விஜய் வாழ்க !! + விமல் வீரம் !! & இன்னும் சில..

ARV Loshan
26

பிரயன் லாரா – மத்தியூ ஹேய்டனிடம் தற்காலிகமாக இழந்து மீண்டும் 400மூலம் பெற்றுக் கொண்ட உலக சாதனைபோல அவுஸ்திரேலியாவில் வைத்து இழந்து ஒரேமாதத்தில் தென் ஆபிரிக்காவில் வைத்து மீட்டெடுத்த அவுஸ்திரேலியப் பெருமைபோல 
நண்பர் ஹிஷாமிடம் ஒருநாளுக்கு இழந்திருந்த உன் வலைப்பதிவு ஹிட் சாதனையை நேற்று சரித்திரப் பதிவொன்றின் மூலமாக (சில போலிப்புத்தி ஜீவிகள் சதிகாரர்கள் அதை மொக்கை பதிவு என்று சொல்வார்கள் - பொருட்படுத்தாதீர்கள்) மீண்டும் எதைதாக்கி வெற்றியின் பதிவுலக சாதனையைப் பதிவாக்கியுள்ளேன்.
(உண்மையிலேயே நேற்றுப் போட்ட புலம்பல் பதிவு மூலம் இழந்த சாதனையைப் பெறுவேன் என்று கொஞ்சமும் நான் நினைக்கவில்லை.. )

வந்தவர்,வாசித்தவர்,பின்னூட்டமிட்டு பெருமைப்படுத்தியவர்,மீண்டும் வந்து ஹிட் கூட்டியோர் என்று அத்தனை பேருக்கும் நன்றிங்கோ நன்றி!

அனைவருக்கும் நான் ட்ரீட் கொடுத்ததா நினைச்சு உங்க செலவுல உங்களுக்குப் பிடிச்சதை நான் தந்ததா நினைச்சு குடிச்சோ சாப்பிட்டோ சந்தோஷமா இருங்க!

முக்கியம் இந்த சாதனைகளில் பங்காளிகளான ஹிஷாம்,இளைய தளபதி விஜய் ஆகியோருக்கு சிறப்பு நன்றிகளை சொல்லவே வேணும்!

இவங்க ரெண்டு பேரும் இல்லேன்னா இதெல்லாம் நடந்திருக்குமா?

so, இன்று கோஷம் மாறுகிறது!

இளைய தளபதி வாழ்க! அவரது கோபம் வாழ்க!

ஆனால் நேற்று நள்ளிரவிலேயே நம்ம நட்பு எதிரியான ஹிஷாம் சூட்டோட சூடா ஒரு பதிவு போட்டு நம்ம சாதனையைக் குறி வச்சுட்டார்.. (பேயும் தூங்குற நேரம் முழிச்சிருந்து ஏம்பா இப்பிடி ஒரு வேலை..) போற போக்கில மீண்டும் டாக்டர் விஜயின் பெரும் துணையோடு-இம்முறை ஆச்சியும் வந்திருக்கிறா, இன்றே என் ஹிட்ஸ் சாதனையை முறியடிப்பார் போல இருக்கு..
(நல்ல இருங்கப்பா.. )

மறுபடி ஒழிக கோஷம் போட வேண்டி வருமா?

------------------------------
நேற்று வெளிவந்த சில செய்திகளில் கவனத்தை ஈர்ந்தவை –

இலங்கையின் வீரமிகு மைந்தர்களுள் ஒருவரான விமல் வீரசன்ச பிரகடனப்படுத்திய சூளுரை எச்சரிக்கை! 

இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபைக் கட்டடத்தைக் தானும் தம் ஆதரவாளர்களும் முற்றுகையிடுவார்களாம்!

போஸ்டர் ஒட்டும் அட்டைக்கத்தி வீரரான இவருக்கு - இவரது கட்சியிலே போஸ்டர் ஒட்டக் கூட ஆள் பற்றாக்குறை! இதற்குள் இவருக்கு இப்படி ஒரு வீராப்பு!

--------------------------
தமிழக அம்மா ஜெயலலிதா ஈழத் தமிழருக்காக உண்ணாவிரதம் இருந்து சேகரித்த தொகையை செஞ்சிலுவை சங்க அதிகாரியிடம் கொடுத்தாராம்.நல்ல விஷயம்.. இதுல விசேஷம் என்னான்னா அம்மா அவங்களே தனிப்பட்ட முறையில் கொடுத்த பெரிய தொகை.. 

லேட்டா கொடுத்தாலும் லேட்டஸ்டா கொடுத்திருக்காங்க.. தேர்தல் வருதில்ல.. இதை விட இன்னமும் செய்வாங்க..

பார்க்கலாம் வேற யார் இனி என்ன செய்யப் போறாங்கன்னு..

-----------------------------------

தமிழகத்தில் இருந்து அறிந்த துயர செய்தி தான் மறுபடி நிகழ்ந்த இன்னொரு தீக்குளிப்பு சம்பவம். இருவர் இறந்த சம்பவம்,, 

பரிதாபமான விஷயங்கள் நடந்த வண்ணமே இருக்கின்றன.. நாம் ஈழத்தில் இருப்பவர்கள் தான் துரதிர்ஷ்ட சாலிகள் .. எமது உயிருக்கு மதிப்பில்லாதவர்கள் என்றால்,எங்கள் அன்புக்குரிய தமிழக சகோதரர்களின் உயிர்களும் விலை மதிப்பில்லாமல் போகிறதே.. 

தயவு செய்து நிறுத்துங்கள்.. போதும் உயிர்ப் பலிகள்.. (பின்னணிகள்,காரணங்கள் எதுவாக இருந்தாலும் இருக்கட்டும்..) உடனே நிறுத்தப்பட வேண்டியது அர்த்தமற்ற இந்த உயிர்த் தியாகங்கள்..

யார் எங்கே என்ன செய்தாலும் எதுவும் நிறுத்தப்பட மாட்டாது இலங்கையிலே.. எனவே நடப்பது நடந்தே தீரும்..

------------------------------

இன்னுமொரு விஷயம், நேற்று இலங்கை கிரிக்கெட் அணி 1996ஆம் ஆண்டு உலகக் கிண்ணம் வென்று பதின்மூன்று ஆண்டுகள் பூர்த்தியான தினம்.. 

முதலில் தேயிலை, பின்னர் யுத்தம் இவற்றுக்குப் பின் இலங்கையை உலக வரைபடத்தில் காட்டிய ஒரு விடயம் இந்த கிரிக்கெட்..

 அதைப் பற்றிய கொஞ்சம் வித்தியாசமான பதிவொன்று நாளை இடுவதாக எண்ணியிருக்கிறேன்.. மனமும் நேரமும் ஒத்துழைத்தால்.. (இன்று 1977 பார்க்கப் போகலாம் என்று நினைத்துள்ளேன்.. பலபேரும் பயமுறுத்தறாங்க..பார்த்த பிறகு மன நிலை எப்பிடியிருக்கோ.. ஒரே ஆறுதல் என்ன தான் யார் வந்து பயமுறுத்தினாலும் நம்ம நமீதாவின் அனுக்கிரகத்தில் மீண்டு வருவோம்.. வில்லு,பெருமாள்,சிலம்பாட்டமே பார்த்திட்டோம்.. இதையெல்லாம் பார்க்க மாட்டமா?)   

 மேலே படத்திலுள்ளது லோஷன் என்ற புண்ணியாத்மாவின் கரம்.. இன்று ஐந்து விடயம் பற்றி கலந்து கட்டிப் பதிவிட்டதால் எனது கையின் ஐந்து விரல் காட்டும் படம்.. ;) 

Post a Comment

26Comments

Please Select Embedded Mode To show the Comment System.*