October 25, 2008

'தல' வலிக்குது.. ஆனாலும் எழுதுகிறேன்

இப்போதெல்லாம் எனக்கு இணையத் தளங்களிலும்,வலைத்தளங்களிலும்,பத்திரிகைகளிலும் எதையாவது வாசிக்க தலைவலியாகவும்,பிடிக்காமலே போகிறது.ஏன் எங்கள் வெற்றி FMஇலும் கூட செய்திகளை வாசிப்பதற்கு வெறுப்பாக உள்ளது.

 வன்னி மக்கள் அவதி.. நாளாந்தம் பலர் பலி.. கொழும்பில் பலர் கைது.. இனப் பிரச்சினை தீர்வுக்கு இதோ ஒரு புதிய வழி.. பேசுவார்த்தைக்கு வருவார்களா?.. மற்றொரு குண்டு வெடிப்பு.... வன்னிக்குள் இராணுவம்..புலிகள் பதிலடி.. இப்படியான வழமையான இலங்கை பற்றிய செய்திகளோடு இப்போது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் விடயங்களாக யார் யார் ஈழத் தமிழருக்கு ஆதரவு? யாரெல்லாம் பேரணி,மனித சங்கிலிப் போராடடத்துக்கு வருகின்றனர்? யாரெல்லாம் உண்ணாவிரதத்துக்கு வருவர்? என்பவையே இப்போதெல்லாம் பேசு பொருள்,எழுது பொருள்.


நானும் இது பற்றி பதிந்திருந்தேன்.. தமிழக ஆதரவு அலை எந்தவிதத்திலும் இந்திய மத்திய அரசை அசைத்துப் பார்ப்பதாக இல்லை..மன்மோகன் இன்னமும் கூறியதே கூறிக் கொண்டிருக்கிறார். இலங்கை அரசுக்கு எல்லா(ஆயுதம் உட்பட)உதவியும் இந்தியா செய்யும் என்று! இப்போது இலங்கை ஜனாதிபதியின் ஆலோசகர் (அவரது சகோதரரும் கூட) பசில் ராஜபக்ஸ இந்திய வெளியுறவு அமைச்சரை சந்திக்க டெல்லி போகிறார். 

மறுமுனையில் வைகோ,திருமாவளவன்,இயக்குநர் அமீர் ஆகியோர் கைது. இவர்கள் கைது செய்யப் பட்ட செய்தி கேட்ட இலங்கைத் தமிழர் உண்மையிலேயே கவலைப் பட்டனர்.ஆனால் இவர்கள் ஈழத் தமிழருக்காகப் பேசியதற்காகவன்றி இந்தியப் பிரிவினையைத் தூண்டும் விதத்தில் பேசியதற்காகவே கைது செய்யப் பட்டதாக கைது செய்யப் பட்டதாக சொல்லப் படுகிறது. இவர்களில் உண்மையாகவா அல்லது பிரபல்யத்துக்கா செய்கின்றார்கள் என்று நான் ஆராயப் போவதில்லை. குரல் கொடுக்கும் அனைவருக்கும் நன்றி சொல்லவேண்டும். இலங்கையில் தெய்வங்களாகக் கருதப்படும் சிலர் மௌனமாக இருக்க,சிலர் படப் பிடிப்புகளில் பிசியாக இருக்க கொஞ்சம் மனது வைத்துக் கலந்து கொண்டார்களே.. அதனாலும்.. கொட்டும் மழையிலும் நேற்று மனித சங்கிலிகளாக இணைந்து இருந்தார்களே அதற்காகவும். (சிலர் உண்ணாவிரதத்துக்கு வந்தால் போதும் என்று எண்ணியுள்ளார்கள்)


இது பற்றி எழுத நினைத்தாலே எனக்கு வெறுப்பாகவும்,தலைவலியாகவும் இருக்கிறது.. எல்லோரும் எழுதிய இவை பற்றிய பதிவுகளை நான் படித்துவிட்டேன்(சில ஒரே மாதிரியானவை;சில மாற்றுக் கருத்துகள்;ஒரு சில சிலரின் மீது தனிப்பட்ட தாக்குதல்கள்) பலதில் பின்னூட்டம் போட்டும் உள்ளேன்..

எதை எழுதுவது எதை விடுவது? ஏன் மனத்தில் பட்டவற்றை இங்கே கொட்டுகிறேன் ..

இந்தியாவில் உள்ளவர்களை கட்டாயம் எமக்காகப் பேசுமாறும் போராடுமாறும் நாங்கள் அழுத்தம் கொடுக்க முடியுமா?அவர்களுக்கே இப்போது ஏராளமான பிரச்சினை.. மின்சாரம்,விலைவாசி உயர்வு..2011இல் யார் தமிழக முதல்வர்.. இவ்வாறு பலபல..ஆனால் அவர்களுக்கு உள்ள கடமையின் படி குரல் கொடுக்கவேண்டும்..(எனக்கே குழம்பி விட்டது)

கலைஞருக்கு தமிழ் மக்களின் பெரும் தலைவர் என்று அழைக்கப்படுவதனால் அந்தக் கடமை உள்ளது என்றும் நான் நம்புகிறேன்..

நடிகர்களுக்கு நிச்சயமாக நன்றி உணர்வு இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்..அநேகமான நடிகர்கள் இலங்கை வந்து போய் இருக்கிறார்கள்; அவர்களை உயர்த்தவென்றே இங்கே பல தொலைக் காட்சிகள்;வானொலிகள்..புலம் பெயர் இலங்கைத் தமிழர் இவர்களின் படங்கள்,இவர்கள் வரும் கலை நிகழ்ச்சிகளுக்கு தாம் குளிரிலும்,பனியிலும் உழைத்த பணத்தை அள்ளி இறைக்கிறார்களே.. அதற்காகவேனும்(நாங்க பார்க்க சொன்னோமா என்று கேட்கப் படாது)

இன்று காலையில் என்னைத் துயில் எழுப்பியதே அஜித் இப்படி சொல்லிட்டாரே என்று புலம்பிய ஒரு தொலைபேசி அழைப்புத் தான்.. எனக்கு கோபம்,வெறுப்பு வந்ததாயினும் நான் இதை,இது மாதிரி செய்திகளை எதிர் பார்த்தேன்.. யாராவது நாங்கள் ஏன் செய்யவேண்டும் என்று கேட்பார்கள் என்று யோசித்தேன்...காரணம் அனுதாபம்,தொப்புள்கொடி உறவு,மனிதாபிமானம்,இலங்கையில் வாழ்வோரும் தமிழரே என்னும் சில காரணங்களைத் தவிர அவர்களை (தமிழகத்தினரை) நாம் எமக்காகக் குரல் கொடுங்கள் என்று கேட்க முடியுமா என்று ஒரு மாற்று மனசாட்சி எனக்குள் குரல் எழுப்புவதுண்டு..

எனது சக நண்பர்களும் இதையே எதிரொலித்தார்கள்..ஆனாலும் நாங்கள் ஒன்றுபட்ட ஒரு கருத்து..ஆரம்பத்திலேயே (80களில்) இயக்கங்களுக்க் ஆதரவு,உதவி செய்து பழக்கி விட்டார்கள்; 1987இல் அமைதி காக்கும் படை (!) வந்து செய்த அட்டூழியங்களுக்கு பரிகாரம் செய்ய வேண்டும் என்ற கடப்பாடு;தமிழினமே இலங்கையில் அழிவதை தடுக்கவேண்டும் என்ற சில காலத்தின் கடப்பாடுகள் இருக்கின்றன.. 

நம்மவர்க்கு இடையேயே ஒற்றுமை இல்லாத போது வேறு யாரும் உதவி செய்வார் என்று நாம் நம்பி இருக்கலாமா?சில அநானி பின்னூட்டங்களை சில பதிவுகளில் பார்த்தாலே தெரியுமே..  

அஜித் சொன்னாரா சொல்லவில்லையா என்று நான் ஆராயமாட்டேன்.. ஆனால் நெருப்பிலாமல் புகையாது என்பது ஒரு பக்கம் இருக்க,ராமேஸ்வரத்தில் வைத்து இயக்குநர் சேரன் விஜயைத் தாக்கிப் பேசியதால் அஜித்‌தின் புதிய திரைப்படம் ஏகனை ஓட விடாமல் செய்யப் புறப்பட்ட வதந்தி தான் இது என்றும் கருத்து இருக்கிறது.. ஆனால் என் மனத்தில் இருந்து அஜித்தும்,அர்ஜுனும் சரிந்துவிட்டனர்.

அஜித்,அர்ஜுன் ஆகிய இருவரின் படங்களும் இனி இலங்கையிலோ,இலங்கையர் அதிகமாக வாழும் வெளிநாடுகளிலோ திரையிடப் பட்டால் நல்லபடி ஓடுமா என்பது சந்தேகம் தான்..இலங்கையில் இன்று முதல் நாளே ஏகன் திரைப்படத்துக்கு பெரிதாக கூட்டமே இல்லை.அஜித்தை திட்டி,வசை பாடி sms,மின்னஞ்சல்கள்,facebookஇல் தகவல்கள் பரவி வருகின்றன. நாளையே யாராவது திரையரங்கைக் கிழித்தாலும் ஆச்சரியம் இல்லை.

மறுபக்கம் இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ராவ்ப் ஹாக்கிம் இந்திய அரசின் தலைய்யீட்டை எதிர்த்தும்,மறுபக்கம் தமிழகத் தமிழர்,குறிப்பாக தமிழக அரசு இலங்கையிலுள்ள முஸ்லிம்களுக்காக் குரல் கொடுக்கவில்லை என்றும் சாடியுள்ளார்.இலங்கை விஷயத்தை இலங்கையே பார்த்துக் கொள்ளும் என்று அறிக்கை விட்டுள்ளார் அவர். (அரச விசுவாசம் போலும்.. இவ்வளவு நாள் அவர் என்ன செய்தார் என்று நம்ம நண்பர் ஒருவர் கேட்கிறார்) 

இரண்டிலும் ஒரு குழப்பம் நிலவி வருவதோடு இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் தாம் பேசும் பாஷையை வைத்துக் கொண்டே தமது இனத்தை தீர்மானிப்பத்துடன்,இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் தம்மை ஒரு மதம் சார்ந்த இனம் என்று கருதப்பட வேண்டும் எனக் கோருவதும்,அவ்வாறே வாழ்வதும் இங்கு வித்தியாசமானது..

இனி முதலாம் திகதி யார் யார் வருவர் என்று நம்மவர்கள் காத்திருப்பர்.. அதற்கு முதல் 28ஆம் திகதி என்ன நடக்கும் என்று நான் பார்த்திருப்பேன்.

ஆனால் தினம் தினம் மாறிவரும் தமிழக ,இந்திய சூழ்நிலையில் நான் யாரையும் எதிர்பார்கப் போவதுமில்லை;இந்தியாவின் அரசை நம்பப் போவதும் இல்லை;என்ன நடந்தாலும் ஆச்சரியப் படப் போவதுமில்லை!

11 comments:

கொழுவி said...

தெளிந்தமைக்கு வாழ்த்துக்கள்.

தங்கட கொல்லைப் புற முற்றத்தில் தங்களைத் தவிர சீனா பாகிஸ்தான் நாடுகள் விளையாடுவதை பொறுக்க முடியாது என பிரணாப்முகர்ஜி சொல்லியிருக்கார்..

அடிச்சு வௌயாடுங்கடே...

Keddavan said...

எல்லாவற்றைப்பற்றியும் தெளிவாக விளக்கியுள்ளீர்கள் லோசன்..அனேகமான கொழும்பில் வசிக்கும் தமழரின் மனநிலையை உங்கள் எழுத்துக்கள் பிரதிபலிக்கின்றன்..எதிர்பார்ப்புக்களும் ஏமாற்றங்களும் தான் மிச்சமாக இருக்கின்றன..

ஆதிரை said...

லோஷன் அண்ணா,
உண்மையிலேயே அண்மையில் அரங்கேறும் நிகழ்வுகள் அனைத்தும் ஆச்சரியங்கள், கவலைகள், அனுதாபங்கள்... நிறைந்த தொடர்களாகவே காணப்படுகின்றன. இப்போது, இந்திய நாட்டிலிருந்து ஈழத்தமிழர்களை நோக்கி நீளும் கரங்கள் உண்மையில் தமிழர்களை மீட்டெடுப்பதற்காகவா? அல்லது, தன்னல அரசியல் சார்ந்ததா? என ஜெயலலிதாவின் குத்துக்கரணமும் அவரின் அண்மைய அறிக்கைகளும் சிந்திக்க வைத்துவிட்டன என்பதை மிகவும் கவலை தோய்ந்த முகத்துடன் பலரும் பகிர்கின்றனர்.

தமிழகத்தலைவர்கள் மற்றும் ஈழத்தமிழர்கள் தொடர்பாக நீங்கள் மேற்கொண்ட சிறிய கருத்துக்கணிப்பின் போது, உங்களுக்கு தனிப்பட்ட மடலிலும் பின்னர் அது தொடர்பான பதிவிலும் முதல்வர் கருணாநிதி தொடர்பாக கடுமையாக சாடியிருந்த நான் பின்னர் தமிழகம், இந்தியா சார்பான உங்கள் பதிவுகளில் வாசிப்பவனாக மட்டும் என்னை மாற்றிக் கொண்டதற்கு காரணம் கருணாநிதி ஈழத்தமிழர்கள் சார்பாக தன்னிலைப்பாட்டினை மாற்றி, நான் இன்றைக்கும் சோரம் போகாத்தமிழனாகவே உள்ளேன் என்பதை நிரூபித்தமையே ஆகும். இந்த நிரூபணம் 'கருணாநிதியா இப்படி?'என எல்லாரையும் போலவே என் புருவங்களையும் உயர்த்தியது. என் அடிமனம் பல சந்தேகங்களையும், எதிர்க்கருத்துக்களையும் கிளப்பினாலும் மெல்லவுமின்றி விழுங்கவுமின்றி 28வரை காத்துக்கிடப்பது என்று இருந்தேன்.

ஆனால், தொடர்ந்து வந்த அறிக்கைகளும், தமிழகம் பூண்ட எழுச்சியும், இராஜினாமாக்கடிதங்களும் அதை தொடர்ந்து மானிட சங்கிலிப் போராட்டங்களும் கண்டு நாணிக்குறுகி என் சந்தேக மனத்தை எனக்குள்ளேயே காறித் துப்பி விட்டு மனப்புளகாங்கிதம் அடையும் வேளையில்தான்... வைகோ கைது, சீமானுடன் அமீர் சிறையடைப்பு போன்ற செய்திகள் திரும்பவும் எல்லாம் பூச்சியத்தில் போய் மையம் கொண்டிடுமா என ஒரு ஏக்கம் பிறக்கிறது.

28ம் திகதி என்ன நடக்கப் போகின்றது? நொண்டிச்சாட்டுக்களா? அல்லது, கொண்டது விடா உறுதியா? வன்னிக்காட்டு மரத்தின் தூளியில் ஆடும் குழந்தையும் எதிர் பார்த்துக் காத்திருக்கின்றது... அம்மாவை அல்ல... ஐயா உங்களைத்தான்!

Anonymous said...

அன்புடன் லோசன் அண்ணாவிற்கு! பட்ட பிறகு தான் புத்தி தெளியும் என்றால் நாம் என்ன செய்ய முடியும்? நான் இலங்கையில் வசிக்கும் போது (சுமார் இரு வருடங்களுக்கு முன்னர்) தல பற்றி அதிகப் பிரசங்கம் செய்தவர்களும், அட்டகாசமாய் நிகழ்ச்சித் தலைப்பிட்டு வலம் வந்தோரையும் மறக்க முடியாது. அவர்களுக்கு தல தமிழ் மக்களின் விடுதலை பற்றிக் கொடுக்கும் விலை என்ன என்பது இப்போது புலப்பட்டிருக்கும். சோழியன் குடுமி சும்மா ஆடாது. நாங்கள் நாங்களே எமது தல விதியைத் தீர்மானிப்பது நன்மை பயக்கும். தலைக்கு தன் படத்துக்கு விலை மட்டும் தான் வேணும். மற்றும் படி அவருக்கு இலங்கைத் தமிழர் விடுதலைக்கு விலை ஏதும் வேண்டாம் என்று ஒதுங்கியிருப்பார். ஏமாறுவோர் இருக்கும் வரை ஏமாற்றுவோரும் இருப்பார்.
ஏகன் இலங்கையில் வெள்ளிவிழாக் காணுமா??????????

அருண்மொழிவர்மன் said...

hi loshan

i am high much affected by certain views of this topic. i am also involved in blogging under the address of http://solvathellamunmai.blogspot.com/

in top of this i was in a class mate of krishna, and theepan (pilly)

addition to this, ur fathe ( mr. bala sritharan, i heard he workend in bank of ceylon) is a college of my father ( mr. sirinivasan)


loshan.... i would like to share certain things over the phone.....



so could u please send me ur phone number to
sutharshan@hotmail.com

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

வேதனையான உண்மைகளை நாம் தொடர்ந்து மறைத்துவைத்து எதை கண்டுகொண்டோம். ஒன்றும் இல்லை. அதை வெளிப்படையாகப் பதிவு செய்கிறீர்கள். நன்றி!

Anonymous said...

உண்மையில் தலைசுற்றி மயக்கமே வருது.... இலங்கை செய்திகளை பார்க்கும் போது.....
தமிழனுக்கு மட்டும் ஏன் இந்த அவலமோ தரியவில்லை.

எல்லாத்துக்கும் முக்கிய காரணம் ஒற்றுமையின்மைதான் வேறொன்னுமில்லை.

அதப்பத்திதான் நானும் அந்த குறுந்தகடுன்னு எழுதியிருக்கேன் நேரம் கிடைத்து தலைவலியும் குறைந்தால் போய் பாருங்க

kuma36 said...

நீண்ட நாட்களாக நான் அஜித்தின் தீவிர ரசிகனாக இருந்தேன், இக்கேடுக்கு தல என்று செல்லப்பெயர் வேற. ரொம்பவே ஆர்வமாக இருந்தேன் ஏகன் படத்தை பார்க்க, 24.10.2008 வெப் சைடில் செய்தியை பார்த்தவுடன் மனசு விட்டுப்போச்சி. இனி எந்த நடிகனுக்கும் ரசிகனாக இருக்க கூடாது என்று முடிவுப்பன்னிடேன். அதோடு நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து முடிவு பண்ணிட்டோம் ஏகன் படத்தை பார்ப்பதில்லை என்று.

அஜித், அர்ஜுன் ஆகியோரின் மறுப்பு செய்திகள் எந்தளவு உண்மை என்று தெரியவில்லை, உண்மையாக இருந்தாலும் கூட இனி எந்த நடிகனுக்கும் ரசிகனாய் மட்டும் இருக்க இருக்க்க போவதில்லை.
http://www.ajithfans.com/blog/2008/10/26/ajith-clarifies-on-sri-lankan-issue-videos/

"நிஜமாகவே நடிகர்கள் எல்லாம் நல்ல, நடிகர்கள்"

//அஜித் சொன்னாரா சொல்லவில்லையா என்று நான் ஆராயமாட்டேன்.. ஆனால் நெருப்பிலாமல் புகையாது என்பது ஒரு பக்கம் இருக்க,ராமேஸ்வரத்தில் வைத்து இயக்குநர் சேரன் விஜயைத் தாக்கிப் பேசியதால் அஜித்‌தின் புதிய திரைப்படம் ஏகனை ஓட விடாமல் செய்யப் புறப்பட்ட வதந்தி தான் இது என்றும் கருத்து இருக்கிறது.. ஆனால் என் மனத்தில் இருந்து அஜித்தும்,அர்ஜுனும் சரிந்துவிட்டனர்//
"தமிழனாய் பிறந்தோம், தமிழனாய் வாழ்வோம், தமிழனாய் மடிவோம்."

Anonymous said...

தெளிவான கருத்துக்கள்..

Anonymous said...

இப்ப தல வலி சுகமா லோஷன்?
(joke)

சுரேஷ் (அறுப்பான்)

Anonymous said...

லோஷன் உங்கட தலைவலி
இங்கு ‘தல’ சொல்லித்திரியும்
தறுதலைக்கு புரியும் என்று நினைக்கிறீர்கள்.
தமிழன் தலை விதியே
தானை தலைவனிடமல்லவா இருக்கிறது.

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner