October 19, 2008

இந்தியா உனக்கே இது நியாயமா?

ஒரு பக்கம் ராமேசுவரத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு தமது ஆதரவைத் தெரிவிக்கவும்,இராணுவத் தாக்குதல்களை நிறுத்துமாறு இலங்கை அரசை வற்புறுத்த இந்திய அரசைக் கோரவும் சினிமாக் கலைஞர்கள் ஆர்ப்பாட்டம்; மறுபக்கம் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜீனாமாக் கடிதங்களைக் கலைஞரிடம் கையளிப்பு என்ற செய்திகள் இலங்கைத் தமிழருக்குக் கொஞ்சமாவது நம்பிக்கை தந்து கொண்டிருக்க,நேற்று எங்கள் வெற்றி இரவு செய்தியறிக்கையில் நான் வாசித்த செய்தி ....

இலங்கைக்கு இராணுவ ரீதியாக உதவுவது குறித்து இந்திய அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளதால், இராணுவ உதவிகளை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என இந்திய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இந்தியாவின் பலத்தை விரிவுப்படுத்தவும், பாதுகாப்பை அதிகரிக்கவும் இலங்கைக்கு இராணுவ ரீதியான உதவிகளை வழங்குவதன் மூலம் தாம் எதிர்பார்த்துள்ளதாகவும் இந்திய பாதுகாப்பு துணையமைச்சர் எம்.எம். பல்லம் ராஜூ தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற ஊடவியலாளர் மாநாடு ஒன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு வழங்கும் இராணுவ உதவிகளை நிறுத்துமாறு தமிழக தலைவர்கள் கோருவது அடிப்படையற்றது எனவும் இலங்கைக்கு இராணுவ உதவி வழங்குவதன் மூலம் இலங்கையில் உள்ள தமிழ்மக்களுக்கு சேதத்தை ஏற்படுத்துவது இந்திய அரசாங்கத்தின் நோக்கம் அல்ல எனவும் பல்லம் ராஜூ குறிப்பிட்டுள்ளார்.
ரேடார் உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான தளபாடங்களை இந்தியா தொடர்ந்தும் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இந்திய பாதுகாப்பு இணையமைச்சர் பல்லம் ராஜீ கூறியுள்ளார்.

இதன் மூலம் இந்தியா என்ன சொல்ல விழைகிறது?

தமிழ்நாட்டில் நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்துவிட்டுப் போங்கள்;நாங்கள் நினைத்ததை தான் செய்வோம்..
அப்படியா?
உங்கள் மத்திய அரசைத் தாங்கி நிற்கும் ஒரு தூண் கலைஞரின் திமுக ஆதரவு மன்மோகனுக்குத் தேவை இல்லையா?இல்லாவிட்டால் திமுக சும்மா பயம் காட்டிவிட்டு மீண்டும் தங்கள் காலைக் கட்டிக் கொள்வார்கள் என்று நினைக்கின்றதா?
தமிழகத் தமிழரின் குரல் ஒரு பொருட்டே இல்லையா?
இலங்கைத் தமிழர் எக்கேடு கெட்டாலும் மகிந்தவின் ஸ்ரீ லங்க அரசின் ஆதரவும்,நட்பும் தான் முக்கியம் என்று பகிரங்கமாக இந்திய அரசு அறிவிக்கிறதா?
பங்களாதேஷூக்கு ஒரு நீதி,ஈழத்துக்கு இன்னுமொரு நீதியா?
இரண்டு சந்தர்ப்பங்களிலும் பாகிஸ்தானின் சம்பந்த அளவு தான் இந்தியத் தலையீட்டைத் தீர்மானிக்கிறதா?

கருணாநிதியின் இரு வார காலக் கெடுவுக்கு இது தான் இந்திய மத்திய அரசு கொடுத்துள்ள பதிலா?
அண்மைக்காலமாக மன்மோகன் சிங் , இலங்கை ஜனாதிபதிக்கு தொலைபேசி மூலமாக இலங்கைத் தமிழர் மீது அக்கறை காட்டுமாறு சொன்னவுடன் அவரது கடமை முடிந்துவிட்டது என நினைத்தாரா?இல்லை அதுவும் வெறும் கண் துடைப்பு தானா?
இலங்கையில்,வன்னியில் அப்பாவி மக்களைக் கொன்றொழிக்க ஆயுதங்கள் தொடர்ந்து இந்திய அரசு வழங்குவது இந்திய அரசின் பாதுகாப்புக்காகவுமாம்.. நகைச்சுவையாக இல்லை?

கலைஞர்,தமிழக அரசியல் கட்சிகள்,திரைப்பட நட்சத்திரங்கள்,பத்திரிகைகள்,பெரும்பாலான மக்கள் ஒன்றிணைந்து கொடுக்கும் குரல் இன்னும் மத்திய அரசின் காதுகளுக்கு எட்டவில்லையா?
இது புலிகளுக்காக கொடுக்கப்படும் குரல் அல்ல என்று இன்னும் புரியவில்லையா?
இப்போது உதவாத இந்தியா இனி எப்போது உதவும்?
1987இல் தேடிக்கொண்ட பாவத்தைக் கழுவும் வாய்ப்பை இப்போதும் தவற விட்டு விட்டதே?
நான் எனது முன்னைய பதிவில் எழுப்பிய சந்தேகம் உண்மையாகி விட்டதே..

இந்தியா உனக்கே இது நியாயமா?

25 comments:

Anonymous said...

எப்போது விடியும்...

kuma36 said...
This comment has been removed by the author.
kuma36 said...

என்னதான் நடக்கும் நடக்கடடுமே இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னலே வெளிவரும் கலங்காதே ஒரு தலைவன் இருக்கிறான் தயங்காதே
என்ற பாடலை நினைவுப்படுத்தி,
தர்மம் தன்னை சூது கவ்வும் தர்மம்மது மறுப்படியும் வெல்லும் என்ற நம்பிக்கையில்.......................

"தமிழரின் குரல் ஒரு பொருட்டே இல்லையா? "

கார்க்கிபவா said...

so called தமிழனத்தலைவர் என்ன புடுங்கப் போறாருனு பார்ப்போம்..

Unknown said...

Ayya,

Radar and other equipments will be given till LTTE is completely eradicated.If Prabaharan has real intention to save eelam tamils, he should come and surrender. All these hue and cry is because LTTE is close to elimination

ARV Loshan said...

Dear Stanjoe,
we have clearly stated that innocent tamils are the ones affected by this war.You dont need to help LTTE, but India should take care of Tamils.. pl understand that.

Unknown said...

Dear Loshan,

I am asking innocent tamils only. If they can all gather together why they can not kill Prabaharan who is hiding behind them and exposing innocent tamill eelam people to military. Its high time they start revolt against LTTE otherwise I feel they also will be eliminated along with LTTE

ARV Loshan said...

stanjoe,

i think u have to get to know more about sri lankan tamils and their history of struggle for survival in sri lanka..

please read more and understand the real situation.

Unknown said...

Loshan,

I have read well and I know the complete circumstances and issues surrounding Tamil eelam people.Can you deny my allegations that LTTE is using eelam tamil people as shields.? and can you deny that state of tamil eelam people now is because of LTTE.?

ARV Loshan said...

i m not here to defend LTTE or criticize them,but to the fact because of LTTE only still the Tamils in Sri lanka are existing.the word Tamil Eelam is here only because of them remember.
if the LTTE is hiding behind the people how come majority (if not all) Tamils ,in Sri lanka and abroad are still supporting them?

if u r still adamant like Madam J please read other blogs by sri lankan about the war..

Unknown said...

//because of LTTE only still the Tamils in Sri lanka are existing//

Thats how LTTE has made it.What happened to EPRLF and TELO and other brotherly groups.?

////because of LTTE only still the Tamils in Sri lanka are existing//

Also This is the only reason India is not able to help tamils in Srilanka . You should know that LTTE are India's enemys, then how can India support people who support thier enemys. They can only support people who fight against thier enemys.

Unknown said...

Stan, ஒரே மேட்டர சுருதி பிசகாம எத்தன பதிவில தான் சொல்லி திரிவீங்க? எவ்வளவு தான் எடுத்து சொன்னாலும் காதுல வாங்காம பழய குருடி கதவ திறடின்னு நீங்க சொல்லுற ஒரே சொத்த வாதம் கடுப்பா இருக்கு.புதுசா ஏதாவது எடுபடுற மாதிரி ட்ரை பண்ணலாமே?
லோஷன்,
இவரிடம் வாதிடுவது வீண் வேலை. நிறைய பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுவார். வேண்டுமானால் மதிபாலா பதிவுகளில் check செய்து கொள்ளவும். Just ignore this lier.

Unknown said...

http://sivasinnapodi1955.blogspot.com/

இந்தியா உனக்கே இது நியாயமா?

Unknown said...

Xavier,

Have you ever replied to the questions asked by me.?

You will not answer, I know you can not answer.

Please answer my questions I ahve asked you in mathibala's amd other posts then we shall discuss.

In this post I have tried to answer loshan's question on why India is not helping tamil eelam people.

Unknown said...

Dear Tamils Please read this.

காந்தி தேசத்தின் மறு பக்கம்
http://sivasinnapodi1955.blogspot.com/

Anonymous said...

Urge LTTE to free Tamil civilians - TULF leader tells TN
The Tamil United Liberation Front has appealed to governing officials in the Tamil Nadu (TN) to exert pressure on the LTTE to set free those Tamil civilians trapped in Kilinochchi so that they may go anywhere they want to.

The moment the LTTE opens its iron gate the displaced persons will move out in no time and get back to their respective homes, the president of TULF V.Anandasangaree has said in a letter addressed to Tamil Nadu, titled Appeal to the leaders of Political Parties and the People of Tamil Nadu.

The TULF President has said that if Tamil Nadu has any sympathy for the Tamil people who are suffering under the subjugation of the LTTE, it has a moral obligation to win them (the Tamil public) the fundamental right of being able to choose the place they wish to live.

In this war situation people who are living with fear and tension in Killinochchi should be rescued by Tamil Nadu by pressurizing the LTTE, compelling them to set the Tamil public trapped in their areas free , the letter said. .

The time has come for the leaders in Tamil Nadu to forget their differences and come together to help liberate the Tamils who have lost their rights, properties and self respect. The immediate task should be to save the innocent people who have been trapped in Killinochchi with no freedom to move out, the letter said.

It read: For more than quarter of a century the LTTE had taken Tamil people for a ride. The Tamils need liberation only from the LTTE. The government had already liberated large areas from the LTTE , the East in full and in the North well over 75 percent. Now only a small area is left.

It is here all the displaced persons from Mannar Mullaitivu, Killinochchi and Vavuniya are driven into. The LTTE had brought them here under compulsion for their own protection. They are now using them as a human shield.

Sangaree has said in his letter that he was shocked at the terminology used to describe the situation in Sri Lanka. The charge of the LTTE that the Government of Sri Lanka is engaged in genocide is a big farce, the letter said.

More than 50 percent of the Tamil people now live among the Sinhalese and Muslims. Most of them had fled from LTTE controlled areas. LTTE's repeated attempts to provoke a backlash in the Sinhalese areas had failed.

All their claymore mine attacks in the Sinhalese areas, targeting service personnel and civilians are done to spark off communal riots. Hardly one such incident takes place without taking a few civilian lives. There has not been any attempt as such to exterminate anyone deliberately or otherwise. A few deaths had taken place in the war zone but this cannot in anyway be classified as Genocide.

The dispute in the country is not between any ethnic groups. It relates only to the rights and privileges one is entitled to and can be sorted out at the negotiating table. If the LTTE gives up its demand for separation and agree to lay down their arms we will help them to play an important role in negotiations.

Everyone in India, in Sri Lanka and even in many parts of the world, know fully well that creation of a separate state of Eelam is an impossible task. The Indian government is vehemently opposed to it and so is the International community.

The only option available is to agitate for a federal solution with the only one alternative of adopting the Indian model to enable the various regions in Sri Lanka to enjoy powers equivalent to those presently enjoyed by various states in India including Tamil Nadu. We appreciate the bold stand taken by Dr. Selvi Jeyalalitha Jeyaram in dealing with the LTTE as a terrorist Organization and also for pledging full support in all other matters that could alleviate the present plight of the Sri Lankan Tamils.

It is my frank opinion that some leaders and many people in Tamil Nadu had been misled over a period of several years, by exaggerated, false and fabricated stories spread at random by some interested parties, to boost the LTTE.

But there are very eminent leaders in Tamil Nadu who can recommend a reasonable and acceptable solution for the ethnic problem within a United Sri Lanka. Unfortunately these sources had not been properly tapped due to the LTTE's unyielding stand and constant demand for separation.

I appealed to various authorities such as the Secretary General of the United Nations, Heads of various States, Heads of Diplomatic Missions, Heads of various Religions and such others to intervene and help to liberate the Tamil People, whom the LTTE was keeping under their subjugation for many years in areas under their control.

These people hardly enjoyed any democratic or fundamental rights. Their human rights had been violated beyond ones imagination. The recruitments to their cadre under compulsion went on unabated. They did not spare even elders from under-going some sort of training.

Of the people abducted the whereabouts of many are not known. They have torture camps and dark -room chambers with methods of torture unheard of in any civilised society.

The outside world does not know what is happening in the LTTE held areas, popularly known as an Iron Curtain area. I hope the TNA members of Parliament who are now in Tamil Nadu, taking part in demonstrations and Sathyagrahas will confirm this accusation of mine and also endorse my demand that the Tamil People under the subjugation of the LTTE should be liberated from them.

Inciting speeches in Tamil Nadu by the Sri Lankan Members of Parliament of the Tamil National Alliance should be discouraged. Allowing it will cause great embarrassment to the Sri Lankan Tamils more than half of whom live in harmony in the South with the Sinhalese and the Muslims.

The TNA members of Parliament who were elected fraudulently with the fire power of the LTTE, only act as proxies of the LTTE and not as elected representatives of Tamil people.

The Number of Tamil politicians academics principals of schools business people ex-members of other groups killed by the LTTE amount to several thousands. As a comparison not a single person under this category had been killed during this long period of conflict by any Sinhalese.

Black July 1983 incident is perhaps the last communal riots the country faced. For that too the LTTE was partly responsible by causing the death of 13 Sinhalese soldiers. Even in this incident it was the hoodlums who were involved in murders and arson. The Sinhalese civilians were responsible for saving hundreds of thousands of Tamils who lived among them.

The Tamils in Sri Lanka remember with gratitude the immense services rendered for the Tamil cause by people like the late Indira Gandhi, the late Rajiv Gandhi and such others. We are also grateful to two great leaders of Tamil Nadu the late Dr. M.G.Ramachandran and Dr. Kalignar Karunanidhi.

We also appreciate the bold stand taken by Dr. Selvi Jeyalalitha Jeyaram in dealing with the LTTE as a terrorist Organisation and also for pledging full support in all other matters that could alleviate the present plight of the Sri Lankan Tamils."

ARV Loshan said...

நன்றி Xavier. நான் அந்தப் பக்கம் முதலிலேயே வாசித்திருக்கிறேன்..

ARV Loshan said...

Dear Anonimus,
tamils know who is TULF leader now and wat was he asking Mahinda..
(Northern province governor post , National list MP post, ambassador post in an European country n etc,)

he s good in english.. now he is with a party which has only name but no members in it.. ;)

Anonymous said...

எனது நாட்டில் பயங்கரவாதத்திற்கு இடமே இல்லை - ஜனாதிபதி.: கழுதை தேய்ந்து கட்டெறும்பான நிலையில் பிரபாகரன்.

கடந்த வாரம் அல்-ஜசீரா தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது அரசு உட்பட இலங்கையை ஆட்சி செய்த சகல அரசுகளும் புலிகள் இயக்கத்தை ஜனநாயக வழிக்கு கொண்டுவர பல பிரயத்தனங்களை மேற்கொண்ட போதும் அவர்கள் அதற்கு எந்த காலகட்டத்திலும் இணங்கவில்லை என்றும் இலங்கையில் எதிர்வரும் காலங்களில் பயங்கரவாதத்திற்கு இடம் இல்லை என்றும் இலங்கைத்தீவில் புரையோடிப்போய் இருக்கும் இனப்பிரச்சினைக்கு இறுதி தீர்வு அரசியல் தீர்வே என்றும் அது பயங்கரவாதம் ஒழிக்கப்படும் சமநேரத்தில் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதன் மறுபுறத்தில் இன்று இந்திய தமிழ் நாட்டு அரசியல் வாதிகளில் ஒருபகுதியினர் இலங்கைப் பிரச்சினையில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு அழுத்தங்களை பிரயோகிக்கும் முகமாக பல்வேறுபட்ட போராட்டங்களிலும் ஒன்று கூடல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இவ்விடயங்களில் தமிழ் மக்களுக்கு கிடைக்கப் போவது என்ன? என்ற கேள்விக்கு பதில், ஒன்றும் இல்லை என்றே வருகின்றது. ஆக செய்வதறியாது திகைப்படைந்து நிற்கும் பாமர மக்கள் ஏமாற்றப் படுகின்றார்கள் என்பது ஒன்று மட்டுமே உண்மை. இந்தியாவிலே பாரிய போராட்டங்கள் இடம் பெறுகின்றன, தமிழ்நாட்டு அரசு, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கின்றது. அன்று போல் இலங்கையின் இறையாண்மையை மீறி இந்திய அரசு இலங்கையின் எல்லையினுள் நுழைந்து எமக்கு சாப்பாட்டுபார்சல் தன்னும் போடும் என எதிர்பார்க்கும் மக்கள் ஏமாற்றமடைய இருக்கின்றார்கள்.

ஜெயலலிதா பூரண எதிர்ப்பு!

இங்கு தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் என்று கூறும் போது அங்கு தனக்கென ஓர் தனி இடத்தை வைத்துக்கொண்டுள்ள அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைவி செல்வி. ஜெயலலிதா, இந்திய பிரதமரை படுகொலை செய்த குற்றத்திற்காக பயங்கரவாத இயக்கம் என தடைசெய்யப்பட்டுள்ள இயக்கத்தினது தலைவரும் இந்தியாவின் அதியுயர் மதிப்புக்குரிய உயர் நீதிமன்றத்தினால் குற்றாவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ள முதல்தர பயங்கரவாதியுமாகிய பிரபாகரனது யுத்தத்தை எந்த விதத்திலும் ஆதரிக்க முடியாதென்றும் இங்குள்ள அரசியல்வாதிகள் பிரபாகரனக்கு ஆதரவாக செயல்படுவார்களேயானால், அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தபட்டு தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றும் மறுபுறத்தில் அங்கு தமிழர்கள் அனாவசியாமான முறையில் பாதிப்புகளுக்கு உள்ளாவது கவலை தருகின்றது என்றும், தமிழ் மக்களைக் காப்பாற்ற வேண்டியது எமது கடமை என்றும் அதேநேரம் பயங்கரவாதத்திற்கு துணைபோவது உசிதமானதல்ல என்றும் தனது தீர்க்கமான முடிவை வெளிப்படையாக கூறியுள்ளார்.

இலங்கைப் பிரச்சினையில் இந்தியா தலையிட வேண்டும் என தமிழக அரசு மத்திய அரசுக்கு நிபந்தனை விதித்துள்ள நிலையில் கருத்து தெரிவித்துள்ள மத்திய அரசின் முக்கிய அமைச்சர்கள் இலங்கை ஒர் இறையாண்மை உள்ள நாடு என்பதை மட்டும் தமிழக அரசு மறந்து விடக்கூடாது என கூறியிருப்பதானது தமிழக அரசுக்கான ஒரு சொல்லில் பதிலாகவே அமைந்துள்ளது. (One word Answer) அதாவது இலங்கை என்பது ஓர் இறையாண்மை உள்ள நாடு அவர்களது உள்வீட்டு விவகாரத்தில் இந்திய மத்திய அரசுக்கு தலையிட எந்த அதிகாரமும் கிடையாது. அந்த வகையில் தமிழக அரசினது நாடகங்களுக்காக நாம் எமது எல்லையை மீறி பிறிதொரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட முடியாது என்பதே அவர் கூறியுள்ள கருத்தாகும்.

இலங்கையின் இறையாண்மையில் பிறர் தலையிட முடியாது என்பதையே தமிழ்ச்செல்வனும் கூறியிருந்தார்.

இந்த இடத்தில் அன்றைய புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளரான தமிழச்செல்வன் அவர்கள் புலிகளியக்கத்தை ஐரோப்பிய யூனியன் தடை செய்ய முயன்ற போது "எம்மைத் தடை செய்ய ஐரோப்பிய யூனியனுக்கு என்ன அதிகாரம் இருக்கின்றது" என கேட்டிருந்த அந்த கேள்வியை எடுத்து நோக்குவோம். அந்த இடத்தில் இருந்து நாம் சிந்திப்போமாக இருந்தால் அன்று அவர் எதைக் கூறியிருந்தார்? இலங்கை ஓர் இறைமையுள்ள நாடு. தனி இறைமையுள்ள ஒர் நாட்டின் பிரஜைகள் நாம். இங்கே ஓர் உள்நாட்டு போர் இடம்பெறுகின்றது. நாம் பயங்கரவாத செயல்பாடுகளை இந்த நாட்டில் மேற்கொள்ளலாம். அது எமக்கும் எமது அரசிற்கும் இடையேயான பிணக்கு. நாம் எமது நாட்டிலே மேற்கொள்கின்ற தீண்டத்தகாத நடவடிக்கைகளுக்கு எமது அரசே எம்மைத் தண்டிக்க முடியும் இது ஏனைய நாடுகளுக்கு அப்பாற்பட்ட விடயம். அவ்வாறு அவர்கள் தங்களது மூக்கை இங்கு நுழைக்கும் போது அது இலங்கையினுடைய இறைமையை மீறுகின்ற செயலாகும் என்பதே அவர் கூறிய கருத்தாகும் என ஐரோப்பிய ஒன்றியத்தை எச்சரித்திருந்தார்.

தமிழக அரசியல்வாதிகளின் எதிர்வரும் தேர்தலை ஒட்டிய நாடகம்.

இன்று தமிழக அரசியல்வாதிகள் எதிர்வரும் தேர்தலில் இந்திய பாமர மக்களின் வாக்குகளைக் கொள்ளையடிப்பற்காக இலங்கை பிரச்சினையை துருப்புச் சீட்டாக எடுக்க முனைவது இங்குள்ள மக்களை மேலும் சிக்கலுக்குள் தள்ளும். காரணம் புலிகளின் சகல நயவஞ்சகத்தனங்களையும் உணர்ந்தவர்களாக புலிகளின் இரும்புப் பிடியில் உள்ள மக்கள் புலிகளின் கொடூரங்களில் இருந்து விடுபடுவதற்கான நாட்களை எண்ணிக் கொண்டிருப்பதுடன் தொடர்ச்சியாக அம்மக்கள் இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசங்களை நோக்கி நகர்ந்து வருகின்றனர்.

புலிகள் தனிமைப் படுத்தப்படுவது நிச்சயமானதாகி விட்டநிலையில் புலிகளின் ஆயுத பலத்தால் பாரளுமன்ற ஆசனங்களை பெற்றுக்கொண்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு என தம்மைக் கூறிக்கொள்வோர் தமது இருப்பை தக்க வைத்தக் கொள்ளும் நோக்குடன் புலிகளை காப்பாற்ற எடுக்கும் முயற்ச்சி இந்திய அரசியல்வாதிகளை பிழையான வழிக்கு இழுத்துச் செல்கின்றது. இந்திய அரசியல்வாதிகள் தமிழீழ விடுதலைப் புலிகளினதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என தம்மைக் கூறிக்கொள்வோரினதும் சுய ரூபங்களை புரிந்து கொள்ள எத்தனிக்க வேண்டும்.

புலிகள் பேச்சுவார்த்தை மேசையில் இருந்து திட்டமிட்டே வெளியேறினார்கள்.

புலிகள் காலம் காலமாக தமிழ் மக்களுக்கு கிடைக்க இருந்த அனைத்து தீர்வுகளையும் புறக்கணித்து வந்தது மட்டுமல்ல தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வின் ஓர் அரிய சந்தர்ப்பமாக அமைந்திருக்கக் கூடிய இலங்கை இந்திய ஒப்பந்தத்தை, அதனூடாக உருவாக்கப்பட்ட இணைந்த வட-கிழக்கு மாகாண சபையை தமது ஆயத பலம் கொண்டு கலைத்தெறிந்தார்கள். இலங்கை அரசு பேச்சுக்கு அழைத்திருந்த காலகட்டங்களில் ஏற்றுக் கொள்ள முடியாத கோரிக்கைகளை திட்டமிட்டபடியே முன்வைத்து அவற்றில் இருந்து விலகி வந்திருக்கின்றார்கள்.

இறுதியாக இலங்கை அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் இலங்கை அரசு மிகவும் இதயசுத்தியுடன் செயல்பட்டுள்ளது என்பதற்கு நியாயமான சான்றுகள் உள்ளன. ஊதாரணத்திற்கு எடுத்து கொள்வோமேயானல் பேச்சுவார்த்தைகளில் ஓர் முடிவை எட்டியிராத போதிலும் இராணுவ முகாம்களை வாபஸ்பெறுவது மிகவும் எச்சரிக்கத்தக்க விடயமாக இருந்தும் அரசு வட-கிழக்கு பிரதேசத்தில் இருந்த பல முகாம்களை வாபஸ்பெற்றிருந்தது. பாதுகாப்பு வலயங்களாக பிரகடணப்படுத்தியிருந்த ஏராளமான கடல்பரப்பை மக்களின், மீனவர்களின் வரையறையற்ற பாவனைக்கு அனுமதி வழங்கியிருந்தது. கட்டம் கட்டமாக புலியுறுப்பினர்களை அரச கட்டுப்பாட்டு பிரதேசங்களினுள் நுழைய அனுமதி வழங்கியிருந்தது. இவை யாவும் முற்றிலும் இராணுவத்தினருக்கு அச்சுறத்தலான விடயமாக இருந்த போதிலும் அரசு விட்டுக்கொடுப்புகளுக்கு தயாராகவே இருந்து வந்தது. மறுபுறத்தில் சமஸ்டி முறையிலான தீர்வொன்றிற்கு உடன் பட்டிருந்த அரசு அமைப்பொன்றை நிறுவியதுடன் புலிகள் அவ்நிறுவனத்தினூடாக பல வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்தும் நேரடியாக நிதியுதவியைப் பெற அனுமதியையும் வழங்கியிருந்ததுடன் ஏகப்பட்ட விட்டுக்கொடுப்புகளுக்கு இணங்கியிருந்தது.

ஆனால் புலிகள் மக்களின் தேவைகளில் அக்கறை கொள்ளாமல் தமது இராணுவ பலத்தை பெருக்குவதிலேயே முனைப்புடன் செயல்ப்பட்டார்கள். மீனவர்களின் மக்களின் நடமாட்டத்திற்காக அரசு விலக்கிக் கொண்ட பாதுகாப்பு வலயங்களின் ஊடாக ஆயத தளபாடங்களையும் வெடிமருந்துகளையும் கொண்டு வந்து குவித்ததுடன் அரசினால் ஏற்றுக்கொள்ள முடியாத நிபந்தனைகளை முன்வைத்தார்கள்.

புலிகள் முன்வைத்த நிபந்தனைகளில் சிலவற்றைத் தருகின்றேன்.

1. வடகிழக்கு கடல்பரப்பில் தரையிலிருந்து 3 கிலோமீற்றர் தூரத்தினுள் புலிகளை சுயமாக ஆயதங்களுடன் நடமாட அனுமதிக்க வேண்டும்
2. வடகிழக்கின் சகல பிரதேசங்களிலும் குறிப்பாக இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிலும் புலிகளை ஆயதங்களுடன் நடமாட அனுமதிக்க வேண்டும்.
3. யாழ்ப்பாணத்தில் உள்ள ஈபிடிபி யினரை அங்கிருந்து வெளியேற்றுவதுடன் அங்கு அவ்வியக்கத்தின் செயல்ப்பாடுகளுக்க தடைவிதிக்க வேண்டும்.
4. ஏனைய இயக்கங்களின் ஆயதங்களைக் களைய வேண்டும். (இந் நிபந்தனையை அரசு நிறைவேற்றி இருந்தது.)
5. தமிழீழ விடுதலைப் புலிகளை தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக அரசு பிரகடணம் செய்ய வேண்டும்.

மேலே கூறப்பட்டுள்ள நிபந்தனைகளில் தமிழ் மக்களுக்கு கிடைக்க கூடிய தீர்வுகள் அல்லது இலாபங்கள் யாது? ஆக புலிகள் காலாகாலமா தமது இருப்பை தக்க வைத்துக் கொள்ளும் நோக்குடன் தம்மை இராணுவ ரீதியாக பலப்படுத்திக் கொள்ள முனைந்துள்ளார்களே தவிர தமிழ் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முயன்றது கிடையாது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உதயம் தமிழ் மக்களில் சுதந்திர அரசியலுக்கு விழுந்த பலத்த அடி.

கடந்த போர் நிறுத்த ஓப்பந்தத்தை தமது இராணுவத் தேவைகளுக்கு மாத்திரம் பயன்படுத்திய புலிகள் அரச கட்டுப்பாட்டு பிரதேசங்களினுள் நுழைந்து மாற்று இயக்க போராளிகளையும் அவ்விக்கத்திற்கு எதிராக தீவிரமாக செயல்ப்பட்ட இராணுவப் புலனாய்வாளர்களையும் அதன் அதிகாரிகளையும் கொண்றொழித்தார்கள். மக்களை அரசிற்கெதிரான கோஷங்களில் இறக்கினார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எனும் ஓர் போலிக் கூத்தைமைப்பை உருவாக்கினார்கள். இக் கூட்டமைப்பின் உருவாக்கமே தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு விழுந்த முதலாவது அடி எனலாம். தமிழ் மக்களின் அரசியல் சுதந்திரம் புலிகளின் ஆயுத பலத்தினுள் முடக்கப்பட்டது.

யார் இந்தக் கூட்டமைப்பினர்? எதற்காக இக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது? எவ்வாறு உருவாக்கப்பட்டது? என சற்று விரிவாகப் பார்போம். புலிகளின் தலைவர் பிரபாகரன் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதியாக இருக்கும் நோக்கத்துடனேயே ஆயுதங்களை கொண்டு மக்களை அடக்கி வைத்திருக்கின்றார். அதேநேரம் தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தையும் தனது கட்டப்பாட்டினுள் வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தமது ஆயுத பலத்தின் மூலம் மக்களின் வாக்குகளை அபகரித்து தனது கைப்பொம்மைகளை பாரளுமன்றம் அனுப்பி தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை அபகரித்துக் கொண்டார். தனது கபட நோக்கத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த சிறு குழுவிற்கு தேசியக் கூட்டமைப்பு என்றும் பெயர். இக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற ஈபிஆர்எல்எப் என்கின்ற அணியை எடுத்துக்கொள்வோம். அவ்வமைப்பு சட்டரீதியாக ஈபிடிபி யாக, ஈபிஆர்எல்எப் (நாபா அணி) ஈபிஆர்எல்எப (சுரேஸ் அணி) யாக ிளவு பட்டு அதன் ஒரு அங்கமே இன்று இந்த கூட்டமைப்புடன் புலிகளை ஆதரித்து நிற்கின்றது. தமிழர் விடுதலைக் கூட்டணியை எடுத்துக் கொள்வோமேயானால் அது இரண்டு பிரிவுகளாக பிரிந்து அதன் தலைவர் ஆனந்தசங்கரி புலிகளுக்கு எதிரான கருத்துக்களை பலமாக முன்வைத்து வருகின்றார். தமிழீழ விடுதலை இயக்கம் என்கின்ற ரெலோவை எடுத்துக் கொள்வோமேயானால் அது இரு பிரிவுகளாக செயல்ப்பட்டு வருவதுடன் இன்று புலிகளுடன் இணைந்திருந்து தம்மை ரெலோ என அடையாளப்படுத்தி கொள்ளும் சிவாஜிங்கம் செல்வம் அடைக்கலநாதன் போன்றோர் ரெலோ அமைப்பைச் சேர்ந்தவர்கள் அல்லர் எனவும் அவர்கள் புலிளால் ரெலோவினுள் புகுத்தப்பட்ட புலிகள் எனவும் அவ்வியக்கத்தின் முக்கியஸ்தர்கள் கூறிவருகின்றனர்.

மேற்படி இந்த நபர்கள் தமிழ் மக்களால் காலம் காலமாக நிராகரிக்கப்பட்டிந்தவர்கள். இவர்கள் இன்று புலிகளின் ஆயுத பலம் கொண்டு பாராளுமன்றம் சென்றுள்ளதுடன் தமக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றும் மகுடம் சூடி உள்ளனர். இவர்கள் எவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக முடியும் இக் கூட்டமைப்புக்கு வெளியே நிற்கின்ற தமிழ் அமைப்புக்களின் எண்ணிக்கையை ஒரு முறை பார்த்தால் இவர்களின் தேசியத்தில் உள்ள பாசிசம் புரியும். ஓட்டுமொத்தத்தில் புலிகளின் பாசிச செல்பாடுகளுக்கு அரசியல் அங்கீகாரம் பெறுவதற்காக ஆயுத முனையில் மக்களின் வாக்குகளை அபகரித்து பாராளுமன்றம் சென்ற இவர்கள் புலிகளின் ஆயுத கலாச்சாரம் முடிவுக்கு வரும்போது தமது அரசியல் வாழ்வும் முடிவுக்கு வரும் என்ற பயத்தினால் புலிகளைக் காப்பாற்ற இன்று தமிழக அரசியல்வாதிகளை பிழையான வழிக்கு திசை திருப்புகின்றனர்.

தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் செய்யவேண்டியது.

இலங்கைத் தீவிலே இடம் பெறுகின்ற யுத்தங்களின்போது தமிழர் தரப்பினர் மிகுந்த இழப்புகளுக்கு முகம் கொடுத்து பாதிக்கப்பட்டவர்கள் என்ற வரிசையில் முதலிடத்தில் இருக்கின்றார்கள் என்பது யாவரும் அறிந்த விடயம். ஆனால் இவ்யுத்தத்தினால் தமிழர் தரப்புக்கு மாத்திரமே பாதிப்பு என்ற விவாதத்திற்கே இடமில்லை. சிங்கள மக்கள் என்றுமே அச்சத்தில் வாழ்கின்றார்கள். தென்பகுதி பாடசாலை மாணவர்கள் குண்டுப்பீதியுடன் வாழ்கின்றார்கள், வடகிழக்கு பகுதியில் கடமையில் ஈடுபட்டுள்ள முப்படையினரதும் குடும்ப அங்கத்தவர்கள் எந்த நிமிடத்திலும் மரணச்செய்தி ஒன்று வரலாம் என்ற ஏக்கத்துடன் தமது வாழ்நாட்களைக் போக்குகின்றார்கள். எனவே இலங்கைத் தீவில் இன ஐக்யமும் சாந்தியும் சாமாதனமும் வேண்டும் என இதய சுத்தியுடன் விரும்பும் மனிதர்கள் பக்கசார்பில்லாமல் இருதரப்பினருக்கும் ஓர் தீர்வை நோக்கி நகர வேண்டி அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும்.

புலிகளது ஆயுதங்கள் என்பது சிங்கள அரசிற்கு அச்சுறுத்துலாக அமையாவிட்டாலும் அது தமிழ் மக்களின் இயல்பு வாழ்விற்கும் அரசியல் சுதந்திரத்திற்கும் அச்சுறுத்துலானது. எனவே தமிழக அரசில்வாதிகள் புலிகள் தமது ஆயதங்கைளை கைவிட வேண்டும் என அழுத்தங்களைக் கொடுப்பதுடன் இலங்கையிலே அதன் அதிபர் மகிந்த ராஜபக்சவினால் ஏற்படுத்தப்பட்டுள்ள அனைத்து கட்சி மாநாட்டில் பங்குபற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை கேட்டுக்கொள்ள வேண்டும்.

இலங்கையிலே அனைத்துக் கட்சி பிரதிநிதிகளின் செயல் வேகம் மிக குறைவாக இருந்தாலும் அதற்கான 50 விழுக்காடு பொறுப்புகள் தமிழ் கூட்டமைப்பையே சாரும். தம்மை தமிழ் தேசியக் கூட்டமைப்பு எனக் கூறிக் கொள்வோர் இவ்வமர்வுகளில் பங்கெடுக்க வேண்டும். அப்போதுதான் அங்கு என்ன விதமான தீர்வுகள் எமது மக்களுக்கு பொருத்தமானதென்பதை இவர்களால் முன்மொழிய முடியும் என்பதுடன் இலங்கை அரசு எவ்வித தீர்வையும் தமிழ் மக்களுக்கு தர முன்வராது எனும் பிரபாகரனின் மந்திரத்தை இவர்களும் ஓதுவதானது தீர்வுகளை இழுத்தடிக்க முயலும் தீய சக்கிகளுக்கு உறுதுணையாக அமையும். எனவே தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் புலிகள் மீதும் தமிழ் கூட்டமைப்பு மீதும் தகுந்த அழுத்தத்தை பிரயோகிப்பது இந்நிலையில் பொருத்தமானதாகும்.

விருகோதரன் VIII

- இலங்கைநெற்
http://www.thenee.com/html/211008-2.html

Unknown said...

//
விருகோதரன் VIII

- இலங்கைநெற்
//

Read Comments in--

http://suresh--jeevanandam.blogspot.com/2008/10/blog-post_19.html

Anonymous said...

லோசன் அண்னே, மீன்டும் நன்றிகள் நல்லதொ௫ பதிவு,வாசிப்பவரின் என்னிககையை வைத்தே சுலபமா கனிப்பிடலா பதிவின் தரத்தை....
ஆனால் சில புல்லு௫விகளுக்கு(எ௫மை மாடுகள்)இஞ்க என்ன எழுதி இ௫க்கு,இலங்கையில் என்ன நடக்கிறது,அதுவும் வன்னியில் என்ன நடக்கிறது,மற்றும் இந்தியாவில் என்ன காரனத்திற்காக இப்படியான கொந்தளிப்பு என்டு விழங்காமல் என்னமோ எல்லாம் இந்த இடத்தில் எழுதிறாங்கள்....இந்த கழுதைகளுக்கு விளங்கவில்லை யாழ்பாணத்தானுக்கு கோபம் வந்தால் என்ன நடக்கும் என்டு...லோசன் அண்னே இவங்களை எல்லாம் இங்க வர விட கூடாது...

கொழுவி said...

யாழ்பாணத்தானுக்கு கோபம் வந்தால் என்ன நடக்கும் என்டு...//

அப்பு ராசா ஒருக்கா சொல்லும் பாப்பம்.. யாழ்ப்பாணத்தானுக்கு கோபம் வந்தால் என்ன நடக்கும் எண்டு..

உங்களை 30 வருசமா அவன் அடிச்சு காயப்போட்டாலும்.. நான் யாழ்ப்பாணத்தான் நீ மட்டக்களப்பான் அவன் வடக்கத்தையான் எண்டுகொண்டே இருங்கோ..

யாழ்ப்பாணத்தில இருந்து கொஞ்சம் வெளிய வாங்கோ

Anonymous said...

விருகோதரன் VIIIக்கு நன்றி.

Anonymous said...

விசுக்கோத்தரன் எழுதிய இப்பத்தியை அவரோ அல்லது வேறு எவரோ போகிற இடமெல்லாம் போட்டு விட்டு போகிறார்கள். போட்டுப் போன இடங்களில் எல்லாம் கேட்ட கேள்விகளுக்குப் பதில் இல்லை. ஒருவேளை என் கடன் பணி செய்து கிடக்கிறதே என நினைக்கிறாரோ என்னவோ..

நானும் அவர் போகும் இடமெல்லாம் என் கேள்விகளை காவித் திரிகிறேன். பார்க்கலாம் பதில்கள் வருகிறதா என..
-----

ஊதாரணத்திற்கு எடுத்து கொள்வோமேயானல் பேச்சுவார்த்தைகளில் ஓர் முடிவை எட்டியிராத போதிலும் இராணுவ முகாம்களை வாபஸ்பெறுவது மிகவும் எச்சரிக்கத்தக்க விடயமாக இருந்தும் அரசு வட-கிழக்கு பிரதேசத்தில் இருந்த பல முகாம்களை வாபஸ்பெற்றிருந்தது.//

இது எப்ப.. :) ஒருவேளை ஆனையிறவை சொல்றாரோ ?

பேச்சுக்களின் போக்கில் உரசலை கொண்டு வந்ததே மக்களின் வாழிடங்களான கோயில் பாடசாலை வீடு கிராமங்கள் முதலானவற்றை ஆக்கிரமித்து அவற்றில் படை முகாம்களை அமைத்து உயர் பாதுகாப்பு வலயங்கள் ஆக்கி மக்களை அங்கிருந்து விரட்டியடித்து அகதி முகாம்களில் 10 வருடத்திற்கும் மேலாக வாழச் செய்த -

அத்தகைய பாதுகாப்பு வலய பிரதேசங்களில் இருந்து இராணுவத்தை பின்னகர்த்தி முகாம்களுக்குள் போகச் செய்து மக்களை மீள குடியேற்றும் நடைமுறையினை 90 நாட்களுக்குள் அமுல்படுத்துவதென்ற இணக்கம் இராணுவத்தால் மீறப்பட்டதுதான். கடைசிவரை இராணுவம் முகாம்களுக்குள் பின்னகரவில்லை.

அவ்வாறு பின்னகர்ந்திருந்தால் தகவலறியும் பொருட்டு அறியத்தரவும்.

கட்டம் கட்டமாக புலியுறுப்பினர்களை அரச கட்டுப்பாட்டு பிரதேசங்களினுள் நுழைய அனுமதி வழங்கியிருந்தது.//

இது புலிகளுக்காக மட்டும் வழங்கப்பட்ட விசேட சலுகையல்ல. ஒப்பந்தத்தின் பிரகாரம் -
இராணுவ கட்டபாட்டு பகுதியில் புலிகளும் புலிகளின் கட்டுபாட்டு பகுதியில் இராணுவமும் ஆயுதம் தரிக்காத இராணுவ சீருடை தரிக்காத நிலையில் பயணிக்கலாம். உலாவலாம் என்பது இருதரப்பு இணக்கம். அதற்கேற்ப புலிகளின் அரசியற் பிரிவினர் யாழ்ப்பாணம் திருகோணமலை பிரதேசங்களில் இராணுவ கட்டுபாட்டு பகுதிகளில் பிரசன்னமாயிருந்தனர்.

வடகிழக்கின் சகல பிரதேசங்களிலும் குறிப்பாக இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிலும் புலிகளை ஆயதங்களுடன் நடமாட அனுமதிக்க வேண்டும்.//

இதுவும் எப்போ.. ?
பெண்போராளிகள் இடுப்பில் அணியும் பட்டி இராணுவ பட்டி என்பதை காரணம் காட்டி அவ்வாறு தமது கட்டுபாட்டு பகுதிகளில் வரவேண்டாம் என இராணும் சொல்லியிருந்தது. அதைதான் சொல்கிறாரா..இவர்?

கூட்டமைப்பு கூத்தமைப்பாகவே இருக்கட்டும். அதனை புலிகள் பாராளுமன்றம் அனுப்பவில்லையே. ஓட்டுபோட்டது புலிகள் இல்லையே.. 90 சதவீதமான மக்களின் ஓட்டு அவர்களுக்கு கிடைத்ததே.. சரி உங்கள் ஆசைக்கு 40 சதவீதத்தை கள்ள ஓட்டு என்றே வைத்துக் கொள்ளுங்களே.. நீங்கள் விளக்கும் ஜனநாயகம் 50 வீதத்தையும் பெரும்பான்மை என்று தானே சொல்கிறது.

சமஸ்டி… ?
ரணில் அரசுடனான பேச்சுகளின் போது புலிகள் தாமாக ஒரு இடைக்கால தீர்வு திட்டத்தை வரைந்து அதை அரசுக்கு சமர்பித்து - அது குறித்து பேசலாம் என்றவுடன் - அப்போதைய ஜனாதிபதி ஆட்சியை கலைத்தாரே.. இதுதான் சிங்கள அரசுகளின் இதய சுத்தியா.. சுத்திதான்..

தமிழர்கள் பங்கு கொள்ளாத ஜனாதிபதி தேர்தலில் எங்கே ரணில் புலிகளுக்கு சமஸ்டியை வழங்கிடுவாரோ என்ற எரிச்சலில் ரணிலை வீட்டுக்கு அனுப்பினார்களே சிங்கள மக்கள்.. இதுதான் இதய சுத்தியா..

புலிகள் அவ்நிறுவனத்தினூடாக பல வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்தும் நேரடியாக நிதியுதவியைப் பெற அனுமதியையும் வழங்கியிருந்ததுடன் ஏகப்பட்ட விட்டுக்கொடுப்புகளுக்கு இணங்கியிருந்தது.//

இணங்கினால் மட்டும் போதாது. அவற்றை செயற்படுத்தும் எண்ணம் இருக்க வேண்டும். சிரான் என்ற உள்ளூர் உதவி பெறும் அமைப்பை நிறுவினார்கள். அதாவது இணங்கினார்கள். பிறகு கைவிட்டார்கள்.

கடைசியாக சுனாமி நிதியினை பங்கிடுவது தொடர்பான பொதுக்கட்டமைப்பில் - மனித அவலம் தொடர்பான ஒரு விடயத்தில் சிங்கள அரச தேசத்தில் எத்தனை இழுபறிகள் - கடைசியாக சிங்கள நீதிமன்றே அதை தடுத்து நிறுத்தியதே - தெரியாதா -

இணக்கங்களும் தீர்மானங்களும் பிரச்சனைக்கு முடிவல்ல. செயல்வடிவம் வேண்டும் - சமஸ்டி - நிதி பங்கீடு - அது - இது இதெல்லாவற்றிற்கும் முதலில் இயல்பு வாழ்வு மக்களுக்கு கிடைக்க வேண்டும். அகதி முகாம்களில் உள்ள மக்கள் தம் வீடுகளுக்கு திரும்ப வேண்டும். தொழில் வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் - அடிப்படைபிரச்சனைகள்தான் முதலில் தீர்க்கப் படவேண்டியவை.

புலிகளை பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள். கேட்டுகொண்டிருக்கிறோம். ஆனால் அதற்காக சிங்கள அரசுகளின் வாயில் தேனும் பாலும் வடிகிறது என்று சொன்னால் -

புலிகள் குறித்து சொன்னதையும் நம்ப மாட்டோம்

Anonymous said...

title is about india only..
even Loshan anna keep it up..

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner