மீண்டும் ஒரு சந்திப்பு

ARV Loshan
31
வலைப்பதிவுப் பெருமக்களுக்கு மீண்டும் ஒரு நற்செய்தி.. மறுபடியும் நாமெல்லாம் சந்திக்கப் போகிறோம்.. வருவீங்க தானே?

இலங்கை வலைப்பதிவரின் முதலாவது சந்திப்பு பதிவர்களால் பதிவர்களுக்காக நடத்தப்பட்டது. இது பதிவர்களுக்கும் ஊடகவியலாளருக்கும் இடையிலான கலந்துரையாடல் & சந்திப்பாக இருக்கிறம் சஞ்சிகை ஏற்பாடு செய்யும் ஒரு நிகழ்வு.

அண்மைக்காலமாக இலங்கையில் உள்ள எழுத்தாளர்களுக்கு மட்டுமல்லாமல் வலைப்பதிவருக்கும் களம் அமைத்துக் கொடுக்கும் முயற்சியில் இருக்கிறம் ஈடுபட்டு வருவது நீங்கள் எல்லோரும் அறிந்ததே.

இருக்கிறம் சஞ்சிகையால் நடத்தப்படவுள்ள இந்த சந்திப்பு எதிர்வரும் நவம்பர் 2ஆம் திகதி, பூரணை விடுமுறை தினத்தன்று கொழும்பு 07இல் அமைந்துள்ள அவர்களது அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

மாலை 3 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பிக்கும் என்றும் கலந்துரையாடல்களோடு விருந்துபசாரமும் தாகசாந்தியும் இடம்பெறும் என்றும் (நம் பதிவர் சந்திப்பில் வடையும் பட்டிசும் டீயும் மட்டும் தந்தோம் என்ற நண்பர்களே சந்தோசமா?) இருக்கிறம் சார்பில் அதன் இணை ஆசிரியர் சஞ்சித் எமக்கு தெரிவிக்கிறார்..
அனைத்து வலைப்பதிவர்களையும், இலத்திரனியல்,அச்சு ஊடகவியலாளர்கள் அனைவரையும் இச் சந்திப்பில் இணைந்துகொள்ளுமாறு அழைத்துள்ளனர். கொழும்பு தவிர்ந்த பிற மாவட்டத்திலுள்ள நண்பர்களும் கலந்துகொள்ள வாய்ப்பாகவே விடுமுறை நாளில் நடத்துகின்றார்கள்.

இலங்கை வலைப்பதிவர் குழுமத்தில் தங்கள் மின்னஞ்சல்களை தந்துள்ளவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக அழைப்பை அனுப்பவதாகவும், ஊடக நிறுவனங்களுக்கு நேரில் அழைப்பைக் கையளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்தியா,மற்றும் வெளிநாடுகளில் உள்ளோரும் வரலாம்.. டிக்கெட் செலவுகள்,பயண செலவுகளை நீங்கள் யாரும் பொருட்படுத்தாத பட்சத்தில்.. எங்கள் அன்புக்கு முன்னால் இதெல்லாம் ஒரு பொருட்டா என்ன?
உங்கள் வருகைகளை எதிர்வரும் புதன்கிழமைக்கு முன்னர் உறுதிப்படுத்துமாறு கேட்டுள்ளனர்.. இருக்கிறமின் மின்னஞ்சல் irukiram@gmail.com
தொலைபேசி 0113150836

மேலதிக விபரங்கள் இருக்கிறம் சஞ்சிகையால் எமக்கு அனுப்பப்பட்டுள்ள அழைப்பில்..
வாங்க..
மீண்டும் சந்திக்கலாம்,சிந்திக்கலாம்,கை கோர்க்கலாம், கலகலக்கலாம்..
(கைகலப்பு விஷயங்கள் ஏதும் இருந்தால் பேசியும் தீர்த்துக்கலாம்.. )

Post a Comment

31Comments

Please Select Embedded Mode To show the Comment System.*