January 29, 2011

காவலன்



சிறுத்தை, ஆடுகளம் வந்தாச்சு.. காவலன் எங்கே? என்று ஏராளமான மின்னஞ்சல் மற்றும் பேஸ் புக் கேள்விகள்.. விஜய் ஒரு நல்ல படம் நடிச்சா விமர்சனம் எழுத மனம் வராதே என்று நக்கல் சாடல்கள் வேறு..
எதற்கும் நேரம் வர வேண்டாமோ?
காவலன் நான் பார்த்து ஒரு வாரத்தின் பின் தான் இந்தப் பதிவுபோடக் கொஞ்சம் நேரம் கிடைக்கிறது.

மற்றொரு மலையாள இறக்குமதி. ஆனாலும் தமிழுக்கேற்ற மாற்றத்தோடு விஜய்க்கேற்ற வித்தியாசங்களோடு வந்திருக்கிறது. வித்தியாசம் விஜயிடம் வேண்டும்..வேண்டும் என்று வேண்டிக்கொண்டிருந்த ரசிகர்களின் ஆசைகள் ஒருவாறாக நிறைவேறி இருக்கின்றன.

நீண்ட காலத்துக்குப் பின் மீண்டும் ஒரு லவ் டுடே, காதலுக்கு மரியாதையை, பூவே உனக்காக விஜய்.. கையிலே துப்பாக்கி,கத்தி இல்லாத, பக்கம் பக்கமாக பஞ்ச் டயலாக் பேசி, எதிரிகளுக்கு சவால் விட்டு தனியொருவராக நூறு நூற்றைம்பது பேரைப் பூண்டோடு அழிக்கும் Super Human பவர் இல்லாத எம்மைப் போல் ஒரு சாதாரண இளைஞராக ஆனால் இளமைத் துடிப்போடு Fresh ஆன விஜய்.

தொலைபேசிக் காதல்  தமிழ் சினிமாவில் முக்கிய இடம்பிடித்திருந்த காதல் கோட்டை காலத்துக்கான கதை. இல்லையேல் செல்பேசிகளின் பாவனையில் Caller Id அறிமுகம் ஆகாதபோது வந்திருக்கவேண்டியது.ஆனால் Blackberryயின் புண்ணியத்தால் காவலனின் கண்ணால் காணாத ஆள்மாறாட்டக் காதலை உருக்கமாக்க உதவியிருக்கிறது.

சிம்பிளான ஒருவரிக் கதை சித்திக்கின் இயக்கத்தில் சுவாரஸ்யங்கள்,சென்டிமென்ட்கள்,வடிவேலு +விஜய் சிரிப்புக்கள் கலந்து ரசிக்க வைத்திருக்கிறது.

ஊரில் பெரும் மரியாதை பெற்ற ஒருவரின் மெய்ப்பாது'காவலன்' ஆக வருபவன் அந்தப்பெரியவரின் மகளின் காதலனாக மாறுவதும் ஆனால் ஆள் அடையாளக் குழப்பங்களினால் 'ஹெலோ' (குரல்)மட்டுமே அடையாளமாகப் போவதும் இதனால் காதலா கடமையா என்ற நிலை வந்து கண்கலங்க வைத்துப் பின் சுபம் இடுவதுமே கதை.

ஆனால் இந்தக் காலத்துக்கு ஏற்ற விதத்திலும் விஜய் ரசிகர்கள் ஏற்கும் விதத்திலும் தந்திருப்பதிலும் தான் சித்தீக் தன் முத்திரையைப் பதித்துள்ளார்.

ஆரம்பக் காட்சிகளின் அலம்பல்களும் இறுதிக் காட்சியில் தளம்பல்களும் கொஞ்சம் சீராக்கப்பட்டிருந்தால் காவலன் இன்னும் கலக்கியிருப்பான்.
விஜயின் பில்ட் அப் காட்சியாக நண்பனுக்காகத் தாய்லாந்து சென்று Kick Boxingபோட்டியில் ஜெயித்துவரும் காட்சியும், விண்ணைக் காப்பான் பாடலும் காவலன் போன்ற மாறுபட்ட படத்திலும் தவிர்க்க முடியாத விஷயங்கள் ஆகிவிட்டன.

பிரபல தாதா ராஜ்கிரணினால் பெயர் வைக்கப்பட்டதால் அடிதடிகளில் இறங்கிவிடுவாரோ என்று பயந்து திருந்திவாழும் அந்தப் பெரியவரிடமே அவருக்கு ஆபத்து என்று பொய் கூறி அனுப்பிவைக்கப்படுகிறார் விஜய்.
அசின் அந்தப்பெரியவரின் மகள் என்று சொல்லவும் வேண்டுமா?
அதே வீட்டில் இருக்கும் இன்னொரு அழகான பெண் மித்ரா.
பொறுப்பான உண்மையான காவலன் பூமிநாதனுக்கு(ராஜ்கிரண் வைத்த பெயர என்றால் இப்படித் தானே இருக்கும்?) அந்த வீட்டு இளவரசிகள் இருவர் மீதும் காதல் வராது.
ஆனால் அசினுக்கு விஜயின் பொறுப்புணர்வு,நல்ல குணம் பார்த்துக் காதல் வருகிறது.

விஜய்க்கோ தொலைபேசியில் பேசும் அசின் மீது மட்டும் காதல் வருகிறது.
(குழம்புபவர்கள் இன்றே காவலன் பார்த்துத் தெளிவாகவும்)

தொடர்ந்து சறுக்கி தன் திரைப்பாதையில் மாற்றத்தையும் ஒரு மாறுதலாக வெற்றியையும் எதிர்பார்த்த இளைய தளபதியைக் காப்பாற்றியவன் காவலன் எனலாம்.
ஆனாலும் திரைப்படம் வெளிவர முதல் அவர் தனியாக எதிர்கொண்ட அழுத்தங்கள் காட்சிகளின் கல கல தன்மையை மீறி விஜயின் முகத்தில் ஒரு அழுத்தமான இறுக்கத்தைக் காட்டுவதை அவதானிக்கலாம்.

காவலனாகத் துணிவோடு இறங்குவதிலும், இரு அழகிய பெண்களுக்கு சீருடை அணிந்து கல்லூரிக் காவலனாக செல்லும் போது நகைச்சுவையிலும்,காதலனாக தன் தொலைபேசித் தேவதையைத் தேடி உருகுவதிலும் விஜய் மிளிர்கிறார்.

அசினோடு வரும் காட்சிகளில் தெரியும் அந்தக் காதல் கெமிஸ்ட்ரி, வடிவேலுவுடன் கலக்கும் நகைச்சுவைக் காத்சிகளிலும் வேறுவிதமாக ஜொலிக்கிறது.

சித்தீக் விஜய்க்கென்றே அளவேடுத்துத் தைத்த சட்டை.

சீருடையில் விஜயின் கம்பீரமான உடலமைப்பைப் பார்க்கையில் போலீஸ் உடையில் மட்டும் ஏன் இவர் பொருந்துகிறார் இல்லை என்று சந்தேகம் வருகிறது.
ஆடம்பரம் இல்லாத அழகான டீஷேர்ட்களில் அழகாக இருக்கிறார்.
ஆனால் பாடல் காட்சிகள் மூன்றில் சகிக்க முடியாத சிகை,உடை அலங்காரங்கள்.இதையெல்லாம் இயக்குனர்,விஜய் வேறு யாராவது கவனிக்க மாட்டார்களா? அல்லது திருஷ்டியாகவா?
கடைசிக் காட்சி நடுத்தர வயதுக் கண்ணாடி பொருந்தினாலும் தலைமுடி அலங்காரம் உறுத்தித் தெரிகிறது.
கெட் அப் மாற்றுவதற்கும் விஜய்க்கும் நீண்ட தூரம் போல..

அசின் - இது அந்த அழகான அசின் தானா?கண்களில் தெரியும் அந்தக் காதல் வழியும் அழகு வேறு எதிலுமே இல்லை. ஹிந்தியுலகு அழகான அசினை அசிங்கமாக்கி அனுப்பி இருக்கிறது.
(ஒருவேளை இலங்கைக்கு வந்து போன பிறகுதான் சபிக்கப்பட்டவராகிப் போனாரா??)
க்ளோஸ் அப் காட்சிகளில் மேக் அப் பல கோட்டிங் அடித்தும் பயமாகவே இருக்கிறது;பாவமாகவும்.
காவலனுடன் கொஞ்சம் குறும்பாக மோதும்போதும் இடைவேளைக்குப் பின்னர் காதல் வயப்பட்டு உருகிவழியும்போதும் இறுதிக் காட்சிகளில் பரிதாபத்துக்குரியவராகத் தெரியும்போதும் மட்டும் கவர்கிறார்.

விஜயும் அசினும் மட்டுமே பிரதானமாக நிறைந்துகொள்வதால் ஏனையோருக்கு கிடைத்த இடங்களை பொருத்தி,அடைத்துக்கொள்ளும் வேலை மட்டுமே.
ராஜ்கிரண் - கம்பீரமாகத் தனித்துத் தெரிகிறார்.

வடிவேலு - விஜயுடன் இவர் இணைந்தாலே சிரிப்பு வெடிகள் தான் என்பது முன்பே நிரூபிக்கப்பட்ட விஷயம் தான்.விஜயை பாஸ் என்று அழைத்துக்கொண்டே வடிவேலு அடிக்கும் காமெடி லூட்டிகள் சில வெடி சிரிப்பு ரகம்.
அதிலும் தன்பாட்டுக்கு போற போக்கில் ஏதாவது பொன்மொழிகள்,தத்துபித்துவங்களை உதிர்த்துவிட்டு பாரதியார் சொன்னதா பாரதிராஜா சொன்னதா என்று சொல்லுமிடங்கள் கலகல.

இவருக்கு ஜோடியாக இப்போது சின்னத்திரையில் கலக்கிவரும் நீபா.. பாவம்பா.. ஆனாலும் பாவாடை சட்டையில் நீபா.. யப்பா.. ;)
மலையாள இறக்குமதி மித்ரா ஈர்க்கிறார்.முகத்தில் மட்டும் கொஞ்சம் முதிர்ச்சி.தனியாகவும் கதாநாயகியாக ஒரு சில படங்களில் வரக்கூடும்.

ரோஜா அசினின் அம்மா.. காலம்.
மகாதேவன்,நிழல்கள் ரவி,டெல்லி கணேஷ்,லிவிங்ஸ்டன் ஒவ்வொரு,இவ்விரு காட்சிகளுடன் பரிதாபமாகக் காணாமல் போகிறார்கள்.
M.S.பாஸ்கர் அடிக்கடி தூங்கி விழுந்து சிரிக்கவைக்க முனைகிறார்.

பாடல்கள் படம் வெளிவரும் முதலே ஓரளவு மக்களை ஈர்த்திருந்தன.. படம் வந்த பிறகு யாரது பாடல் நிறையப் பேரை ரசிக்க வைத்துள்ளது.
பின்னணியிலும் பல முக்கிய காட்சிகளில் வித்யாசாகர் ரசிக்க வைக்கிறார்.

காவலன் தான் பொங்கல் திரைப்படங்களில் வெற்றி பெற்றுள்ளது என்று சொல்லப்படுகிறது.
ஆனால் இலங்கையில் சிறுத்தைக்கு அடுத்தபடியாகத் தான் காவலன் என்று வசூல் அடிப்படையில் சொல்கிறார்கள். ஆனால் கடந்த ஒன்றரை வருடத்தில் விஜயின் படங்களில் இரு வாரங்களுக்குப் பின் கூடுதல் வசூல் காவலனுக்குத் தானாம்.

படம் சிறப்போ இல்லையோ என்ற கேள்வியை விட காவலன் எனக்குப் பிடித்திருக்கிறதா என்று கேட்டால்.. ஆம் என்பேன்.

கலகல,காதல், நீண்ட நாளுக்குப் பின் லவர் போய் விஜயின் துள்ளல்,என்னதான் இருந்தாலும் 'நம்ம' அசின் இருப்பதால் இருக்கும் பெரிய லொஜிக் ஓட்டைகளை நான் கவனிக்கவில்லை.

ஆனால் சில காட்சிகள் ஒட்டியும் ஒட்டாமலும் திணிக்கப்பட்டிருப்பதைப் பார்க்கும்போது சித்தீக் இன்னும் கொஞ்சம் மினக்கெட்டிருக்கலாமோ எனத் தோன்றியது.
அண்மைய நான்கு விஜய் படங்களை விட ரசிக்க வைத்ததாயினும் பூரண திருப்தியைக் காவலன் தரவில்லை.


காவலன் - விஜயைக் காப்பான்;விஜய் காத்தான் 


26 comments:

Anonymous said...

//சீருடையில் விஜயின் கம்பீரமான உடலமைப்பைப் பார்க்கையில் போலீஸ் உடையில் மட்டும் ஏன் இவர் பொருந்துகிறார் இல்லை என்று சந்தேகம் வருகிறது//......... :-)

Vathees Varunan said...

எதிர்பார்த்த விமர்சனம்தான் காவலனில் பெற்ற வெற்றியை தொடந்தும் விஜய் தக்கவைப்பாரா இதுதான் இன்று எல்லோரும் கேட்கும் கேள்வி.கெட்டப்சேஞ்ஜ் என்று தலைமுடியினை கண்டபாட்டுக்கு மாற்றிக்கொண்டு பாடல்களில் தோன்றும்போது கடுப்பாக்கின்றது.

விஜய் ஏன் இவ்வாறான படங்களை தெரிவுசெய்து நடிப்பது இல்லையென்ற கேள்வி என்னுள் இப்போது எழுகின்றது. இனிவரும் காலங்களிலாவது நல்லகதையம்சமுள்ள படங்களை தெரிவுசெய்து நடிக்க வேண்டும் என்பதுதான் எல்லொரினுடையதுமான அவா.

போலிஸ் உடை விஜயின்ட பாடிக்கு செட்டே ஆகாது என்பது விஜயின் குட்டி இரசிகர்களுக்கும் தெரிந்து விடயம்

Anonymous said...

someone hack loshan id and wrote this rewiew
good and neutral rewiew

Unknown said...

குட்டி லோஷன் இந்தப் படத்தை பார்த்தானா? அவனுடைய விமர்சனம் எவ்வாறிருந்தது??

அசினின் அழகு காணமல்போயிருப்பது உண்மைதான்.. வயசு போயிட்டா அல்லது மேகப் குறைவா??

வடிவேலுவின் ஜோக்ஸ் சூப்பர், குறிப்பாக பாரதியாரா பாரதிராஜாவா என்று கேட்பது ரசிக்க வைத்தது..

doubleS said...

நீங்கள் எப்ப்டியாவது விஜய் பத்தி கொஞ்சம் ஆச்சும் தப்பா கதைக்காவிட்டால் உங்களுக்கு தூக்கம் வராதே ,,,,,,

//அது சரி சிறுத்தை காவலனை இலங்கையில் முந்தியது //இது எப்ப ???
சும்மா விடாதீங்க நாங்களும் தான் படம் பார்த்தம் 4 நாளுக்கு பிறகு சிறுத்தைக்கு ஈ காக்கா கூடி இல்லை

ஒரு கிழமை முடிஞ்சு கடந்த சனி கிழமை ஹவுஸ் ஃபுல் காவலன் .

சின்ன பிள்ளைக்கு கூட தெரியும் காவலனா இல்லை சிறுத்தையா எண்டு

ஆதிரை said...

காவலன் எனக்கும் பிடித்திருந்தது!

தர்ஷன் said...

என்னைக் கேட்டால் படம் ரொம்ப சாதாரணம் என்ன பஞ்ச் டயலாக் இல்லை. அவ்வளவே. விஜயின் நல்ல கதையம்சமுள்ள படம் என்று சொல்கிறார்கள். என்ன கதையோ கத்தரிக்காயோ லவ் டுடே, ப்ரியமுடன் என்று இரண்டே காதல் படங்களும் விறுவிறுப்புக்காக கில்லியையும் மாத்திரமே இன்னமும் விஜய் படங்களில் சிறப்பானதாய் சொல்லத் தோன்றுகிறது.

Unknown said...

அசின் விஜய் தொலைபேசி காதல் ஆரம்பிக்கும் வரை திரைக்கதை அவ்வளவு சுவாரசியமாக அமைக்கப்பவில்லை.இதுவே என்னை படம் மீண்டுமொருமுறை பார்க்க தூண்டவில்லை...

Unknown said...

///ஆனால் இலங்கையில் சிறுத்தைக்கு அடுத்தபடியாகத் தான் காவலன் என்று வசூல் அடிப்படையில் சொல்கிறார்கள்///

தெகிவளை கொன்கோட்டில் இப்போதும் நல்ல கிறவுட் காவலனுக்கு,இறுதியாக எந்திரனுக்கே இப்பிடி இருந்தது....
யாரோ உங்களுக்கு தப்பான தகவல் கொடுத்திருக்காங்க போல அண்ணா...

Anonymous said...

@ doubles //சும்மா விடாதீங்க நாங்களும் தான் படம் பார்த்தம் 4 நாளுக்கு பிறகு சிறுத்தைக்கு ஈ காக்கா கூடி இல்லை//



இது எப்ப ???

Shafna said...

யாருக்கு எது பொருத்தமோ அதைத்தான் ஏற்றும் ஆக வேண்டும்.அதை விட்டுட்டு சும்மா உதார் விட்டுட்டு பல்லைக் காட்டாம பம்பினா வேலைக்காகாது என்பதனை விஜய் கொஞ்சமாவது புரிந்திருப்பாரா? இருந்தாலும் இன்னும் அவர் தன் அலட்டலைக் குறைத்தால்தான் அவரது ரசிகர்கள் கூட அவரை ரசிப்பார்கள்.

ம.தி.சுதா said...

அண்ணா நீண்ட நாளுக்கப்புறம் விஜயின் ஹீரோயிசம் இல்லாத படம் பார்க்க முடிந்தது பெரிய சந்தோசமாக இருந்தது...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
இந்தியாவிலும் தமிழர் சிறுபான்மையினரா..??

கார்த்தி said...

நீங்கள் கூறியதுபோல் காவலனில் பழைய அசினை காணமுடியவில்லை. அசிங்கமாக பல இடங்களில் தெரிகிறார். கடைசி சோககாட்சிகளில் பறுவாயில்லை!
இந்தப்படத்தில் வித்தியாசாகரின் தனஜமுத்திரையை காணமுடியவில்லை. பாடல்கள் நல்லம்தான் எனினும் வித்தியாசாகரிடம் இதைவிட பலதை எதிர்பார்த்தோம்! மித்ராவின் அழகு பெரிதாக ஈர்க்கும்படி இல்லை.

//அண்மைய நான்கு விஜய் படங்களை விட ரசிக்க வைத்ததாயினும் பூரண திருப்தியைக் காவலன் தரவில்லை.

என்னை பொறுத்தவரை காவலன் பூரண திருப்தி தந்தது!

வந்தியத்தேவன் said...

படம் பார்க்கவில்லை
ட்ரைலரும் சில பாடல்களும் மட்டும் பார்த்தேன். அசின் என்றைக்கு அரச குடும்பத்தில் இணைய நினைத்தாரோ அன்றே அவரின் தேஜஸ்து குறைந்துவிட்டது. சிவகாசி போக்கிரியில் பார்த்த அசினா இது எனக் கேட்க வைக்கின்றது. வருங்கால முதல்வர் விஜய் என்ன இழவுக்கு அசின் தான் வேண்டும் என ஒற்றைக்காலில் நின்றாரோ?

லண்டனில் சிறுத்தை தான் நன்றாக ஓடுகின்றது காவலன் ஒருநாளுக்கு சில தியேட்டர்களில் ஒரு காட்சி தான். காரணம் விளங்கும் தானே(புபெபு).

Anonymous said...

விஜய் உங்களிடமிருத்து இப்பிடி ஒரு வித்தியாசம் தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம் ..உங்களுக்கு இருக்கும் ரசிகர்கள் போல வேற எந்த நடிகர்களுக்கும் இல்லை . தொடர்ந்து இவ்வாறு நல்ல படங்களை தரவும் .....

சுறா போன்ற படங்களுக்கு நாங்கள் ரசிகர்களும் ஆதரவு தரமுடியாது

நீங்கள் 3 idiots நடிப்பதாக கேள்வி
அதிலும் கலக்குவீர்கள் என்று நம்புகிறோம் .....

பழைய விஜய் திரையில் தந்ததுக்கு நன்றி


லோஷன் அண்ணா நல்ல விமர்சனம்

நிராதன் said...

மித்ரா ஏற்கனவே தமிழ் படம் நடிச்சிட்டா. சூரியன் சட்ட கல்லூரி...

அசின் கொஞ்சம் வடிவு குறைஞ்சிட்டு தான். ஆனா இப்பவும் ரசிக்கலாம்.

இண்டைக்கும் கொன்கோர்ட்டில ஹவுஸ் புல் ஷோ

நிராதன் said...

மித்ரா ஏற்கனவே தமிழ் படம் நடிச்சிட்டா. சூரியன் சட்ட கல்லூரி...

அசின் கொஞ்சம் வடிவு குறைஞ்சிட்டு தான். ஆனா இப்பவும் ரசிக்கலாம்.

இண்டைக்கும் கொன்கோர்ட்டில ஹவுஸ் புல் ஷோ

நிராதன் said...

மித்ரா ஏற்கனவே தமிழ் படம் நடிச்சிட்டா. சூரியன் சட்ட கல்லூரி...

அசின் கொஞ்சம் வடிவு குறைஞ்சிட்டு தான். ஆனா இப்பவும் ரசிக்கலாம்

இண்டைக்கும் கொன்கோர்ட்டில ஹவுஸ் புல்

SShathiesh-சதீஷ். said...

என்ன தான் பாராட்டினாலும் விஜயை அங்கங்கே வாரும் உங்கள் குணம் பிடிச்சிருக்கு. லொள்.....திருவாளர் வந்தியத்தேவன் அவர்கள் சொன்னது போல லண்டனில் சிறுத்தை காவலனை முந்தவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன். அடுத்து ஐங்கரன் இம்முறை லண்டனில் வெளியிடவில்லை என்பதும் அறிந்தன். படம் பார்த்திட்டேன் விமர்சனம் போடா நேரம் பிரச்சனை. வருமா வராதா தெரியாது.

அஜுவத் said...

me really enjoyed on very first day.........:) பாஸ் ஓடு ஒடஞ்சா மாத்திடலாம் மனசு ஒடஞ்சா மாத்த இயலாது என்று பார்தியாரே சொல்லி இருக்கார்......... ஹ்ஹ்ம் பாரதியாரா? பாரதிராஜாவா? அவரே confuse ஆயிட்டாரு.........:)

Prapa said...

நல்ல திரைப்படம்....
நீண்ட நாடகளுக்கு பிறகு மனதை தொட்ட படம்.
அதுசரி அண்ணே, இது விஜய் படமா இல்ல சித்திக் படமா?
பாவம் அவரே குழம்பிட்டார் ....நாம நம்ம வேலைய பார்ப்பம் .
ஹீ ஹீ .

Anonymous said...

விஜய் பல நாட்களுக்கு பிறகு நல்ல படம் .....வாழ்த்துக்கள்

Anonymous said...

Nice movie to watch, I liked it.
--kuna--

செழியன் said...

விஜயின் பழைய படங்கள் ல்வ்டுடே,பிரண்ஸ் போல் இல்லாவிட்டாலும் காவலன் சூப்பர்!விஜயின் சுறா பார்த்து வெறுத்துப் போன ரசிகர்களுக்கு ஒரு சுவீப்ரிக்கற் தான்

Vijithan said...

அது சரி சிறுத்தை காவலனை இலங்கையில் முந்தியது //இது எப்ப ???
சும்மா விடாதீங்க நாங்களும் தான் படம் பார்த்தம் 4 நாளுக்கு பிறகு சிறுத்தைக்கு ஈ காக்கா கூடி இல்லை.நீங்கள் சிறுத்தைக்கு பொன்சர் எண்ட படியாலா?

Unknown said...

நல்ல விமர்சனம். ஆனால் விஜய் இதில் அதிகம் சிரமப்படவில்லையோ என்று தோன்றுகிறது.

ஒரிஜினல் மலையாளப்படத்தில் திலிபின் நடிப்பை முடிந்தால் பார்க்கவும், அதில் பாதி கூட இவர் செய்யவில்லை என்றுதான் தோன்றுகிறது, ஒருவேளை ஆக்ஷனில் பார்த்து பார்த்து இப்படி ஆகிவிட்டதா என்று தெரியவில்லை

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner