June 01, 2011

நல்லவர்கள், அதிகார மையம், விசரன் + விருது - ஏன்?????



நல்லவர்களாகத் தம்மைக் காட்டிக் கொள்ளலாம்.. ஆனால் சிலர் தங்களை 'ரொம்பவே' நல்லவர்களாக காட்டிக் கொள்ள முயலும்போது அவர்களின் முகமூடிகளைக் கிழித்து மூக்கில் குத்தி உடைக்க ஆத்திரம் வருகிறது. 


இப்படி நேற்று காலையில் என் மனதில் இருந்ததை ட்விட்டரில் கொட்டி இருந்தேன்..


ஆனாலும் முன்பு சில காலம் முன் இருந்ததைப் போல எனக்குக் கோபம் வருவதில்லை. இது புதுவித நோயோ எனக் கொஞ்சம் யோசனையாக இருக்கிறது.


முன்பெல்லாம் சில விஷயங்கள் மனத்தைக் கொஞ்சமாவது சலனப்படுத்துவது போல நடந்தால் சட்டென்று வரும் கோபத்தில் ஒன்றில் நேரடியாக சம்பந்தப்பட்டவரிடம் கேட்டு விடுவதுண்டு.. அல்லது பதிவாகக் கொட்டித் தள்ளுவதுண்டு.
அது பக்குவப்படாத மனநிலையோ என இப்போது நினைத்தாலும் எனக்கு அந்த சுபாவம் பிடித்தே இருந்தது.


ஊடகங்கள் பற்றி முழுக்க அறியாதவர்கள் தப்பாக எல்லாம் தெரிந்தது போல எழுதினாலோ பேசினாலோ, சரியானவற்றை நிறுவ பாய்ந்து சென்று வாதாடிய நாட்களும் இருந்தன.
ஆனால் இப்போது யார் யார் எதைப் பற்றி எழுதுவது என்ற விவஸ்தையே இல்லாமல் போயிருப்பதால் விமர்சனங்களாக இல்லாமல், கட்டுக்கதைகளாக (அது வேறு யாராவதைப் பற்றியே இருந்தாலும் கூட) இருந்தாலும் "அப்படியா" என சிரித்து விட்டு இருக்கப் பழகி விட்டேன்.


இதற்கு என் வேலைப் பளுவும், நேரமின்மையும் கூடக் காரணமாக இருக்கலாம். 
மனதில் எழும் உணர்வுகளை சட்டென்று சுருக்கமாக ட்விட் செய்து விட்டு செல்வது நேரத்தையும் காக்கும் விடயமாக மாறிவிட்டது. 


பதிவுலகத்தில் அடிக்கடி சர்ச்சைகள் தோன்றுவதும் சிறு சிறு கருத்து மோதல்கள் பெரிய குழுரீதியான மோதலாக மாறுவதும் வெகு சகஜமான விடயங்களே.. 
நான் 2008இன் இறுதிப் பகுதியில் பதிவுலகத்துக்கு வந்ததில் இருந்து இதுவரை பார்க்காத சர்ச்சைகளா, சண்டைகளா, இடம்பெறாத ஹக்கிங்கா, அல்லது வராத போலிகளா, வம்பிழுக்காத அனானிகளா.. 


இதெல்லாம் இங்கே சகஜமப்பா.. என்று மனம் பழகிக் கொண்டது.. இறுதியாக கடந்த ஆண்டின் இறுதியில் இடம்பெற்ற மிகப்பெரிய ஹாக்கிங், போலி சர்ச்சைகளைத் தொடர்ந்து வம்பு இழுத்தவர்கள்.. போலிகளை உருவாக்கியவர்கள்.. அல்லது அடிக்கடி பலருடன் சர்ச்சைகளில் ஈடுபட்டுவந்த சிலர் காணாமல் போயினர்.



சில விஷயங்கள், சில விஷமங்கள், சில விளக்கங்கள்.. மனம் திறக்கிறேன்




இதுவும் கடந்து போகும் என அமைதியானது பதிவுலகம்..


தமிழக மீனவர் பிரச்சினை காலத்தில் மீண்டும் ஒரு வித்தியாசமான சர்ச்சை.. தமிழக - இலங்கை பதிவர்களுக்கிடையில்.. ஆனால் இது நேரடியான கருத்து மோதலாக உருவெடுத்து அடங்கிப் போனது.


ஆனால் நீறுபூத்த நெருப்பாக அடிக்கடி இருந்து வந்த, வரும் ஒரு விஷயம் தான் 'அதிகார மையம்', வட்டம், கொழும்புப் பதிவர், குழு நிலை மனப்பான்மை இப்படிப் பலவிதமான பெயர்களால் அழைக்கப்படும் ஒரு வித சர்ச்சை.


பதிவுலகுக்கு வந்த பிறகு நட்பாகி நெருக்கமாகி ஒரே அலைவரிசை கொண்டவர்களாக இருப்பதனால் (ஒரே ரசனை என்று இருப்பதில்லை) ஒத்தியங்கும் நாம் சிலர்...
நான், வந்தியத்தேவன், ஆதிரை, சுபாங்கன், கவ் போய் மது, கங்கோன், பவன், சதீஸ், புல்லட் என்று இருந்த எம்மில் இப்போது வந்தி, சதீஸ் வெளிநாட்டில்..
புல்லட் பதிவுகள் இடுவதையும் கும்மியில் கலப்பதையும் வேலைப்பளுவால் விட்டுவிட்டார்; மது வேலையில் பிசி..
இப்போது அண்மைக்காலமாக இன்னும் மூவரும் எம்முடன் நட்பாக இருக்கின்றார்கள்..
நிரூசா(நவீன அதிகார மையம்;)), வதீஸ், அனுத்தினன்.
நாம் மட்டும் என்று இல்லை. கலகலப்பாக வெளிப்படையாகப் பேசிப் பழகி இணங்கி இருக்கக் கூடிய யார் வேண்டுமானாலும் இந்த வட்டத்தில் இணையலாம்.
 அதற்காக நாம் தான் இலங்கைப் பதிவுலகை இயக்குகிறோம்.. நாம் தான் ஆசீர்வதிக்கிறோம் என்று யாராவது சொன்னால் நாம் என்ன செய்ய முடியும்? 
இதற்கெல்லாம் அடிக்கடி விளக்கப் பதிவு போட்டுக்கொண்டா இருக்க முடியும்?
 
 
                                         அதிகார மைய உறுப்பினர்கள் - பார்க்கவே டெரராக இல்லை? : p
பட உதவி - நன்றி- பவன் 



இது என்னைப் பொறுத்தவரை மற்ற எல்லோருக்குமே இருக்கின்ற ஒருவிதமான தாழ்வு சிக்கலா, அல்லது அதீத உயர்வு சிக்கலா தெரியவில்லை..
எனக்கு பதிவுலகத்துக்கு நான் வந்த பிறகு கிடைத்த மிகச் சிறந்த விஷயங்களாக நான் அடிக்கடி சொல்வது என் நண்பர்களைத் தான்.. சுகம், துக்கங்களில் நெருக்கமாகப் பங்கெடுக்கும் அந்த நட்பு வட்டாரங்கள் பதிவுலகில் கிடைத்து நாம் நெருக்கமாக இருப்பது வெளியே நோக்கப்படுவது ஒரு வட்டம் என்று.. அல்லது பதிவுலகை ஆட்டிப் படைப்போர் என்று.. என்ன வேடிக்கை இது.. 


எக்சார் தான் ஆரம்பத்திலே தொடக்கி விட்ட விஷம விதை இது.. 


பதிவுலக சந்திப்புக்கள் கொழும்பிலேயே இடம்பெறுவது பற்றி வழமையாகவே குதர்க்கமாகக் கேள்விகள் எழுப்பும் எக்சார் வைத்த முட்டாள் தனமான விஷம விதைகள் எங்கே பிரச்சினை வரும் என்று பார்த்திருந்தோருக்கு மெல்ல அவல் கிடைத்த மாதிரி ஆகிவிட்டது.

எங்களுக்கு மட்டும் ஆசையா என்ன, நேரத்தை செலவழித்து நாமே ஒவ்வொரு முறையும் கொழும்பிலே பதிவர் சந்திப்பை நடத்த?
வெளியூரில் நடத்த யாராவது முன்வாருங்கள் என பகிரங்க அழைப்புக் கொடுத்தும் யாரும் முன்வரவில்லை.

அதிகார மையம் என்று கிண்டல், அச்ச, குதர்க்கத் தொனியில் அழைக்கப்பட்ட நாம் யாரும் ஈடுபடாமலே பதிவர் சந்திப்பை வேறொரு குழு நடத்தியும் அதிகார மையம் என்ற விஷயம் பதிவர் சந்திப்பிலேயே பலராலும் கல கல விஷயமாக மாறிக் கலந்துரையாடப்பட்டது.
நாமும் அதை எவ்விதத்திலும் எம்மைக் குறைவுபடுத்த மற்றோர் குறிப்பிட்ட விஷயமாகக் கணக்கெடுக்கவும் இல்லை.

இப்போது எங்கள் மின்னஞ்சல் கும்மிகளில் 'அதிகார மையம்' என்பது பிரேம்ஜியின் என்ன கொடும சார் போல ஒரு காமெடி வார்த்தை..
அதிகார மையம் என்று இப்போது நாம் அழைக்கும் நிரூசா(மாலவன்) - இறுதியாக நடந்த பதிவர் சந்திப்பை முன்னின்று நடத்தியோரில் ஒருவர் இதனை மிக ஸ்போர்ட்டிவ்வாக எடுத்துக் கொள்கிறார் என நினைக்கிறேன்.

ஆனால் நாங்கள் சிலர் எமக்குள்ளே மாமா, மச்சான், சித்தப்பூ என்று மிக நெருக்கமாகப் பழகிக் கொள்வதும், கும்மிகளில் இணைந்துகொள்வதும் அடிக்கடி சந்தித்துக் கொள்வதும் வேறு சிலருக்கு (பலருக்கு அல்ல என்பதைக் கவனிக்கவும்) கண்ணைக் குத்துகிறது போலும்..

எமக்குள் நாமே பின்னூட்டிக் கொள்கிறோம், வாக்குகள் இட்டுக் கொள்கிறோம் என்பதுவும் இப்படியான சிலரின் வயிற்றெரிச்சல் காரணங்கள்..
ஏழோ எட்டுப் பேரால் ஒரு சொதப்பலான பதிவு சூப்பர் ஹிட்டாகி விடுமா? என்னய்யா இவர்களின் லொஜிக்?

இதிலே வேடிக்கை என்னவென்றால் எம்மில் பலர் இப்போ ரொம்பவே பிசியாகி பதிவு இட்டே நாளாகி விட்டது. எமக்குள் நாமே பின்னூட்டியும் வாக்கிட்டும் சில நாளாகிறது மக்கள்ஸ்.

இன்னொரு செம நகைச்சுவை இப்படிக் குற்றம் சாட்டுவோரே தமக்குள் தாமே பின்னூட்டி நூறு அடிப்பதும் நூற்றைம்பது அடிப்பதும் நடக்கிறது.. நடக்கட்டுமே.. :)

மைந்தன் சிவாவின் ஒரு பதிவுடன் தான் மீண்டும் புதிய சலசலப்புத் தோன்றியது.
அண்மைக்காலத்தில் கொஞ்சம் ஓய்ந்து போயிருக்கும் இலங்கைப் பதிவர்களிடையே புயல் வேகத்தில் பதிவுகளை இட்டுவரும் இருவர் மதி சுதாவும், மைந்தன் சிவாவும் தான்..

பவன், ஜனா, கார்த்தி, நிரூபன், சின்மஜன் போன்றோர் தொடர்ச்சியாக பதிவெழுதும் ஏனைய சிலர்.

மைந்தன் சிவாவின் பதிவிலே சர்ச்சைக்குரிய சில விஷயங்கள் இருந்தாலும் அந்தப் பதிவின் பின்னூட்டத்திலேயே பலரும் பலவிதமாகப் பேசி அங்கேயே அவை தீர்ந்துபோனது என்று தான் நான் நினைத்தேன்.

எந்தவொரு கசப்புணர்வும் எனக்கு அங்கே சிவாவுடன் ஏற்படவில்லை.

நான் பொதுவாகவே நேரடியாகவே எல்லா விஷயங்களையும் பேசிவிடுவதால் பின்னூட்டமாகவே மனதில் நினைத்ததை சொல்லி முடித்து வந்தும் விட்டேன்.
ஆனால் இன்னும் பல நண்பர்கள் சொன்ன சில,பல விஷயங்கள் இன்னும் சிலருக்கு மீண்டும் ஒரு 'அதிகார மையம்' பற்றிய எண்ணக் கருத்துக்களை விதைத்திருக்கின்றன போலும்.
ஒரு சிலரின் விஷமப் பின்னூட்டங்களில் தெளிவாகவே அவை புரிந்தன.

தொடர்ந்து வந்த சில பதிவுகளிலும் தோணித்து ஒரு வகை நையாண்டி, குத்தல், மொட்டைத் தலை - முழங்கால் முடிச்சுக்கள் போன்றவற்றை நான் சரியாக உணராவிட்டால் நான்காவது வருடத்தில் பதிவுலகில் நான் இருப்பதில் அர்த்தம் இல்லையே..

இதில் ஓட்டை வடை நாராயணன் என்பவர் மிக முக்கியமானவர்.
வானொலி, அறிவிப்பாளர் என்ற பதங்களை அவர் பயன்படுத்திய விதங்கள் எதற்காக என்பதை நான் அறியாது போனால் நான் அறியாதவனே..

பலதரப்பட்ட விஷயங்களை அண்மைக்காலத்தில் பதிவிட்டு வரும் நிரூபன் அண்மையில் உண்மையான சம்பவம் என்று ஒரு வானொலிக் கதையை இட்டிருந்தார்.
எனக்கும் என்னைப் பற்றி அறிந்தவருக்கும் அது என் பற்றியது அல்ல என மிகத் தெளிவாகவே தெரியும். ஆனால் இந்தப் பதிவு வெளியான சமயமும், அதில் ஒ.வ.நாராயணின் குத்தலான பின்னூட்டங்களும் என் கவனத்துக்கும் வந்தன.
சிரித்துக் கொண்டேன். எதையோ நினைத்து எங்கேயோ முட்டிய கதை தான் போலும்..

இன்றும் கூட ஜனாவின் பதிவில் ஓட்டை வடை நாராயணனின் பின்னூட்டம் விஷமம்+வம்பு மற்றும் கேவலமாக இருக்கிறது.

ஆனால் எனக்குப் புரியாத விஷயம் ஏன் இது? யார், எங்கே , எதனால் ஆரம்பித்தது?

பதிவுலகம் ஒவ்வொருவருக்குமானது.. அவரவர் தங்கள் ரசனைகளைப் பதிந்து வரட்டுமே.. ஏன் மற்றவர்களின் சிந்தனைக்குள் இன்னொருவரின் தலையீடு வரவேண்டும்?

நேற்று ட்விட்டரில் தற்செயலாக நிரூபனுடன் தகவல் பரிமாறியபோது சில விஷயங்களை நேரடியாகக் கேட்டும் சொல்லியும் தெளிந்துகொண்டோம். வாழ்க்கையும் நட்புகளும் ஆரோக்கியமாகவும், சலனங்கள் இன்றியும் செல்வதற்கு இந்த நேரடிப் பேச்சுவார்த்தைகள் மிக முக்கியமானவை.

மூன்றாம் தரப்பை நான் எங்கேயும் ஆதரிப்பதில்லை.

அதற்காகத் தான் இந்தப் பதிவும் கூட..

-----------------

அண்மையில் பதிவர் ஜனா தனது பதிவுலக மூன்றாம் ஆண்டுப் பூர்த்தியை முன்னிட்டு இட்ட பதிவில் என்னைப் பற்றியும் சொல்லி இருந்தார்.

அதற்குப் பிறகு தான் சிலகாலமாக மனதில் இருந்த சில விஷயங்களைக் கொட்டலாம், கேட்கலாம் என்று நினைத்தேன்.

எனக்குப் பதிவுலகில் இந்தப் பிராந்தியப் பதிவர், இந்த நாட்டுப் பதிவர் என்றெல்லாம் தாண்டி பல நண்பர்கள் உள்ளார்கள்.
அப்படியாக நட்பாக அறிமுகமானவர்களில் ஒருவர் ஜனா.

கொழும்பில் இறுதியாக நடந்த பதிவர் கிரிக்கெட் மற்றும் சந்திப்பில் தான் ஜனாவை அறிமுகம்.அப்போது சந்தித்தது மட்டுமே.

அவரது வலைத்தளத்தை முன்பே வாசித்து வந்தாலும், அவர் இலங்கைப் பதிவர் என்று தெரிந்தது பதிவர் சந்திப்புக்கு ஒரு ஆறு மாத காலத்துக்கு முன்பே.

கிரிக்கெட் போட்டியில் ஜனாவும் நானும் எதிரெதிர் அணிகளில்.
இரு போட்டிகளிலும் ஜனாவின் விக்கெட்டை நானே எடுத்திருந்தேன். 
அந்தவேளையில் யாரோ ஒருவர் (எனக்கு யார் என்று ஞாபகமில்லை)" எதிரிக்கு எதிரி சரியாத் தான் இருக்கு" என்று கொமென்ட் அடித்தது ஞாபகம் வருகிறது.

அட என்னடா இது இப்போ தான் முதலாவது தரம் சந்திக்கிறோம்.. இது என்ன எதிரிக் கதை என்று யோசித்து அப்படியே விட்டு விட்டேன்..

நான் யாரையுமே எதிரி என்று அழைப்பதோ, மற்றவருக்கு சொல்வதோ, ஏன் என் மனதில் நினைப்பது கூடக் கிடையாது. எனக்கு எதிரிகள் கிடையாது.. அதிக நண்பர்கள் உள்ளார்கள் என்பது எனக்குப் பெருமை.
மற்றவர்கள் எனை எதிரியாக நினைத்துக் கொள்வதற்கும் கறுவிக்கொள்வதற்கும் நான் ஒன்றும் செய்ய முடியாதே.
பலருக்கு நான் எதிரி என்றால் அதுவும் என்னிடம் உள்ள ஒரு பலம் என்றே நினைக்கிறேன்.

மீண்டும் இந்த 'எதிரி' கதை வெளியே வந்தது அனுத்தினனின் பிறந்தநாள் விருந்தின் போது.

நாம் (எம் 'அதிகார மைய'க் குழுவுடன் நடுநிலையாளர் என்று நான் வேடிக்கையாக விளிக்கும் மருதமூரானும் ) அனுத்தினனின் வீட்டில் இருந்த நேரம் அனுத்தினனுக்கு ஒரு அழைப்பு வருகிறது...

"உங்கள் எதிரி தான் " என்று எம் பக்கம் பார்த்து சொல்லிவிட்டு வெளியே போய்ப் பேசுகிறார்.
எதிரியா யாரது? என்று புதிராக யோசிக்கப் பின்னர் தான் தெரியவருகிறது அது ஜனா என்று..

அடுத்த ஓரிரு நாட்களில் ஜனாவின் பேஸ்புக் பக்கத்தில் 'எதிரி' பற்றி ஒரு ஸ்டேட்டஸ்.
ஆகா என நினைத்துக் கொண்டேன்.

ஜனா பற்றி நான் நேரடியாக அவருக்கும் பலருக்கும் சொல்லவேண்டிய விஷயம் உள்ளது.
இந்தவருடமும் கொழும்பு பல்கலைக் கழகம் பதிவர்களில் ஒருவரைத் தெரிவு செய்து வழங்கப் போகிறார்கள்.

இது சம்பந்தமாக ஆக்கங்களுக்காகவும், பதிவர்களுள் யாருக்கு வழங்கலாம் என்பது குறித்த சிபாரிசுக்காகவும் பல்கலை மாணவர்கள் எம்மில் சிலரை அணுகியிருந்தார்கள்.

கடந்த வருடம் எனக்கு இந்த விருது கிடைத்தது உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கலாம். இம்முறை நான் எனது மனம் திறந்த சிபாரிசைக் கொடுத்துள்ளேன்.

ஜனாவிடம் இது பற்றிக் கேட்டபோது "கிரிக்கெட் பதிவு எழுதும் லோஷன் போன்றோருக்குத் தானே குடுக்கப் போறீங்கள். அவன் கிரிக்கெட், சினிமாப் பதிவு எழுதும் விசரன்" என்று சொல்லியுள்ளார்.
இது ஒரு சில நாட்களின் பின்னர் பெரிய தயக்கத்தின் பின்னால் என் காதுகளுக்கு வந்தபோதும் நான் அப்போது பொருட்படுத்தவே இல்லை.

இதற்கு முதலும் பலரால் பல தடவை ஜனா என்னைப் பற்றியும், என் பதிவுகள் பற்றியும் வசை பாடியதாக எனக்கு சொல்லியபோதும் நான் கணக்கெடுக்கவில்லை.
எதோ எங்கள் அலைவரிசை ஒட்டவில்லை என தட்டிவிட்டுக் கொண்டேன்.

ஜனாவுடன் நெருக்கமாகப் பழகவேண்டிய தேவையோ, இன்றில் வேறு கொடுக்கல் வாங்கலோ இல்லாத நிலையில் இதன் உண்மைத் தன்மை, காரண காரியங்கள் பற்றி அவரிடமே விசாரிக்க வேண்டிய தேவை இருக்கவில்லை.

ஆனால் ஜனாவின் பதிவில் பார்த்த என் பற்றிய இரு விஷயங்களுக்காகவும், சில பொதுவான வார்த்தைப் பிரயோகங்களுக்காக்கவுமே இதை இங்கே வெளிக்கொண்டுவருகிறேன்.

(ஜனா யாரிடம் இவ்வாறு சொன்னாரோ, அவருக்கும் ஜனாவுக்கும் இடையில் எந்தவொரு முறுகலும் வரக்கூடாது என்பதால் ஒன்றுக்கு இருமுறை அவரிடம் கேட்ட பின்னரே இதைப் பதிவிடுகிறேன். இதை ஜனா இல்லை என்று மறுத்தால்.. என்ற கேள்விக்கே இடமில்லை)

ஜனாவை முதல் தடவையாக சந்தித்த பின்னர் அவர் பற்றி என் பதிவிலே நான் குறிப்பிட்டது...


ரோல்ஸ் போச்சே - பதிவர் சந்திப்பு தொகுப்பு


இவ்வளவுக்கும் ஜனா பற்றி அதற்குப் பின்னரும் நான் ஒற்றை வார்த்தையால் கூட அழைத்திருக்கவில்லை. அவன். இவன் என்ற விளிப்புக் கூட என்னிடம் இருந்து வரவில்லை.

இங்கே யாரும் மிக நல்லவர்கள் இல்லை. புண்ணியாத்மாக்கள் என நாம் எல்லோரையும் நம்பிப் பழகுவதில் உள்ள சிக்கலால் தான் சில வட்டங்களை நாம் உருவாக்கி எம்முடன் ஒத்த அலை வரிசையுள்ளவர்களுடன் மட்டுமே பழகுகிறோம் என்பதற்கு எடுத்துக்காட்டுக்கள் தான் இப்படியான விஷயங்கள்.

ஜனா சொன்ன இந்த விடயங்கள்...
//நான் நினைக்கின்றேன் அவர் அறிவிப்பாளராக இருப்பது பதிவுலகத்தில் அவருக்கு நன்மைகளைவிட, சாபங்களைத்தான் அதிகம் கொடுத்திருக்கின்றது என்று.//
//இப்போது எழுந்துள்ள தேவையற்ற சச்சரவுகளுக்கும் தீர்வாக லோஷன், ஜனா உட்பட அனைவரும் மீண்டும் படிக்கவேண்டிய பதிவாக அது இருக்கின்றது.//

சாபங்கள்? 
என்னைப் பொறுத்தவரை என் தொழில் எனக்கு சோறு போடுவது மட்டுமன்று; அது எனக்கான ஒரு தவம். அந்தத் தொழிலின் பாக்கியம் தான் எனக்கு வலையுலகத்திலும் வாசிப்பிலும் ஈடுபாட்டை அதிகரிக்க உதவுகிறது.
சாபங்கள் என ஜனா சொல்வது எதிரிகள் எனக்கே தெரியாமல் அதிகரிப்பதையா?

தேவையற்ற சச்சரவு - நான் எவற்றிலும் ஈடுபடாத ஒருவன்.எதையும் நான் ஆரம்பிக்கவும் இல்லை. அதிகரிக்கவுமில்லை. லோஷன், ஜனா என்ற பெயர்கள் அங்கே இருப்பதன் மூலம் ஜனா சொல்ல வருவது மறைமுகமாக இந்த சச்சரவுகள் ஆரம்பித்தது அந்த 'எதிரி' விஷயத்திலா?

அப்படியானால் மைந்தன் சிவாவின் பதிவுக்கு முன்னதாகவே ஒரு ரகசிய பூகம்பம் தயாராகிக் கொண்டிருந்ததா? இப்படியெல்லாம் நான் யோசிக்கவேண்டியுள்ளது.

(நான் எல்லோர் பதிவிலும் பின்னூட்டம் இடாததும், பலருக்கு வாக்குகள் இடாததும், என் இடுகைகளுக்கு வரும் பின்னூட்டங்களுக்கு நான் பதில் இடாததும், எனக்குப் பின்னூட்டம் இடுவோரின் இடுகைகளுக்கு நான் பின்னூட்டம் இடாததும் என்னைத் தலைக்கனம் பிடித்தவனாகக் காட்டுவதாக யாராவது எண்ணினால் அவர்கள் என்னை சரியாக அறியாதோரே.. 
அப்படி சிலர் நினைப்பதற்காக என்னை மாற்றிக் கொள்வதற்கும் நான் விரும்பவில்லை.. அல்லது விரும்பினாலும் இயலவில்லை. நேரமின்மை காரணமாக.
நான் நினைக்கின்ற பல விஷயங்களை பதிவாகக் கொண்டுவரவே நேரம் இன்றி இருக்கிறேன் மக்கள்ஸ்.
அப்படியிருந்தும் கிடைக்கின்ற நேரத்தில் வாசிக்கும் பதிவுகளில் பிடித்தவற்றுக்குப் பதில்+வாக்கு இடுகிறேன் )

நான் பரந்துபட்ட வாசிப்பாளன் என்பதால் ட்விட்டர், பேஸ்புக், பலரின் பதிவுகள் (பின்னூட்டாவிட்டாலும், என் ரசனைக்குள் அடங்காததால் வாக்கிடாவிட்டாலும் கூட) என்ன நடக்கிறது.. யார் யார் யாருடன் கூடுதலாக ஒத்து நடக்கிறார்கள் என்று தெரிந்துகொள்வது அவ்வளவு சிரமமான விடயம் அல்லவே..
சிலரது பாஷையில் சொல்லப் போனால் வேறு சில வட்டங்கள்.. :)

இதில் மருதமூரான் பற்றியும் நான் சொல்ல வேண்டும்..அவரை நான் நடுநிலையாளன் என அழைப்பது சிலருக்குக் கிண்டலாக தொனிக்கலாம்.. மருதமூரானுக்கே அது எரிச்சலூட்டலாம்.
ஆனால் முன்னைய சில சர்ச்சைகளில் (யாழ்தேவி திரட்டி குறிப்பாக) பலரது பிரச்சினைகளையும் கேட்டு அறிந்து தனித்தனியாகப் பலருடனும் பேசிப் பழகித் தனித்தனியான உறவுகளைப் பேணி வந்தவர், வருபவர் மருதமூரான்.. 

இதனால் தான் நான் இட்ட அந்தக் காரணப் பெயர்.

எல்லா வட்டங்களிலும் இடைவெட்டாக வரக்கூடிய வெகு சிலரில் ஒருவர். இவருக்கு இங்கு நடக்கும் பலது புரியும்.. இதனால் தான் அண்மையில் பேஸ்புக்கிலும் புலம்பியிருந்தார்.

மருதமூரான் மனம் திறந்தால் இன்னும் பலது வெளிவரலாம்..
இவரது பேஸ்புக் பக்கமே அண்மையில் ஹக் செய்யப்பட்டது இன்னொரு அசிங்கத்தின் உச்சம்.

இந்தப் பதிவு சர்ச்சைகளைப் புதிதாக ஏற்படுத்தலாம்.. எனக்கு நான் உருவாக்காத எனக்கே தெரியாத பல புதிய எதிரிகளைத் தரலாம்.. அல்லது எனக்கு இருக்கும் நண்பர் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கலாம்.

ஆனாலும் எதற்கும் தயாராக மனதைத் திறந்து வைத்துவிட்டேன்.. 

ஜனாவின் பதிவில் பின்னூட்டியது போல...

மனதைத் திறந்து வைத்தால் வேறு பிரச்சினைகள் எழாது என்ற எனது அசையாத நம்பிக்கையால்..


111 comments:

கன்கொன் || Kangon said...

Hmmmm..... :-(

வந்தியத்தேவன் said...

பலவிடயங்களை உங்களுக்கே உரிய நடையில் அமைதியாகவே சொல்லியிருக்கின்றீர்கள். என்னைப் பற்றிய சர்ச்சையிலும் அமைதியாக இருந்த காரணம் என்னால் இப்படியெல்லாம் சிலவிடயங்களை சொல்லமுடியாது, அடித்தால் நேரடிதான்(அதாவது வார்த்தைப் பிரயோகம் கடினமாக இருக்கும்). அதனால் தான் யார் குற்றம் சாட்டினாலும் அமைதியாகவே இருந்துவிடுவேன். எனக்கும் என்னுடைய நண்பர்களுக்கும் உண்மை தெரியும்.

நிறைய விடயங்களுக்கு தனித்தனியாக பதில் அளிக்கவேண்டும் ஆனால் நேரமில்லை. ஆகவே பின்னர் வருகின்றேன்,.

அண்மையில் நண்பர் ஒருவர் அதிகாரமையத்தை ஆட்டிப்படைக்கின்ற சூத்திரதாரி நான் தான் என்றார். பாவம் அவருக்கு எங்கே தெரியும் அதிகாரமையத்தின் ஒன்றுகூடல்களில் அடிக்கடி பந்தாடப்படுவது என் தலைதான் என. இதுவும் கடந்து போகும்.

ஆதித்தன் said...

நம்மீது வந்து விழும் குரங்குகள் விசித்திரமானவை. அவைகளை நாம் திரும்பிப்பார்த்தால்தான் இனச்சேட்டைகளை விடத்தொடங்குவன. நம்மை திரும்பிப் பார்க்கவைப்பதையும் உளவியற் தாக்குதலை தொடுப்பதையுமே தமது வெற்றியாக கருதுவன. அவைகளுக்காக நாம் பரிதாபம் மட்டுமே பட்டுக்கொள்ள இயலும். அவைகளை திருத்தும் வேலை நமக்கானது அல்ல. நமக்கு இருக்கும் ஆயிரம் வேலைகளை விட்டு அவைகளின் ஆட்டங்களைக்கண்டு வெறிகொள்வதனாலும் அவைகளுக்கு அறிவுரை சொல்வதனாலும் அவை தத்தம் தவறுகளை உணரா.

Shafna said...

I'l cum aftr read.

ஆதிரை said...

:-))))))))))))))))))))))

Unknown said...

பதிவினை முழுவதாக வாசித்தாலும் சில விடயங்கள் புரியவில்லை.. இந்தப் பிரச்சினைகளுக்கு காரணம் என்னவென்றால் ஒரு குறித்தவரின்(உதாரணமாக) பதிவுகளுக்கு பின்னூட்டமும் வாக்குகளும் கிடைக்காமல் போவதே. அவ்வாறான தருணத்தில் தான் அடிக்கடி வாக்குகளை அள்ளிக்கொள்ளும் பதிவர்கள் மீது கோபம் , குரோதம் வரக்காரணம்.

இரவு , பகலாக பதிவெழுதி சில பல செமஸ்டர்களை பறிகொடுத்து ஒரு ரீ ரிபீட்டினையும் வாங்குமளவுக்கு எனது எனது பதிவுலக வாழ்க்கை அமைந்துவிட்டது.அவ்வாறு கஸ்டப்பட்டு எழுதினாலும் பதிவுலக நண்பர்கள் வட்டம் குறைவாக இருப்பதால் அந்த குறித்த வாக்குகளை என்னால் பெறமுடியாமல் போனது. இதனால் கொஞ்ஞல் இந்த வட்டத்திலிருந்து விலகியிருக்கிறேன்.

காய்த்த மரத்துக்கு கல்லடி எண்டு ஏதோ சொல்லுவாங்க தானே , அப்படி நினைத்துக் கொள்ளுங்கள்.

ஆதிரை said...

ஆறுதலாக வருகின்றேன். :-)

Vijayakanth said...

இந்த பதிவை எழுதின பிறகு நீங்க கேட்ட பாடல்... பிரீயாவிடு பிரீயாவிடு மாமே வாழ்க்கைக்கு இல்ல காரண்டி :)

போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே.....!!!!!!!

நிரூபன் said...

வணக்கம் சகோ,
ம்.....என்ற நீண்ட பெரு மூச்சோடு படித்து முடித்தேன்
கத்துக் குட்டியான என்னையும் ஆட்டத்தில் சேர்த்திருக்கிறீங்க. நன்றி மாப்பு.


பதிவைப் படித்து முடித்ததும்,
பாதுகாப்பு வலயத்துக்குள் பூட்டி வைத்து நாலு பக்கத்தினாலும் சுற்றி வளைத்து பீரங்கி அடிச்சு குழப்புவது போன்ற உணர்வு வருகிறது சகோ.

தலை சுற்றுது, இப்படிப் பல விடயங்களைக் கடந்தா பதிவுலகம் நகருகிறது என்று.

என் அனுபவத்தில்(அடிங் கொய்யாலா உனக்கு அனுபவம் இருக்கா என்று யாராச்சும் அருவா தூக்கினா,
மன்னிச்சுங்குங்க சாமிகளா)
என் அனுபவத்தில்
ஒரே ஒரு விடயத்தை மட்டும் சொல்ல விரும்புகிறேன். கூகிள் அம்மம்மா தந்த வரப்பிரசாதம் ப்ளாக். எல்லோரும் இன்புற்றிருக்க எழுதுவோம். இன்று முதல் பழையன கழிதலும் புதியன புகுதலும் மரபு என் நிலைக்கு அமைவாக எல்லோரும் புதியவர்களாக இப் பதிவில் கூறப்பட்டுள்ள விடயங்களிற்கமைவாக ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்திச் சர்ச்சைகளை வளர்ப்பதை விடுத்து,
மனத் திருப்திக்காகவு, நல்ல நட்புக்களை வளர்க்கும் நோக்கோடும் பதிவுலகில் ஆரோக்கியமாகப் பயணிப்போம்!

நிரூபன் said...

மாப்பு, வன்னியில் இருந்த தலமைச் செயலகம் போல பதிவுலகிலும் ஒன்று இருக்கா.

அவ்....
எல்லாமே புதிராக இருக்கிறதே.

Subankan said...

Hmmm :-(

Unknown said...

போட்டிகள் இருக்கலாம் ஆனால் பொறாமைகள் கூடாது

Anonymous said...

அனோன்னி கருத்திடுகைக்கு மன்னிக்கவும்.. முகமூடியை களைந்து முன் வந்து கதைக்கும் துணிவு எனக்கில்லை..

1.
//ஏழோ எட்டுப் பேரால் ஒரு சொதப்பலான பதிவு சூப்பர் ஹிட்டாகி விடுமா? என்னய்யா இவர்களின் லொஜிக்?//

சிறுதுளி பெருவெள்ளம் - சின்னனில படிச்சது ஞாபகம் வருது..

2.
//A tiger never reply to stray dogs' bark :) #JustSaying//

நீங்கள் உங்களைத் தொக்கு வைத்து பதிவிட்டவர்களை நாய்கள் என்று சொல்கிறீர்களா?? - வருத்தமளிக்கிறது

3.
உங்களுடைய அடிவருடி என நினைக்கிறேன்.. மிக இளையவர்.. ஆனால் மேதாவித்தனமாகவே எப்பவும் கதைப்பார்..அவருடைய உள்குத்தான கருத்திடல்கள் , நிலைத் தகவல்கள் சில இடங்களில் விசனப்பட வைக்கின்றனவே..

4.
நடுநிலையாளர்கள்(இவர்களை நாரதர்கள் என்றும் சொல்லலாம்) விசயத்தில் சற்றே அவதானமாக இருங்கள்..இரண்டு பக்கமும் போட்டு வாங்குவார்கள் :P

இந்த கருத்திடலுக்கு மன்னிக்கவும்.. மனதில் தோன்றியதை சொன்னேன்.. உண்மையில் நான் உங்கள் அபிமான இரசிகன்.. உங்களுடைய அப்பழுக்கற்ற சேவை தொடர வாழ்த்துக்கள்..

Vathees Varunan said...

வாழ்த்துக்கள் அண்ணே மிகவும் ஒரு மனம் திறந்த பதிவு பல விடயங்களை மனம்திறந்து எழுதியிருக்கின்றீர்கள் மீண்டும் வாழ்த்துக்கள்

Unknown said...

இது ஒருவித மன வியாதி அவர்களுக்கு...! தன்னை விட்டு அல்லது தானும் இருக்கிறேன் என்பதை வெளிப்படுத்த முனையும் முயற்சியே...! ஒருவனை நாம் எதிரியாய் நினைப்பதால் அவன் எமக்கு எதிரியாவதில்லை... மாறாக நாம்தான் அவர்களுக்கு எதிரியாகிவிடுகின்றோம்...!!

நிரூபன் said...

இன்னொரு செம நகைச்சுவை இப்படிக் குற்றம் சாட்டுவோரே தமக்குள் தாமே பின்னூட்டி நூறு அடிப்பதும் நூற்றைம்பது அடிப்பதும் நடக்கிறது.. நடக்கட்டுமே.. :)//

சகோ, இந்த வரிகளுக்கு விளக்கமளிக்க வேண்டிய தேவை இல்லை என்றாலும்,
என் பதிவுகளுக்கும்(விவாதப் பதிவுகளுக்கு பின்னூட்டங்கள் நூறு நூற்றியம்பதைத் தாண்டி வந்திருக்கின்றன, என் பதிவுகளிலும் கும்மி உண்டு சகோ.

கும்மிக்கென்று விசேடமாக சனிக் கிழமைகளில் காமெடி ஜிம்மி எனும் பெயரில் பாட்டுக்குப் பாட்டு கும்மியும் செய்து வருகிறேன்.

ஆனால் நான் பின்னூட்டங்களை நீங்கள் இடவில்லை எனக் குற்றம் சுமத்தியது கிடையாது.
அத்தோடு மைந்தனின் பதிவிலும் ஒரே ஒரு வார்த்தையில் கூறினேன்.
எங்கள் உறவுகளிடமிருந்து எங்கள் பதிவுகளைப் பற்றிய குறை நிறைகளை எதிர்பார்ப்பது நம் கடமையல்லவா.

ஆகவே இதனைத் தான் நான் கூறினேனே, தவிர மற்றும் படி பின்னூட்டம் போடும் படி யாரையும் வற்புறுத்துவது நல்ல செயலல்ல.
அப்படி எதிர்பார்க்கும் ஆள் நானுமல்ல.

கார்த்தி said...

இந்த பதிவு சில தேவையற்ற குழப்பங்களை தீாத்திருக்கும் என நம்புகிறேன்.
மைந்தன்சிவாவின் பதிவில் நானும் கருத்திட்டு தேவையற்ற சர்ச்சைகளை மனகுழப்பங்களை என்னிடத்திலே நானே ஏற்படுத்தி கொண்டவன் என்ற ரீதியிலும் உங்களது பதிவுகளை அந்த காலந்தொட்டே வாசித்து பின்னுாட்டங்களை இட்டவன் என்ற ரீதியிலும் சில கருத்துக்களை வெளிப்படையாக சொல்ல வருகிறேன். தயவு செய்து யாரும் பிழையாக விளங்கிகொள்ளவேண்டாம்.

இங்கே அதிகார மையம் என்று சிலர் ணே்டத்தகாத பிரச்சனைகளை எழுப்ப முயன்றாலும் அச்சொற்றொடர் பகிடியாகவே பேசப்பட்டாலும் அத்தொடர் தொடர்பாக பலருக்கு எந்தவித பிரச்சனைகளும் இருக்கவில்லை. ஒரே frequency கொண்ட நண்பர்கள் அடிக்கடி சந்திப்பதையோ அவர்கள் பேசி பழகுவதையோ பார்த்து மனம்புழுகுமளவிற்கு கீழ்ததரமானவில்லை நான். ஆனாலும் சில பதிவர்கள் சில பதிவர்களால் ஊக்குவிக்கப்படாமையே (அதற்காக எப்பவும் ஓட்டு போட்டு பின்னுாட்டம் இட நான் சொல்லவில்லை) சில பிழையான கருத்து தோற்றப்பாடுகள் எழ காரணமாயிருந்திருக்கிறது. அதாவது சில பதிவர்களுக்கு கொடுக்கும் அங்கீகாரங்களை பலரால் சிலருக்கு கொடுக்கமுடியாமல் இருந்திருக்கிறது. சிலர் பதிவு போடும்போது மட்டும் கருத்துக்களை பரிமாறும் ஒருவரால் ஏன் தன்னை மதித்த ஒருவரை கொஞ்ச அளவாவது கவனிக்க முடியவில்லை என்ற கேள்வியே சிலருக்கு ஏன் எனக்கு கூட எழுந்திருக்கிறது. உண்மையில் நீங்கள் நடுநிலையிலிருந்து பார்க்குமபோதே அல்லது ஒரு பதிவராக இல்லாமல் வெளியே இருந்து பார்க்கும்போதோ நான் சொல்வதிலும் 1% உண்மையாவது இருக்கின்றது என்பதை ஏற்றுக்கொள்ளதான் வேண்டும். சிலர் ஒருதருக்கும் பின்னுாட்டம் பதிவு போடாது வேலை பழுவில் இருக்காலாம் அது ஏற்றுக்கொள்ள கூடியதே ஆனால் சிலருக்கு மட்டும் பின்னுாட்டம் இடுபவர்களுக்கு மற்றயவர்களை கவனிக்க சிறு நேரம்கூட கிடைக்கவில்லையா என்பதே எந்தவித பக்கத்தையும் சராத என்போன்றோரின் கருத்தாக இருக்கிறது. இதற்கு அதிகாரவட்டத்தை காட்டி பிரச்சனை எழுப்புகிறார். அவரின் இவரின் பக்கம் நிக்கிறார் என்று வீண் வாதங்களை தயவுசெய்து எடுத்துகொள்ளவேண்டாம். ஆயினும் இந்த சிறுசிறு சலசலப்பிற்கு பின் பலரும் பழையு வேகத்துடன் பதிவுகளில் இறங்கிருப்பது வரவேற்க தக்கது. இப்படி வெளிப்படையாக பேசிவடுவது நல்லது, சத்தியமாக நீங்கள் மேலே சொன்ன பலபிரச்சனைகள் எனக்கு தெரியவே தெரியாது.
எதுவும் பிழையாக சொல்லியிருப்பின் தயவு செய்து மன்னிக்கவும்.
Positive Negative கருத்துக்கள் இருப்பனும் ஒன்றாகவே எப்போதும் பயணிப்போம்.

சிரிப்பு போலீஸ் said...

படத்தில் இருப்பவர்களைப் பார்க்கும் போது சிரிப்புத் தான் வருகின்றது, ஒருதனிடத்திலும் டெரர் லுக்கே இல்லை.

anuthinan said...

Follow up comments! :D

ஷஹன்ஷா said...

இப்பதிவு நீண்ட நாள் குழப்பத்தின் தீர்வாக அமையும் என எண்ணுகின்றேன்..


அண்ணா பதிவுலகம் என்பது வித்தியாசமானது.. அதை ஊடகமாக பயன்படுத்துவோரும் இருக்கின்றனர்.. சொந்த டயரியாக பயன்படுத்துவோரும் இருக்கின்றனர்.. இது நல்லது..
ஆனால் பிறரை குறைகூறவும், அடுத்தவனை கொச்சைப்படுத்தவும் பதிவுலகை பயன்படுத்துவோர் மோசமானவர்கள்..
அப்படியானோரின் சில செயற்பாடுகள் நேரடியாகவோ மறைமுகமாகவோ பல பதிவர்களை பாதிக்கின்றது..


தங்கள் மனக்கிடக்கையின் வெளிப்பாட்டினால் தங்களுக்கு என்றும் எதிரிகள் வரமாட்டார்கள்.. ஏனெனில் நீங்கள் அன்று தொட்டு வெளிப்படையாகவே எதையும் சொல்லி வருபவர்.. அப்போது நண்பர்களே அதிகரித்தனர்..

----------------------------------------
தங்களை யார் என நேரடியாக காட்டிக் கொள்ளாத எதிரிகள் (போலிகள்)பலர் இருக்கின்றனர்..அவர்களை நாம் அவதானிக்க வேண்டும்..

நல்ல ஞாபகம்..தங்கள் பதிவொன்றிற்கு கருத்திட்டு விட்டு சென்றதும் அதில் என்னொடு முரண்பட்ட போலி என் பதிவிற்கு வந்து என்னை கொச்சைப்படுத்திய சம்பவம்..!


அத்தோடு அண்ணா நான் தங்கள் பதிவுகளில் கருத்திட்டு வருபவன்.. படிப்பவன்.. சில விடயங்களை நேரத்திற்கேற்ப சுட்டிக்காட்டியுள்ளேன்.. உதாரணம் ஆமை-முயல் கதை.
சிலகாலம் நான் கல்விப்பழுவால் விலகியிருந்தேன்..அதை தவறான பார்வையில் சிலர் பார்த்தனர். ஏதோ நமக்குள் மோதல் என்று..தம்பியொருவர் நேரடியாகவும் கேட்டு விடயத்தை தெளிவுபடுத்திக் கொண்டார். ஏனையோருக்கு சொல்வது லோஷன் அண்ணா எங்கள் குடும்பத்தில் ஒருவர்.. எனக்கு அண்ணன் இல்லாத குறையை தீர்ப்பவர்..அனைத்துக்கும் மேல் பதிவுலகை கடந்து என் 2வது ரோல்மொடல்,பதிவுலகில் துரோணர்.(1st யார் என்று அண்ணாவுக்கு தெரியும்)

---------------------------------------
அத்துடன் அண்ணா சிலர் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார்கள்..இதனால் ஏற்பட்ட பாதிப்புகளை தங்கள் Facebook பார்த்தேன்..
வருந்தினேன்..இருக்கின்ற வேலை பழுகளில் இவை வேறா என்று.

இவற்றுக்கு நான் சொல்வது.. குரைக்கின்ற நாய்க்கு காரணம் வேண்டாம் தன் நிழல் பார்த்தே அது குரைக்கும்..!

Anonymous said...

Again the Same Anonymous guy who has commented up..Sorry Anna..

Well, I have seen this FB status from one of my friends and i believe both this post and that status message has strong correlation. Here is that Status Message

//"மன்னிப்புக் கேட்பதை விட, குறித்த தவறை மீண்டுமொருமுறை செய்யாமலிருப்பது முக்கியமானது.
மன்னிப்புக் கேட்டுவிட்டு அதே தவறை திரும்பச் செய்வதில் எதுவித அர்த்தமுமில்லை.
மன்னிப்பு என்பது தண்டனைகளிலிருந்தோ அல்லது கோபங்களிலிருந்தோ உங்களைத் தப்பிக்க வைப்பதற்கான ஒரு ஆயுதம் கிடையாது.
(தொப்பி அளவான அனைவரும் தயவுசெய்து போட்டுக் கொள்ளவும்)"//

இதிலே என்ன சொல்லப் பட்டிருக்கிறது?? சில தரப்பினரை மீண்டும் வம்புக்கு இழுப்பது போலத்தான் கருத வேண்டும் இதனை.. தன்னை மிகவும் பக்குவப்பட்ட பண்பாளர் எனக் காட்ட முயலும் இவர் அறிவுரை எனும் பெயரில் ஏனையவர்களை சீண்டுகிறார்..

உங்களுக்கு மிகவும் தெரிந்தவராக இருப்பதாலேயே இவரது நிலைத்தகவலை பற்றி கருத்திடுகிறேன்.. உங்களுக்கு நெருக்கமான இவ்வாறு பக்குவப்படாதவர்களை நீங்கள் நல்ல முறையில் வழிநடத்த வேண்டும் அண்ணா..

Shafna said...

இவ்ளோ விஷயமிருக்கா?.. இன்டர்நெட்டைக் கண்டு பிடிச்சவனை கட்டி வெச்சி அடிக்கனும்.. இந்தக்கனம் வாழ்ந்து அடுத்தகனம் இறந்து போகும் மனிதர்களை இப்படி ஆக்ரோஷப்படுத்திப் பார்ப்பதற்கு.. எவ்லோ ப்ரமாதமா பதிவெழுதினாலும்,பின்னூட்டினாலும்,அட்டகாசமாய் வாழ்ந்தாலும் இறப்பென்று வந்துவிட்டால் எதுவுமே இல்லையே.. எல்லோரும் ஒரு புன்னகையில் மனிதம் படைக்கலாமே.. லோஷன் அண்ணே, மற்றவர்களின் வீண் பேச்சுக்குள்ளாகும் பல சந்தர்ப்பங்களை கணக்கிலெடுப்பதில்லையென்று நீங்கள் கூறியிருக்கிறீர்கள்.அதைத் தொடர்ந்து செய்தால் சந்தோஷம் உங்களுக்கே..உலகம் ஆயிரம் சொல்லட்டுமே..உண்மை எதுவென உள்மனம் அறியட்டுமே.. நீங்க கனக்கெடுக்காம விடுவதே அவர்களது அவர்களது புத்திக்கு கொடுக்கும் தண்டனையே.. இறப்பதற்காகவே பிரந்திருக்கும் நாம் எதற்காக தேவையற்றதைப் பற்றி சிந்திக்க வேண்டும்.எம் மனசாட்சி சொல்லும் நேர் பாதையில், யாருக்கும் பாதகமில்லாமல் நடந்து செல்லும்போது எதையும் கணக்கெடுக்கத் தேவையில்லை.. வாழ்வின் ஓர் அரைச் சதத்தையேனும் எட்டுவோமா என்ற சந்தேகத்தில் வாழும் எமக்கு ஏன் தேவையற்ற பிணக்கு? லோஷன் அண்ணன் குறிப்பிட்ட நண்பரே,வாழும்வரை சந்தோஷமாக வாழ யார் மனதையும் நோ செய்யாமல் வாழ்வோம்.. சொற்ப கால வாழ்க்கையை சந்தோஷமாக்கலாமே.. ஒரு டுவிட்டில் வேண்டாம் ஒரு பேஸ்புக்கில் வேண்டாம் ஒரு ப்ளொக் இல் வேண்டாம் ஒரு ஸ்கைப்பில் வேண்டாம் ஒரு கோலில் வேண்டாம் ஒரு எஸ்எம்எஸ் இல் வேண்டாம்..ஒரு புன்னகையில் வாழ்வை ரசித்து வாழ்ந்து இறப்போமே..நேற்றை மறப்போம்..இன்றை ரசிப்போம்..நம்பிக்கையில்லா நாளையை,வந்தால் புன்னகையுடன் வரவேற்போம்..

Jana said...

லோஷன்.
இந்த பதிவில் எனது பெயரே அடிக்கடி வந்துகொண்டிருந்ததால் அதுபோல எதையும் திறந்த மனதுடன் பேசவேண்டும் என்ற உங்கள் அழைப்பாலும் திறந்தமனதுடன் சிலதை பேசலாம் சரியாயின் நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என நம்புகின்றேன்.

Jana said...

ஆனால் நான் என் பதிவிலே தங்கள் பெயரை சுட்டியதை நீங்கள் சரியாக புரிந்துகொள்ளவில்லை என்பது மனவருத்தமே.

உண்மையில் தொழில் புரியும் அனைவருக்குமே அவர் அவர்களின் வேலைப்பழுக்கள்,
வேலைத்தளங்களில் உள்ள சிக்கல்கள் என்பவற்றை தாண்டியே ஏதோ பதிவுகளில் உள்ள மோகங்களினால் பதிவுகளை இட்டுவருகின்றோம் இதுவே உண்மை.

இதற்குள், உள்குத்துக்கள், சில ஸ்ரேட்டஸ்கள், சில குறிப்பால் உணர்த்தும் பதிவுகள் என்பன வாசிக்கும் அனைவருக்கும் ரென்ஸனான ஒன்றே என்பதுடன், தரமான பதிவுகள் வருவதையும் அவை இல்லாமல் செய்து இந்த விடையங்களுக்காக ஒரு சர்ச்சை பதிவு எழுதவும் வழிகோருகின்றது.

Jana said...

நீங்கள் சொன்னதுபோல் அதிகார மையங்கள், வட்டங்கள், குழுநிலை வாதங்கள் என்பன ஆரம்பத்தில் எனக்கு சில மனவேதனைகளை உண்டாக்கினாலும்கூட ( காரணம் இதுதானே உங்கள் இலங்கை பதிவர்களின் வேலை என்று சில வேறு பதிவர்கள் கேட்டதனால்) இருந்தது.
எனினும் நான் இலங்கை வந்தபின்னர் இதுகுறித்து எந்த கவலையும் படவில்லை.
நீங்கள் சொன்னதுபோல் ஒத்த சிந்தனையோட்டம் உள்ளவர்கள்தான் ஒன்றாக இருப்பார்கள் (காந்தம் இதில் விதிவிலக்கு அதில் ஒத்த முனைகள் ஒன்றை ஒன்று தள்ளவிடும்)

அடுத்து என் பெயர் அடிபட்ட இடங்களுக்கு வருகின்றேன், அந்த "எதிரி" கதை இன்றுதான் நான் கேள்விப்படுகின்றேன். ஆனால் மைதானம் வந்து பட்டை வைத்து பேஸ் பண்ணிய உங்கள் முதல் பந்தையே சிக்ஸராக அடித்தபோது எங்கள் அணியினர் மட்டும் அன்றி உங்கள் அணியினர் பக்கம் இருந்தும் எனக்கு கைதட்டுக்கள் கிடைத்தன. ஆம்...இரசனையான பெடியங்கள் என்றுதான் நினைத்தேன்.

Jana said...

அடுத்து உண்மையில் எனக்கும் உங்களை அன்றுதான் அறிமுகம் நேரடியாக. இதுவரை சந்தித்தது கிடையாது ஆனால் இந்த எதிரி கோட்கள் விழுந்தது ஏன் என்று தெரியவில்லை.

அடுத்து அன்று அனுதினன் எனக்கு போன் பண்ணவில்லை, பொதுவாக பதிவர்களிடம் வேண்டுகோள் விடுத்துவிட்டு, தனிப்பட்ட முறையில் என்னிடம் கண்டிப்பாக பழைய மாணவர் என்ற ரீதியில் உங்கள் கட்டுரை தேவை என்று எழுதியிருந்தார், அந்தநேரம் வேலை நிமித்தம் இருந்ததனால் பதிலளிக்கமுடியவில்லை என்பதனால், அவருக்கு நான்தான் அழைப்பை எடுத்திருந்தேன்.
பல்கலைக்கழக தமிழ் விழா பற்றி பதிவுகள் தவிர தற்போதைய நடைமுறைகள் பற்றியே முதலில் கதைத்தேன், அடுத்து பதிவர்களின் விருதுகள் பற்றி கதைவரவே, சென்றமுறைபோல் லோஷனுக்கு விருது வழங்கிய விசர்த்தமான நடைமுறைகள்போல அல்லாமல், இந்தமுறை புதியவர்களுக்கு, இளைய நன்றாக எழுதும் நபர்களுக்கு விருது வழங்க முயன்றுபாருங்கள் என்றுதான் சொன்னேன். இதில் கிரிக்கட் எழுதும் லோஷன் சினிமா எழுதும் லோஷன் என்ற வசனங்கள் வந்திருக்கவில்லை.

லோஷன் நான் கைச்கோலொஜி பற்றி ஒரு பதிவு எழுதும்போது நீங்களும் இப்படியான புத்தகங்கள் விரும்பி படிப்பதுண்டு என்று கூறியிருந்தீர்கள் என்ற படியால் ஒன்றை கூறுகின்றேன், ஒரு கெட்டபழக்கமான சிகரட் பிடிப்பதையே என்றும் நான் எவருக்கும் ஒழித்து பிடிப்பதில்லை.. அன்றே பார்த்திருப்பீர்கள் முன்னம் பின்னம் அறிமுகமில்லாத அனைவருக்கும் முன்னால் அடுக்கடுக்காக பிடித்துக்கொண்டிருந்தேன்.
சில விடையங்களை பற்றி அறிய இது போதும் என்று நினைக்கின்றேன்.

அடுத்து ”லோஷனுக்கு வழங்கியதுபோல” என்று நான் கூறியதற்கான விளக்கத்தை வெளிப்படையாக பேசவேண்டும் என்ற உங்கள் வேண்டுகோளுக்கு இணங்க சொல்லிவிடுகின்றேன்,
தங்களுக்கு விருது வழங்குவதற்கு முதலே நானும், பாலவாசகனும், சுபாங்கனும் சந்தித்து பேசும்போது, சில பல்கலைக்கழக மாணவர்கள் பதிவர்களில் ஒருவருக்கு விருதுவழங்க தன்னை கேட்டதாகவும், தன்னால் யாருக்கு வழங்க வேண்டும் என்று கூற இயலாததால், தான் உங்களிடம் கேட்கும்படியும் நீங்கள் உரியவரை தெரிவு செய்வீர்கள் என்றும் கூறியிருந்தார். அதன் பின்னர் விருது உங்களுக்கு கிடைப்பதாக நீங்கள் தெரிவித்திருந்தீர்கள்.மீண்டும் மூவரும் சந்திக்கும்போது இது பற்றி சுபாங்கனிடம் கேட்கும்போது, நான் அப்படித்தான் அவரிடம் சொல்லியிருந்தேன், விருது அவருக்கே என்று அவரே சொல்வது அவரைப்பொறுத்தது என்று அவர் பதிலளித்திருந்தார்.
இதனாலேயே மீண்டும் விசர்த்தனமாக அப்படி நடத்தவேண்டாம் என்று சொன்னேனே தவிர லோஷன் விசரன் அவன் இவன் என்று ஏகவசனத்தில் விழிக்கவில்லை.

இன்று இல்லாதுவிடினும் எனக்கு முன்பே உங்களுடன் தொடர்பில் இருந்த சமுத்திரன் உட்பட சில பதிவர்களையும், மேலும் சில இந்திய பதிவர்களையும் எப்படி ஜனா லோஷன் பற்றி சொல்லியிருக்கின்றான் என்று அறியும்போது கண்டிப்பாக நீங்கள் இதற்கு வருந்துவீர்கள்.

எதிரி என்ற வசனங்கள் முதல் முதலில் உங்கள் அருகாமைகளில் இருந்தே வந்திருக்கின்றன உண்மையில் அதுபற்றி அறிந்த கோபத்தில்த்தான் நான் அந்த நிலையினை முகநூலில் போட்டிருந்தேன்.
எப்படியோ சில விடையங்களை சிலர் உங்களிடம் சொன்னதாக நீங்கள் தெரிவித்திருப்பதும் வெளிப்படையான உங்கள் கருத்தும் எனக்கு சந்தோசமே..

