June 17, 2009

என்னை(யும்) (மீண்டும்) ஏமாற்றிய இந்தியா...


தலைப்பிலேயே நிறைய விஷயங்கள் நீங்களாக ஊகித்துக்கொண்டால் இந்த அப்பாவி பொறுப்பாளியல்ல...

நான் இங்கே பதிவிடப்போவது முற்று முழுக்க கிரிக்கெட் பற்றியே..


இந்தியாவை நம்பிப் பதிவிட்டோர்,கருத்துக் கூறியோர் அத்தனை பேரின் மூஞ்சியிலும் இந்தியா கரியைப் பூசிவிட்டது.. (இது நடந்து ரொம்பக் காலமே என்று யாரும் சொல்லப் படாது.. நான் அண்மையில் இந்தியா உலகக்கிண்ண போட்டியில் வெளியேறியதை மட்டுமே சொன்னேன்)

முதல் சுற்றில் இரண்டு நோஞ்சான் அணிகளை பந்தாடி விட்டு சூப்பர் 8 சுற்றில் பந்து மூன்று போட்டிகளிலும் அடி வாங்கி நொண்டி,நொந்து தங்கள் மூஞ்சியிலும் எங்கள் கணிப்புக்களிலும் கரி பூசிப் போயுள்ளது இந்தியா..

அதிலும் நேற்று தென் ஆபிரிக்காவுடன் பெற்றது அவமானகரமான தோல்வி..
காரணமே சொல்ல முடியாத அப்பட்டமான அடி.. கொஞ்சம் கூடப் போராடாமல் சுருண்டு போன இந்த இந்தியாவையா நாமெல்லாம் உலகின் மிகச் சிறந்த அணி என்று கருதினோம்..
எப்படி இருந்த இந்தியா....


கடந்த T 20 உலகக்கிண்ணம் வென்றவர்கள் - IPL இல் பிரகாசித்த நட்சத்திரங்களை உடைய அணி – அணியில் வீரர்களுக்குப் பதிலாக நட்சத்திரங்களைக் கொண்ட அணி – உலகின் மிகக் 'கூலான' தலைவரின் வழி நடத்தல் என்று ஒருவர் இருவரல்லர் ஒட்டுமொத்த விமர்சகர், நிபுணர்களினாலும் Hot Favourites என்று கருதப்பட்ட இந்திய அணி அடுத்தடுத்த தோல்விகளை இரண்டாம் சுற்றில் பெற்றது ஆச்சரியத்தைவிட அதிர்ச்சியையே ஏற்படுத்தியது.

சொன்னது போலவே இந்திய அணி மற்றுமொரு உலகக்கிண்ணக் கனவிலும் தன்னைப்பற்றிய எண்ணங்களிலும் மதர்ப்போடு மிதந்து கிடந்த வேளை வெற்றிகளுக்காகத் தவம் கிடந்த இரண்டு அணிகளான இங்கிலாந்தும், மேற்கிந்தியத் தீவுகளும் பவுன்சர் பந்துகளாலும் இந்திய அணியைப் பயமுறுத்தி பின்னி நாருரித்துவிட்டன.


நம்பித் திரண்டு வந்து ஏமாந்து போன ரசிகர்கள்...


வேகப் பந்து வீச்சு தான் இந்தியாவில் அச்சுறுத்துகிறது என்று பார்த்தால் நேற்று தென் ஆபிரிக்காவின் சுழல் பந்து வீச்சாளர்களும் உருட்டி எடுத்து விட்டார்களே.. என்ன கொடுமை தோனி இது? தென் ஆபிரிக்காவின் மூன்று சுழல் பந்து வீச்சாளர்களும் சேர்ந்து 9 ஓவர்களில் 32 ஓட்டங்கள் மட்டுமே கொடுத்து ஐந்து விக்கெட்டுக்களை எடுத்துள்ளார்கள்..

Hot favourites என்ற நிலையிலிருந்து அரையிறுதிகளுக்குக் கூடத் தெரிவாகாமல் போய் அனைவரது கேலிப்பேச்சுக்கும் உள்ளான அணியாக இந்தியா இரண்டு அடுத்தடுத்த போட்டிகளில் மாறிப்போனது பரிதாபம்!

மறுபக்கம் பக்கத்து நாடு இலங்கை தொடர் வெற்றிகளுடன் பட்டை கிளப்பிக்கொண்டிருந்தாலும் எத்தனையோ வழிகளில் எவ்வளவோ உதவிகள் செய்த இந்திய நண்பர்களுக்கு எதுவுமே பிரதியுபகாரமாக செய்யமுடியாமல் போனதும் பரிதாபம் தான்!

இந்திய - இலங்கை இறுதிப்போட்டிக்கு கட்டியம் கூறியிருந்த நான், இந்தியா அரையிறுதிக்கு வந்தாலும் - பாகிஸ்தான் முன்னாலேயே தோற்றுவிடும் என்றேன் - நடந்ததோ தலைகீழ்!

இந்திய அணியின் மிகத் தீவிரமான ரசிகர் ஒருவர் என் சக அறிவிப்பாள – நண்பர்! இந்தியா அரையிறுதி வாய்ப்பை இழந்த அடுத்த நாள் - வாழ்க்கை தொலைந்து போனவர் போல வந்திருந்தார்.

வழமையாக இந்திய அணி தோற்றால் இவரைப் போட்டு அழாக்குறையாக வறுத்தெடுப்பது எனக்கு மிகப் பிடித்த பொழுதுபோக்குகளில் ஒன்று.

எனினும் அன்று அவர் இருந்த நிலையில் பார்க்கப் பாவமாக இருந்தது.

தோனியைத் தாறுமாறாக ஏசிக்கொண்டிருந்தார். இந்தியா தோற்றுவிட்டது என்பதைவிட, தோனி வேண்டுமென்றே இந்தியாவைத் தோற்க வைத்துவிட்டார் என்றே அவர் சத்தியம் செய்யாத குறையாகப் புலம்பிக்கொண்டிருந்தார்.

'நான் நினைத்தால் வெல்வேன் - நினைத்தால் இந்தியாவைத் தோற்கவைப்பேன்' என்று யாரிடமோ ஜம்பமாகக் காட்டவே இந்த அடுத்தடுத்த தோல்விகள் என்பதே அவரது நியாயம்!

தோனி விட்ட சில மோசமான முடிவெடுப்புத் தவறுகள் அவரை அவ்வாறு உறுதிபட சொல்ல வைத்திருக்கலாம்.

ஆனால் நான் ஆரம்பம் முதலே தோனியின் ரசிகனல்ல... தோனியின் ஆரம்பகால அசுரவேகம் அதிரடியில் பிரமித்துப்போனாலும் முன்பிருந்து அவரை என்னால் ஒரு அணிக்காக விளையாடும் வீரராக (Team man) ஏற்றுக்கொள்ளமுடியவி;ல்லை.

சிரேஷ்ட வீரர்களை மதிக்காத, கொஞ்சம் தலைக்கனம் கொண்டவராக, சுயநலம் உடையவராக, தன் அழகு, விக்கெட் போன்றவற்றிலேயே அதிக அக்கறையுடையவராகவே தோனியை நான் பார்த்து வந்திருக்கிறேன்.

பல இடங்களில் எனது எண்ணப்பாங்குகள் சரி என்பதை வாசிக்கும் உங்களில் பலரும் ஏற்பீர்கள்.

இலங்கை டெஸ்ட் சுற்றுலாவில் விலகி ஓய்வெடுத்தது. (கும்ப்ளே தலைவர்) பின் ஒரு நாள் தொடரின் தலைவராகப் பொறுப்பேற்று வந்து விளையாடியது.

சிரேஷ்ட வீரர்கள் பலருடன் முறுகல் - மற்றும் அவர்கள் பற்றி தோனி பகிரங்கமாக வழங்கிய சில பேட்டிகள் (குறிப்பாக கும்ப்ளே, சேவாக், கங்குலி & ட்ராவிட்)

தேசிய உயர் விருதுகள் கிடைக்கும் போதும் அந்த விழாவுக்கு (பத்மஸ்ரீ) வராமல் அவமதித்தது.

முன்பு போல் இல்லாமல் ஓட்டக்குவிப்பில் கவனம் சிதறியமை.

கூழாகிப் போன கேப்டன் கூல் (Captain Cool)

முன்பு அதிரடி ஆட்டம் ஆடிய தோனியின் தலையில் அதிர்ஷ்ட தேவதை குடியிருந்தது போல தொட்டதெல்லாம் துலங்கியது. அவர் எடுத்த சடுதியான முடிவுகள் கூட சரித்திரம் படைத்தன. இப்போது தரித்திரம் பிடித்தவராக அவரை மாற்றி உள்ளது.

அவரது ஓட்டக் குவிப்பும் நொண்டியடிக்கிறது.. மைதானத்திலும் சொர்ந்தவராக காணப்படுகிறார். எடுக்கும் முடிவுகளும் சறுக்கி விடுகின்றன.

தோனியின் சரக்கு தீர்ந்துவிட்டதா? அல்லது கலைத்து கிரிக்கெட் மீது ஆர்வமற்றுப் போய் விட்டதா? IPLஇல் சென்னை சூப்பர் கிங்க்சின் கடைசி ஆட்டங்களின் போதும் தோனி அசுவாரஸ்யமாக விளையாடியது கண்டிருப்பீர்கள்..

முன்பு பார்த்த சிக்சர் அடிக்கும் அதிரடி தோனி எங்கே போனார்? இப்போ ஒன்றிரண்டு ஓட்டங்களோடு பவுண்டரி அடிக்கவே தடவித் தடுமாறுகிறார். என்னவாயிற்று?

இம்முறை தோனி தலைவராகவும், துடுப்பாட்ட வீரராகவும் சறுக்கியது அவர் மேல் எல்லோருடைய விரல்களும் நீண்டு தோனியை பிரதான குற்றவாளியாக்கினாலும், யுவராஜ் தவிர வேறு எந்த துடுப்பாட்ட வீரருமே சோபிக்கவில்லை.. ரோகித் ஷர்மாவும் முதல் சுற்றோடு சரி..

எவ்வளவு நாள் தான் தனியாகவே போராடுவது - யுவராஜ்


பந்து வீச்சாளர்களில் இஷாந்த் ஷர்மா தொடர்ந்து சொதப்பியதோடு, மற்றவர்களும் தேவையான நேரங்களில் பிரகாசிக்கவில்லை..

2007இல் மந்திரசக்தியாக மற்ற அணிகளைக் கட்டிப்போட்ட இந்தியாவின் மின்னல் வேகக் களத்தடுப்பு போய் ஒளிந்துகொண்டது எங்கே என்று தெரியவில்லை..
யுவராஜ்,தோனி கூட தடுமாறி இருந்தார்கள்..

உண்மையில் 2007இல் யாருக்கும் Twenty 20 கிரிக்கெட் பற்றி பெரிதாகத் தெரிந்திருக்காத நிலையில் அனுபவமற்றுக் களமிறங்கிய இந்தியா வெற்றி வாகை சூடியது.

இம்முறையோ எல்லோருமே ஆட்டங்களைக் கரைத்துக் குடித்திருந்தார்கள் IPL வேறு தகுந்த பயிற்சியை வழங்கி எல்லா அணிகளையும் சூடேற்றி இருந்தது. இந்திய அணியோ அதிகமாக விளையாடி களைத்துப் போயிருந்தது.

இதற்கிடையில் சேவாகின் இழப்பும் இந்தியாவில் மிகப் பெரியளவில் பாதித்தது. அவருக்குப் பதில் ரோகித் ஷர்மாவை ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக அனுப்ப மத்திய வரிசையிலும் வெற்றிடம் ஏற்பட்டது.

தோனி - சேவாக் மோதல் என்ற பரபரப்பும் (எவ்வளவு தான் ஒற்றுமை என்று காட்ட முயற்சி எடுத்தாலும் கூட) அணிக்குள் ஒரு வித மந்த சூழ்நிலையை தொற்றுவித்ததென்னவோ உண்மை.

இந்திய அணியை இம்முறை நாங்கள் எல்லோரும் அதிக வாய்ப்புடைய அணியாகக் கருதியது மிகப்பெரிய தவறு என்று இப்போது தான் நான் உணர்கிறேன்.

காரணம் இரு உலகக் கிண்ணங்களுக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்திய அணி போட்டிகளில் பெரிதாக சோபிக்கவே இல்லை. ஒரு நாள் போட்டிகளில் தான் இந்திய வீரர்களின் ஆதிக்கம் அதிகரித்தது.

தனித் தனி வீரர்களாக ஆட்டங்களில் சிறப்பாக விளையாடினார்களே தவிர அணியாக அவர்களின் பெறுபேறு சிறு அணிகளுக்கேதிராகவே சிறப்பாக இருந்தது.

எதிரணிகள் நல்ல முறையில் இந்திய அணியின் பலவீன ஓட்டைகளைக் கற்றறிந்து இந்தியாவை பந்தாடி விட்டன.

ஒன்றா இரண்டா பலவீனம்? காணும் இடமெல்லாம் பலவீனம் என்றால் யாரும் அடிப்பார்கள் தானே..

இந்திய அணியின் நல்ல காலமோ, ரசிகர்களின் நல்ல காலமோ இந்திய அணி பாகிஸ்தானிடமோ, இலங்கையிடமோ தோற்காமல் வெளியேறியுள்ளது..

இல்லாவிட்டால் ரசிகர்கள் கொந்தளித்திருப்பார்கள்.

இப்போது அடுத்த கட்டம் பற்றி யோசிக்கும் நேரம்.. தலைவர் தோனி, வீரர்கள், தேர்வாளர்களுக்கு...

வீரர்கள் உடல்,மனதளவில் களைத்துப் போயிருக்கிறார்கள் என்பதை காரணம் காட்டும் பயிற்றுவிப்பாளர் கரி கேச்டனும், தேர்வாளர்களும் இன்று மாலை கூடி மேற்கிந்தியத் தீவுகள் செல்லும் இந்திய ஒரு நாள் அணியைத் தெரிவு செய்யப் போகிறார்களாம்.

யாருக்கு ஓய்வு கொடுப்பது, யாருக்கு கட்டாய ஓய்வு கொடுத்து கழுத்தறுப்பது என்பதெல்லாம் அவரவர் கையில்..

உலகக் கிண்ணம் தகுதியான இன்னொரு அணியின் தலைவரின் கையில்...

இந்தத் தொடரில் எந்தத் தோல்வியும் காணமல் அரையிறுதி நோக்கி சென்றுள்ள இலங்கை அல்லது தென் ஆபிரிக்க அணியின் தலைவரின் கரங்களில் தான் இம்முறை உலகக் கிண்ணம் தவழும் என்பதே எனது எதிர்பார்ப்பு.. (இவங்க எப்போ என் மூகுடைப்பான்களோ? ஆனாலும் பரவாயில்லை.. எவ்வளவு உடைப்பட்ட்டிட்டோம்.. )

33 comments:

மயாதி said...

//என்னை(யும்) (மீண்டும்) ஏமாற்றிய இந்தியா...//

எங்க இருந்துதான் இப்படிஎல்லாம் துணிச்சல் வருதோ!

கே.கே.லோகநாதன் - KK Loganathan [B.Com] said...

அண்ணா நினைப்புதான் பிழைப்பை கெடுக்குமாம் . இந்தியாவுக்கு நடந்துட்டுது.
ஐயோ பாவம் .
அன்புடன் - லோகநாதன்

வான்முகிலன் said...

நண்பரே, இதில் முழுக்க முழுக்க இந்திய அரசியல் உள்ளது. அதனால்தான் இப்படி விளையாடி உள்ளது.

கே.கே.லோகநாதன் - KK Loganathan [B.Com] said...

அண்ணா நினைப்புதான் பிழைப்பை கெடுக்குமாம் . இந்தியாவுக்கு நடந்துட்டுது.
ஐயோ பாவம் .
அன்புடன் - லோகநாதன்

Unknown said...

loshan anna,

naanum oru theevira indian fan thaan.
aana ippa ennavo theriyela, cricket la kooda indiava support panna mudiyala... i hate india... thamilargalin saabam indiavai summa vidathu...

SUREஷ்(பழனியிலிருந்து) said...

எந்த நாட்டின் கிரிக்கெட் வளர்ச்சிக்கு உலகக் கோப்பை அவசியமோ அவர்களுக்குத்தான் கோப்பை போகும். அதுதான் விதி..,

கிடுகுவேலி said...

வணக்கம் லோஷன்,
நல்ல பதிவு. எனக்கும் தோனியை பிடிக்காமல் போனதற்கு காரணம் எல்லோரும் தலையில் தூக்கி வைத்து ஆடியதுதான். நீங்கள் நல்ல வடிவாக அலசியிருக்கிறீர்கள். உண்மைதான் இந்திய அணியை எல்லோரும் எதிர்பார்த்து இருந்தனர் இந்தா மீண்டும் தோனி கோப்பையுடன் வருகிறார் என்று, ஆனால் அவர்களோ சொதப்புகிறார்கள். இதுதான் வழமையான இந்தியா. அவர்கள் வென்றால்தான் அதிசயம். உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்களும், ஆதரவுகளும் என்றும் இருக்கும்.

Anonymous said...

//மறுபக்கம் பக்கத்து நாடு இலங்கை தொடர் வெற்றிகளுடன் பட்டை கிளப்பிக்கொண்டிருந்தாலும் எத்தனையோ வழிகளில் எவ்வளவோ உதவிகள் செய்த இந்திய நண்பர்களுக்கு எதுவுமே பிரதியுபகாரமாக செய்யமுடியாமல் போனதும் பரிதாபம் தான்!//

இது அரசியல் இல்லையா?

என்ன கொடும சார் said...

//இந்தத் தொடரில் எந்தத் தோல்வியும் காணமல் அரையிறுதி நோக்கி சென்றுள்ள இலங்கை அல்லது தென் ஆபிரிக்க அணியின் தலைவரின் கரங்களில் தான் இம்முறை உலகக் கிண்ணம் தவழும் என்பதே எனது எதிர்பார்ப்பு..//

வழமை போல் தென்னாபிரிக்கா அரை இறுதியில் தோற்கலாம்..

என்ன இருந்தாலும் T20 என்றால் பாகிஸ்தான் தான் முன்னணியில் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.. கடந்த முறை Final இல் இம்முறை இதுவரை semi final வரை

அஜுவத் said...

சிரேஸ்ட வீரர்களை தோனி மதிப்பதில்லை என்பது உண்மைதான் ஆனால் தோனியின் உடைய ஒரு Game தெரியுமா; கங்குலியின் உடை கடைசி போட்டியின் இறுதிக்கடத்தில கங்குலிய Captainஆ நியமிச்சாரே பாருங்க என்ன Game யா அது.

Nimalesh said...

watz happening n india team...?????

Unknown said...

சேவாக் இல்லாததை காரணமாக குறிப்பிடுவது எந்தளவுக்கு சரி என்பது தெரியவில்லை. சேவாக் IPL இல் எதையுமே கிழிக்கவில்லை.
இந்திய அணி எந்தக் காலத்திலாவது தொடர்ந்து போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தியதை கண்டிருக்கிறீர்களா?
கொஞ்ச காலம் தூள் கிளப்புவார்கள், பின்னர் வழமையான சொதப்பல் தான்.

டோனி கூலான அணித்தலைவர் அல்ல. அணி தொடர்ந்து வென்ற படியால் அவரால் அப்படி இருக்க முடிந்தது.
அண்மையில் இலங்கையில் நடந்த ஒரு நாள் தொடரின் ஓர் போட்டியில் (இரண்டாவது அல்லது மூன்றாவது) நம்ம திலின கண்டம்பி கடைசி நேரத்தில் போராட டோனி சூடாகி மைதானத்தில் கோபப்பட்டது குறிப்பிடத்தக்கது.

யோ வொய்ஸ் (யோகா) said...

எனக்கும் இலங்கை தான் favorite அணி ஆனால் இந்தியா வெளியே போனதுக்கு முக்கிய காரணம் தாங்களை தவிர வேற யாருமே முக்கியம் இல்லை என்கிற அகங்காரம் மற்றும் எதிர் அணி வீரர்களை மதிக்காத பண்பு தான். டோனி எதிர் அணி வீரர்களோடு நட்புறவாக விளையாடுபவர் என்றாலும் ஹர்பஜன் சிங், யுவராஜ், இர்பான் பதான் போன்றவர்கள் எதிர் அணி வீரகளை எதிரி வீரர்களாகவே பார்பவர்கள். இதே போல் விளையாடும் ஆஸ்திரேலியா வும் வெளியேறியது ரொம்பவே சந்தோசம். என்ன இந்தியா அணி இருந்திருந்தால் கண்ணுக்கு குளிர்ச்சியா இருந்திருக்கும் (பார்வையாளர்களை சொன்னேன். ஆனாலும் IPL அளவுக்கு இல்லை தான்). மேலும் IPL களைப்பு தான் தோல்விக்கு காரணம் என கர்ஸ்டன் கூறினாலும் நம்ம தில்ஷன், மலிங்க, முரளி, AB டீ வில்லியர்ஸ், கிப்ஸ், கலிஸ் எல்லாம் IPL போட்டிகளில் கலக்கி விட்டு வந்தவுங்க தானே. எந்த ஊரு நியாயம் ஐயா இது. உலக கிண்ணத்தை வென்று இருந்தால் IPL தான் காரணம் என கூறி இருப்பாங்களோ

அக்னி பார்வை said...

ஆசியாவின் மார்க்கெட்டையும், இந்தியாவில் வரவேற்ப்பையும் பெற ஐசிசி போன முறை ஒரு ஸ்கிரிப்ட் எழுதி அதில் இந்தியா உலக கோப்பை வாங்குமாறு செய்தது, போதுமான வரவேற்ப்பை பெற்றபின் ஐசிசி இந்த முறை அனைவரும் ஒழுங்காக விளையாடட்டும் என விட்டல் இந்திய அணியின் லட்சனம் வெளியே வந்துவிட்டது.இதனால் இந்திய கிரிக்கெட் வாரியம் ஐசிசி மீது வழக்கு தொடரும் முடிவுக்கு வந்திருக்கின்றனர். அடுத்த முறையில் இருந்து ’விஜய் டிவி’ யை போல் போட்டிகளுக்கு எழுதபடும் ஸ்கிரிப்ட், யார் எப்பொழுது அழ வேண்டும், எகிறி குதிக்க வேண்டும் போன்ற அனைத்து விஷயங்களை தெளிவாகக் குறிபிட்டால் ஒழிய, அடுத்த போட்டியில் பங்கேற்பதில்லை எனவும் முடிவு செய்யபட்டுள்ளது.

Subankan said...

//நான் இங்கே பதிவிடப்போவது முற்று முழுக்க கிரிக்கெட் பற்றியே..//

சரி..

//இந்தியாவை நம்பிப் பதிவிட்டோர்,கருத்துக் கூறியோர் அத்தனை பேரின் மூஞ்சியிலும் இந்தியா கரியைப் பூசிவிட்டது..//

தெரிஞ்ச விசயம்தானே!

//மறுபக்கம் பக்கத்து நாடு இலங்கை தொடர் வெற்றிகளுடன் பட்டை கிளப்பிக்கொண்டிருந்தாலும் எத்தனையோ வழிகளில் எவ்வளவோ உதவிகள் செய்த இந்திய நண்பர்களுக்கு எதுவுமே பிரதியுபகாரமாக செய்யமுடியாமல் போனதும் பரிதாபம் தான்!
//

இது மேட்டரு

//இந்திய - இலங்கை இறுதிப்போட்டிக்கு கட்டியம் கூறியிருந்த நான், இந்தியா அரையிறுதிக்கு வந்தாலும் - பாகிஸ்தான் முன்னாலேயே தோற்றுவிடும் என்றேன் - நடந்ததோ தலைகீழ்!//

பாகிஸ்தான் உள்ளே வருமென்று முன்னமே தெரிந்திருந்தால் இந்தியா இதிலயும் முந்தியிருக்குமோ???

சூப்பர்...

:-)

Risamdeen said...

//உலகக்கிண்ணக் கனவிலும் தன்னைப்பற்றிய எண்ணங்களிலும் மதர்ப்போடு//
Monitor பக்கத்தில் இருக்கும் motherboard தானே?

//நான் இங்கே பதிவிடப்போவது முற்று முழுக்க கிரிக்கெட் பற்றியே..//

//மறுபக்கம் பக்கத்து நாடு இலங்கை தொடர் வெற்றிகளுடன் பட்டை கிளப்பிக்கொண்டிருந்தாலும் எத்தனையோ வழிகளில் எவ்வளவோ உதவிகள் செய்த இந்திய நண்பர்களுக்கு எதுவுமே பிரதியுபகாரமாக செய்யமுடியாமல் போனதும் பரிதாபம் தான்!//

முன்னுக்குப்பின் முரண்

Risamdeen said...

//வழமையாக இந்திய அணி தோற்றால் இவரைப் போட்டு அழாக்குறையாக வறுத்தெடுப்பது எனக்கு மிகப் பிடித்த பொழுதுபோக்குகளில் ஒன்று.//

இன்று விடியல் நேயர்களை வறுத்து எடுத்தப்பவே புரிஞ்சிச்சு நீங்க இந்திய அணி ரசிகர் இல்லன்னு இப்ப நீங்களே வாக்குமூலம் கொடுத்துட்டீங்க

//இம்முறை தோனி தலைவராகவும், துடுப்பாட்ட வீரராகவும் சறுக்கியது அவர் மேல் எல்லோருடைய விரல்களும் நீண்டு தோனியை பிரதான குற்றவாளியாக்கினாலும், யுவராஜ் தவிர வேறு எந்த துடுப்பாட்ட வீரருமே சோபிக்கவில்லை.. ரோகித் ஷர்மாவும் முதல் சுற்றோடு சரி..//

அட விடப்பா விடப்பா வெற்றியடஞ்சா தலையில தூக்கி வக்கிறதும் தோல்வியடஞ்சா தலையில ஏறி மிதிக்கிறதும் சகஜந்தான

maruthamooran said...

வணக்கம் லோஷன்,

கிரிக்கட் விளையாட்டின் மீது இந்தியர்களுக்கு இருக்கின்ற தலைகேறிய போதையே அந்த அணிக்கு தலைமை வகிக்கின்றவர்களை தலைக்கனம் பிடித்தவர்களாகவும், சிரேஷ்ட வீரர்களை மதிக்கும் தன்மையற்றவர்களாக மாற்றுகின்றது. அதற்கு தோனி மாத்திரமின்றி கங்குலி, அசாருதீன் போன்றோர் நல்ல உதாரணங்கள்…..

நீங்கள் இறுதிப் போட்டிக்கு வரும் என்று எதிர்பார்த்திருந்த இந்தியாவுக்கு அடிவிழும் (அதுவே எனது விருப்பமும் கூட, ஏன் என்றால் அவர்கள் அதிகம் படம்தான் காட்டினார்கள்.) என்பதை நான் ஏற்கனவே எதிர்பார்த்திருந்தேன்.

இந்த இடத்தில் இலங்கை அணியின் ஒற்றுமை மற்றும் பொறுப்புணர்ச்சி குறித்து குறிப்பிட விரும்புகின்றேன். வென்றார்களோ, தோற்றார்களோ இலங்கை அணியினர் ஒற்றுமையாகவே செயற்படுகின்றனர். சிரேஷ்ட விரர்களுக்கு உரிய மரியாதையை அணித்தலைவர்களும், கனிஷ்ட வீரர்களும் கொடுத்து வருகின்றனர். அதுபோல், கனிஷ்ட வீரர்களின் வளர்ச்சியில் சிரேஷ்ட வீரர்கள் அக்கறை கொண்டிருப்பது கவனிக்கத்தக்கது. இலங்கை அணி இந்த உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் வெற்றி பெறுகிறார்களோ இல்லையோ அதுகுறித்து எனக்கு எந்த வருத்தமும், எதிர்பார்ப்பும் இல்லை… ஆனால், இலங்கை அணிக்கு மற்றுமொரு நல்ல, திறமையான தலைவர் கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. மீண்டும் சந்திக்கலாம்.

நன்றியுடன்,
மருதமூரான்.

குறை ஒன்றும் இல்லை !!! said...

அண்ணே..
நானும் உங்கள் கட்சி தான்.. எனக்கும் தோணியைப்பிடிக்காது..
அதுவும் அவர் ஆடும் முறை..உவ்வே...

Hamshi said...

:)Ok romave pavam MS.enijavathu adkki vasikkaddum.Veen en thukkam than pochchu,What to do?Anna overa SL lions ekku support pannathenga.Anna ellathium vida jru anth Indian team supporter?athu arijaththan romave interest aga erukku.Romba aru aruvene aruthuppodinga,but nallaththan erukku.

Islamic World said...

தமிழர்களோட சாபத்தால இந்தியா தோத்துச்சுநு சொல்றீங்க . இலங்கைல தமிழர்கல கொலை செய்வது இலங்கை அரசுன்னு சொல்லுறீங்க. சரி, ஒரு வேலை இலங்கை உலக கிண்ணத்தை ஜெயிச்ச, இல்லேன்னா பறிகொடுத்தா யாரோட சாபத்தை சொல்லுவீங்க?
நீங்க எப்படி இருந்தாலும் ஒரு நொண்டி சாக்கை சொல்லுவீங்க? சொல்லுங்க பார்க்கலாம்

என்ன இருந்தாலும் தமிழ் பயங்கரவாதி பிரபாகரனையே போட்டு தள்ளி உலக நாடுகளுக்கு இலங்கை, தீவிரவாதத்தை ஒழிப்பதில் முன் மாதிரியாக இருக்கிறது என்பது மட்டும் உண்மை.

Anonymous said...

தமிழர்களோட சாபத்தால இந்தியா தோத்துச்சுநு சொல்றீங்க . இலங்கைல தமிழர்கல கொலை செய்வது இலங்கை அரசுன்னு சொல்லுறீங்க. சரி, ஒரு வேலை இலங்கை உலக கிண்ணத்தை ஜெயிச்ச, இல்லேன்னா பறிகொடுத்தா யாரோட சாபத்தை சொல்லுவீங்க?
நீங்க எப்படி இருந்தாலும் ஒரு நொண்டி சாக்கை சொல்லுவீங்க? சொல்லுங்க பார்க்கலாம்

என்ன இருந்தாலும் தமிழ் பயங்கரவாதி பிரபாகரனையே போட்டு தள்ளி உலக நாடுகளுக்கு இலங்கை, தீவிரவாதத்தை ஒழிப்பதில் முன் மாதிரியாக இருக்கிறது என்பது மட்டும் உண்மை.

யோ வொய்ஸ் (யோகா) said...

என்ன லோஷன் ரெண்டு நாளா விடியல்ல காண கிடைக்கல. கஞ்சிபாய் இண்ட பிரசார விஷயமா பிஸி ஆக இருகீங்களோ? இல்ல லீவ் போட்டுட்டு மேட்ச் பார்த்துக்கிட்டு இருக்கீங்களா? எது எப்படியோ சீக்கிரமா வாங்க விடியலுக்கு. நம்ம ஸ்ரீ லங்கா வேர்ல்ட் கப்பை தூக்குறப்ப நீங்க அதை அறிவிப்பு செய்யணும்

ரசிகன் said...

//வழமை போல் தென்னாபிரிக்கா அரை இறுதியில் தோற்கலாம்.. //

//என்ன இருந்தாலும் T20 என்றால் பாகிஸ்தான் தான் முன்னணியில் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.//

அட பலிச்சிடுச்சு.. உங்க வாசகர்கள் எல்லாம் படு சுட்டி

ஆ.ஞானசேகரன் said...

வணக்கம் நண்பா,
எனக்கு கிரிகெட் பற்றி அவ்வளவாக தெரியாது, உங்களின் எழுத்து நன்றாக இருக்கு

அன்புடன்
ஆ.ஞானசேகரன்

நிரூஜா said...

//இந்தியாவை நம்பிப் பதிவிட்டோர்,கருத்துக் கூறியோர் அத்தனை பேரின் மூஞ்சியிலும் இந்தியா கரியைப் பூசிவிட்டது..

mh....!

Anonymous said...

சங்ககார சிங்களத்தில் கதைத்து தன் சிங்களப்புத்தியை கடைசியில் காட்டிப்போட்டான். இவங்களுக்கு ஆப்படித்த பாகிஸ்தானுக்கு வாழ்த்துக்கள்.

sdc said...

அண்ணா ! ஸ்ரீலங்கா பைனல்ல தோற்று போயிட்டு இப்ப என்ன பதிவு
போட போறிங்க?

Karthik said...

இதையும் ஒருக்கா படியுங்க....

தோனியின் அணிக்கு என்ன ஆனது?

பூச்சரம் said...

பூச்சரம் வெள்ளி மலர்..
இருவாரங்களுக்கு ஒரு முறை பூச்சரம் தரும் தலைப்பின் கீழ் எழுதப்படும் சிறந்த பூச்சரம் அங்கத்தவர் பதிவுக்கு பூச்சரம் வெள்ளி மலர் அந்தஸ்த்து வழங்கப்படும். எதிர்வரும் வெளிக்கிழமை (26.06.2009) தலைப்பும் விபரங்களும் பூச்சரத்தில்..

அஜுவத் said...

அண்ணா விடியல்லயும் காணல்ல புதுப்பதிவையும் காணல்லயே

Anonymous said...

என்ன லோஷன் ரெண்டு நாளா விடியல்ல காண கிடைக்கல. கஞ்சிபாய் இண்ட பிரசார விஷயமா பிஸி ஆக இருகீங்களோ? இல்ல லீவ் போட்டுட்டு மேட்ச் பார்த்துக்கிட்டு இருக்கீங்களா? எது எப்படியோ சீக்கிரமா வாங்க விடியலுக்கு. நம்ம ஸ்ரீ லங்கா வேர்ல்ட் கப்பை தூக்குறப்ப நீங்க அதை அறிவிப்பு செய்யணும்

Good Comedy of the Year 2009

Anonymous said...

Which ever team you support will lose the matches. THats my curse. You came to singapore and didnt even bother to check if your sis is ok. Neeyellam annava.... cha...... Nenchu vedichidum pola irukku... he he

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner