
இப்போது ஒரு வித்தியாசத்துக்காக தொலைக்காட்சிகளில் இன்று இரவு நீங்கள் பார்க்க முதல் இங்கே விமர்சனம் படிக்க..
இந்திரலோகத்தில் நா அழகப்பன்.
படத்தின் ஆரம்பப் பாடல் 'பொய்க்கால் குதிரையில்' பார்த்தபோது பாடலின் ஆரம்பக் கட்டம் குசேலன் ரஜினி பில்ட் அப்பை ஞாபகப் படுத்தியது.. (வடிவேலு இதில் நல்லா செய்தார்னு நக்கலா யாராவது சொன்னால் நாளையே நார்,நாரைக் கிழி வாங்குவீர்கள்)
கொடுமை என்னவென்றால் அழகான (இப்போதும் தான்) சுமித்ரா வடிவேலுவுக்கு அம்மாவாம்..
தாங்க முடியாத அளவு பிரசார நெடி.. இந்து மத,பாவ,புண்ணிய பாடம் நடத்துகிறார்கள்.. சிவராத்திரி,நவராத்திரி நாள் பார்த்து போட்டிருக்கலாமே சாமி..(அதுவும் கலைஞரில் போகிறது படம்)
வடிவேலுவின் முடியும்,முகம் நிறைய மேக்கப்பும்.. சகிக்கல.. இம்சை அரசனில் ஒரு ஹீரோவாக எழுந்தவர் ஏன் இதில் போய்க் கவிழ்ந்தார் என்பது நல்லாவே புரிந்தது.
நாசர் நீங்களுமா இதில்? பிரகாஷ்ராஜுக்கு விஜய் படங்கள் மாதிரி பாவம் நாசர்..
நாரதராக வந்து.. கொடுமை..
ஆனால் இந்திரலோகக் காட்சிகள் பிரமாதம்.. கிராபிக்ஸ் எவ்வளவு தான் கேவலமாக இருந்தாலும் கார்டூன் பார்த்த மகிழ்ச்சி.. பேசாமல் சௌந்தர்யா ரஜினிகாந்திடம் கொடுத்திருந்தால் இன்னும் கொஞ்சம் நல்லா செய்திருப்பார். இரண்டு,மூன்று டொல்பின்களையும் குதிக்கவிட்டு ஒரு தொழிநுட்பப் புரட்சியே நடத்தியிருப்பார்..
வடிவேலு திரையில் வந்தாலே அவரது அசைவுகளிலேயே சிரிப்பு வரும்.. (அண்மைக்காலமாக அதுவே கொஞ்சம் ஓவராப் போகுதோ என்று ஐயம் வருகிறது) இந்த இந்திர.அழகப்பனிலோ எதிலுமே சிரிப்பு வருவதாக இல்லை.. எரிச்சலோ எரிச்சல்..

சில பாவ ,புண்ணிய உரையாடல்களைக் கேட்கும்போது,இயக்குனர் ராமண்ணா பழைய A.P.நாகராஜனின் கதையை சுட்டு வைத்திருந்து இப்போ படமா எடுத்திட்டாரோ என்று சந்தேகம் வருகிறது.. கதாகலாட்சேபம் கேட்கும் அனுபவம்..
இயக்குனர் இம்சை அரசன் வடிவேலுவைப் பார்த்து ரொம்பவே ஈர்க்கப்பட்டிருக்கிறார் போலும். கிடைத்த வடிவேலுவின் எல்லா call sheetsம் பயன்படுத்தும் ஆர்வத்தில் அழகப்பன்,இந்திரன்,எமதர்மன் என்று எங்கெல்லாம் வடிவேலுவைப் போட முடியுமோ அங்கெல்லாம் வடிவேலுவைப் பிடிவாதமாகப் பிடித்துப் போட்டு வேலை வாங்கியுள்ளார்;எங்கள் உயிரை வாங்கியுள்ளார்.
இந்திரலோகத்தில் நா.அழகப்பன்
ஆனால் இந்திரலோகம் போன பிறகு தான் ஒரு விதத்தில் படம் சூடுபிடிக்கிறது..
ரம்பையாக வரும் அந்த இளமை ததும்பும்,அழகு மங்கை உண்மையிலேயே ஒரு தேவலோக மங்கையாகத் தான் தெரிகிறார்.. அம்சம்..(நம்ம மானாட மயிலாட ரம்பா கூட ரம்பைக்கு இவ்வளவு பொருத்தமாக இருந்திருக்க மாட்டார்..)

கதாநாயகி கவர்ச்சிக் கடல்/கவர்ச்சி மலை.. எப்படி வேண்டுமானாலும் வர்ணிக்கலாம்..
யாமினி ஷர்மாவாம் பெயர்.. யப்பா... இதுக்குப் பிறகு இவர் எங்கே போனார் என்ன ஆனார்? ஏன் என்று தெரியவில்லை..

சொதப்பல் படங்களையே தூக்கி நிறுத்தும் வடிவேலு தான் ஹீரோவாக இருந்தும், ஒருவருக்கு மூவராக இருந்தும் கவிழ்ந்து போனதில் இருந்து கதை, திரைக்கதையின் கிழிவு புரிந்திருக்கும்..
இந்தப்படம் வர முதலில் இது சின்னக் குழந்தைகளுக்கான படம் என்று வடிவேலு பேட்டி கொடுத்திருந்தார்.. குழந்தைகள் படம் பார்த்திருந்தால் ஒன்று பாதியிலேயே ஓடி இருப்பார்கள்.. இல்லை பேதியில் போயிருப்பார்கள்..
கோபிநாத்தின் ஒளிப்பதிவும், தோட்டா தரணியின் கலை அமைப்புக்களும் கொஞ்சம் ஆறுதல்கள்..
கொடுத்த காசுக்கு (லட்சக்கனணக்கான காசு 'வேற' விஷயத்துக்காக கொடுக்கப்பட்டதா ஒரு கிசுகிசு முன்பு வந்தது) வஞ்சகம் செய்யாமல் ஸ்ரேயா ஆடிவிட்டுப் போயிருக்கா..

பேசாம திரைப்படத்துக்கு A சான்றிதழ் கொடுத்திட்டு பலான படமா மாத்தி இருக்கலாம்..
இதுக்குப் பிறகும் இன்றிரவு 'கலைஞர்' டிவியில் நீங்கள் இந்திரலோகத்தில் நா அழகப்பன் பார்க்கப் போறீங்களா?
பேசாமல் இலங்கை பாகிஸ்தானிய கிரிக்கெட் போட்டி பாருங்க.. இல்லேனா K டிவியில் மீண்டுமொரு தடவை வின்னர் காட்டுறாங்க..
இதே வடிவேலுவுக்காக ( மட்டும்) எத்தனை தடவை வேணும்னாலும் அந்தப் படத்தை ரசிக்கலாம்;சிரிக்கலாம்.
ஒரு சின்ன FLASH BACK...
இந்த விமர்சனம் இந்திய குடியரசு தினத்துக்காக முன்பொரு தடவை இதே படம் கலைஞர் டிவியில் காட்டிய போது எழுதியது. பின்னர் இதையெல்லாம் பதிவிடுவதா என்று கிடப்பில் போட்டது..
நேற்று 'கலைஞர்' விளம்பரம் பார்த்தபோது அப்பாவி தொலைகாட்சி ரசிகர்களைக் காப்பாற்றுவதற்காகவேனும் இன்று இதை தூசு தட்டிப் பதிவிட வேண்டும் என்று முடிவெடுத்தேன்..
முன்பு எழுதிய சில ஆரம்ப வரிகள்..
நேற்று இந்தியக் குடியரசு தினம்..
வழமைபோல் இந்தியத் தொலைக்காட்சிகளைத் திறந்தால் சிறப்பு நிகழ்ச்சிகள் நிறைந்து கிடந்தன. ஒரு சில தவிர ஏனைய எல்லாமே திரைப்படங்களினதும் திரைநட்சத்திரங்களினதும் ஊர்வலம் தான்!
நான் மாலைக்கு மேல் தான் வீடு திரும்பினாலும் முதல் நாட்களில் பார்த்த விளம்பரங்களின் படி எந்தெந்த தென் இந்தியத் தொலைகாட்சி நிகழ்ச்சிகளைக் காட்டியதென்று நல்லாவே தெரிந்திருந்தது.பார்க்கப் போனால் விஜய் டிவி தான் கொஞ்சம் உருப்படியா குடியரசு தினத்தை ஞாபகப்படுத்தி நாளுக்குப் பொருத்தமா, நாட்டு மக்களுக்குப் பிரயோசனமா கொஞ்ச நிகழ்ச்சிகளையாவது தந்திருந்தது. மற்ற எல்லா டிவிகளும் வழயான பண்டிகை நாள் போல,சிம்பு,நமீதா,தனுஷ்,விஜய் என்று ஆளாளுக்கு யார் யார் கிடைத்தார்களோ அவரவரை வைத்து சினிமா ஷோ காட்டி இருந்தார்கள்..
எனக்கு கிடைத்த நேரத்தில் நான் வீடு வந்தபிறகு பார்க்கக் கிடைத்தது கலிஞர் மன்னியுங்கோ.. கலைஞர் டிவி காட்டிய இந்திரலோகத்தில் நா அழகப்பன். அதுசரி வடிவேலுவுக்கும் குடியரசு தினத்துக்கும் என்னய்யா சம்பந்தம்? ஒரு இலங்கையனா நான் இருந்தாலும் கேக்கலாம் தானே?
ஒருவேளை அடுத்தவருடம் வடிவேலுவுக்கும் பத்மஸ்ரீ கிடைக்குமோ என்னவோ? (அதுக்காக என்னை விஜயகாந்த் ஆதரவாளர் என்று தப்பாக நினைக்காதீங்க)
முன்பு திரையரங்குகளில் இந்தப்படம் ஓடியபோது நண்பர்கள் கூப்பிட்டபோதும் அப்போதிருந்த நேரமின்மை காரணமாகப் பார்க்கப் போக முடியவில்லை. எனவே சரி இன்றாவது பார்க்கலாம் என்று பார்க்க ஆரம்பித்தேன்..(கொழும்பில் இந்தப்படம் ஓடினதே ஒரு வாரமோ.இரண்டு வாரமோ தான்.. அதுவும் ஸ்ரேயா என்ன மாதிரி அந்தப்பாட்டுக்கு ஆடியிருக்கா என்று பார்க்கத் தானாம்)
ஒரு வேளை என்னுடைய பதிவின் படங்கள் பார்த்திட்டு யாமினி, ஸ்ரேயா, சுஜா பார்க்க இன்று கலைஞர் TV களை கட்டப்போகுதோ தெரியல..
19 comments:
என்னுடைய கவர்ச்சிக் கன்னிகள் போட்டோக்களைச் சுட்ட லோஷன் வாழ்க. மொக்கைப் படங்களைப் போடுகின்றார்கள். இரவு பத்து மணிக்கு பாட்டுப்பாடவா நிகழ்ச்சி வாருங்கள்(விஜயில்). பாகிஸ்தான் தோற்பதைத் திரும்பதிரும்ப பார்ப்பதா? மேட்ச் என்றால் ஒரு திரில்லர் வேண்டும்.,
//கொடுத்த காசுக்கு (லட்சக்கனணக்கான காசு 'வேற' விஷயத்துக்காக கொடுக்கப்பட்டதா ஒரு கிசுகிசு முன்பு வந்தது) வஞ்சகம் செய்யாமல் ஸ்ரேயா ஆடிவிட்டுப் போயிருக்கா..//
விஷயம் உண்மைதான் என கழுகார் கூறியிருந்தார். காதலுக்கு மட்டுமில்லை அதற்க்கும் கண்ணில்லை.
இந்திரலோகத்தில் நாறிய அழகப்பன்
வின்னர் வடிவேலு மலை உச்சி என்றால் இந்திரலோக வடிவேலு மலை அடிவாரம் தான், அந்த கைப்புள்ள கட்டதொர பேச்சு எப்பவுமே மறக்காது, கடைசில நீங்களுமா இந்த மாதிரி படங்களை பார்கிறீங்க
நல்லவேளை. நான் குடும்ப சகிதம் வேறு பார்க்கலாம் என்று நினைத்திருந்தேன் :)))))))))))))
இம்சை அரசனில் அனைத்து பாடல்களையும் சுப்பர் ஹிட்டாக்கிய இசையமைப்பாளர் சபேஷ்-முரளி இந்த படத்தில் ஒரு பாட்டை தவிர மீதி அனைத்தையும் சகிக்க முடியாத அளவிற்கு கொடுரமாக தந்ததை சொல்ல மறந்துட்டீங்களோ?
NALLA VELA INDRU ERAVU INTHA PADATHAI THAAN PARKALMENA IRUTHEN.........
NALLA VELA INDRU ERAVU INTHA PADATHAI THAAN PARKALMENA IRUTHEN.........
படம் பாத்த போது நம்மூரில நாட்டுக்கூத்து பாததது போல கிடந்தது... சரியான வதை... ஆனால் வடிவேலுவை குறை சொல்ல முடியாது.. அந்தாள் திறமையான மனுசன் அந்த வெங்காய டிரெக்டருதான் அவரை சரியா பாவிக்கல.. அவனுக்கு ஸ்கிரிப்டிங்கும் ஸ்கிரீன்ப்ளேயும் துப்பரவா வரேல்ல..
@ புல்லட் //ஆனால் வடிவேலுவை குறை சொல்ல முடியாது.. அந்தாள் திறமையான மனுசன் அந்த வெங்காய டிரெக்டருதான் அவரை சரியா பாவிக்கல..//
I AGREE WITH THIS STATEMENT COMPLETELY...
@ புல்லட் //ஆனால் வடிவேலுவை குறை சொல்ல முடியாது.. அந்தாள் திறமையான மனுசன் அந்த வெங்காய டிரெக்டருதான் அவரை சரியா பாவிக்கல..//
I AGREE WITH THIS STATEMENT COMPLETELY...
புதுப்பொலிவுடன் தமிழர்ஸ்
புதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில்
மதிப்பு மிக்க பதிவரான தங்களது பதிவு தானாகவே இணைந்துள்ளது...
பல தள செய்திகள்...
ஓட்டுப்பட்டை வேண்டாம்...
எந்த நிரலியையும் நீங்கள் இணைக்கவேண்டிய கட்டாயம் இல்லை.
முழுவதும் தமிழில் படிக்க....
உங்கள் படைப்பை பார்க்க
தமிழ்செய்திகளை இணைக்க
ஆங்கில செய்திகளை வாசிக்க
வலைப்பூ தரவரிசை
சரியான அறுவைப் படமப்பா... :(
நீங்க வேற... இந்த படம் வெளியான புதுசுல inox ல நூத்தி முப்பது ரூபாய் கொடுத்து டிக்கட் வாங்கி இந்த படத்த பார்த்தேன்... இந்த படத்த பார்த்துட்டு நான் இன்னும் உயிரோட இருக்கேன்னா அது எந்த காலத்துல செஞ்ச புண்ணியமோ தெரியலை... இம்சை அரசன் படம் மாதிரி இருக்கும்னு நம்பி போய் பார்த்தேன்.. ஆனா நிஜமான இம்சையா இருக்கும்னு பார்த்ததுக்கப்புறம்தான்தெரிஞ்சுது.....
அருமையான படப் பெயரும், புகுந்து விளையாடக்கூடிய களமும், நடிகரும் கிடைத்தும் தம்பி ராமையா அதை வீண் செய்து விட்டார்.
படம் என்பது - அது பயணிக்கும் பாதையும் அப்பாதையின் வழியே சந்திக்கும் கதாபாத்திரங்களையும், சம்பவங்களையும் அழகழகாய் கோர்த்துக் கோர்த்து அதனை கதையெனும் நூலில் பின்னியபடியே வந்து முன்பே முடிவு செய்த கிளை மேக்சில் இணைப்பது தான் சினிமா.
கதையின் பாதையும், கதாபாத்திரங்களின் தேர்வும் கருவின் துணை கொண்டு உருவாக்கப்படல் வேண்டும். ஆனால் தம்பி ராமையா வடிவேலு கிடைத்து விட்டார் என்பதற்காக அந்த நடிகனை வளர விடாமல் படுகுழிக்குள் தள்ளி விட்டார் என்றே சொல்ல வேண்டும்.
சான்ஸ் கிடைத்தும் அதைக் குப்பையில் வீசிய இயக்குனரின் அறிவின்மைதான் ப்ளாப் இ. நா.அ.
நான் தப்பித்து விடுவேன்....
வடிவேல் ஏமாந்தது மட்டுமன்றி எங்களையும் ஏமாற்றிவிட்டார் போலும்...
dggd
சுகந்தன் - யாழ்ப்பாணம்
வணக்கம் லோசன் அண்ணா!
உங்களுடைய வானொலி நிகழ்ச்சிகளின் பரம ரசிகன் நான். உங்களுடைய திறமையினைக்கண்டு பலமுறை வியந்ததுண்டு, வியந்துகொண்டே இருக்கின்றேன். இப்பொழு உங்களுடைய வலைப் பதிவுகளையும் தொடர்ந்து வாசித்து வியந்து வருகின்றேன். எனினும் சுட்டிக்கர்டப்படவேண்டிய பலவற்றைக் குறிப்பிட விரும்புகின்றேன். ஒரு சிறந்த அறிவிப்பாளன் பதிவர் என்ற முறையில் விமர்சனங்களையும் ஏற்றுக்கொள்ளும் பரந்த மனது உங்களிடம் இருக்கும் என எண்ணுகின்றேன்.
‘‘இந்திரலோகத்தில் நா அழகப்பன்’’ பட விமர்சனம் வாசித்தேன் மனம்நொந்தேன். ரசனையில் பலருக்கும் பலவிதமான வகைகள் உண்டு. எனக்குப் பிடித்தது உங்களுக்குப் பிடிக்கவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அண்மைய சில பதிவுகளில் (சினிமா சம்பந்தமான) உங்களது விமர்சன முறை நையாண்டி பண்ணுவதைப் போலுள்ளது. ஒரு கலைஞன் தனது கலைப்படைப்பை சிறப்பில்லாமல் எடுக்க நினைக்கமாட்டான். ஆனால் அவனுடைய படைப்பு ரசிகர்களைக் கவரத்தவறலாம். ஆனால் நடு நிலையான விமர்சனம் அக்கலைஞனை ஊக்கப்படுத்த கூடியதாக இருக்க வேண்டும். (நான் தாங்கள் அளவுக்கு அதிக அறிவு கொண்டவன்னல்ல.)
அங்கே ஓரிடத்தில் குறிப்பிட்டிருந்தீர்கள் ‘‘பேசாமல் சௌந்தர்யா ரஜனியிடம் கொடுத்திருந்தால் இன்னும் சிறப்பாகச் செய்திருப்பார்’’
சௌந்தர்யா ரஜனியின் எத்தனை கிராபிக்ஸ் படங்களை நீங்கள் இதுவரை பார்த்pருப்பீர்கள்? ஏனையா இப்படிக் கூறுகின்றீர்கள். சரி நீங்கள் சொல்வதுபோல் சௌந்தர்யா ரஜனி போல் நல்லாக....? செய்திருந்தால் சௌந்தர்யா ரஜனி கிராபிக்ஸ்ஸை பிரதி பண்ணுகின்றார்கள் என்;று அதற்கும் ஒரு பதிவிடுவீர்கள். (ஆயிரத்தில் ஒருவன் படம் சம்பந்தமான பதிவை நினைவுறுத்தவும்)
நீங்கள் பல ஆங்கிலப்படங்களைப் பார்த்திருப்பீர்கள் பார்த்துக்கொண்டும் இருப்பீர்கள். புதிய தொழில்நுட்பங்கள், வேறுபட்ட சிந்தனைக்ள் வரும்போது அவற்றை நாம்கையாள்வதில் ஒன்றும் தவறில்லை (அப்படியே உல்டா பண்ணுவதை ஒரு கலைஞன் செய்யமாட்டான் என எண்ணுகின்Nறுன்) உதாரணமாக வானலைகளில் நீங்கள் அறிமுகமாகும் போது ‘‘வணக்கம் அன்பு நெஞ்சங்களே!’’ எனத் தொடங்குவீர்கள். ஆனால் எனக்குத் தெரிய முதலில் ஹமீது அண்ணாவே அவ்வாறான தனது அறிமுகத்தை வெளிப்படுத்துவார். அது உங்களைக் கவர்ந்ததால்.... அல்லது ஏதேச்சையாக நீங்கள் அப்படி அறிமுகமாகுவதால் அதனை ஹமீது அண்ணாவிடமிருந்து திருடினீர்கள் என்று சொன்னால் அதைவிட வேறு முட்டாள் தனமிருக்காது.
எனவே தங்கள் மீது அபிமானம் கொண்டே இக்கருத்துக்களை வெளியிடுகின்றேன் ஏனென்றால் இவ்வாறான பதிவுகளைப் வாசிக்கும் போது ஏதோ ஒருவித வெறுப்புணர்வு ஏற்படுகின்றது அது வரக்கூடாது என்பதற்காகவே இவ்வாறு எழுதுகின்றேன்.
இதனை வாசகர் பார்க்க வேண்டிய அவசியமில்லை.
உங்களது சிங்கப்பூர்ப் பயணத் தொடர் சூப்பராகப் போகின்றது..... நன்றி
Colourful blog.
Post a Comment