் இந்தப் பிஞ்ச/பிஞ்சு மனசுக்காரர்.

14.அண்மையில் நடந்த கொலையொன்றில் சம்பந்தப்பட்டு சர்ச்சைக்குரிய ஒரு அரசியல்வாதி, இலங்கையின் பர பர மங்களமான அரசியல் வாதி ஆகியோருக்கும் சரித்திரக் காதலன் சலீமுக்கும் நம் மாமாவுக்கும் ஒரே வித ரசனை.. ஹி ஹி ஹி.. ;)

15.வாசிப்புப் பிரியர் நம்ம வந்தி மாமா அதிக தடவை வாசித்த நூல் - பொன்னியின் செல்வன் அப்பிடின்னு நீங்க நெனச்சா தப்பு.
ஒவ்வொரு நாளும் வாசித்த பின்னரும் இன்னும் அடங்கவில்லை தாகம் என்று மாமா சொல்லும் நூல் - சீரோ டிகிரி
ஆமாம் நம்ம ஹீரோ சாருவின் சீடர்.

16.வந்தியானந்தா என்ற சிறப்புப் பெயரோடு இவர் உபதேசம் செய்து உலகப் புகழ் பெற்று விளங்க வாழ்க்கையில் அடிபட்ட ஞானமும், வாய்த்த முதலாவது சீடன் கன்கோனின் ராசியும் தான் காரணம் என்கிறார்.


மீண்டும் மனதார்ந்த வாழ்த்துக்கள் மாமா + அட்வான்ஸ் நன்றிகள் இன்று மாலை தரப்போகும் விருந்துக்கு ....
அடுத்த பிறந்த நாள் விழாவுக்கு எங்கள் மாமியுடனும், மருமகனுடனும் எங்களை லண்டனுக்கு அழைத்துக் கொண்டாடவுமென்று குதூகலமாக வாழ்த்துகிறோம்..



33 comments:

Unknown said...

யாரங்கே ஒருத்தரும் இன்னும் வரவில்லையா?
//.கணிதம் படித்திருந்தாலும், கணினிப் பக்கம் இருந்தாலும் இலங்கை இம்முறை வந்த பிறகு வைத்தியத் துறையில் ஒரு தனியான ஈடுபாடும் தணியாத தாகமும் சேர்ந்திருக்கிறதாம்.//
இதில ஒரு உள் குத்து ஒன்றும் இல்லையே?

மிச்ச சொச்ச பெருமைகள் சொல்ல பின்பு வருகிறேன்.

Prapa said...

இப்ப தனது வயதை கருத்திலெடுத்து சில பெண்களை 'மருமகள்' என்றும் அழைக்குறார்.... மிகுதி கருத்து இன்னும் கொஞ்ச நேரத்தில் வரும் பிசி

யோ வொய்ஸ் (யோகா) said...

இன்று போல் என்றும் பதினாறு (வயது) பெற்று பெரு வாழ்வு வாழ வாழ்த்துகிறேன்..

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் வந்தி...

கரவைக்குரல் said...

//"பொறுங்கடா, உங்களைப் பற்றிப் புனைவு போட்டுக் கிழிக்கிறேன்" என்று காமெடியாகக் கொந்தளிப்பார்.//
>>அடிக்கடி சொல்வார்

//"நீங்க சொல்லடியையும் கல்லடியையும் நின்று தாங்கும் பிள்ளை"//
சொன்னதுமே மாமாவின் கையை கொடுக்க வைச்சிடாவே!!!!!!!!

///அடுத்த பிறந்த நாள் விழாவுக்கு எங்கள் மாமியுடனும், மருமகனுடனும் எங்களை லண்டனுக்கு அழைத்துக் கொண்டாடவுமென்று குதூகலமாக வாழ்த்துகிறோம்///
அதேதான் வாழ்த்துக்கள் வந்திமாமா

நிரூபன் said...

வணக்கம் பாஸ்,

வந்தி பாஸ் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!

ஆமா அந்த பு...மாமா;என்பதில் சத்தியமா இரட்டை அர்த்தம் இல்லைத் தானே.

அண்ணருக்கு டவுசர் கிழியாத குறையாக காமெடியில் பின்னி எடுத்திருக்கிறீங்க.

கானா பிரபா said...

உங்களுக்கெல்லாம் மாமா ஆனா எங்களுக்கோ வயதாலும், செயலாலும் அவர் குஞ்சியப்பு, அது சரி முன்னுரை எழுதியாச்சு எப்ப குஞ்சியப்பு குறித்த விரிவான தொடர் வரும்?

K.s.s.Rajh said...

வணக்கம் அண்ணே...

மாமாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் எனக்கு இவரை தெரியாவிட்டாலும்....நல்ல நகைச்சுவையுடன் இவரை பற்றி சொல்லியிருக்கீங்க..ரசிக்க முடிகின்றது

SShathiesh-சதீஷ். said...

//அதற்காக வைக்கப்பட்ட ஆயிரமாவது பட்டம் தான் 'பு.மாமா' - புனைவு மாமா (வேற ஏதாவது விவகாரமா நீங்கள் இதுவரை காலம் யோசித்திருந்தால் கும்மி டெரர் சங்கம் பொறுப்பில்லை)//

இல்லையே விளக்கம் பிளீஸ்

//.புலம்பெயர் பதிவர்களின் லண்டன் பிராந்தியத் தலைவராக இருந்தும் //
நாடுகடந்த பதிவர்களின் செயலாளர். பதவியை தவறாய் போட்டதற்கு மன்னிப்பு கேட்கவேண்டும்

ILA (a) இளா said...

ஹஹ்ஹஹஹ். வெகு காலமாச்சி இப்படி ஒரு கலாய்த்தல் பதிவு படிச்சு. வவாசங்கத்துக்கு அப்புறம் இப்பதான் 5-6 வருசம் கழிச்சு .. ஆஹா.. பேரானந்தம்

Admin said...

//அண்மையில் நடந்த கொலையொன்றில் சம்பந்தப்பட்டு சர்ச்சைக்குரிய ஒரு அரசியல்வாதி, இலங்கையின் பர பர மங்களமான அரசியல் வாதி ஆகியோருக்கும் சரித்திரக் காதலன் சலீமுக்கும் நம் மாமாவுக்கும் ஒரே வித ரசனை.. ஹி ஹி ஹி.. ;)//

டயலொக் ரீசார்ஜ் பண்ணுவார் போல.. பொண்ணு நல்லாத்தானே சிரிக்கும்..

அப்போ நானும் வந்தியின் கட்சி.. ஹீ..ஹீ..

வந்தியத்தேவன் said...

இந்தப் பதிவில் என் பெயரும் பிறந்ததிகதியும் மட்டும் உண்மை ஏனையவை எழுத்தாளர் லோஷன் அவர்களின் கற்பனையில் உதித்தவையே...

வந்தியத்தேவன் said...

//1.ஒருவர், இருவருக்கென்று இல்லாமல் ஊருக்கே மாமாவாக அறியப்பட்டாலும், இவர் மனதார மாமா என்று அழைக்க நினைப்பது இந்த மாமாவுக்கு இரண்டு நாட்கள் முன்னர் பிறந்த/பிறந்த நாளைக் கொண்டாடிய உலக நாயகனைத் தான்.
(ஏழாம் அறிவு ஹீரோயின் தான் காரணம் என்று விளக்கவும் வேண்டுமா?)//

நான் அவரின் ரசிகன் மட்டுமே, ஆனாலும் கரும்புதின்னக் கூலிவேண்டுமா?

வந்தியத்தேவன் said...

//2.லண்டன் போனாலும் லங்காவில் இருந்தது போலவே சுத்த சைவமாக (சாப்பாட்டில்) இருந்து கூதல் குளிரையும் ஒரு கை பார்த்த சிங்கம்.//

அடைப்புக்குள் சாப்பாட்டில் மட்டும் எனப்போட்டமைக்கு கண்டனங்கள். லங்காவில் எப்படி இருந்தேனோ அப்படியே அங்கையும் இருந்தேன் ஆனால் உடைகள் மட்டும் காலநிலைக்கேற்றபடி மாறியது.

வந்தியத்தேவன் said...

3.எத்தனை விதமாக எங்கெங்கெல்லாமோ தெரிந்த தெரியாதவர்களிடம் மொத்து வாங்கி, சிக்கல் சின்னாபின்னப் பட்டாலும் இந்த 'சிரட்டை' சிங்கத்துக்கு கோபம் கொஞ்சம் கூட எட்டிப் பார்க்காது.

இல்லையே எனக்கு கோபம் அடிக்கடி வரும் நம்பவில்லை என்றால் சித்தப்பூவைக் கேட்கவும்...

வந்தியத்தேவன் said...

//4.அதிகமாகக் கோபம் ஏறி ஆத்திரத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போனால் "பொறுங்கடா, உங்களைப் பற்றிப் புனைவு போட்டுக் கிழிக்கிறேன்" என்று காமெடியாகக் கொந்தளிப்பார்.
ஆனால் அது ரணிலின் 'அரசாங்கத்தைக் கவிழ்க்கப் போறோம்' என்பது போலத் தான்.//

ஹாஹா சிலரைப் பற்றிய புனைவுகள் வந்தனவே, ஒருசிலர் காலில் கையில் விழுந்தபடியால் அவர்களைப் பற்றி எழுதிய புனைவுகள் பரணில் இருக்கின்றது, தூசி தட்டுவது மிகவும் இலகுவான காரியம்.

வந்தியத்தேவன் said...

//5.இப்போது அடிக்கடி முணுமுணுக்கும் இரு பாடல்கள்
"வாழ்க்கையில் ஆயிரம் தடைக்'கல்'லப்பா தடைக்'கல்'லும் உனக்கொரு படிக்'கல்'லப்பா"//

அடிக்கடி அல்ல அந்தப் பாடல் வந்தகாலம் தொடக்கம் பிடித்தபாடல்.

//"ஒரு 'குண்டு'ச் சட்டிக்குள்ளே வந்து குதிரையோட்டும் புள்ள"//
இரண்டு குண்டுகளுடன் நட்பாக இருப்பதால் இந்தப்பாடல் ரொம்ப பிடிக்கும் ஹிஹிஹி.

வந்தியத்தேவன் said...

//6.கணிதம் படித்திருந்தாலும், கணினிப் பக்கம் இருந்தாலும் இலங்கை இம்முறை வந்த பிறகு வைத்தியத் துறையில் ஒரு தனியான ஈடுபாடும் தணியாத தாகமும் சேர்ந்திருக்கிறதாம்.//

வைத்தியத்துறையில் நிறைய மரியாதை இருக்கே ஒழிய ஈடுபாடு இல்லை.

வந்தியத்தேவன் said...

//7.கடற்கரையில் நண்பர்களோடு நின்ற நேரம், எங்கிருந்தோ முளைத்த சாத்திரக்காரி தேடி வந்து இழுக்காத குறையாகக் கையை இழுத்து (நம்புங்கப்பா மாமா இழுக்கேல்லை) "நீங்க சொல்லடியையும் கல்லடியையும் நின்று தாங்கும் பிள்ளை" என்று நெற்றிப் பொட்டில் அடித்த மாதிரி எப்படிப் பட்டென்று சொன்னாள் என்று வெவ்வேறு இடங்களில் ரூம் போட்டு (தனியாத்தானா?)யோசிக்கிறார்.//

சாத்திரக்காரி அருகில் நின்றதைப் பார்த்தும் நாம் நின்ற இடத்தில் இருந்த ஒரு ஜோடி ரசிப்பதற்காக ஒரு பிரபல பதிவர் ஒத்தைக் கல்லில் நின்றபடியால் தான் நான் அகப்பட்டேன். ஆனால் அவர் நண்பர்களால் எனக்கு ஆபத்து எனவும் சொன்னதாக ஞாபகம்.

வந்தியத்தேவன் said...

//8.இப்போ ஸ்ருதி ஹாசன், தமன்னா பிடிக்கும் என்று சொல்லி வயசைக் குறைச்சுக் காட்ட எத்தனித்தாலும் நம் மாமாவின் all time favorites பூர்ணிமா(பாக்கியராஜ் கோவிச்சாலும் பரவாயில்லையாம்), ராதா (அதான் கோ கதாநாயகியின் அம்மா), சுஹாசினி (மணிரத்னத்தின் அம்மணி) & அம்பிகா (சொல்லணுமா?) தான்.//

அழகை ரசிப்பதற்க்கு வயது தேவையில்லை,

வந்தியத்தேவன் said...

9.லண்டனில் இருந்தும் எங்கள் திருமலைக் குஞ்சு கேட்டபடி ஜிம்மி அன்டர்சனின் அண்டர் வெயரை வாங்கி வர முடியவில்லை என்பதே அண்மைய சறுக்கல்.

யானைக்கும் அடி சறுக்கும், குஞ்சு கேட்ட அண்டர்வேயர் கொண்டுவரவில்லை என்பது கவலைதான்.

வந்தியத்தேவன் said...

10.லண்டனில் இருந்து பிளைட்டில் வந்த நேரம் ரொம்ப நேரமா இவரையே ஒரு ஆண்டி வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்ததும், என்னடா இது மகள் ஏதாவது இருக்குமோ என்று நம் மாமா யோசிக்க, கட்டுநாயக்க Airport வந்ததும் அந்த ஆண்டி இவரைப் பார்த்து "Excuse me Uncle, Are you Mr.வந்தியத்தேவன்?" என்று கேட்க நம் மாமா அரை மணித்தியாலம் உள்ளே மயங்கி வீழ்ந்து கிடந்தது வரவேற்கச் சென்ற நாம் வெளியே காத்திருந்த கதை இன்று தான் வெளியே விடப் படுகிறது.

ஹாஹா அங்கிள் மணிரத்தினத்துக்கு கதை வசனம் எழுதலாம், நல்ல கற்பனை.

வந்தியத்தேவன் said...

11.புலம்பெயர் பதிவர்களின் லண்டன் பிராந்தியத் தலைவராக இருந்தும் அதுபற்றி இன்னமும் காவல்துறை தன்னை அழைத்து விசாரிக்காதது கௌரவக் குறைவு என்னும் மன உளைச்சலால் மட்டக்களப்பு போய் தனியாக, ரகசியமாக இரு நாள் மாநாடு போட்டு வந்திருக்கிறார் மாமா.

எதற்க்கும் எதற்க்கும் ஐயா முடிச்சுப்போடுகின்றீர்கள். அகில உலக இலங்கைப் பதிவர்களுக்கு எங்கள் நிரூஜா அக்காதான் தலைவர். எப்படி ரணில் வாழ்நாள் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கின்றாரோ அதேபோல் தான் அவரும் அதிகாரமையத்தின் தலை தளபதி எல்லாம்.

வந்தியத்தேவன் said...

12.நாடு திரும்பிய பதிவுலக சிங்கத்தைக் கௌரவிக்கும் வகையில் 'இலங்கைப் பதிவர்களின் நாலாவது பதிவர் சந்திப்பு' பற்றி குழுமத்தில் யாராவது மடல் இடுவார்கள் என்று ஒவ்வொரு மணித்தியாலமும் தன் ஜிமெயிலை refresh செய்து refresh செய்தே களைத்துவிட்டாராம்.

பதிவர் சந்திப்பா? ஆளைவிடுங்கோ ஐயா. ஆனாலும் ஏனையவர்களைப்போல நான் இலங்கைப் பதிவர்களைச் சந்திப்பதை கெளரவக் குறைவாக எடுக்கமாட்டேன்.

வந்தியத்தேவன் said...

13.(இங்கிலாந்து) அரச குடும்பத்தில் இணையும் வாய்ப்பு சில வருடங்களுக்கு முன் கிடைத்தபோதும் அது கிடைக்காமல் கை நழுவிப் போன சோகம் இப்போதுவரை மனதில் இருந்தாலும் இன்னும் (இன்றும் கூட) மனதில் கோபமில்லாமல் ரசிக்கிறார் இந்தப் பிஞ்ச/பிஞ்சு மனசுக்காரர்.

பிஞ்ச மனசுக்காரர் அல்ல ஐயா பிப்பா மனசுக்காரர் ஹிஹிஹி.

வந்தியத்தேவன் said...

14.அண்மையில் நடந்த கொலையொன்றில் சம்பந்தப்பட்டு சர்ச்சைக்குரிய ஒரு அரசியல்வாதி, இலங்கையின் பர பர மங்களமான அரசியல் வாதி ஆகியோருக்கும் சரித்திரக் காதலன் சலீமுக்கும் நம் மாமாவுக்கும் ஒரே வித ரசனை.. ஹி ஹி ஹி.. ;)

அழகை ரசிப்பதில் தப்பில்லை

வந்தியத்தேவன் said...

15.வாசிப்புப் பிரியர் நம்ம வந்தி மாமா அதிக தடவை வாசித்த நூல் - பொன்னியின் செல்வன் அப்பிடின்னு நீங்க நெனச்சா தப்பு.
ஒவ்வொரு நாளும் வாசித்த பின்னரும் இன்னும் அடங்கவில்லை தாகம் என்று மாமா சொல்லும் நூல் - சீரோ டிகிரி
ஆமாம் நம்ம ஹீரோ சாருவின் சீடர்.

இல்லை இதனை பலதடவை வாசித்தவர் இந்தப் பதிவை எழுதியவர் தான். சாரு இளையராஜா கமல் வெறுப்பாளர் அவர் எப்படி என் குருவாக முடியும். கொஞ்சமாவது லொஜிக்காக திங் பண்ணுங்கள் அங்கிள். இதுக்குத்தான் சொல்வது மனைவி சொல்லைக் கேட்டு அடிக்கடி விஜய் படம் பார்க்காதீர்கள் என.

வந்தியத்தேவன் said...

16.வந்தியானந்தா என்ற சிறப்புப் பெயரோடு இவர் உபதேசம் செய்து உலகப் புகழ் பெற்று விளங்க வாழ்க்கையில் அடிபட்ட ஞானமும், வாய்த்த முதலாவது சீடன் கன்கோனின் ராசியும் தான் காரணம் என்கிறார்.

இங்கிவனைப் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன். உண்மை அவன் என்னைப்போல் ஒருவன்.

Bavan said...

மீண்டும் மீண்டும் மாமாவுக்க ஹாப்பி பர்த்டே வாழ்த்துக்கள்..:-))

Subankan said...

//ஏனையவர்களைப்போல நான் இலங்கைப் பதிவர்களைச் சந்திப்பதை கெளரவக் குறைவாக எடுக்கமாட்டேன்.//

மாமா யாரையோ கலாய்க்கிறாராமாம் :p

தனிமரம் said...

வந்தி மாமாவுக்கு பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மாமாவை இப்படி கமடியாக்குவதா லோசன் அண்ணா அவருக்கும் ரனில் மாதிரி வாழ்நாள் எதிர்க்கட்சித் தலைவர் பதவி கொடுப்போம்! ஹீ ஹீ

Vijayakanth said...

anaarkali, anaarkali... aagaayam nee boologam nee

Vithyarajan said...

பாவம் மாமா! அவரே confuse ஆகிட்டாரு...இங்கயும் கொஞ்சம் வந்துட்டு போவிங்களா

Anonymous said...

"பொன்னியின் செல்வன்" நூலில் "வந்தியத்தேவன்" எனும் பெயரின் இராசியோ என்னவோ அப்பெயரை தனது புனைப்பெயராக கொண்டதில் இந்த செல்வனும் பிரகாசிக்கிறார்; வலையுலகில் பலரின் உள்ளங்களில். வந்தியத்தேவன் எனும் மயூரனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

பி.கு: உங்கள் வலைப்பதிவின் பிரதான பகுப்புகளில் "வந்தி" என்றும் ஒரு பகுப்பு வைக்கப்படுதல் நன்று.

நான் உங்கள்
அன்பு அனானி (பஸ்பன்)

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner