July 20, 2009

பூமிக்கு அழிவு?? நாளை மறுதினம் சுனாமி?? வருகிறது நிபிரு??


இப்போது கொஞ்ச நாளாக யாரைப் பார்த்தாலும்,எங்கே பார்த்தாலும் வருகின்ற 22ஆம் திகதி (நாளை மறுதினம்) வரப்போவதாக சொல்லப்படுகிற சுனாமி பற்றியும், 2012ஆம் ஆண்டு(21st Dec 2012) உலகம் அழியப் போவதாகவும் பரவும் வதந்தி (செய்தி என்றும் சொல்லலாம்) பற்றியுமே பர பர பேச்சும் அரட்டைகளும்.

உலக அழிவு பற்றி பல பதிவுகள் வந்து பயமுறுத்தி இருந்தாலும், நிபிரு (NIBIRU)என்ற பெயரால் உலகுக்கு வர இருக்கின்ற பேரழிவு பற்றி பெரிதாக நாம் யாருமே அறிந்திருக்கவில்லை.. அது பற்றி இந்தப் பதிவிலே சொல்லி இருக்கிறேன்.

வழமை போலவே நான் இது பற்றிக் கொஞ்சமும் சட்டை செய்யவில்லை.. (எதைத் தான் சட்டை செய்தோம்? )சுனாமி வந்தால் வருகிற நேரம் பார்க்கலாம் என்றும், உலகம் அழிந்தால் அழிந்த பிறகு அடுத்த நாள் யார் எஞ்சுவது என்று பிறகு கதைக்கலாம் என்றும் அடிக்கடி நான் கடிப்பதுண்டு..

ஆனால் இரண்டு மூன்று விஷயங்கள் உண்மையிலேயே சுனாமி வந்துவிடுமோ என்றும், உலகம் அழிந்துவிடுமோ என்றும் இப்போது என்னை அச்சப்பட வைக்கின்றன.

22ஆம் திகதி ஏற்பட இருக்கின்ற முழு சூரிய கிரகணத்தால் புவிக் கீழ் தட்டுக்கள் அசையும் என்றும் அந்த அதிர்வில் உருவாகும் நில அதிர்வால் சுனாமி ஏற்படும் என்று நாசா(NASA) விடுத்துள்ள எச்சரிக்கை தான் முதலாவது விஷயம்.

பொதுவாக நாசாவின் எதிர்வு கூறல்கள் தவறியது மிகக் குறைவு.. (சில நேரம் அவர்கள் எதுவுமே கூறாமல் இருப்பதும் எதிர்வு கூறல்கள் ஆகிவிடுகின்றது.)

நாசா(NASA) என்ற அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையம் இந்த ஆண்டில் நிலாவில் (யாருன்னு கேக்காதீங்கப்பா.. சந்திரனை சொன்னேன்) கால் பதித்து நாற்பது பெருமை மிகு ஆண்டுகளைக் கொண்டாடிவரும் வேளையில்,(புளோரிடாவிலிருந்து அப்போல்லோ விண்கலம் சந்திரனுக்கு ஏவப்பட்ட நாற்பதாவது ஆண்டு நிறைவு தினம் கடந்த வியாழன்) நாசாவுடன் சம்பந்தப்பட்டதாக எழுந்துள்ள பரபரப்பு தான் இது.

அடுத்து காலம் தப்பிப் பெய்து வரும் மழையும்.. மணிக்கு மணி மாறிவரும் கால நிலையும்..
எந்த நேரம் மழை பெய்யும் எந்த நேரத்தில் கடும் வெயில் கொழுத்தும் என்று யாராலும் இங்கே சொல்ல முடியாமல் இருக்கிறது.

கடந்த வாரத்தில் அடுத்தடுத்த மூன்று நாட்களில் இலங்கையில் மூன்று வெவ்வேறு இடங்களில் மினி சூறாவளிகள்(இவற்றை குழல் காற்று என்றும் சொல்கிறார்கள்) ஏற்பட்டு சேதங்கள் ஏற்பட்டன.

இவற்றுள் இரண்டு கரையோரப் பிரதேசங்களில்..(சிலாபம், குருநாகல்..) பின்னர் ஏற்பட்டது மலையக நகரான கண்டியில்.

இன்னுமொன்று இப்போது பெய்கின்ற மழையும் வீசுகின்ற காற்றும் அடிக்கடி திசை மாறுவது..

வானில் ஏற்படுகிற வர்ண மாற்றங்கள்.. சில வேலை பகல் வேளையிலேயே இருட்டி பயங்கரமாக இருக்கும்.

இன்னுமொரு காரணம் உலகெங்கிலும் ஏற்படும் வான்வெளி விமான விபத்துக்கள்.. இவற்றுக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் வானிலை மாற்றங்களும் இதில் செல்வாக்கு செலுத்தி இருக்கும் என்பதை யாராலும் மறுக்க முடியாதே..

நாளை சுனாமி வரும் என்று நான் இப்போது நம்புவதற்கு மிக முக்கியமான காரணம் - இலங்கை காலநிலை அவதான மையம் இலங்கைப் பக்கம் சுனாமி வரவே வராதுன்னு அடிச்சு சொல்றாங்க.

இவங்க எதை சொன்னாலும் மாறித்தானே நடக்கும்... அது தான் கொஞ்சம் முன்னெச்சரிக்கையா இருக்கிறது நல்லம் போல ...

###

எனினும் இரண்டு தளங்களை நான் பார்வையிட்ட போது இவற்றை எச்சரிக்கை தகவல்களாக உங்களோடும் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று யோசித்தேன்..

முதலாவது சுட்டியை சொடுக்குங்கள்.. நாளை மறுதினம் வருவதாக சொல்லப்படும் சுனாமி பற்றி ஆராய்கிறது.

ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்த்து பதிவு இடுவதற்குள் மூச்சு வாங்கிவிடும்.. எனவே தயவு செய்து ஆங்கிலத்திலேயே படிச்சுங்கப்பா..

சுனாமி வருவதாக இருந்தால் இலங்கை, இந்தியக் கரைகளை எட்டும் நேரம் பிற்பகல் மணி முதல் மணியாக இருக்கலாம்..

எனினும் இடை நடுவே இந்தோனேசிய தீவுக் கூட்டங்கள் இருப்பதால் முழு வேகத்தில் சுனாமி போல வராது என்று நம்பி இருக்கலாம்..

இரண்டாவது சுட்டி..

கொஞ்சம் பயங்கரமான விஷயம் பற்றி ஆராய்கிறது.. 2012இல் ஏற்பட இருப்பதாக சொல்லப்படும் புவிக்கான பேரழிவு/ பூமியின் அழிவு பற்றி விரிவாக ,ஆதாரங்களுடன் விபரிக்கிறது.

பொறுமையாக ஒவ்வொரு இணைப்பையும் தட்டிப் பார்த்து விஷயங்களைக் கிரகியுங்கள்.

அதிர்ந்து போவீர்கள்.. ஆச்சரியப்பட்டும் போவீர்கள்..

பூமியை நோக்கி வருகிற நிபிரு பற்றி நாசா சொல்லி இருப்பது பார்த்த பிறகு எங்களுக்கு எஞ்சி இருக்கும் காலம் பற்றி எண்ண(count) ஆரம்பித்திருப்போம்...

உண்மையோ பொய்யோ.. இப்போதில்லை எனும் வரை ஒரு தற்காலிக ஆறுதல் தானே..

அழியும் வரை ஆனந்தமாக இருப்போம்..
மற்றவர்களை அழ வைக்காமல் இருப்போம்.


19 comments:

Nimalesh said...

Yellam nalathukee.... yendru think panna vendiyathu thaaa.......

Unknown said...

வெற்றி எப்.எம் தெளிவான ஒளிபரப்புக்கு பின்வரும் முகவரியை அணுகவும்.

http://www.appaa.com/index.php?option=com_content&view=category&layout=blog&id=43&Itemid=113

http://www.appaa.com/index.php?option=com_content&view=category&layout=blog&id=43&Itemid=113

Admin said...

//நாளை சுனாமி வரும் என்று நான் இப்போது நம்புவதற்கு மிக முக்கியமான காரணம் - இலங்கை காலநிலை அவதான மையம் இலங்கைப் பக்கம் சுனாமி வரவே வராதுன்னு அடிச்சு சொல்றாங்க.


இவங்க எதை சொன்னாலும் மாறித்தானே நடக்கும்...//


அப்போ நிச்சயம் வரும் அண்ணா....

சரியான நேரத்தில் சரியான பதிவு அண்ணா..

கோவி.கண்ணன் said...

:)

கெட்டவர் பலர் இருக்க எல்லோர்க்கும் சேர்த்தே அழியும் பூமின்னு தான் பாடனும் !

NONO said...

//வருகிறது நிபிரு//
என்னவே எனக்கு இதில் நம்பிக்கை இல்லை எதுக்கும் இங்கையும் போய்பாருங்க..

http://www.sitchiniswrong.com/
http://www.badastronomy.com/bad/misc/planetx/nutshell.html

ஆ.ஞானசேகரன் said...

//உண்மையோ பொய்யோ.. இப்போதில்லை எனும் வரை ஒரு தற்காலிக ஆறுதல் தானே..

அழியும் வரை ஆனந்தமாக இருப்போம்..
மற்றவர்களை அழ வைக்காமல் இருப்போம்.//

உண்மைதான் நண்பா..
காலதிற்காக காதிருக்காமல் நல்லதை செய்வோம்

Subankan said...

அப்படியானால் விசயம் உண்மைதானா? நானும் ஏதோ ஜோதிடர் கிளப்பிவிட்ட வதந்தின்னு நினைச்சேன்.

சி தயாளன் said...

வடிவா கவனியுங்கோ. 22 அன்று பூம் அதிர்வு ஏற்பட்டால், அது சுனாமி ஏற்படும் அளவுக்கு வீரியமா இருந்தால் மட்டுமே இதெல்லாம் நடக்கும். ஆனால் டிசம்பர் 26, 2004 க்கு பின் பூமி நடுக்கம் பலமுறை ஏற்பட்டு விட்டது. சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டது. ஆகவே இதையெல்லாம் பொருட்படுத்தாமல் அவரவர் தம் வேலைகளை பார்ப்பது தான் நல்லது...:-)))

Anonymous said...

VARUM AANAA VARAADU!!?

ப்ரியா பக்கங்கள் said...

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க போகிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்
அதனால் இந்த உலக அழிவு நடக்கும்!!!

எல்லாருக்கும் ஆப்பு தான்யா !!!!
கதம் கதம்

PG said...

Could you please state the URLs or reports from the site of NASA that supports this news? From what I had heard, it's a hoax.
You can search www.nasa.gov (http://astrobiology.nasa.gov/ask-an-astrobiologist/intro/nibiru-and-doomsday-2012-questions-and-answers) or even Wikipedia (http://en.wikipedia.org/wiki/Nibiru_collision) which is supposed to have the correct information (as confirmed by NASA itself).

சுபானு said...

//நாளை சுனாமி வரும் என்று நான் இப்போது நம்புவதற்கு மிக முக்கியமான காரணம் - இலங்கை காலநிலை அவதான மையம் இலங்கைப் பக்கம் சுனாமி வரவே வராதுன்னு அடிச்சு சொல்றாங்க. இவங்க எதை சொன்னாலும் மாறித்தானே நடக்கும்...//

:) வெளிப்படையான உண்மை.. ஆனால் நடந்துவிட்டால் என்னவாதும்..!
மீண்டும் ஒரு அழிவா..!

Jegatheepan said...

"அழியும் வரை ஆனந்தமாக இருப்போம்..........."

ஊர்சுற்றி said...

ஏனுங்கோ, சுனாமி எதாச்சும் வந்ததுங்களா?

நீங்களும் இப்படி எழுதிறீங்களே லோஷன்.

சாதாரண இயற்கை நிகழ்வுகளுக்கு அசாதாரண பிம்பம் ஏற்றி, காசு பார்க்கும் சில கூட்டங்களின் பிதற்றல்கள் இவை என்பவை உங்களுக்குப் புரியவில்லையா?

RAVI said...

ஐயா சுனாமி,பூகம்பம்,எரிமலை வெடிப்பு மற்றும் புயல்கள் வருவதன் உண்மைக்காரணம்
என்னவென்று தெரியவேண்டுமா?
நான் கடந்த 5-வருடங்களாக இவையெல்லாம் வந்தேதீரும் என்று ஆதரபூர்வமாக
நிரூபித்துள்ளேன்.பத்திரிகையாளர்கள்தான் என்னைக் கண்டுகொள்ளவில்லை.
தயைகூர்ந்து எனது ஆதாரங்களைப் பார்க்க உங்களை வேண்டுகிறேன்.
நன்றி.ரவி.
www.avasaramda.blogspot.com

ramakalai said...

north america and all european countries with china will be destroyed on 22 dec 2012. about 50 crores of people will be died.
this is presumption

mohanraj said...

அழியும் வரை ஆனந்தமாக இருப்போம்..
மற்றவர்களை அழ வைக்காமல் இருப்போம்.//

உண்மைதான் நண்பா..
காலதிற்காக காதிருக்காமல் நல்லதை செய்வோம்

mohanraj said...

அழியும் வரை ஆனந்தமாக இருப்போம்..
மற்றவர்களை அழ வைக்காமல் இருப்போம்.//

உண்மைதான் நண்பா..
காலதிற்காக காதிருக்காமல் நல்லதை செய்வோம்

mohanraj said...



April 15th 2014-The number 8 represents a new beginning in the Bible.
God saved eight people on the ark in order to have a new beginning for mankind after the flood.Genesis 7:13, 23
Jesus showed himself alive EIGHT times after his resurrection from the dead. His first appearance alive was to Mary Magdalene (Mark 16:9 - 11). He then showed himself to two disciples traveling to Emmaus (Luke 24). Next, he appeared to all the disciples except Thomas (John 20:19 - 24) then a week later to all them when Thomas was present (John 20:26 - 29). According to the apostle Paul, Christ also was seen by 500 believers at one time (1Corinthians 15:4 - 7). Jesus also met his disciples at the appointed place in Galilee (Matthew 28:16 - 17) and on Galilee's shores (John 21:1 - 24). His final meeting was on the Mount of Olives, where he gave his followers instructions before ascending to heaven (Acts 1).
•The feasts of Passover (Nisan 14th) and Unleavened Bread (Nisan 15th -21st ) lasted 8 days and marked the beginning of the Liturgical year [Leviticus 23:5-8], while the Feast of Tabernacles lasted 8 days and marked the end of the Liturgical year
The Jewish blood moon tetrad has happened only (7 times) over the last 2,000 years!S Of the 87 tetrads that have occurred since the time of Christ, only 7 have fallen on Jewish feast days. Those seven occurred in the following years: 162-163, 795-796, 842-843, 860-861 , 1493-1494, 1949-1950 and 1967-1968...2014/15 will be the... 8th
4 blood moons-A rare cycle of solar and lunar eclipses that will begin this year at the time of God’s holy days cited in the Bible is about to wake up millions.The 1st of the 4 blood moons occurs April 15th 2014..
(These are patterns that cannot be disregarded.)
In the Old Testament, the prophet Joel states, “The sun shall be turned into darkness, and the moon into blood, before the great and the terrible day of the LORD come.” (Joel 2:31)
( BEFORE- the great and the terrible day of the LORD come)










If the effects of this so called planet Nibiru on Earth of so bad how come there's no...?
...past evidence of its passing?

I mean at first when i saw it today, i actually believed it until I saw the words once every 3600years meaning it's last passing of the planet Earth would have been 1688BC.
Now are current population is 6.3 billion, life on this planet has been about for roughly 3billion years in its simplist form and a collision between Niburu and another planet before Earth existed was apparently what created Earth and then after that this Nibiru affected our planet every 3600years which in my mind doesn't fit the figures given.
The next time this planet supposedly passes us in 2012 90% of the population will die, correct me if I'm wrong but in 1688BC, our population on Earth was tiny, significantly less than 6.3billion, wouldn't its last passing have driven us to extinction.
Also Nibiru according to the Ancient Eygptians harbours life, looking at its orbit, there is no way this planet could ever harbour life, the conditions would be too extreme.
What do you reckon about this Nibiru...
Update : ...planet?
In my opinion the maths just doesn't add up cos according to this theory, we should have been long gone by now.


ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner