விஜய் நடிச்சா தாங்க மாட்டோம்?????

ARV Loshan
96



இளைய தளபதி,நாளைய இந்தியப் பிரதமர்(எதை யோசிச்சாலும் பெரிசா யோசிக்கனுங்க்னா..) விஜய் அவர்கள்(மரியாதைங்க்னா) நடிக்கும் வேட்டைக்காரன் பாடல்கள் மிக ஆர்ப்பாட்டமாக நேற்றைய தினம் உலகம் முழுதும் வெளியாகின..


விஜய் அன்டனி இசை..

ஐந்து பாடல்கள்

கபிலன் (விஜயின் ஆஸ்தான அறிமுகப் பாடலாசிரியர்) 3 பாடல்களும், விவேகா,அண்ணாமலை ஆகியோர் தல ஒவ்வொரு பாடல்களையும் எழுதியுள்ளனர்.


இதில், விவேகா எழுதிய சின்னத் தாமரை என்ற பாடலின் இசை உருவாக்கம், மெட்டமைப்பு, ப்ரோக்ராமிங் போன்றவற்றை செய்திருப்பவர் இலங்கையின் பிரபல சிங்கள இசைக் கலைஞரான ஹிப் ஹொப் புகழ் இராஜ்.

க்ரிஷ்,சுசித்ரா (கந்தசாமியின் சுப்புலட்சுமி குரலுக்கு சொந்தக்காரி) பாடியுள்ள சின்னத் தாமரை பாடலில் ஆங்கில ராப் பாடியுள்ளவர் இலங்கையில் இளவட்டங்கள் நன்கு அறிந்த BK(Bone Killa). இவர் வேறு யாருமில்லை.. இலங்கையின் பிரதி அமைச்சர் புத்திரசிகாமணியின் புதல்வர்.


தமிழ் ராப் பாடியுள்ளவர் தினேஷ் கனகரத்தினம். இலங்கையில் நிறையப் பாடல்கள் (அதிகமாக ராப்,ஹிப் ஹொப்) மூலமாகவும், தா.நா.அ.ல (Taxi TN) படத்தின் நவீன ஆத்திசூடி மூலமாக தமிழகத்திலும் தெரிந்தவர் இவர்.

(நவீன ஆத்திசூடி எல்லாப் பக்கமும் கிழி வாங்கியது வேறு கதை..)

சின்னத் தாமரை கேட்க...



இதன் ஒரிஜினலான சிங்களப் பாடல் இதோ..





புலி உறுமுது என்று கபிலன் வழமையான விஜய்க்கான படங்களில் வரும் அறிமுகப் பாடலை எழுதியிருக்கிறார்..
காது இரத்தம் வடிக்குமளவுக்கு வரிகளுடன் அனந்து, மகேஷ் என்று இரண்டு பேர் கத்தி தொலைக்கிறார்கள்..

பாடலின் ஆரம்பத்திலேயே ஓம் ஷாந்தி.. இடை நடுவே சமஸ்கிருத மந்திரங்கள்..

போதாக்குறைக்கு வேட்டைக்காரன் வாரதப் பார்த்து புலி உறுமுதாம், நரி ஓடுதாம்,கிலி பிறக்குதாம், குலை நடுங்குதாம்...

உண்மையில் கபிலன் விஜயின் புகழ்பாடி இருக்கிறாரா? இல்லை நக்கலிலேயே விஜயை நாறடிக்கிராரா?

பாடலின் இடையே
வேட்டைக்காரன் வரதப் பார்த்து.... நிக்காம ஓடு ஓடு ஓடு என்று துரத்துகிறார்கள்..
அவங்களுக்கே புரிஞ்சு போச்சோ?

என்ன கொடுமையப்பா.. அந்தக் கொடுமைய முடிஞ்சா நீங்களும் கீழே சொடுக்கி கேளுங்களேன்.. சிரிப்பு தாங்க முடியாம இருக்கும்..


இன்னொரு பாடல் மகா மெகா கொடுமை..

நானடிச்சா தாங்க மாட்டாய்.. நாலுமாதம் தூங்க மாட்டாய்.. இது தான் கபிலன் எழுதிய ஆரம்ப வரிகள்..

ஐயோ அம்மா.. கேட்டு முடிக்க முதல் இரத்தம் கக்கி செத்துவிடுவேனோ என்று பயம் வந்துவிட்டது..

எனக்கொரு பெரிய சந்தேகம்..
கபிலன் எழுதியது "நான் டிச்சா தாங்க மாட்டேயா?"
அல்லது
"நான் நடிச்சா தாங்க மாட்டேயா?"

கபிலன் எதோ உள்குத்து வச்சுகிட்டே எல்லாப் பாடல்களையும் எழுதியிருப்பதாகப் படுகிறது..பழைய படங்களின் சம்பளப் பாக்கி ஏதாவது கொடுபடவில்லையோ?

போதாக்குறைக்கு இந்தப் பாட்டுக்கு இளைய இளைய தளபதி(அதாங்க விஜய் மகன் சஞ்சய்) ஆடுகிறாராம்.. அடுத்த வாரிசு?



கேட்ட ஐந்து பாடல்களில் 'அட' சொல்ல வைத்த பாடல்.. காரிகாலன் கால்..

இலக்கிய சுவையும் காதல் குறும்பும் கலந்து கபிலன் எழுதியிருக்கிறார்.. மெட்டமைப்பில் ஒரு புதுமையும், சுவையும் தெரிகிறது..

ரசனையான வரிகளுக்கு புதிய குரல்களும்.. மறுபடி மறுபடி கேட்கலாம்..


அண்ணாமலை என்பவர் எழுதிய உச்சிமண்டை சுர்ருங்குது.. (வரிகளைப் பாருங்க.. இதுக்குப் பிறகும் 'வேட்டைக்காரன்' பார்க்கிற ஐடியா இருக்கு???)

வழமையான விஜய் அன்டனி சரக்கு இது..

தாயார் ஷோபா சேகர், கர்நாடக சங்கீதப் பாடகி சாருலதா மணி ஆகியோரும் இந்தப் பாடலில் சேர்ந்து தாளித்திருக்கிறார்கள்..




பாடல்கள் ஹிட் ஆகுதோ இல்லையோ, வேட்டைக்காரன் இப்படித் தான் இருப்பான் என்று புரிஞ்சுகிட்டீங்களா?

பாவம் இயக்குனர்.. விஜய் ரசிகர்கள் பப்பாவம்..

பாடல்கள் கேட்டு கடுப்பாகிப் போன உங்களுக்காக கொஞ்சமாவது கூலாக.. வேட்டைக்காரி.. அதாங்க படத்தின் கதாநாயகி அனுஷ்கா..

இப்ப திருப்தியா?

பதிவை ஏற்றுவோம் என்று இருக்க மீண்டும் வானொலியில் ஒலிக்கிறது..

"நான் நடிச்சா தாங்க மாட்டே..".. oh sorry...

" நான் அடிச்சா தாங்க மாட்டே"


Post a Comment

96Comments

Please Select Embedded Mode To show the Comment System.*