August 28, 2009

Breaking news...இடிந்து வீழ்ந்த இலங்கை நீதிமன்றம்..

இலங்கையின் நீதிமன்றக் கட்டடம் இடிந்து வீழ்ந்தது..

இலங்கையின் பழம்பெருமை வாய்ந்த நீதிமன்றக் கட்டடம் புதுக்கடையில் (Hulstorf) அமைந்துள்ளது. மிகப் பழைய அந்தக் கட்டடத்தின் ஒரு பகுதி நேற்று இரவுவேளையில் இடிந்து வீழ்ந்துள்ளது..

சிதிலமடைந்திருந்த தூண்கள் ஐந்து நொறுங்கியதால் கூரை கீழே வீழ்ந்துள்ளது..

யாரும் காயம் அடையவில்லை என்று கூறப்படுகிறது...

எப்போது விழும் என்று பயந்துகொண்டே பலர் இங்கே வழக்கு விசாரணைகள்,அன்றாட சட்ட நடவடிக்கைகளுக்காக சென்று வந்துள்ளனர்.

எனக்கு இடம்பெற்ற கடந்தவருடத்தைய சம்பவத்தின் போதும் வழக்குக்காக நீதிமன்றம் கொண்டுசெல்லப்பட்டு விடுவிக்கப்பட்டதும் இங்கே தான்..அப்போதே பயந்து கொண்டிருந்தேன்..யாராவது சத்தமாகப் பேசினால் எங்கே இடிந்து விழுந்திடுமோ என்று.. பின்னே ஆங்கிலேயர் காலத்திலே கட்டப்பட்டு இன்னமும் திருத்தப்படாமல் இருந்தால் எப்படி இருக்கும்?(ஒரு பகுதி புதிதாக அழகாகக் கட்டப்பட்டிருந்தும் )

தீர்ப்புக்களின் கொடுமை தாங்காமல் தான் தூண்கள் சரிந்ததோ என்று ஆதங்கப்படுகிறார் எங்கள் நண்பர் கஞ்சிபாய்..

37 comments:

சுபானு said...

படங்களுடன் தந்திருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்..

அசால்ட் ஆறுமுகம் said...

என்னது????

சுபானு said...

//தீர்ப்புக்களின் கொடுமை தாங்காமல் தான் தூண்கள் சரிந்ததோ என்று ஆதங்கப்படுகிறார் எங்கள் நண்பர் கஞ்சிபாய்..

:)

Unknown said...

இரவில விழுந்ததனால பரவாஇல்ல பகல்லவிழுந்திருந்தால்???????
எது எப்படியோ புது பில்டிங் நீதிக்கு கிடைக்கும். அரசாங்கத்துக்கு புத்தி வந்து பழைய building எல்லாத்தையும் திருத்துனா நல்லம்.

தம்பி said...

தகவலுக்கு நன்றிகள்.

கோவி.கண்ணன் said...

:)

இராமேஷ்வரத்தில் பூஜை போட்டு பரிகாரம் பண்ணச் சொல்லுங்க !

யோ வொய்ஸ் (யோகா) said...

கஞ்சிபாய் சும்மா ரிஸ்க் எடுக்கிற மாதிரி தெரியுது.

ஆமா சதீஷ் பொண்டிங் விலகிட்டாருன்னு சொல்லிருக்காறே. உண்மையா? நான் கிரிக்இன்போ, கிரிக்கட் அவுஸ்திரேலியா எல்லாம் போய் பார்த்தேன்,எதுல போட்டிருக்கு?.

யுவகிருஷ்ணா said...

நீதியே இடிந்து விழுந்த நாட்டில் நீதிமன்றங்கள் இடிவது அதிசயமா? :-)

புல்லட் said...

அடடே இதைத்தான் பிறேக்கிங் நியூஸ் என்பார்களா? நானும் ஏதாவது நம்ம நட்புவட்டத்தில ஒண்டு வயசுக்கு வந்த கதையோ , முன்வீட்டு பாட்டிவழுக்கிவிழுந்த கதையோ , நீங்கள் இருந்து கதிரை முறிஞ்ச கதையோ சொல்லியிருப்பியள் எண்டு ஓடோடி வந்தன்.. அதுகளும் ப்ரேக்கிங் நியுஸ்தானே?

பட்டபிளை எபெக்கட் எண்டதுக்கு எனக்கு இப்பதான் அர்த்தம் விளங்கிச்சுது.. நீங்கள் உருண்டு போய் 1 வருசத்துக்குப் பிறகு அதிர்வால விழுந்திருக்கே... சுனாமி தொடர்பா சொல்லப்பட்ட கதைகளை இப்ப நம்பிறன்.

;)

Nimal said...

//படங்களுடன் தந்திருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்..//

பிறகு புதிய கட்டிடத்துக்கு போக வேண்டி வந்திருக்கும்...

Admin said...

//யுவகிருஷ்ணா said...
நீதியே இடிந்து விழுந்த நாட்டில் நீதிமன்றங்கள் இடிவது அதிசயமா?//



உண்மைதான். விரைவில் இலங்கையில் இருந்து நீதி என்னும் சொல்லும் நாடுகடத்தப் படுமாம். என்றும் பேசிக்கொளறாங்க உண்மையா அண்ணா.


இன்னும் எத்தன இடி எங்க எங்க நடக்கப்போகுதோ...

pirasanna said...

பில்டிங்கும் வீக்கா?
நான் நினைச்சன்..........மட்டும் தான் வீக் என்று.

திவா said...

அன்பர்களே...

இன்று முதல் நானும் ஒரு வலைப்பதிவு எழுத ஆரம்பித்திருக்கிறேன். ஆதரிப்பீர்களா?

http://www.thiva-muru.blogspot.com/

அஜுவத் said...

அப்படி இன்னும் கொஞ்ச கட்டிடங்களும் உள்ளன..... வெகுவிரைவில் விழும்.....

கரவைக்குரல் said...

இனி இடிந்து விழ என்னதான் இருக்கிறது, லோஷன்
என்றோ எதிர்பார்த்தது தான்,ஆங்கிலேயர் காலத்திலிருந்ததையே இன்று வரை வைத்திருந்தால் அப்ப அது இடிஞ்சு விழும் தானே

தகவலுக்கு நன்றி

Anonymous said...

ஐய்யய்யோ! பகலில் வீழ்ந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்; புதிய நீதிபதி கிடைத்திருப்பார் இல்லையா? அல்லாது அன்று அதாவது கடந்த வருடத்தில் நீங்கள் சொன்னது போல வீழ்ந்திருந்தால்...... 'தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்.'.......

ரஜனிகாந்த் said...

ஐய்யய்யோ! பகலில் வீழ்ந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். புதிய நீதிபதி கிடைத்திருப்பார் இல்லையா? அல்லாது அன்று அதாவது கடந்த வருடத்தில் நீங்கள் சொன்னது போல வீழ்ந்திருந்தால்...... 'தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்.'.......

Unknown said...

www.puthumai.weebly.com

இலவசமாக மூன்று மாதங்களுக்கு விளம்பரம் செய்ய முடியும்

உங்கள் விளம்பர அளவு

170 pix x 100 pix

GIF Image or JPEG Image

எமக்கு அனுப்புங்கள் உங்களது விளம்பரம் இணைக்கப்படும்

puthumai@ymail.com

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

அது இடிந்து வீழ்ந்ததல்ல. நாங்கள் தான் இடித்தோம்..

அங்கே போரினால் வன்னி மக்கள் வாழ வீடின்றித் தவிப்பதால் நீதிமன்றம் என்று கூடப் பாராது அதனை இடித்து அவர்களுக்கு வீடு கட்டப்போகிறோம்.

ஒரு நீதி மன்றால் ஒராயிரம் வீடுகட்டப் போகிறோம்..

-அவசர அறிக்கை

பதி said...

நீதியென்றால் என்னவென்று தெரியாத நாட்டில் நமக்கென்ன வேலையென்று கட்டிடமே விழுந்துவிட்டதோ???

ஆ.ஞானசேகரன் said...

///தீர்ப்புக்களின் கொடுமை தாங்காமல் தான் தூண்கள் சரிந்ததோ என்று ஆதங்கப்படுகிறார் எங்கள் நண்பர் கஞ்சிபாய்.. ///

ம்ம்ம் இருக்கலாம்
தமிழர்களுக்கு எதிரான தீர்ப்புகள்

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

நீதி மன்றம் எப்போதோ இடிந்து விழுந்து விட்டது.

இப்போது பிசிக்கலா இடிந்து விழுவதில் எங்களுக்கு ஒன்றும் ஆச்சர்யம் இல்லை, வியப்பில்லை.

Unknown said...

நீதி தேவதை கண் கட்டி வாய் மூடி மௌனித்துள்ளதைப் தமக்குச் சார்பாகப் பயன்படுத்தும் நீதிவான்களின் பக்கச் சார் தீர்ப்புக்களை, மௌனத்தையே சுமந்து கொண்டிருக்கு சுவர் எவ்வளவு காலத்துக்குத் தான் கேட்டுக் கொண்டிருக்கும்!

S.Gnanasekar said...

இலங்கையின் நீதிமன்றக் கட்டடம் இடிந்து வீழ்ந்தது.
இலங்கையே பூகம்பம் வந்து சிங்களன் மண்ணேடு மண்ணாக ஆனாலும் சந்தோசம்..

S.Gnanasekar said...

இலங்கையின் நீதிமன்றக் கட்டடம் இடிந்து வீழ்ந்தது.
இலங்கையே பூகம்பம் வந்து சிங்களன் மண்ணேடு மண்ணாக ஆனாலும் சந்தோசம்..

சந்ரு said...

//வயசுக்கு வந்த கதை் ப்ரேக்கிங் நியுஸ்தானே?//

புல்லட் எதுக்கு இந்த வக்கிரம்? இவையெல்லாம் நகைச்சுவையா? இதை நான் உங்களிடம் எதிர்பார்க்கவில்லை.. திருத்திக்கொள்ளுங்கள்

புல்லட் said...

இதென்ன கொடுமை? நான் நீங்கள் கருதுமளவுக்கு நல்லவனில்லை.. படா கிரிமினல்.. :-) ... பரவாயில்லை...

அது பெண்களை பற்றியில்லை சந்ரு... கடந்த பதிவொன்றில் வயசுக்குவராத என்று லோசண்ணா குறிப்பிட்டிருந்த நம் நக்கல் நட்பு வட்டததை சேர்ந்த ஒருவரைத்தான் கலாய்த்திருந்தேன்.. மற்றும் படி எதுவுமில்லை.. நான் நவாவில் படம் பார்த்தேன் என்று ஒரு புரளியை கிளப்பி விட்டதற்கான பழிவாங்கல்..;) இப்படியான கலாய்த்தல்களுடன் அவர்களுடனான நட்பு மிகவும் இனிமையானது..

Admin said...

//சந்ரு said...
//வயசுக்கு வந்த கதை் ப்ரேக்கிங் நியுஸ்தானே?//

புல்லட் எதுக்கு இந்த வக்கிரம்? இவையெல்லாம் நகைச்சுவையா? இதை நான் உங்களிடம் எதிர்பார்க்கவில்லை.. திருத்திக்கொள்ளுங்கள்//



அன்பின் லோஷன் அண்ணா. மற்றும் அன்பின் நண்பன் புல்லட்டுக்கு.

இந்த பின்னூட்டம் என்னால் இடப்பட்டதல்ல. வேறு யாரோ செய்திருக்கின்றார்கள்.

என்னால் இந்த பின்னுட்டத்தை delete பண்ணவும் முடியவில்லை.




நான் உங்கள் மீது நிறையவே மரியாதை வைத்து இருக்கிறேன். புல்லட்டின் நகைச் சுவை உணர்வு எனக்கு அதிகம் பிடித்திருக்கின்றது. நான் நகைச் சுவைகளை அதிகம் ரசிப்பவன்.

புல்லட் நகைச் சுவையாகவே சொன்னார் என்பது எனக்குத் தெரியும். அவர் சொன்னதை ரசித்து சிரித்தவன்.

Unknown said...

//இலங்கையின் சாம்பியன்ஸ் கிண்ண குழுவில் இருந்து டில்கார பெர்னாண்டோவை நீக்கியுள்ளார்கள்.. எனினும் என்னைப் பொறுத்தவரை தென் ஆபிரிக்காவின் பந்து மேலெழும் (BOUNCY) தென் ஆப்ரிக்க ஆடுகளங்களில் டில்கார உபயோகமாக இருப்பார்//

நான் டில்கார பெர்னான்டோவின் அரசிகன் ஆரம்ப காலத்தில்.
அண்மைய காலத்தில் அவரது பந்துவீச்சால் கடுப்பாகி அவரை வெறுத்தவர்களில் நானும் ஒருவன்.
ஆனால் நீஞ்கள் சொல்வது சரியாக இருக்கலாம். இலங்கையில் உயரமான வேகப்பந்துவீச்சாளர்கள் குறைவு என்பதால் bounce பெறுவது கஷ்ரமாக இருக்கலாம்.

ilangan said...

விழுந்த சுவர் யார் மேலயும் விழுந்திருந்தா யாருக்கு எதிரா வழக்கு போட்டிருப்பாங்க

கலகலப்ரியா said...

:)

Anonymous said...

mnbmbnmnb

SShathiesh-சதீஷ். said...

khkm

சப்ராஸ் அபூ பக்கர் said...

mmmmmmm......

ஜோசப் பால்ராஜ் said...

நீதி என்றோ இடிந்து விழுந்து மண்ணோடு மண்ணாண நாட்டில் நீதிமன்றம் இடிந்து விழந்ததை சொல்கின்றீர்கள்.

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

Anonymous said...

வரப் போகும் தீர்ப்பொன்றின்
வர்க்க அநியாயமும் உணர்ந்து
இயற்கையன்னை குலுங்கியதால்
இடிந்துசரிந்ததோ இந்த நீதிமன்றம்
தலையில்
இடிவிழாதிருந்தவரை தப்பித்தார்.
கருணைக்குப் பெண் என்றுசொன்னவனைத்
தூக்கிலிடவேண்டும்.
சிலவேளை
தமிழ்ப் பெண்ணை மட்டும் சொன்னாரோ?

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner