August 26, 2009

இதெல்லாம் சொல்லியே ஆகவேண்டும்


இன்று எந்தப் பதிவும் போடாமல், (கந்தசாமி பற்றி எழுதியது பாதியிலேயே கிடக்கிறது...) முன்னைய பதிவுகளுக்கு வந்த பின்னூட்டங்களுக்கு பதில் அளிக்கவும் வாசிக்காமல் bookmark செய்து வைத்த நண்பர்களின் பல பதிவுகளுக்கு பிநூட்டமிடவும், அலுவலகத்தில் சில ஆணிபிடுங்கல்களுக்கும் இன்றைய நாளை ஒதுக்கினாலும், சில விஷயங்களை சொல்லியே ஆகவேண்டும் என்று இந்த அவசர மினிப் பதிவு...

இலங்கைப் பதிவர் சந்திப்பு நடந்து நான்கைந்து நாள் ஆகியும் இன்னும் பரபரப்பு குறையவில்லை.. விமர்சனங்கள் பின்னூட்டங்கள் பல கோணத்திலிருந்தும் வருவது குறிப்பிடத்தக்கது.

நான் தட்டச்சு சர்ச்சைக்குள் நுழைந்துகொள்ள ஆசைப்படாத காரணத்தால் என்னுடைய கருத்தை எந்தப் பதிவிலும் இடாமல் வேடிக்கை மட்டும் பார்த்து வந்துவிட்டேன்..

என் தனிப்பட்ட கருத்துக் கேட்டால் எனக்கு இரு வித (பல வித என்றும் சொல்லலாம்) தட்டச்சும் இயலும்.. எனினும் வேகமாகத் தட்டச்ச நான் பயன்படுத்துவது Phonetic முறை தான்..

எப்படி அடித்தாலும் என் தமிழ் வெளிவந்தால் மற்றவருக்கு தமிழாக அது புரிந்தால் போதும்..

-----------------

நேரடியாக பதிவர் சந்திப்பு ஒளிபரப்பானத்தில் தான் எத்தனை அனுகூலங்கள்.. நேரடியாக வராமலே பல பேர் இதில் நேரடியாக இணைந்திருந்தும் கலந்துகொண்ட எம்மை விட அழகாக விரிவாக விமர்சனங்கள் எழுதியிருப்பதும் எங்களுக்கு மிகப்பெரியதொரு வெற்றி..

எனினும் இணையத்தினூடு இணைந்து கேவலமாக உரையாடி கிண்டல் செய்த இருவர் பற்றித் தெரிந்தபோது மனம் சீ என்று போனது..
அதில் ஒருவர் இலங்கைப் பதிவர்.. நண்பராக ஓரளவு அவர் பற்றித் தெரிந்த போதும், அவர் அடிக்கடி வேடிக்கை செய்யும் மொக்கை போடும் ஒருவராக இருந்தபோதும், அவரை நான் இந்த சந்திப்புக்கு இரு காரணங்களுக்காக வர சொல்லி இருந்தேன்.

ஒன்று இலங்கையில்லுள்ள ஒரு புதிய திரட்டி பற்றி அவர் அனைவருக்கும் அறியத்தர.. அடுத்தது அவர் பொதுவாக எம்முடைய பல கருத்துக்களுக்கு மாற்றுக் கருத்துடையவர்..மாற்றுக் கருத்துக்களுடைய ஒருவர் வருவது சந்திப்பை மேலும் பயனுள்ளதாக்கும்..

பார்த்தால் வராமலேயே வந்தேன் என்று எனக்கு புருடா விட்டு விட்டு, onlineஇல் வந்து பெண்கள் பற்றி வம்பளந்து கொண்டிருந்திருக்கிறார்..
ஏன் இந்த வக்கிரம்?

------------------

ஆனாலும் அவருக்கு ஒரு தனிப்பட்ட நன்றி.. இன்று முதல் நான் எனது வலைத்தளத்தை செல்பேசியில் வாசிக்கக்கூடிய தளமாக மாற்றும் வழியை அறிமுகப்படுத்தியவர் அவரே..

இன்று முதல் உங்கள் செல்பேசிகளிலும் தமிழிலே தடங்கலில்லாமல் ஏன் வலைத்தளத்தைப் பார்வையிடலாம்...

----------------------

இன்று இலங்கை அணி நியூ சீலாந்து அணிக்கெதிராக இரண்டாம் டெஸ்டில் விளையாடும் அணியில் செய்துள்ள மாற்றங்கள் மிக ஆச்சரியமானவை..

மத்தியூசின் தசைப்பிடிப்புக்கு பதிலாக அணியுள்ளே கபுகேதரவை அழைத்ததன் மூலம் துடுப்பாட்ட வரிசை பலமாகியுள்ளது..

ஹேரத்தின் வரவு நான் எதிர்பார்த்தது.. ஆனால் மென்டிசின் நீக்கம் ஆச்சரியம்.. மூன்று சுழல் பந்துவீச்சாளர்களோடு இலங்கை அணி களமிறங்கி இருக்கலாம்.

குலசெகரவுக்கு ஓய்வு கொடுத்துள்ளார்களாம்.. தொடர்ந்து வரும் முக்கோணத் தொடர்,சாம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகள் கருதி..ஒரு இளம் வேகப்பந்து வீச்சாளர், அதிலும் FORMஇல் உள்ளவருக்கு ஓய்வு தேவையா?

ஒருவேளை புதிதாக அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ள இலங்கையின் தற்போதைய அதிவேகப் பந்துவீச்சாளரான தம்மிக்க பிரசாத்தை(இவர் சாம்பியன்ஸ் கிண்ண குழுவிலும் உள்ளார்) பரிசொதிக்கிறார்களோ?

இலங்கையின் சாம்பியன்ஸ் கிண்ண குழுவில் இருந்து டில்கார பெர்னாண்டோவை நீக்கியுள்ளார்கள்.. எனினும் என்னைப் பொறுத்தவரை தென் ஆபிரிக்காவின் பந்து மேலெழும் (BOUNCY) தென் ஆப்ரிக்க ஆடுகளங்களில் டில்கார உபயோகமாக இருப்பார்.

பிரசாத்தின் வேகப் பந்துவீச்சும் எதிரணிகளைப் பயமுறுத்தலாம்.. டில்காரவின் தொடர்ச்சியான அவருக்கு எதிரியாகி இருக்கலாம்.

நியூ சீலாந்துக்கேதிரான இரு போட்டிகளுக்கான குழுவில் அண்மைக்காலமாக உள்ளூர் போட்டிகளில் பிரகாசித்துவரும் அதிரடி சகலதுறை வீரர் கிகான் ரூபசிங்க சேர்த்துக் கொண்டிருப்பதில் மகிழ்ச்சி.. தொடர்ந்து சுப்பரின் கொல்லைக்குள்ளேயே நிற்காமல் திறமையான இளம் வீரர்களை தேர்வாளர் எடுப்பது மகிழ்ச்சி.
------------------------

நேற்று இரவு தூங்குவதற்கு முதல் தற்செயலாக தொலைகாட்சி அலைவரிசைகளை மாற்றிக் கொண்டிருந்தபோது K TVஇல் பதினோரு மணிக்கு ஆரம்பித்த 'கரையெல்லாம் செண்பகப்பூ' படத்தை கொஞ்ச நேரம் பார்த்தேன்..(அதிகாலை நான்கரை மணிக்கு எழும்பவேண்டி இருந்தாலும் படத்தின் மேலிருந்த ஈர்ப்பினால் தூங்கும் பொது ஒரு மணியாகி விட்டது)

அமரர் சுஜாதா எழுதிய இந்த நாவலை முன்பு முழுமையாக பல தடவை வாசித்துள்ளேன்.. படமாகப் பார்க்கும் வாய்ப்பு எப்போதும் கிடைக்கவில்லை.முழுமையாகப் பார்க்கலாம் என்றால் காலையில் வேலை.

யாராவது K TVக்கு சொல்ல மாட்டீர்களா இது போன்ற அரிய,வித்தியாசமான, நல்ல படங்கள் போடுவதாக இருந்தால் நாங்கள் பார்க்கிற நேரத்தில் வசதியாகப் போட சொல்லி..

அன்றொருநாள் நாசரின் 'அவதாரம்' திரைப்படமும் இதே நேரத்தில் தான் ஒளிபரப்பானது.

மற்ற நேரங்களில் போடுகிற மொக்கை திரைப்படங்களுக்கும்,தெலுங்கில் இருந்து தருவிக்கப்பட்ட மசாலாப் படங்களுக்கும் இந்த இரவு 11 மணி நேரத்தைக் கொடுங்களேன்...


16 comments:

யோ வொய்ஸ் (யோகா) said...

சில விஷயங்களை சொல்லியே ஆகவேண்டும் என்று இந்த அவசர மினிப் பதிவு...///

இது மினிப்பதிவு. அத நாங்க நம்பணும்.... அப்ப நாங்க எழுதுறது மைக்ரோ மினிபதிவா?

Admin said...

