ஆன்டி பேர் டார்லிங் ????

ARV Loshan
10

இன்று காலை விடியலில் சொன்ன ஜோக்ஸ்....
எங்கேயாவது  கேட்டிருந்தாலோ, வாசித்திருந்தாலோ கூடப் பரவாயில்லை..
மீண்டும் சிரித்தாலும் ஒன்றும் நஷ்டம் இல்லை...



1.உங்க தாத்தாவா?

நீண்ட காலத்துக்கு முன்பு...
கஞ்சிபாயின் வகுப்பு ஆசிரியர்... "உங்க பொது அறிவை சோதிக்க ஒரு கஷ்டமான கேள்வி...
ஆழமான கடல்.. நீந்தித் தான் போகவேண்டும்..
அந்தக் கடல் நடுவில ஒரு மாமரம் அதுல இருக்கிற ருசியான மாங்காயை எப்படி பறிப்பாய்?

கஞ்சி பாய் : பறவை போல மாறி பறந்து போய் பறிப்பேன்.

ஆசிரியர் : பறவை போல உன்னை உன் தாத்தாவா மாத்துவாரு?

கஞ்சி பாய் : அப்ப கடல் நடுவில மரம் உங்க தாத்தாவா வச்சாரு?

கஞ்சி பாய் என்னிடம் அடித்த பஞ்ச் -
ஒரு பாடம் சொல்லிக் கொடுக்கிற அவருக்கே இவ்வளவுன்னா............, 10 பாடம் படிக்கிற எனக்கு எவ்வளவு இருக்கும்......!


2. பத்து ரூபா 

கஞ்சிபாயின் மகன் : அப்பா, எனக்கு ஒரு பத்து ரூபா வேணும்..

கஞ்சி பாய் :எதுக்கு?

கஞ்சிபாயின் மகன் : சொக்லெட் வாங்கி சாப்பிட அப்பா..

கஞ்சி பாய் : இதப் பாரு மகனே.. நான் எல்லாம் அப்பாவின் காசி இப்பிடி அநியாயமாக்கினது இல்லை. அந்தக் காலத்திலேயே ஒவ்வொரு சதமா எண்ணி, எண்ணி சிக்கனமா செலவளிச்சென் தெரியுமா? அந்தக் காலத்திலேயே எனக்கு ஒவ்வொரு சதத்தின் அருமையும் தெரிஞ்சிருந்தது.. தெரியுமா?
(இப்படியே ஒரு அரை மணி நேரம் லெக்சர் அடித்து மகனின் காதால் ரத்தம் வர்றா மாதிரி செய்த பிறகு.....)

கஞ்சிபாயின் மகன் : சரிப்பா.. இவ்வளவு நீங்க சொல்ற நேரம் நான் அப்பிடிக் கேட்டது தப்புத் தான்.. எனக்கு ஒரு ஆயிரம் சதம் தாங்களேன் ;)



விடியலில் சொல்லாத, சொல்ல விரும்பாத ஆன்டி ஜோக் ;)

ஆன்டி பேர் டார்லிங் 



கஞ்சி பாயின் மகன் : அம்மா! எதிர் வீட்டு ஆன்டி பேர் என்னம்மா?

கஞ்சி பாயின் மனைவி : ஹன்சிகா டா...

கஞ்சி பாயின் மகன் : அப்பாவுக்கு இது கூட தெரிய மாட்டேங்குதும்மா. அந்த ஆன்டியை "டார்லிங்"னு கூப்புடுறார்....



Post a Comment

10Comments

Please Select Embedded Mode To show the Comment System.*