March 20, 2009

பாவிகளும், காமக் கொடூரர்களும்.. என்ன செய்யப் போகிறோம்?

அண்மையில் இலங்கையின் கிழக்கு நகரான திருகோணமலையில் அண்மயில் நிகழ்ந்த கொடூரம்..

ஆறு வயதே நிரம்பிய தமிழ் சிறுமி ஒருத்தி கடத்தப்பட்டு மறு நாள் சடலமாக மீட்கப்பட்டாள். கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருந்த அந்தப் பிஞ்சு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டிருந்தது இன்னுமொரு அகோர அதிர்ச்சி..

பாவிகளுக்கு எப்படித் தான் இப்படிப்பட்ட வக்கிர எண்ணங்கள் வந்து வாய்க்கிறதோ..

விசாரணைகள் முடுக்கி விடப்பட்டதும் இந்த கடத்தல் கொலை சம்பவத்தில் தமிழ் பேசும் இளைஞர்கள் ஆறுபேர் சம்பந்தப்பட்டிருந்தனர்.. 
கப்பம் பெறுவதற்காக கடத்தி விட்டு தாம் அகப்பட்டு விடுவோமோ என்ற அச்சத்தில் சிறுமியைக் கொடுமையாகக் கொலை செய்து உறப்பையினுள் இட்டு போட்டு விட்டார்கள் அந்தப் பாவிகள்..

சடலம் காணப்பட்ட இடமும் சில பரிதாபகரமான படங்களும்..





இதை விட பார்க்கவே சகிக்காத, மனம் கலங்கும் மேலும் சில படங்களை நான் பிரசுரிக்க விரும்பவில்லை..

கைது செய்யப்பட்ட ஒருவர் தப்பி ஓடும் போது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.. மேலும் ஒருவர் நேற்று தற்கொலை செய்துள்ளார்..

ஏற்கெனவே சொல்லொணா துயரங்களை அனுபவித்து வரும் எம்மக்களுக்கு இப்படியும் பரிதாப அவலங்கள்..

-------------------------------------

இன்னுமொரு அவல செய்தி நேற்று இணைய செய்திகளினூடாகவும், NDTV தொலைக்காட்சியின் மூலமும் நான் அறிந்தது..

இந்தியாவிலே தந்தை என்ற பண/காம வெறியன் தன் இரு மகள்களை பாலியல் பசி தீர்த்த சம்பவம்..


தான் பணக்காரர் ஆவதற்காக ஒரு போலி சாமியார் ஒருத்தனின் பேச்சை நம்பி ஒன்பது வருடங்களாக தனது மூத்தமகளை பாலியல் உறவுகொண்டு கொடுமைப் படுத்தியுள்ளான் தந்தை என்ற அந்த ராட்சசன்..

பின்னர் தனது இரண்டாவது மகளை அந்த பூசாரிக்கே படையலாக்கியுள்ளான் அந்தப் பாவி..

பெற்ற தாயும் வேறு இதற்கு உடந்தை..

பிஞ்சுகள் இரண்டுமே வயது இருபது தாண்டாதவை.. 

பிஞ்சிலேயே கருகிய இந்த இரு பெண்களும் ஒன்பது வருடங்களுக்குப் பிறகே தங்களுக்கு நிகழ்ந்த கொடுமையை வெளியே சொல்லியுள்ளார்கள்..

இந்த கொடூரர்களை கழுவேற்றியோ,கல்லெறிந்து கொன்றோ,சித்திரவதை செய்தோ கடுமையான தண்டனை வழங்கினாலே இனி மேலும் எந்த ஒரு பாவியும் இது போன்ற செயலைப் பற்றி சிந்திக்கவே அஞ்சுவார்கள்..

என்ன செய்யப் போகிறோம் நாம்?    

   

26 comments:

ஆதிரை said...

//கைது செய்யப்பட்ட ஒருவர் தப்பி ஓடும் போது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.. மேலும் ஒருவர் நேற்று தற்கொலை செய்துள்ளார்..


ம்ம்ம்ம்ம்.....

Subankan said...

இந்தப் படங்களும் வேண்டாம் அண்ணா, எடுத்துவிடுங்கள்.

//மேலும் ஒருவர் நேற்று தற்கொலை செய்துள்ளார்.. //

இது போதாதே

Anonymous said...

ENCOUNDERED

Suddi said...

Dear Sir,

Whether 6 Tamilians were involved or
6 Sinhalese were involved, it does
not matter.

I don't know, when these kind of
atrocities will stop there.. Whoever
is doing these things, they should first think what will happen, if samething happens to their own daughter or sister or mother.

It's not about killing a Tamilian girl child, it's killing her parents too, right?. How much that
poor mother would have felt, on seeing her daughter like this?.

Let her soul rest in peace.

It's really a shame, that human beings go mad like this..

Anonymous said...

Pls take off some pics.

RIP

கிருஷ்ணா said...

திருகோணமலைக் கொடூரத்துக்கும் அடுத்து இடம்பெற்ற கொலை மற்றும் தற்கொலைக்கும் பல பின்னணிகள் இருப்பதாகத் தெரிகிறது.
“சாத்திரங்கள் பிணந்தின்னுகின்றன” வேறென்ன சொல்ல???

Anonymous said...

Please remove these pictures. Its awful to see them. This should not happen to anybody else. Lets pray god that these atrocities come to an end soon. My thoughts and prayers goes to her family

Rex Harrison J said...

என்னால் தாங்க முடியவில்லை , இதெல்லாம் சமூகத்தில் நிற்க என்ன செய்வது? ஒவ்வொரு பெற்றோரும் பிள்ளைகளை நல்ல ஒழுக்கத்தை சொல்லி வளக்கணும்.


சம்பாதிக்கரதையோ , வாழ்க்கைல மத்தவங்கள விட தம்பிள்ளை எல்லாத்துலயும் மேலா இருக்கணும், பொழைக்கத் தெரிஞ்சவனா இருக்கனும்ங்கிரதைவிட மத்தவங்களுக்கு கெடுதல் பன்னாதவனா இருக்கணும் என்பது பெற்றோரின் முதன்மையான நோக்கமா இருக்கணும்.

Anonymous said...

இந்தப் படங்களும் வேண்டாம் pls... I read abt this indian thing in dailythanthi early morning :-( i could not get over it and now seeing something else as well.. how could ppl be so ......... :-(

Unknown said...

ஏனெனில் பத்திரிக்கைகளும், டீவிக்களும் போதுமான‌
அளவு அல்லது அதிகமான முக்கியத்துவம் கொடுத்து
நம்மை குடும்பத்துடன் நோக வைத்துவிடுவதால்
நீங்கள் இம்மாதிரியான பதிவுகளை வெளியிடாமல்
இருக்கலாம்.

மேலும் நேற்றைய நிகழ்வு :

நாங்கள் தமிழ் நாட்டில் நேற்றும் , இன்றும் இலங்கை
வானொலிகளின் ஒளிபரப்பை எப்.எம் வாயிலாக‌
தெளிவாக கேட்டோம்.
தென்றல்,சூரியனைக்கேட்டோம்.ஆனால் உங்கள் வானொலி
வரவில்லை.

ஏன் உங்கள் வானொலியை Protostar 98.5*E Kuband DTH or NSS 6
வழியாக ஒளிபரப்பக்கூடாது ?

புல்லட் said...

உந்த படங்களடங்கிய மெயில் நெற்று ஒரு சிங்களவரால் எனக்கு அனுப்பி வைக்கப்பட்டது... அமன் தலைப்பு ”We don't have to kill tmails...”
நடந்தது இதுதான்... கடத்தியவர்களில் ஒருவன் அந்த பள்ளைக்கு கணனி படிப்பித்தவன்.. 3 கோடி பேரம் 10 இலட்சத்தில் முடிந்தபோது அந்த கணனி படிப்பிக்க போன நாயை அந்த பிள்ளை அடையாளம் கண்டு விட்டதாம் .... ஆகவே விட்டால் பிழைத்துவிடும் என்று விட்டு கத்த முடியாதவறு டேப்பினால் வாயையும் கண்ணையும் இறுக்க கட்டியுள்ளனர்.. இறுக்கிய இறுக்கல் முகப்பகுதிக்கு இரத்தம் போவதுநின்று விட்ட... முகம் நீலம் பார்க்க தொடங்கி விட்டது..

இதனால் குழப்பமடந்த அந்த நாய்கள் இனிமேல் பத்துலட்சத்திலும் பாக்க நாம் தப்பிக்கொள்வதே மேலென்று நினைத்து பிள்ளையை முனக முனக அடித்து கொன்றுள்ளார்கள்... தலைப்பகுதியில் அடித்ததில் முகத்தசைகளெல்லாம் பிய்ந்து போய் விட்டிருந்தன.

நான் இப்படி எழுதியதற்கு காரணம்...ஒரு சின்னபிள்ளைக்கே இந்த நிலையென்றல் எவனாவது வளரந்தவன் இவர் கைகளில் அகப்பட்டால் என்ன நடக்கும் என்ாதை உணர்த்தத்தான்... மனிதம் எங்கிருக்கிறது என்பதை சொல்லத்தான்...

இன்னும் இருக்கிறார்கள்... இன்னும்செய்வார்கள்...

இதை வெளியிடா விட்டாலும் கோபிக்கமாட்டென்... எனக்கு புரியும் உங்கள் நிலை... :)

Anonymous said...

கிழக்கில் நடந்தது கொடுமையிலும் மகா கொடுமை இவர்களுக்கு நல்ல புத்தியை கொடு என்று இறைவனிடம் பிரார்த்திக்க மட்டுமே முடியும் எங்களால் வேறு என்ன செய்ய முடியும்? எங்களைப்போன்ற பாவப்பட்ட ஜென்மங்களால்

ARV Loshan said...

ஆதிரை said...
//கைது செய்யப்பட்ட ஒருவர் தப்பி ஓடும் போது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.. மேலும் ஒருவர் நேற்று தற்கொலை செய்துள்ளார்..
ம்ம்ம்ம்ம்.....//
உங்கள் ம்ம்ம் இன் ஆழ்ந்த பொருள் புரிகிறது.. :(

Subankan said...
இந்தப் படங்களும் வேண்டாம் அண்ணா, எடுத்துவிடுங்கள்.//
இல்லை சுபாங்கன்.. இப்படியான படங்கள் எங்கள் சமூகத்துக்குள்ளே இருக்கும் கொடூரமான முகங்களை வெளிக்கொண்டு வரும்... (எத்தனை அகோர படங்களை நாம் தினம் தோறும் பார்க்கிறோம்.. குண்டு வீச்சுக்களால் இறுகிக் கருகிய படங்கள் பல பார்த்து மரத்து விட்டோமே..)
இதை விட அகோரமான படங்கள் பலவும் கிடைத்தன .. தவிர்த்து விட்டேன்.

//மேலும் ஒருவர் நேற்று தற்கொலை செய்துள்ளார்.. //
இது போதாதே
இவ்வளவு தூரமாவது நீதி வந்ததே..


Anonymous said...
ENCOUNDERED//
u mean encountered? mmmmmm



Suddi said...
Dear Sir,

Whether 6 Tamilians were involved or
6 Sinhalese were involved, it does
not matter.//

yes .. we are killing ourselves.

I don't know, when these kind of
atrocities will stop there.. Whoever
is doing these things, they should first think what will happen, if samething happens to their own daughter or sister or mother.//

this is demons' world.. no one thinks about others.. :(

It's not about killing a Tamilian girl child, it's killing her parents too, right?. How much that
poor mother would have felt, on seeing her daughter like this?.
Let her soul rest in peace.
It's really a shame, that human beings go mad like this..//
true.

Sangeeth said...
Pls take off some pics.//
இப்படியான படங்கள் எங்கள் சமூகத்துக்குள்ளே இருக்கும் கொடூரமான முகங்களை வெளிக்கொண்டு வரும்... (எத்தனை அகோர படங்களை நாம் தினம் தோறும் பார்க்கிறோம்.. குண்டு வீச்சுக்களால் இறுகிக் கருகிய படங்கள் பல பார்த்து மரத்து விட்டோமே..)



கிருஷ்ணா said...
திருகோணமலைக் கொடூரத்துக்கும் அடுத்து இடம்பெற்ற கொலை மற்றும் தற்கொலைக்கும் பல பின்னணிகள் இருப்பதாகத் தெரிகிறது.//
தெரிந்தது தானே.. கடத்தல்,கப்பம்,கொலை.. சகஜமானவையே.. அனால் இந்தப் பச்சைப் பிஞ்சு என்ன பாவம் செய்தது?

“சாத்திரங்கள் பிணந்தின்னுகின்றன” வேறென்ன சொல்ல???//
சத்தமாக சொல்லாதீங்க..

ARV Loshan said...

Anonymous said...
Please remove these pictures. Its awful to see them. This should not happen to anybody else. Lets pray god that these atrocities come to an end soon. My thoughts and prayers goes to her family//
I know those pics are awful But we should know that we have culprits in our own Tamil society.To make awareness among our people only i ve published thesepics.


Rex Harrison J said...
என்னால் தாங்க முடியவில்லை , இதெல்லாம் சமூகத்தில் நிற்க என்ன செய்வது? ஒவ்வொரு பெற்றோரும் பிள்ளைகளை நல்ல ஒழுக்கத்தை சொல்லி வளக்கணும்.

சம்பாதிக்கரதையோ , வாழ்க்கைல மத்தவங்கள விட தம்பிள்ளை எல்லாத்துலயும் மேலா இருக்கணும், பொழைக்கத் தெரிஞ்சவனா இருக்கனும்ங்கிரதைவிட மத்தவங்களுக்கு கெடுதல் பன்னாதவனா இருக்கணும் என்பது பெற்றோரின் முதன்மையான நோக்கமா இருக்கணும்.//

உங்கள் நல்ல எண்ணம், பரந்த மனப்பாங்கு என் குறைந்தபட்ச மனிதாபமேஇங்கே பலருக்கும் இல்லாத காரணத்தால் தான் இத்தனை வக்கிரங்கள்.. பணம் என்றால் யாரையும் பிணமாக்குவார்கள்.. பிள்ளைகளுக்கே இப்படி என்றால் பிறருக்கு?



வாய்ப்பாடி குமார் said...
ஏனெனில் பத்திரிக்கைகளும், டீவிக்களும் போதுமான‌
அளவு அல்லது அதிகமான முக்கியத்துவம் கொடுத்து
நம்மை குடும்பத்துடன் நோக வைத்துவிடுவதால்
நீங்கள் இம்மாதிரியான பதிவுகளை வெளியிடாமல்
இருக்கலாம்.//
இல்லை குமார்.. நான் அப்படி நினைக்கவில்லை.. எங்களுக்கும் கொஞ்சம் சமூகப் பொறுப்புணர்வு இருக்க வேண்டுமே..
இந்தப் பதிவை நான் போட்ட பிறகு தான் பலருக்கும் இது பற்றித் தெரிகிறது.. மொக்கை போடும் பல நாளில் ஒரு நாள் இது போல சமூக விழிப்புணர்வுக்கு நேரம் ஒதுக்குகிறேனே..

நாங்கள் தமிழ் நாட்டில் நேற்றும் , இன்றும் இலங்கை
வானொலிகளின் ஒளிபரப்பை எப்.எம் வாயிலாக‌
தெளிவாக கேட்டோம்.
தென்றல்,சூரியனைக்கேட்டோம்.//
ஆமாம் காலநிலை மாற்றத்தினால் முன்பு நான் சூரியனில் பணியாற்றியபோது பல இந்திய நேயர்கள் இருந்தார்கள்.. இப்போதும் இணையத்தினூடாக வெற்றியை பலர் கேட்கிறார்கள்..

ஆனால் உங்கள் வானொலி
வரவில்லை.//
எங்கள் தொழினுட்பவியலாளரிடம் தான் கேட்கவேண்டும்.. எனினும் இந்திய சூரியன் அருகில் எமது ஒரு அலைவரிசையும், ஹலோ அலைவரிசைக்கருகில் எமது அடுத்த அலைவரிசியும் இருப்பதும் ஒரு காரணம் என்று நினைக்கிறேன்..

ஏன் உங்கள் வானொலியை Protostar 98.5*E Kuband DTH or NSS 6
வழியாக ஒளிபரப்பக்கூடாது ?//
செயம்மதி இணைப்பைக் கொஞ்ச நாளாக நிறுத்ததியுலளர்கள்.. சரி வர நான் விபரம் தருகிறேன்..

ARV Loshan said...

புல்லட் பாண்டி said...
உந்த படங்களடங்கிய மெயில் நெற்று ஒரு சிங்களவரால் எனக்கு அனுப்பி வைக்கப்பட்டது... அமன் தலைப்பு ”We don't have to kill tmails...”//
சிலருக்கு மனதில் இருக்கும் கறை தான் அந்த வசனம்.. வன்மம் இருக்கிறது.. எம்மவருக்கு இனம் அழிந்தாலும் பணம் வந்தால் போதும்..


நான் இப்படி எழுதியதற்கு காரணம்...ஒரு சின்னபிள்ளைக்கே இந்த நிலையென்றல் எவனாவது வளரந்தவன் இவர் கைகளில் அகப்பட்டால் என்ன நடக்கும் என்ாதை உணர்த்தத்தான்... மனிதம் எங்கிருக்கிறது என்பதை சொல்லத்தான்...//
நடந்ததை அப்படியே சொல்லி விட்டீர்கள்.. பலருக்கு எம்மில் இந்த அனுபவம் கிடைத்திருக்கும்.. :(


இன்னும் இருக்கிறார்கள்... இன்னும்செய்வார்கள்...//
:(

இதை வெளியிடா விட்டாலும் கோபிக்கமாட்டென்... எனக்கு புரியும் உங்கள் நிலை... :)//
இல்லை.. நீங்கள் யாரையும் குறி வைத்து சொல்லவில்லையே.. அப்படியே சொன்னாலும் எனக்கோ என் தளத்துக்கு வருபவருக்கோ அவை புரியாது.. நாங்கள் அசடுகள்.. அப்பாவிகள்.



Risamdeen said...
கிழக்கில் நடந்தது கொடுமையிலும் மகா கொடுமை இவர்களுக்கு நல்ல புத்தியை கொடு என்று இறைவனிடம் பிரார்த்திக்க மட்டுமே முடியும் எங்களால் வேறு என்ன செய்ய முடியும்? எங்களைப்போன்ற பாவப்பட்ட ஜென்மங்களால்//
:(

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இக்கொடியோர் ! இந்தப் பிள்ளையை மாத்திரமா கொன்றுள்ளார்கள். பெற்றோரையும் வாழும் வரை பிணமாக வாழவைத்துள்ளார்கள்!
எம்மினம் எங்கே போகிறது. வெறுத்தே விட்டது.

SASee said...

லோசன் அண்ணா,
மனிதன் தன்னில் இருக்கும் தெய்வகுணம், மனிதம் ஆகியவற்றை மரணித்து கருமக்கிரியையும் நடத்திவிட்டான் போலும்.
இப்படிப்பட்ட மனிதர்கள் நீதியின் முன்போ சட்டத்தின் முன்போ நிறுத்தி வைப்பதன் மூலம் யாருக்கு என்ன நன்மை என்பது புரியவில்லை, அப்படியே நிறுத்தினாலும் சட்டத்தில் எல்லோரும் சொல்வது போல ஓட்டைகள், அத்தோடு சட்டம் ஏந்துபவர்களின் கைகளு‍க்கு பணத்தின் பணிவிடை கிடைத்ததும் குற்றவாளி சத்தமேயில்லாமல் சந்தியில் மறுபடியும் கொட்டமடிக்கிறான்.

மனிதனாய்க் கொஞ்சம் சிந்திக்காவிட்டால் சிதறிப்போகும் விரைவில் இவ்வுலகு..

Anonymous said...

இந்த படங்கள் வேண்டாம். அகற்றவும்.. பத்திரிகைகள் சில கொடூரங்களை படம் போட்டு காசு பார்க்கும் கொடூரத்தை வைத்து உங்கள் செயலை நியாய படுத்த வேண்டாம்.. இவற்றை பார்த்து பழகுவதுதான் குரூரத்தின் முதல் பாடம் என்ற உளவியல் உங்களுக்கு தெரியாதா? என்ன கொடும சார்?

Anonymous said...

Loshan

You can give many reasons for posting this pictures BUT think about the parents. do you think they would like to see their daughter like this. I dont think so because am parent too.

Anonymous said...

-LOSHAN-இப்படியான படங்கள் எங்கள் சமூகத்துக்குள்ளே இருக்கும் கொடூரமான முகங்களை வெளிக்கொண்டு வரும்..-
நீங்கள் சொன்னது சரியே.

-கிருஷ்ணா- “சாத்திரங்கள் பிணந்தின்னுகின்றன”-
அந்த கொடிய பேய் முன்பு எங்கேயிருந்து வந்தது என்பதும் தெரியும் தானே.

Sayanolipavan said...

இது கேட்டதிலிருந்து ஒரே கவலையா இருக்கு .. ஒரே அதே கவலை தான் .
நான் சொல்ல வந்தத இங்க எல்லோரும் சொல்லிடாங்க ...

நான் இந்த photos பார்க்க கூடாது என நினைத்தேன் But உங்கட blog ல பார்க்க வந்திட்டு ...

இனி தொடர்ந்து இதே கவலையாதான் இருக்கும் .... எப்படி மறக்கிற என தெரியல ..


இனியாவது காம வெறியர்கள் கொஞ்சம் ஜோசித்து பார்கட்டும். .. அதுதான் சொல்ல முடியும் .

கவிதா | Kavitha said...

:((((((((((((((((

Unknown said...

உங்கள் பதிலுக்கு நன்றி..

நீங்கள் சொன்னது போல (இந்திய சூரியன் அருகில் எமது ஒரு அலைவரிசையும், ஹலோ அலைவரிசைக்கருகில் எமது அடுத்த அலைவரிசியும் இருப்பதும் ஒரு காரணம் என்று நினைக்கிறேன்..)கூட இருக்கலாம்.எங்கள் ஊரில் (ஈரோடு மாவட்டம்) சூரியனும்,ஹலோவும்
கொஞ்சம் சக்திவாய்ந்ததுதான்.

அதேபோல‌ சூரியன் (இலங்கை), தென்றல் அருகில் எந்த பண்பலையும்
சக்தி வாய்ந்தது இல்லை.

மேலும் ஒரு கேள்வி !

தமிழ் நாட்டில் பெரும் பகுதியை கவர் செய்யும் கோடைப்பண்பலை 100.5
அங்கு ஏதாவது ஒரு சீசனில் (கால நிலை மாற்றம்) எடுப்பதுண்டா ?
தாங்கள் அதை எப்போதாவது கேட்டதுண்டா ?

Anonymous said...

Mano,i agree with your sentiments entirely.But who cares! Everything goes in the name of awareness(whatever this word means only God knows!)

Anonymous said...

anna
dont take off this photos because people should know what is happning around us.எத்தனை
அகோர படங்களை நாம் தினம் தோறும் பார்க்கிறோம்.. குண்டு வீச்சுக்களால் இறுகிக் கருகிய படங்கள் பல பார்த்து மரத்து விட்டோமே(please check www.tamilwin.com for these photos)

Media 1st said...

++ கிழக்கை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள தனுஷிகாவின் படுகொலை

இதை வெளியிவிடவும் உங்க பிளாக்கர்ல தயவு செய்து
http://dshan2009.blogspot.com/2009/05/blog-post_3748.html

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner