பள பளக்கிற பட்டாம்பூச்சி..

ARV Loshan
12


கொஞ்சக் காலமாய் இந்தப் பட்டாம்பூச்சிகள் விருதுகளாகப் பலரின் பதிவுப் பக்கங்களிலும் பறந்து கொண்டிருந்ததைப் பார்த்திருக்கிறேன். ஆரம்பத்தில் (எனது பதிவுலகின் ஆரம்ப கட்டத்தில்)எனக்கும் ஒரு நப்பாசை தான்.. யாராவது தர மாட்டாங்களான்னு..

பிறகு பார்த்தால் எல்லோரும் பட்டாம்பூசிகளோடு திரிகிறார்கள்.. அங்கீகாரம் என்பதை விட நண்பர்கள்/தெரிந்தவர்களுக்கான அன்பளிப்பாகவும், பரிசுகளாக அல்லாமல் மற்றவர்களுக்கு pass செய்துவிடும் ஒரு பாரமாகவுமே பதிவர்களுக்கு தெரிந்ததைப் பார்த்த பின்னர் கிடைத்தால் பார்க்கலாம் என்று இருந்துவிட்டேன்.

பட்டாம்பூச்சி வந்து எங்கள் பதிவுத் தளத்தில் இருக்க யாருக்குத் தான் ஆசையில்லை?

என் மீது அதீத அன்புகொண்ட நண்பர் சந்த்ரு (இவர் எங்கள் வெற்றி FM சந்த்ரு அல்ல) தனது அரைச்சதப் பதிவை எட்டிப் பிடிக்கும் நேரம் (இன்று அரைச் சதம் பெற்று விட்டார்.) எனக்குப் பட்டாம்பூச்சியைப் பரிசளித்துள்ளார்.

நன்றிகள் அவருக்கு.. அவரது அன்பையும் உரிமையையும் மதிக்கிறேன்.

பட்டாம்பூச்சி தந்த பாரிவள்ளல் சந்த்ரு வாழ்க.. ;)

இப்போது நான் இந்தப் பட்டாம் பூச்சியை இன்னும் ஐவருக்கு பரிசளிக்கவேண்டும்.(ஆகா மாட்டி விட்டுட்டாங்களே..)

மற்றவர்கள் பட்டாம்பூச்சி பரிசளிக்காத ஐவராகத் தெரிந்தெடுக்கிறேன்..
(இல்லாவிடில் பட்டாம்பூச்சி பெறாதவர்கள் என நினைக்கிறேன் & இப்போது மனதில் ஞாபகம் வந்த சிலர். இன்னும் சிலருக்கு ஏற்கெனவே பட்டாம்பூச்சிகள் கிடைத்துள்ளன)

நான் ரசிக்கும் சிலரை எனக்கு சுபானு அளித்துள்ள சுவாரஸ்ய விருதுக்காக தேர்ந்து வைத்துள்ளதால் இன்னும் ஐவரை பாராட்டும் விதத்தில் அறிவிக்கிறேன்.

கிடுகுவேலி எழுதும் கதியால்..

புதிய சிந்தனைகளுடைய, புதிதாய் சிந்திக்கக்கூடிய ஒரு ஆர்வமான இளைஞர்.சிங்கப்பூரில் தொழில்புரியும் இலங்கை இளைஞர். அன்பு கொண்ட ஒரு நண்பர்.
அனைத்துத் துறையிலும் இவர் எழுத்துக்கள் புகுந்து விளையாடுகின்றன.

நேற்றைய காற்று எழுதும் கிருஷ்ணா

அருமையாக எழுதும் ஒரு ஒலிபரப்பாளர். நான் சூரியனில் முகாமையாளராக இருந்தபோது தனித்திறமையோடும், கவிதை ஆற்றலோடும் இரவு நேரம் நேற்றைய காற்றைப் படைத்தவர். இப்போது கனடாவில் இருந்து கனதியான பதிவுகள் இடுகிறார்.

ஆழமான, அரசியல்,அனுபவப் பதிவுகள் இடுகிறார்.


அம்மா அப்பா எழுதும் ஞானசேகரன்

அமைதியான, ஆர்ப்பாட்டம் இல்லாத எழுத்துக்களால் சிந்திக்கக்கூடிய பல விஷயம் பதிபவர்.
இயற்கையின் காதலர் என்பது இவர் பதிவுகளைப் பார்த்தாலே தெரியும்.
அண்மையில் சுவாரஸ்ய விருதையும் பெற்றுள்ளார்.


பதுங்கு குழியில் உள்ள (!) டொன் லீ

தனது பதிவுத் தளத்தின் பெயராலேயே என்னைக் கவர்ந்த இவர் தன எழுத்துக்கள் மூலமாகவும் என்னை ஈர்த்தவர். சிம்பிளாகப் பல விஷயம் சொல்பவர்.
இப்போது ஐரோப்பியத் திக் விசயத்தில் இருக்கிறார்.

சிங்கப்பூர் பயணத்தில் என்னுடன் நெருக்கமானவர். பயணக் கட்டுரைகள் மீது எனக்கு ஈர்ப்பு ஏற்பட இவரும் ஒரு காரணம்.

அருண்..

எங்கள் வெற்றி FM செய்திப் பிரிவின் ஆர்வமான இளைஞன். தேடலும் துடிப்பும் உள்ளவர். துரிதமாக முன்னேறி வருகிறார்.
இவரது ஆர்வத்துக்காகவும்,மேலும் முன்னேறவேண்டும் என்றும் இந்த அன்புப் பரிசு.




எனது அன்புப் பரிசாக இந்தப் பட்டாம்பூச்சிகளை ஏற்றுக் கொள்ளுங்கள்.
இனி நீங்க கொடுங்க..கலக்குங்க..

நாளை எனக்கு சுபானுவால் வழங்கப்பட்டுள்ள சுவாரஸ்யப் பதிவர் விருதை ஏற்றுக் கொண்டு இன்னும் அறுவருக்கு வழங்கும் பொறுப்பு உள்ளது.

சிங்கப்பூர் பயணத்தில் என்னோடு இணைந்துகொள்ளக் காத்திருந்த அன்பர்கள் கொஞ்சம் காத்திருக்க வேண்டுகிறேன்.

Post a Comment

12Comments

Please Select Embedded Mode To show the Comment System.*