May 27, 2009

வெள்ளிக்கிழமை விமானநிலையத்தில் நான் - ஒரு உண்மை சம்பவம்/அனுபவம்

சனிக்கிழமை பான் கி மூன் ஐயாவை வரவேற்ற பிறகு இன்று தான் மீண்டும் என் வலைத் தளத்துக்கு வரக்கூடிய வாய்ப்புக் கிடைத்துள்ளது..

அவரை வரவேற்ற ராசியோ என்னவோ வரவே முடியாத அளவு பிசி.

நண்பன் ஒருவனின் திருமணத்துக்காக கண்டி போயிருந்தேன்.. கண்டியில் கண்டவை பற்றி தனியாக ஒரு பதிவு போடலாம்.. அது பிறகு..

அதுக்கு முதல் இதை சொல்லாவிட்டால் மண்டை வெடித்துவிடும்.

சனிக்கிழமை இரவு என்னுடைய அப்பா அம்மா இருவரும் இந்தியாவிலிருந்து வந்ததனால் விமான நிலையம் சென்று அவர்களை அழைத்து வரவேண்டி இருந்தது.

நிகழ்ச்சியிலிருந்து பாதியில் எஸ்கேப் ஆகி, வீடு சென்று மனைவி,மகன்,தம்பியையும் கூட்டிக்கொண்டு விமான நிலையம் நோக்கி விரைந்தேன்.. இரவு நேரம் பெரிதாக போக்குவரத்து நெரிசல் இல்லையென்றால் என் வழமையான வேகத்தில் செல்வதற்கு 45 நிமிடங்கள் எடுக்கும்.

கிட்டத்தட்ட அதேயளவு நேரத்தில் விமான நிலையத்தின் நுழைவாயில் பாதுகாப்பு சோதனை சாவடியில் (முன்பெல்லாம் சோதனையிட்டே சாவடிக்கிற இடம் இது..) நுழைகிற நேரம் பார்த்தால் மிக நீண்ட வாகன வரிசைகள்..

நான்கைந்து வரிசைகள்.. நூற்றுக்கணக்கான வாகனங்கள்.. ஆமை வேகத்திலேயே ஒவ்வொன்றும் ஊர்கின்றன..

இதென்னடா இது.. இப்போ தானே யுத்தம் நிறைவடைந்தது என்று அறிவித்தார்கள்.. பிறகேன்? கேள்வியை அப்படியே சிங்கள மொழியில் என் வாகனத்தின் அருகே வந்த போலீஸார் ஒருவரிடம் கேட்டேன்..

அவர் மெலிதாக சிரித்துக் கொண்டே " இது ஒரு விசேட ஏற்பாடு.. பயம் கொள்ளத் தேவேயில்லை" என்று விட்டு விரைந்து போய் விட்டார்.

நாற்பது நிமிட மெதுவான ஊர்தலுக்குப் பிறகு பிரதான நுழைவாயில் அருகேயுள்ள சோதனை சாவடிக்கு போனோம்.

அங்கிருந்த காவலர் அடையாள அட்டை கேட்டார்..

எம்மைக் காக்கும் மிக முக்கிய ஆவணமான ஊடகவியலாளர் அடையாள அட்டையை (அரசினால் வழங்கப்படுவது) எடுத்து நீட்டினேன்.

பொதுவாக எந்தவொரு சோதனை சாவடியில் இதைக் காட்டியவுடன் வேறெந்தக் கேள்வியும் இல்லாமல் போக அனுமதிப்பது வழக்கம்.

ஆனால் அன்றோ கொஞ்சம் முகம் மாறிய அந்தக் காவலர் என்னுடைய வானொலி நிறுவனம் எது என்று கேட்டறிந்த பிறகு சொன்னார் "நீங்கள் உள்ளே செல்ல அனுமதியில்லை" என்று பணிவாக சிங்களத்தில் சொன்னார்.

ஏன் என்று கேட்டதற்கு, "ஊடகவியலாளர்களை இன்று உள்ளே அனுமதிக்க வேண்டாம் என்று உத்தரவு" என்று பதில் வந்தது.

சிரித்துக் கொண்டே "வழமையாக எம் போன்ற ஊடகவியலாளர்களைத் தானே இலகுவாக உள்ளே அனுமதிப்பீர்கள்.. இன்று என்ன" என்று கேட்டேன்.

எதுவும் பதில் சொல்லாத அவர் நான் உள்ளே செல்லும் காரணம் கேட்டார்.. என்னுடைய பெற்றோர் வரும் விஷயம் சொன்னேன். நான் ஒரு வாகன ஒட்ட்டியாகவேவந்திருக்கும் விஷயத்தை தெளிவாக சிங்களத்தில் புரியச் செய்த பிறகு,

"நீங்கள் வேறு அலுவலாக வரவில்லையே" என்று கேட்டார்..
"அப்படி வருவதாக இருந்தால் மனைவி,பிள்ளையுடன் வந்திருக்க மாட்டேனே.. அதுவும் கட்டைக் காற்சட்டையுடன் (jumpers) வந்திருப்பேனா?" என்று சிரித்துக் கொண்டே நான் கேட்க,

பலமாக சிரித்தபடி ஏன் தேசிய அடையாள அட்டை எண், வாகன இலக்கம் போன்றவற்றைக் குறித்த பின் செல்ல அனுமதித்தார்..

கொஞ்சம் யோசித்துப் பார்த்தபின் எனக்கு சனிக்கிழமை விமான நிலைய பாதுகாப்புக் கேடுபிடிக்கான காரணம் விளங்கியது..

நம்ம பான் கி மூன் ஐயா புறப்படும் விஷயம் தான் எனத் தெரிந்தாலும், இவ்வளவு கெடுபிடி குறிப்பாக ஊடகவியலாளர் மீது என்று சொல்லி அடுத்தடுத்த நாட்களில் தான் தெரிந்தது.

ஐநாவின் செயலாளர் நாயகத்தை சந்திப்பதற்கு பாதுகாப்பு அமைச்சு தடை – குற்றச்சாட்டு அவரைச் சந்திப்பதற்கான ஏற்பாடு தொடர்கிறது – சுரேஸ் பிறேமச்சந்திரன்
- இணையத்திலும், பத்திரிகையிலும் வந்த செய்தி


அப்போ இது தானா? வேறு பல விஷயங்கள் சொல்லாமலே தெரிந்திருக்கும் தானே..


13 comments:

ஆ.ஞானசேகரன் said...

//அப்போ இது தானா? வேறு பல விஷயங்கள் சொல்லாமலே தெரிந்திருக்கும் தானே.. //

தெரிந்தது, என்ன பன்னபோரோம்..

meena said...

அண்ணா,
நீங்கள் கட்டை காற்சட்டையுடன் தான் சென்றீர்களா.. ஊடகவியலாளர் அட்டை வைத்திருந்தும் சோதனை தானா...

யுத்தம் தான் முடிந்து போய் விட்டதே அப்புறம் என்ன

என்ன கொடும சார் said...

//மனைவி,மகன்,தம்பியையும் கூட்டிக்கொண்டு//
வீட்டில் யாரையும் மறந்து விட்டு விட்டு செல்லவில்லையே?


பொதுவாக ஒரு பயணியுடன் ஒருவர் மாத்திரம் செல்ல அனுமதிப்பார்கள்.. மற்றவர்கள் எல்லாம் அந்த மரத்தடியில் தான்..

Member of 5th Eelam War said...

There are several Tamils viewing Mr.Loshan's Website.
Therefore I want to pass an Important message (Some may say as an alert) to all Tamils over the world.
War is not yet finished. Each end will create a new start. This is the basic of the life. This is a start of a new era.
In this significant period we have to take forward the war against Srilanka in a systematic and united manner.
Our thirst for Tamil eelam not changed. Our aim s same as our beloved leader's aim.
Our flag s Tiger flag. All are same but our method of fighting will be different.
We have a great network all over da world,We all know that.
There are several tamil businessmen, proffesionals, billionaires all ove da world.
we shud get together. Israel has been created by its peoples' wealth and intelligence. Palestein has been recognised as a nation cos of its intellectuals as well as rebels. We proved the world that we had a superb rebels in the world. (Still they r there in Srilanka - Let them support our cause by attacking small scale operations and making an unrest in Srilanka- They will always get monetary supports from us)
Now its da time for us to show our power by money and intelligence.
We proffesionals have a group. we have a clever vision which is to create our own country Tamil eelam.
we will make change.
This time the tamils' war is different!! It is going to be determined by economic and financial facts. This will be a real strategic approach.
THIS IS THE 5TH EELAM WAR!!!
We have a detail plan to collapse Srilanka by the economic war.

Remember SL still begging for US 1.9BLN Loan from IMF. Soon TO BE CREATED Economic Crisis WILL TAKE REVENGE!! Believe we will make a new country call Tamil Eelam!!

For more details contact us on
karikaalank@yahoo.com

Pulikalin Thaaham Thamzheela Thaayaham

Member of 5th Eelam war

Anonymous said...

வலைத் தளத்துக்கு வரவே முடியாத அளவு பிசி. என்ன பிசி?

//LAST TIME I ASKED THE QUESTION THAT,"How to type the commends in Tamil"
but you didn't answer
do you know? or Don't know?//

Unknown said...

ஒரு மென்பொருள் உள்ளது பாரும் அழகி என்று..
அதை இறக்கம் செய்து உமது கணனியுடன் இணைக்கவும்..
இது தான் நீர் இனைப்பை பெறப்போகும் இடம்...
http://www.azhagi.com/sai/Azhagi-Setup.exe

சரி கதைக்கு வருவம்அந்த சந்திரனை சகல செளபாக்கியமுடன் வழியனுப்பியிருப்பார்கள் போல....
பிரகாசமாக ஒளி பரப்புது...

அண்ணை எனக்கு ஒரு சந்தேகம்... நாங்கள் இப்பொழுது ஓரிலங்கையின் கீழ் இருக்கிறோம்..
ஆனால் இன்னமும் சில இடங்களில், வடக்கு கிழக்கு மக்களிற்க்குத்தடைகள் விதிக்கப்படுகிறனவே.. உ+ம்.. டயலக்கில் ஐ வடக்கு மக்கள் பெறமுடியாதாம்.. ஏன் எண்டு எனக்கு விளக்கம் தாங்க இல்லாட்டில் தலையே வெடிச்சிறும்..

mano said...

Anonymous said...

//LAST TIME I ASKED THE QUESTION THAT,"How to type the commends in Tamil"

try this link

http://www.google.co.in/transliterate/indic/Tamil

hamshi said...

ann do u belive urJournalist identity card ?ok u r foolish.poijum poijum entha IC ja kaddenenga.over confident.VANTHANGA POJITTANGA.ATHUKKAPPURAM?EVALAVUM THANA?U.N SABAJILLA PESUVANGALAMA?OK WAIT & SEE.

கண்டும் காணான் said...

தற்போதுதான் திடீர் எனக் கண்டுபிடித்தது போல
சில ஜனநாயக இலக்கிய வாதிகளின் பேனா
ஈழப் போர்ராட்ட முறையே தவறு எனும்போதுதான்
புலிகளை இழந்தது , இதயத்தில் சுடுகின்றது

ARV Loshan said...

கருத்துக்கள் பகிர்ந்த அனைவருக்கும் நன்றிகள்..
ஆதங்கங்களையே அனைவரும் பகிர்ந்தமையால் தனித்தனியாக பதில் தரவில்லை..

ARV Loshan said...

Anonymous said...
வலைத் தளத்துக்கு வரவே முடியாத அளவு பிசி. என்ன பிசி?

//LAST TIME I ASKED THE QUESTION THAT,"How to type the commends in Tamil"
but you didn't answer
do you know? or Don't know?//



எவ்வளவோ பிசி சகோதரா.. காரணமெல்லாம் கட்டாயம் சொல்ல வேண்டுமோ?


நீங்கள் அனாநியாகக் கேட்டிருந்த அதே பதிவிலேயே நான் பதிலையும் தந்து உங்களுக்கான தமிழில் தட்டச்சும் சுட்டியையும் தந்திருந்தேனே..
பார்க்கவில்லையா?

Admin said...

என்ன செய்வது அண்ணா அதுதான் நம் நிலை....
சத்தம் போடாதே...
என்று சொல்லவேண்டிய காலம் இது சத்தம் போட்டால் .....
சொல்லத்தேவை இல்லை தெரயும்தானே அண்ணா.... காலம்தான் பதில் சொல்லும்.

Sinthu said...

நல்ல பதிவு தான்.. உங்க நிலைமை இப்படியா ஆக்கணும் அண்ணா...

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner