சிங்கக் கதை இரண்டும், சில கிசுகிசுக்களும்

ARV Loshan
24



ஆப்பிரிக்காவின் அடர்ந்த ஒரு காடு..
சோம்பலான ஒரு நாள் காலை விடிகிறது..
வெட்டியாக இருந்த காட்டு ராஜா சிங்கம், சோம்பல் முறித்துக் கொண்டு தன் குகையிலிருந்து வெளியே வந்தது..

தன்னை நினைத்தால் அதற்கு ஒரே பெருமை.. என்ன கம்பீரம்.. என்ன ஒரு அழகு.. கர்ஜனையின் அதிர்வு என்ன.. ஒவ்வொரு மிருகமும் தன்னைக் கண்டு அஞ்சி ஓடுவதும், தனக்கு அவை வழங்கும் மரியாதையும் என்ன..

என்றாலும் தனது மதிப்பு,தன் மீது மற்றவைகளுக்கு இருக்கும் ஆதரவு என்பவற்றை சுய பரிசோதனை/கணிப்பு செய்துகொள்ள விரும்பியது..

வழியில் அகப்பட்ட ஒரு அப்பாவி முயலைப் பார்த்து " ஏய் முயலே, இந்தக் காட்டிலேயே யார் பலசாலி?" அதட்டியது சிங்கம்..
நாடு நடுங்கிப் போன முயல் ஒரு நொடி கூடத் தாமதிக்காமல் "ஐயா மகாராசாவே.. நீங்கள் தான் .. இதில் சந்தேகம் எதுக்கு?" அன்று விட்டு ஒரே ஓட்டமாக ஓடிவிட்டது..

அடுத்து சிங்கத்திடம் அகப்பட்டது ஒரு நரி ..
சிங்கம் பாதிக் கேள்வி கேட்க முதலே "சிங்க மகாப் பிரபுவே, உங்களைவிட்டால் இங்கே பலசாலி வேறு யார் உள்ளார்கள்" என்று துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடி விட்டது...

இப்படியே கண்ணில் படுகிற ஒவ்வொரு மிருகமும் சிங்கமே பெரும் பலசாலி என்று ஒத்தூதி விட்டு ஓடிக் கொண்டிருந்தன..
பிடிபடாப் பெருமையுடன் நடந்து வந்த சிங்கத்தின் கண்ணில் ஆற்றோரமாக தன்பாட்டில் நீர் அருந்திக் கொண்டிருந்த யானை ஒன்று தென்பட்டது...

யானையின் பின்னாலிருந்து "ஏய் தடியா.. இந்தக் காட்டில் யார் பெரும் பலசாலி?" என தன வழமையான கேள்வியை எழுப்பியது சிங்கம்.

யானை அதைக் கேளாதது போல சிங்கத்தின் பக்கம் திரும்பாமலேயே தன் வேலையிலேயே கவனமாக இருந்தது யானை.

மீண்டும் கூப்பிட்டுப் பார்த்தது சிங்கம்.. ம்கூம். யானை திரும்புவதாயில்லை..

பொறுமை இழந்த சிங்கம் தன் முன்னங்காலால் யானையின் முதுகில் ஓங்கி ஒரு அடி அடித்தது..

கோபத்துடன் திரும்பிய யானை அப்படியே சிங்கத்தை தன் தும்பிக்கையால் நான்கைந்து தடவை விர் விர் என்று சுழற்றி எறிந்த எறியில் சிங்கம் பல காத தூரம் தாண்டிப் போய் விழுந்தது..
எழும்ப முடியாதவாறு பலமான அடியுடன், ஒன்றிரண்டு எலும்புகளும் நொறுங்கி முறிந்ததுடன் எழும்பிய சிங்கம், முக்கி முனகிக் கொண்டு தட்டுத் தடுமாறியவாறு யானைக்கு அருகில் சென்றது..

"அடேய் பாவிப் பயலே.. விடை தெரியலேன்னா தெரியல என்று சொல்லவேண்டியது தானே.. அதுக்கு என் இப்படி ஒரு படுபாதக வேலை செய்தாய்.. யப்பா.. ஏன்னா அடி.. அவ்வ்வ்வவ்வ்வ்வவ்வ்வ்"
என்று புலம்பிவிட்டு போனது.

இது தான் பலரும் அறிந்த ஒரிஜினல் கதை வடிவம்...
ஆனால் அண்மையில் என் நண்பன் கஞ்சிபாய் எனக்கு மின்னஞ்சலிய புதிய வடிவம்(version) இது..

முதல் ஏழு பந்திகளும் மாற்றமில்லை..
அதற்குப் பின் கதை மாறுகிறது..

சிங்கம் கேட்டு முடிக்க யானை மிகக் கூலாத் திரும்பியது..

"அட சிங்கமா? நீ இன்னும் போகல? என்ன கேட்டாய்? யார் இங்கே பலசாலியா?"

யானையின் இந்தக் கேள்வித் தொனியே ஒரு மாதிரியா இருக்க, சிங்கம் குழப்பத்தோடு ஆமாம் எனத் தலையாட்டியது..

"நேற்றுவரை நீ தான் பலசாலி என்று காடெல்லாம் பேச்சு இருந்தது.. இப்போ கொஞ்சம் நிலைமை மாறியிருப்பதாக பேச்சு அடிபடுகுது..கொஞ்ச நாளுக்குப் பிறகு வா.. சொல்றேன்" என்று சொன்ன யானை தன் வேலையைத் தொடர்ந்தது.

அண்மையில் விடியலில் சொன்ன கதை..

முக்கிய குறிப்புக்கள் -

சில கருத்துக் கணிப்புக்கள், பிரசாரங்கள்,அண்மைய நாட்டு நடப்புக்கள் எவற்றோடும் இதற்கு தொடர்பில்லை.

இந்தக் காடு ஆப்பிரிக்காவில் உள்ளதாகவே கஞ்சிபாய் சொன்னார்.


இதுவும் 'சிங்கம்' தானே.. ;)

கொசுறாக சில பதிவுலக கிசு கிசுக்கள்...

அலையடிக்கும் 'நீல' பதிவர் அண்மையில் இலங்கை வந்து சென்ற மயக்கும் பெயர் ஆரம்பிக்கும் இளம் பாடகி மீது மையலுற்று, முகப் புத்தகம் தொடக்கம் வலை, யூ டியூப் என்று சகல இடமும் அவர் பாடிய பாடல்கள் சேகரித்து வருகிறார்.

ஒரு வருடம் தாண்டிய கலாசாரக் காவலர் பதிவர் நாளை பொங்கல் ஸ்பெஷலாக புகைந்து போன அடுப்பிலே விறகு தள்ளும் அரிய முயற்சியில் இறங்கியுள்ளார்.(இது ஒரு பாரம்பரிய விளையாட்டாம்)
அத்துடன் தனது ஜிம் பாடியைப் பற்றி 'புஸ் புராணத்தில்' அவதூறு செய்யப் பட்டிருப்பதால் வெள்ளவத்தையிலுள்ள ஜிம் ஒன்றில் இரவு நேரங்களில் கடும் பயிற்சிகளிலும் இறங்கியுள்ளார்.

சொந்த செலவில் சூனியம் வைக்கும் சூப் பதிவர் மங்கள (மங்கலம் அல்ல) வழியில் எதிர்கால சுகபோகங்களை ஈட்டத் திட்டமிட்டுள்ளாராம்.இதனால் இனி சூப்பிலும் படங்கள் மாறலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

வேட்டைக்காரப் பதிவர் யாழ் பயணத்தின் இரண்டாம் நாளிலேயே வருங்கால வவுனியா வாழ்க்கையை விட யாழ் வாழ்க்கை கலர்புல் என்று கூறிவருகிறார். பார்த்தவரை பரவசம் என்கிறாராம்.. வவுனியா வடலி வாடினாலும் பரவாயில்லை என்கிறாராம்.மாமா வழி தானே மருமகன் வழியும்..

வலையில் குடியிருக்கும் நமீதாவின் தம்பி சிரிப்புப் பதிவர் Facebook, Twitter, Gtalk, Google wave என எல்லாவற்றிலும் புகுந்து விளையாடி அலுத்துப் போனதால் புதுசா யாராவது எதையாவது தொடங்க மாட்டார்களா எனப் பார்த்திருப்பதாகக் கேள்வி. இவர் log in ஆனாலே Twitter, Facebook உரிமையாளர்களும் கலங்கிப் போவதாக CNN செய்தி வெளியிட்டுள்ளது.

இரண்டெழுத்து நடிகரைத் தன் பெயரிலே கொண்ட மூன்றெழுத்து ஒலிபரப்பு பதிவர் அடிக்கடி அழகுப் பராமரிப்பு நிலையம் முன் காணப்படுகிறார். உயரமாவதற்கான உடற்பயிற்சிகளையும் நாடுகிறாராம்.. ராமசாமி அண்ணே.. உண்மை தானா??

சந்திரமுகி திரைப்பட வசனத்தால் அறியப்படும் சர்ச்சைக்குரிய பின்னூட்டப் பதிவர், தனது வழமையான கொடுமைப் பதிவுகளைக் குறைத்து, அண்மைக்காலமாக அரசியல் பதிவராகத் தன்னை இனம் காட்டி வருவது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இவர் அரசியலுக்கும் வந்துவிடுவாரோ என சிவாஜிலிங்கம், மேர்வின் சில்வா, விமல் வீரவன்ச போன்றோர் கிலி கொண்டுள்ளார்கள்.

கிசுகிசுக்கள் கண்டு என் மேல் நீங்கள் சிலர் பொங்குவதெல்லாம் இருக்கட்டும்..

எனது மனம் கனிந்த இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்....


Post a Comment

24Comments

Please Select Embedded Mode To show the Comment System.*