November 04, 2009

இருக்கிறம்-அச்சுவலை சந்திப்பு - எனது பார்வை..








நேற்றைய இருக்கிறமின் அச்சுவலை சந்திப்பு பற்றியே இன்று ஒரே பரபரப்பு..
அனேகமாக அனைவரது பதிவுகளையும் வாசித்துள்ளேன்.. பலபேருக்கு ஏமாற்றம். பல பேருக்கு கோபம்.

தனிப்பட்ட முறையில் என்னைப் பொறுத்தவரை எந்தவொரு ஏமாற்றமோ, கோபமோ இல்லை. காரணம் இது இப்படி தான் நடைபெறும் என்பது நான் ஏற்கெனவே எதிர்பார்த்ததும் அறிந்ததும்..

ஆரம்பத்தில் சஞ்சித்(இருக்கிறம் இணை ஆசிரியர்) இப்படி ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்வதாக சொல்லி பதிவர்களையும் ஊடகத்தினரையும் இணைப்பதாக இந்த சந்திப்பு அமையும் என்றும் ஒரு சந்திப்பு நிகழ்வாக இது அமையுமே தவிர வாத-விவாதங்களுக்கு இடம் அமையாதென சொல்லி இருந்தனர்.

இதனால் தான் நானோ இல்லாவிடில் வந்தியத்தேவனோ இது பற்றி ஆரம்பத்தில் பதிவுகள் இட்டபோது இதை வலைப்பதிவர் சந்திப்பு என்று எந்தவொரு இடத்திலும் குறிப்பிடவில்லை.

தாக சாந்தியும் உண்டு என அவர்கள் சொன்னபோது, நான் அதுபற்றி எந்த மறுப்பும் சொல்லவிரும்பவில்லை.அது அவர்களின் ஏற்பாடு.. விரும்பியோர் குடிக்கலாம்..குளிக்கலாம்.. இல்லை என் போல மறுக்கலாம்..

இது பதிவர்களுக்கான சந்திப்பு இல்லை என்பதாலேயே நான் என் சார்பான கருத்தாக எல்லாருக்கும் அழைப்பு மின்னஞ்சலாகவோ, தனிப்பட்ட அழைப்பாகவோ அனுப்பப்படவேண்டும் என்று வலியுறுத்தி இருந்தேன்.
நிகழ்ச்சி நிரல் தயாரிப்பு பற்றி பேச்சு வந்தபோதும் ஒரு கெட் டு கெதர் போலவே இது இருக்கப் போவதனால் சில பேச்சுகள் இருக்கும், வெளிநாட்டிலிருந்து சிலர் பேசுவர்; வேறு விஷயங்கள் இருக்காது என்று இருக்கிறம் தரப்பில் சொல்லப்பட்டது.

நான் என்னுடைய நெருக்கமான சில நட்புப் பதிவர்களைக் கூட வலியுறுத்தி அழைக்கவில்லை என்பதிலிருந்து கடந்த முறை பதிவர் சந்திப்புக்கும் நேற்றைய அச்சுவலை சந்திப்புக்கும் இடையிலான வித்தியாசத்தை உணர்ந்திருப்பீர்கள்.


இருக்கிறம் தங்கள் தெளிவான நோக்கத்தை வெளிப்படுத்தியதாகவே நான் உணர்ந்தேன். அவர்களுக்கு பதிவர்கள்,எழுத்தாளர்களின் பங்களிப்பு தேவைப்படுகிறது. இந்த சந்திப்பின் நோக்கம் அதுவே. அதுபோலவே இலத்திரனியல் ஊடகங்களின் ஆதரவும் அவசியம். எம்மிடையே ஏற்படுத்தப்படும் இணைப்பின் மூலம் எல்லாவற்றையும் சாதிக்க நினைத்தார்கள்.
இதில் தவறேதும் இருந்ததாக நான் எண்ணவில்லை.

பல பதிவர்கள் முதல் பதிவர் சந்திப்பை போலவே இதனை எண்ணி நிறைய எதிர்பார்த்ததே ஏமாற்றத்துக்கான காரணம் என நான் எண்ணுகிறேன்.

Cowboy மது நேரடி ஒளிபரப்புக்கான ஆயத்தம் செய்கிறார் என்றவுடனேயே நான் நண்பர் வந்தியிடம் கேட்டது "ஏன் இதற்கு இந்த ஏற்பாடு எல்லாம்??"

எந்தவொரு நிகழ்வையும் நல்லபடி 'பயன்'படுத்தவேண்டும் என்ற கருதுகோள் என்னிடம் எப்போதுமே உண்டு என்பதால் எந்தவொரு ஏமாற்றமும் எனக்கு இல்லை.
அது அது அப்படி எப்படி வருகிறதோ அதன் போக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும் என நினைப்பவன் நான்..

நண்பர்களை சந்தித்தேன்.. பல புதியவர்களை முதல் தடவை சந்தித்தேன்..
பல நண்பர்களோடு நீண்ட நாட்களுக்குப் பின் உரையாடச்க்கொடிய வாய்ப்பும் கிட்டியது.

என் ஒலிபரப்புத் துறை குருக்களான திரு.எழில்வேந்தன்,திரு.நடராஜசிவம் ஆகியோரை ஒரே இடத்தில் சந்திக்கும் வாய்ப்பு, தயானந்தா அண்ணா, என்னுடன் பணியாற்றிய குருபரன் அண்ணா ஆகியோரது குரல்வழியான சந்திப்பு என்று மகிழ்ச்சிக்குரிய பல நிகழ்வுகள்..

வித்தியாதரன் அவர்களின் அனுபவப் பகிர்வுகள் தந்த பயன்..
(எங்கள் செய்தி ஆசிரியர்கள் அனைவரையும் அங்கே வர செய்திருக்கவேண்டும் என்று பின்னர் தான் நினைத்தேன்)

அவரது துணிச்சலுக்காகவும் சில விஷயத் தெளிவுக்காகவும் நான் மிக மரியாதை வைத்துள்ள வித்தியாதரன் அவர்கள் குறிப்பிட்ட பல விஷயங்கள் உண்மையாக இருந்தாலும், இலங்கையில் செய்தி தாள்களில் புதுமை புகுத்துகிறோம் என்று, இந்திய சஞ்சிகைகளின் பாணியில்
"அராலியில் நேற்று டுமீல்", "கொழும்பில் பகீர்" என்று தலைப்பு செய்திகளை வேடிக்கை ஆக்கியவர் என்று எனக்கு அவர் மீது தனிப்பட்ட விமர்சனமும் உள்ளது.

உரையாற்ற பதிவர்கள் எவரையும் அழைக்காதது (வைத்தியரை தவிர.. நான் அழைக்கப்பட்டது ஒலிபரப்பாலனாக.. மருதமூரான் யாழ்தேவி திரட்டி சார்பாக) ஒரு பெரும் குறையாக எனக்கு இப்போது தொடருகிறது. அப்போதே தோன்றி இருந்தால் சன்ஜீத்தை அழைத்து சொல்லி இருப்பேன்.

வைத்தியர் முருகானந்தத்தின் உரையை நான் தாமதமாக சென்றதால் தவற விட்டு விட்டேன்.
மற்றும்படி சில போரடித்த உரைகள், சில இருக்கிறம் பற்றிய கருத்துரைகள் தவிர எல்லா உரைகளையும் அமைதியாக ஓரிடத்தில் இருந்து அவதானிக்க கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

பின்னால் இருந்த ஜல்லிப்புக்கள்,ஜில்லிப்புக்களில் கலந்து கொள்ளாமல் இருந்துவிட்டேன்.உரைகளின் பின்னர் கல கல உரையாடல்களில் இணைந்து கொண்டபோது பல வேடிக்கைகள்..பல நகைச்சுவைகள்.. (இவை போதுமெனக்கு???)

உறுத்தலாக தோன்றும் சில விஷயங்களை சொல்லாவிட்டால் இன்றிரவு சாப்பிட்ட இடியப்பம் சீரணிக்காது..

கல்யாண வீடுகள் தொடக்கம் கல்லூரி ஒன்றுகூடல் வரை வந்துள்ள தண்ணியடிக் கலாசார ஒன்றுகூடல்களை ஒன்றுமே சொல்லாத சமுதாய சீர்திருத்தவாதிகள் சிலர் அச்சுவலை சந்திப்பைக் காரணம் காட்டி சாடுவது ஏன்?

குடித்து ருசித்த சில நல்லவர்கள் இருக்கிறம் குழுவுக்கு நன்றிப் பதிவுகள் போடாதது ஏன்? (முதலிலேயே சாட்டையடிகள் விழுந்ததாலா?)

இவ்வளவுக்கும் நான் குடிப்பவனல்லன்.. அத்துடன் குடிப்பவர்களை வெறுப்பவனுமல்லன்.

நான் இருக்கிறம் இதழுக்கு ஆக்கங்கள் வரைந்தாலும் இடித்துரைக்க என்றும் தயங்காதவன்.. எனினும் ஒருவராவது கருத்துரை பகிரும் நேரத்தில் இது பற்றி அங்கு எடுத்துரைக்கவோ,கேள்வி கேட்கவோ இல்லை.. அது ஏன்?
நாகரிக நோக்கமோ?

ஆனாலும் இறுதியாக என்னுடன் பயணித்த சில நண்பர்களுக்கும் முன்பு என்னுடன் பேசிக் கொண்டிருந்த சிலருக்கும் முன்பே சொன்னேன்..
கடுமையான விமர்சனப் பதிவுகள் வரும் பாருங்கள் என்று..

தாக சாந்தி பற்றி பதிவுகளில் போட்டபோது பின்னூட்டங்களில் அதற்காகவே வருவோம் என்று சொன்ன பலர் ஞாபகம் வருகிறார்கள்.. அவர்களும் சேர்ந்து இருக்கிறமைக் கும்முவது எனக்கு பதிவுலக நியாயமாகப் படவில்லை.

மு.மயூரன், Cowboyமது, கோபி, யோகா, அருண், கீர்த்தி - சிந்தனை சிறகினிலே போன்றோரின் பதிவுகளின் நியாயமான சில ஆதங்கங்களை ஏற்றுக் கொள்கிறேன்.

ஆனால் யாரும் இதை இருக்கிறம் ஏற்பாடு செய்த நிகழ்வு என்ற பின்னணி தாற்பரியத்தை உள்வாங்காததன் காரணம் 'சந்திப்பு' என்ற வார்த்தையா எனத் தெரியவில்லை..

எனினும் அனைவர் சார்பாகவும் இருக்கிறம் குழுவுக்கும், நிறுவனத்துக்கும் நன்றிகள்.. ஏற்பாட்டுக்கு..

பரபரப்பிலே, பதிவுகளின் சூட்டிலேயும் இருக்கிறமுக்கு விளம்பரம் வந்துவிட்டது.. அது பதிவுலகின் ஒரு கைங்கர்யமாக அமையட்டும்..

ஊர் இரண்டு.. கூத்தாடிகள் சிரிக்கிறார்கள்..

மழை, சேறு, சகதி, ஈரம், தண்ணி, போதை, இழுபறி, தொழினுட்பத் தடங்கல், எதிர்பார்த்த ஆரோக்கிய விவாதங்கள்,கருத்துப் பரிமாறல்கள் இல்லாமை போன்ற பல குறைகள் இருந்தாலும் (இவற்றை எல்லாம் விலாவாரியாக பல பதிவர்கள் சொல்லி விட்டார்கள்) ஒரு முக்கிய தேவைப்பாட்டை எல்லா இலங்கைப் பதிவர்களும் உணர்ந்துள்ளார்கள் என்பது தெளிவு.

இரண்டாவது பதிவர் சந்திப்பே அது... யார் எங்கே நடத்தப் போகிறார்கள்? போகிறோம் என்பது கேள்வி..

யார் எங்கே எப்போது ஏற்பாடு செய்தாலும் ஒரு விஷயம்..

அனைவரும் எம்மைக் கூர்ந்து நோக்குகிறார்கள்..

அடுத்த பதிவர் சந்திப்பை (கவனியுங்கள் பதிவர் சந்திப்பு) ஏற்பாடு செய்வோர் மிக நுணுக்கமாக, அனைத்து விஷயங்களையும் கவனித்து,உள்வாங்கி, விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளும் மனத் திடத்தோடு ஏற்பாடு செய்ய வேண்டும்.



48 comments:

தங்க முகுந்தன் said...

என்ன லோசரே! ஒரே மாதிரி சிந்திக்கிறோமோ?
நான் போட்ட சில வினாடிகளிலேயே! ம்..... கலக்குங்க! நீங்க சொன்னால் சரிதான்!

ஜனகன் said...

வணக்கம் அண்ணா.

நானும் ஆரம்பத்தில் இது ஒரு பதிவர் சந்திப்பு என எண்ணி வருகைதரப் பலவழிகளில் முயற்சி செய்து தோற்றுப் போனேன். கண்டியிலிருந்து வந்து போவது ஒரு பொருட்டல்ல எனினும், என்னுடைய மேற்படிப்பு சம்பந்தமான விடயங்களில் மூழ்கியதால் என்னால் வரமுடியவில்லை.

நீங்கள் குறிப்பிட்ட ஒரு சில விடயங்களுக்காக (//அவர்களின் ஏற்பாடு.. விரும்பியோர் குடிக்கலாம்..குளிக்கலாம்..//) நான் வராதது நன்று எனப்பட்டாலும், பதிவர்களை சந்திக்கும் வாய்ப்பை இழந்து விட்டேன் என்ற கவலை அடிமனதில் உள்ளது.

அடுத்த பதிவர்கள் சந்திப்பு பற்றிய விடயங்களை தயவு செய்து குறிப்பிடவும். நான் இலங்கையில் இருக்கும் பட்சத்தில் நானும் கண்டிப்பாக உங்களுடன் கலந்துகொள்வேன்.

Unknown said...

///விரும்பியோர் குடிக்கலாம்..குளிக்கலாம்.. இல்லை என் போல மறுக்கலாம்..

இவ்வளவுக்கும் நான் குடிப்பவனல்லன்..///

அய்... உடான்சு. (அண்ணி பதிவெல்லாம் வாசிக்கிறா போல கிடக்கு)

///கல்யாண வீடுகள் தொடக்கம் கல்லூரி ஒன்றுகூடல் வரை வந்துள்ள தண்ணியடிக் கலாசார ஒன்றுகூடல்களை ஒன்றுமே சொல்லாத சமுதாய சீர்திருத்தவாதிகள் சிலர் அச்சுவலை சந்திப்பைக் காரணம் காட்டி சாடுவது ஏன்?///

இது ஒரு நல்ல கேள்வி. எல்லாம் ஒரு ட்ராமா லோஷன் அண்ணா. இப்ப பிள்ளையளின்ர பிறந்த நாள் பார்ட்டியைச் சாட்டி அப்பர்மார் குடிக்கினம். ஏலவே தெரியும் முக்கால்வாசிப் பேருக்கு ‘தாக சாந்தி' இருக்கெண்டு. முதலிலேயே அதை வேண்டாம் எண்டு சொல்லியிருக்கோணும். இப்ப திட்டிப் பிரயோசனமில்லை.

துரதிர்ஷ்டவசமாக இருக்கிறம் அமைப்பின் அழைப்பிதழ் வலைப்பதிவர்களுக்கு ஒரு மாயமான நம்பிக்கையைக் கொடுத்தது என்பதே உண்மை. ‘வலைப்பதிவர்களையும், அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகத்தினரையும்' என்று தொடங்கும் வாசகத்திலேயே வலைப் பதிவர்களுக்கு முக்கியத்துவம் இருக்கும் என்கிற நம்பிக்கை தூவப்பட்டிருப்பதும், 'நிகழ்வில் பங்கெடுக்க விரும்பும் வலைப்பதிவர்கள் வரும் புதன் கிழமைக்கு முன்னதாக தமது வரவினை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகிறோம்' என்ற வாசகமும் பதிவர்களைக் குழப்பியடித்திருக்கும் என்பது என்னுடைய கருத்து.

balavasakan said...

ரொம்ப சீரியசான பதிவு ........ரொம்ப நாளைக்கு பிறகு ...

என்ன கொடும சார் said...

>அது சரி.. பூரணை தினமன்று public ஆக தண்ணி பாட்டி போட்டிருக்காங்க.. பொலிஸ் கிட்ட சொல்லி கொடுக்கணும். NGO காசு விளையாடுது.

//அத்துடன் குடிப்பவர்களை வெறுப்பவனுமல்லன்.//
ஏன் இந்த நிலை. சமூகப்பொறுப்புணர்வுடனான நிலையை ஒரு ஊடகவியலாளராக நீங்கள் எடுக்கவேண்டும் என எதிர்பார்க்கிறேன். பிழையான விடயத்தில் ஏன் நழுவல் போக்கு?

//தலைப்பு செய்திகளை வேடிக்கை ஆக்கியவர் என்று எனக்கு அவர் மீது தனிப்பட்ட விமர்சனமும் உள்ளது//

அந்த பத்திரிகை கூட வேடிக்கை பத்திரிகை. (அல்லது ஆச்சரியக்குறி பத்திரிகை). காசு கொடுத்து வாங்குபவர்கள் அடுத்த வேடிக்கைகாரர்கள்.

வானொலி தொலைக்காட்சிகளில் இந்தியத்திணிப்பை எதிர்க்கும் பதிவர்கள் இப்பாணி தொடர்பாக வாய்மூடி மௌனமாக இருப்பது என்னவோ?

அண்ணா, அச்சுவலை சந்திப்பின் agenda தெரியாமலே என்னோடு சண்டை போட தயாரானவர்கள் போர்முரசு கொட்டியவர்கள் தாமாகவே agendaவை கற்பனை
செய்தவர்கள் எல்லாரையும் நினைச்சா சிரிப்பு சிரிப்பா வருது..

ஒரு கேள்வி? ஒரு அழைப்பிதழை விளங்கிக்கொள்ள முடியாதவர்களா சமூகத்துக்கு நன்மை செய்ய பதிவுலகில் குதித்திருக்கிறார்கள்?

maruthamooran said...

////தனிப்பட்ட முறையில் என்னைப் பொறுத்தவரை எந்தவொரு ஏமாற்றமோ, கோபமோ இல்லை. காரணம் இது இப்படி தான் நடைபெறும் என்பது நான் ஏற்கெனவே எதிர்பார்த்ததும் அறிந்ததும்..////

athey....... athey

Subankan said...

நிகழ்ச்சி நிரலும், இயற்கையும் பல எரிச்சல்களைத் தந்திருந்தாலும், பரஸ்பரம் அதிகரித்த எதிர்பார்ப்புகளால்தான் இந்த ஏமாற்றம்.

யோ வொய்ஸ் (யோகா) said...

ரொம்ப சீரியசான பதிவு. ரொம்ப எதிர்பார்த்து போனதால் ரொம்பவே ஏமாந்து போனதாக உணர்கிறேன். ஆனாலும் எதிலும் பொசிடிவானதை எடுத்து கொண்டு நெகடிவானதை அனுபவமாக்கி கொள்ளுவோம் என்னும் கொள்கையில் இந்த சந்திப்பில் முகம் தெரியா பதிவர்கள் பலரோடு மனம் விட்டு பேச கிடைத்தது ரொம்ப மகிழ்ச்சியான விடயமாக எண்ணுவோம்.

தாக சாந்தி விடயத்தில் நானும் உங்களது கருத்தியலை தான் முன்வைக்கிறேன்.

பெயர் சொல்ல விரும்பாதவர். said...

வயதில் மூத்தவர்கள் பெரியவர்கள் எல்லாம் உரையாற்றும் போது சத்தம் போட்டுக்கொண்டு இருந்த நாம் மட்டும் திறமா.மற்றவர்களை விமர்சிப்பதற்கு எமக்கு தகுதி உண்டா தெரியவில்லை?

Unknown said...

//விரும்பியோர் குடிக்கலாம்..குளிக்கலாம்.. இல்லை என் போல மறுக்கலாம்..//

ஒருவரைக் குடிக்க வேண்டாம் என்று தடுக்க எமக்கு எந்த உரிமையும் இல்லை என்றாலும் சற்று வெளைக்கே குடி எல்லாம் தொடங்கியதால் தான் நிகழ்ச்சி மேலும் கெட்டது என நான் நம்புகிறேன்
(எனினும் குடித்த பலரால் ஏற்படுத்தப்பட்ட நகைச்சுவைகளைப் பார்த்து சிரித்து எனக்கு தலைவலி வந்தது வேறுகதை)

எனினும் அண்ணா,
அச்சுவலை என்பதில் வலை என்பது எம்மைத் தானே குறிக்கிறது.
வலை என்பது குறிக்கும் வலைப்பதிவர்கள் நிகழ்ச்சியில் ஓர் மூலையில் நின்ற உணர்வு.
இரண்டாவது கொட்டகையில் நின்ற எனக்கு, சுபாங்கன் அண்ணாவுக்கு, யோகா அண்ணாவுக்கு, சந்ரு அண்ணாவுக்கு, மருதமூரான் அண்ணாவுக்கு எல்லாம் நீங்கள் கதைத்த எதுவுமே விளங்கவில்லை. அதன் பிறகு தான் நாங்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் தனியே நட்புடன் கலந்துரையாடத் தொடங்கினோம்.

எனக்கு நிறையப்பதிவர்களைச் சந்தித்த மகிழ்ச்சி, திருப்தி இருந்தாலும் திருமண வீட்டிற்கு அழைப்பிதழ் கொடுத்துவிட்டு வாசலில் மறித்து வைத்த உணர்வு.

பதிவர்கள் சார்பாக ஒருவரையாவது அனுபவங்களைப் பகிரவோ, ஏதாவது கதைக்கவோ அனுமதித்திருக்க வேண்டும்.

இல்லை அவர்கள் தான் முழுமையாக இருப்பார்கள் எனில் சந்திப்பை இருக்கிறமின் கொள்கைவிளக்க சந்திப்பு என மாற்றியிருக்கலாம்.

2 ஆவது சந்திப்புக்கு நானும் ஆவலுடன் இருக்கிறேன்...
நீங்கள் சொன்னது போல புதிய குழு ஒன்று கிளம்பி சிறப்பாக செய்யும் என்றும் அதில் நிச்சயமாக நானும் இருப்பேன் என்றும் நம்பிக்கை இருக்கிறது.

எனினும் எங்கள் முதலாம் பதிவர் சந்திப்பை மேலும் வெற்றிகரமாக, பெரு வெற்றி பெற்ற ஒன்றாக மாற்றிய இருக்கிறமிற்கு நன்றி.

டிலான் said...

அதுசரி பதிவர்கள், ஒலிபரப்பாளர்கள் என்றாலே நாங்கள் பெரிய ஆக்கள்தான் என்று பலபேர் நினைத்துக்கொண்டிருக்கின்றார்களே அது ஏன் லோசன்???

கார்த்தி said...

நடந்தது எல்லாம் நன்மைக்கே. இரண்டாவது பதிவர் சந்திப்பிற்காக காத்திருக்கிறோம்..

ARV Loshan said...

தங்க முகுந்தன் said...
என்ன லோசரே! ஒரே மாதிரி சிந்திக்கிறோமோ?
நான் போட்ட சில வினாடிகளிலேயே! ம்..... கலக்குங்க! நீங்க சொன்னால் சரிதான்!//

ஆமாம் அண்ணர்.. உங்கள் பதிவுக்கு இன்று பின்னூட்டமும் போட்டுள்ளேன்.. :)
ஒரே அலைவரிசை??

000000000000

ஜனகன் said...
வணக்கம் அண்ணா.

நானும் ஆரம்பத்தில் இது ஒரு பதிவர் சந்திப்பு என எண்ணி வருகைதரப் பலவழிகளில் முயற்சி செய்து தோற்றுப் போனேன். கண்டியிலிருந்து வந்து போவது ஒரு பொருட்டல்ல எனினும், என்னுடைய மேற்படிப்பு சம்பந்தமான விடயங்களில் மூழ்கியதால் என்னால் வரமுடியவில்லை.

நீங்கள் குறிப்பிட்ட ஒரு சில விடயங்களுக்காக (//அவர்களின் ஏற்பாடு.. விரும்பியோர் குடிக்கலாம்..குளிக்கலாம்..//) நான் வராதது நன்று எனப்பட்டாலும், பதிவர்களை சந்திக்கும் வாய்ப்பை இழந்து விட்டேன் என்ற கவலை அடிமனதில் உள்ளது.

அடுத்த பதிவர்கள் சந்திப்பு பற்றிய விடயங்களை தயவு செய்து குறிப்பிடவும். நான் இலங்கையில் இருக்கும் பட்சத்தில் நானும் கண்டிப்பாக உங்களுடன் கலந்துகொள்வேன்.//

எல்லாம் நன்மைக்கே.. நிச்சயமாக.. இந்த வருட இறுதிக்குள் நடத்துவதாக புதிய ஒரு குழுவினர் கூட்டாக முயல்கின்றனர்.. நாமும் ஆதரவு கொடுப்போம்.. சந்திப்போம்

ARV Loshan said...

Kiruthikan Kumarasamy said...
///விரும்பியோர் குடிக்கலாம்..குளிக்கலாம்.. இல்லை என் போல மறுக்கலாம்..

இவ்வளவுக்கும் நான் குடிப்பவனல்லன்..///

அய்... உடான்சு. (அண்ணி பதிவெல்லாம் வாசிக்கிறா போல கிடக்கு)//

அடப்பாவி நம்புங்கப்பா.. நான் ரொம்ப நல்லவன்.. :)
அதனால் தான் பாலகர் சங்க ஆயுட்கால உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளேன்..

///கல்யாண வீடுகள் தொடக்கம் கல்லூரி ஒன்றுகூடல் வரை வந்துள்ள தண்ணியடிக் கலாசார ஒன்றுகூடல்களை ஒன்றுமே சொல்லாத சமுதாய சீர்திருத்தவாதிகள் சிலர் அச்சுவலை சந்திப்பைக் காரணம் காட்டி சாடுவது ஏன்?///

இது ஒரு நல்ல கேள்வி. எல்லாம் ஒரு ட்ராமா லோஷன் அண்ணா. இப்ப பிள்ளையளின்ர பிறந்த நாள் பார்ட்டியைச் சாட்டி அப்பர்மார் குடிக்கினம். ஏலவே தெரியும் முக்கால்வாசிப் பேருக்கு ‘தாக சாந்தி' இருக்கெண்டு. முதலிலேயே அதை வேண்டாம் எண்டு சொல்லியிருக்கோணும். இப்ப திட்டிப் பிரயோசனமில்லை.

துரதிர்ஷ்டவசமாக இருக்கிறம் அமைப்பின் அழைப்பிதழ் வலைப்பதிவர்களுக்கு ஒரு மாயமான நம்பிக்கையைக் கொடுத்தது என்பதே உண்மை. ‘வலைப்பதிவர்களையும், அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகத்தினரையும்' என்று தொடங்கும் வாசகத்திலேயே வலைப் பதிவர்களுக்கு முக்கியத்துவம் இருக்கும் என்கிற நம்பிக்கை தூவப்பட்டிருப்பதும், 'நிகழ்வில் பங்கெடுக்க விரும்பும் வலைப்பதிவர்கள் வரும் புதன் கிழமைக்கு முன்னதாக தமது வரவினை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகிறோம்' என்ற வாசகமும் பதிவர்களைக் குழப்பியடித்திருக்கும் என்பது என்னுடைய கருத்து.//

ம்ம்ம்ம்.. அதே அதே.. :)
ஆனா குழம்புகிறவர்களா நம்ம தெளிந்த பதிவர்கள் ??

ARV Loshan said...

Balavasakan said...
ரொம்ப சீரியசான பதிவு ........ரொம்ப நாளைக்கு பிறகு ...//
சகோ, எனது ஊடக சுதந்திரம் பதிவு படிக்கவில்லையோ?

000000000000000

என்ன கொடும சார் said...
>அது சரி.. பூரணை தினமன்று public ஆக தண்ணி பாட்டி போட்டிருக்காங்க.. பொலிஸ் கிட்ட சொல்லி கொடுக்கணும். NGO காசு விளையாடுது. //
எவ்வளவோ பண்ணிட்டாங்க.. ;)

//அத்துடன் குடிப்பவர்களை வெறுப்பவனுமல்லன்.//
ஏன் இந்த நிலை. சமூகப்பொறுப்புணர்வுடனான நிலையை ஒரு ஊடகவியலாளராக நீங்கள் எடுக்கவேண்டும் என எதிர்பார்க்கிறேன். பிழையான விடயத்தில் ஏன் நழுவல் போக்கு?//
சமுதாயத்துக்கு இடையூறாக இது வந்தால் கேள்வி கேட்கலாமே தவிர மற்றவர் சுதந்திரத்தில் தலையிட நாம் யார்?

//தலைப்பு செய்திகளை வேடிக்கை ஆக்கியவர் என்று எனக்கு அவர் மீது தனிப்பட்ட விமர்சனமும் உள்ளது//

அந்த பத்திரிகை கூட வேடிக்கை பத்திரிகை. (அல்லது ஆச்சரியக்குறி பத்திரிகை). காசு கொடுத்து வாங்குபவர்கள் அடுத்த வேடிக்கைகாரர்கள்.

வானொலி தொலைக்காட்சிகளில் இந்தியத்திணிப்பை எதிர்க்கும் பதிவர்கள் இப்பாணி தொடர்பாக வாய்மூடி மௌனமாக இருப்பது என்னவோ? //

அடுத்த பதிவா நீங்களே இது பற்றி சொல்லுங்களே..

அண்ணா, அச்சுவலை சந்திப்பின் agenda தெரியாமலே என்னோடு சண்டை போட தயாரானவர்கள் போர்முரசு கொட்டியவர்கள் தாமாகவே agendaவை கற்பனை
செய்தவர்கள் எல்லாரையும் நினைச்சா சிரிப்பு சிரிப்பா வருது.. //
எப்போதுமே யுத்ததுக்க் தயார் தானா?
தனியனாகிப் போக முயலாதீர்.. :)

ஒரு கேள்வி? ஒரு அழைப்பிதழை விளங்கிக்கொள்ள முடியாதவர்களா சமூகத்துக்கு நன்மை செய்ய பதிவுலகில் குதித்திருக்கிறார்கள்?//

இதையும் ஒரு தலைப்பாக இட்டு பதிவு போட்டா நிச்சயம் ஹிட்ஸ் எடுக்கலாம்..

ARV Loshan said...

மருதமூரான். said...
////தனிப்பட்ட முறையில் என்னைப் பொறுத்தவரை எந்தவொரு ஏமாற்றமோ, கோபமோ இல்லை. காரணம் இது இப்படி தான் நடைபெறும் என்பது நான் ஏற்கெனவே எதிர்பார்த்ததும் அறிந்ததும்..////

athey....... athey//

நீங்களும் உரையாற்றியவர் தானே? ;)

000000000000000

Subankan said...
நிகழ்ச்சி நிரலும், இயற்கையும் பல எரிச்சல்களைத் தந்திருந்தாலும், பரஸ்பரம் அதிகரித்த எதிர்பார்ப்புகளால்தான் இந்த ஏமாற்றம்.//
உண்மை தான்.. ஏமாற்றம் உங்கள் முகத்திலே தெரிந்தாலும் கலகலப்பாக பேசி போனது நிறைவைத் தந்தது

ARV Loshan said...

யோ வாய்ஸ் (யோகா) said...
ரொம்ப சீரியசான பதிவு. ரொம்ப எதிர்பார்த்து போனதால் ரொம்பவே ஏமாந்து போனதாக உணர்கிறேன். ஆனாலும் எதிலும் பொசிடிவானதை எடுத்து கொண்டு நெகடிவானதை அனுபவமாக்கி கொள்ளுவோம் என்னும் கொள்கையில் இந்த சந்திப்பில் முகம் தெரியா பதிவர்கள் பலரோடு மனம் விட்டு பேச கிடைத்தது ரொம்ப மகிழ்ச்சியான விடயமாக எண்ணுவோம்.

தாக சாந்தி விடயத்தில் நானும் உங்களது கருத்தியலை தான் முன்வைக்கிறேன்.//

உங்கள் இரு பதிவுகளையும் வாசித்ததில் புரிந்து கொண்டேன்,, நன்றி

000000000000000

பெயர் சொல்ல விரும்பாதவர். said...
வயதில் மூத்தவர்கள் பெரியவர்கள் எல்லாம் உரையாற்றும் போது சத்தம் போட்டுக்கொண்டு இருந்த நாம் மட்டும் திறமா.மற்றவர்களை விமர்சிப்பதற்கு எமக்கு தகுதி உண்டா தெரியவில்லை?//

அதெல்லாம் சரி தான் நண்பரே.. அதயே தான் நானும் சொல்லி இருக்கிறேன்.. பெயரையும் பொது இடத்தில் சொல்வதும் ஒரு நாகரிகம் தான்..

ஒலித் தெளிவின்மை தான் பலபேரின் பேச்சை (என்னுடையது உட்பட) பின்னாலிருந்தோர் கேட்க முடியாமல் போனதென அறிந்தேன்..
வந்திருந்த உங்களுக்கும் தெரிந்திருக்குமே? உண்மையா?

ARV Loshan said...

கனககோபி said...
//விரும்பியோர் குடிக்கலாம்..குளிக்கலாம்.. இல்லை என் போல மறுக்கலாம்..//

ஒருவரைக் குடிக்க வேண்டாம் என்று தடுக்க எமக்கு எந்த உரிமையும் இல்லை என்றாலும் சற்று வெளைக்கே குடி எல்லாம் தொடங்கியதால் தான் நிகழ்ச்சி மேலும் கெட்டது என நான் நம்புகிறேன்
(எனினும் குடித்த பலரால் ஏற்படுத்தப்பட்ட நகைச்சுவைகளைப் பார்த்து சிரித்து எனக்கு தலைவலி வந்தது வேறுகதை)

எனினும் அண்ணா,
அச்சுவலை என்பதில் வலை என்பது எம்மைத் தானே குறிக்கிறது.
வலை என்பது குறிக்கும் வலைப்பதிவர்கள் நிகழ்ச்சியில் ஓர் மூலையில் நின்ற உணர்வு.
இரண்டாவது கொட்டகையில் நின்ற எனக்கு, சுபாங்கன் அண்ணாவுக்கு, யோகா அண்ணாவுக்கு, சந்ரு அண்ணாவுக்கு, மருதமூரான் அண்ணாவுக்கு எல்லாம் நீங்கள் கதைத்த எதுவுமே விளங்கவில்லை. அதன் பிறகு தான் நாங்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் தனியே நட்புடன் கலந்துரையாடத் தொடங்கினோம்.

எனக்கு நிறையப்பதிவர்களைச் சந்தித்த மகிழ்ச்சி, திருப்தி இருந்தாலும் திருமண வீட்டிற்கு அழைப்பிதழ் கொடுத்துவிட்டு வாசலில் மறித்து வைத்த உணர்வு.

பதிவர்கள் சார்பாக ஒருவரையாவது அனுபவங்களைப் பகிரவோ, ஏதாவது கதைக்கவோ அனுமதித்திருக்க வேண்டும்.

இல்லை அவர்கள் தான் முழுமையாக இருப்பார்கள் எனில் சந்திப்பை இருக்கிறமின் கொள்கைவிளக்க சந்திப்பு என மாற்றியிருக்கலாம்.

2 ஆவது சந்திப்புக்கு நானும் ஆவலுடன் இருக்கிறேன்...
நீங்கள் சொன்னது போல புதிய குழு ஒன்று கிளம்பி சிறப்பாக செய்யும் என்றும் அதில் நிச்சயமாக நானும் இருப்பேன் என்றும் நம்பிக்கை இருக்கிறது.

எனினும் எங்கள் முதலாம் பதிவர் சந்திப்பை மேலும் வெற்றிகரமாக, பெரு வெற்றி பெற்ற ஒன்றாக மாற்றிய இருக்கிறமிற்கு நன்றி.//

நன்றி கோபி.. உங்கள் சிரிப்பும் எனக்கு நிறைவைத் தந்தது..
உங்கள் படங்களுக்கும் நன்றிகள்

ARV Loshan said...

டிலான் said...
அதுசரி பதிவர்கள், ஒலிபரப்பாளர்கள் என்றாலே நாங்கள் பெரிய ஆக்கள்தான் என்று பலபேர் நினைத்துக்கொண்டிருக்கின்றார்களே அது ஏன் லோசன்???//
நீங்களும் தவறணை திறந்து பதிவர் ஆகிவிட்டீர்கள் தானே? அப்படியா என்று நான் உங்களையும் கேட்கலாமா? ;)

அப்படி பெரிய ஆக்கள் எண்டு நீங்கள் நினைக்கும் ஆட்களிடம் கேட்கவேண்டிய கேள்வி இது..

00000000000000

கார்த்தி said...
நடந்தது எல்லாம் நன்மைக்கே. இரண்டாவது பதிவர் சந்திப்பிற்காக காத்திருக்கிறோம்..//
அப்படியே ஆகட்டும் :)

maruthamooran said...

/////LOSHAN

மருதமூரான். said...
////தனிப்பட்ட முறையில் என்னைப் பொறுத்தவரை எந்தவொரு ஏமாற்றமோ, கோபமோ இல்லை. காரணம் இது இப்படி தான் நடைபெறும் என்பது நான் ஏற்கெனவே எதிர்பார்த்ததும் அறிந்ததும்..////

athey....... athey//

நீங்களும் உரையாற்றியவர் தானே? ;)/////

ஆமாம் லோஷன்...

என்னை 'இருக்கிறம்' நிர்வாகிகள் அழைத்ததன் பெயரில் உரையாற்றினேன். 'அச்சுவலை சந்திப்பு' இவ்வளவு எதிர்மறையான விடயங்களை தோற்றுவிக்கும் என்று முதலில் ஊகிக்கவில்லை. ஆனால், அதன்போக்கு அதனை ஓரளவு சொல்லியே சென்றது. பதிவர்கள் சில விளக்கமின்மைகளினாலேயே, பலத்த ஏமாற்றத்தை சந்தித்து விட்டனர். குறித்த சந்திப்பு தொடர்பில் பதிவிடும் எண்ணம் எனக்கு இல்லை.

'அச்சுவலை' சந்திப்புக்கு பின்னர் வந்துள்ள பதிவுகள் பலவற்றில் பலத்த ஏமாற்றத்தின் வெளிப்பாடே தெரிகிறது. விரைவில் பதிவுலகம் இரண்டாவது பதிவர் சந்திப்பை வெற்றிகரமாக நடத்தி முடிக்கவேண்டும். அந்த முயற்சிகளுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

ஆதித்தன் said...

//பல பதிவர்கள் முதல் பதிவர் சந்திப்பை போலவே இதனை எண்ணி நிறைய எதிர்பார்த்ததே ஏமாற்றத்துக்கான காரணம் என நான் எண்ணுகிறேன்.//

நீங்கள் சொல்லுவது உண்மைதான். ஆனாலும் அப்படி எதிர்பார்த்ததில் என்ன பிழை?
இருக்கிறம் எங்களைப் பயன்படுத்தி சந்தைப்படுத்தலை மேற்கொள்ளவேண்டுமானால், அதை நேரடியாக முதலிலேயே தெளிவாக சொல்லியிருக்கலாமே? வலைபதிவர்களுடனான சந்திப்பு என்ற தூண்டில் எதற்கு?
இது ஒரு நல்லபாடம்தான்!

நீங்கள் கடைசியாக சொன்னதுபோல் எல்லாருடைய எதிர்பார்ப்பும் “2ம் வலைப்பதிவர் சந்திப்பின்’ மேல் இருக்கிறது.

KANA VARO said...

////தனிப்பட்ட முறையில் என்னைப் பொறுத்தவரை எந்தவொரு ஏமாற்றமோ, கோபமோ இல்லை. காரணம் இது இப்படி தான் நடைபெறும் என்பது நான் ஏற்கெனவே எதிர்பார்த்ததும் அறிந்ததும்..////

athey....... athey//


இருக்கிறமுக்காக பல இடங்களில் முட்டி மோதிய நான் இதில் அடக்கியே வாசிக்கிறேன்.. காரணம் இருக்கிறமில் பிழை இல்லை. அழைப்பிதழையும் நிகழ்வையும் விளங்கி கொள்ளாதவர்கள் நான் தரும் விளக்கத்தையா விளங்கி கொள்ள போகிறார்கள்???? ஏற்பாட்டிலும் சிறு பிழை இருக்கிறது... இதை ஒரு படிப்பினையாக எல்லோரும் எடுங்களேன்...

கலந்து கொண்ட பலருக்கு நான் அருமையான அவர்கள் புகைப்படங்கள் வழங்கியிருக்கிறேன் என்ற சந்தோசம் எனக்கு...

என்ன கொடும சார் said...

//அடுத்த பதிவா நீங்களே இது பற்றி சொல்லுங்களே..//

வர்த்தக நோக்கிலான நிறுவனங்களை விமர்சித்து ஒரு பதிவு போட்டால் இலவச consultation மாதிரி போகிவிடும். 5 சதம் தருவாங்களா நமக்கு? நான் அக்கறை கொண்ட ஊடகங்களையும் தாங்க இயலாத தொல்லைகளையுமே பதிவாக இடவேண்டும் என நான் கருதுகிறேன்.

//எப்போதுமே யுத்ததுக்க் தயார் தானா?
தனியனாகிப் போக முயலாதீர்.. :)//
கருத்து ரீதியாக விவாதிப்பதற்கு எப்போதும் தயார்தான். ஒரு விடயத்தில் எதிர்க்கும் ஒருவரை இன்னொரு விடயத்தில் சேர்ந்து போகவும் எனக்கு முடியும். ஆனால் ஓரிரண்டு மாதங்களாக கற்பனைசெய்த காரணங்கட்காக பொடிவைத்து திட்டத்தொடங்கிய மஹாஜனங்களுக்கே என்னை தனியாக்கிய பாவமும் போய்ச்சேரட்டும். அண்மையில்கூட இருக்கிறம் சந்திப்பு தொடர்பான பதிவில் யாரோ ஒருவர் எனது பெயரை பாவித்து ஒரு கருத்தை சொல்லியிருந்தார். அதை என்னுடைய கருத்து அல்ல என்றும் சொல்லியிருந்தேன். அதன்பின்னும் ஓரிருவர் எதிர்த்தேன் என அர்த்தபப்டுத்தி திட்டியிருந்தார்கள். அவர்களை நோக்கிய கேள்வியே அது.

//இதையும் ஒரு தலைப்பாக இட்டு பதிவு போட்டா நிச்சயம் ஹிட்ஸ் எடுக்கலாம்..//
ஹிட்ஸ் என்றால் தர்ம அடியா? :D

attackpandiyan said...

ஏன் குடிக்க கூடாது? நண்பர்கள் சந்தித்து கொள்ளும் போது சோம பானம் இப்போதெல்லாம் அவசியம் தேவைபடுகிறது.. அந்த வகையில் பதிவர் சந்திப்பில் இது அவசியம் ஏனெனில் நாட்டின் 'குடி'மகன்களை விரைவில் நெருக்கமான கருத்துகளை பகிர்ந்து கொள்ள தக்க வகையில் உதவுகிறது.. ஆனால் 90 க்கு மேல் செல்லகூடாது..உன் பதிவுகள் சரியில்லை..என்னை பற்றி ஏன் எழுதினாய் என்று அக்க போராக மாறிவிடும் .. அப்படி போனால் இங்கு நடந்தது போல மூக்கை உடைத்து கொண்டு ஆஸ்பதிரியில் படுக்கவேண்டியதுதான்.. அதை தடுக்க இனி வரும் பதிவர் சந்திப்பில் லோசன் அண்ணா போன்ற குடிக்காதவர்கள் ஐ.நா சபை போன்று கவனமாக இருந்து.. சண்டை மூளாமல் தடுத்திடல் வேண்டும்

வேந்தன் said...

நேரடி ஒளிபரப்பை ஆவலுடன் எதிர் பார்த்தேன். இடையில் தடைப்பட்டது வருத்தமளித்தது.:( நான் பிரித்தானியாவில் இருப்பதால் கலந்து கொள்ள முடியவில்லை. அதனால் இது பற்றி கருத்துச் சொல்ல விரும்பவில்லை....
அடுத பதிபவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.

ஜோ.சம்யுக்தா கீர்த்தி said...

ஆம் நீங்கள் கூறிய கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியவை தான் ஆனால் உங்களை போல் ஏலவே இது தான் நடக்கும் என அனைவருக்கும் தெரிந்திருந்தால் இப்படியான பிரச்சினைகள் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என்பது என் கருத்து நண்பர்களை கண்டு மகிழ்வதில் மட்டுமே அனைவரின் கவனமும் இருந்திருக்கும்.

நினைத்து வந்தது நடக்கவில்லை என்றாலும் நண்பர்கள், பதிவர்கள், உங்கள் அனைவரையும் கண்டதில் மகிழ்ச்சி.

அதை விடுவோம் முடிந்ததை பற்றி பேசி ஆகப்போவது ஒன்றும் இல்லை என்றாலும் நம் பதிவர் சந்திப்பு அனைவர் மத்தியிலும் பிரபல்யம் அடைந்துள்ளது என்பது மகிழ்ச்சிக்குரிய விடயமே!

ஆம்
இருக்கிறமுடனான சந்திப்பு = (கலந்துரையாடல்) ஏமாற்றம் + (பதிவர்களுடனான சந்திப்பு) மகிழ்ச்சி

ஆம் 2வது பதிவர் சந்திப்பு பற்றிய பெரியதொரு எதிர்ப்பார்ப்பு உள்ளது நுண்ணிய விடயமும் அவதானிக்கப்படும் என்பது தெளிவாகின்றது எனவே மிகக் கவனத்தோடு 2வது பதிவர் சந்திப்பை ஏற்பாட்டு குழுவினர் செய்ய வேண்டும்.

சயந்தன் said...

அடடா..பதிவர் ஆனா இப்படி எல்லாம் சங்கடங்கள் உண்டா? லோசன் அண்ணா. நானும் ஒரு வலைப்பதிவை ஆரம்பித்து உள்ளேன். நான் விரும்பவர்களில் ஒரவரான உங்களை அழைக்கின்றேன். வந்தபாரங்கள்.என் மனதிற்கினியவர்களில் ஒருவரான உங்களை அன்போடு அழைக்கின்றேன். வந்துபாருங்கள்.

பகீ said...

////////////இரண்டாவது பதிவர் சந்திப்பே அது... யார் எங்கே நடத்தப் போகிறார்கள்? போகிறோம் என்பது கேள்வி..

யார் எங்கே எப்போது ஏற்பாடு செய்தாலும் ஒரு விஷயம்..

அனைவரும் எம்மைக் கூர்ந்து நோக்குகிறார்கள்..

அடுத்த பதிவர் சந்திப்பை (கவனியுங்கள் பதிவர் சந்திப்பு) ஏற்பாடு செய்வோர் மிக நுணுக்கமாக, அனைத்து விஷயங்களையும் கவனித்து,உள்வாங்கி, விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளும் மனத் திடத்தோடு ஏற்பாடு செய்ய வேண்டும்.////////////////

ஆமோதிக்கிறேன். வழிமொழிகின்றேன்.

Unknown said...

//
அடுத்த பதிவர் சந்திப்பை (கவனியுங்கள் பதிவர் சந்திப்பு) ஏற்பாடு செய்வோர் மிக நுணுக்கமாக, அனைத்து விஷயங்களையும் கவனித்து,உள்வாங்கி, விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளும் மனத் திடத்தோடு ஏற்பாடு செய்ய வேண்டும்.//

அடுத்த சந்திப்பை யார் ஒழுங்கு செய்தாலும் எல்லா விடயங்களையும் முற்றுமுழுதாக 100 வீதம் சரியாக செய்வது எமக்கு அப்பாற்பட்ட விடயம்.
ஆனால் ஒருபோதும் விருந்தினர்களினுடையதொ அல்லது வருகை தந்தவர்களது மனம் நோகும்படி எந்த ஏற்பாடுகளோ, திட்டங்களோ இருக்காது என்பது எனது கருத்து.

(We should expect the worse, and should do our best. We are on that path.)

Unknown said...

// டிலான் said...

அதுசரி பதிவர்கள், ஒலிபரப்பாளர்கள் என்றாலே நாங்கள் பெரிய ஆக்கள்தான் என்று பலபேர் நினைத்துக்கொண்டிருக்கின்றார்களே அது ஏன் லோசன்???//

உங்களைப் போன்றவர்களுக்காக எனது பதிவில் பதிவிட்டிருக்கிறேன்....

இங்கே சிலர் பதிவர்கள் என்றால் என்ன பெரியவர்களா?
இலவசமாக புளொகர் அல்லது வேர்ட்பிரஸில் அல்லது வேற ஒரு தளத்தில் கணக்கைத் தொடங்கிவிட்டு ஓர் யுனிக்கோட் தமிழ் எழுதுவானும், ஒரு கணணியும், ஓர் இணைய இணைப்பும் இருந்தால் யாருமே பதிவிடலாமே.
பிறகென்ன நீங்கள் நின்றால் ஏதோ ஜனாதிபதி நின்றதைப் போல குறை சொல்கிறீர்கள் என கேள்வி எழுப்பலாம்.
நிச்சயமாக... நாம் சாதாரமானவர்கள் தான்...
எம்மிடம் இருப்பது சிறிய நகைச்சுவை உணர்வும், சிறிய தேடலும் தான்...
நாங்கள் டம்மிகள் தான்...
ஆனால் டம்மிகளை சந்திக்கவும், அவர்கள் மூலமாக ஒரு சஞ்சிகையை பிரபலப்படுத்த நடவடிக்கை எடுத்தீர்கள் என்றால் அந்த சஞ்சிகையை என்னவென்று சொல்வது?
(சஞ்சிகையின் பிரபலத்திற்கு(ம்) இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது என்பதை திரு.இளையதம்பி தயானந்தா ஏற்றுக் கொண்டதை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்)

Admin said...

அதிகம் எதிர்பார்த்துவிட்டேன். பல பதிவர்களை சந்தித்தேன் என்பதில் சந்தோசமே.

kethees said...

//இவ்வளவுக்கும் நான் குடிப்பவனல்லன்.. அத்துடன் குடிப்பவர்களை வெறுப்பவனுமல்லன்//
nice.

வெண்காட்டான் said...

சுடரொளில் அவ்விதமான தலையங்களை எழுதியவர் இரத்தினசிங்கம். மூத்த ஊடகவிளலாளர். வித்தியாதரன் அவர்கள் அவரின் வயதிற்கும் அறிவிற்கும் கொடுத்த மரியாதையே அது. ஊடகவியலாளராக வளர்ந்துவரும் நீங்கள் ஊடகங்களில் யார் யார் ஆசிரியர்கள் என்ற அடிப்படை விடயத்தையாவது அறிந்து கொள்ளவேண்டும்.

ஆதிரை said...

சந்திப்பு இப்படித்தான் இருந்திருக்கும் என்பதை விட சந்திப்புக்குப் பின்னர் இப்படியான ஏமாற்றம் விஞ்சிய கோபம் கொண்ட பதிவுகள் வெளிவரும் என முதல்நாளே நண்பர் வந்தியத்தேவன் போன்றவர்களுக்கு கூறியிருந்தேன். சிலருக்காக பரிதாபமும் பட்டேன். :)

மூன்று மணிக்கே பதிவர்கள் அங்கே கூடிவிட நேரடி ஒளிபரப்பினூடு இணைந்திருந்த எனக்குள் ஒரு பயம்... உங்களிடம் நல்லதொரு அர்ச்சனை வாங்கிவிடுவேனோ என.

ஆனால், நாலு மணிக்குத்தான் நேரம் தவறாமல் நிகழ்ச்சியை ஆரம்பித்தார்கள். :)

ஆதிரை said...

@வரோ
//அழைப்பிதழையும் நிகழ்வையும் விளங்கி கொள்ளாதவர்கள் நான் தரும் விளக்கத்தையா விளங்கி கொள்ள போகிறார்கள்????
அப்படி புதுசாக என்னதான் விளக்கம் சொல்லப் போறீர்கள். அச்சுவலைச் சந்திப்பில் வலைப்பதிவர்கள் காட்சிப் பொருளானார்கள்.

காரணம் இருக்கிறமில் பிழை இல்லை.
ஏற்பாட்டிலும் சிறு பிழை இருக்கிறது.
இந்த சந்திப்பை ஏற்பாடு செய்தவர்கள் 'இருக்கிறம்' தான் என நான் எண்ணிக்கொண்டிருக்கிறேன். அது தப்பா?

//இதை ஒரு படிப்பினையாக எல்லோரும் எடுங்களேன்...
ஆமாம் வரோ... வலைப்பதிவர்களுக்கு படிப்பினை சொன்ன இருக்கிறமுக்கு வாழ்த்துக்கள். :P


கலந்து கொண்ட பலருக்கு நான் அருமையான அவர்கள் புகைப்படங்கள் வழங்கியிருக்கிறேன் என்ற சந்தோசம் எனக்கு...

ஆ.ஞானசேகரன் said...

//அடுத்த பதிவர் சந்திப்பை (கவனியுங்கள் பதிவர் சந்திப்பு) ஏற்பாடு செய்வோர் மிக நுணுக்கமாக, அனைத்து விஷயங்களையும் கவனித்து,உள்வாங்கி, விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளும் மனத் திடத்தோடு ஏற்பாடு செய்ய வேண்டும்.//

அடுத்த பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துகள்

ARV Loshan said...

வெண்காட்டான்.. உங்களுக்கு வேறு வேலையே இல்லையா?
நன் சுய பெயரில் எழுதும் துணிச்சலும் உடையவன் ஆதலால் இந்தக் கருத்தை வித்தி அண்ணாவிடமும் நேரே சொல்லும் திடமும் உண்டு.
ரத்தினசிங்கம் அவர்களையும் எனக்கு நன்றாகவே தெரியும்.. பழகியும் இருக்கிறேன். உங்களை விட அதிகளவில் ஊடகத்துறை அனுபவம் எனக்குண்டு. இலங்கையில் வாழ்ந்த அனுபவமும் எனக்குள்ளது.

சுடரொளியில் பொறுப்பு ஆசிரியர் வித்தியாதரன் அவர்கள் என்ற காரணத்தாலே அவ்வாறு குறிப்பிட்டுள்ளேன்.

எல்லாம் தினசரி ஆசிரியர்களையும் நன்கே தெரியும் எனக்கு.
களத்துமேடு தளத்தில் நீங்கள் பின்னூட்டம் போட்டது போல் யார் யார் எங்கே வேலை செய்கிறார்கள் என்று தெரியாதவனல்ல.

சிந்தனை சிறகினிலே தளத்தில் நீங்கள் கேட்டதற்கு இங்கே பதில் = என் நிகழ்ச்சிகளில் பிழை பிடிக்கவேண்டுமாக இருந்தால் இணையத்தில் கேளுங்கள்..

உங்கள் வேலை கெட்ட தனத்துக்காக எனக்கு அதனை பதிவேற்றிக் கொண்டிருக்க நேரமும் இல்லை;தேவையும் இல்லை.


இன்னுமொன்று - மற்றவர்களில் தமிழ் பிழை, தகுதி பிழை பிடிக்க முதல் சுய முகத்தோடு வாருங்கள்.. உங்கள் எழுத்துப் பிழை, தமிழ்ப் பிழை, மனப் பிழைகளை திருத்திக் கொள்ளுங்கள்..

ARV Loshan said...

மருதமூரான். said...
என்னை 'இருக்கிறம்' நிர்வாகிகள் அழைத்ததன் பெயரில் உரையாற்றினேன். 'அச்சுவலை சந்திப்பு' இவ்வளவு எதிர்மறையான விடயங்களை தோற்றுவிக்கும் என்று முதலில் ஊகிக்கவில்லை. ஆனால், அதன்போக்கு அதனை ஓரளவு சொல்லியே சென்றது. பதிவர்கள் சில விளக்கமின்மைகளினாலேயே, பலத்த ஏமாற்றத்தை சந்தித்து விட்டனர். குறித்த சந்திப்பு தொடர்பில் பதிவிடும் எண்ணம் எனக்கு இல்லை.

'அச்சுவலை' சந்திப்புக்கு பின்னர் வந்துள்ள பதிவுகள் பலவற்றில் பலத்த ஏமாற்றத்தின் வெளிப்பாடே தெரிகிறது. விரைவில் பதிவுலகம் இரண்டாவது பதிவர் சந்திப்பை வெற்றிகரமாக நடத்தி முடிக்கவேண்டும். அந்த முயற்சிகளுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.//

நான் சும்மா தான் அந்தக் கேள்வியைக் கேட்டேன்,. எம்மிருவரையும் தங்கள் சஞ்சிகையில் பங்களிப்பவராயும் தான் கேட்டிருந்தார்கள்.அது அனைவருக்குமே தெரியும்..

நிச்சயமாக அடுத்த சந்திப்புக்கு ஆக்கபூர்வமாகப் பங்களிப்போம்..

==================

ஆதித்தன் said...
//பல பதிவர்கள் முதல் பதிவர் சந்திப்பை போலவே இதனை எண்ணி நிறைய எதிர்பார்த்ததே ஏமாற்றத்துக்கான காரணம் என நான் எண்ணுகிறேன்.//

நீங்கள் சொல்லுவது உண்மைதான். ஆனாலும் அப்படி எதிர்பார்த்ததில் என்ன பிழை?
இருக்கிறம் எங்களைப் பயன்படுத்தி சந்தைப்படுத்தலை மேற்கொள்ளவேண்டுமானால், அதை நேரடியாக முதலிலேயே தெளிவாக சொல்லியிருக்கலாமே? வலைபதிவர்களுடனான சந்திப்பு என்ற தூண்டில் எதற்கு?
இது ஒரு நல்லபாடம்தான்!//

அதை எல்லாம் எப்படி நேரே சொல்லுவது? நாம் புரிந்துகொள்ள வேண்டாமா? இதெல்லாம் ஒருவகை மறைமுக சந்தைப்படுத்தல் யுக்தி சகோ.. நீங்களும் சேர வேண்டிய இடம் செர்ந்தாச்செல்லோ.. இனி தெரியும்.. ;)

நீங்கள் கடைசியாக சொன்னதுபோல் எல்லாருடைய எதிர்பார்ப்பும் “2ம் வலைப்பதிவர் சந்திப்பின்’ மேல் இருக்கிறது.//

:) உண்மை

ARV Loshan said...

சந்ரு said...
அதிகம் எதிர்பார்த்துவிட்டேன். பல பதிவர்களை சந்தித்தேன் என்பதில் சந்தோசமே.//
எனக்கும்.. :) இந்த சிறு உருவத்துக்குள்ளேயா இத்தனை வேகமும் சிந்தனையும் என்று ஆச்சரியப் பட்டேன்.. :)

=========

kethees said...
//இவ்வளவுக்கும் நான் குடிப்பவனல்லன்.. அத்துடன் குடிப்பவர்களை வெறுப்பவனுமல்லன்//
nice.//

tx :)

ARV Loshan said...

VARO said...

இருக்கிறமுக்காக பல இடங்களில் முட்டி மோதிய நான் இதில் அடக்கியே வாசிக்கிறேன்.. காரணம் இருக்கிறமில் பிழை இல்லை. அழைப்பிதழையும் நிகழ்வையும் விளங்கி கொள்ளாதவர்கள் நான் தரும் விளக்கத்தையா விளங்கி கொள்ள போகிறார்கள்???? ஏற்பாட்டிலும் சிறு பிழை இருக்கிறது... இதை ஒரு படிப்பினையாக எல்லோரும் எடுங்களேன்...//
உங்கள் பதிவும் பார்த்தேன்.. மீண்டும் ஒரு இருக்கிறம் யுத்தம் தொடங்கியாச்சு போல.. ;) நடக்கட்டும்

கலந்து கொண்ட பலருக்கு நான் அருமையான அவர்கள் புகைப்படங்கள் வழங்கியிருக்கிறேன் என்ற சந்தோசம் எனக்கு...//
எனக்கும் கிடைத்தது நன்றி.. :)

------------------------------------

ARV Loshan said...

என்ன கொடும சார் said...
//அடுத்த பதிவா நீங்களே இது பற்றி சொல்லுங்களே..//

வர்த்தக நோக்கிலான நிறுவனங்களை விமர்சித்து ஒரு பதிவு போட்டால் இலவச consultation மாதிரி போகிவிடும். 5 சதம் தருவாங்களா நமக்கு? நான் அக்கறை கொண்ட ஊடகங்களையும் தாங்க இயலாத தொல்லைகளையுமே பதிவாக இடவேண்டும் என நான் கருதுகிறேன்.//

ஓகோ.. அப்பிடியோ? இதுக்குப் பேர் தான் சமூக அக்கறையோ?

//எப்போதுமே யுத்ததுக்க் தயார் தானா?
தனியனாகிப் போக முயலாதீர்.. :)//
கருத்து ரீதியாக விவாதிப்பதற்கு எப்போதும் தயார்தான். ஒரு விடயத்தில் எதிர்க்கும் ஒருவரை இன்னொரு விடயத்தில் சேர்ந்து போகவும் எனக்கு முடியும். ஆனால் ஓரிரண்டு மாதங்களாக கற்பனைசெய்த காரணங்கட்காக பொடிவைத்து திட்டத்தொடங்கிய மஹாஜனங்களுக்கே என்னை தனியாக்கிய பாவமும் போய்ச்சேரட்டும். அண்மையில்கூட இருக்கிறம் சந்திப்பு தொடர்பான பதிவில் யாரோ ஒருவர் எனது பெயரை பாவித்து ஒரு கருத்தை சொல்லியிருந்தார். அதை என்னுடைய கருத்து அல்ல என்றும் சொல்லியிருந்தேன். அதன்பின்னும் ஓரிருவர் எதிர்த்தேன் என அர்த்தபப்டுத்தி திட்டியிருந்தார்கள். அவர்களை நோக்கிய கேள்வியே அது. //


உங்க பிரச்சினை ஒரு தனிப் பிரச்சினை. தேவையற்ற விஷயங்களில் தேவையற்ற விதத்தில் மூக்கை நீட்டுவது தான் காரணம் என்று சுவாமி பதிவானந்தா உங்களுக்கு சொல்ல சொன்னார்..

//கற்பனைசெய்த காரணங்கட்காக பொடிவைத்து திட்டத்தொடங்கிய மஹாஜனங்களுக்கே என்னை தனியாக்கிய பாவமும் போய்ச்சேரட்டும்//
ஆனால் இதை நானும் ஏற்றுக் கொள்மாட்டேன்.. உங்களை நீங்கள் நிரூபிக்கவில்லை.. நீங்கள் வரவே இல்லை என்பதற்கு சாட்சிகள் உள்ளன. (அவீய்ந்க ராஜாவுக்கு நீங்கள் இட்ட பின்னூட்டம் உட்பட.. வந்தேன் என்று சொல்ல உங்களிடம் ஒரு பிடி கூட இல்லையே சகோ..)

//இதையும் ஒரு தலைப்பாக இட்டு பதிவு போட்டா நிச்சயம் ஹிட்ஸ் எடுக்கலாம்..//
ஹிட்ஸ் என்றால் தர்ம அடியா? :D.//
வாங்கிய பிறகு மீண்டும் அதையும் போட்டு ஹிட்ஸ் எடுக்கலாம்.. இலங்கையில் முதன் முறையாக என்று.. ;)

அதுசரி அடுத்த பதிவர் சந்திப்பு நடக்கப் போகுதாமே.. வருவீங்களா? அதுக்காவது.. ;)

ARV Loshan said...

attackpandiyan said...
ஏன் குடிக்க கூடாது? நண்பர்கள் சந்தித்து கொள்ளும் போது சோம பானம் இப்போதெல்லாம் அவசியம் தேவைபடுகிறது.. அந்த வகையில் பதிவர் சந்திப்பில் இது அவசியம் ஏனெனில் நாட்டின் 'குடி'மகன்களை விரைவில் நெருக்கமான கருத்துகளை பகிர்ந்து கொள்ள தக்க வகையில் உதவுகிறது.. ஆனால் 90 க்கு மேல் செல்லகூடாது..உன் பதிவுகள் சரியில்லை..என்னை பற்றி ஏன் எழுதினாய் என்று அக்க போராக மாறிவிடும் .. அப்படி போனால் இங்கு நடந்தது போல மூக்கை உடைத்து கொண்டு ஆஸ்பதிரியில் படுக்கவேண்டியதுதான்.. அதை தடுக்க இனி வரும் பதிவர் சந்திப்பில் லோசன் அண்ணா போன்ற குடிக்காதவர்கள் ஐ.நா சபை போன்று கவனமாக இருந்து.. சண்டை மூளாமல் தடுத்திடல் வேண்டும்//

ஆகா,.. அருமையான ஐடியாக்கள் தந்த அண்ணன் அட்டாக் வாழ்க.. (ஏன்யா நான் என்ன பாவம் செய்தேன்? என் எனக்கு ஐ.நா பதவி??)

=================

வேந்தன் said...
நேரடி ஒளிபரப்பை ஆவலுடன் எதிர் பார்த்தேன். இடையில் தடைப்பட்டது வருத்தமளித்தது.:( நான் பிரித்தானியாவில் இருப்பதால் கலந்து கொள்ள முடியவில்லை. அதனால் இது பற்றி கருத்துச் சொல்ல விரும்பவில்லை....
அடுத பதிபவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.//

நன்றி வேந்தன்

ARV Loshan said...

ஜோ.சம்யுக்தா கீர்த்தி said...
ஆம் நீங்கள் கூறிய கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியவை தான் ஆனால் உங்களை போல் ஏலவே இது தான் நடக்கும் என அனைவருக்கும் தெரிந்திருந்தால் இப்படியான பிரச்சினைகள் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என்பது என் கருத்து நண்பர்களை கண்டு மகிழ்வதில் மட்டுமே அனைவரின் கவனமும் இருந்திருக்கும்.

நினைத்து வந்தது நடக்கவில்லை என்றாலும் நண்பர்கள், பதிவர்கள், உங்கள் அனைவரையும் கண்டதில் மகிழ்ச்சி.

அதை விடுவோம் முடிந்ததை பற்றி பேசி ஆகப்போவது ஒன்றும் இல்லை என்றாலும் நம் பதிவர் சந்திப்பு அனைவர் மத்தியிலும் பிரபல்யம் அடைந்துள்ளது என்பது மகிழ்ச்சிக்குரிய விடயமே!

ஆம்
இருக்கிறமுடனான சந்திப்பு = (கலந்துரையாடல்) ஏமாற்றம் + (பதிவர்களுடனான சந்திப்பு) மகிழ்ச்சி

ஆம் 2வது பதிவர் சந்திப்பு பற்றிய பெரியதொரு எதிர்ப்பார்ப்பு உள்ளது நுண்ணிய விடயமும் அவதானிக்கப்படும் என்பது தெளிவாகின்றது எனவே மிகக் கவனத்தோடு 2வது பதிவர் சந்திப்பை ஏற்பாட்டு குழுவினர் செய்ய வேண்டும்.//

உங்கள் பதிவிலேயே உங்கள் எண்ணக் கருத்துக்கள் கண்டேன்.. :)
எண்ணப்படியே அடுத்த சந்திப்பு ஈடேறும் என நம்புவோம்..

ஒத்துழைப்பு வழங்க நான் எப்போதுமே தயார்..

=========

சயந்தன் said...
அடடா..பதிவர் ஆனா இப்படி எல்லாம் சங்கடங்கள் உண்டா? லோசன் அண்ணா. நானும் ஒரு வலைப்பதிவை ஆரம்பித்து உள்ளேன். நான் விரும்பவர்களில் ஒரவரான உங்களை அழைக்கின்றேன். வந்தபாரங்கள்.என் மனதிற்கினியவர்களில் ஒருவரான உங்களை அன்போடு அழைக்கின்றேன். வந்துபாருங்கள்.//

இதெல்லாம் சங்கடங்கள் இல்லை சயந்தன்.. சகஜம்.. :)
வருகிறேன்.. வாழ்த்துக்கள்

ARV Loshan said...

பகீ said...
////////////இரண்டாவது பதிவர் சந்திப்பே அது... யார் எங்கே நடத்தப் போகிறார்கள்? போகிறோம் என்பது கேள்வி..

யார் எங்கே எப்போது ஏற்பாடு செய்தாலும் ஒரு விஷயம்..

அனைவரும் எம்மைக் கூர்ந்து நோக்குகிறார்கள்..

அடுத்த பதிவர் சந்திப்பை (கவனியுங்கள் பதிவர் சந்திப்பு) ஏற்பாடு செய்வோர் மிக நுணுக்கமாக, அனைத்து விஷயங்களையும் கவனித்து,உள்வாங்கி, விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளும் மனத் திடத்தோடு ஏற்பாடு செய்ய வேண்டும்.////////////////

ஆமோதிக்கிறேன். வழிமொழிகின்றேன்.//

வருகைக்கு நன்றி பகீ.. நிச்சயமாக..
கடந்த முறை உங்கள் பங்களிப்பு எமக்கு தந்த வெற்றி போல அடுத்த முறையும் அமையும் என நம்புகிறோம்.

=========

கனககோபி said...
//
அடுத்த பதிவர் சந்திப்பை (கவனியுங்கள் பதிவர் சந்திப்பு) ஏற்பாடு செய்வோர் மிக நுணுக்கமாக, அனைத்து விஷயங்களையும் கவனித்து,உள்வாங்கி, விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளும் மனத் திடத்தோடு ஏற்பாடு செய்ய வேண்டும்.//

அடுத்த சந்திப்பை யார் ஒழுங்கு செய்தாலும் எல்லா விடயங்களையும் முற்றுமுழுதாக 100 வீதம் சரியாக செய்வது எமக்கு அப்பாற்பட்ட விடயம்.
ஆனால் ஒருபோதும் விருந்தினர்களினுடையதொ அல்லது வருகை தந்தவர்களது மனம் நோகும்படி எந்த ஏற்பாடுகளோ, திட்டங்களோ இருக்காது என்பது எனது கருத்து.

(We should expect the worse, and should do our best. We are on that path.)//

உண்மைதான் கோபி.. அடுத்த சந்திப்பு ஏற்பாடுகளின் தூண் தாங்கள் என்று அறிந்தோம்.. வாழ்த்துக்கள்.. உதவிகள் எப்போதும் உண்டு..

ARV Loshan said...

ஆதிரை said...
சந்திப்பு இப்படித்தான் இருந்திருக்கும் என்பதை விட சந்திப்புக்குப் பின்னர் இப்படியான ஏமாற்றம் விஞ்சிய கோபம் கொண்ட பதிவுகள் வெளிவரும் என முதல்நாளே நண்பர் வந்தியத்தேவன் போன்றவர்களுக்கு கூறியிருந்தேன். சிலருக்காக பரிதாபமும் பட்டேன். :)//

நாங்களும் இதையே சொன்னமில்ல.. ;)


மூன்று மணிக்கே பதிவர்கள் அங்கே கூடிவிட நேரடி ஒளிபரப்பினூடு இணைந்திருந்த எனக்குள் ஒரு பயம்... உங்களிடம் நல்லதொரு அர்ச்சனை வாங்கிவிடுவேனோ என.//
ஹெஹெஹெ..

ஆனால், நாலு மணிக்குத்தான் நேரம் தவறாமல் நிகழ்ச்சியை ஆரம்பித்தார்கள். :)//
:) கொழும்பின் வழமை அது மாற்ற முடியுமா?


==================
ஆதிரை said...
@வரோ
//அழைப்பிதழையும் நிகழ்வையும் விளங்கி கொள்ளாதவர்கள் நான் தரும் விளக்கத்தையா விளங்கி கொள்ள போகிறார்கள்????
அப்படி புதுசாக என்னதான் விளக்கம் சொல்லப் போறீர்கள். அச்சுவலைச் சந்திப்பில் வலைப்பதிவர்கள் காட்சிப் பொருளானார்கள்.

காரணம் இருக்கிறமில் பிழை இல்லை.
ஏற்பாட்டிலும் சிறு பிழை இருக்கிறது.
இந்த சந்திப்பை ஏற்பாடு செய்தவர்கள் 'இருக்கிறம்' தான் என நான் எண்ணிக்கொண்டிருக்கிறேன். அது தப்பா?

//இதை ஒரு படிப்பினையாக எல்லோரும் எடுங்களேன்...
ஆமாம் வரோ... வலைப்பதிவர்களுக்கு படிப்பினை சொன்ன இருக்கிறமுக்கு வாழ்த்துக்கள். :P//

இது தான் பின் நவீனத்துவப் பின்னூட்டம் என்கிறேன் நான்.. தப்பா? ;)

===========

ARV Loshan said...

ஆ.ஞானசேகரன் said...
//அடுத்த பதிவர் சந்திப்பை (கவனியுங்கள் பதிவர் சந்திப்பு) ஏற்பாடு செய்வோர் மிக நுணுக்கமாக, அனைத்து விஷயங்களையும் கவனித்து,உள்வாங்கி, விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளும் மனத் திடத்தோடு ஏற்பாடு செய்ய வேண்டும்.//

அடுத்த பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துகள்//
நன்றி நண்பா..

Hisham Mohamed - هشام said...

//இவ்வளவுக்கும் நான் குடிப்பவனல்லன்.. அத்துடன் குடிப்பவர்களை வெறுப்பவனுமல்லன்.//

ஹஹாஹஹா............

Unknown said...

//உண்மைதான் கோபி.. அடுத்த சந்திப்பு ஏற்பாடுகளின் தூண் தாங்கள் என்று அறிந்தோம்.. வாழ்த்துக்கள்.. உதவிகள் எப்போதும் உண்டு...//

நான் தூண் எல்லாம் இல்லை...
நான் கடைநிலை ஊழியன்...
தலை எல்லாம் இங்க இல்லை...
வழிநடத்திறதுக்கு நிறைய அண்ணாமார் இருக்கிறார்கள் என்பதால் சுபாங்கள், நான் எண்டு கொஞ்சப் பேர் ஆரம்பிச்சிருக்கிறம்....

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner