March 27, 2009

1977 – அய்யோ அம்மா

Loshan
வழமையாக விமர்சனங்கள் வாசிக்காமல் படம் பார்க்கப் போகும் என்னையே நம்ம நண்பர் வந்தியத்தேவனின் எச்சரிக்கைப் பின்னூட்டம் தந்து போகாதே என்று கெஞ்சியும்,லக்கியாரின் விமர்சனம் படித்துக் கூட 1977 பார்க்கப் போனேனே என்னை நண்பர் காலாண்டியின் பாழாய்ப்போன பழஞ்செருப்பால் தான் விளாசவேணும்.

சரத்குமாரின் திரைப்படங்கள் பற்றி ஏற்கெனவே எனக்கு ஒரு மதிப்பீடு(?) இருக்கும் நிலையிலும் இந்தப்படம் பார்க்கவே வேண்டும் என்று விடாப்பிடியாக நான் பார்க்கப்போக ஒரு காரணம் இருக்கு! (உடனே நமீதா தான் காரணம் என்று யாரும் விஷமமாக என்ன வேண்டாம்)

அப்பா மகனின் பழிதுடைக்கும் கதை மற்றொரு தமிழ் ஜேம்ஸ்பொன்ட் கதை என்றவுடன் வில்லுவின் இன்னொரு versionஆ எது பெட்டர் என்று ஒப்பிடும் ஆர்வமே அது! (தேவையா?) உண்மையில் ஒன்று கோடம்பக்கத்தினரே இனி யாரும் ஜேம்ஸ் பொன்டைக் கூப்பிடாதீர்கள்.பாவம் அந்த பரிதாப உளவாளி!

எழுத்தோட்டம் முகிலினூடாக செல்லும்போது James Bond படங்களை நினைவுபடுத்தினாலும் பின்னர் தான் புரிந்தது. அது symbolicஆகச் சொன்னது எங்கள் காதுகளில் வரப்போகும் புகையை!

எம்.ஜி.ஆர்,கறுப்பு எம்.ஜி.ஆர்,இளைய குட்டி எம்.ஜி.ஆர் (அதாங்க 'சைலன்ஸ்' புகழ் இளையதளபதி) வரிசையில் 'நம்ம சுப்ரீம் ஸ்டாரும்' கட்சிக்கொடிக் கலர்கள் காட்டி கடற்கரையில் ஆடிப்பாடும் 'வங்கக் கடல்' பாடலின் தொடர்ச்சியாக படத்தின் மேலும் இரு பாடல்களைக் கடற்கரையிலேயே போட்டு நனைத்து எடுக்கிறார் புதுமுக MBA இயக்குனர்.

ஆனால் பர்சானா (புதிய கவர்ச்சிகுண்டு)வும் நமீதாவும் சரத்குமாரோடு கடற்கரையில் நனைந்து ஆடும்போது எங்களுக்கு குளிரடிக்கிறது. போதாக்குறைக்கு சீன மலாய் பெண்கள் வேறு துண்டு துக்கடா உடையோடு உடல் குலுக்கி கிளுகிளுப்பாக்குகிறார்கள்.

இதையெல்லாம் விடப் பெரிய பயமுறுத்துகிற விஷயம் நமீதா பர்சானாவுக்கு போட்டியாக நம்ம 'சமத்துவ' சரத்குமாரும் மேற்சட்டை கழற்றித் தன் பிரமாண்ட உடம்பு காட்டி அசத்துகிறார். (அதில வேறு ஒரு பாட்டுல சரத்தின் உடல் முழுக்க tattoo ! ஏன்யா இப்படி எல்லாம் கிலி பிடிக்க வைக்கிறீங்க?)

பர்சானா பார்க்கும் போது கொஞ்சம் வசுந்தரா தாஸ்(பாடகி & சிட்டிசன் நாயகி) + கொஞ்சம் ஜெனீலியா + கொஞ்சம் கிரண் (மாமி) கலந்த ஒரு கவர்ச்சிக் கலவை..

(ஒரு ரவுண்டு வருவார் போல..)  


மலேசியா செல்லும் சரத்தை எங்கே கண்டாலும் கட்டிப் பிடித்து உருள்வதும்,இடை தெரிய ஆடை அணிந்து செய்தி சேகரிக்க செல்வதுமே இவர் பணி..(இப்படிப்பட்ட ஒரு செய்தியாளர் எங்களுடன் இல்லையே என்று பொறாமை தான் வருகிறது.. ம்ம்ம் எல்லாம் ஒரு ராசி.)

படத்தின் ஆரம்பத்திலேயே 'பத்மஸ்ரீ' விவேக் என்று பெயர் வரும்போது சத்தியமாக சிரிப்பு தான் வந்தது!

ஆனால் படம் போகப் போக விவேக்கை விட ஏராளமான நகைச்சுவை விஷயங்களைக் காட்டுகிறது.. குறிப்பாக வில்லன்..

யார்ரா இது என்று கேட்கவைக்கும் ஒரு வில்லன்.. பயங்கரமாக சிரிக்கிறார்.. செயற்கையாக நடிக்கிறார்.. காது கிழிய (எங்களதும்,அவரதும்) கத்துகிறார்..மொத்தத்தில் 70களில் வந்திருக்கவேண்டிய படத்தில் 80களில் நடித்திருக்க வேண்டிய ஒரு வில்லன்.. 

இதில வேற சரத் இந்தியாவின் தலை சிறந்த விஞ்ஞாநியாம்.. விஞ்ஞானத்தைத் தவிர வேறு எல்லாம் செய்கிறார்.. 

நமீதா வழக்கறிஞர்..ரொம்ப பெரிய கேஸ் மட்டும் தான் கையாளுவாங்க போல.. கனவுக்காட்சிகளிலும்,சரத்துடன் திரியும் போதும் மட்டும் கட்டையாக,இறுக்கமாக ஆடை அணிந்து மிரட்டுகிறார்..

இயக்குனர் தினேஷ்குமார் இந்த விஷயங்களில் மட்டுமல்லாமல்,மலேசிய action காட்சிகளிலும் பாடல் காட்சிகளிலும் கூட பிரம்மாண்டம் காட்டி இருக்கிறார். ஒளிப்பதிவாளர் பூபதிக்கும் பாராட்டுக்கள் போக வேண்டும்.. விரிவுக்கும் விரிவுக்கும் அவரே காரணம்..


அதிலும் ஒரு பாடல் காட்சியில் கமெராவைப் போட்டு குலுக்கி எடுக்கிறார் பாருங்கள்.. அப்படி ஒரு கிளு கிளுப்பு..

உலகம் சுற்றும் வாலிபன் படம் புதிய ஆக வந்தால் இப்படித் தானிருக்கும் என்று இயக்குனர் சொன்னாராம். பல காட்சிகளில் தும்மல் வருகிறது.. ரொம்பப் பழசாய் போய் தூசி தட்டியதாலோ? சரத் குமார் என்ன நம்பிக்கையில் இப்படி ஒரு படத்தை சொந்தமாகத் தயாரித்தார் என்று தெரியவில்லை..

உண்மையில் இடைவேளை வரை கொஞ்சம் பரவாயில்லை.. விவேக்கும் ஓரளவு சிரிக்கவைக்கும் இடங்களைத் தருவதால்.. குறிப்பாக சீன அழகியுடன் ஆவாஸ் அன்ஜிங் காட்சிகள்.. (வேற ஒன்னும் தப்பா யோசிக்காதேங்கோ.. நாய் ஜாக்கிரதை தான்) எனினும் கதை இலகுவாக ஊகிக்கக் கூடியதாக இருப்பதால் இடைவேளையின் பின் கொட்டாவி தான் வருகிறது..

பேசாமல் என்பதற்கு பதிலாக ஆவாஸ் 1977 என்று படம் பார்க்க வரும் எங்களுக்கு எச்சரிக்கை கொடுத்திருக்கலாம்..

முப்பது ஆண்டுகளுக்கு முந்திய காட்சிகளில் பெரிதாக மாற்றங்கள் காணோம்..
ஆனால் தந்தை சரத்தின் கம்பீரமும்,தாயாக வரும் ஜெயசுதாவின் மாறாத இளமையும் அழகு..

எனினும் பழைய சிவாஜி காலத்து போலீஸ் படங்கள் பார்த்த நினைவு வந்து தொலைக்கிறது.. நம்ம மொக்கைப் பதிவுகள் கூட பரவாயில்லை போல.. 

நல்ல ஒரு தொழிநுட்ப ரீதியான சில விஷயங்களையும் மொக்கையாக மோசமாகக் கையாண்டு சொதக்ப்பியுல்லார்கள்..

மைத்துனர் என்ற தோஷத்துக்காக ராதாரவியும் பலிக்கடா ஆகியுள்ளார்.. பாவம்.
விஜயகுமாரோ பரிதாபம்.. (நாட்டாமை திரைக்கதையை மாத்து என்று யாரோ தியேட்டரில் கத்திக் கேட்டது)

இதை விடக் கொடுமை கிளைமாக்ஸ் காட்சி.

துப்பாக்கி சூடு மும்முரமாகும் வேளையில் நானும்,என்னுடன் வந்த நண்பர்களும் சீட்டுக்குக் கீழே பயத்தில் குனிந்து படுத்துக் கொண்டோம்.. கண்ணை மூடிக்கொண்டு மலேசிய போலீசும்,வில்லனும் சரத்தும் மாறி மாறி சுடுவது திரையைக் கிழித்துக் கொண்டு எம்மீது பட்டு விடும் என்ற பயம் தான்..

மகெல பாகிஸ்தானில் வைத்து சொன்னது போல,இலங்கையில் வாழ்வது இயற்கையாகவே கற்றுத் தந்த பாதுகாப்பு உள்ளுணர்வு தான் எங்களைக் காப்பாற்றியிருக்கு.. படம் முடிஞ்சு பார்த்தால் தியேட்டர் சுவர்,சீட்டெல்லாம் குண்டு பாய்ந்து சேதம்..   

மவனே, இனி மேலும் யாராவது உலகம் சுற்றும் வாலிபன், ஹாலிவுட் தர action,அது இதுன்னு சொல்லி எங்களுக்கு படம் காட்டினீங்க ........................................................................................................................................

என்னால ஒன்னும் செய்ய முடியாது.. கேப்டன் விஜயகாந்துகிட்டே சொல்லி காலை சுவர்ல எத்தி கண்டபடி உதைக்க சொல்லுவேன்..

டிஸ்கி- இந்தப்படத்துக்கு பிறகு முடிவெடுத்திட்டேன். இனி சரத்குமாரின் எந்தப்படத்தையும் தியேட்டர் சென்று பணம் செலுத்திப் பார்ப்பதில்லை..    
 

22 comments:

Anonymous said...

நானும் 1977 இல் நொந்தவன் தான்... ஆனால் நான் சென்றது சரத்குமார் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் எண்டு கேள்விப்பட்டதால் தான்... இரட்டை வேடம் என்றதும் நட்புக்காக, நாட்டாமை தான் நினைவுக்கு வந்து அந்த மாரி அருமையா தான் இருக்கும் எண்டுடு போனது...
ஆனால் இந்திய தணிக்கை குழுவும் என்னை உசுப்பேத்தி விட்டது... ஏதோ இது பயங்கர நல்ல படம்.. இலவசமாக மலேசியா சுற்றி பார்பது போல் இருக்கும்..
stylish படம் எடுக்கிறண்டால் நம்ம விஸ்னு வர்த்தனோட விட்டிடனும்... அல்லது கமரா நிரவ் ஸா இட்ட குடுக்கனும்...
பயபுள்ளயல் அருமந்த காசுகள வீண்டிக்குதுகள்

Anonymous said...

//இப்படிப்பட்ட ஒரு செய்தியாளர் எங்களுடன் இல்லையே என்று பொறாமை தான் வருகிறது..//

இந்த மனுஷன் கூட வேலை செய்கிற பொண்ணுங்க என்ன பாடு படுதோ? (இல்லாட்டி இப்படி இருங்க என்று நாசூக்காக சொல்றீங்களோ? யாராவது கிட்ட போட்டு கொடுங்கப்பா)

//பத்மஸ்ரீ' விவேக் என்று பெயர் வரும்போது சத்தியமாக சிரிப்பு தான் வந்தது!//

இதை வன்மையாக எதிர்க்கிறேன்

//துப்பாக்கி சூடு மும்முரமாகும் வேளையில் நானும்,என்னுடன் வந்த நண்பர்களும் சீட்டுக்குக் கீழே பயத்தில் குனிந்து படுத்துக் கொண்டோம்.. //

இப்ப தெரியுது யாரு காஞ்சி பாய் என்று..

//இனி சரத்குமாரின் எந்தப்படத்தையும் தியேட்டர் சென்று பணம் செலுத்திப் பார்ப்பதில்லை..//

எதோ இந்த படத்துக்கு காசு கொடுத்து ticket எடுத்த மாதிரி.. பெரிய feeling காட்டுறார்..

உங்க காத்திருங்க fm இல் இப்படி படத்துக்கு தானே ticket கொடுக்கிறீங்க.. (அதுதான் நான் கலந்துக்கற இல்ல)

இன்று முதல் நான் சினிமாலை கேட்பதில்லை என்று முடிவு.. உங்களுக்கே தெரியல எத பாக்கணும் என்று.. இதுக்குள்ள மத்தவங்களுக்கு அட்வைஸ் வேற... என்ன கொடும சார் :)

என்ன மாதிரி selective ஆக படம் பார்க்கணும். மத்ததுங்களுக்கு தானே 3 in 1 DVD இருக்கு

திருட்டு vcd இன் நன்மை :)

வேத்தியன் said...

ஆஹா பின்னி பெடலெடுத்திருக்கிறீங்க தல..
என்னா வில்லத்தனம்???
:-)
அது சரி, அந்த புள்ள ஃபர்சானா நல்லா இருக்காங்களோ???
:-)
எப்பிடின்னு எனக்கு மட்டும் ஒரு மெயில் அனுப்புங்க..
என்ன டீல் ஓகேவா???
:-)))

shabi said...

இயக்குனர் புதுமுகம் இல்லை

Anonymous said...

பதிவு படித்த எங்களுக்கே காதில புகை வருது (நான் படத்தை சொன்னான் நீங்க என்ன நினைச்சிங்க)அப்படினா? உங்க நிலைமை புரியுது.நல்ல வேளை நான்பிழைத்துகொண்டேன்.

சக்(ங்)கடத்தார் said...

ஐயோ மோனை?? இந்தக் காலப் படம் காட்டுற பொட்டையள் தூக்கிக் காட்டுறதிலை மட்டும் குறைச்சல் இல்லை? படம் நல்லதோ இல்லையோ பாட்டுக் கவிழ்ச்சிக்காகவே படம் பிச்சுக் கொண்டு ஓடுமாம்??

என்னதான் இருந்தாலும் அந்தக் காலம் மாதிரி வருமே? எப்ப திரை விலகும் என்று ஏங்கிற மாதிரியான படங்கள் ராசாவை?? அப்பத்தையப் படங்கள் எந்தளவு நல்லவை??


இப்ப எல்லாம் நாறிப் போட்டுது ராசாக்கள்???

சி தயாளன் said...

ஏனப்பா இந்த தேவையில்லாத வேலை எல்லாம்...?

உதெல்லாம் படம் என்று பார்க்கப் போனனியளே...

நான் உத எல்லாம் பார்க்கிற எண்ணத்தில் இல்லை..

Sinthu said...

ஏன் அண்ணா இப்படி?
உங்களுக்கு இப்படி எல்லாம் வர்ணிக்கத் தெரியும் என்று தெர்யாமல் போச்சே?

கணினி தேசம் said...

//1977 பார்க்கப் போனேனே என்னை நண்பர் காலாண்டியின் பாழாய்ப்போன பழஞ்செருப்பால் தான் விளாசவேணும்.//

எதாவது உதவி தேவையா? கி.கி.கி!!



ஆனாலும், உங்களுக்கு ரொம்பத்தான் தைரியம் போங்க.!!

கணினி தேசம் said...

//டிஸ்கி- இந்தப்படத்துக்கு பிறகு முடிவெடுத்திட்டேன். இனி சரத்குமாரின் எந்தப்படத்தையும் தியேட்டர் சென்று பணம் செலுத்திப் பார்ப்பதில்லை.. //

நாங்க இந்த முடிவு எடுத்து பல வருஷமாச்சு.

தாமதமா எடுத்தாலும், நல்ல முடிவுதான்.

நன்றி.

சின்னப் பையன் said...

ஹாஹா... நாட்டாமை சரியான கொலவெறிய ஏத்தி விட்டுட்டாரு போல...

:-))))))

Anonymous said...

லோஷன்... உங்க blog உம் வரவர வில்லு நாயகன்ட படம் மாதிரித் தான் இருக்கு...

அரைச்ச மசாலா...............

Anonymous said...

//நமீதா தான் காரணம் என்று யாரும் விஷமமாக என்ன வேண்டாம்//
Ahaa... The above statement proved that you have gone to that movie only for her... hak hak,,

//இந்தப்படத்துக்கு பிறகு முடிவெடுத்திட்டேன். இனி சரத்குமாரின் எந்தப்படத்தையும் தியேட்டர் சென்று பணம் செலுத்திப் பார்ப்பதில்லை.. //

Me, a little gal has decided it 5 -6 yrs ago...Not only sarathkumars movies.. For any movies...

Twice went to Mozhi & Azhagiya Theeye as they deserve it...

//இப்படிப்பட்ட ஒரு செய்தியாளர் எங்களுடன் இல்லையே என்று பொறாமை தான் வருகிறது..//
Wife ilam sonnal pinja seruppillai, puthu seruppalaye saathuva..
Bullet anna, pls print this article and pass it to Loshans wife.. Pasamalar sonna seiyathaana venum...:P:P:P


//எதோ இந்த படத்துக்கு காசு கொடுத்து ticket எடுத்த மாதிரி.. பெரிய feeling காட்டுறார்.. //
hahaha...

//எனினும் பழைய சிவாஜி காலத்து போலீஸ் படங்கள் பார்த்த நினைவு வந்து தொலைக்கிறது.. நம்ம மொக்கைப் பதிவுகள் கூட பரவாயில்லை போல..//

Pls send this article to the Venapoona MBA karan... He would not dare to direct another movie..

Nimalesh said...

nanaum parthu nonthavan anna

ARV Loshan said...

Anonymous said...
நானும் 1977 இல் நொந்தவன் தான்... ஆனால் நான் சென்றது சரத்குமார் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் எண்டு கேள்விப்பட்டதால் தான்... இரட்டை வேடம் என்றதும் நட்புக்காக, நாட்டாமை தான் நினைவுக்கு வந்து அந்த மாரி அருமையா தான் இருக்கும் எண்டுடு போனது...//
அந்த நம்பிக்கை தானே ஐயா என்னையும் மோசம் போக வச்சுது.. அதுல எல்லாம் ரவிக்குமாரும் இருந்தார் என்றது மறந்து போச்சே..


//ஆனால் இந்திய தணிக்கை குழுவும் என்னை உசுப்பேத்தி விட்டது... ஏதோ இது பயங்கர நல்ல படம்.. இலவசமாக மலேசியா சுற்றி பார்பது போல் இருக்கும்..//
நல்லா சொல்ராங்கையா.. மலேசியா சுத்திப்பார்க்கல.. சரத்தும் நமீதாவும் ஓட நாங்களும் பின்னால ஓட வேண்டி இருக்கே.. அதை தான் சொன்னாங்களோ?


//stylish படம் எடுக்கிறண்டால் நம்ம விஸ்னு வர்த்தனோட விட்டிடனும்... அல்லது கமரா நிரவ் ஸா இட்ட குடுக்கனும்...
பயபுள்ளயல் அருமந்த காசுகள வீண்டிக்குதுகள்//
ம்ம்ம்ம் இந்த பில்லா தான் நிறையப் பேரை பாதிச்சு எல்லோரும் எங்களை பேயடிக்கிராங்கள்.. ;)



என்ன கொடும சார் said...
//இப்படிப்பட்ட ஒரு செய்தியாளர் எங்களுடன் இல்லையே என்று பொறாமை தான் வருகிறது..//
இந்த மனுஷன் கூட வேலை செய்கிற பொண்ணுங்க என்ன பாடு படுதோ? (இல்லாட்டி இப்படி இருங்க என்று நாசூக்காக சொல்றீங்களோ? யாராவது கிட்ட போட்டு கொடுங்கப்பா)//
ஒரு மனுஷனை கொஞ்சமாவது நிம்மதியா இருக்க விடுற எண்ணம் இருக்க உங்களுக்கு.. ஏன்யா நீங்க இப்படி.. பேசாம ஆவியை ப்ளோக்ல இருந்து விரட்டிநோமா இல்லையா என்று இருக்காம போட்டுக் குடுக்க போறாராம்..


//பத்மஸ்ரீ' விவேக் என்று பெயர் வரும்போது சத்தியமாக சிரிப்பு தான் வந்தது!//
இதை வன்மையாக எதிர்க்கிறேன் //
ஏன் ஏன் ஏன்.. நீங்களும் அவங்களோ?


//துப்பாக்கி சூடு மும்முரமாகும் வேளையில் நானும்,என்னுடன் வந்த நண்பர்களும் சீட்டுக்குக் கீழே பயத்தில் குனிந்து படுத்துக் கொண்டோம்.. //
இப்ப தெரியுது யாரு காஞ்சி பாய் என்று.. //
அவரோட தான் படம் பார்க்கப் போனேன் எண்டு உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா?

//இனி சரத்குமாரின் எந்தப்படத்தையும் தியேட்டர் சென்று பணம் செலுத்திப் பார்ப்பதில்லை..//
எதோ இந்த படத்துக்கு காசு கொடுத்து ticket எடுத்த மாதிரி.. பெரிய feeling காட்டுறார்.. //
உண்மையாவே போயும் போயும் இந்தப் படத்துக்கு காசு குடுத்து நானே டிக்கெட் எடுத்தேன். அந்த வைத்தெரிச்சலை தான் கொட்டி இருக்கிறேன்.. நம்புங்கப்பா..

