லாகூரில் இடம்பெற்று வந்த டெஸ்ட் போட்டியில் இன்றைய நாள் ஆட்டத்தில் பங்குபற்ற சென்ற இலங்கை அணியின் மீது துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இலங்கை அணியின் வீரர்கள் அறுவர் காயம் அடைந்துள்ளார்கள்.அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கிய 5 போலீஸ் வீரர்கள் மரணித்துள்ளார்கள்.
காயம் அடைந்த வீரர்கள்
திலான் சமரவீர
தரங்க பரணவிதான
குமார் சங்ககார
அஜந்த மென்டிஸ்
அணித் தலைவர் மகெல ஜெயவர்த்தன
மற்றும் உதவி பயிற்றுவிப்பாளர்.
வீரர்களில் இருவர் மாத்திரமே வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், ஏனையோர் பாதுக்காப்பாக இருப்பதாகவும் இலங்கையிலுள்ள தங்கள் உறவினர்களுடன் பேசிய இலங்கை வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
குமார் சங்ககார,மகெல ஜெயவர்த்தன ஆகியோருக்கு சிறு காயங்களே ஏற்பட்டுள்ளன.
காயமடைந்திருந்த வீரர்கள் எல்லோருமே ஆபத்தான் கட்டத்தை தாண்டியுள்ளதாகவும்,பூரண சுகத்தோடு இருப்பதாகவும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.
இதுவரை கால வரலாற்றில் கிரிக்கெட் வீரர்கள் மீது இவ்வாறான மிலேச்சத்தனமான தாக்குதல் நடத்தப்பட்டதில்லை என்பது குறிப்பிடத் தக்கது.இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த ஒரு அமைப்பும் உரிமை கோரவில்லை என்பதுடன்,இலங்கை கிரிக்கெட் அணியினருக்கு பாதுகாப்பு வழங்கிவந்த போலீசாரையே இந்தத் தாக்குதல் இலக்கு வைத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
பாகிஸ்தானிய அரச தகவல்களின் அடிப்படியில் முகமூடியணிந்த பேர் இந்தத் தாக்குதல்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் இலங்கை அணியினரை உடனடியாக விசேட விமானமொன்றில் இலங்கைக்கு அழைக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
உலகின் மற்ற எல்லா நாடுகளும் பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுலா செல்ல மறுத்த வேளையில் இலங்கை அணியே அந்த அழைப்பையேற்று பாகிஸ்தான் சென்றது என்பதையும் இங்கே சுட்டிக் காட்ட வேண்டும்.
இந்தியாவின் மும்பையில் இடம்பெற்ற தீவிரவாதிகளின் தாக்குதலை அடுத்து இந்திய அரசு இந்திய அணிக்கு பாகிஸ்தான்செல்வதற்கு தடை விதித்ததை அடுத்தே இலங்கைஅணி பாகிஸ்தானுக்கு உதவுவதற்காக டெஸ்ட் சுற்றுலா மேற்கொண்டு சென்றிருந்தது.
நடைபெற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி கைவிடப் பட்டுள்ளது.
20 comments:
இந்தியாவில் இது நடந்திருந்தால் இந்த நேரம் பாகிஸ்தான் மீது பழி விழுந்திருக்கும் ..
பாகிஸ்தானின் கிரிக்கெட்க்கு / அரசிற்கு அவாமானம். ..
இது இந்திய துணை கண்டத்தில் வெளிநாட்டு அணிகள் வருவதை வெகுவாக குறைக்கும்.. இலங்கை அணிக்கு போதுமான பாதுகாப்பு வழங்க படவில்லை என்பது தாக்குதல் தொடர்பான காட்சிகளை பார்க்கும் பொது தெளிவாகிறது..
அதேவேளை ICC CHAMPIONSHIP இலங்கையில் நடாத்தபடுவதட்க்கான வாய்புகளும் அரிது.. காலையில் சமரவீரவின் பற்றி நீங்கள் புகழ்ந்தது கண்பட்டு விட்டதோ ?
//இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த ஒரு அமைப்பும் உரிமை கோரவில்லை என்பதுடன்,இலங்கை கிரிக்கெட் அணியினருக்கு பாதுகாப்பு வழங்கிவந்த போலீசாரையே இந்தத் தாக்குதல் இலக்கு வைத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.//
ஆனால், விளையாட்டு வீரர்கள் பயணித்த வண்டியை நோக்கி இரு றொக்கட் தாக்குதல்கள் நத்தப்பட்டதாகவும், ஆனால் அவை குறி தப்பிவிட்டதால் பாரிய அனர்த்தம் ஒன்று தவிர்க்கப்பட்டதாகவும் செய்திகள் வெளிவருகின்றன.
//இந்தியாவில் இது நடந்திருந்தால் இந்த நேரம் பாகிஸ்தான் மீது பழி விழுந்திருக்கும் ..//
பாகிஸ்தான் மீது மட்டுமல்ல....
very bad of course!!!
வருந்துகிறேன்...மிகக்கொடுமையான காலகட்டத்தில் வாழ்ந்து வருகிறோம்...
சில போக்கிரிகளின் கேவலமான செயல் இது.தாக்குதலோ, போராட்டமோ இல்லாத நாளே பாகிஸ்தானில் இல்லை எனலாம். பாக் அரசு செய்வதறியாது நிற்கிறது. இனி என்னென்ன நடக்கப் போகிறதோ... அமெரிக்கா பாகிஸ்தானுக்கு படையெடுக்க இது வழிவகுக்கலாம்!!!
வருந்துகிறேன்...மிகக்கொடுமையான காலகட்டத்தில் வாழ்ந்து வருகிறோம்...
சில போக்கிரிகளின் கேவலமான செயல் இது.தாக்குதலோ, போராட்டமோ இல்லாத நாளே பாகிஸ்தானில் இல்லை எனலாம். பாக் அரசு செய்வதறியாது நிற்கிறது. இனி என்னென்ன நடக்கப் போகிறதோ... அமெரிக்கா பாகிஸ்தானுக்கு படையெடுக்க இது வழிவகுக்கலாம்!!!
எனக்கு என்னவோ இலங்கை கிரிக்கெட் வீரர்களைத்தான் இலக்கு வைத்திருப்பார்கள் என என்னத்தோன்றுகிறது. கடவுள் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீதும் இலங்கையில் வசிக்கும் முஸ்லிம்கள் மீதும் இரக்கம் காட்டியதாலோ என்னவோ இலக்கு தவறி அப்பாவிகளான பாகிஸ்தான் பொலிஸாரை காவு கொண்டுவிட்டது.
எது எப்படியோ இலங்கை கிரிக்கெட் வீரர்கள் உயிர் தப்பியதில் சந்தோசம்.
ஏற்கெனவே டயலாக் ஜி எஸ் எம் ஜிம்பாப்வே உடனான போட்டி பின் போடப்பட்டதால் தனது விளம்பரத்தின் காட்சி படுத்தல் நேரம் குறைந்து விட்டதாக மூக்கால் அலுத்து கொண்டிருக்கிறது.. இந்த நேரத்தில் இப்போட்டி தொடர் ரத்தானது இன்னமும் அதை சீர் குலைத்திருக்கும்.. மகெலவுக்கு எதிபாராத பிரியாவிடை..
இந்தியாவில் இது நடந்திருந்தால் இந்த நேரம் பாகிஸ்தான் மீது பழி விழுந்திருக்கும் ....
பாகிஸ்தான் மீது மட்டுமல்ல....
//
இந்த பின்னூட்டம் உண்மை மதிப்பு வாய்ந்தது
காலையில் இது தொடர்பாக sms வந்ததும் அப்பிடியே உறைஞ்சு போயிட்டேன்..நெஞ்சுல தண்ணி இல்ல...யாருக்காவது உயிராபத்து ஏற்பட்டிருந்தால்??? கடவுளே!!! காயப்பட்டவர்கள் விரைவில் குணமடைவார்களாக...இனி பாகிஸ்தானில் கிரிக்கெட் என்பது சாத்தியமாகாது போல இருக்கு.. ச்சீ..பாவம் அதுகள்...14 மாசத்துக்கு பிறகு ஒரு series...புது captain...ஏறுமுகத்தில் இருந்த மாரி தோற்றம்..எல்லாத்துக்கும் ஆப்பு..
அண்ணா, திலின துஷாரவுக்கும் காயம்.......??
//கடவுள் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீதும் இலங்கையில் வசிக்கும் முஸ்லிம்கள் மீதும் இரக்கம் காட்டியதாலோ என்னவோ இலக்கு தவறி அப்பாவிகளான பாகிஸ்தான் பொலிஸாரை காவு கொண்டுவிட்டது.//
அபப்டியென்றால் அப்பாவிகள் சாவ கடவுள்தானே காரணம். எப்படி இப்படியெல்லாம் யோசிக்கறாங்க?
மன்னியுங்கள் லோஷன். உங்கள் பதிவில் இப்படி சொன்னதற்கு. நான் சொன்னதில் தவறில்லையே?
வேறு சில அரசியல் காரணங்களுக்காகவும் இல்ங்கை அணியை பாக்கிஸ்தானுக்கு விளையாட (லை) அனுப்பி விளையாடாட (லை) பாக்குறாங்களோ!!!!!!!!!!!
அண்ணே ஒரு கேள்வி..?
இந்தத்தாக்குதலை நடத்தியவர்கள் புலிகள் என்று சொன்னால் கோத்தபாய ராஜபக்ஷ நம்பாமல் இருப்பாரா...?
;)
நம்மளை சுற்றி என்ன நடக்குது என்றே தெரியலை அண்ணா
இலங்கை கிரிக்கெட் வீரர்கள் உயிர் தப்பியதில் சந்தோசம்
உயிர் என்றால் எல்லோருக்கும் ஒன்று தானே
//ரவி said...
இந்தியாவில் இது நடந்திருந்தால் இந்த நேரம் பாகிஸ்தான் மீது பழி விழுந்திருக்கும் ....
பாகிஸ்தான் மீது மட்டுமல்ல....
//
இந்த பின்னூட்டம் உண்மை மதிப்பு வாய்ந்தது//
பதிவை விட இந்த பின்னூட்டத்தின் நுண்ணரசியலை வெகுவாக ரசித்தேன் ;)
//இந்தியாவில் இது நடந்திருந்தால் இந்த நேரம் பாகிஸ்தான் மீது பழி விழுந்திருக்கும் ....
பாகிஸ்தான் மீது மட்டுமல்ல....//
இப்போதும் பழி அங்கேதான் விழுந்திருக்கின்றது!!!
அரசியல் விளையாட்டில் பலியாகியிருப்பது இலங்கை கிரிக்கெட் அணி!!!
இந்தியா விலகிக்கொண்ட தொடரில் அரசியல் லாபங்களுக்காகவும் ஆயுதக் கொள்வனவுக்கு வழியேற்படுத்தவுமே இலங்கை கிரிக்கெட் அணியை மேதகு இலங்கை ஜனாதிபதி மகிந்த தூது அனுப்பிவைத்தார்.
இந்த அரசியல் விளையாட்டில் பலியாகியிருப்பது இலங்கை கிரிக்கெட் அணி.
இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஆதரவு அளிப்பது இலங்கை சிங்கள இனவெறி அரசுக்கு ஆதரவு தருவதற்கு ஒப்பானது என்றும் கிரிக்கெட் அணியை தமது சுயநல அரசியலுக்கும் தாங்கள் மேற்கொள்ளும் தமிழர்மீதான கொலைவெறித் தாக்குதல்களை மூடி மறைக்கும் உத்திக்கும் பயன்படுத்துகிறார்கள் என்று எவ்வளவு எடுத்துக்கூறியும் கேட்காத எம் அருமை 'தமிழ்' உறவுகளே.... இனியாவது உண்மையைப் புரிந்துகொள்ளுங்கள்.
அப்பாவி இலங்கை கிரிக்கெட் வீரர்களை தமது சுயநல வேட்டைக்குப் பயன்படுத்தும் ராஜபக்ச சகோதரர்களின் சதியைப் புரிந்துகொள்ளுங்கள்.
தற்போது நடத்தப்பட்டிருக்கும் இந்த தாக்குதலுக்கு நட்ட ஈடாக பாகிஸ்தானிலிருந்து ஆயுதங்களையும் இராணுவ உதவியையும் அள்ளி எடுக்கப்போகிறது இலங்கை.
இதற்காகப் பணயம் வைக்கப்பட்டது இலங்கை கிரிக்கெட் வீரர்களின் உயிர்.
இதையெல்லாம் நீங்கள் புரிந்துகொள்ளவா போகிறீர்கள்?
புரிந்துகொண்டாலும்தான் என்ன பயன்???
//அப்பாவி இலங்கை கிரிக்கெட் வீரர்களை தமது சுயநல வேட்டைக்குப் பயன்படுத்தும் ராஜபக்ச சகோதரர்களின் சதியைப் புரிந்துகொள்ளுங்கள். //
அனானி அண்ண,
அப்பாவி இலங்கை கிரிக்கெட் வீரர்கள் என்கிறீர்கள், ஆதரவு கொடுக்க வேண்டாம் என்றும் கூறுகிறீர்கள்..கருத்துக்கள் முரண்படுகின்றனவே? என் சொந்த அனுபவத்தை கூறுவேயானால், இலங்கை அணி கிரிக்கெட் விளையாடும்போதும், சுசந்திகா ஓடும்போதும் மட்டும் தான் நான் தமிழன் என்ட லேபல கழட்டிட்டு (மர்மமாக) Sri Lankan ஆக மாறுகிறேன்..அத விட கொஞ்சம் கஷ்டம் அண்ண..
ஐயா Triumph நிலமை புரியாத ஆளா இருக்கீங்களய்யா!!!!
கொழும்பில் தாக்குதல் இடம்பெற்றால் எங்களுக்கு என்ன நிலை ஏற்படுகின்றதோ அதே நிலைதான் அவர்களுக்கும் ஏற்பட்டிருக்கும்
Post a Comment