August 07, 2009

மீண்டுமொரு அணுகுண்டு?

நேற்று அமெரிக்கா ஜப்பானின் ஹிரோஷிமா மீது அணுகுண்டு வீசி 64 ஆண்டுகள் கடந்த நாள்.. உலகில் மனிதனால் ஒரே நாளில் ஏற்படுத்தப்பட்ட மிகப்பெரிய அந்த அழிவைப் பார்த்த பிறகும் நாம் திருந்தினோமா?

இன்னுமொரு அணுகுண்டு வீசப்படாதது மட்டும் தான் மிச்சம்..
அதுவும் வீசப்பட்டிருக்கும்.. ஈராக்கிலோ,ஈரானிலோ,பலஸ்தீனத்திலோ,வட கொரியாவிலோ, வன்னியிலோ..
ஆனால் யார் செய்த புண்ணியமோ அப்படியொரு அவலம் நடக்கவில்லை..


கீழே உள்ள காணொளியை பாருங்கள்.. இது பார்த்த பிறகும் இன்னொரு அணுகுண்டு வீச யாருக்காவது எண்ணம் வருமா?





யுத்த எச்சங்கள் நிறைந்த பூமியிலிருந்து பேசுவதால் எம் போன்றவர்களுக்கு இதன் தாக்கம் நன்றாகவே புரியும்.. அணுகுண்டு வீச்சை மட்டுமே எம்மவர் இன்னமும் சந்தித்திருக்கவில்லை..

உலகம் திருந்துமா?
இன்னும் அணுவாயுதத் தடை ஒப்பந்தம் என்று மாறி மாறிப் பேசியும் தடை கொண்டுவருவது,எச்சரிக்கை விடுவது பற்றிப் பினாத்துகிறார்களே தவிர உருப்படியாக எதையும் செய்யக் காணோம்...

நாம் எப்போது திருந்தப் போகிறோம்...

10 comments:

புல்லட் said...

ஹம்ம்! என்னத்த சொல்ல..

யோ வொய்ஸ் (யோகா) said...

சத்தம் இல்லாத பூமி, ஒரு யுத்தம் இல்லாமல் வேண்டும்

அணு குண்டு வீச நினைப்பவன், அதில் தனது சகோதர சகோதரிகள் இருக்கிறார்கள் என நினைத்தால் அப்படி செய்ய மாட்டான், இன்னொரு ஹீரோசிமா, நாகசாகி வேண்டாம் என பிரார்த்திப்போம்

Admin said...

இதனைப் பற்றி பேசுவதற்கு எங்களுக்கு உரிமை இருக்கிறதா என்று யோசிக்கவேண்டி இருக்கிறது...

அடிக்கடி எனக்கு ஞாபகத்துக்கு வரும் பாடல்...
"என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே தன்னாலே வெளிவரும் தயங்காதே ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே...."

காலம்தான் பதில் சொல்லும் என்று எல்லோரும் சொல்வதைப்போல் சொல்வதைத் தவிர வேறு எதுவும் சொல்லத் தெரியவில்லை...

சந்தோஷ் said...

எம்மவர்கள் இது ஒன்றை மட்டும்தான் இன்னமும் பாக்கேலை....
Albert Einstein மற்றும் J. Robert Oppenheimer னால் உலகுக்கு வந்த சாபம் இது....

நீங்கள் FB ல சொன்ன அந்த ”87%” நடக்குமெண்டு ஏற்கனவே தெரியும்தானே????
இதுக்குத்தானே இவ்வளவும் நடக்குது....

வந்தியத்தேவன் said...

ஐஸ்டீன் இறக்கும் போது மிகவும் வேதனையுடன் தான் இறந்தராம் காரணம் தன் கண்டுபிடிப்பு அழிவுக்கு பயன்படுத்தப்போகிறது என அவர் நினைக்கவில்லை.

Anonymous said...

HI ANNA.ROMBA NALLA PATHIVU ETHU
NANRE.ENNAI PONRAVARKALUKU UNGAL PATHIVU NICHCHAYAM PAYANALIKUM.MANITHA NEYAM MARANITHTHUPPONA KALAMETHU.NAMAKU MUNNALUM HIROSIMA? NAMATHU THAYAHA BHOMI VANNI

Anonymous said...

HI ANNA.ROMBA NALLA PATHIVU ETHU
NANRE.ENNAI PONRAVARKALUKU UNGAL PATHIVU NICHCHAYAM PAYANALIKUM.MANITHA NEYAM MARANITHTHUPPONA KALAMETHU.NAMAKU MUNNALUM HIROSIMA? NAMATHU THAYAHA BHOMI VANNI

ஆ.ஞானசேகரன் said...

பகிர்வுக்கு நன்றி

ப்ரியா said...

நல்ல பதிவு... இது மாதிரியான அவலம் இனி ஒரு முறை நடக்க கூடாது என கடவுளை பிரார்த்திப்போம்...... கடவுள் இருக்கிறாரா????

Hamshi said...

anna good attempt.what tell?i dont have any ideas.2013 el meendum anuvajutha uththathukku world nerunki varuthame?I read the article nearly...

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner