இதெல்லாம் சொல்லியே ஆகவேண்டும்

ARV Loshan
16

இன்று எந்தப் பதிவும் போடாமல், (கந்தசாமி பற்றி எழுதியது பாதியிலேயே கிடக்கிறது...) முன்னைய பதிவுகளுக்கு வந்த பின்னூட்டங்களுக்கு பதில் அளிக்கவும் வாசிக்காமல் bookmark செய்து வைத்த நண்பர்களின் பல பதிவுகளுக்கு பிநூட்டமிடவும், அலுவலகத்தில் சில ஆணிபிடுங்கல்களுக்கும் இன்றைய நாளை ஒதுக்கினாலும், சில விஷயங்களை சொல்லியே ஆகவேண்டும் என்று இந்த அவசர மினிப் பதிவு...

இலங்கைப் பதிவர் சந்திப்பு நடந்து நான்கைந்து நாள் ஆகியும் இன்னும் பரபரப்பு குறையவில்லை.. விமர்சனங்கள் பின்னூட்டங்கள் பல கோணத்திலிருந்தும் வருவது குறிப்பிடத்தக்கது.

நான் தட்டச்சு சர்ச்சைக்குள் நுழைந்துகொள்ள ஆசைப்படாத காரணத்தால் என்னுடைய கருத்தை எந்தப் பதிவிலும் இடாமல் வேடிக்கை மட்டும் பார்த்து வந்துவிட்டேன்..

என் தனிப்பட்ட கருத்துக் கேட்டால் எனக்கு இரு வித (பல வித என்றும் சொல்லலாம்) தட்டச்சும் இயலும்.. எனினும் வேகமாகத் தட்டச்ச நான் பயன்படுத்துவது Phonetic முறை தான்..

எப்படி அடித்தாலும் என் தமிழ் வெளிவந்தால் மற்றவருக்கு தமிழாக அது புரிந்தால் போதும்..

-----------------

நேரடியாக பதிவர் சந்திப்பு ஒளிபரப்பானத்தில் தான் எத்தனை அனுகூலங்கள்.. நேரடியாக வராமலே பல பேர் இதில் நேரடியாக இணைந்திருந்தும் கலந்துகொண்ட எம்மை விட அழகாக விரிவாக விமர்சனங்கள் எழுதியிருப்பதும் எங்களுக்கு மிகப்பெரியதொரு வெற்றி..

எனினும் இணையத்தினூடு இணைந்து கேவலமாக உரையாடி கிண்டல் செய்த இருவர் பற்றித் தெரிந்தபோது மனம் சீ என்று போனது..
அதில் ஒருவர் இலங்கைப் பதிவர்.. நண்பராக ஓரளவு அவர் பற்றித் தெரிந்த போதும், அவர் அடிக்கடி வேடிக்கை செய்யும் மொக்கை போடும் ஒருவராக இருந்தபோதும், அவரை நான் இந்த சந்திப்புக்கு இரு காரணங்களுக்காக வர சொல்லி இருந்தேன்.

ஒன்று இலங்கையில்லுள்ள ஒரு புதிய திரட்டி பற்றி அவர் அனைவருக்கும் அறியத்தர.. அடுத்தது அவர் பொதுவாக எம்முடைய பல கருத்துக்களுக்கு மாற்றுக் கருத்துடையவர்..மாற்றுக் கருத்துக்களுடைய ஒருவர் வருவது சந்திப்பை மேலும் பயனுள்ளதாக்கும்..

பார்த்தால் வராமலேயே வந்தேன் என்று எனக்கு புருடா விட்டு விட்டு, onlineஇல் வந்து பெண்கள் பற்றி வம்பளந்து கொண்டிருந்திருக்கிறார்..
ஏன் இந்த வக்கிரம்?

------------------

ஆனாலும் அவருக்கு ஒரு தனிப்பட்ட நன்றி.. இன்று முதல் நான் எனது வலைத்தளத்தை செல்பேசியில் வாசிக்கக்கூடிய தளமாக மாற்றும் வழியை அறிமுகப்படுத்தியவர் அவரே..

இன்று முதல் உங்கள் செல்பேசிகளிலும் தமிழிலே தடங்கலில்லாமல் ஏன் வலைத்தளத்தைப் பார்வையிடலாம்...

----------------------

இன்று இலங்கை அணி நியூ சீலாந்து அணிக்கெதிராக இரண்டாம் டெஸ்டில் விளையாடும் அணியில் செய்துள்ள மாற்றங்கள் மிக ஆச்சரியமானவை..

மத்தியூசின் தசைப்பிடிப்புக்கு பதிலாக அணியுள்ளே கபுகேதரவை அழைத்ததன் மூலம் துடுப்பாட்ட வரிசை பலமாகியுள்ளது..

ஹேரத்தின் வரவு நான் எதிர்பார்த்தது.. ஆனால் மென்டிசின் நீக்கம் ஆச்சரியம்.. மூன்று சுழல் பந்துவீச்சாளர்களோடு இலங்கை அணி களமிறங்கி இருக்கலாம்.

குலசெகரவுக்கு ஓய்வு கொடுத்துள்ளார்களாம்.. தொடர்ந்து வரும் முக்கோணத் தொடர்,சாம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகள் கருதி..ஒரு இளம் வேகப்பந்து வீச்சாளர், அதிலும் FORMஇல் உள்ளவருக்கு ஓய்வு தேவையா?

ஒருவேளை புதிதாக அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ள இலங்கையின் தற்போதைய அதிவேகப் பந்துவீச்சாளரான தம்மிக்க பிரசாத்தை(இவர் சாம்பியன்ஸ் கிண்ண குழுவிலும் உள்ளார்) பரிசொதிக்கிறார்களோ?

இலங்கையின் சாம்பியன்ஸ் கிண்ண குழுவில் இருந்து டில்கார பெர்னாண்டோவை நீக்கியுள்ளார்கள்.. எனினும் என்னைப் பொறுத்தவரை தென் ஆபிரிக்காவின் பந்து மேலெழும் (BOUNCY) தென் ஆப்ரிக்க ஆடுகளங்களில் டில்கார உபயோகமாக இருப்பார்.

பிரசாத்தின் வேகப் பந்துவீச்சும் எதிரணிகளைப் பயமுறுத்தலாம்.. டில்காரவின் தொடர்ச்சியான அவருக்கு எதிரியாகி இருக்கலாம்.

நியூ சீலாந்துக்கேதிரான இரு போட்டிகளுக்கான குழுவில் அண்மைக்காலமாக உள்ளூர் போட்டிகளில் பிரகாசித்துவரும் அதிரடி சகலதுறை வீரர் கிகான் ரூபசிங்க சேர்த்துக் கொண்டிருப்பதில் மகிழ்ச்சி.. தொடர்ந்து சுப்பரின் கொல்லைக்குள்ளேயே நிற்காமல் திறமையான இளம் வீரர்களை தேர்வாளர் எடுப்பது மகிழ்ச்சி.
------------------------

நேற்று இரவு தூங்குவதற்கு முதல் தற்செயலாக தொலைகாட்சி அலைவரிசைகளை மாற்றிக் கொண்டிருந்தபோது K TVஇல் பதினோரு மணிக்கு ஆரம்பித்த 'கரையெல்லாம் செண்பகப்பூ' படத்தை கொஞ்ச நேரம் பார்த்தேன்..(அதிகாலை நான்கரை மணிக்கு எழும்பவேண்டி இருந்தாலும் படத்தின் மேலிருந்த ஈர்ப்பினால் தூங்கும் பொது ஒரு மணியாகி விட்டது)

அமரர் சுஜாதா எழுதிய இந்த நாவலை முன்பு முழுமையாக பல தடவை வாசித்துள்ளேன்.. படமாகப் பார்க்கும் வாய்ப்பு எப்போதும் கிடைக்கவில்லை.முழுமையாகப் பார்க்கலாம் என்றால் காலையில் வேலை.

யாராவது K TVக்கு சொல்ல மாட்டீர்களா இது போன்ற அரிய,வித்தியாசமான, நல்ல படங்கள் போடுவதாக இருந்தால் நாங்கள் பார்க்கிற நேரத்தில் வசதியாகப் போட சொல்லி..

அன்றொருநாள் நாசரின் 'அவதாரம்' திரைப்படமும் இதே நேரத்தில் தான் ஒளிபரப்பானது.

மற்ற நேரங்களில் போடுகிற மொக்கை திரைப்படங்களுக்கும்,தெலுங்கில் இருந்து தருவிக்கப்பட்ட மசாலாப் படங்களுக்கும் இந்த இரவு 11 மணி நேரத்தைக் கொடுங்களேன்...


Post a Comment

16Comments

Please Select Embedded Mode To show the Comment System.*