
ஒரு நாளைக்கு ஒரு பதிவாவது தர வேண்டுமென்பது என் நோக்கமல்ல..எப்போது எதையாவது பற்றி எழுதத் தோன்றுகிறதோ அப்போது எழுதுவேன்; பதிவேன்.
எதைப் பற்றியும் எழுதப் போகிறேன்.இது என் தளம், என் களம்.
எங்கள் துறை (வானொலி, ஊடகம்) பற்றி இல்லாவிட்டால் என்னைப் பற்றிக்கூட உங்களில் ஒருவர் எழுதி அனுப்பி வைத்தாலும் பதிவேற்றக் கூடியளவுக்கு இருக்குமாக இருந்தால் அவற்றையும் நான் சேர்த்துக் கொள்ளத் தயாராக இருக்கிறேன்.(அவை கடுமையான விமர்சனங்களாக இருந்தாலும் கூட)
விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளக்கூடியவனே விமர்சிக்கும் தகுதி உடையவனாகிறான்.
நான் எல்லோர் பற்றியும் எல்லாம் பற்றியும், எதைப் பற்றியும் விமர்சிக்க விரும்புகிறேன்.