இன்று என்னிடம் உள்ள சில கேள்விகள்..
என் மண்டையைக் குடைகிற கேள்விகள்..சரி என்கிட்டயே வைத்து இருந்தால் சரி வராது.. நான் மட்டும் யோசித்துக் கொண்டிருக்க நீங்கள்லாம் ஜாலியாக இருக்கலாமா? இதோ பிடியுங்கள்.. நீங்களும் யோசியுங்க.. நான் பெற்ற இன்பம் பெறுக நீவிரெல்லாம்.. ;)
1.உண்மையில் வன்னிக்குள் என்ன நடக்கிறது?புலிகள் அதே பலத்துடன் உள்ளார்களா? இராணுவத்தின் கை ஓங்குகிறதா?
2.இலங்கை அரசியலில் - கருணா அம்மான் (இப்போ மதிப்புக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் முரளிதரன் )தனது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் (அதுதான் TMVP) பெயரை மாற்றப் போவதாக சொல்லி இருக்கிறாரே.. என்ன பெயர் வைப்பார்? (புலிகளை யாருக்கும் இலங்கையிலும்,சர்வதேசத்திலும் பிடிப்பதில்லை என்று அவர் சொல்லி இருக்கிறார்.)
3.முதலாம் திகதி உண்ணாவிரதத்துக்கு யாரெல்லாம் வருவார்? யாரெல்லாம் வர மாட்டார்? என்னென்ன சொல்லுவார்?(அதனால் என்னென்ன பயன் கிடைக்கும்? என்னென்ன புது சர்ச்சைகள் தொடங்கும்?)
4.பேச்சு மூலமான தீர்வுக்கு இந்தியாவிடம் உண்மையில் பசில் உறுதியளித்தாரா?(அல்லது அது சும்மா பேச்சுக்கு தானா?)
5.பசில் ராஜபக்ஸவின் சந்திப்புக்குப் பிறகு இந்திய மத்திய அரசு இலங்கைக்கு மேலும் ஆயுதங்களை வழங்குமா?அவர் சொன்ன காரணங்களை முழுவதுமாக இந்தியா நம்பி விட்டதா?
6.இன்று வரை காலக்கெடு வைத்த கலைஞர் பிரனாப் முகர்ஜியின் வேண்டுகோளுக்கு இணங்கி பின் தள்ளிப் போட்டது இலங்கைத் தமிழருக்கு தோல்வியா? இல்லையா?
7.தயாநிதி மாறனின் ராஜீனாமாக் கடிதத்தை மீண்டும் கலைஞர் அவரிடமே கொடுப்பாரா?
8.உண்ணாவிரதத்துக்கு அஜித் வந்த பிறகு (வந்தால்...;)) ஐரோப்பிய நாடுகளில் ஏகன் மறுபடி திரையிடப் படுமா?(இலங்கையில் ஏகன் பார்க்க வேண்டாம் என்று SMS பரப்பிய ஒருவரை கைது செய்துள்ளார்களாம்)
9.நாளை ஆரம்பமாகவுள்ள அவுஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் கும்பிலே விளையாடத் தான் போகிறாரா? அமித் மிஷ்ரா விளையாடாமல் கும்பிலே விளையாடுவது அவுஸ்திரேலிய அணிக்கு நல்லதா?
10.அண்மையில் காணாமல் போன அறிவித்தலோடு பலர் தேடிக் கொண்டிருக்கும் விஜயகாந்த் எங்கே?அவரது இலங்கைத் தமிழர் பற்றிய நிலைப்பாடு என்ன?
11.வைகோ,திருமாவளவன்,அமீர் ஆகியோர் கைத்து செய்யப் பட்ட வேளையில்,வைகோவின் கைது உண்மையில் பேச்சு இந்தியப் பிரிவினை பற்றி அமைந்தததனாலா அல்லது அரசியல் விவகாரமா?(கூட்டணி உடைப்பு?????)
12.விஜய், ரஜினி போன்றோரின் படங்கள் வந்தால் திரௌஸர் கழற்றும் பதிவர்கள் அஜித்தின் 'ஏகன்' பற்றி பரபரப்பு ஏற்படுத்தாதது ஏன்? இலங்கைத் தமிழர் விவகாரம் முன்னிடம் பிடித்ததா அல்லது ?????
13.மாத இறுதி வருகிறது.. (எனக்கு சம்பளம் வெள்ளிக் கிழமை) எல்லோரும் என்னைப் போலவே கிட்டத் தட்ட காலியான wallettஉடன் credit cardsஐ நம்பிக் கொண்டு தான் திரிகின்றனரா?
14.இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு நிம்மதியைத் தரும் தீர்வு என்று யாராவது பேசுகையிலேயே புலிகளுக்கு ஆதரவாகத் தான் பேசுகிறோம் என்று நினைப்பவர்கள் (இலங்கையர்கள் - குறிப்பாக குஷியாக வெளிநாடுகளில் குந்தி இருப்போர் தான் இதில் அதிகம்) திருந்தவே மாட்டார்களா?
15.இந்தப் பதிவுக்கு எத்தனை பின்னூட்டம் வரும்? (சும்மா ஒரு நப்பாசை தான்..அதில திட்டி வாராது எத்தனையோ?)
உங்கள்ள யாருக்காவது பதில் தெரிந்தா போற போக்கில பின்னூட்டமா போட்டுட்டு போங்க.. புண்ணியமாப் போவும்.
20 comments:
wel done loshan, i like answer my views on those question, but i 'm busy today, i'll post comments as soon as possible on this, any way
WISH YOU A HAPPY DEEPAVALI
(Sorry no time to type in Tamil)
//?(இலங்கையில் ஏகன் பார்க்க வேண்டாம் என்று SMS பரப்பிய ஒருவரை கைது செய்துள்ளார்களாம்)//
அடக்கொடுமையே...இதுக்கெல்லாமா கைது செய்வாங்க...
வணக்கம் லோஷன்!
ராமேஸ்வரத்தில் நடந்தவற்றை எழுதியிருந்தீர்கள் நல்லது.
பாலியல் குற்றச்சாட்டுக்களுக்காக வழக்குப் பதிவு செய்தவர்கள் எல்லாம் மேடையேறி தமிழச்சிகள் கற்பழிக்கப்படுகிறார்கள் என்று பேசுபவர்களைப் பார்த்தால் வெட்கமாக இருக்கின்றது என்று இந்திய எழுத்தாளர் ஞானி அவர்கள் குறிப்பிட்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள் என்று நினைக்கிறேன் அதே ஞானிக்கு அறிவுமதி எழுதிய பதில் என்னவென்று தெரியுமா இது கொஞ்சநாளைக்கு முதல் சொன்னது
எங்கள் வீட்டுக்குள் எங்கள் பெண்களைக் கெடுக்க வருகிற மிருகங்களின் ஆண்குறிகளை வெட்ட வேண்டும் என்பது எங்களின் ஆத்திரம் !
இல்லை.. இல்லை…
அந்தக் குறிகளுக்கு ஆணுறைகள் மாட்டிவிட வேண்டும் என்பது உங்களின் சாத்திரம்.
நீங்கள்.. உங்கள் சாத்திரப்படியே மாட்டி விட்டுக் கொள்ளுங்கள் ஞாநி!எங்களால் முடியாது!
ஹலோ.. நீங்கள் குழம்பியது போதாது என்று எங்களையும் இப்படியா குழப்புவது.. ஏற்கனவே நிறைய ப்ளாக்ஸ்பாட் படிச்சு குழம்பி போனவனை இப்படியா குழப்புவது.. ரொம்ப தப்பு ..
இப்படி ஏடாகூடமா கேள்வி கேட்டா எப்படி?. புரியிர மாதிரி கேளுங்க.(சம்பந்தபட்டவங்ககிட்ட கேட்டாலே பதில் வரும் என்பது சந்தேகம்தான்)
good questions... answers eppo sagaa? neengale solidunga plz.. illaina mandai vedichudum enakku
sorry for tamilish
//?(இலங்கையில் ஏகன் பார்க்க வேண்டாம் என்று SMS பரப்பிய ஒருவரை கைது செய்துள்ளார்களாம்)////
nalalthu senjirukkar
ஏன் லோசன் அண்ணா இப்படி செய்றிங்க? பேப்பர் தம்பி பேப்பர் வாசித்தே அரசியல் படிதமாதிரி நான் உங்க வலைப்பதிவை வாசித்து அரசயலுக்கு வரலாம் என்று பாத்தா!!!!!!!!!!!!!!
சரி இந்த கேள்விக்கேல்லாம் பதில் கிடைத்தால் எல்லோரும் நிம்மதியா தூங்கலாம்.( தெரிந்தவர்கள் சொல்லுங்கலேன்)
//இன்று வரை காலக்கெடு வைத்த கலைஞர் பிரனாப் முகர்ஜியின் வேண்டுகோளுக்கு இணங்கி பின் தள்ளிப் போட்டது இலங்கைத் தமிழருக்கு தோல்வியா? இல்லையா? ///
தோல்விதான். பத்திரிகைகளுக்கு தமிழ்,சிங்கள அரசியல்வாதிகள் கொடுத்திருக்கும் செய்திகளே ஆதாரம்.
"நாக்கு சுத்தம் இல்லாவிட்டாளும், வாக்கு சுத்தம் வேண்டும் என்று என் நண்பன் அடிக்கடி சொல்வான்.."
லோசன் அவர்களே!
நாம் இன்னும் அடுத்தவர்களை நம்பிக் கெட்டது எமது தவறு. கலைஞர் தனது அரசியல் இலாபத்திற்கான காய்களை நகர்த்தினார். அங்குள்ள சிறிய அரசியல் தலைவர்களும், திரைப்படத்துறையினரும் இலங்கைப் பிரச்சினையைப்பற்றி முழுமையாக அறியாமல் உளறிக் கொட்டினர். ஆனால் பாவம் தமிழக மக்கள். அவர்கள் தாங்கள் உண்ண உணவில்லாவிடினும் ஈழமக்கள் உண்ண வேண்டும், நிம்மதியாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்.
ஐயோ அண்ணா உனக்கு என்ன ஆச்சி? நீங்களும் கிளம்பிடீங்களா?
தமிழ் நாட்டு அரசியலை நீங்கள் உன்னிப்பாக ஏக்கதுடன் பார்ப்பதிலிருந்து தெரியவில்லையா உங்களது பாதி கேள்விகளுக்கு பதில்?
இந்த பிதற்றும், சுத்தி சுத்தி ஒரே செய்தியை மட்டும் சொல்லும் தமிழ் ஊடகங்களை நல்வழி படுத்தினால் மீதி பிரச்சினையும் தீரும்.
இர்ஷாத்
இந்த கருத்துக்களுக்கு யாரவது அறிவார்ந்த பதில் அளித்தால் நல்லது. அறிவுமதி சொன்னது எல்லாம் அறிவார்ந்த பதில் ஆகுமா? கேள்விக்குத்தான் பதில்! (லியோனி பட்டிமன்றம் அரட்டை அரங்கம் பார்பவர்கட்குதான் புரியவில்லை. தமிழ் சங்க விவாத மேடை கண்டவர்கட்குமா புரியவில்லை?) கருத்தை திருப்பி சொல்வது பதில் ஆகுமா?
இர்ஷாத்
குமுதத்தில் ஞானி சொன்னது
ஆவேசக் குரல் எழுப்பும் பலர் நறுமண சோப்பில் குளித்து, மழுங்க ஷேவ் செய்து, ஆஃப்டர் ஷேவ் லோஷன் பூசி, ஃபாரின் ஸ்ப்ரே அடித்துக் கொண்டு, ஏ.சி. காரில்தான் வந்து இறங்குகிறார்கள். மேற்கே புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் மத்தியில் உலவும் ஏடுகளில், பூசம், கார்த்திகை முதலிய சைவச் சடங்குகள், பரத நாட்டிய அரங்கேற்றங்கள், தீபாவளிக்கு புது டிஸைன் நகை, பட்டு வகைகள், வாஸ்து, ஜோதிட விளம்பரங்கள் ஆக்ரமிக்கின்றன. வானொலி நிகழ்ச்சிகளில் குண்டு வீச்சு செய்திகளை விட அதிகமாக `டாக்சி டாக்சி'தான் ஒலிக்கிறது. எட்டு மணி நேரம் கியூவில் நின்று 15 ஆயிரம் இலங்கைப் பணம் கொடுத்து ஒரு தமிழ்ப்படத்தை அண்மையில் பார்த்தேன் என்று ஒரு இலங்கைத் தமிழர் வலைப்பூவில் எழுதியதைப் படிக்கும்போது, குண்டு வீச்சில் கொல்லப்பட்ட குழந்தைகளைப் பார்க்கும்போது எழும் வேதனைக்கு நிகரான வேதனை எனக்கு உண்டாகிறது.
அவர்களுக்காக அனுதாபப்படும் யாரும் எங்கேயும் தங்கள் வாழ்க்கையை சுருக்கிக் கொள்வதே இல்லை. இதுதான் யதார்த்தம். இந்த நிலையில் மேலும் மேலும் மக்களை உணர்ச்சிவசப்பட வைப்பது அர்த்தமற்றது. சிந்திக்க வைப்பதுதான் தேவை. பகுத்தறிவு ஒன்றுதான் தீர்வு.
ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய காந்தி, ஒருபோதும் ஆங்கிலேயர்கள் மீது வெறுப்பை நம் மனங்களில் விதைக்கவில்லை. அதனால்தான் இன்று ஆங்கிலத்தைப் பயன்படுத்தி நம்மவர்களால் உலகம் முழுதும் வெற்றி அடைய முடிகிறது. வெறுமே உணர்ச்சியைத் தூண்டும் நோக்கத்துடன், தமிழச்சிகள் அங்கே கற்பழிக்கப்படுகிறார்களே என்று இங்கே பாலியல் வன்முறை வழக்கில் சிக்கிய நடிகனெல்லாம், மேடையில் குமுறுவதைக் கேட்க அருவருப்பாக இருக்கிறது..
அனுதாபக் குரல்களை எழுப்பியவர்கள் எல்லாரும் குறைந்தபட்சம் ஒருசில மணி நேரங்களில், அதிகபட்சம் ஓரிரு வாரங்களில் அல்லது மாதங்களில் அவரவர் சுகதுக்கங்களுக்குப் போய்விடுவார்கள்
நன்றிகள்.. யோ (Yoga), நான் ஆதவன், Raghavan, அத்திரி,கார்க்கி, இராகலை - கலை, ச.இலங்கேஸ்வரன்,இர்ஷாத்
குழப்புவது,குழம்புவது இரண்டுமே எனது பகுதி நேரத் தொழில்கள்.. குழம்பாமல் தீர்வொன்றும் மூளைக்குக் கிடைக்காது.. நான் மட்டும் குழம்பினால் நாட்டுக்கு (!) நல்லதில்லை என்பதினாலேயே உங்களையும் கொஞ்சம் சிந்திக்க (!) வைத்தேன்..
அத்திரி- அவங்கெல்லாம் பதில் தெரிஞ்சாலும் சொல்ல மாட்டாங்களே.. அது தானே பிரச்சினை.. :)
ச.இலங்கேஸ்வரன் - அப்பாவிகள் தான் எப்போதும் அப்பாவிகளுக்கு உதவி.. தமிழக மக்களுக்கு காலம் உள்ளளவும் நன்றிகள்..
கார்க்கி- நல்லது செஞ்சா தான் பிடிக்காதே இங்க.. பிடிச்சு போட்டுட்டாங்க உள்ள.. பதில் தெரிஞ்சா நான் என் கேட்கப் போறேன்.. தேடிப் பிடிச்சு யாராவது சொல்லுங்கப்பா
இராகலை - கலை- நாக்கு,வாக்கு சுத்தம் இல்லாவிட்டாலும் நோக்கு சுத்தமாக இருந்தாலே போதுமே.. அது தானே யார் கிட்டேயும் இல்லை..
இர்ஷாத் - நீங்கள் சொல்ல வருவதென்ன? உணர்ச்சிவசப்படக் கூடாதென்றா? அல்லது ஈழத் தமிழர் பற்றிக் கதைக்கும் பலருக்கு அதைப் பற்றிக் கதைக்க அருகதை இல்லை என்றா?அல்லது ஞாநி சொல்வதே சரி என்று சொல்ல வருகிறீர்களா? ஞாநி சொல்வதிலும் உண்மை இல்லாமல் இல்லை;ஆனால் அவர் சொல்லும் எல்லாம் உண்மை என்றும் இல்லை.. புரிகிறதா?
இந்தியாவில் இருக்கும் தமிழர் எமக்கு ஆதரவு தரும் நேரம் நன்றி சொல்வோம்.. நல்லவர்களாக இருக்கும் பலர் நாவு (வாய்) பூட்டி இருக்கையில் வழக்கு போடப்பட்ட பலர் குரல் கொடுப்பதில் தப்பொன்றும் இல்லையே..
யார் மீது தான் வழக்கில்லை?
ஒரு பாடல் தான் ஞாபகம் வந்து தொலைத்தது.. 'நீங்கள் அத்தனை பெரும் உத்தமர் தானா சொல்லுங்கள்.... '
(ஞாநி உட்பட)
14-15 வருடங்களுக்குமுன் எனது வசிப்பிடத்திற்கு அருகில் வயதான ஒரு ஆச்சி இருந்தா. எப்போதும் யாரும் பத்திரிகை வாசித்துக் கொண்டிருப்பதைக் கண்டால் அருகில் சென்று ஆச்சி கேள்வி கேட்பா. (அவவுக்கு எழுத வாசிக்கத் தெரியாதா அல்லது பத்திரிகை வாசிக்கும் அளவுக்கு பார்வை இல்லையா என்பது (எனக்கு) தெரியாது.
ஆச்சி கேட்பது எப்போதும் ஒரே கேள்விதான்:- ''பேப்பர்ல என்ன தம்பி போட்டிருக்கு? பிரச்சினை தீருமாமோ?''
ஆச்சியின் கேள்வி அவர் மீது பரிதாபத்தை ஏற்படுத்தும். ஆனால் லோஷனின் கேள்விகளை வாசித்தபோது ஆச்சி பரவாயில்லை என்று தோன்றுகிறது.
14-15 வருடங்களுக்குமுன் எனது வசிப்பிடத்திற்கு அருகில் வயதான ஒரு ஆச்சி இருந்தா. எப்போதும் யாரும் பத்திரிகை வாசித்துக் கொண்டிருப்பதைக் கண்டால் அருகில் சென்று ஆச்சி கேள்வி கேட்பா. (அவவுக்கு எழுத வாசிக்கத் தெரியாதா அல்லது பத்திரிகை வாசிக்கும் அளவுக்கு பார்வை இல்லையா என்பது (எனக்கு) தெரியாது.
ஆச்சி கேட்பது எப்போதும் ஒரே கேள்விதான்:- ''பேப்பர்ல என்ன தம்பி போட்டிருக்கு? பிரச்சினை தீருமாமோ?''
ஆச்சியின் கேள்வி அவர் மீது பரிதாபத்தை ஏற்படுத்தும். ஆனால் லோஷனின் கேள்விகளை வாசித்தபோது ஆச்சி பரவாயில்லை என்று தோன்றுகிறது.
கருத்துக்களை கருத்துக்களால் வெல்வோம்! ஒரு கருத்தாடலின் ஊடாக உங்கள் Blog படிப்பவர்கட்காவது உண்மை உறைக்குமானால் அதுதான் நிஜ வெற்றி! அதுவரை ஆரோக்கியமான கருத்து மோதலுக்கு இது களமாகட்டும்! வெல்பவர் யாராக இருந்தாலும் சரி
யாராவது ஞாநிக்கு பதில் சொல்லுங்கப்பா
இர்ஷாத்
ஞானியின் கேள்வியை சுருக்கமாக தரவும் :)
ஞானியின் கருத்துக்களை வெளிநாட்டு தமிழர்கள் சார்பில் எதிர்க்கிறேன். இங்கே அரசுகளுக்கு நாங்கள் ஒழுங்கு செய்யும் நிகழ்வுகளையோ தமிழர்களுக்கு உதவுவதற்காக நாங்கள் நடாத்தும் நிகழ்வுகளையோ அறியாத இவர் 15000 கொடுத்தவரைப் பற்றிப் பேசிக்கொண்டு...
இதை எல்லாம் ரூம் போட்டுத்தான் யோசிக்கவேண்டும் லோசன் அண்ணா...
எனக்கு முதலாவதை தவிர்த்து மற்றதுக்கு பதில் தெரியும்.
பலம் எதில் உள்ளது. ஆயுதம், மனிதம், சிந்தனை? மனிதம் என்றால் இல்லைத்தான்.
கிரெடிட் கார்ட் இல்லை.
நான் எந்தப் பதில் பின்னூட்டமும் போடாததற்கான காரணம் எனக்கே எந்தக் கேள்விக்கும் விடை தெரியல,இதற்குள் நான் என்ன சொல்வது??
ஆனால் நிறையக் கேள்விகளுக்கு இந்த வாரத்தில் பதில்கள் வந்துவிட்டன என்று நினைக்கிறேன்..
இப்போ இன்னும் கொஞ்சம் புதுக் கேள்விகள் வந்துள்ளன;அவற்றை தந்து உங்களை சோதிக்கலாம் என்றொரு எண்ணம்.. ;)
வெகு விரைவில் அந்தப் பதிவு வரும்..
Post a Comment