//உங்க காத்திருங்க fm இல் இப்படி படத்துக்கு தானே ticket கொடுக்கிறீங்க.. (அதுதான் நான் கலந்துக்கற இல்ல) //
"காத்திருங்க fm " ??? கடுமையா கண்டிக்கிறேன்.. இதை வானொலிக்கு எஸ் எம் எஸ் அனுப்பி வதை செய்ய மட்டுமே பயன் படுத்தலாம்.. அதுவும் விடியலுக்கு மட்டும்...
இல்லையே நாங்க இதுக்கு(1977) டிக்கெட் குடுக்கலியே.. ஹேஎ ஹீ..

//இன்று முதல் நான் சினிமாலை கேட்பதில்லை என்று முடிவு.. உங்களுக்கே தெரியல எத பாக்கணும் என்று.. இதுக்குள்ள மத்தவங்களுக்கு அட்வைஸ் வேற... என்ன கொடும சார் :)//
தம்பி ராசா கொஞ்ச நாளா நான் ஞாயிறு லீவு.. தெரியாதா? so நீங்க எப்பவுமே கேட்டதில்லை அப்படித் தானே.. ;)
திரை விமர்சகன் என்றால் எல்லாவற்றையும் பார்த்து நல்லதை மக்களுக்கு சொல்லவேணும்.. அப்படித் தான் நான்.. இதுவும் பார்த்தேன்.. நல்ல படங்களும்(உதாரணம் எதுவும் உடனே வருதில்லப்பா) பார்ப்பேன்..

//என்ன மாதிரி selective ஆக படம் பார்க்கணும். மத்ததுங்களுக்கு தானே 3 in 1 DVD இருக்கு
திருட்டு vcd இன் நன்மை :)//
திருட்டு வீசீடியா? அடப்பாவி.. நானெல்லாம் ரொம்பவே நல்லவேன்..திருட்டு வீசீடி ஒழிக.. இருங்க இருங்க கேப்டன் கிட்டயும் சரத் கிட்டயும் போட்டு குடுக்கிறேன். (now my turn .. how is it??)

ARV Loshan said...

வேத்தியன் said...
ஆஹா பின்னி பெடலெடுத்திருக்கிறீங்க தல..//
நன்றிங்க்னா.

//என்னா வில்லத்தனம்???
:-)//
படத்துல வர்ற வில்லனை விடப் பரவாயில்லைத் தானே? ;)

//அது சரி, அந்த புள்ள ஃபர்சானா நல்லா இருக்காங்களோ???
எப்பிடின்னு எனக்கு மட்டும் ஒரு மெயில் அனுப்புங்க..
என்ன டீல் ஓகேவா???//
என்னாது? ஏதோ நானே அவவை வச்சு மெயிண்டயின் பண்ற மாதிரில்ல கேக்கிறீங்க.. கொஞ்சம் சரத் கிட்ட call பண்ணி கேக்கிறது..
என்னது? டீலா? சாமி வேணாம் சாமி.. குடும்பஸ்தன்.. அப்புறம் டங்கு டனாலாயிடும்..




shabi said...
இயக்குனர் புதுமுகம் இல்லை//
அப்பிடீங்களா? வேற என்ன படம் இயக்கிக் கிழிச்சாரு? உண்மையாக இருந்தால் அவர் முன்பு இயக்கிய படத்தை கொஞ்சம் சொன்னீங்கன்னா திருத்திறேன்..



Ithayam said...
பதிவு படித்த எங்களுக்கே காதில புகை வருது (நான் படத்தை சொன்னான் நீங்க என்ன நினைச்சிங்க)அப்படினா? உங்க நிலைமை புரியுது.நல்ல வேளை நான்பிழைத்துகொண்டேன்.//
ம்ம்ம்ம் புரிஞ்சுதா? எங்களுக்கு புகை,சாம்பல் எல்லாம் சேர்ந்து வந்துது.. கடைசியில் கண்ணீர் வந்துட்டு.. எப்படித் தானே எங்களாலேயே முடிஞ்சுது இதையெல்லாம் தாங்க என்று.. ;)

ARV Loshan said...

சக்(ங்)கடத்தார் said...
ஐயோ மோனை?? இந்தக் காலப் படம் காட்டுற பொட்டையள் தூக்கிக் காட்டுறதிலை மட்டும் குறைச்சல் இல்லை? படம் நல்லதோ இல்லையோ பாட்டுக் கவிழ்ச்சிக்காகவே படம் பிச்சுக் கொண்டு ஓடுமாம்??//
அப்பிடி சொல்லாதேங்கோ அண்ணை.. எவ்வளவு தான் காட்டினாலும் இப்ப ஓடுதில்லை.. நிறைய உதாரணம் இருக்கு. நம்மவங்கள் திருந்திட்டாங்களோ தெரியல்லை..

//என்னதான் இருந்தாலும் அந்தக் காலம் மாதிரி வருமே? எப்ப திரை விலகும் என்று ஏங்கிற மாதிரியான படங்கள் ராசாவை?? அப்பத்தையப் படங்கள் எந்தளவு நல்லவை??//
அது சரி.. நீங்கள் எல்லாம் சிலுக்கு,டிஸ்கோ சாந்தி காலத்து ஆக்கலெல்லே..(இல்லாட்டி ஜோதிலட்சுமி காலமோ???)
ஆனால் அப்பவும் சிவாஜி கூட இப்பிடி படங்களில நடிச்சிருக்கிறார்.. படத்திலயும் கவர்ச்சி நடனங்கள் இருந்திருக்கு தானே அண்ணை..


’டொன்’ லீ said...
ஏனப்பா இந்த தேவையில்லாத வேலை எல்லாம்...?
உதெல்லாம் படம் என்று பார்க்கப் போனனியளே...
நான் உத எல்லாம் பார்க்கிற எண்ணத்தில் இல்லை..//
என்ன செய்ய .. தலை விதி.. சரத்தின் டபிள் அக்டிங் செண்டிமென்டை நம்பி ஏமாந்தேன்..


Sinthu said...
ஏன் அண்ணா இப்படி?//
எப்படி தங்கச்சி?

//உங்களுக்கு இப்படி எல்லாம் வர்ணிக்கத் தெரியும் என்று தெர்யாமல் போச்சே?//
ஏன் முன்னமே தெரிஞ்சு என்ன செய்திருப்பீங்க?


கணினி தேசம் said...
//1977 பார்க்கப் போனேனே என்னை நண்பர் காலாண்டியின் பாழாய்ப்போன பழஞ்செருப்பால் தான் விளாசவேணும்.//
எதாவது உதவி தேவையா? கி.கி.கி!!//
இதுக்கெல்லாம் உதவின்னா கேக்காமலே வந்திருவீங்களே .. ;)


//ஆனாலும், உங்களுக்கு ரொம்பத்தான் தைரியம் போங்க.!!//
எதுக்குப்பா? எப்பவும் நாங்க ரொம்பவே தைரியமானவங்க..



கணினி தேசம் said...
//டிஸ்கி- இந்தப்படத்துக்கு பிறகு முடிவெடுத்திட்டேன். இனி சரத்குமாரின் எந்தப்படத்தையும் தியேட்டர் சென்று பணம் செலுத்திப் பார்ப்பதில்லை.. //
நாங்க இந்த முடிவு எடுத்து பல வருஷமாச்சு.
தாமதமா எடுத்தாலும், நல்ல முடிவுதான்.//

முந்தீட்டிங்க.. வாழ்க.. பாவம் உங்க நண்பர்கள்.. ;)

ARV Loshan said...

ச்சின்னப் பையன் said...
ஹாஹா... நாட்டாமை சரியான கொலவெறிய ஏத்தி விட்டுட்டாரு போல...//
கொஞ்ச நஞ்சக் கொலை வெறி இல்லை.. அந்தப் படத்தின் வில்லன் தேவாலயத்தில் நடத்திய கொலை வெறியை விடக் கூட.. ;)


Subi said...
லோஷன்... உங்க blog உம் வரவர வில்லு நாயகன்ட படம் மாதிரித் தான் இருக்கு...
அரைச்ச மசாலா...............//

என்ன செய்ய சுபி.. எனக்குப் பார்க்கக் கிடைக்கிற படங்கள் எல்லாம் ஒரே மாதிரி மசாலாக்கள் தானே.. ஆனா நான் கடவுளுக்குப் பிறகு இப்ப தானே பட விமர்சனம் எழுதியுள்ளேன்..


Triumph said...
//நமீதா தான் காரணம் என்று யாரும் விஷமமாக என்ன வேண்டாம்//
Ahaa... The above statement proved that you have gone to that movie only for her... hak hak,, //
அடப்பாவி.. அதுக்காகத் தானே அப்பிடி எண்ணா தீங்கன்னு தெளிவா சொன்னேன்.. நம்புங்கப்பா..

//இந்தப்படத்துக்கு பிறகு முடிவெடுத்திட்டேன். இனி சரத்குமாரின் எந்தப்படத்தையும் தியேட்டர் சென்று பணம் செலுத்திப் பார்ப்பதில்லை.. //
Me, a little gal has decided it 5 -6 yrs ago...Not only sarathkumars movies.. For any movies...

Twice went to Mozhi & Azhagiya Theeye as they deserve it... //
வயதைக் குறைத்துக்காட்டும் typical girl.. ;)
உண்மை தான்.. அவை நல்ல படங்கள்.

//இப்படிப்பட்ட ஒரு செய்தியாளர் எங்களுடன் இல்லையே என்று பொறாமை தான் வருகிறது..//
Wife ilam sonnal pinja seruppillai, puthu seruppalaye saathuva..
Bullet anna, pls print this article and pass it to Loshans wife.. Pasamalar sonna seiyathaana venum...:P:P:P//
ஏன் எல்லாரும் என்னையே குறி வைக்கிறீங்க.. ஏன் இல்லாள் (எப்படி ஒரு மரியாதை) புரிந்து கொள்பவள்.. So i m not gonna worry too much.. ;) hee hee..
அடப்பாவி அவனா உன் அண்ணன்? நல்ல பாசமலர் தான்.. நாசமாப் போங்க..


//எனினும் பழைய சிவாஜி காலத்து போலீஸ் படங்கள் பார்த்த நினைவு வந்து தொலைக்கிறது.. நம்ம மொக்கைப் பதிவுகள் கூட பரவாயில்லை போல..//
Pls send this article to the Venapoona MBA karan... He would not dare to direct another movie..//
:) :)




Nimalesh said...
nanaum parthu nonthavan anna//
ஆகா வாங்க..
நாம் எல்லோரும் சேர்ந்து ஒழிக 1977 கட்சி ஆரம்பிக்கலாமா? சில வேளை டிக்கெட் காசு எல்லாம் சரத் மீளத் தந்தாலும் தருவார்.. ;) (ஒரு நப்பாசை தான்)

Anonymous said...

//வயதைக் குறைத்துக்காட்டும் typical girl.. ;)
//
Typing error.. As a small gal I decided long time back... Argh..

//ஏன் எல்லாரும் என்னையே குறி வைக்கிறீங்க.. ஏன் இல்லாள் (எப்படி ஒரு மரியாதை) புரிந்து கொள்பவள்.. So i m not gonna worry too much.. ;) hee hee..//

Giggling.. hi hi..

Are not you worry? I heard about her treatment a couple of weeks ago... Seeni illatha tea, no ironing,,, ingiyathi ingiyathi.. Enna sir,,, have you forgotten? Manathil kai vaithu sollungo "are not you scared of your wife" he he

//அடப்பாவி அவனா உன் அண்ணன்? நல்ல பாசமலர் தான்.. நாசமாப் போங்க..//
huh.... vavava....

Vendam.. bullet annavukku unganda veedu theriyum.... athil veera paasamalar sonna seiyama vidamaattan..
Peesamal surronder aakungo.... ungalukku athu thaan nallathu...

Sinthu said...

"Sinthu said...
ஏன் அண்ணா இப்படி?//
எப்படி தங்கச்சி?"
அது தான் இப்படி..
"//உங்களுக்கு இப்படி எல்லாம் வர்ணிக்கத் தெரியும் என்று தெர்யாமல் போச்சே?//
ஏன் முன்னமே தெரிஞ்சு என்ன செய்திருப்பீங்க?"
அது முன்னமே நீங்கள் சொல்லி இருந்தால் என்ன செய்திருப்போம் என்று சொல்லி இருக்கலாம்.. இது தாமதம்..tooooooooo late

Anonymous said...

chk the last comments.. haaaaaa haaaaaaa haaaaaaaaa...

http://ariyalion.blogspot.com/2009/03/blog-post_12.html?showComment=1238279100000#c3583462162906615538

Gajen said...

அண்ணா, என்னது வர வர நமீதா, பர்சானா எண்டு அடுக்கிக் கொண்டு போறியள்...உண்மையாவே இது லோஷன் அண்ண தான் எழுதினதோ எண்டு சந்தேகமா கிடக்கு..

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner