October 29, 2008

வியர்வை வழியும் உடலோடு இரவு.. விமான அனுபவம்

 நேற்று இரவு.. வெளியே விருந்தொன்றுக்காகப் போய் வீடு திரும்பி, உறங்குவதற்கு தயாராகிக் கொண்டிருந்தோம்.வழமையாகவே பதினொரு மணிக்கு முதல் தூங்கவேண்டும் என்று முடிவெடுத்தாலும் எங்கள் குறும்பு கண்ணனின்(என் ஒரு வயதை அண்மிக்கும் மகன்) குழப்படி விளையாட்டுக்கள் காரணமாக எப்படியும் இன்னொரு மணித்தியாலமாவது செல்லும் தூங்குவதற்கு.. இரவு நேரம் என்றால் அவனுக்கு எங்கிருந்து தான் அந்த உற்சாகம் வருகிறதோ.. எனக்கென்றால் அடுத்த நாள் அதிகாலை 4.30க்கு எழுந்தால் தான் வேலைக்கு சரியான நேரத்துக்கு சென்று நிம்மதியாக காலை நிகழ்ச்சியை வானொலியில் ஆரம்பிக்க முடியும்.

அதுவும் நேற்று எங்கள் அப்பாவும் எங்களோடு தங்கியதால் கரைபுரண்ட உற்சாகம் அவனுக்கு,, ஓடி(தவழ்ந்து தான்) விளையாடி வியர்த்து வழிய,கிட்டத் தட்ட குளித்தது போல அவனது உடல் முழுதும் வியர்வை..  எனக்கும் அவன் பின்னாலே ஓடித் திரிந்து களைத்து விட்டது.வியர்த்து வழிய நின்ற போது தான் மின்சாரம் தடைப் பட்டது.

நிறைய வலைத்தளங்கள் பார்க்கும் எனக்கு உடனே ஞாபகம் வந்தது தமிழகமும் ஆற்காடு வீராசாமியும் தான்.. ;)

மழை நாட்களில் இதையே ஒரு தடவை மின்சாரம் நின்று பின் வரும்.. அதற்கிடையில் நான் மின்சார சபையின் அவசர இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு அங்கு இரவு உறங்கத் தயாராக இருக்கும் இரவுக் கடமை ஊழியருக்கு தொல்லை கொடுப்பதுண்டு.நேற்றும் அது போலத் தான்.. பல தடவை எடுத்தும் அந்த இலக்கம் செயல் இழந்தது போலவோ, receiverஐத் தூக்கி வெளியே வைத்தது போலவோ ஒரு tone கேட்டுக் கொண்டிருந்தது.. மனத்துக்குள் அவனைத் திட்டிவிட்டு பால்கனி வழியாக வெளியே பார்த்தேன்.கண்ணுக்கெட்டிய தூரம் வரை எங்குமே மின்சாரம் இல்லை என்று தெரிந்தது.ஆனால் கொஞ்சம் தொலைவிலுள்ள கிருலப்பநை காவல் நிலயத்தில் இருந்து வானுக்கு ஒளி வெள்ளம் (para meter light) பாய்ந்து கொண்டிருப்பதைக் கண்டவுடன் எனக்குப் புரிந்தது இது கொஞ்சம் விவகாரமான விஷயம் என்று.. 
 
கொழும்புக்குள்ளே அடையாளம் காணப் படாத விமானம் (புலிகளின் விமானத்துக்கு இவ்வாறு தான் சொல்வார்கள்)  புகுந்து விட்டது என்று புரிந்தது.. (அல்லது வரப் போகிறது என்று பயம் வந்து விட்டது என்று விளங்கியது) ஏற்கெனவே முதல் தடவை இவ்வாறு கொழும்பிலே புலிகளின் விமானத் தாக்குதல் நடந்த போது இலங்கையின் உயரமான கட்டடத்திலே கடமையில் இருந்தேன் நான்.(சூரியனில் உலகக் கிண்ண இறுதிப் போட்டியின் ஸ்கோர் விபரங்கள் வழங்கிக் கொண்டிருந்தேன்)
 
ஆகா மறுபடியுமா என்று யோசித்தேன்.. எங்கே போடுவார்கள்?? ஜனாதிபதி மாளிகை? இராணுவத் தலைமையகம்?? நாடாளுமன்றக் கட்டடம்?? சப்புகஸ்கந்த எண்ணெய்க் குதம்?? அல்லது வேறு எங்கே??

யோசித்த படியே எங்கள் வெற்றியின் செய்தி ஆசிரியர் பென்சிக்கு அழைப்பெடுத்தேன்.. மன்னார்,தள்ளாடி இராணுவ முகாம் மீது புலிகளின் விமானத் தாக்குதல் நடத்திய விஷயம் சொன்னார்..கொழும்புக்குள்ளும் விமானங்கள் வரலாம் என்ற அச்சத்தினாலேயே மின்சாரம் நிறுத்தப் பட்டதாக சொன்னார் அவர்.. (அது சரி தான் இருட்டுக்குள்ள எப்படி கண்டு பிடிப்பாங்க எங்கே குண்டு போடுவதென்று?) எனக்கொரு சின்ன ஐடியா எங்கெங்கே குண்டு போடுவார்கள் என்று சந்தேகம் இருக்கோ அங்கெல்லாம் மட்டும் மின்சாரம் துண்டிததால் வருகின்ற விமானங்கள் குழம்பி விடுமே.. ஏன் செய்ய மாட்டேங்கிறாங்க?  

சரி இன்று விடிய விடிய மின் விசிறியும் போட முடியாமல் வியர்வையுடன் அவதிப் படவேண்டும் என மனத்தில் திட்டிய படியே பால்கணியில் நின்று காற்று வாங்கிக் கொண்டிருந்தேன்.. சின்னவனோ வியர்வையுடன் போராடிக் கொண்டிருந்தான்..விளையாடும் போது அவனுக்குப் பிரச்சினையில்லாமல் இருந்த வியர்வை தாயார் தூங்க வைக்கும் போது அவனுக்கு எரிச்சல் ஏற்படுத்தி இருக்கவேண்டும்.தூங்க மாட்டேன் என்று அடம் பிடித்து அழுதான்.. 

அதற்கிடையில் அலுவலகத்தில் கலையகக் கடமையில் இருந்த சுபாஷ் தொடர்புகொண்டு களனி திஸ்ஸ மின்வழங்கு நிலயத்தில் குண்டு போடப்பட்ட விஷயத்தை சொன்னார்.பாதுகாப்பாக இருக்குமாறு அவரிடம் அறிவுறுதிவிட்டு பென்சியை மறுபடி அழைத்தேன்.. குண்டு போடப்பட்ட இடம் பற்றி எரிவது தெரிவதாக சொன்னார்.. 

கிழிஞ்சு போச்சு.. காலை வரை மின்சாரம் வராது என்று நினைத்தேன்.. மறுபக்கம் அப்பா காலையில் தான் நினைத்திருந்த கதிர்காமம் பிரயாணம் ரத்து தான் என்று கவலைப் பட்டுக் கொண்டிருந்தார்.. 

எனக்கு ஒரு சந்தேகம்(எப்ப தான் வராது?) அது மட்டும் தான் இலக்கா அல்லது இன்னும் வேறெங்காவது போடுவார்களா என்று பார்த்துக் கொண்டிருந்தேன்.. ம்ஹூம் இல்லை.. மயான அமைதி வானெங்கும்.. மொட்டை மாடியில் நின்று பார்த்தால் எதுவுமே தெரியவில்லை.. வியர்வையும் கொஞ்சம் குறைந்தது.. வீட்டுக்குள்ளே என் சின்னவன் ஓடி திரிந்து கொண்டிருந்தான்..
 
நண்பர்கள் மாறி மாறி sms மூலமாக விசாரித்த படி .. தெரிந்தததை சொன்னேன்..
 
அதிகாலை ஒரு மணி போலே மின்சாரம் வந்தது.. அப்பாடா பெரிய நிம்மதி.. காற்று நன்றாகவே மின்சார விசிறி மூலமாக வந்தது.. சின்னவன் தூங்க ஆரம்பித்தான்.நாங்கள் பரவாய் இல்லை.. கொழும்பில் வேறு பல இடங்களுக்கு காலை 5 மணிக்குப் பிறகு தான் மின்சாரம் வந்ததாம்.

காலையில் அப்பா கதிர்காமம் போகத் தயாராகி விட்டார்.வீதிகளில் வழமை போலவே வாகனங்கள்.. எந்த அசாதாரண மாற்றங்களும் இல்லை.. கொழும்பும் விமானத் தாக்குதல்களுக்கு பழகி விட்டது.. 
பற்றி எரிகிறதாமே.. 

தள்ளாடியில் பயங்கர அடியாமே என்ற விஷயங்களை யோசித்துக் கொண்டே அலுவலகம் வந்தால் செய்தி அறிக்கையில் பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையில் பாதிப்பு எதுவுமே இல்லை; புலிகளின் எண்ணம் பலிக்கவில்லை என்ற பாணியில் சொல்லப் பட்டது.. 

சரி தான்.. டிடீயிலு சொல்லிட்டாங்கையா என்று நினைத்தேன்.. 

இந்த தாக்குதலினால் மின்விநியோக நிலையத்திலிருந்த மின் மாற்றிகளுக்கே சிறிய சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த மின்மாற்றியை திருத்தியமைக்கும பணிகளை துரித கதியில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மின்சக்தி எரிசக்தி அமைச்சர்  தெரிவித்துள்ளார்.

பற்றி எரியும் அளவுக்கு வேறு எதுவுமே தாக்கப் படவில்லையாம்.. அது போல மன்னாரிலும் மூன்று பேர் தான் பலியாம்.. 

அடப் பாவிகளா அப்பா இதுக்காகவா எங்களை வியர்வையில் நனைய விட்டீர்கள் என்று கேட்கலாமோ என்று தோன்றியது...ஆனால் கொழும்பும் கொஞ்சம் விமானம் என்றால் நடுங்கட்டுமே என்று ஒரு சின்னத் திருப்தியும் தான்.. 

எல்லாவற்றையும் பிடித்து விட்டோம் என்றும் வன்னியை நெருங்கி வருகிறோம் என்று சொல்வதெல்லாம்???
விமானங்களை சுட்டு வீழ்த்தினோம் என்று சொன்னதெல்லாம்???? 
தானியங்கி விமான எதிர்ப்பு ஏவுகனைகள் செயல்படுவதாக சொன்னதெல்லாம்???

என்னடா நடக்குதிங்கே..... (அடிக்கடி நிறையக் கேள்வி கேட்கிறேனோ?)

யோசித்தால், கேட்டால் மறுபடி வியர்க்கும்.. எனக்கல்ல..;) 

20 comments:

IRSHATH said...

புதிய மோதிரம் அணிந்த பெண் விரலை அசைத்து அசைத்து பேசுவது போல, மகன,கிருலப்பநை மாடி வீடு இந்திய சம கால நிகழ்வுகள் தொடர்பான அறிவு எல்லாவற்றையும் வெளிகாட்டும் மாதிரி ஒரு பதிவு! இந்த விமான சல சலபுகளுக்கெல்லாம் ஒரு நரி கூட பயப்படவில்லை. ஏன் பாதி மக்களுக்கு காலை செய்தி கேட்டு தான் எல்லாமே தெரியவந்தது. அது சரி கொழும்பில் எந்த பகுதியில் வெற்றி செய்தியில சொன்ன 5 மணி நேரம் மின் தடை?

ARV Loshan said...

நன்றி.. விமர்சனத்தில் வைத்த பொடியை ரசித்தேன்.. நான் இருப்பது வெள்ளவத்தையில் தான்.. :)
தாக்குதல் நடந்த இடத்துக்கு அருகாமையில் இருந்த பகுதிகள் என்று பாதுகாப்பு அமைச்சின் தகவல் தான் சொல்லி இருந்தது.

Anonymous said...

தங்களின் வலைப்பூ நெல்லைத்தமிழ் இணையத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

தங்களின் பக்க முகவரி
http://blogspot.nellaitamil.com/in/?p=34

இந்த பக்கத்தில் பின்னோட்டத்தில் உங்களை பற்றி நீங்கள் எழுதுங்கள். பிறரும் அறிந்து கொள்ள வசதியாக இருக்கும். நன்றி.

IRSHATH said...

பாதுகாப்பு அமைச்சா? யப்பா நான் இந்த ஆட்டத்துக்கு வரல்ல!
இர்ஷாத்

Anonymous said...

அப்பு இர்ஷாத்...
கொஞ்சம் கொள்ளுபிட்டி பக்கம் இருந்திருபீர்களானால் தெரிந்திருக்கும் வான வேடிக்கை.
லோஷன் சொன்னது,குறைச்சல்தான்.
நாங்கள் பட்ட அவஸ்தை எங்களுக்கல்லோ தெரியும்.
வீட்டில இருந்த சின்னஞ்சிறுசுகள் வீலிட ஒரே அல்லோல கல்லோலம்தான்.
இப்படி உங்கள மாதிரி மக்களோடு வாழுற நீங்களே இப்படிச் சொன்னா, AC ரூமுக்க சத்தமே கேட்காம ஆளுறவர்கள் எப்படி இருப்பினம்?
வெள்ளவத்தையில ராஜசிங்க ரோட் பக்கமே காலை 9 மணிவரை மின்சாரம் தடை என்ற விசமாவது உங்களுக்கு தெரியுமா?

தோழமையுடன்
சேகுவேரா

சயந்தன் said...

இந்த விமான சல சலபுகளுக்கெல்லாம் ஒரு நரி கூட பயப்படவில்லை. ஏன் பாதி மக்களுக்கு காலை செய்தி கேட்டு தான் எல்லாமே தெரியவந்தது. //

ஒருவேளை புலிகளின் விமானம் தானே.. பொதுசனத்திற்கெல்லாம் போடமாட்டார்கள் என்ற நம்பிக்கை இருந்தால் நரியும் பயப்படாதுதானே..

ஆனால் வன்னியில் நரிக்கு குண்டு போட்டாலும் மக்கள் தானே அஞ்சி செத்துப் போக வேண்டியிருக்கிறது.

சொல்லப் போனால் புலிகளின் விமானத் தாக்குதலுக்கு இர்சாத் சொன்னது போல மக்கள் பெரிசு படுத்தத் தேவையில்லைத்தான். வந்தவர்கள் வந்த வேலை முடிந்தால் போயிட்டே இருப்பார்கள். பயம் வேணா..

Anonymous said...

உங்களுக்கு ரொம்ப தைரியம்தான் போங்க... இதை உங்க வானொலியில செஞ்சா எப்படி இருக்கும்........ படிப்பறிவு இல்லாத சனங்களும் தெரிஞ்சுகொள்வாங்கத்தானே இது என்னோட சிறிய வேண்டுகோள் மட்டுமே

kuma36 said...

பற்றி எரியும் அளவுக்கு வேறு எதுவுமே தாக்கப் படவில்லையாம்.. அது போல மன்னாரிலும் மூன்று பேர் தான் பலியாம்..
அடப் பாவிகளா அப்பா இதுக்காகவா எங்களை வியர்வையில் நனைய விட்டீர்கள் என்று கேட்கலாமோ என்று தோன்றியது...ஆனால் கொழும்பும் கொஞ்சம் விமானம் என்றால் நடுங்கட்டுமே என்று ஒரு சின்னத் திருப்தியும் தான்..

எனக்கு நெரைய கோல் வந்தது, வலமையாவே கொழும்பில் எங்கு குண்டு வெடித்தாலும் இந்த மாதிரி அழைப்பு வரும் "அங்கு ஒன்னும் பிரச்சினை இல்லையே, கவனமா இருங்க அப்டினு நெரைய பேர் சொல்லுவாங்க" ( கோல் பன்னுவது ஒரு வேலை இருக்கனா போய்டானானு பார்க்கவோ தெரியல, அது அவர்களுக்கே வெளிச்சம்) இந்த மாதிரி நேரத்தில நான் யோசிப்பதுண்டு " என்னடா இது, கொழும்பில் வெடித்தால் தான் அது வெடி குண்டா?
ரெண்டு தடவை வந்து ரெண்டு குண்டு போட்டதரற்கே இப்டினா..........?
இன்னும் இந்த மாதிரி நெரைய கேள்வி இருக்கு எல்லதையும் எனகுள்ளவே கேட்டு கொண்டு லோஷன் அண்ணா மாதிரி பெருமூச்சி விட்டு கொள்வேன்.

"இராமேஸ்வரத்தில் திரு.சேரன் சொன்ன மாதிரி மக்கள் புரட்சி வேண்டும்,மக்கள் புரட்சியால் தான் சாதிக்கமுடியும்"

சுதேசன் said...

அடடே நீங்கதானா அந்தாளு! சக்திfm, சூரியன்fm, வெற்றிfm அடுத்து எது? இதயவீணையா?

IRSHATH said...

நண்பா சேகுவேரா,
கொள்ளுபிட்டி பக்கம் இருக்கிற ஆக்கள் எண்டால் பெரிய ஆக்கள் தானே? அப்போ கவலைகளும் கஷ்டங்களும் பெரிசாதானே இருக்கும்? மஹிந்த எப்படி அந்த அலறி மாளிகைக்குள்ள ஓடியிருப்பார் எண்டு யோசிச்சு மனச தேத்திக்கங்க. சத்தியமா சொன்னால் நான் இருந்த ஏரியால பவர் கட் கூட இல்லப்பா. ஒரு சத்தம் கூட இல்ல. நான் இருந்தது தெஹிவல பக்கம். காலைல ஸ்கூல் போற பெடியன் ஒருவன் மற்றவன் கிட்ட கேட்டான் ஈய ரே சீன் ஏகக் கியாலு மச்சான்

இர்ஷாத்

ARV Loshan said...

நன்றிகள் இர்ஷாத், செகுவேரா,கலை,சயந்தன்,நெல்லைத் தமிழ்,சுதேசன்..

அன்பின் சுதேசன்.. நானே அவன்.. எங்கு வேண்டுமானாலும் போவேன் கேட்க நீ யார் என்று நான் கேட்கப் போவதில்லை.. காரணம் கேட்பது உங்கள் உரிமை.. பதில் தருவதும் தராததும் என் உரிமை.. ஒவ்வொரு கட்டம் ஒவ்வொரு மாற்றம்.. மாற்றம் மட்டுமே இங்கு மாறாதது. புலிகளின் குரலுக்கு வேண்டுமானாலும் போவேன்.. ;) இடம் மாறும்;சுயம் மாறேன்..

கொள்ளுப்பிட்டியில் இருந்தும் குண்டுகள் மீட்டார்கள் தெரியுமோ?
அலறி,அலரி சூப்பர்.. ;)இர்ஷாத் கலக்கிட்டீங்க....
ஈய ரே சீன் எண்டு வேற எதையாவது சொல்லி இருப்பானோ? ;)

harijana said...

"Jayalalithavukku mirattal"

Jayalalitha Mattumalla Tamil nattil ulla yarukkenum Abathu nerthal Tamil Eazham verum kanavahividum.

Ungal nanbarhalidam kurngal

Tamil nattil irunthu pizhaikka veru idam sendru angulla varhalidam urimai ketkum ungalukkea intha alavukku Thunivirunthal. Nangal original pachai tamilan Engae valatta vendam. Ungal velaiyellam singalathil vaithukollungal.

Ithu Thamizh Nadu.

ARV Loshan said...

harijana said...

"Jayalalithavukku mirattal"

Jayalalitha Mattumalla Tamil nattil ulla yarukkenum Abathu nerthal Tamil Eazham verum kanavahividum.

Ungal nanbarhalidam kurngal

Tamil nattil irunthu pizhaikka veru idam sendru angulla varhalidam urimai ketkum ungalukkea intha alavukku Thunivirunthal. Nangal original pachai tamilan Engae valatta vendam. Ungal velaiyellam singalathil vaithukollungal.

Ithu Thamizh Nadu.////


இதைத் தான் தமிழனுக்குள்ளே உள்ள துவேஷம் என்பதா? யாரோ மிரட்டல் விடுக்க அதற்காக யாரோ மீது பாய்வதா?
யார் மிரட்டல் விடுத்தது என்று உறுதியாகக் குற்றம் காண முடியுமா?
யார் தமிழ் நாட்டில் இருந்து பிழைப்புக்காக சென்றது?
அது இருக்கட்டும் ஜெயலலிதா யார்????
அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார்???
உங்கள் போல் குறுகிய வட்டம் போடாத நல்ல மனிதர்கள் பலபேர் தமிழ் நாட்டில் உள்ளனர் என்று எமக்குத் தெரியும் ..

Anonymous said...

Loshan, ஆரம்பம் முதல் தொடர்ந்து உங்கள் பதிவை வாசித்து வருகிறேன்.. நீங்கள் இந்த மாதிரி எழுதுவதால் பிரச்சினையில்லையோ... நாங்கள் எப்பிடியும் எதுவும் எழுதி விட்டுப் போகலாம்.. எங்களை கண்டறிந்து தேடி வர நேரம் எடுக்கும்.. நீங்கள் பலராலும் அறியப்பட்ட இலகுவில் அடையாளம் காணக்கூடியவர். ஏன் வம்பு?

ஏகனைப்புறக்கணிக்கச் சொன்னவரையே கைது செய்த நாடு... கவனம்..

-Not to publish...

ARV Loshan said...

என்று போட்டு பின்னூட்டமாக போட்ட எப்படி?

அப்பிடி என்ன பயங்கரமா எழுதிட்டேன்? அன்று இரவு எனது அனுபவத்தையும் எனக்கிருக்கும் சில சந்தேகங்களையும் பற்றித் தானே எழுதி இருக்கிறேன்.. ;)

ஆட்காட்டி said...

மொட்டைமாடியில எப்படி நின்று இருப்பீர்கள்? சும்மா தானே?

Anonymous said...

//
அடடே நீங்கதானா அந்தாளு! சக்திfm, சூரியன்fm, வெற்றிfm அடுத்து எது? இதயவீணையா?
//

ஏன் மாறுவதில் என்ன தவறிருக்கு ?

நேற்று IDM, இன்று virtusa நாளை google எல்லோரையும் போல அவரும் தேடிக் (?) கொண்டிருக்கிறார். அவ்வளவுதான்

ARV Loshan said...

நன்றி ஆட்காட்டி,..அநானி

மொட்டை மாடியில் தானே தவிர மொட்டையில் அல்லவே.. ;) நல்ல கேள்வி ..

Anonymous said...

மேலே ஒருவர் சொன்னது போல, அவதானமாக இருப்பது நல்லது லோசன் . இலங்கையைப் பொறுத்தவரைக்கும் ஊடகம் என்பது அரசாங்கத்தைப் பற்றியும் சொல்லலாம்.... ஆனால் நல்லபடியாக மட்டும் என்ற விதியைக் கொண்டுள்ளது.

அபர்ணா சுதன் கூட திருமணமாகி அவுஸ்ரேலியாவில் வசிக்கின்றார் என்று அறிந்தேன். நீங்களும் ஏன் அப்படி முயலக்கூடாது? தொ.காட்சி அனுபவம் இருப்பதால் அது உங்களுக்கு கூடுதல் தகமையாகவே இருக்கலாம். ஏதோ யோசித்து முடிவெடுங்கள்.

தூயவன்

Anonymous said...

//எனக்கொரு சின்ன ஐடியா எங்கெங்கே குண்டு போடுவார்கள் என்று சந்தேகம் இருக்கோ அங்கெல்லாம் மட்டும் மின்சாரம் துண்டிததால் வருகின்ற விமானங்கள் குழம்பி விடுமே.. ஏன் செய்ய மாட்டேங்கிறாங்க? //

அதெப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறிங்க..கிகிகிகி

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner