முத்தங்களும் விருதுகளும்

ARV Loshan
8

ஒரே விருது இரண்டு தடவை இரு அன்புக்குரியவர்களால் கிடைத்துள்ளது.

சுபானு முதலில் எனக்கு வழங்கிய சுவாரஸ்ய விருதைத் தொடர்ந்து இப்போது ஆதிரை (கடலேறி)யும் வழங்கி இருக்கிறார்.

மகிழ்ச்சி.. நன்றி..

நீங்கள் எனக்கு வழங்கியுள்ள அன்பு என்னை நெகிழவைக்கிறது.

அண்மையில் விஜய் டிவி விருதுகள் விழாவில் நடிகர் பார்த்திபன் சொன்னது போல விருதுகளும்,பட்டங்களும் முத்தங்கள் போல.. கொடுத்தாலும் சுவைக்கும்;பெற்றாலும் இனிக்கும்..

(யாருக்கு கொடுத்தல், யாரிடமிருந்து பெறுதல் என்பதில் முத்தங்களிலிருந்து விருத்துகள் வேறுபட்டு நிற்கிறது)

ஆனால் ஏற்கெனவே நான் அறுவரைத் தேர்ந்தெடுத்து சுவாரஸ்ய விருது கொடுத்திருப்பதால் மீண்டும் இன்னும் அறுவரைத் தேர்ந்தேடுக்கப்போவதில்லை..


அண்மைக்கால பதிவுலக சண்டை,சச்சரவுகளை நேற்றும் இன்றும் தான் முழுவதுமாக தேடி,வாசித்து அறிந்தவேளை நல்லகாலம் நான் எதிலுமே சம்பந்தப்படவில்லை என்பது ஆறுதலே..

இந்த விருதுகள் வழங்குதல்,பெறுதலும் கூட இதற்கான காரணம் என்பதும் இங்கே நோக்கத் தக்கது.

இன்று காலையில் கோவியாரின் பதிவைப் பார்த்தபோது கலவை உணர்வுகள் தோன்றியது.

எனினும் அன்பின் விளைவாக விருதுகளை எடுத்துக்கொள்ளுங்கள் எந்த பிரச்சினையும் இல்லை..

உணர்வுகளை வெளிப்படையாக நாம் கொட்டும் இடம் என்பதாலும், அனைவரது உணர்வுகளின் கலந்துகட்டி கலவையாக சந்திப்பதாலும் அடிக்கடி இந்த முறுகல்களும், பின் தெளிதலும் சகஜமானதே.

மீண்டும் நன்றிகள்..

விருதுகள் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

பி.கு- இன்னும் என்னென்ன விருதுகள் கொடுத்து சங்கிலிகளை ஆரம்பிக்கப் போறாங்களோ? கண்ணைக் கட்டுதே,,

Post a Comment

8Comments

Please Select Embedded Mode To show the Comment System.*