பாவிகளும், காமக் கொடூரர்களும்.. என்ன செய்யப் போகிறோம்?

ARV Loshan
26
அண்மையில் இலங்கையின் கிழக்கு நகரான திருகோணமலையில் அண்மயில் நிகழ்ந்த கொடூரம்..

ஆறு வயதே நிரம்பிய தமிழ் சிறுமி ஒருத்தி கடத்தப்பட்டு மறு நாள் சடலமாக மீட்கப்பட்டாள். கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருந்த அந்தப் பிஞ்சு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டிருந்தது இன்னுமொரு அகோர அதிர்ச்சி..

பாவிகளுக்கு எப்படித் தான் இப்படிப்பட்ட வக்கிர எண்ணங்கள் வந்து வாய்க்கிறதோ..

விசாரணைகள் முடுக்கி விடப்பட்டதும் இந்த கடத்தல் கொலை சம்பவத்தில் தமிழ் பேசும் இளைஞர்கள் ஆறுபேர் சம்பந்தப்பட்டிருந்தனர்.. 
கப்பம் பெறுவதற்காக கடத்தி விட்டு தாம் அகப்பட்டு விடுவோமோ என்ற அச்சத்தில் சிறுமியைக் கொடுமையாகக் கொலை செய்து உறப்பையினுள் இட்டு போட்டு விட்டார்கள் அந்தப் பாவிகள்..

சடலம் காணப்பட்ட இடமும் சில பரிதாபகரமான படங்களும்..





இதை விட பார்க்கவே சகிக்காத, மனம் கலங்கும் மேலும் சில படங்களை நான் பிரசுரிக்க விரும்பவில்லை..

கைது செய்யப்பட்ட ஒருவர் தப்பி ஓடும் போது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.. மேலும் ஒருவர் நேற்று தற்கொலை செய்துள்ளார்..

ஏற்கெனவே சொல்லொணா துயரங்களை அனுபவித்து வரும் எம்மக்களுக்கு இப்படியும் பரிதாப அவலங்கள்..

-------------------------------------

இன்னுமொரு அவல செய்தி நேற்று இணைய செய்திகளினூடாகவும், NDTV தொலைக்காட்சியின் மூலமும் நான் அறிந்தது..

இந்தியாவிலே தந்தை என்ற பண/காம வெறியன் தன் இரு மகள்களை பாலியல் பசி தீர்த்த சம்பவம்..


தான் பணக்காரர் ஆவதற்காக ஒரு போலி சாமியார் ஒருத்தனின் பேச்சை நம்பி ஒன்பது வருடங்களாக தனது மூத்தமகளை பாலியல் உறவுகொண்டு கொடுமைப் படுத்தியுள்ளான் தந்தை என்ற அந்த ராட்சசன்..

பின்னர் தனது இரண்டாவது மகளை அந்த பூசாரிக்கே படையலாக்கியுள்ளான் அந்தப் பாவி..

பெற்ற தாயும் வேறு இதற்கு உடந்தை..

பிஞ்சுகள் இரண்டுமே வயது இருபது தாண்டாதவை.. 

பிஞ்சிலேயே கருகிய இந்த இரு பெண்களும் ஒன்பது வருடங்களுக்குப் பிறகே தங்களுக்கு நிகழ்ந்த கொடுமையை வெளியே சொல்லியுள்ளார்கள்..

இந்த கொடூரர்களை கழுவேற்றியோ,கல்லெறிந்து கொன்றோ,சித்திரவதை செய்தோ கடுமையான தண்டனை வழங்கினாலே இனி மேலும் எந்த ஒரு பாவியும் இது போன்ற செயலைப் பற்றி சிந்திக்கவே அஞ்சுவார்கள்..

என்ன செய்யப் போகிறோம் நாம்?    

   

Post a Comment

26Comments

Please Select Embedded Mode To show the Comment System.*