//எனினும் இணையத்தினூடு இணைந்து கேவலமாக உரையாடி கிண்டல் செய்த இருவர் பற்றித் தெரிந்தபோது மனம் சீ என்று போனது..//


உண்மைதான் அண்ணா நான் நேரடியாக ஒளிபரப்பை பார்த்துக்கொண்டு இந்தியாவைச் சேர்ந்த வசனத்துடன் அரட்டை பெட்டி முஉலம் சில விடயங்களை பகிர்ந்து கொண்டு இருந்தபோது. இவர்களின் அட்டகாசங்கள் ஆரம்பித்தன எனக்கு கோபம் அதிகமாக வந்தது. இருந்தும் நானும் எதிராக கருத்து சொன்னால் பார்ப்போருக்கு நன்றாக இருக்கும் என்பதால் விட்டு விட்டேன். இருந்தும் கானா பிரபா அண்ணா விடவில்லை.




இதிலே வருத்தப்பட வேண்டிய விடயம் நம் நாட்டு பதிவர்களே சந்திப்பினை தரக்குறைவாக பேசுவதுதான். உதவி செய்ய முடியவில்லை என்றால் உபத்திரமாவது செய்யாமல் இருக்கலாம்தானே. பதிவர்களை ஊக்கப்படுத்த வேண்டியவர்களே இப்படி நடந்து கொள்வது கவலைக்குரிய விடயமே.

அதே போன்றுதான் அண்ணா இந்த அனானிகள் தொல்லைகள் குஉட அதிகரித்து விட்டன. இவர்களும் அவர்களைப் போன்றவர்கள்தான்.


என்னால் பதிவர் சந்திப்பு தொடர்பாக இடுகை இடப்பட்ட அத்தனை இடுகைகளுக்கும் தமிழர்களையும், சந்திப்பையும் தரக்குறைவான முறையிலே பின்னுஉட்டமிட்டார் ஒரு அனானி. அவரின் பின்னூட்டங்கள் இன்னும் எழுத வேண்டும் என்ற எண்ணத்தை தோற்றுவித்தது

Admin said...

மன்னிக்கவும் அண்ணா எனது பின்னூட்டத்திலே அவசரத்திலே சில எழுத்துப் பிழைகள் வந்திருக்கின்றன.

அதனால் மீண்டும் பின்னூட்டமிடுகிறேன்.


உண்மைதான் அண்ணா நான் நேரடியாக ஒளிபரப்பை பார்த்துக்கொண்டு இந்தியாவைச் சேர்ந்த வசந்துடன் அரட்டை பெட்டி மூலம் சில விடயங்களை பகிர்ந்து கொண்டு இருந்தபோது. இவர்களின் அட்டகாசங்கள் ஆரம்பித்தன எனக்கு கோபம் அதிகமாக வந்தது. இருந்தும் நானும் எதிராக கருத்து சொன்னால் பார்ப்போருக்கு நன்றாக இருக்காது என்பதால் விட்டு விட்டேன். இருந்தும் கானா பிரபா அண்ணா விடவில்லை.




இதிலே வருத்தப்பட வேண்டிய விடயம் நம் நாட்டு பதிவர்களே சந்திப்பினை தரக்குறைவாக பேசுவதுதான். உதவி செய்ய முடியவில்லை என்றால் உபத்திரமாவது செய்யாமல் இருக்கலாம்தானே. பதிவர்களை ஊக்கப்படுத்த வேண்டியவர்களே இப்படி நடந்து கொள்வது கவலைக்குரிய விடயமே.

அதே போன்றுதான் அண்ணா இந்த அனானிகள் தொல்லைகள் கூட அதிகரித்து விட்டன. இவர்களும் அவர்களைப் போன்றவர்கள்தான்.


என்னால் பதிவர் சந்திப்பு தொடர்பாக இடுகை இடப்பட்ட அத்தனை இடுகைகளுக்கும் தமிழர்களையும், சந்திப்பையும் தரக்குறைவான முறையிலே பின்னூட்டமிட்டார் ஒரு அனானி. அவரின் பின்னூட்டங்கள் இன்னும் எழுத வேண்டும் என்ற எண்ணத்தை தோற்றுவித்தது.

Unknown said...

bloggers santhippil kalanthuraiyaadiya vidayaththai thaango

கலை said...

செல்பேசியில் தமிழில் பார்ப்பதற்கு என்ன செய்ய வேண்டும். தமிழ் எழுத்துக்கள் ஏதாவது தரவிறக்கம் செய்ய வேண்டுமா? என்னுடைய செல்பேசியில் அப்படி எந்த எழுத்துக்களும் தரவிறக்கம் செய்யப்படவில்லை. உங்களுடைய பக்கம் வாசிக்க முடியவில்லை.

சி தயாளன் said...

ம்..எம்மவர்களில் சிலருக்கு ஏன் தான் இப்படி புத்தி போகுதோ தெரியவில்லை..

விட்டுத்தள்ளுங்கள்....

வர்மா said...

இலங்கைபதிவாளர்சந்திப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கு.எல்லாப்பதிவையும் வாசிக்கவே நேரம்போதவில்லை.பின்னூட்டம்போட ஒருநாளை ஒதுக்கவேணும்.நல்லமாதிரி நடந்துமுடிந்தது. அடுத்தது இதைவிடசிறப்பாக இருக்கவேணும்.கிரிக்கெட்டைப்பற்றி எனக்கு கனக்கத்தெரியாது. முதல்டெஸ்ட்டை காலியில்வைத்து எதிரணியை காலியாக்கிப்போட்டு தொடரைவென்றுவிடுவார்கள்.
ஒருநாள்போட்டியின் முதல் மூன்று போட்டியையும் தம்புல்லவில் வைத்து தொடரைவென்றபின் செத்தபாம்போடை கொழும்பில் விளையாடுவினம்.இந்தசூத்திரம்தெரியாத எதிரணிஅவமானத்துடன் நாடுதிரும்பும். இதுவிளையாட்டா?சதியா?
அன்புடன்
வர்மா.

புல்லட் said...

திரட்டிக்காரனுடைய கொமெடி மகா கொமெடி... செய்வதையெல்லாம் செய்து விட்டு தன்ட திரட்டியில சேர்க்க சொல்லி வந்து நிக்கிறானே? என்ன கொடுமை சார்? அவனை பெண் டிர்சாத்து சாத்தென்று சாத்தியிருப்பார்கள்..நல்லகாலம் தப்பிவிட்டார்..

நல்லா ரசிக்க கூடியமாதிரி பின்னூட்டமிடுபவன் ஏன் இப்படி செய்தானோ தெரியவில்லை..

என்.கே.அஷோக்பரன் said...

அது சரி நீங்கள் எதன் மூலம் கே.டி.வி பார்க்கிறீர்கள்? டயலொக் டி.வி யிலோ, பியோ டி.வியிலோ அல்லது எல.பி.என். இலோ சன் டி.வி மற்றும் அது சார்ந்த அலைவரிசைகள் இல்லையே?? ஒரு வேளை யூரோ ஸ்டார் அல்லது டாடா ஸ்கை அல்லது பிக் டி.வி பயன்படுத்திறீங்களா???

ஆ முக்கியமனத மறந்துட்டன். - தட்டச்சு சம்பந்தமா - நீங்கள் சொன்னது சரி - எதுல தட்டச்சு செஞசால் என்ன வரேக்க தமிழ்ல வந்தால் சரிதானே - நான் சந்திப்பைப் பற்றி ஒன்றும் எழுதாததற்கு முக்கிய காரணங்களில் ஒன்று கடைசியில் அதிக அலட்டலுடன் சந்திப்பு முடிஞ்சது தான். எங்கடவையள் சும்மா எல்லாத்துக்குமல்லோ மல்லுக்கட்டிக்கொண்டு நிக்கினம். எனக்கு யாழ்தேவி, தட்டச்சு பற்றிய வாதங்கள் அலட்டல்களாகவே இருந்தது அதைப்பற்றி அதிகம் விமர்சிக்கவும் விரும்பவில்லை ஏனென்றால் கதைக்கிறது அவை அவையின்ர சுதந்திரம் - ஒரு வேளை நான் கதச்சது வேறொருவருக்கு அலட்டலாகக் கூடப் பட்டிருக்கலாம். இப்பதான் நாங்கள் இலங்கைத் தமிழ்ர் எண்ட ஒரே குடைக்குள்ள வந்து கொண்டிருக்கிறம் இதுக்கிடையில பிரதேச வாதம் பற்றிப் பேசுறதையே நான் விரும்பேலை ஏனெண்டால் நான் எங்கட பழைய பிரதேசவாதமும், சாதீயமும் பற்றி எல்லாம் நிறையக் கேள்விப்பட்டிருக்கிறன் - அது இனி வேணாமே என்பது என்ர கருத்து. நாம் தமிழர் - எந்தத் தமிழ்ப்பேரையும் ஏற்றுக்கொள்வோம் எண்ட மனசிலையை வளர்த்திட்டமென்டால் எங்களுக்குள்ள ஒற்றுமை நல்லா இறுகீடும். மற்றது உங்கட லொஜிக்குக்கான ஒன்று சொல்லுறன் மதுரைத் தமிழ் எண்டு ஒரு திரட்டி தொடங்கினால் யாரும் எதிர்க்காயினம் ஆனால் யாழ் தேவி எண்டவுடனேயும் எதிர்க்கோணுமோ? - அட அதுவும் ஒரு தமிழ்பெயர் தானே - நான் சின்னவன் சொல்றனெண்டு நீங்கள் பெரியவையள் கோவிக்காதேங்கோ நாங்கள் உந்தப் பழைய விசர்க்கதையளையும் உருப்படாத பிணக்குகளையும் மறந்திட்டு தமிழர்கள் என்று ஒரு அடையாளத்தோட வாழப்பாப்பம் இல்லாட்டி பிரித்தாளும் தந்திரமுள்ள நரியள் எங்கள லேசாப் பிரிச்சிடுங்கள்.

நான் சொன்னதுல ஏதாச்சும் குற்றங்குறை கண்டியளெண்டால் தாராளமாகச் சொல்லுங்கோ.....

Anonymous said...

//பதினோரு மணிக்கு ஆரம்பித்த 'கரையெல்லாம் செண்பகப்பூ' படத்தை கொஞ்ச நேரம் பார்த்தேன்.//

நானும் நேற்றுப் பார்த்தேன்.. 'ஏரியில இலந்தை மரம்..தங்கச்சி வச்ச மரம் ' பாட்டு இப்போது கேட்டாலும் இனிமை..

ராஜி

வந்தியத்தேவன் said...

லோஷன் கரையெல்லாம் செண்பகப்பூ ஒரு நாள் காலை 7 மணிக்கு போட்டார்கள் படம் பார்த்துவிட்டுத்தான் வேலைக்குச் சென்றேன். இன்னொரு நாள் நீங்கள் சொன்ன 11 மணிக்குப் போட்டார்கள் முடியும் வரை பார்த்தேன். ஆனால் சுஜாதா கதை வாசித்த இன்ரெஸ்ட் படம் பார்க்கும் போது இல்லை, வெள்ளி பாத்திரத்தில் ஸ்ரீப்ரியா நல்ல பொருத்தம்.

Unknown said...

கரையெல்லாம் செண்பகப்பூ படமாக வந்திருக்கிறதா?????????????/ என்ன மாயமப்பா இது..

pirasanna said...

பார்த்தால் வராமலேயே வந்தேன் என்று எனக்கு புருடா விட்டு விட்டு, onlineஇல் வந்து பெண்கள் பற்றி வம்பளந்து கொண்டிருந்திருக்கிறார்..
ஏன் இந்த வக்கிரம்?)))))))))
அண்ணா இப்படியும் மனிதர்களா?
சில நல்ல முயற்சிகளுக்கு இப்படி இடையூறுகள் வருவது வழமைதான்
இதை எல்லாம் ஒரு பொருட்டாகவே எண்ணாதீர்கள்

கிரிக்கெட் பதிவெல்லாம் படிக்கும்போது முன்பு உங்கட குரலில் விளையாட்டு
தகவல்கள் கேட்ட அதே உணர்வு வருது

ers said...

மன்னிக்கவும் நண்பா... இலங்கை வலைப்பதிவர் குறித்த செய்தியை இப்போது தான் நான் அறிந்து கொண்டேன். உங்கள் தளத்திற்கு வந்து பல நாட்களாகிவிட்டது.

பதிவர் சந்திப்பு சிறப்பாக நிகழ்ந்தது தானே...
நன்றி.

navamumaibalan said...

வாழ்த்துக்கள் அண்ணா.தொடரட்டும் உங்கள் எழுத்துப்பணி. பின்னூட்டங்கள் இடாவிட்டாலும் நாங்களும் தொடர்ந்து வாசித்து கொண்டுதான் இருக்கிறோம். சில குறிப்புகள் போடத் தோண்றும் பொழுதுகளில் என்னை கட்டுபடுத்திக் கொள்வதுண்டு. நான் அனுப்பிய தனிப்பட்ட் இரு மின்னஞ்சல்களுக்கும் பதிலில்லாத போது ஏன் சிரமத்தைக் கொடுப்பான் என ஒதுங்கியமையும் ஒரு காரணம் தான். அண்ணா இப்போதெல்லாம் உங்கள் குரலை கேட்க முடியாவிட்டாலும் உங்கள் பதிவுகளையே இரசித்துக் கொண்டிருக்கிறோம்.

வாழ்க வளமுடன்
நவம் உமைபாலன்

dhdhdd said...

Kanthasamy oru nonthasamy. neenga nalla eluthijirukireenga.

anna kodomaida

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner