இன்றைய முன்னைய பதிவின் தொடர்ச்சி....
இலங்கை கிரிக்கெட் அணியைக் காய்ச்சி எடுக்கிறவர்கள் வாங்கோ....
நான் முன்பிருந்து பாகிஸ்தானிய அணியை ரசிக்காவிடினும் ஒரு சில வீரர்கள் காலாகாலமாக என் ரசிப்புக்குரியவர்களாக இருந்து வந்துள்ளார்கள். (நல்ல காலம் சூதாட்டக் கேசுகள் எவையும் அந்த லிஸ்ட்டில் இல்லை)
அண்மைய ரசனைகளில் மிஸ்பா உல் ஹக் முக்கியமானவர். அவரது நிதானமான அணுகுமுறைகள் மிகப் பிடித்தவை.
தலைவராக மிஸ்பா நியமனம் பெற்றவுடன் எமது வெற்றி FM இன் விளையாட்டு நிகழ்ச்சியில் இது பற்றி நம்பிக்கை தெரிவித்திருந்தேன்.
செய்து காட்டிவிட்டார்.
ஆனால் ஆப்பு இலங்கைக்கு.
(ஷஹிட் அப்ரிடி எப்போது மீண்டும் ஓய்வு பெறுவாரோ தெரியாது. அதனால் அவர் பற்றி எதுவும் வேண்டாம்)
தென் ஆபிரிக்காவிடம் இருந்த CHOKERS பட்டத்தை நான் Twitterஇல் இலங்கைக்கு பகிரங்கமாக வழங்கி இருந்தேன்.
டெஸ்ட் தொடரில் தோற்ற பிறகு ஒரு நாள் தொடரிலாவது போராடி வெல்வார்கள் என்று பார்த்தால், கையில் கிடைத்த வாய்ப்புக்களை எல்லாம் பாகிஸ்தானுக்கு பரிசளித்து பல்லிளித்து விட்டு வருகிறது இலங்கை அணி.
சுழல் பந்துவீச்சாளர்களை எல்லாம் பந்தாடிய இலங்கை அணி இன்று சுழலில் சிக்கி அல்லாடுவதும், வெற்றி பெறுவது எப்படி என்று தெரியாமல் திணறுவதும் பரிதாபமாக இருக்கிறது.
நான்காவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் வெல்லும் நிலையிலிருந்து வேண்டும் என்றே தோற்றது போல (ICC ஊழல் ஒழிப்புப் பிரிவிடம் - ACSU, or the Anti-Corruption and Security Unit எதற்கும் முறையிடப் போகிறேன் விசாரிக்கும்படி) சொதப்பி தோற்றபிறகு இறுதி ஒருநாள் போட்டியையும் போட்டியையும் நான் பார்க்கவில்லை.
பார்ப்பானேன்; வராத இரத்த அழுத்தத்தையும் வரவேற்பானேன்.
டில்ஷான் தலைவராக இருக்கும் வரை உருப்படப் போவதில்லை.
ஆனால் அடுத்து யார்?
மத்தியூஸ்? முன்னைய கிரிக்கெட் பதிவை வாசியுங்கள்.. அவர் இன்னும் தயாரில்லை என்று நினைக்கிறேன்.
Facebookஇல் எம் வெற்றி FM வானொலிப் பக்கத்தில் நடத்திய ஒரு கருத்துக் கணிப்பில் ஆச்சரியப்படும் விதத்தில் குமார் சங்கக்காரவை அதிகமானோர் தெரிவு செய்துள்ளார்கள்.
இதற்கு சங்காவின் அண்மைய சூப்பர் போர்மும் லோர்ட்ஸ் உரையும் காரணமாக இருக்கலாம் என்று நம்புகிறேன்.
ஆனால் என்னைப் பொறுத்தவரை மஹேல ஜெயவர்த்தன சங்காவை விடவும் அருமையான தலைவர். ஆனாலும் வயது? மீண்டும் இலங்கை கிரிக்கெட் பின்னோக்கி செல்லும்.
இவர்களை விட டெஸ்ட் அணியில் வேறு யாரும் நிரந்தர இடம் இல்லாதவர்கள்...
பேசாமல் தேர்வாளர்கள் கொலைவெறித்தனமாக சிந்தித்து ஒரு பெரிய RISK எடுத்தால் தானுண்டு.
சமீபத்திய சர்வதேச கிரிக்கெட் உதாரணம் - மேற்கிந்தியத் தீவுகளின் டரன் சமி.
இன்னும் நாள் இருக்கு.. தென் ஆபிரிக்காவில் வாங்கிக் கட்டி நொண்டிக் கொண்டு வரவும், Sri Lanka Cricket புதிய நிர்வாகக் குழு தேர்வாகவும் சரியாக இருக்கும்.
பட்டுத் திருந்துவது தான் ஞானம்.
இலங்கை கிரிக்கெட் அணியைக் காய்ச்சி எடுக்கிறவர்கள் வாங்கோ....
நான் முன்பிருந்து பாகிஸ்தானிய அணியை ரசிக்காவிடினும் ஒரு சில வீரர்கள் காலாகாலமாக என் ரசிப்புக்குரியவர்களாக இருந்து வந்துள்ளார்கள். (நல்ல காலம் சூதாட்டக் கேசுகள் எவையும் அந்த லிஸ்ட்டில் இல்லை)
அண்மைய ரசனைகளில் மிஸ்பா உல் ஹக் முக்கியமானவர். அவரது நிதானமான அணுகுமுறைகள் மிகப் பிடித்தவை.
தலைவராக மிஸ்பா நியமனம் பெற்றவுடன் எமது வெற்றி FM இன் விளையாட்டு நிகழ்ச்சியில் இது பற்றி நம்பிக்கை தெரிவித்திருந்தேன்.
செய்து காட்டிவிட்டார்.
ஆனால் ஆப்பு இலங்கைக்கு.
(ஷஹிட் அப்ரிடி எப்போது மீண்டும் ஓய்வு பெறுவாரோ தெரியாது. அதனால் அவர் பற்றி எதுவும் வேண்டாம்)
தென் ஆபிரிக்காவிடம் இருந்த CHOKERS பட்டத்தை நான் Twitterஇல் இலங்கைக்கு பகிரங்கமாக வழங்கி இருந்தேன்.
டெஸ்ட் தொடரில் தோற்ற பிறகு ஒரு நாள் தொடரிலாவது போராடி வெல்வார்கள் என்று பார்த்தால், கையில் கிடைத்த வாய்ப்புக்களை எல்லாம் பாகிஸ்தானுக்கு பரிசளித்து பல்லிளித்து விட்டு வருகிறது இலங்கை அணி.
சுழல் பந்துவீச்சாளர்களை எல்லாம் பந்தாடிய இலங்கை அணி இன்று சுழலில் சிக்கி அல்லாடுவதும், வெற்றி பெறுவது எப்படி என்று தெரியாமல் திணறுவதும் பரிதாபமாக இருக்கிறது.
நான்காவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் வெல்லும் நிலையிலிருந்து வேண்டும் என்றே தோற்றது போல (ICC ஊழல் ஒழிப்புப் பிரிவிடம் - ACSU, or the Anti-Corruption and Security Unit எதற்கும் முறையிடப் போகிறேன் விசாரிக்கும்படி) சொதப்பி தோற்றபிறகு இறுதி ஒருநாள் போட்டியையும் போட்டியையும் நான் பார்க்கவில்லை.
பார்ப்பானேன்; வராத இரத்த அழுத்தத்தையும் வரவேற்பானேன்.
டில்ஷான் தலைவராக இருக்கும் வரை உருப்படப் போவதில்லை.
ஆனால் அடுத்து யார்?
மத்தியூஸ்? முன்னைய கிரிக்கெட் பதிவை வாசியுங்கள்.. அவர் இன்னும் தயாரில்லை என்று நினைக்கிறேன்.
Facebookஇல் எம் வெற்றி FM வானொலிப் பக்கத்தில் நடத்திய ஒரு கருத்துக் கணிப்பில் ஆச்சரியப்படும் விதத்தில் குமார் சங்கக்காரவை அதிகமானோர் தெரிவு செய்துள்ளார்கள்.
இதற்கு சங்காவின் அண்மைய சூப்பர் போர்மும் லோர்ட்ஸ் உரையும் காரணமாக இருக்கலாம் என்று நம்புகிறேன்.
ஆனால் என்னைப் பொறுத்தவரை மஹேல ஜெயவர்த்தன சங்காவை விடவும் அருமையான தலைவர். ஆனாலும் வயது? மீண்டும் இலங்கை கிரிக்கெட் பின்னோக்கி செல்லும்.
இவர்களை விட டெஸ்ட் அணியில் வேறு யாரும் நிரந்தர இடம் இல்லாதவர்கள்...
பேசாமல் தேர்வாளர்கள் கொலைவெறித்தனமாக சிந்தித்து ஒரு பெரிய RISK எடுத்தால் தானுண்டு.
சமீபத்திய சர்வதேச கிரிக்கெட் உதாரணம் - மேற்கிந்தியத் தீவுகளின் டரன் சமி.
இன்னும் நாள் இருக்கு.. தென் ஆபிரிக்காவில் வாங்கிக் கட்டி நொண்டிக் கொண்டு வரவும், Sri Lanka Cricket புதிய நிர்வாகக் குழு தேர்வாகவும் சரியாக இருக்கும்.
பட்டுத் திருந்துவது தான் ஞானம்.
14 comments:
இலங்கை கிரிகெட் அணிக்கு- எவன்டா உங்கள பெத்தான் பெத்தான் அவன் கையில கெடச்சான் செத்தான் செத்தான் ...!!!!
Hope After the SA tour+SLC election something will be change. Cant MR&his group take the admin to get rid of this serious issue?
எல்லாம் தலைகளின் மாற்றமும் வழிநடத்தலும் தான் காரணம்... அது இலங்கை கிரிக்கெட்டிலும் சரி...!!! அணியின் சோர்வுக்கு முரளியின் இழப்பும் ஒரு காரணம்... இனி தேர்வாளர்கள் என்ன செய்ய போறாங்க என்று பார்க்கலாம்.. திலான் சமரவீர மீண்டும் டெஸ்ட் அணிக்கு அழைக்கப்பட்டிருப்பதாக தகவல்... பார்க்கலாம் தென் ஆப்ரிக்கா தொடர் என்னவாகுமென்று.... "////பட்டுத் திருந்துவது தான் ஞானம்.\\\\"
மனிசனுகளா இவனுகள் ரோசம் இல்லாம தோற்றுகிட்டே இருக்கானுகள் அதனாலதான் ,நான் இவங்கட போட்டியெல்லாம் பார்க்காமல் விட்டு ரொம்ப நாள் ஆச்சு... சங்கா இல்லன்ன மஹேல தலைமை வகித்தால் மீண்டும் போட்டிகளை பார்க்கலாம் என்று இருக்குறேன்... பார்ப்பம் என்னாத்த செய்ய போறாங்க என்று.!!!
bat பிடிக்கிறதை விட்டு விட்டு மண்வெட்டியை கையில் எடுத்தாலாவது SRILANKA பொருளாதாரமாவது கொஞ்சம் தேறும்....!
விக்கிரமாதித்தன் வாக்கு பலிக்கட்டும்
ஓ இலங்கை எண்டு ஒரு அணி இருக்குதா கிரிக்கெட்டில்?
சங்காவை மறுபடியும் தலைவர் ஆக்கி அவரின் ஒய்வுக்கு முன்பு ஒரு நல்ல இளம் தலைவரை உருவாக்கவேண்டும் ஆனால் சங்கா மறுபடியும் ஏற்றுக்கொள்வாரா?
இல்லை ஒரு இளம் வீரரை தலைவராக்கி ரிஸ்க் எடுக்கவேண்டும்...என்ன செய்யப்போகின்றார்கள் பொறுத்திருந்து பார்ப்போம்
Super as usual. The captaincy of dilshan and dulip mendis is the reason for this slump. Thilan should have been on test squad he has been selected now and mendis got nose cut. But when they going to stop selecting camara silva??? Expecting a blog abt chamara from u Thala.
:-))
அண்ணா நான் சங்காவின் தலைமைத்துவத்தை எதிர்த்திருந்தாலும் டில்சானை விட எவ்வளவோ மேல் போலவே இருக்கிறது...
ஆனால் இலங்கையில் இருப்பதோ 2 துடுப்பட்ட வீரர்கள் தான் (சங்கா, மகேல) அவர்கள் தலையில் பொறுப்பை ஏற்றினால் இலங்கையில் துடுப்பாட யார் இருக்கப் போகிறார்கள்...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இந்த வார சினிமா செய்திகளின் தொகுப்பு (21.11.2011-27.11.2011)
ஏனுங்கோ அண்ணே.. சாமர சில்வாவ அணித்தலைவரா போட்டா என்னா?? :P
வணக்கம்...! இந்த பதிவுலகில் புதியவன். இன்று தான் தங்களின் தளத்திற்கு வருகிறேன். அருமையான கருத்துக்கள். தங்களின் முந்தைய பதிவுகளை படித்துக் கொண்டிருக்கிறேன். தங்களின் பல சேவைகளுக்கு எனது வாழ்த்துக்கள். நன்றி நண்பரே!
நம்ம தளத்தில்:
"மனிதனின் மகிழ்ச்சிக்கு தேவையான மூன்று முத்துக்கள் என்ன?"
எனது தெரிவும் மகெல தான்..
Post a Comment