September 26, 2009

ஸ்ட்ரோசின் கண்ணியமும், சங்காவின் கெட்ட செயலும்.. Sri lanka vs England


சாம்பியன்ஸ் கிண்ண ஆரம்பப்போட்டியில் ஓட்டங்கள் குவிக்கக்கூடிய ஒரு திடலில் சொந்த நாடு தென்னாபிரிக்காவைப் பந்தாடிய இலங்கை அணிக்கு நேற்றைய தினம் ஜொஹனர்ஸ் பேர்க்கின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான ஆடுகளத்தில் காத்திருந்தது அதிர்ச்சி!

பலவீனமான அணி என்று இங்கிலாந்தைப் பலபேர் (அடியேனும் சேர்த்து) குறிப்பிட்டபோதிலும், இலங்கை அணியின் பயிற்றுனர் ட்ரெவர் பேய்லிஸ் - இங்கிலாந்து அணியை யாரும் குறைத்து மதிப்பிடக்கூடாது என்று சொன்னதன் அர்த்தம் நேற்றிரவு புரிந்தது.

நாணயச் சுழற்சியின் வெற்றியும் ஆடுகள சாதகத் தன்மையும் இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர்களை unplayable champion bowlers ஆக மாற்றியிருந்தது.

அதிலும் ஜிம்மி அன்டர்சன் - வாய்ப்பேயில்லை – அப்படியொரு துல்லியம். இலங்கை அணியின் துடுப்பாட்டத்தூண்கள் நான்கும் 17 ஓட்டங்களுக்குள் சாய்ந்தபோது 200 என்பதே சாத்தியமில்லாத ஒன்றாகவே தென்பட்டது.


ஆனால் சமரவீர, கண்டாம்பி, மத்தியூசின் பொறுமையான போராட்டமிக்க துடுப்பாட்டமும். பின்னர் முரளியின் அதிரடியும் 200 ஓட்டங்களைத் தாண்டச் செய்தது.

இலங்கை அணிக்கு மத்தியூஸ் ஒரு நல்ல சகலதுறை வீரராகக் கிடைத்திருப்பதுபோல – மத்தியவரிசையைப் பலமாக்க ஒரு வீரரைத் தேடிக்கொண்டிருந்த வேளையில் (சிறிதுகாலம் சாமரசில்வா இருந்தார்) கண்டாம்பி வந்துள்ளார்.

இந்தியாவுடன் அதிரடிக்குப் பிறகு, நேற்றைய ஆட்டம் அவரது முதிர்ச்சியைக் கூட்டுகிறது.

ஏஞ்சலோ மத்தியூஸ் இரண்டாவது ஓட்டமொன்றைப் பெற முனைந்த வேளையில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழக்கிறார். பந்துவீச்சாளர் ஒனியன்ஸ் வழி மறித்ததினாலேயே ஓடமுடியாமல் போனது தெரிந்தும் நடுவர் ஆட்டமிழப்பு வழங்க, புகைந்து கொண்டே பவிலியன் திரும்புகிறார் மத்தியூஸ்.

எனினும் தன் வீரர் மீதும் தவறிருப்பதை உணர்ந்து கொண்ட இங்கிலாந்து அணியின் தலைவர் அன்ட்ரூ ஸ்ட்ரோஸ் உடனடியாக மத்தியூஸை மீள அழைத்தார்.

ஏனைய எந்தவொரு அணித்தலைவராவது இவ்வாறு நடந்திருப்பார்களா என்றால் சந்தேகமே!

தன்னை மீண்டும் ஒருதரம் கனவானாக நிரூபித்திருக்கும் ஸ்ட்ரோஸ் கிரிக்கெட் பணமயமாக்கப்பட்டு வெற்றிகளை நோக்கியதாக மட்டுமே அமைந்திருந்தாலும் sportsmanship இன்னும் சாகவில்லை என்றும் காட்டியுள்ளார்.


ஏற்கெனவே அவுஸ்திரேலியா அணியுடனான ஆஷஸ் தொடரில் தனது கண்ணியத் தன்மையை வெளிப்படுத்திருந்த ஸ்ட்ரோசை எவ்வளவு பாராட்டினாலும் தகும் ..

ஆனாலும் பரிதாபம் வந்த மத்தியூஸ் ஒரு சில பந்துகளிலேயே ஆட்டமிழந்தார்.. அப்போது ஸ்ட்ரோசின் முகத்தில் மகிழ்ச்சியைப் பார்க்கவேண்டுமே.. அது ஒரு சிறுகதை..

ஆனால் இப்படிப் பட்ட கண்ணியமான ஸ்ட்ரோஸ் துடுப்பெடுத்தாடும் பொது ஆட்டமிழப்பில்லாத பந்துக்கும் ஆட்டமிழப்பு கேட்ட சங்கக்காராவை என்ன சொல்வது?

கண்ட கண்ட பந்துகளுக்கும் தேவையில்லாமலும் ஆட்டமிழப்புக்களை கேட்டு கண்ணியமானவர் என்று கருதப்பட்டு வந்த தனது பெயரை நேற்று களங்கப்படுத்திக் கொண்டார்.
தலைவராக வந்த பின்னரே இவர் இவ்வாறு மோசமாக மாறியிருக்கிறார் என நினைக்கிறேன்..

இதிலும் நேர்முக வர்ணனையாளர் ஒருவர் appealing team ஒன்று அறிவிக்கப்பட்டால் அதன் தலைவராகவும் சங்கக்காரவே இருப்பார் என்று சொன்னது மகா கேவலம்.

குலசேகர இலங்கை அணிக்காக ஆரம்பத்தில் சிறப்பாகப் பந்துவீசினாலும், மாலிங்க,மத்தியூஸ் ஆகியோர் இடையிடையே சிறப்பாகப் பந்து வீசினாலும் கூட, முரளி,மென்டிசினால் நேற்றைய ஆடுகளத்தில் இங்கிலாந்துக்கு அச்சுறுத்தலைக் கொடுக்க முடியவில்லை.

முரளியை அண்மைக்காலமாக ஒருநாள் போட்டிகளில் எல்லா அணிகளுமே இலகுவாக விளையாடுவது உறுத்துகிற ஒருவிடயம்.

திட்டமிட்டு பொறுமையாக ஆடிய இங்கிலாந்து எதிர்பார்த்ததை விட இலகுவாக வெற்றியைப் பெற்றது.

கோலிங்க்வூட்டின் ஆக்ரோஷம், ஷாவின் பொறுமை, மோர்கனின் நேர்த்தியான நிதானமான துடுப்பாட்டம் என்று இங்கிலாந்து நேற்றைய தினம் உண்மையில் ஒரு வெற்றிகர அணி என்று காட்டியது..

நேற்றைய போட்டியில் கவனித்த இன்னும் சில விஷயங்கள்.. எவ்வளவு தான் ஆடுகளம் ஸ்விங்,மேலெழும் தன்மைக்கு உதவினாலும் பந்தை பலமாக ,டைமிங்குடன் அடித்தால் இலகுவாக சிக்சர்களைப் பெற முடிந்தது.. கோளிங்க்வூடும்,ஷாவும், ஏன் குலசேகர, முரளியும் கூட அலட்டிக் கொள்ளாமல் சிக்சர் அடித்திருந்தனர்.. மைதானம் ஒப்பீட்டளவில் சிறியது.. தென் ஆபிரிக்கா-ஆஸ்திரேலியா உலக சாதனை ஓட்டங்களைக் குவித்ததும் இதே மைதானத்தில் தான். இலங்கை அணி இன்னொரு வேகப் பந்துவீச்சாளரை எடுத்திருந்தால் வெற்றி பெற்றிருக்கக் கூடும்..
இப்போது பிரிவு B ஒரு குழப்பமான ஒன்றாக மாறியுள்ளது.. எல்லா அணிகளுக்குமே வாய்ப்பு..

