இர்ஷாத் aka என்ன கொடும சாரின் இழி செயலும், இன்னொரு கண்டனமும்

ARV Loshan
85
இன்று காலை எனது காலை நிகழ்ச்சி விடியலில் (வெற்றி FM) இடம்பெறும் பேப்பர் தம்பி நிகழ்ச்சியில் வாசிக்கப்பட்ட ஒரு பத்திரிகைத் தலைப்பு...

யாழ்.நூலக எரிப்புச் சம்பவத்துக்கு மன்னிப்பு கோரினார் அமைச்சர் சம்பிக்க ரணவக்க

அது பற்றிய விரிவான செய்தியையும் வாசித்துப் பாருங்கள்.

http://thinakkural.com/publication_west/content.php?contid=3667&catid=1

அடுத்த நிமிடமே ஒரு SMS. பதிவுலகில் என்ன கொடும சார் என்று அறியப்படும் இர்ஷாத் என்பவரிடம் இருந்து.

is Jaffna Library a museum? May be the books which were there old and not usable. ;)


இந்த பார்த்ததுமே பகிரங்கமாக அவரது பெயரை சொல்லிக் கண்டித்தேன்.
பல தமிழ்,முஸ்லிம் நேயர்களும் கொதித்துப் போய்க் கண்டனம் தெரிவித்தனர்.

ஒரு Sensitive விஷயத்தை கிண்டல் செய்கின்றார் என்றால் இவர் மனதில் எவ்வளவு வஞ்ச உணர்ச்சி இருக்கவேண்டும்.
யுத்தம் நடந்துகொண்டிருந்த காலத்திலும் இவரது கிண்டல் smsகள் வந்திருக்கின்றன.


இவரது பதிவுகளைப் பார்த்தாலே அடிக்கடி தொனிக்கும் விஷம,காழ்ப்பு உணர்வுகளையும், வித்தியாசப்படுகிறேன் என்ற தொனியில் மற்றவர்களின் உணர்வுகளை மதிக்காத ஒரு கேவலமான கிண்டல் தொனியில் இருக்கும்.

இலங்கையில் மட்டுமல்ல உலகம் முழுதும் வாழும் தமிழரால் மட்டுமல்ல வேறு மொழிபெசுவோராலும் கண்டிக்கப்பட்ட அந்தக் கருப்பு நிகழ்வான யாழ்ப்பாண நூலக எரிப்பை நியாயப்படுத்துவது போலல்லவா இருக்கிறது இர்ஷாத் சொல்லி இருக்கும் விஷயம்.

இதற்கு மேலே அதை நியாயப்படுத்தி என்ன கொடும சார் என்ற தன் தளத்தில் தனது வழமையான காழ்ப்புணர்ச்சிப் பதிவொன்றையும் இட்டுள்ளார்.

http://eksaar.blogspot.com/2010/06/blog-post_22.html

யாழ் நூலக எரிப்பு கண்டிப்பிற்குரியது. ஆனால் அதில் பழைய புத்தகம் இருந்தது, ஓலைச்சுவடி இருந்தது என்பதெல்லாம் ரொம்பவே ஓவர். அவை இருந்திருந்தால் யாழ்ப்பாணத்தின் சாமானியனுக்கு என்ன பயன் கிடைத்திருக்கும்? பழைய ஓலைச்சுவடிகளை வாசித்து விளங்க முடியுமா? அல்லது அது இன்று பாவிக்க கூடிய நிலையில் தான் இருந்திருக்குமா?


ஆனால் அது வேண்டுமானால் தொல்பொருள் ஆக மதிப்பு மிக்கதே. ஒரு நூதன சாலையில் வைக்கப்பட்டிருக்கவேண்டிய விடயங்கள் அவை.


இன்று இவ்வாறாக யாழ் நூலகத்திற்கு புனித தன்மை கொடுப்பதன்மூலம் அதுவும் ஒரு காட்சிப்பொருளாக மாற்றப்பட்டுள்ளது. சுற்றுலா தலமாக வேண்டுமானால் அபிவிருத்தியடையலாம்.


இவரெல்லாம் ஒரு படித்த மனிதர்? தூ..

ஒரு சமூகத்தின் கல்விக்கான அடையாளம்..பல அறிய நோல்ல்களைப் பேணிப் பாதுகாத்த அந்த நூலகத்தின் அருமை தெரியாத இந்த ஜென்மம் தான் நவீன கலாசாரம்,கல்வி,நாகரிகம்,முன்னேற்றம்.. என் சமயம்,சமூகம் பற்றியும் மற்றவருக்கு உபதேசம் செய்கிறது..

இப்போது நாங்கள் சொல்ல வேண்டியிருக்கிறது..
என்ன கொடும சார்..

அந்த எரிக்கப்பட்டு அழிக்கப்பட்ட அரிய நூல்களின் பெறுமதியும் அந்த அருமை பெருமையும் இவர்களைப் போன்றோருக்கு தெரிந்தால் தானே?

அந்த நூலகம் யாழ்ப்பாண மக்களுக்கு மட்டுமன்றி இலங்கையில் வாழ்ந்த எத்தனையோ இடங்களை சேர்ந்தோருக்கும் ஒரு ஆவணத் தொகுப்பகமாக, ஆராய்ச்சிக் கூடமாக விளங்கியிருக்கிறது.

யாழ் நூலக எரிப்பு இடம்பெற்ற பொது இவரெல்லாம் பிறந்திருப்பாரோ என்னவோ?

இதைக் கொஞ்சம் வாசிச்சுப் பாருங்க தம்பி..

யாழ் பொது நூலகம் எரிப்பு, 1981


தெரியாத விஷயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.. இல்லை தேடிப் பாருங்கள்.. அப்படியில்லாவிட்டால் அதுபற்றிப் பேசி மற்றவரைப் புண்படுத்தி பின் உங்கள் முதுகைப் புண்ணாக்கிக் கொள்ளாமல் வாயை மூடிக் கொண்டு உங்கள் வேலைகளைப் பாருங்கள்.

என்ன கொடும சார் எனப்படும் இர்ஷாத் இதற்கு மன்னிப்புக் கோரவேண்டும்.

# # # # #

இந்த இடத்தில் நீண்ட நாட்களாக என் மனதை அரித்துக் கொண்டிருக்கும் இன்னொரு விஷயம் பற்றியும் சொல்லவேண்டும்.


தமிழிலும் சமயத்திலும் தான் சார்ந்த சமூகத்திலும் தீராப் பற்றுக் கொண்ட ஒருவர் பதிவர் சந்ரு..
இவர் அண்மைக் காலமாக ஈழத் தமிழர் போராட்டம் பற்றி தொடர் பதிவுகள் இட்டு வருகிறார்.
தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் 

அந்தப் பதிவுகள் ஆரம்ப முதலே யாழ்ப்பாணத் தமிழ்த் தலைமைகளும்,தமிழரும், கிழக்கிலங்கைத் தமிழரை அடிமைப்படுத்தி வருவது போலவும் ஏமாற்றி வருவது போலவும் உருவகப்படுத்தியே காட்டுகின்றன.
அதுவும் கையாளப்பட்டுள்ள வார்த்தைகள்.. மிக மிக வன்மையான,விஷம் தடவப்பட்டவை..

http://shanthru.blogspot.com/

நயவஞ்சகம்,துரோகம்,ஏமாற்று, இப்படி.. இவையெல்லாம் வெகு சிலவே.

இலங்கைத் தமிழ் அரசியல் பற்றி ஓரளவு தெரியும் என்பதாலும் அவை பற்றி தொடர்ந்து வாசிப்பவன் என்பதாலும் தவறான கருத்துக்கள் பரப்பப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாமல் அவருக்கு தனி மடல் ஒன்றை அனுப்பி இருந்தேன்.

இவரது தொடர் பதிவுகளுக்கான ஆதாரங்களையும் பிரசுரிக்குமாறு (இருந்தால்) கேட்டிருந்தேன்.

இதற்கான பதிலைப் பதிவாகப் போடுகிறேன் என்று சில நாள் கழித்துப் பதில் அனுப்பியவர் ஏதோ ஒரு இணையத்தளத்தில் இருந்து எடுத்து மீள்பிரசுரம் செய்வதாக தன் பதிவிலே சொல்லி இருந்தார். ஆனால் இன்று வரை
எந்த இணையத்தள என ஆதாரம் காட்டவில்லை.

இறுதியாக இலங்கையிலுள்ள அத்தனை தமிழ் பேசுவோராலும் மதிக்கப்படும் தந்தை செல்வாவையும் வம்புக்கு இழுத்துள்ளார்.

ஆதாரம் இல்லாமல் இரு சமூகங்களுக்கிடையில் கருத்துப் பிளவுகளையும் தவறான பரப்புரைகளை மேற்கொள்வதற்கும் இவ்வாறான பதிவுகள் துணை போய்விடும்.

சமூக அக்கறை கொண்ட சந்ருவுக்கு இது தெரியாததல்ல.
இனியாவது கையாளப்படும் வார்த்தைகளை அவர் சரியாக பயன்படுத்தவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

சந்ருவின் அரசியல் கொள்கைகள் எவ்வாறு இருந்தாலும் பொது இடமொன்றில் கருத்துப் பகிரும்போது கொஞ்சம் நிதானமும் ஆதாரம் காட்டும் அவசியமும் பொறுப்புணர்வும் தேவை என்பதை சந்ரு புரிந்துகொள்ளவேண்டும்.

ஆதாரம் காட்டுவார் காட்டுவார் என்று பார்த்துக் காத்திருந்து தனிமடலில் கூட சந்ரு எதுவும் அனுப்பாததாலேயே பகிரங்கமாக இதை சுட்டிக் காட்டுகிறேன்.
இவ்வளவுக்கும் சந்ரு என்னுடன் நெருக்கமாகப் பழகும் ஒரு நல்ல நேயர்.பதிவர்.அடிக்கடி மடல் அனுப்புபவர்.

உடனே இது யாழ்ப்பாணத்தான் குரல் என்று மடத்தனமாக அல்லது குதர்க்கமாகப் பேசவேண்டாம்.
இது ஒரு தமிழனின் ஆதங்கம்.
காரணம் நான் யாழ்ப்பாணத்தில் இருந்த காலத்தை விடக் கொழும்பில் வாழ்ந்த வாழும் காலமே அதிகம்.
எல்லா சமூகத்திலும் எனக்கு நண்பர்களும் இருக்கிறார்கள்.
எங்கள் நட்புக்குள் சந்தேகமோ கருத்து வேறுபாடுகளோ இது போன்ற சில்லறைத் தனங்களால் வந்துவிடக் கூடாது என விரும்பிகிறேன்.
தமிழராய், தமிழால் ஒன்று படுவோரை இருப்போமே.. எதற்கு தேவையில்லாமல் பிளவுபட்டு வலிமைகளைக் குறுக்கிக் கொள்கிறோம்??

இன்னும் சில பதிவுலகப் பச்சோந்திகளையும் முகத்துக்கு முன்னால் 'வாழ்த்தி' நடிக்கும் குறுக்கு வழி நடிகர்களைப் பற்றி நான் எதுவும் சொல்லப் போவதில்லை..I just ignore them.

இதெல்லாம் எங்கும் சகஜமப்பா.. ;)

Post a Comment

85Comments

Please Select Embedded Mode To show the Comment System.*