ரீமிக்ஸ் என்ற பெயரில் இந்தக் கால இசையமைப்பாளர்கள்; அருமையான முன்னைய தமிழ்த்திரைப்பாடல்களைக் கற்பழித்துக் கொண்டிருக்கிறார்கள். விரல்விட்டு எண்ணக் கூடிய ஒரு சில ரீமிக்ஸ் பாடல்களே கேட்க சகிக்கக் கூடியதாக இருந்தாலும் ஏனையவை கர்ணகடூரங்கள்!
இனிய பாடல்களையும் நல்ல கவிதைகளையும் அழகான பெண்களோடு ஒப்பிடும் எங்கள் தமிழ் சமூகத்தில், அவற்றைக் கொத்திக் குதறும் இந்த ரீமிக்ஸ் செய்வதை கற்பழிப்பு என்று தானே கருதவேண்டியுள்ளது..
முன்னைய இனியபாடல்களின் சுவையையும் ரசனையையும் மறக்கச் செய்யும் அளவுக்கு எரிச்சலூட்டுவனவாக அமையும் இவ்வகை ரீமிக்ஸ்க்கு நல்ல (நாசமாப் போன) உதாரணம் -
தமிழகத் தனிப்பெரும் தமிழ்ப்பேரன் (அதாங்க கலைஞரின் பேரன்) மு.க.மு.அறிவுநிதி பாடிய 'பெருமாள்' படப் பாடல் 'காதல் வைபோகமே' (ஒரிஜினல் - சுவரில்லா சித்திரங்கள் படத்தில்)
ஸ்ரீகாந்த் தேவாவின் கையில் நல்லதொரு பழையபாடல் அகப்பட்டால் அது குரங்கு கையில் பூமாலை நிலைதான்!
இந்த ரீமிக்சின் முதல் ஆரம்பங்களில் ஒன்று என்று எனக்கு இருக்கும் சினிமா அறிவு கொண்டு நான் நினைப்பது 80களில் நடுப்பகுதியில் 'தாய்க்கு ஒரு தாலாட்டு'படத்தில் 'புதியபறவை' 'உன்னை ஒன்று கேட்பேன்' பாடல் மெட்டில் - இளையராஜாவின் இசையில் இடம்பெற்ற 'இளமைக்காலம் இங்கே' என்ற பாடல் டி.எம்.எஸ் & பி.சுசிலா பாடியது. சிவாஜி & பத்மினி நடித்ததனால் பொருத்தமாக அமைந்தது.
அண்மையில் இரவு 'சிரிப்பொலி டிவியில்' ஒரு பாடல் பார்த்தேன். சம்சாரம் அது மின்சாரம் படத்தில் விசுவுக்கு மலேசியா வாசுதேவன் குரல் கொடுத்த 'ஊரைத் தெரிஞ்சுகிட்டேன் கண்ணம்மா' என்ற பாடல். படிக்காதவனுக்காக (இப்போ வந்த கொடுமையல்ல – பழைய ஒரிஜினல் ரஜினிபடம்) இளையராஜா போட்ட மெட்டை அப்படியே எடுத்துக் கொண்டார் சந்திரபோஸ்.
விசுவின் குறும்புகள் வரிகளின் குசும்புகளோடு ரசிக்கக் கூடியதாகவிருந்தது.
இந்தக்காலத்தில் காட்சிக்குப் பொருத்தமோ இல்லையோ பழைய பிரபல்யத்தை விளம்பரமாக்கவும் பரபரப்பாக்கவும் ரீமிக்ஸைப் பயன்படுத்தி அதை எங்களுக்கு ஒரு சாபமாகவே மாற்றிவிட்டார்கள்.
அண்மைக்காலத்தில் கொஞ்சம் ரசிக்க வைத்த ரீமிக்ஸ் பாடல்கள் என்றால் நியு படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் 'தொட்டால் பூமலரும்' (படகோட்டியின் பாடல் - மெட்டு வித்தியாசம்)
நான் கடவுளுக்காக இளையராஜா செதுக்கியும் படத்தில் வராத 'அம்மா உன் கோவிலில்' - 'அச்சாணி' படப்பாடல் எனினும் ராஜாவினதோ எங்களதோ தூரதிர்ஷ்டம் திரைப்படத்தில் வரவில்லை!
ரீமிக்ஸ் செய்பவர்கள் இந்த இருபாடல்களிலிருந்தும் கற்றுக் கொள்ளுங்கள் - எப்படி முன்னைய படைப்புக்களைக் கொடுக்காமல் முன்னைய படைப்பாளிகளைக் கேவலப்படுத்தாமல் ரீமிக்ஸலாம் என்று.
யுவன் சங்கர்ராஜாவும் (பில்லா படத்தின் மை நேம் இஸ் பில்லா & வெத்தலயப் போட்டேன்டி தவிர) தந்தை என்ற காரணத்தால் இசைஞானியின் காலத்தால் இறவா பாடல்களை எடுத்துத் தன்போக்குக்கு சிதைப்பதை (தயாரிப்பாளர் வற்புறுத்தி , வலியுறுத்தினாலும் கூட) கொஞ்சம் சிந்தித்துப்பார்த்து செய்யட்டும்.
20 comments:
agreed with you...
வந்திட்டீங்களா...? தங்கள் நலமறிய ஆவல். :)
ரீமிக்ஸ் செய்ய கற்று கொடுக்க வேண்டியதில்லை.. சினிமா இசை என்பது ஒரு வியாபாரம்.. அது சந்தைப்படும் எதயும் விற்கும்.. அதற்கு கடிவாளம் போடுவது இயலாதது. (உதாரணம் போதைப்பொருட்கள்) தேவை இருக்கும் வரை உற்பத்தியும் இருக்கும்.. இதற்கெல்லாம் அலட்டிக்கொள்ள கூடாது.. அது உங்கள் சொந்த கருத்து என்று சும்மா இருக்க வேண்டியது தான்.. அதேவேளை இசையை விற்று சம்பாதிக்கும் ஒரு துணை துறையான வானொலி தொகையில் இருப்பவர் இவ்வாறான பதிவிடுதல்களை தவிர்ப்பது நலம்.. அவர் செய்ய வேண்டியதெல்லாம் நேயர் விருப்பறிந்து பாடல்களை ஒலிபரப்புவதுதான்..
வழிமொழிகிறேன். 'அம்மா உன் கோவிலில்' பாடலை படத்தில் இட்டிருக்கலாம். அந்த பூஜா பிச்சை எடுக்கும் இடங்களில்
குரங்கு கையில் பூமாலை.
உங்கள் தலைப்பு அப்பட்டமான உண்மை.
மறுக்க இயலாது.
உங்களுக்குக் கிடைத்த சொற்ப நேரத்திலும் இப்படிப் பதிவெழுதுகிறீர்கள். நன்றி
ஆதிரை said...
agreed with you...//
நன்றி..
//வந்திட்டீங்களா...? தங்கள் நலமறிய ஆவல். :)//
ஆமாங்கோ.. எப்பவோ வந்திட்டேன்.. ;)
உங்க புண்ணியத்தில நல்லா இருக்கிறேன். (என்ன அக்கறை பாருங்க)
என்ன கொடும சார் said...
ரீமிக்ஸ் செய்ய கற்று கொடுக்க வேண்டியதில்லை.. சினிமா இசை என்பது ஒரு வியாபாரம்.. அது சந்தைப்படும் எதயும் விற்கும்.. அதற்கு கடிவாளம் போடுவது இயலாதது. (உதாரணம் போதைப்பொருட்கள்) தேவை இருக்கும் வரை உற்பத்தியும் இருக்கும்.. //
நீங்கள் சொல்வது கொள்ளை,கொலை,போதை வியாபாரம் சரி என்பது போல இருக்கிறது..
தேவை இருக்கும் வரை சந்தை இருக்கும் என்பது எல்லாவற்றுக்கும் பொருந்துவதால் தான் சட்டவிரோத செயலகம்,சதை சந்தைகளும்,ஆயுத சந்தைகளும் இருக்கின்ற கொடுமையான உலகில் இருக்கிறோம்.
//இதற்கெல்லாம் அலட்டிக்கொள்ள கூடாது.//
அப்போ எதற்கு அலட்டிக்கலாம்?
உடல்பசிகள் தேவை இருக்கும் வரை செயலாளர் விளம்பரங்களும் வருதே .. இதுவும் உங்கள் தேவை கோட்பாடு தானா?
இதற்கும் அலட்டிக் கொள்ளக் கூடாதா?
//அது உங்கள் சொந்த கருத்து என்று சும்மா இருக்க வேண்டியது தான்.. அதேவேளை இசையை விற்று சம்பாதிக்கும் ஒரு துணை துறையான வானொலி தொகையில் இருப்பவர் இவ்வாறான பதிவிடுதல்களை தவிர்ப்பது நலம்.. அவர் செய்ய வேண்டியதெல்லாம் நேயர் விருப்பறிந்து பாடல்களை ஒலிபரப்புவதுதான்..//
சொந்தக் கருத்தே தான்.. இசை விற்று மட்டும் சம்பாதிக்கவல்ல வானொலிகள்.. உங்கள் கருத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.. சமூகப் பொறுப்பும் வேண்டும் என்ற காரணத்தால் தான் இதை எழுதினேன்.
சமூகத்துக்கும்,நேயர்களுக்கும் தீய விஷயங்களைக் களைந்து,நல்ல விஷயங்களைக் கொடுப்பது தான் எங்கள் பணியின் தலையாய நோக்கமே தவிர,விருப்பறிந்து கொடுக்க அல்ல.
இதனால் தான் தரம் தாழ்ந்த,சீர்கேடான பாடல்களை நாம் (குறிப்பாக நான் முகாமையாளராக இருக்கும் வானொலி) தவிர்க்கிறோம்..
எங்கள் ஒலிபரப்புத் துறை பற்றிய உங்கள் தவறான பார்வையை மாற்றிக் கொள்ளுங்கள்..
//Subankan said...
வழிமொழிகிறேன். 'அம்மா உன் கோவிலில்' பாடலை படத்தில் இட்டிருக்கலாம். அந்த பூஜா பிச்சை எடுக்கும் இடங்களில்//
நன்றி. ம்ம்ம் நானும் அதையே நினைத்தேன்.. சிலவேளைகளில் அது தேவாலயக் காட்சிகளுக்காக இசையமைக்கப் பட்டு கத்தரியில் கிறீஸ்தவ தேவாலயக் காட்சிகள் போனபின் அத்தோடு சேர்ந்து போயிருக்கலாம்.
தமிழ்நெஞ்சம் said...
குரங்கு கையில் பூமாலை.
உங்கள் தலைப்பு அப்பட்டமான உண்மை.
மறுக்க இயலாது.//
நன்றி தமிழ்நெஞ்சம்..
//உங்களுக்குக் கிடைத்த சொற்ப நேரத்திலும் இப்படிப் பதிவெழுதுகிறீர்கள். நன்றி//
ஏதோ முடியுமான நேரங்களில் முடிஞ்சதை செய்கிறேன்..
எனக்கென்றால் தொட்டால் பூ மலரும் ரீமிகஸ் பிடிக்வில்லை.
ஆனால் ஒரு விசயம் இந்த காதல் வைபோகமே ரீமிக்ஸ்தான் எனக்கு அந்த பழைய பாடலை நினைவு படுத்தியிருக்கிறது. பெருமாள் படத்தின் பாடலை ஒரு தடவை கூட முழதாக பார்க்கவில்லை அனால் சுவரில்லாத சித்திரங்கள் படப்பாடலை ஒரே நாளில் குறைந்தது பதினேழு தடவைகள் பார்த்திருப்பேன்...
அந்தப் பொண்ணு ஊரில பாத்த பொண்ணுங்க மாதிரி இருந்தது மட்டுமல்ல அதுக்கு காரணம்.. :)
Hi லோஷன் அண்ணா?
நீங்கள் சொல்வது போல் பழவை பழஞ்சுவையோடு பத்திரமாக இருக்கட்டும்.
புதியவைகளை தனியாக சுவையூட்டிக்கொள்ளுங்கள் என்று...
பழையவைகளை எடுத்து மேக்கப்செய்வதில் அழகு அவலட்சனமாகிறது...
உண்மைதான்
இசை என்பது ரசிப்பதற்கு அதன் தனித்தன்மையோடு,
கற்பழிப்பதற்கு அல்ல....
சபாஷ் அண்ணா நன்றாய்ச் சொன்னீர்கள்.
மேலும் ஒன்று மேலே யாரோ உழறியிருப்பதைப் பார்த்தேன்.
வானொலி அறிவிப்பாளன் என்பன் வெறுமனே பாடல் விற்பவன் என்றால் அப்படிச் சொல்லியவரின் அறிவைக் கொஞ்சம் மீள் பரிசீலனைச் செய்ய வேண்டும்....
நன்றி
//நீங்கள் சொல்வது கொள்ளை,கொலை,போதை வியாபாரம் சரி என்பது போல இருக்கிறது..//
இல்லை நிறைய வித்தியாசம் இருக்கிறது.. உலகமே பிழை என்று ஏற்றுகொண்ட போதை பொருட்களையே ஒழிக்க முடியவில்லை என்பதே நான் சொன்ன வந்த கருத்து..
ஆனால் இது வேற மாதிரி.. எப்படி உங்கள் கண்ணுக்கு அழகாய் தெரியும் பெண் மற்றவர் கண்ணுக்கு பேய் மாதிரி தெரிவதுமாதிரி.. இது வேற.. எனவே இதற்கெல்லாம் அலட்டக்கூடாது.. ஆனால் செயலாளர் விளம்பரம் பலரை தூண்டுவது.. எனவே எதிர்க்க வேண்டியது.. ஆனால் சமூக பொறுப்பு இரசனைகளுக்கு எதிரானதல்லவே?
இசை இல்லாவிட்டால் யார் வானொலி கேட்பார்? தேசிய சேவை யார் கேட்கிறார்? அதில் வரும் நல்லதயாவது?
சீர்கேடான பாடல் என்றால்? இப்போது ஒளிபரப்பாகும் பாடல்கள் எல்லாம் நல்லவையா? ஒரு துளி விஷம் போதுமே..
என்னைத்தெரியுமா படத்தில் ஒரு ரீமிக்ஸ் பாட்டிருக்கு-இளமை ஊஞ்சலாடுகிறது படத்தில் வந்த "தண்ணி கறுத்திடுச்சு..."...
நிச்சயமாக லோஷன்
அந்த காலத்து பாடல்களின் தனித்துவம்,சுவை,,பாவம் என்பன கெடுக்குமளவுக்கு இந்தக்கால இசை அமைப்பாளர்கள் மீளிசை அமைப்பது வேதனையளிக்கிறது,
தாளவேகம்,இசை நுணுக்கங்களில் ஏதும் மாற்றம் என்பன கடந்த இசையின் தனித்துவதிற்ற்கு பங்கம் ஏற்படுத்தாது வருகின்ற மீளிசைப்பாடல்கள் வரவேற்ககூடியதே.
இவை கரவைக்குரல்
இப்போதெல்லாம் ஒரு படத்திற்கு ஒரு ரீமிக்ஸ் என்றாகிவிட்டது.
நிச்சயமாக இது இசைக்கு நல்லதல்ல.
எனக்கு என்ன புரியலைன்னா, மக்கள் நெஜமா இது மாதிரி கற்பழித்த பாடல்களை விரும்புகிறார்களா என்ன?
சமீபத்தில் ஒரு பாடல் பார்த்தேன் "நியூ வே ஆப் ஆத்திச்சூடி...." Not a remix but... கன்றாவி!!
சம்சாரம் அது மின்சாரம் படத்்திற்கு இசை சங்கர் கணேஷ்
விசுவின் பாடல் முதலில் வந்ததா அல்லது ரஜனியின் பாடல் முதலில் வந்ததா என்று யாராவது அறியத்தரவும்
நன்றி
பார்வையை மாற்றிக் கொள்ளுங்கள்..
மக்ஸ் டியூரா வ நிறுத்துங்க நான் மாறிக்கொள்கிறேன்..
என்ன எய்தா நெருக்கமா யாரும் இருக்கா வ நிறுத்துங்க நான் மாறிக்கொள்கிறேன்..
அவருக்கு முப்பத்தஞ்சு நிறுத்துங்க நான் மாறிக்கொள்கிறேன்..
டன் ட ...டன் ட டன்...
நாயகன் theme music உடன் இதை வாசிக்கவும்.. (ரித்தீஷ் இன் நாயகன் இல்லப்பா.. அது நிஜமாலுமே ரொம்ப கொடும சார்.. )
:D :D :D
பாடல்களில் ரீமி்க்ஸ் என்பது படங்களுக்காக மட்டுமல்ல, தனிப்பட்ட ரீதியில் சிலராலும் மேற்கொள்ளப்பவதுண்டு. இப்படி ஏராளமான பாடல்களை வானொலியில் போட்டிருக்கிறோம். அவற்றில் மக்கள் வரவேற்பைப் பெறாதவை மறைந்துபோய்விடும். இதற்காக அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.
ஆனால்,
//இசையை விற்று சம்பாதிக்கும் ஒரு துணை துறையான வானொலி தொகையில் இருப்பவர் இவ்வாறான பதிவிடுதல்களை தவிர்ப்பது நலம்//
ஒலிபரப்புத்துறையில் இருப்பவருக்கு சொந்தக் கருத்து இருக்கக்கூடாது என்று சொல்வது நியாயமாகாது.
//கற்பழிக்கிறார்கள் பாடல்களை//
இந்தத் தலைப்பு நெருடலாக இருக்கிறது. கற்பழிப்பு என்பதே மிகத்தவறான வார்த்தையாக ஒதுக்கப்பட்ட ஒன்று. அதை ஊடகத்தில் இருக்கும் உங்களைப்போன்றவர் பாவிக்கக்கூடாது.
தமிழன்-கறுப்பி... said...
// காதல் வைபோகமே ரீமிக்ஸ்தான் எனக்கு அந்த பழைய பாடலை நினைவு படுத்தியிருக்கிறது.//
அதற்கு காரணம் ஆண்குரல் அறிவுநிதியினுடையது .. பெண்ணின் குரல் ஒரிஜினலில் இருக்கும் ஜானகி அம்மையாரின் குரலை அப்படியே பயன்படுத்தியுள்ளார் ஸ்ரீகாந்த் தேவா.இதனால் தான் உங்களுக்கு ஒரிஜினல பாடல் ஞாபகம் வந்துள்ளது.
//சுவரில்லாத சித்திரங்கள் படப்பாடலை ஒரே நாளில் குறைந்தது பதினேழு தடவைகள் பார்த்திருப்பேன்...///
பாக்யராஜ் ஆடியுமா? ;)
//அந்தப் பொண்ணு ஊரில பாத்த பொண்ணுங்க மாதிரி இருந்தது மட்டுமல்ல அதுக்கு காரணம்.. :)//
ஒரிஜினல் பாடலில் வரும் ராதிகாவைத் தானே.. (றேமிக்ஸ்யில் ஆடுபவர் நம்ம நமீதா)
// SASee said...
Hi லோஷன் அண்ணா?
நீங்கள் சொல்வது போல் பழவை பழஞ்சுவையோடு பத்திரமாக இருக்கட்டும்.
புதியவைகளை தனியாக சுவையூட்டிக்கொள்ளுங்கள் என்று...//
நன்றி சசீ,
//பழையவைகளை எடுத்து மேக்கப்செய்வதில் அழகு அவலட்சனமாகிறது...//
மேக் அப் சிலவேளை தான் அழகூட்டும்..சிலவேளை அழகைக் கெடுக்கும்.
என்ன கொடும சார் said...
//எப்படி உங்கள் கண்ணுக்கு அழகாய் தெரியும் பெண் மற்றவர் கண்ணுக்கு பேய் மாதிரி தெரிவதுமாதிரி.. இது வேற.. எனவே இதற்கெல்லாம் அலட்டக்கூடாது.. //
இல்லையே.. ரீமிக்சை ரசிப்போர் மிகக் குறைவு.. ரசனைகள் மாறுபடலாம்.. ஆனால் முன்பிருந்தே ரசிக்கப்பட்டு வந்தவற்றை இந்த ரீமிக்ஸ் கெடுத்துவிடக் கூடாது என்ற அக்கறை தான் எங்களுக்கு.
//இசை இல்லாவிட்டால் யார் வானொலி கேட்பார்? தேசிய சேவை யார் கேட்கிறார்? அதில் வரும் நல்லதயாவது?//
பாடல் மட்டும் கேட்கும் ரசிகர்கள் மட்டுமில்லையே.. நிகழ்ச்சிகள்,செய்திகளுக்காகவும் பலர் உள்ளார்களே.. செய்திகள் கேட்டு குறைகளை உடனுக்குடன் சுட்டிக் காடும் எனது அன்பு நேயர் ஒருவரையும் உங்களுக்கு நன்கு தெரிந்திருக்குமே.. ;)
//இப்போது ஒளிபரப்பாகும் பாடல்கள் எல்லாம் நல்லவையா? ஒரு துளி விஷம் போதுமே..//
அது ஒலி என்று நம்புகிறேன்..
அந்த சிறு துளியும் கலக்கக் கூடாது என்றே நாம் பிரயத்தனம் செய்கிறோம்..
Darmaraj(A) Darma said...
என்னைத்தெரியுமா படத்தில் ஒரு ரீமிக்ஸ் பாட்டிருக்கு-இளமை ஊஞ்சலாடுகிறது படத்தில் வந்த "தண்ணி கறுத்திடுச்சு..."..//
ஆமாம்.. சிம்பு பாடி இருக்கிறார்..
கரவைக்குரல் said...
நிச்சயமாக லோஷன்
அந்த காலத்து பாடல்களின் தனித்துவம்,சுவை,,பாவம் என்பன கெடுக்குமளவுக்கு இந்தக்கால இசை அமைப்பாளர்கள் மீளிசை அமைப்பது வேதனையளிக்கிறது,
தாளவேகம்,இசை நுணுக்கங்களில் ஏதும் மாற்றம் என்பன கடந்த இசையின் தனித்துவதிற்ற்கு பங்கம் ஏற்படுத்தாது வருகின்ற மீளிசைப்பாடல்கள் வரவேற்ககூடியதே.//
நன்றி வருகைக்கு..உங்கள் கருத்து ஏற்புடையதே..
கணினி தேசம் said...
இப்போதெல்லாம் ஒரு படத்திற்கு ஒரு ரீமிக்ஸ் என்றாகிவிட்டது.
நிச்சயமாக இது இசைக்கு நல்லதல்ல.//
ஆமாம்.. இசையமைப்பாளருக்கு வேலையை இலகுவாக்குகிறது..
//எனக்கு என்ன புரியலைன்னா, மக்கள் நெஜமா இது மாதிரி கற்பழித்த பாடல்களை விரும்புகிறார்களா என்ன?//
அது தான் எனக்கும் புரியவில்லை.. திணிக்கிறார்களா தெரியவில்லை.. ஆனால் ஒரு சில ரீமிக்ஸ் பாடல்கள் வரவேற்பை பெற்றும் உள்ளன தான்.
//சமீபத்தில் ஒரு பாடல் பார்த்தேன் "நியூ வே ஆப் ஆத்திச்சூடி...." Not a remix but... கன்றாவி!!//
அது நம்ம இலங்கையர் ஒருவரின் மெட்டமைப்பு கைவண்ணம் கூட..
shabi said...
சம்சாரம் அது மின்சாரம் படத்்திற்கு இசை சங்கர் கணேஷ்//
ஆமாம் ஷபி.. நன்றி சுட்டிக் காட்டியமைக்கு..
திருத்துகிறேன்.
Anonymous said...
விசுவின் பாடல் முதலில் வந்ததா அல்லது ரஜனியின் பாடல் முதலில் வந்ததா என்று யாராவது அறியத்தரவும்//
இதிலென்ன சந்தேகம்.. இளையராஜாவின் படிக்காதவன் தான் முதலில்.. ச.அ.மின் பிறகு தான்..
என்ன கொடும சார் said...
பார்வையை மாற்றிக் கொள்ளுங்கள்..
//மக்ஸ் டியூரா வ நிறுத்துங்க நான் மாறிக்கொள்கிறேன்..
என்ன எய்தா நெருக்கமா யாரும் இருக்கா வ நிறுத்துங்க நான் மாறிக்கொள்கிறேன்..
அவருக்கு முப்பத்தஞ்சு நிறுத்துங்க நான் மாறிக்கொள்கிறேன்..
டன் ட ...டன் ட டன்...
நாயகன் theme music உடன் இதை வாசிக்கவும்.. //
அடக் கடவுளே எதுக்கு எது ஒப்பீடு.. எங்கே வந்து என்ன டயலொக் .. திருந்தவே மாட்டீங்களா.. உங்களையெல்லாம் ரித்தீஷையும்,விஜயகாந்தையும் வச்சு தான் உதைக்கனும்..
கிருஷ்ணா said...
பாடல்களில் ரீமி்க்ஸ் என்பது படங்களுக்காக மட்டுமல்ல, தனிப்பட்ட ரீதியில் சிலராலும் மேற்கொள்ளப்பவதுண்டு. இப்படி ஏராளமான பாடல்களை வானொலியில் போட்டிருக்கிறோம். அவற்றில் மக்கள் வரவேற்பைப் பெறாதவை மறைந்துபோய்விடும். இதற்காக அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. //
அது சரி.. எனினும் வளர விடக்கூடாது என்பதே என் கருத்து..
//ஒலிபரப்புத்துறையில் இருப்பவருக்கு சொந்தக் கருத்து இருக்கக்கூடாது என்று சொல்வது நியாயமாகாது.
//
ஆமாம்.. அதை அவர் வலிந்து வானொலியில் திணிக்கக் கூடாது ..
//கற்பழிப்பு என்பதே மிகத்தவறான வார்த்தையாக ஒதுக்கப்பட்ட ஒன்று. அதை ஊடகத்தில் இருக்கும் உங்களைப்போன்றவர் பாவிக்கக்கூடாது.//
இல்லை கிருஷ்ணா.. சில பாடல்களை இவர்கள் படுத்தும் படாத பாடு பார்த்து கொதித்துப் போய்த் தான் அவ்வாறு எழுதினேன்..சில கொடுமைகளைக் காட்டும்போது இவற்றைப் பயன்படுத்தினால் தப்பில்லை என்று நினைக்கிறேன்..
.
(பில்லா படத்தின் மை நேம் இஸ் பில்லா & வெத்தலயப் போட்டேன்டி தவிர)
Billa Music Director - MS Viswanathan
Post a Comment