நாளை இலங்கை - நியூ சீலாந்து அணிகள் மோதும் போட்டி முடிவொன்றைத் தரும்.. (இலங்கை அணி மறுபடி என் மூக்கை உடைத்துவிடுமோ?? ஓவர் பில்ட் அப் உடம்புக்காகாது என்று நிறையப் பேர் சொன்னாங்களே.. கேட்டியா லோஷன்?)

இப்போது ஆஸ்திரேலியா மேற்கிந்தியத் தீவுகளை பந்தாடிக் கொண்டுள்ளது.. (ஆரம்பத்தில் தடுமாறினாலும்..)

இன்னும் சில நிமிடங்களில் பாகிஸ்தான் -இந்தியா மினி கிரிக்கெட் யுத்தமே நடைபெறப் போகிறது.. இது தான் இம்முறை சாம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளின் முக்கியமான போட்டியென்றால் அது நியாயமே..

விறுவிறுப்பாக ரசிப்போம்.. இந்தியாவும் சேவாக்,யுவராஜ் இல்லாமல் நொண்டியடிக்கிறது.. (இவங்களும் மூக்கை உடைச்சிருவாங்க போல தெரியுதே.. )

கிரிக்கெட் என்றால் இப்படித்தான்.. ;)


16 comments:

தர்ஷன் said...

தனி தனியே ஒவ்வொரு வீரர்களையும் எடுத்துப் பார்த்தால் சிறப்பானவர்களாக தெரிந்தாலும் துடுப்பாட்டவீரர்கள் ஒன்றில் சிறப்பாக ஆடுகிறார்கள் அல்லது ஒரேயடியாக சொதப்புகிறார்கள்

//நாளை இலங்கை - நியூ சீலாந்து அணிகள் மோதும் போட்டி முடிவொன்றைத் தரும்.. (இலங்கை அணி மறுபடி என் மூக்கை உடைத்துவிடுமோ?? ஓவர் பில்ட் அப் உடம்புக்காகாது என்று நிறையப் பேர் சொன்னாங்களே.. கேட்டியா லோஷன்?) //

பயப்படாதீர்கள் லோஷன் அண்ணா நிச்சயம் அரையிறுதி வருவார்கள்

Ramanc said...

//
இதிலும் நேர்முக வர்ணனையாளர் ஒருவர் appealing team ஒன்று அறிவிக்கப்பட்டால் அதன் தலைவராகவும் சங்கக்காரவே இருப்பார் என்று சொன்னது மகா கேவலம்.

சிரிப்புத்தான் வருது நேற்று கேட்ட ஆட்டமிழப்புக்கான appeal :)

பிடிஎடுப்பினால் ஆட்டமிழந்த ஸ்ட்ரொஸ் சிரித்த முகத்துடன் வெளியேறினார். மற்ற யாராயினும் இருபினும் புறுபுறுத்துக் கொண்டு வெளியேறி இருப்பினம். yesterday, i could see the spirits of cricket by the England Team

என்ன செய்தாவது வெல்லவேண்டும் என்பதே எல்லா அணிகளின் அதிஉயர்ந்த நோக்கம் :)

என்ன கொடும சார் said...

வெற்றிபெற்றாகவேண்டிய நெருக்குதல்கள் அவ்வாறு சங்கக்காரவை ஆக்கியிருக்கலாம்.. கடையில் வெற்றிதானெ வரலாறு ஆகிறது. உம் கில்கிரிஸ்ட் கையுறைக்குள் பந்து வைத்து அடித்தது.. அதையெல்லாம் மக்கள் மறந்துவிட்டார்கள். வர்ணனையாளர்களும் தான்..

எனக்கொரு ஆசை.. ஹர்பஜனுக்கு SPIRIT OF CRICKET கொடுக்க வேண்டும்..

அவரை கண்டிக்காதிருப்பதும் இந்திய அணியின் வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தின் வெளிப்பாடே.. அப்படி பார்ர்க்கயில் தோனியிநது இந்திய கிரிக்கட் வாரியத்தினதும் கெட்ட எண்ணமும் வெளிப்படுகிறது..

புல்லட் said...

அண்ணன் உது ஏற்க முடியாது... ஸ்ரோசின் மனநிலையில் பார்த்தால் அவர் வெற்றி நிச்சயம் என்று கணக்கிட்டிருப்பார்.. ஆகவே அவரால் சரி பிழைத்துப்போ என்று விட்டிருக்கமுடியும்.. அவரும் 150 ரண் எடுத்த டீமின் தலைவராய் இருந்தால் கீப்பர் விழுத்திய விக்கட்டை பட்டால் குத்தியதற்காக அவுட் கெட்டிருப்பார்..

என்ன செய்வது சங்கக்கார தலமைப்பொறுப்பில் தோல்வியை எதிர்நோக்கியிருக்கும் போது எதிரணியை மனதளவில் தளரச்சசெய்யும் நோக்குடன் கத்தியிருப்பார்.. உதெல்லாம் பாட் ஓப் த கேம்..

சங்ககார மச்முடிவில் கதைக்கும் போது மற்ற டீம் காரனெல்லாம் பிச்சை வாங்கவேண்டும்.. என்ன ஒரு ஸ்டைல்.. என்ன ஒரு பேசனாலிட்டி..

Busooly said...

ஒரு வேலை சங்காவிற்கு தன் தலைமையில் இலங்கை அணி தோற்பது தாங்க முடிய வில்லையோ??? அப்படி தான்யா எல்லா அணித்தலைவருங்களும் இதுக்குதான் நல்லா விளையாடனும்னு சொல்றது....

Hamshi said...

பலவீனமான அணி என்று இங்கிலாந்தைப் பலபேர் (அடியேனும் சேர்த்து) குறிப்பிட்டபோதிலும்.pravagillaje unmajai othu kolurenaga.Great policy anna.
//நாளை இலங்கை - நியூ சீலாந்து அணிகள் மோதும் போட்டி முடிவொன்றைத் தரும்.. (இலங்கை அணி மறுபடி என் மூக்கை உடைத்துவிடுமோ?? ஓவர் பில்ட் அப் உடம்புக்காகாது என்று நிறையப் பேர் சொன்னாங்களே.. கேட்டியா லோஷன்?) //

ethu ennum nalla erukku.anna anmai kalama unga kannaku ropa thapa pojiddu erukku.paththu."sanimattamo"......

Prapa said...

//இதிலும் நேர்முக வர்ணனையாளர் ஒருவர் appealing team ஒன்று அறிவிக்கப்பட்டால் அதன் தலைவராகவும் சங்கக்காரவே இருப்பார் என்று சொன்னது மகா கேவலம்.
//
நம்ப முடியல !! நம்ம சங்காவா இப்படி மாறி விட்டார்....

maruthamooran said...

////கண்ட கண்ட பந்துகளுக்கும் தேவையில்லாமலும் ஆட்டமிழப்புக்களை கேட்டு கண்ணியமானவர் என்று கருதப்பட்டு வந்த தனது பெயரை நேற்று களங்கப்படுத்திக் கொண்டார்.
தலைவராக வந்த பின்னரே இவர் இவ்வாறு மோசமாக மாறியிருக்கிறார் என நினைக்கிறேன்..////

லோஷன்….

சங்ககாரவுக்கு கிரிக்கட்டின் ‘கனவான்’ என்ற பாத்திரம் பொருத்தமாகவே இருந்து வந்தது. அதனை மேற்குலக குறிப்பாக ஆங்கில ஊடகங்கள் சில தருணங்களில் அளவுக்கு அதிகமாகவே பயன்படுத்திக் கொண்டன. ஆனால், இலங்கை அணியின் தலைவரான பின்னர் குமார் சங்ககார, சராசரி அணித்தலைவர் (கோபப்படுதல், எதிரணியிடம் தேவையற்ற தர்க்கங்கள் ஆகியவற்றை குறிக்கின்றேன்) என்ற நிலைக்கு தன்னை தாழ்த்திக் கொண்டு விட்டார். அதுவும், பாகிஸ்தான் அணியுடனான தொடரில் அவர் மிகவும் அதிகமாகவே தன்னிலை இழந்தமையைக் காணக்கூடியதாக இருந்தது. அதன் தொடர்ச்சியே இங்கிலாந்துடனான போட்டியிலும் தொடர்ந்தது. சங்காகாரவுக்கு என்று கிரிக்கட் உலகில் இருக்கின்ற நற்பெயரை தானாகவே அவர் கெடுத்துக்கொள்ள ஆரம்பித்திருக்கின்றார் என்று தோன்றுகிறது.

Prapa said...

அன்பான உள்ளம் கொண்ட உங்களை தொடர் பதிவொன்றுக்கு அழைத்திருக்கிறேன் ,
வந்து கலக்குங்க.......

எட்வின் said...

இலங்கை அணியில் நான் அதிகம் கவனிப்பவர்களில் சங்காவும் ஒருவர். அவருக்கு அன்று ஏதோ ஆகி விட்டது போலும்... இல்லையென்றால் இங்கிலாந்திற்கு எதிராக ஆப் ஸ்டம்பிற்கு வெளியே போகும் பந்து வீச்சிற்கு ஆட்டமிழந்து இருக்க மாட்டார். சங்கா மீண்டும் புதுப்பொலிவுடன் வருவார் என நம்பலாம்.

Unknown said...

சங்காவுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்ததால் இப்போதெல்லாம் அவருக்கு இப்போது வேறு பிரச்சினை (மனைவி கிட்ட விடுறா இல்ல) எண்டும் அதால தான் இப்பிடி எண்டும் ஓர் கிறிக்கெற் தளத்தில் நகைச்சுவையாக எழுதியிருந்தார்கள்...

இது பற்றி நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன்...
முடியுமானால் பாருங்கள்...
http://tamilgopi.blogspot.com/2009/08/blog-post_30.html

யோ வொய்ஸ் (யோகா) said...

நான் இனி கிரிக்கட் பார்க்கிறத விடலாம் என நினைக்கிறேன்.

Unknown said...

லோஷன் அண்ணாவின் முகத்தில் கரியைப் பூசிய ஸ்ரோஸ் வாழ்க....
நேற்றைய போட்டியில் தென்னாபிரிக்கா வெல்லும் என்று பயந்து ஸ்மித்திற்கு மாற்று ஓட்ட வீரரை அனுமதிக்காமல் ஒரே நாளில் கீழே விழுந்துவிட்டார் ஸ்ரோஸ்.
கடைசியில் புல்லட் அண்ணா சொன்னது தான் நடந்திருக்கிறது...

Nimalesh said...

bt yday he refuse he runner to G. smith while he was suffering from cramp......

Anonymous said...

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் 'அன்டர் டாக்ஸ்' என்ற அடையாளத்துடன் நுழைந்து தென் ஆப்பிரிக்காவை வெளியே அனுப்பி அரையிறுதிக்கு நுழைந்த இங்கிலாந்து அணி தென் ஆப்பிரிக்க அணித் தலைவர் கிரேம் ஸ்மித் ஆடிய மராத்தான் 141 ரன்கள் இன்னிங்ஸின் இறுதியில் அவருக்கு பை ரன்னரை மறுத்துள்ளதால் புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.

தென் ஆப்பிரிக்கா போட்டியை வென்றிருக்காவிட்டாலும், ஸ்மித்திற்கு பை ரன்னர் கொடுத்திருந்தால் 313 ரன்களை தென் ஆப்பிரிக்கா எடுத்து ரன் விகித அடிப்படையில் அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை தக்கவைத்திருக்கும்.

ஆனால் ஸ்ட்ராஸ், ஸ்மித்திற்கு பை ரன்னர் தர மறுத்ததால், ஸ்மித் சிறிது நேரத்தில் ஆட்டமிழந்து தென் ஆப்பிரிக்காவின் அரையிறுதி வாய்ப்பு பறிபோனது.

ஸ்ட்ராஸ் மறுப்பு குறித்து ஸ்மித் பின்பு கூறுகையில், "நான் தசைப் பிடிப்பினால் அவதியுற்றேன், அந்த இடத்தில் எனக்கு ரன்னர் தேவைப்பட்டது, ஆண்ட்ரூ நடுவரிடம் பேசினார் ஆனால் கடைசியில் ரன்னர் தர மறுத்து விட்டார். இது போன்று ரன்னர் கொடுப்பது என்பது கிரிக்கெட்டில் சகஜமானதுதான், ஆனால் மறுத்தது பெரும் வெறுப்பைக் கிளப்பியது" என்றார்.

ஆனால் ஸ்ட்ராஸ் கூறுகையில், "நடுவர்கள் ஸ்மித்திற்கு பை ரன்னர் தருவதில் அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை. ஒரு நீண்ட இன்னிங்ஸிற்கு பிறகு ஒரு பேட்ஸ்மென் களைப்படைவது இயல்பே, அதற்கு தேவை சிறிது உடல் நீவி விடுதல் போன்ற நடவடிக்கையே, பை ரன்னர் தேவையில்லை, அந்த இடத்தில் அவருக்கு ரன்னர் கொடுக்கும் அளவுக்கு எந்த நிலையும் ஏற்பட்டு விடவீல்லை" என்றார்.


ஸ்மித் இதற்கு மீண்டும் கூறுகையில், "உலகில் எல்லாம் சுற்றி சுற்றி மீண்டும் மீண்டும் நிகழ்வதுதான், இது போன்ற நிலைமை ஸ்ட்ராஸிற்கு ஏற்படும்போது அவர் இதனை எப்படி எதிர் கொள்கிறார் என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்" என்றார்.

ஆனால் ஸ்ட்ராஸ் விடவில்லை, "தசைப்பிடிப்பிற்கு ரன்னர் கொடுக்க முடியாது, அவ்வளவுதான் அதோடு முடிந்தது விஷயம், முற்றுப்புள்ளி. அவர் அவ்வளவு மோசமான தசைப்பிடிப்பு ஆளானதாக நான் கருதவில்லை, அவரால் ஓட முடியும் என்பதே என்னுடைய கணிப்பு" என்று முடித்துவிட்டார் ஸ்ட்ராஸ்.

ஆனால் ஸ்மித் விடுவதாயில்லை. "என்னை நான் அர்ஜுனா ரணதுங்காவுடன் என்னை ஒப்பிட விரும்புகிறேனா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் உலக கிரிக்கெட்டில் சாதாரண ஒரு விஷயம் இந்த பை ரன்னர் விஷயம், இதற்கு முன்பு அனுமதிக்கப்பட்டது, திடீரென அனுமதிக்கப்படவில்லை. இதெல்லாம் ஒரு சீரற்ற முடிவுகளையே காண்பிக்கிறது" என்று ஸ்மித் புன்னகையுடன் தோல்வியை எதிர்கொண்டார்.

Anonymous said...

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் 'அன்டர் டாக்ஸ்' என்ற அடையாளத்துடன் நுழைந்து தென் ஆப்பிரிக்காவை வெளியே அனுப்பி அரையிறுதிக்கு நுழைந்த இங்கிலாந்து அணி தென் ஆப்பிரிக்க அணித் தலைவர் கிரேம் ஸ்மித் ஆடிய மராத்தான் 141 ரன்கள் இன்னிங்ஸின் இறுதியில் அவருக்கு பை ரன்னரை மறுத்துள்ளதால் புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.

தென் ஆப்பிரிக்கா போட்டியை வென்றிருக்காவிட்டாலும், ஸ்மித்திற்கு பை ரன்னர் கொடுத்திருந்தால் 313 ரன்களை தென் ஆப்பிரிக்கா எடுத்து ரன் விகித அடிப்படையில் அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை தக்கவைத்திருக்கும்.

ஆனால் ஸ்ட்ராஸ், ஸ்மித்திற்கு பை ரன்னர் தர மறுத்ததால், ஸ்மித் சிறிது நேரத்தில் ஆட்டமிழந்து தென் ஆப்பிரிக்காவின் அரையிறுதி வாய்ப்பு பறிபோனது.

ஸ்ட்ராஸ் மறுப்பு குறித்து ஸ்மித் பின்பு கூறுகையில், "நான் தசைப் பிடிப்பினால் அவதியுற்றேன், அந்த இடத்தில் எனக்கு ரன்னர் தேவைப்பட்டது, ஆண்ட்ரூ நடுவரிடம் பேசினார் ஆனால் கடைசியில் ரன்னர் தர மறுத்து விட்டார். இது போன்று ரன்னர் கொடுப்பது என்பது கிரிக்கெட்டில் சகஜமானதுதான், ஆனால் மறுத்தது பெரும் வெறுப்பைக் கிளப்பியது" என்றார்.

ஆனால் ஸ்ட்ராஸ் கூறுகையில், "நடுவர்கள் ஸ்மித்திற்கு பை ரன்னர் தருவதில் அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை. ஒரு நீண்ட இன்னிங்ஸிற்கு பிறகு ஒரு பேட்ஸ்மென் களைப்படைவது இயல்பே, அதற்கு தேவை சிறிது உடல் நீவி விடுதல் போன்ற நடவடிக்கையே, பை ரன்னர் தேவையில்லை, அந்த இடத்தில் அவருக்கு ரன்னர் கொடுக்கும் அளவுக்கு எந்த நிலையும் ஏற்பட்டு விடவீல்லை" என்றார்.


ஸ்மித் இதற்கு மீண்டும் கூறுகையில், "உலகில் எல்லாம் சுற்றி சுற்றி மீண்டும் மீண்டும் நிகழ்வதுதான், இது போன்ற நிலைமை ஸ்ட்ராஸிற்கு ஏற்படும்போது அவர் இதனை எப்படி எதிர் கொள்கிறார் என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்" என்றார்.

ஆனால் ஸ்ட்ராஸ் விடவில்லை, "தசைப்பிடிப்பிற்கு ரன்னர் கொடுக்க முடியாது, அவ்வளவுதான் அதோடு முடிந்தது விஷயம், முற்றுப்புள்ளி. அவர் அவ்வளவு மோசமான தசைப்பிடிப்பு ஆளானதாக நான் கருதவில்லை, அவரால் ஓட முடியும் என்பதே என்னுடைய கணிப்பு" என்று முடித்துவிட்டார் ஸ்ட்ராஸ்.

ஆனால் ஸ்மித் விடுவதாயில்லை. "என்னை நான் அர்ஜுனா ரணதுங்காவுடன் என்னை ஒப்பிட விரும்புகிறேனா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் உலக கிரிக்கெட்டில் சாதாரண ஒரு விஷயம் இந்த பை ரன்னர் விஷயம், இதற்கு முன்பு அனுமதிக்கப்பட்டது, திடீரென அனுமதிக்கப்படவில்லை. இதெல்லாம் ஒரு சீரற்ற முடிவுகளையே காண்பிக்கிறது" என்று ஸ்மித் புன்னகையுடன் தோல்வியை எதிர்கொண்டார்.

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner