மு.கு (அதாங்க முற் குறிப்பு) - தயவு செய்து இது 'தல' அஜித் பற்றிய பதிவு என்று யாரும் வந்திருந்தா நான் பொறுப்பாளியல்ல..
ஒருசில நாட்களுக்கு முன்னர் வாசித்த கதை ஒன்று...

அசோகச் சக்கரவர்த்தி தனது பரிவாரம் சூழ வந்து கொண்டிருந்தார்.(கலிங்கத்து போரின் பின்,அசோகர் பௌத்தராக மாறிய பின்னர்.)
எதிரே ஒரு பௌத்த துறவி வந்து கொண்டிருந்தார்.அவரைக் கண்டதுமே உடனடியாக ஓடிச்சென்று பணிவுடன் பௌத்த துறவியின் காலில் விழுந்து வணங்கினர் அசோகர்.
இதனைப் பார்த்துக்கொண்டிருந்த அமைச்சருக்கு மனம் பொறுக்கவில்லை.ஒரு மாபெரும் சக்கரவர்த்தி ஒன்றுமில்லாத ஒரு துறவியின் பாதத்தில் விழுந்து வணங்குவதா என்று பொருமினார்.
அரண்மனை வந்தவுடன் மன்னருக்குத் தன் எண்ணத்தை வெளிப்படுத்தினார்."எத்தனை எத்தனை தேசம் வென்ற பெருமை மிகுந்த மணிமகுடம் தாங்கும் தங்கள் சிரம் யாரோ ஒரு பரதேசியின் காலில் படுவதா?" என்று வருத்தமும், அதிர்ப்தியும் கலந்த குரலில் சொன்னார் அமைச்சர்.
மன்னர் அசோகர் பதிலேதும் சொல்லாமல் அர்த்த புஷ்டியோடு சிரித்தார். ஒரு சில நாட்களின் பின்னர் மன்னர் அமைச்சரை அழைத்தார்.
"அமைச்சரே, எனக்கு உடனடியாக மூன்று தலைகள் வேண்டும்.
ஒரு ஆட்டின் தலை, ஒரு கரடித்தலை, ஒரு மனிதத் தலை உடனடியாக கொண்டு வாருங்கள்" உத்தரவிடுகின்றார் அசோகர்.
ஆடு பலியிடப்பட்டது - ஆட்டுத்தலை பெறப்பட்டது.
கரடி வேட்டையாடப்பட்டு - கரடித்தலையும் தயார்.
மரண தண்டனைக் கைதி ஒருவருக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டு மனிதத் தலையும் பெறப்பட்டது.
மன்னரிடம் அவர் கேட்டபடியே மூன்று தலைகளையும் கொண்டு போனார் அமைச்சர்.
அசோகச் சக்கரவர்த்தி "மிக நல்லது அமைச்சரே இப்போதே இந்த மூன்று தலைகளையும் கொண்டு சென்று சந்தையில் விற்று வாருங்கள்" என்று உத்தரவிடுகின்றார். (அப்போது மன்னர்களுக்கும் அமைச்சர்களுக்கும் வேற வேலையே இருந்திருக்காது போல)
அமைச்சர் சந்தைக்கு மூன்று தலைகளோடும் போனார்.
ஆட்டின் தலை முதலில் விலை போனது.
கரடியின் தலையும் பாடம் பண்ணி வீட்டில் வைக்க என்று யாரோ ஒரு பந்தாக்காரர் வாங்கிப் போனார்.
மனிதத் தலையை மட்டும் வாங்குவார் யாருமில்லை; மாறாகப் பார்ப்பவர் எல்லோரும் அருவருப்புடனும் அச்சத்துடனும் விளகிப்போயினர்.
மன்னரிடம் போய் விஷயத்தை சொன்னார் அமைச்சர்.
"சரி பரவாயில்லை மனிதத் தலையை மட்டும் இலவசமாகக் கொடுத்துப் பாருங்கள்" என்று சொன்னார் அசோகர்.
ம்ஹூம்...
யாரும் வாங்குவதாயில்லை.
மன்னர் இலவசமாகக் கொடுக்கச் சொன்னார் என்று சொல்லியும் கூட யாருமே வாங்குவதாயில்லை.
அரண்மனை திரும்பிய அமைச்சர் அசோகச் சக்கரவர்த்தியிடம் சொல்கின்றார்.
பௌத்த துறவியின் காலில் விழுந்து வணங்கிய சம்பவத்தை நினைவூட்டிய அசோகர், "பார்த்தீரா அமைச்சரே, உயிர் என்ற நிலை இருக்கும் வரைதான் தலைக்கு விலை உண்டு. அதனால் உயிருள்ளவரை பணிபவரை பணியவும், வணங்குபவரை வணங்கவும் இந்தத் தலை தாழ்வது தவறாகாது. நிலையறிந்து தலை தாழ்வது எம் நிலையை உயர்த்தும்" என்று விளங்கினாராம் அசோகர்.
தலை பற்றித் தெரிந்து கொண்ட அமைச்சர் தலைகுனிந்து, தலையாட்டினாராம்.
வாசித்த பின் கொஞ்சநேரம் யோசித்து பார்த்தேன்,
அசோகர் சொன்னது சரி.
எனினும் அசோகரின் மகன் கொண்டுவந்த அறம் ஆதிக்கம் செலுத்தும் எம் நாட்டில் அசோகர் போன்றவர்கள் ஆட்சியிலும் இல்லை !
நாம் தலைகுனிந்து வணங்கும் அளவுக்குத் தகுதியான அறமுணர்ந்த,அகிம்சை வழி நிற்கும் பௌத்த துறவிகளும் இல்லை!
17 comments:
அண்ணா என்ன சொல்லிறிங்க! நம்ம ஜனாதிபதி தொடக்கம், எல்லா அரசியல் தலைவர்களும் எவ்வலவு மரியாதையுடன் பெளத்த துரவிகளின் கால்களில் விழுந்து ஆசி பெறுகிறார்கள் அதோடு நம்ம கிரிக்கட் விளையாட்டு வீரர்களும் தான். இப்பதான் அசோக மன்னனை போய் நீங்க நினைவுப்படுத்தனுமா? (காவிவுடை அணிந்தவரேல்லாம் துரவியினு நினைச்சிட்டிங்களே? அப்படினு சஞ்சை பாய் ச்சீ.. வாஜ்பாய் ச்சி ச்சி.. கஞ்சி பாய் கேக்க சொன்னாரு!)
lol!!!!
அமைச்சருக்கு சொன்னா விளங்கும் தானே.. (அந்த காலத்துலயாவது விளங்க கூடிய அமைச்சர்கள் இருந்தார்கள் என்று நம்புகிறேன்) எதுக்கு தலை எல்லாம் எடுத்து சந்தைக்கு போய்... அதுவுமில்லாம ஒரு அமைச்சருக்கு விளங்க வைக்க 3 உயிர் காவு கொடுக்க பட்டிருக்கிறது.. இதுக்கு பதிலா அமைச்சரை சிரச்சேதம் செய்திருந்தால் ஒரு தலையுடன் case முடிஞ்சிருக்கும்..
இது எல்லாம் ஒரு நீதிக்கதயா.. கொடுமக்கத சார்..
///உயிர் என்ற நிலை இருக்கும் வரைதான் தலைக்கு விலை உண்டு. அதனால் உயிருள்ளவரை பணிபவரை பணியவும், வணங்குபவரை வணங்கவும் இந்தத் தலை தாழ்வது தவறாகாது. நிலையறிந்து தலை தாழ்வது எம் நிலையை உயர்த்தும்"////
:::::::::::::::::::::::::::
உயிர் என்ற நிலை இருக்கும் வரைதான் நாற்காலியில் (பாராளுமன்ற) விலை உண்டு. அதனால் தேர்தலில் வெல்லும் வரை பணிபவரை பணியவும், வணங்குபவரை வணங்கவும் இந்தத் தலை தாழ்வது தவறாகாது. நிலையறிந்து தலை தாழ்வது எம் நிலையை உயர்த்தும்"
ஹி ஹி ஹி.. சும்மா மாற்றிப்பார்தேன்! நல்லாய்ருக்கா!
ஆஹா ஹா நான் தான் 1st
//கலை - இராகலை said...
ஆஹா ஹா நான் தான் 1st//
ada chiiiii.... ithuku ellam kuda poottiya.. loshan inda pathivu pathikku mela "mokka".. athukku comment pooda poottiya.. enna kodumaida ithu...
(no offense loshan.. just kidding..)
லோஷன், கதை எழத வருமா?
அய்யோ!அய்யோ!!!!!!!!!!
நிறைய கதைகள் இருந்தால் கோடம்பாக்கத்து வரலாமே!!!!!!!! விஜய்க்கு கூட நல்ல கதை சொல்லாமே!!!!!!!!!!!
யாரு அண்ணா இந்த தலையை வரைந்தது ரொம்ப அடிபட்டு இருக்கு அதுதான் கோட்டேன்
நிரந்தரமில்லாத வாழ்க்கையில் நிரந்தரமாக வாழ வந்த தலைகளுக்கு......
(ரொம்ப சீரியஸா சொல்லிட்டோமோ)
நம்மில் தலை நிமிர்ந்து நடக்கும் பலரும் தலை - விலை - நிலை அறிந்தவர்களான்னு ராமசாமி அண்ணே கேட்டுச்சொல்லசொன்னாரு
கதைய விட படம் தான் சூப்பரா இருக்கு...என்ன விட நல்லா வரையுறீங்க அண்ணா..வாழ்த்துக்கள்..
கலை - இராகலை said...
அண்ணா என்ன சொல்லிறிங்க! நம்ம ஜனாதிபதி தொடக்கம், எல்லா அரசியல் தலைவர்களும் எவ்வலவு மரியாதையுடன் பெளத்த துரவிகளின் கால்களில் விழுந்து ஆசி பெறுகிறார்கள் அதோடு நம்ம கிரிக்கட் விளையாட்டு வீரர்களும் தான். //
ஆமாமா.. அவங்க எல்லாம் குனிஞ்சு குனிஞ்சு தான் இப்ப நாடே தங்கள் காலடியில் என்று எல்லாவற்றுக்கும் நூல் கட்டி ஆசீர்வாதம் பெற ஆலாய்ப் பறக்கிறார்கள்.. ;)
//இப்பதான் அசோக மன்னனை போய் நீங்க நினைவுப்படுத்தனுமா? (காவிவுடை அணிந்தவரேல்லாம் துரவியினு நினைச்சிட்டிங்களே? அப்படினு சஞ்சை பாய் ச்சீ.. வாஜ்பாய் ச்சி ச்சி.. கஞ்சி பாய் கேக்க சொன்னாரு!) //
பணிபவரை பணியவும், வணங்குபவரை வணங்கவும் இந்தத் தலை தாழ்வது தவறாகாது. நிலையறிந்து தலை தாழ்வது எம் நிலையை உயர்த்தும்"
தெளிவா சொல்லிட்டனே.. புரிஞ்சுதா?
அது சரி நீங்க எப்ப இருந்து கஞ்சிபாய் நண்பர் ஆனீங்க?
------
என்ன கொடும சார் said...
அமைச்சருக்கு சொன்னா விளங்கும் தானே.. (அந்த காலத்துலயாவது விளங்க கூடிய அமைச்சர்கள் இருந்தார்கள் என்று நம்புகிறேன்)//
இப்படியெல்லாம் குத்தல்,குதர்க்கமாய்ப் பேசினால் கலாநிதி.மேர்வின் சில்வாவிடம் போட்டு குடுப்பேன்..
//எதுக்கு தலை எல்லாம் எடுத்து சந்தைக்கு போய்... அதுவுமில்லாம ஒரு அமைச்சருக்கு விளங்க வைக்க 3 உயிர் காவு கொடுக்க பட்டிருக்கிறது.. இதுக்கு பதிலா அமைச்சரை சிரச்சேதம் செய்திருந்தால் ஒரு தலையுடன் case முடிஞ்சிருக்கும்.. //
என்ன செய்ய ராசா.. மன்னர் இடத்தில் நீங்க இல்லாமப் போயிட்டீங்களே..
//இது எல்லாம் ஒரு நீதிக்கதயா.. கொடுமக்கத சார்..//
எங்கேயாவது நீதிக் கதை என்று சொல்லி இருக்கிறேனா? சும்மா ஒரு கதை சொன்னா வாசிசிட்டுப் போவீங்களா? சும்மா நீதி,அநீதி என்று இலங்கைக்கு ஒவ்வாத வார்த்தை பேசிக் கொண்டு.. ;)
கலை - இராகலை said...
///உயிர் என்ற நிலை இருக்கும் வரைதான் தலைக்கு விலை உண்டு. அதனால் உயிருள்ளவரை பணிபவரை பணியவும், வணங்குபவரை வணங்கவும் இந்தத் தலை தாழ்வது தவறாகாது. நிலையறிந்து தலை தாழ்வது எம் நிலையை உயர்த்தும்"////
:::::::::::::::::::::::::::
உயிர் என்ற நிலை இருக்கும் வரைதான் நாற்காலியில் (பாராளுமன்ற) விலை உண்டு. அதனால் தேர்தலில் வெல்லும் வரை பணிபவரை பணியவும், வணங்குபவரை வணங்கவும் இந்தத் தலை தாழ்வது தவறாகாது. நிலையறிந்து தலை தாழ்வது எம் நிலையை உயர்த்தும்"
ஹி ஹி ஹி.. சும்மா மாற்றிப்பார்தேன்! நல்லாய்ருக்கா!//
ம்ம்ம் நினைச்சபடிஎல்லாம் மாற்றிப் பாருங்கோ.. நல்லாத் தானிருக்கு.. எந்த கட்சிக்கு போற ஐடியா?
====================
கலை - இராகலை said...
ஆஹா ஹா நான் தான் 1st//
:) நன்றி..
===================
Triumph said...
//கலை - இராகலை said...
ஆஹா ஹா நான் தான் 1st//
ada chiiiii.... ithuku ellam kuda poottiya.. loshan inda pathivu pathikku mela "mokka".. athukku comment pooda poottiya.. enna kodumaida ithu... //
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. (பல்லு நற நறக்கும் சத்தம்)..
தங்கச்சி.. எப்பவும் மொக்கைகளுக்கு தான் இப்படியான போட்டி இருக்கும்,., வேணும்னா பழம் தின்று கொட்டை போட்ட பழம் பெரும் பதிவர்களிட்ட கேட்டுப் பாருங்கோ..
(எனக்கு இப்படி வர்றதே ஆச்சரியம்.. அதுக்குள்ளே இவ வேற..)
(no offense loshan.. just kidding..)//
எல்லாம் சொல்லிட்டு இதையும் வேற சொல்லுங்க.. ;)
இதயம் said...
லோஷன், கதை எழத வருமா?
அய்யோ!அய்யோ!!!!!!!!!!//
வரும்.. ஆனா வராது.. (வாசிச்சவை வரும்.. ஒரிஜினலா வராது)
//நிறைய கதைகள் இருந்தால் கோடம்பாக்கத்து வரலாமே!!!!!!!! விஜய்க்கு கூட நல்ல கதை சொல்லாமே!!!!!!!!!!!//
சும்மா இருங்க இதயம்.. பேரரசு,தரணி,பிரபுதேவா இவங்கட பிழைப்பை கெடுக்க நான் தயாரில்ல.. (யப்பா டின் கட்ட முடியாதுடா சாமி..)
=====================
Thusha said...
யாரு அண்ணா இந்த தலையை வரைந்தது ரொம்ப அடிபட்டு இருக்கு அதுதான் கோட்டேன்//
யாரோ ஒரு அப்பாவி.. நல்ல காலம் யாருடிய தலைன்னு கேக்காம விட்டீங்களே.. ;)
==============
Hisham Mohamed - هشام said...
நிரந்தரமில்லாத வாழ்க்கையில் நிரந்தரமாக வாழ வந்த தலைகளுக்கு......
(ரொம்ப சீரியஸா சொல்லிட்டோமோ)//
நீங்க சீரியஸா வந்தா அங்கே ஏதோ ஒரு விஷயம் இருக்குமே? ;)
//நம்மில் தலை நிமிர்ந்து நடக்கும் பலரும் தலை - விலை - நிலை அறிந்தவர்களான்னு ராமசாமி அண்ணே கேட்டுச்சொல்லசொன்னாரு//
நல்ல கேள்வி (கில்லி விஜய் ஸ்டைல்).. பதில் எல்லாம் கேக்கப்படாது..
அனுபவிக்கனும்.. ஆராயவெல்லாம் படாது..
========================
தியாகி said...
கதைய விட படம் தான் சூப்பரா இருக்கு...என்ன விட நல்லா வரையுறீங்க//
ம்ம் சொல்லுவீங்கப்பா.. கஷ்டப்பட்டு கதை எழுதுறது (!) நான்.. யாரோ ஒருத்தன் வரைஞ்ச ஓவியத்துக்கு பாராட்டா? இது தான் உலகமடா சாமி..
Loshan Said:
//கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. (பல்லு நற நறக்கும் சத்தம்)..
தங்கச்சி.. எப்பவும் மொக்கைகளுக்கு தான் இப்படியான போட்டி இருக்கும்,., வேணும்னா பழம் தின்று கொட்டை போட்ட பழம் பெரும் பதிவர்களிட்ட கேட்டுப் பாருங்கோ..
(எனக்கு இப்படி வர்றதே ஆச்சரியம்.. அதுக்குள்ளே இவ வேற..)//
கடவுள் இந்த புளோக் ஆட்களைக் காப்பாத்துவாராக.... இது என்ன டெக்னிக்... நான் ஒரு பிடி பிடிப்பம் என்டு வெளிக்கிட எல்லாரும் தங்கச்சி தங்கச்சி என்டு கவுக்குறியள்... ச்ச..
//எல்லாம் சொல்லிட்டு இதையும் வேற சொல்லுங்க.. ;)//
I just getting exposed to the bloggers community... எல்லோரும் ஆரோக்கியமாக எடுப்பார்களோ என்ட ஒரு தயக்கம் தான்.. But i mean it :-)
//தியாகி said...
கதைய விட படம் தான் சூப்பரா இருக்கு...என்ன விட நல்லா வரையுறீங்க//
ம்ம் சொல்லுவீங்கப்பா.. கஷ்டப்பட்டு கதை எழுதுறது (!) நான்.. யாரோ ஒருத்தன் வரைஞ்ச ஓவியத்துக்கு பாராட்டா? இது தான் உலகமடா சாமி..//
தியாகி தம்பி எதிர் காலத்தில ஒரு புல்லட் பாண்டி ஆக நிரைய சான்ஸ் இருக்கு... நல்ல டைமிங் சென்ஸ் இருக்கு... சுத்த யாழ் மொழி நடையும் அவனிடம் இருக்கு... வாழ்த்துக்கள்..
எனக்கு என்னவோ... படம் வரைஞ்ச சீமானைப் பாக்க வேணும் போல இருக்கு..
Compliments எல்லாம் சரி ற்றையும்ப் அக்கா...Thank you!! அதென்ன அது, "எதிர் காலத்தில ஒரு புல்லட் பாண்டி ஆக நிரைய சான்ஸ்"?? ஐயோ...ஆள விடுங்க சாமி...அவர மாறி எல்லாருட்டையும் அடிவாங்க முடியாது நம்மால...
//ள விடுங்க சாமி...அவர மாறி எல்லாருட்டையும் அடிவாங்க முடியாது நம்மால...//
Dont worry.. akka naan irukka, ungalooda sandai piddikka.. yaarukku appan thairiyam varum cha cha.. vittuduvana.. no chance...
மறுக்கப்பட முடியாத உண்மை
//எனினும் அசோகரின் மகன் கொண்டுவந்த அறம் ஆதிக்கம் செலுத்தும் எம் நாட்டில் அசோகர் போன்றவர்கள் ஆட்சியிலும் இல்லை !
நாம் தலைகுனிந்து வணங்கும் அளவுக்குத் தகுதியான அறமுணர்ந்த,அகிம்சை வழி நிற்கும் பௌத்த துறவிகளும் இல்லை//
நியாயமான கருத்து.
மத குருக்கள்(சிறுபான்மையினரின் உரிமைக்கு எதிராய்) கட்சி நடத்தும் நாடல்லவோ????
Post a Comment