சிங்கம் படப்பிடிப்பு ஆரம்பிச்சிட்டாங்களாம்..
காடெல்லாம் மன்னிக்க.. கோடம்பாக்கமேல்லாம் ஒரே பரபரப்பு..
ஆதவன் புகழ் சூர்யா மீண்டும் அரிவாள் புகழ் ஹரியோடு இணைந்தால் சும்மாவா..
இது சூர்யாவின் 25வது படமாம்..
சும்மா நெட்டில் தேடிப்பார்த்தவேளையில் சூர்யாவின் சிங்கம் பட ஸ்டில்கள் பார்த்து மிரண்டு (உண்மையிலேயே) போனேன்..
நல்லாத் தானே இருந்தீங்க சூர்யா..
எல்லாம் நல்லாத் தானே போயிட்டிருந்துது.. யார் வைத்த சூனியம் இது?
அமைதியா ரிவர் போல போல போய்க் கொண்டிருந்த உங்களுக்கு டெர்ரர் ஆகும் இந்த ஐடியாவைக் கொடுத்த அறிவுஜீவி யார்?(கிடைத்தால் நாலு சாத்துங்க சூர்யா ரசிகர்களே)
இதோ நீங்களும் கண்டுகளிக்க சிங்கம் ஸ்டில்ஸ்...(யாம் பெற்ற இன்பம்.. சேம் ப்லட் தியரி தானுங்கோ..)
முன்னெச்சரிக்கை..
பலவீனமான இதயம் படைத்தவர்கள்.. பயந்த சுபாவமுள்ளவர்கள்.. சூர்யாவின் தீவிர,அதி தீவிர ரசிகர்கள் இவற்றை பார்க்க முன் ஒரு தடவை மனசைத் திடப் படுத்திக் கொள்க..
படங்களையும் பார்த்து அவற்றில் உள்ள அதிரடி பன்ச் வசனங்களையும் வாசித்தீர்களா?
நான் முன்பே எனது ஆதவன் விமர்சனத்தில் சொன்னது போல சூர்யாவை தேடி எதோ ஒரு பட்டம் வருவது கிட்டத்தட்ட உறுதியான மாதிரி தெரியுதில்ல? இந்த எல்லா சிங்கம் ஸ்டில்களையும் விட பெட்டரான ஒன்று கீழே..
ஒரிஜினல் சிங்கம்..

நல்லவனா இருப்போம்னு பார்த்தா யாரும் விடுறாங்க இல்லையே.. ;)
சூர்யா நான் ஆதவன் விமர்சனத்தில் சொன்ன ஆலோசனையைக் கொஞ்சம் கருத்தில் கொள்க.. இல்லைன்னா குறைந்தபட்சம் ஜோவுடனாவது பேசிப் பாருங்க..
28 comments:
சிங்கம் அ வாகுமா
சிங்கம் அ வாகுமா
me the first.............
//அமைதியா ரிவர் போல போல போய்க் கொண்டிருந்த உங்களுக்கு டெர்ரர் ஆகும் இந்த ஐடியாவைக் கொடுத்த அறிவுஜீவி யார்?(கிடைத்தால் நாலு சாத்துங்க சூர்யா ரசிகர்களே)//
எல்லாம் நம்ம கலைக்குடும்ப மாப்பிள்ளை "ஹரி" தான்.
விதி யாரை விட்டது.
ஏல ஓடு ஓடு நானும் ரவுடி நானும் ரவுடி,அப்படின்னு சூர்யா பீல் பண்ற மாதிரி தெரியுது ,அட பார்த்துப்பா.
ம்ம்ம் சரி சரி...
பகிர்வுக்கு நன்றிபா
விஜய் ஐ அடுத்து இப்போ சூர்யாவும் காமெடி பீஸ் ஆயாச்சி போல.
(வில்லு முன்பு ) இளையதளபதி - (வில்லு பின்பு ) இளையதலைவலி
(சிங்கம் முன்பு ) இளையசிங்கம் - (சிங்கம் பின்பு ) இளையஅசிங்கம்
தமிழ்நாட்டில் ஆக்ஷன் படம் நடிக்காவிட்டால் மெகா ஸ்டார் அந்தஸ்தை தக்க வைத்துக்கொள்ள முடியாது என்று கணக்கு போட்டிருக்கிறார் போலும் சூர்யா.
ஆனாலும் இதெல்லாம் சூர்யாவுக்கு பொருந்துவதாகவே நான் நினைக்கிறேன் .
எதையுமே அளவோடு செய்தால் சரிதான்.
விதி யாரை விட்டது லோசன் அண்ணா, அடுத்த சூப்பர் ஸ்டார் யார் எண்டு தேடுறதா விட, அடுத்த விஜய் யார் எண்டு தேடலாம் போல .........ம்ம்.....பொறுத்து இருந்து பார்போம் சிங்கத்தை......
VETTI PAYAL said...
(சிங்கம் முன்பு ) இளையசிங்கம் - (சிங்கம் பின்பு ) இளையஅசிங்கம்
இப்போது இதுதான் சூர்யாக்கு பொருத்தாமான பெயர்...
நான் ஏதோ சிங்கம் என்று ஓடி வந்து வாசித்தேன்.நம்ம பாஷையில் சிங்கம் என்றால் வேற...
"Is these a LION in you"
சூர்யா ஏன் இப்படி ஆயிட்டாரு???
முடியல இயக்குனர் ஹரிய யாராவது மெண்டல் ஆசுபத்திரியில் அனுமதிக்கவேண்டும் உந்த அரிவாள் மேனியாக்கு மருந்து செய்ய ......
பாவம் சூர்யா தொடர்ந்து கெளதம் முருகதாஸ் படம் தான் நடிப்பேன் எண்டால் மிச்ச நாள் வீட்ட தான் இருக்க வேணும்
முன்பு விஜய் இப்போ சூர்யாவா? நடக்கட்டும் நடக்கட்டும்.... பேரழகன் சூர்யா பேரழுக்கன் சூர்யாவாகிவிட்டார் இருந்தாலும் நீங்களும் கட்சி மாறிவிட்டீர்கள். இதுவரை நாள் விஜய் ரசிகர்கள் இப்போ சூர்யா ரசிகர்களையும் சமாளிக்கவேண்டும். சூர்யா நிச்சயமா ஒரு நல்ல நடிகனே அதனால் அவரால் திறமையான இயக்குனரின் பாடங்களில் மட்டுமே அசத்தமுடிகிறது.
என்னத்தச் சொல்ல.... எல்லாமே நீங்களே சொல்லிட்டிங்களே...
ஆதவன் வசூல் பரவாயில்லையாமே? இப்படியே போனால் இன்னுமொரு நடிகனை இழந்துவிடப்போகிறேம்.
// SShathiesh said...
முன்பு விஜய் இப்போ சூர்யாவா? நடக்கட்டும் நடக்கட்டும்.... பேரழகன் சூர்யா பேரழுக்கன் சூர்யாவாகிவிட்டார் இருந்தாலும் நீங்களும் கட்சி மாறிவிட்டீர்கள். இதுவரை நாள் விஜய் ரசிகர்கள் இப்போ சூர்யா ரசிகர்களையும் சமாளிக்கவேண்டும். சூர்யா நிச்சயமா ஒரு நல்ல நடிகனே அதனால் அவரால் திறமையான இயக்குனரின் பாடங்களில் மட்டுமே அசத்தமுடிகிறது//
சூர்யாவின் ரசிகர்கள் அவரின் நடிப்பைப் பார்த்து ரசிகரானவர்கள். இப்போதுள்ள நிலையை அவர்களும் வெறுக்கிறார்கள் என்பதே உண்மை. விஜயை ரசிப்பவர்களைப்பற்றி நான் என்ன சொல்ல????
ஏன் லோசன் அண்ணா என்ன நடந்தது உங்களுக்கு??? கொஞ்ச காலமா விமர்சனம் என்ற பெயரில எல்லாரையும் பிழையாக போட்டு தாக்குறிங்க. எங்களின் வலைத்தளத்தின் பரம ரசிகனாக இருந்தபோதிலும் உங்களது சில பதிவுகளுடன் எனக்கு உடன்பாடு இல்லை. வேட்டைகாரன் பாடல் விமர்சனம், ஆதவன் விமர்சனம், இப்ப சிங்கம்.
அண்ணா நீங்க என்னதான் வேட்டைகாரன் பாட்டை தாக்கி எழுதினபோதும் இண்டைய காலகட்டத்தில அப்பாடல்கள் எல்லோர் மத்தியிலும் பிரபலம் அடைந்துள்ளமையை மறுக்கமுடியாது. நான் விஜயின் திவீர ஒரு எதிரியாக இருந்தபோதிலும் அப்பாடல்கள் ஹிட் ஆனதை ஏற்றுக்கோள்கிறேன். பொதுவாக விஜயின் படங்கள் சோடை போனாலும் பாடல்கள் ஒரு போதும் பிழைப்பதில்லை.அதுபோலவே, இப்பாடல்கள் எல்லாம் அதிரடியாக இருந்தபோதிலும் அனைவரையும் குத்தாட்டம் போட வைத்துள்ளது.
அடுத்ததாக ஆதவன் பற்றி மட்டமாக எழுதி இருந்தீர்கள் குருவிக்கு ஒப்பிட்டு. ஆதவன் சுர்யாவின் ஏனைய படங்களோடு ஒப்பிடுமபோது சொதப்பலாக இருந்தாலும் அது என்ன அவ்வளவு கேவலமாகவா இருந்தது? தியேட்டரில் மக்கள் ரொம்பவே ரசித்து பார்த்ததை நான் பார்த்தேன். படம் காமடியாகவும் கலர்புள்ளாகவும் (சுப்பர் என்று சொல்லாவிடினும்) பாக்க கூடிய நல்லா படமாகவும்தானே இருப்பதாக எல்லோரும் பொதுவாக கூறினார்கள். (பதிவர்களை விடுத்து). ஏன் நீங்கள் எல்லோரும் ஒரே அடியாக போட்டுத்தாக்குகின்றீhகள்? முன்பு விஜய் இப்போது சு}ர்யாவோ. விஜயை பழித்ததுக்காவது நியாயம் இருந்தது ஏனெண்டா தந்தது எல்லாம் தொடர்ச்சியா டம்மி படங்கள். ஆனா சு}ர்யாவுக்கு என்ன குறை?
வேட்டைக்காரன் பாடல் விமர்சனமாவது பறுவாயில்லை வந்த பின் எழுதினீர்கள் ஆனால் இப்ப வராத சிங்கத்துக்கு இப்பவே போட்டு தாக்தொடங்கிவிட்டீர்களா? முன்பு ஹரியின் இயக்கத்தில் "ஆறு" படம் வந்தது அவரது அறுவா பாணியில். அதை ஏற்றுக்கொண்டார்கள்தானே ரசிகர்கள். உண்மையில் எனக்கு ஆறு படம் சுத்தமாக பிடிக்கவில்லை. ஆனா வெட்டுக்குத்து பாணியில் வித்தியாசமாக வந்த சுப்பிரமணியபுரத்தை ஏற்றுக்கொண்ட உங்களால் சிங்கம் மட்டும் கேவலமாக வரப்போதெண்டு எவ்வாறு இப்பவே உகிக்க முடிகிறது?? அண்ணா நீங்கள் நல்ல தீர்க்கதரிசியோ. ICC சாம்பியன்ஸ் Trophy ஊகம் என்ன ஆனது தெரியும்தானே!
இக்கருத்துக்கள் லோசன் அண்ணா உங்களை தாக்க வேண்டும் என்று எழுதவில்லை. என்ன மாதிரி சககருத்துகளை கொண்டவர்களுக்காகக்காக எழுதினது. பிழை இருந்தால் மன்னிக்கவும்!! Thanks Anna... If anything wrong pls excuse me.... :)
சிங்கம் அசிங்கமாகமல் இருந்தால் சரி...:-))
//ஆனால் இப்ப வராத சிங்கத்துக்கு இப்பவே போட்டு தாக்கத்தொடங்கிவிட்டீர்களா?//
வெள்ளம் வரமுதலே அணை கட்டுவதைப்போல இது..
//வெட்டுக்குத்து பாணியில் வித்தியாசமாக வந்த சுப்பிரமணியபுரத்தை ஏற்றுக்கொண்ட உங்களால் சிங்கம் மட்டும் கேவலமாக வரப்போதெண்டு எவ்வாறு இப்பவே ஊகிக்க முடிகிறது??//
சுப்ரமணியபுரம் வெட்டுக்குத்து கதையல்ல - அது துரோகத்தின் கதை. துரோகத்தின் வன்மையைக் காட்ட அதிக வன்முறையைத் தூவி மனங்களில் ஆட்டம் போட்ட படம். ஆனால் ஹரியின் பழைய படங்களின் அணிவகுப்பு இது சுப்ரமணியபுரம் படம்போல இருக்கப்போவதில்லை என்பதைத் தாராளமாகக் காட்டும். அதைவிட, சுப்ரமணியபுரம் எந்த முன்னோட்டத்திலும் வன்முறையைக் காட்டவேயில்லை என்பதையும் நினைத்துப் பார்க்கவேண்டும்.
சூர்யா என்ற நடிகர் கொஞ்சம் கொஞ்சமாக மாஸ் ஹீரோவாக முயற்சிக்கின்றார். அவருக்கு வேண்டாம் இந்த விஷப் பரீட்சை. கமல் ரஜனி கூட தங்கள் காலத்தில் இப்படி பில்டப்புகள் பஞ்ச் டயலாக்குகள் செய்யவில்லை. இளம் நடிகர்கள் திசை மாறிச் செல்கின்றார்கள்.
விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு சூர்யாவின் இந்த படங்கள் பிடித்திருக்கலாம் ஆனால் உண்மையான சினிமா ரசிகனுக்கு இவை குப்பைதான்.
//விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு சூர்யாவின் இந்த படங்கள் பிடித்திருக்கலாம் ஆனால் உண்மையான சினிமா ரசிகனுக்கு இவை குப்பைதான்.
உண்மையான சினிமா ரசிகனாக நீங்கள் இருப்பதாக தெரியவில்லை, நீங்கள் சினிமாவை விமர்சிக்கும் நோக்கோடு பார்க்கிறீர்கள் என்பதுதான் உண்மை.
வெளிவரும் எல்லா சினிமாவும் கலைப்படைப்பாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை,
எங்களைமாதிரி உழைத்து களைத்து வரும் மக்கள் உங்கள் கலைப்படங்களை மட்டும் எதிர்பார்ப்பதில்லை.
நீங்கள் எப்படி தெரியுமா உங்களது இரசனை மட்டம் குறைவடையாமலிருக்க சினிமாவின் தரமட்டத்தை குறைகூறுகிறீர்கள்.
உங்களுக்கென்ன A.C room இலை இருந்திட்டு ஒரு பதிவு போட்டிக்கு போட்டுடிடலாம்,(அதுவும் எல்ல பதிவையும் பார்க்கிறது , எல்லோரும் நல்லது என்றால் நல்லது, இல்லாவிடின் குப்பை).
உங்கள் கலை இரசனைக்கு படம் வேண்டுமா ஈரனிய, இத்தாலிய சினிமா இருக்கு பாருங்க, உங்க விமர்சனத்தை mail அனுப்புங்க , அந்த directors இக்கு.
நீங்கள் நன்றாக விமர்சித்த ”உன்னைப்போல் ஒருவனை “
தரகுறைவாக விமர்சிக்கவும் முடியும்.
நீங்கள் நினைப்பது போல், நீங்கள் படம் நல்லது அல்ல என்று சொல்வதை கேட்டு படம் பார்க்க போவதை யாரும் நிறுத்திவிட மாட்டார்கள்
கஜந்தனுக்கு
நான் மசாலாப் படம் கூடாது எனச் சொல்லவில்லை. அதற்கு என சில குறிப்பிட்ட நடிகர்கள் இருக்கின்றார்கள் அவர்கள் அதனைப் பார்க்க சூரியா வாரணம் ஆயிரம் அயன், மாயாவி போன்ற படங்களில் நடித்தால் நல்லது.
இவ்வளவும் ஏன் ஆனானப்பட்ட சூப்பர் ஸ்டார் ரஜனி நடித்த நல்ல படமான ஸ்ரீ ராகவேந்திராவையே தோல்வி அடையச் செய்தவர்கள் நம்மவர்கள். ஏனென்றால் ரஜனியிடம் இருந்து அவர்கள் இப்படியான படங்களை எதிர்ப்பார்ப்பதில்லை.
விஜயின் போக்கிரியும் கில்லியும் பலரைக் கவர்ந்த அளவிற்க்கு ஆதியும் வில்லும் குருவியும் கவராத காரணம் கதை இல்லாமைதானே ஒழிய விஜயின் நடிப்புச் சரியில்லை என்பதுதான்.
//நீங்கள் எப்படி தெரியுமா உங்களது இரசனை மட்டம் குறைவடையாமலிருக்க சினிமாவின் தரமட்டத்தை குறைகூறுகிறீர்கள்.//
இல்லை நானும் மசாலாப் படங்களை ரசிப்பவன் தான் நான் எழுதிய அயன் விமர்சனதைப் பார்க்கவும். ஆனால் அதற்காக லொஜிக்கே இல்லாத கதை இல்லாத படங்களை எல்லாம் ரசிப்பதில்லை.
//உங்களுக்கென்ன A.C room இலை இருந்திட்டு ஒரு பதிவு போட்டிக்கு போட்டுடிடலாம்,(அதுவும் எல்ல பதிவையும் பார்க்கிறது , எல்லோரும் நல்லது என்றால் நல்லது, இல்லாவிடின் குப்பை).//
ஏன் இந்த தனிமனித தாக்குதல் ஏசிக்கை இருந்தால் என்ன வெயிலில் இருந்தால் என்ன பிடித்தால் பிடித்தது என்றும் பிடிக்கவில்லையென்றால் பிடிக்கவில்லையென்றும் சொல்வேன். யாருடனும் போட்டிக்கு பதிவு போடுவதில்லை. பெரும்பாலான என் விமர்சனங்கள் வலையுலகில் எழுதும் பலரின் விமர்சனங்களுடன் ஒத்துப்போகின்றது. என்னுடைய விமர்சனங்கள் மற்றவர்களின் விமர்சனத்தை விட முந்தித்தான் வருகின்றது, தேவையென்றால் தேடிப்பார்க்கவும்.
//உங்கள் கலை இரசனைக்கு படம் வேண்டுமா ஈரனிய, இத்தாலிய சினிமா இருக்கு பாருங்க, உங்க விமர்சனத்தை mail அனுப்புங்க , அந்த directors இக்கு.//
இல்லை நான் விரும்பிப் பார்ப்பது ரஷ்ய, ஹிந்தி மற்றும் பிரெஞ்ச் படங்கள்.
//நீங்கள் நன்றாக விமர்சித்த ”உன்னைப்போல் ஒருவனை “
தரகுறைவாக விமர்சிக்கவும் முடியும். //
இதுதான் கீழ்த்தரமான செயல் என்னுடன் கோபம் என்றால் நான் விமர்சித்த படத்தை கேவலமாக விமர்சிப்பது.
//நீங்கள் நினைப்பது போல், நீங்கள் படம் நல்லது அல்ல என்று சொல்வதை கேட்டு படம் பார்க்க போவதை யாரும் நிறுத்திவிட மாட்டார்கள்//
அப்படியா, ஆனால் சில நண்பர்கள் ஆதவன் பார்க்கச் செல்லவில்லை.
ஒரு சின்னவேண்டுகோள் : இப்படிச் சின்னப் பிள்ளைத்தனமான விமர்சனங்களை வைக்கும் போது உங்கள் சொந்தப் பெயரில் வாருங்கள். நீங்கள் யார் என்பது தெரியும்.
http://vimarsagan1.blogspot.com/2009/10/blog-post_6782.html
நல்ல ககதையின் நாயகளை தமிழ் சினீமா இழந்து கொண்டிருக்கிறது...
வேறென்ன சொல்ல....
வாழ்க தமிழ் சினிமா... வளர்க அவர்தம் கொள்கைகள்...
"கஜந்தன்"
//உங்கள் கலை இரசனைக்கு படம் வேண்டுமா ஈரனிய, இத்தாலிய சினிமா இருக்கு பாருங்க, உங்க விமர்சனத்தை mail அனுப்புங்க //
முதலில் உங்களிடம் ஒரு கேள்வி
தமிழின் தரம் மேல் உயர்வது உங்கழுக்கு விருப்பம் இல்லையா?
ஈரனிய, இத்தாலிய சினிமா தான் அப்படி படங்கள் எடுக்க வேண்டுமா?
//நீங்கள் நன்றாக விமர்சித்த ”உன்னைப்போல் ஒருவனை “
தரகுறைவாக விமர்சிக்கவும் முடியு//
சின்ன பிள்ளை தனமாக இல்லையா?
வேணும் எண்டா ஒருக்கா எழுதி பாருங்க...
உங்கழுக்கு என்னால் நேரம் சிலவழித்து பின்னூட்டம் இட ஏலாது..
நீங்கள் வம்புக்கேன்று பின்னூட்டம் இடுகின்றீர்கள். தமிழை உலக தரத்துக்கு உயர்த்துரத்துக்குரிய வழி முறையை பாருங்கள்...
Really sad to see this stills. Misssing a handsome hero....
movie release aagama namba edayum mudivu pana kudathu lotion..samy stills pathadillaya .??????????
if kamal poss this type of picture loshan will appreciate
Loshan anna arivaal kalachchaaraththaiye kondu vanththathu kamalahasan than (Devarmahan)
Post a Comment