அதேபோல் அன்று லோஷனுக்கு சாபம் என்று வழுதியது உங்கள் தொழிலை வைத்து சிலர் நையாண்டி செய்த கோபத்தில்த்தான். அதேவேளை லோஷன் ஜனா உட்பட முழுவரும் படிக்கவேண்டிய பதிவு என்று உங்கள் அந்த பதிவை நான் சுட்டிக்காட்டியது, நீங்கள் கருதியதுபோல அல்ல, பதிவுலகம் எப்படி என்று அதில் விளக்கமாக நீங்கள் சொல்லியிருந்ததால், அதை நான் சந்திப்பிலே மேற்கோள் காட்டியதால், இதில் நானும் நீங்களும் சம்பந்தப்பட்டவர் ஆகினோம், இது எங்கள் இருவா் மட்டும் அன்றி எல்லோரும் படிக்கவேண்டியது என்ற அர்த்தமே..

எப்படியோ லோஷன் இன்னும் ஒன்றை வெளிப்படையாக கூறிவிடுகின்றேன், உங்களைப்பற்றியும் பலர், உங்கள் அருகில் இருக்கும் சிலா், தாறுமாறாக என்னிடம் சொன்னார்கள், நான் இந்தக்காதால் வாங்கி அந்தக்காதால் விட்டுவிட்டேன். ஆனால் மீண்டும் எப்போதாவது உங்களை சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் கண்டிப்பாக உங்களிடம் நேரடியாக அவை பற்றி கேட்கின்றேன்.

அடுத்து யாவரையும் நான் நண்பர்களாகவே பார்க்கின்றேன், ஆனால் எதிரி என்ற சில விழிப்புக்களும் நான் விரும்பாது விட்டாலும் பிடித்திருக்கின்றது.
உங்கள் பதிவின் ஆரம்பத்தில் மேலே கூறப்பட்ட விடையம் உங்களுக்கு பிறர்கூற்றால் வந்த என்மேலான ஆத்திரம் என்றால், என்னை எதிரியாகவே கருதிக்கொள்ளுங்கள், துரோகிகளாய் முதுகில் குத்தாமல் எதிரியாக தூர இருப்பது எவ்வளவோ மேல் அல்லவா!

maruthamooran said...

லோஷன் மற்றும் பதிவுலக மகாசனங்களே!!

எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு- இப்படி திருவள்ளுவர் சொல்லியிருப்பதை ஞாபகப்படுத்திக்கொண்டு....!

லோஷன்...! இந்தப் பதிவு தொடர்பில் எனக்கிருக்கின்ற சில விடயங்களை நேரடியாகப் பேசவேண்டியே தங்களுக்கு இன்று காலை தொலைபேசியில் அழைத்தேன். தாங்கள், வேறொரு இடத்தில் வேலையில் இருப்பதாகவும், பின்னர் பேசுவதாகவும் குறுந்தகவல் அனுப்பியிருந்தீர்கள். இந்த பதிவு தொடர்பில் கட்டாயம் நாங்கள் இருவரும், தொலைபேசியிலோ அல்லது நேரிலோ பேசவேண்டியிருக்கிறது. ஏனெனில்,

//////மீண்டும் இந்த 'எதிரி' கதை வெளியே வந்தது அனுத்தினனின் பிறந்தநாள் விருந்தின் போது.

நாம் (எம் 'அதிகார மைய'க் குழுவுடன் நடுநிலையாளர் என்று நான் வேடிக்கையாக விளிக்கும் மருதமூரானும் ) அனுத்தினனின் வீட்டில் இருந்த நேரம் அனுத்தினனுக்கு ஒரு அழைப்பு வருகிறது...

"உங்கள் எதிரி தான் " என்று எம் பக்கம் பார்த்து சொல்லிவிட்டு வெளியே போய்ப் பேசுகிறார்.
எதிரியா யாரது? என்று புதிராக யோசிக்கப் பின்னர் தான் தெரியவருகிறது அது ஜனா என்று..

அடுத்த ஓரிரு நாட்களில் ஜனாவின் பேஸ்புக் பக்கத்தில் 'எதிரி' பற்றி ஒரு ஸ்டேட்டஸ்.
ஆகா என நினைத்துக் கொண்டேன். ///////////

இந்த விடயத்தில் எனக்கு விளக்கம் அவசியமானது. தங்களுடன் பேசிய பின்னர் பதிவுலக மகாசனங்களுக்கும் மேற்குறிப்பிட்ட விடயம் தொடர்பில் பதிலளிக்கிறேன்.

தொடர்கிறது................!

maruthamooran said...

'மருதமூரான் மனம் திறந்தால் பலவிடயங்கள் வெளிவரலாம்' என்று நீங்கள் குறிப்பிட்டிருக்கிறீர்கள். இந்தவிடயத்தில் சத்தியமாக நண்பர்களுடன் பேசிக்கொண்டதையோ- நண்பர்கள் என்னுடன் பேசிக்கொண்டதையே நான் இங்கு பேசமாட்டேன். அது பொருத்தமற்றதுமாகும்.

ஏனெனில், நான் இலங்கையிலிருக்கின்ற பல பதிவர்களுடன் நட்புடனே (இதுசரியா?) பழகி வருகிறேன். அவர்கள் ஏதோவொரு நம்பிக்கையில் என்னிடம் பேசிய விடயங்களை பொது இடத்தில் என்னால் சொல்ல முடியாது. அது, குறிப்பிட்ட தருணத்தில் அவர்களின் மனங்களில் இருந்த விடயத்தை என்னிலுள்ள நம்பிக்கையில் சொல்லியவை.

'படுக்கையில் ஏதோவொரு நம்பிக்கையிலேயே காதலியோ, மனைவியோ காதலனுடனோ- கணவனுடனோ தன்னுடைய உணர்ச்சிகளை பகிர்ந்து கொள்கிறாள். அதனை, காதலனோ- கணவனோ படம்பிடித்து மற்றவர்களுக்கு காண்பிப்பது எப்படி அசிங்கமானதோ' அதே மாதிரியானதே நம்பிக்கை வைத்து பேசிய நண்பனின் வார்த்தைகளை பொது இடத்தில் போட்டு கொடுப்பதும். அவ்வாறான கேவலமான- முறையற்ற செயலை செய்யமாட்டேன்.

தொடர்கிறது................!

maruthamooran said...

எப்பொழுதும் பிரச்சினைகளையும்- சந்தேகங்களையும் சம்பந்தப்பட்ட நபர்களிடமே பேசியோ- மின்னஞ்சல் வழியாகவோ தீர்த்துக் கொண்டு விடுவேன். அதுபோலவே, ஒருவர் மீதான விமர்சனத்தையும் அவரிடமே சொல்லிவிடுகிற மனநிலை- தைரியம் என்னிடம் இருக்கிறது. அது, லோஷனுக்கு தெரியும். அதுதவிரவும், ஒருவரின் கருத்தியலையும்- விருப்பு வெறுப்புக்களையும் நட்பு என்கிற நிலைக்குள் எடுத்துக்கொள்ளாதவன். குறிப்பாக, மற்றவனின் அந்தரங்க வாழ்க்கை குறித்த சொறிதல்களை செய்ய முயலாதவன். ஏனெனில், ஒவ்வொருடைய அந்தரங்கமும் அவர் அவருக்குரியன. அதன்மேல், மேல் அக்கறை கொண்டு அலைபவர்களை நான் ஆண்கள் என்றே நினைப்பதில்லை.

அண்மைக்கால பதிவுலக அசாதரண சூழ்நிலைகள் குறித்து பல நண்பர்கள் என்னுடன் பேசியிருக்கிறார்கள். பலர் வெறுத்துப்போய் வார்த்தைகளை உதிர்த்திருக்கிறார்கள். எனக்கும், அது அதிக எரிச்சலையூட்டியிருக்கிறது. அதுதவிரவும், பொறாமை- காழ்ப்புணர்வுடன் வெளியிடப்படும் கேவலமான வார்த்தைகளுக்கு பதிலளித்துக் கொண்டிருக்கவும் முடியதே. அது, அவசியமற்றதுமாகும்.

லோஷனும், ஜனாவும், சுபாங்கனும், மைந்தனும், வந்தியும், ரமேசும், மதிசுதாவும், சவுதியில் இருக்கின்ற மட்டக்களப்பு சந்ருவும் ........ இப்படி பலரும் என்னுடைய நண்பர்கள். அவர்களுக்கு நான் நண்பனாகத்தான் இருக்கிறேனா என்று தெரியாது. நான் இவர்களையெல்லாம் நண்பர்களாகவே நினைக்கின்றேன். கருத்துக்கள் இருந்தால் பகிர்ந்து கொள்கின்றேன்.

மற்றவர்கள் மீதான காழ்ப்புணர்வை பொதுஇடத்தில் காட்டுமளவுக்கு நான் காட்டுமிராண்டி அல்ல. அதுபோல, இவற்றையெல்லாம் சொல்லுவதால் உத்தமனும் அல்ல. என்னிடமும், மற்றவர்களுக்கு பிடிக்காத பல குணங்கள் இருக்கின்றன. ஏன், என்னிடம் எனக்கே பிடிக்காத குணங்கள் இருக்கின்றன.

இலங்கை பதிவுலகிலிருக்கின்றதாக சொல்லப்படுகின்ற வட்டங்கள், செவ்வகங்கள், முக்கோணங்கள் குறித்தெல்லாம் நான் இப்போது அக்கறை கொள்வதில்லை. அது எனக்கு அவசியமும் இல்லை. நண்பர்கள் சேர்ந்தியங்குவது தப்பில்லை. அதுபோல, நண்பரொருவர் தப்பான பாதையில் செல்கின்றார் என்றால் தட்டிக் கேட்பதும் தப்பில்லை. என்னை பலரும், பலரை நானும் தட்டிக்கேட்டிருக்கின்றேன். அது என்னுடைய இயல்பு.

'நடுநிலையாளர்' என்கிற வார்த்தையை நான் என்றைக்கும் வரவேற்றது கிடையாது. அந்த வார்த்தையின் மீது எனக்கு விபரம் தெரிந்த நாளிலிருந்தே உடன்பாடு கிடையாது. 'குரங்கு அப்பம் பிறித்த கதை' எனக்கு உணர்த்திய 'நடுநிலை' அது. அதன் பின்னர் இஸ்ரேல்- பலஸ்தீனப் பிரச்சினையில் அமெரிக்கா அண்ணனும், இலங்கை அரசு- விடுதலைப் புலிகளுக்கிடையில் அண்ணனின் தம்பி நோர்வே வகித்த நடுநிலையும் எங்கள் எல்லோருக்கும் தெரிந்தது தானே! ஏதாவது பிரச்சினையென்றால் சம்பந்தப்பட்டவர்கள் பேசித்தீர்த்துக் கொள்ளுங்கள். அதைவிடுத்து மூன்றாம்- நான்காம் தரப்பிடம் சென்று பிரச்சினையின் தீவிரத்தை அதிகரித்துக் கொள்ளாதீர்கள்.

நன்றி.

Anonymous said...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..... இப்பவே கண்ணா கட்டுதே.... ஏன்பா இந்த கொலை வெறி....

நல்ல நேரம்... நான் பதிவு போடுறதே இல்ல....
Only reading and rarely commenting....

Take it easy Loshan... Personally I respect you and your blog! Keep up the good work!!

சுரேன்

நிரூஜா said...

following...! will comment later

சயந்தன் said...

ஒவ்வொரு தரவுகளையும் தரும் போது அந்தந்த லிங்குகளையும் தந்தால்தான் அவற்றையும் படித்து விரிவான விளக்கத்தை பெற முடியும்.

அனைத்துலக செயலக மையம்..

sinmajan said...

:(

Bavan said...

#பெருமூச்சு...

Unknown said...

:) + :( = ???

sharthaar said...

நான் இங்கு வந்து சம்பந்தமில்லாமல் இப்படிக்கூறுவதற்காக மன்னிக்க வேண்டும்...... வலைப்பதிவர்களான உங்களுக்குள் சில கருத்து வேறுபாடுகளோடு இருக்கின்றீர்கள் என்பது உங்களது பேஸ்புக் பதிவுகளிலிருந்து தெரிகின்றது. ஆனால் நான் சொல்ல வரும் விடயம் உங்கள் அனைவரிலும் எனக்கிருக்கும் ஒரு மனக்குறை.. தவறாக இருந்தால் மன்னிக்கவும். பதிவுகளும் கருத்து மோதல்களும் தவிர்க்க முடியாதவை..... எனவே இங்கு நீங்கள் முட்டி மோதிக்கொள்வதில் தப்பில்லை (கருத்துக்களால் மட்டும்) என்று நான் நினைக்கின்றேன்.

ஆனால் உங்கள் பதிவுகள் எமது நாட்டின் உள்ளார்ந்த பிரச்சனைகளை பேசத்தவறுகின்றது என்று நான் நினைக்கின்றேன்... வெறுமனே நுனிப்புல் மேய்வதும், அல்லது தங்களுக்கு பாதுகாப்பான விடயங்களில் மட்டுமே கருத்துக்களை பதிவதும் தொடர்கின்றாற்போல தெரிகின்றது எனக்கு. நான் உங்கள் எல்லோர் பதிவுகளையும் வாசித்ததில்லை... ஆனால் உங்களில் ஒரு சிலர் பதிவுகளை மட்டுமே வாசித்திருக்கின்றேன்..... என்றாலும் அவை உங்களிலிருக்கும் நட்சத்திரப்பதிவாளர்களது பதிவுகள். எனவே முன்னிலைப்பதிவாளர்களே பதியாத போது மற்றவர்களா பதியப்போகின்றார்கள் என்ற ஒரு ஊகத்தில் தான் இக்குற்றச்சாட்டை வைக்கின்றேன். தவறாக இருந்தால் மன்னிக்கவும். என் குற்றச்சாட்டு தவறாக இருக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பமும்.

நாம் ஒரு முக்கியமான காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்பதை நான் சொல்லி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டுமென்பதில்லை... நமது நாடு ஒரு முப்பது வருட ஆயுதப்போராட்டத்தின் பின்னர் ஒரு இரண்டும் கெட்டான் நிலையில் இருப்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். இந்த நிலையை பயன்படுத்தி சகல அரசியல்தலைமைகளும் தங்கள் தங்கள் கட்சி நலன் சார்ந்து ஒரு அதிகாரப்போட்டியை மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டிருப்பதை இங்கு நாம் வெளிப்படையாகவே காண்கின்றோம். வெருமையாக இருக்கும் தலைமைப்பதவியில் அமர்வது யாரென்ற ஒரு அதிகாரப்போட்டி சத்தமில்லாமல் நடந்துவரும் அதே வேளை.... முப்பது வருட போராட்டத்தை போல தமிழ் தரப்புக்கள் அனைத்தையும் அடக்கியாள இன்னுமொரு தரப்பும் முயற்சித்துக்கொண்டிருக்கின்றது.....

இங்கு மக்கள் அனாதரவாக விடப்பட்டு இருக்கின்றார்கள்...... மக்களைப்பற்றி சிந்திது மக்களை சிந்திக்க வைக்க‌ வேண்டிய எழுத்தாளர்களான நீங்கள் உங்களுக்குள் சண்டை பிடித்துக்கொண்டிருக்கின்றீர்கள்! ஊடகவியலாளர்களான எங்களுக்கு சில தடைக்கற்கள் இருப்பது வாடிக்கை... ஆனால் எழுத்தாளர்களும் வலைப்பதிவர்களுமான உங்களுக்கென்ன பிரச்சனை? அனானிகளாக வந்து இத்தனை ஆர்ப்பாட்டம் செய்யும் நீங்கள் உங்கள் பெயர்களை மாற்றியாவது இப்போது மக்களை சரியான பாதையில் அழைத்துப்போக வேண்டிய கடப்பாட்டில் இருக்கின்றீர்கள்... செய்வீர்களா?

அதற்காக மக்களை மீண்டும் இரத்தக்களரிக்கு அனுப்ப நான் சொல்லவில்லை.... அரசியல் பிரச்சனைகளில் உங்கள் மனத்தில் உள்ள கருத்துக்களை தயங்காது பதிவு செய்ய ஆரம்பியுங்கள் அவை எவ்வகையான கருத்துக்களாகவும் இருக்கட்டும். ஆயிரம் கருத்துக்கள் முட்டி மோதும் போதுதான் தெளிவு பிறக்கும் என்பது எனது நம்பிக்கை.... எனவே இனி உங்கள் பதிவுகள் மக்களை நல்வழிப்படுத்தும், இலங்கை நிலையை கட்சி நலன் சாராது உலகுக்கு எடுத்துச்சொல்லும் பதிவுகளாக இருக்கும், இருக்க வேண்டுமென்று விரும்புகின்றேன்......

நான் ஏதும் தப்பாக சொல்லியிருந்தால் மன்னிக்கவும்.................

யோ வொய்ஸ் (யோகா) said...

பின்னூட்டங்களை வாசிப்பதற்காக

Unknown said...

பின்னூட்டங்களைத் தொடரும்பொருட்டு...

மேலும் மருதமூரானுக்கு..
///படுக்கையில் ஏதோவொரு நம்பிக்கையிலேயே காதலியோ, மனைவியோ காதலனுடனோ- கணவனுடனோ தன்னுடைய உணர்ச்சிகளை பகிர்ந்து கொள்கிறாள். அதனை, காதலனோ- கணவனோ படம்பிடித்து மற்றவர்களுக்கு காண்பிப்பது எப்படி அசிங்கமானதோ' அதே மாதிரியானதே நம்பிக்கை வைத்து பேசிய நண்பனின் வார்த்தைகளை பொது இடத்தில் போட்டு கொடுப்பதும். அவ்வாறான கேவலமான- முறையற்ற செயலை செய்யமாட்டேன்///
நாம் படித்தபோதும் பெரிதாக நெருங்கியிருந்ததில்லை. இப்போதும் அவ்வாறே. இருந்தும் நீயும் நானும் ஒரே வகுப்பில் (சில வேளைகளில் ஒரே வாங்கிலில்) இருந்து படித்திருக்கிறோம். பெருமையாக இருக்கிறது.... (பாடசாலைக் காலத்து நக்கல் தொனியில் வாசிக்காதே, this is on a very very serious note bro)

கன்கொன் || Kangon said...

// Anonymous said...

Again the Same Anonymous guy who has commented up..Sorry Anna..

Well, I have seen this FB status from one of my friends and i believe both this post and that status message has strong correlation. Here is that Status Message

//"மன்னிப்புக் கேட்பதை விட, குறித்த தவறை மீண்டுமொருமுறை செய்யாமலிருப்பது முக்கியமானது.
மன்னிப்புக் கேட்டுவிட்டு அதே தவறை திரும்பச் செய்வதில் எதுவித அர்த்தமுமில்லை.
மன்னிப்பு என்பது தண்டனைகளிலிருந்தோ அல்லது கோபங்களிலிருந்தோ உங்களைத் தப்பிக்க வைப்பதற்கான ஒரு ஆயுதம் கிடையாது.
(தொப்பி அளவான அனைவரும் தயவுசெய்து போட்டுக் கொள்ளவும்)"//

இதிலே என்ன சொல்லப் பட்டிருக்கிறது?? சில தரப்பினரை மீண்டும் வம்புக்கு இழுப்பது போலத்தான் கருத வேண்டும் இதனை.. தன்னை மிகவும் பக்குவப்பட்ட பண்பாளர் எனக் காட்ட முயலும் இவர் அறிவுரை எனும் பெயரில் ஏனையவர்களை சீண்டுகிறார்..

உங்களுக்கு மிகவும் தெரிந்தவராக இருப்பதாலேயே இவரது நிலைத்தகவலை பற்றி கருத்திடுகிறேன்.. உங்களுக்கு நெருக்கமான இவ்வாறு பக்குவப்படாதவர்களை நீங்கள் நல்ல முறையில் வழிநடத்த வேண்டும் அண்ணா.. //

அன்புள்ள "அனோன்னி"க்கு,
எனது ஸ்ரேற்றஸ்கள் பற்றி பதிவுகளில் விளக்கமளிக்க வேண்டிய அவசியம் கிடையாது.
இத்தனைக்கும் உங்களது பேஸ்புக் நண்பராக நான் இல்லை. ;-)

ஆனால் நான்,
https://twitter.com/#!/kangon/status/75643570178101248
என்றும் ருவீற் பண்ணியிருக்கிறேனே?
அதாவது பதிவுலகத்தை வெறுமையாக்காமல் விடமாட்டேன் என்ற அர்த்தத்தில் தானே இதையும் சொல்லியிருக்கிறேன்?
எனது நண்பரல்லாமலிருந்து கொண்டு என் பேஸ்புக் ஸ்ரேற்றஸை எடுக்க முடிந்த உங்களால் ஏன் எனது ருவிற்றரை எடுக்க முடியவில்லை?

வாழ்த்துக்கள் உங்கள் சேவைக்கு.

ARV Loshan said...

கன்கொன் || Kangon said...
Hmmmm..... :-(//

ம்ம்ம்ம்ம்ம் :)

===================

வந்தியத்தேவன் said...
பலவிடயங்களை உங்களுக்கே உரிய நடையில் அமைதியாகவே சொல்லியிருக்கின்றீர்கள். என்னைப் பற்றிய சர்ச்சையிலும் அமைதியாக இருந்த காரணம் என்னால் இப்படியெல்லாம் சிலவிடயங்களை சொல்லமுடியாது, அடித்தால் நேரடிதான்(அதாவது வார்த்தைப் பிரயோகம் கடினமாக இருக்கும்). அதனால் தான் யார் குற்றம் சாட்டினாலும் அமைதியாகவே இருந்துவிடுவேன். எனக்கும் என்னுடைய நண்பர்களுக்கும் உண்மை தெரியும். //

:) ஒவ்வொருவர் சுபாவம் ஒவ்வொரு மாதிரி.. ஆனால் கோபம் வரும் நிலையில் அவசர அவசரமாக பதிவு எழுதினாலும் மறுபடி முழுக்க வாசித்து அதன் பின்னர் வெளியிடுவது இப்போதைய நிலையில் மட்டுமல்ல எப்போதுமே சிறப்பானது என எண்ணுகிறேன்



நிறைய விடயங்களுக்கு தனித்தனியாக பதில் அளிக்கவேண்டும் ஆனால் நேரமில்லை. ஆகவே பின்னர் வருகின்றேன்,.//

:) வெயிட்டிங் ;)

அண்மையில் நண்பர் ஒருவர் அதிகாரமையத்தை ஆட்டிப்படைக்கின்ற சூத்திரதாரி நான் தான் என்றார். பாவம் அவருக்கு எங்கே தெரியும் அதிகாரமையத்தின் ஒன்றுகூடல்களில் அடிக்கடி பந்தாடப்படுவது என் தலைதான் என. இதுவும் கடந்து போகும்.//

உண்மையைத் தானே சொல்லி இருக்கிறார் ;) lol

சொந்த செலவில் சூனியத்தைத் தானே சொல்ல வந்தீர்கள்?

ARV Loshan said...

ஆதித்தன் said...
நம்மீது வந்து விழும் குரங்குகள் விசித்திரமானவை. அவைகளை நாம் திரும்பிப்பார்த்தால்தான் இனச்சேட்டைகளை விடத்தொடங்குவன. நம்மை திரும்பிப் பார்க்கவைப்பதையும் உளவியற் தாக்குதலை தொடுப்பதையுமே தமது வெற்றியாக கருதுவன. அவைகளுக்காக நாம் பரிதாபம் மட்டுமே பட்டுக்கொள்ள இயலும். அவைகளை திருத்தும் வேலை நமக்கானது அல்ல. நமக்கு இருக்கும் ஆயிரம் வேலைகளை விட்டு அவைகளின் ஆட்டங்களைக்கண்டு வெறிகொள்வதனாலும் அவைகளுக்கு அறிவுரை சொல்வதனாலும் அவை தத்தம் தவறுகளை உணரா.//

உண்மை தான்.. ஆனால் சிலவேளைகளில் அடித்துத் துரத்த வேண்டிய நேரமும் வந்தால் அதற்காகக் கோபம் கொள்ளவேண்டித் தானே இருக்கிறது?

===========

Shafna said...
I'l cum aftr read.//

ஆங்கிலப் பயன்பாட்டின்போது சில சொற்களில் அதீத கவனம் தேவை ஷப்னா

===============

ஆதிரை said...
:-))))))))))))))))))))))//

சில இடங்களில் மௌனமும் சில இடங்களில் மூர்க்கமும் உங்களால் மட்டுமே முடிந்த விஷயங்கள் சித்தூ ;)

ARV Loshan said...

அஸ்பர்-இ-சீக் said...
பதிவினை முழுவதாக வாசித்தாலும் சில விடயங்கள் புரியவில்லை..//

அதுவும் நல்லதற்கே.. :)



இந்தப் பிரச்சினைகளுக்கு காரணம் என்னவென்றால் ஒரு குறித்தவரின்(உதாரணமாக) பதிவுகளுக்கு பின்னூட்டமும் வாக்குகளும் கிடைக்காமல் போவதே. அவ்வாறான தருணத்தில் தான் அடிக்கடி வாக்குகளை அள்ளிக்கொள்ளும் பதிவர்கள் மீது கோபம் , குரோதம் வரக்காரணம். //

இருக்கலாம்.. ஆனால் அதற்காகப் பகை வளர்ப்பதும், பழிபோடுவதும் தவறானவை அன்றோ?



இரவு , பகலாக பதிவெழுதி சில பல செமஸ்டர்களை பறிகொடுத்து ஒரு ரீ ரிபீட்டினையும் வாங்குமளவுக்கு எனது எனது பதிவுலக வாழ்க்கை அமைந்துவிட்டது.அவ்வாறு கஸ்டப்பட்டு எழுதினாலும் பதிவுலக நண்பர்கள் வட்டம் குறைவாக இருப்பதால் அந்த குறித்த வாக்குகளை என்னால் பெறமுடியாமல் போனது. //

இது தான் தவறு என்பது.. பதிவுலகமே எம் வாழ்க்கை அல்ல.. பொழுதுபோக்கே என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.

எதுவுமே அளவோடு இருக்கும் வரை ஆபத்தில்லை



காய்த்த மரத்துக்கு கல்லடி எண்டு ஏதோ சொல்லுவாங்க தானே , அப்படி நினைத்துக் கொள்ளுங்கள்.//

:)

ARV Loshan said...

ஆதிரை said...
ஆறுதலாக வருகின்றேன். :-)//

எப்பவும் வரலாம் :)

================

Vijayakanth said...
இந்த பதிவை எழுதின பிறகு நீங்க கேட்ட பாடல்... பிரீயாவிடு பிரீயாவிடு மாமே வாழ்க்கைக்கு இல்ல காரண்டி :)//

இல்லையே.. ;) ஆடிப் பாரு மங்காத்தா ;)



போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே.....!!!!!!!//

கண்ணன் ??? அவர் யாரு? வலைத்தளம் எங்கே?

ARV Loshan said...

நிரூபன் said...

கத்துக் குட்டியான என்னையும் ஆட்டத்தில் சேர்த்திருக்கிறீங்க.//

கத்துக் குட்டி? கற்றுக் கொடுக்கும் சுட்டி என்று மாற்றிக் கொள்ளுங்கள் ;)




பதிவைப் படித்து முடித்ததும்,
பாதுகாப்பு வலயத்துக்குள் பூட்டி வைத்து நாலு பக்கத்தினாலும் சுற்றி வளைத்து பீரங்கி அடிச்சு குழப்புவது போன்ற உணர்வு வருகிறது சகோ.//

ஆகா.. மீண்டுமா? ;)


தலை சுற்றுது, இப்படிப் பல விடயங்களைக் கடந்தா பதிவுலகம் நகருகிறது என்று.//

அதான் சொல்லி இருக்கேனே.. இதெல்லாம் இங்கே சகஜமப்பா..


என் அனுபவத்தில்
ஒரே ஒரு விடயத்தை மட்டும் சொல்ல விரும்புகிறேன். கூகிள் அம்மம்மா தந்த வரப்பிரசாதம் ப்ளாக். எல்லோரும் இன்புற்றிருக்க எழுதுவோம். இன்று முதல் பழையன கழிதலும் புதியன புகுதலும் மரபு என் நிலைக்கு அமைவாக எல்லோரும் புதியவர்களாக இப் பதிவில் கூறப்பட்டுள்ள விடயங்களிற்கமைவாக ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்திச் சர்ச்சைகளை வளர்ப்பதை விடுத்து,
மனத் திருப்திக்காகவு, நல்ல நட்புக்களை வளர்க்கும் நோக்கோடும் பதிவுலகில் ஆரோக்கியமாகப் பயணிப்போம்!//

அதே.. இதை எல்லாரும்.. ஐ மீன்.. எல்லாரும் சரியா விளங்கிக் கொண்டா எந்தப் பிரச்சினையும் இல்லை :) நன்றி வந்ததுக்கு



நிரூபன் said...
மாப்பு, வன்னியில் இருந்த தலமைச் செயலகம் போல பதிவுலகிலும் ஒன்று இருக்கா.//

என்னாது? இருக்கா? யாருப்பா அது? எங்கேப்பா?

அதிகார மையம் மட்டுமே இங்கே உண்டு.. யோவ் நிரூசா ஓடி வாருமைய்யா..இவர் எதோ சொல்றார்

ARV Loshan said...

Subankan said...
Hmmm :-(//

ம்ம்ம்ம்

========

M.Shanmugan said...
போட்டிகள் இருக்கலாம் ஆனால் பொறாமைகள் கூடாது//

அது சரி..

ARV Loshan said...

Anonymous said...
அனோன்னி கருத்திடுகைக்கு மன்னிக்கவும்.. முகமூடியை களைந்து முன் வந்து கதைக்கும் துணிவு எனக்கில்லை..//

பரவாயில்லை.. ஆனாலும் உங்களை அடையாளம் கண்டுகொண்டேன்.. அதனால் எனக்கு இது அனானிக் கருத்து இல்லை ;)



1.
//ஏழோ எட்டுப் பேரால் ஒரு சொதப்பலான பதிவு சூப்பர் ஹிட்டாகி விடுமா? என்னய்யா இவர்களின் லொஜிக்?//

சிறுதுளி பெருவெள்ளம் - சின்னனில படிச்சது ஞாபகம் வருது..//

சரி தான்.. ஆனால் துளிகள் வெள்ளமாக முதல் இங்கே பதிவு பழசாய்ப் போய்டுமே.. அப்போ அது இங்கே பொருந்தாது தம்பி

2.
//A tiger never reply to stray dogs' bark :) #JustSaying//

நீங்கள் உங்களைத் தொக்கு வைத்து பதிவிட்டவர்களை நாய்கள் என்று சொல்கிறீர்களா?? - வருத்தமளிக்கிறது//

பதிவு சம்பந்தமாக ஏதாவது நான் சொல்லி இருக்கிறேனா? குறைக்கும் சிலதையும் புலியையும் பற்றி நான் சொன்னதை என்னை ஏன் புலி ஆக்குகிறீர்கள்?

புரியவில்லை

3.
உங்களுடைய அடிவருடி என நினைக்கிறேன்.. மிக இளையவர்.. ஆனால் மேதாவித்தனமாகவே எப்பவும் கதைப்பார்..அவருடைய உள்குத்தான கருத்திடல்கள் , நிலைத் தகவல்கள் சில இடங்களில் விசனப்பட வைக்கின்றனவே..//

இந்த அடிவருடி என்ற பதம் ???? உங்களையும் நீங்கள் கண்ணாடி முன் நிறுத்தலாம் தம்பி.

மேதாவித் தனம் என்பதைத் தீர்மானிக்க நீங்கள் யார்?

இந்த ஒரே கருத்துக்காகத் தான் அனானியாக வந்தீர்கள் என்று நான் கருதலாமா?



4.
நடுநிலையாளர்கள்(இவர்களை நாரதர்கள் என்றும் சொல்லலாம்) விசயத்தில் சற்றே அவதானமாக இருங்கள்..இரண்டு பக்கமும் போட்டு வாங்குவார்கள் :P //

தெரியும். ஆனால் எல்லோருமே அல்ல.. இதனால் தான் எனது பதிவிலும் அழுத்தமாக ஒரு வசனம் சேர்த்துள்ளேன்..

மூன்றாம் தரப்பை நான் எங்கேயும் ஆதரிப்பதில்லை.




இந்த கருத்திடலுக்கு மன்னிக்கவும்.. மனதில் தோன்றியதை சொன்னேன்..//

மனதில் பட்டதை சொல்ல யாருக்கும் உரிமை உள்ளது. ஆனால் ஆதாரம் இன்றிக் குற்றம் சாட்ட யாருக்குமே உரிமை இல்லை.



உண்மையில் நான் உங்கள் அபிமான இரசிகன்.. //

நன்றாகவே தெரியும் :)

சிரிப்பு போலீஸ் said...

அதிகார மையத்தின் அங்கத்தவர்களின் எண்ணிக்கை 12 ஆனாலும் லோஷனுக்கு தமிழ்மணத்தில் விழுந்த ஓட்டுகளின் எண்ணிக்கை வெறும் 5 தான். சிப்புசிப்பா வருது

ARV Loshan said...

வதீஸ்-Vathees said...
வாழ்த்துக்கள் அண்ணே மிகவும் ஒரு மனம் திறந்த பதிவு பல விடயங்களை மனம்திறந்து எழுதியிருக்கின்றீர்கள் மீண்டும் வாழ்த்துக்கள்//

:) நன்றி

====================

ப .லோகேஸ்வரன் said...
இது ஒருவித மன வியாதி அவர்களுக்கு...! தன்னை விட்டு அல்லது தானும் இருக்கிறேன் என்பதை வெளிப்படுத்த முனையும் முயற்சியே...! ஒருவனை நாம் எதிரியாய் நினைப்பதால் அவன் எமக்கு எதிரியாவதில்லை... மாறாக நாம்தான் அவர்களுக்கு எதிரியாகிவிடுகின்றோம்...!!//

ம்ம்ம்ம்.. இது யாரையும் திருத்துவதற்கான பதிவு அல்ல.. சில விஷயங்களை சொல்ல மட்டுமே

Anonymous said...

சிரிப்பு போலீஸ், ஏன்யா கூசாமப் புளுகுறீர்? நீரும் லோஷனின் அடி வருடியா? வடிவாப் பாரும் சுளையா 24 வாக்கு.
மறைமுக அதிகார மையமும் இருக்குப் போல இருக்கே.

சிரிப்பு போலீஸ் said...

அனானி மண்டையா ஒழுங்காக வாசிக்கவும் தமிழ்மணத்தில் 5 ஓட்டுகள். தமிழ்மணத்துக்கு இன்ட்லிக்கும் வித்தியாசம் தெரியாத நீ எல்லாம் என்னாத்தை எழுதி என்னாத்தை கிழிச்சு. நல்லவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பது அடிவருடி என்றால் நான் லோஷனின் அடிவருடிதான்.

ARV Loshan said...

நிரூபன் said...
இன்னொரு செம நகைச்சுவை இப்படிக் குற்றம் சாட்டுவோரே தமக்குள் தாமே பின்னூட்டி நூறு அடிப்பதும் நூற்றைம்பது அடிப்பதும் நடக்கிறது.. நடக்கட்டுமே.. :)//

சகோ, இந்த வரிகளுக்கு விளக்கமளிக்க வேண்டிய தேவை இல்லை என்றாலும்,
என் பதிவுகளுக்கும்(விவாதப் பதிவுகளுக்கு பின்னூட்டங்கள் நூறு நூற்றியம்பதைத் தாண்டி வந்திருக்கின்றன, என் பதிவுகளிலும் கும்மி உண்டு சகோ.//

பொதுவாக சொன்னேம்பா :)



கும்மிக்கென்று விசேடமாக சனிக் கிழமைகளில் காமெடி ஜிம்மி எனும் பெயரில் பாட்டுக்குப் பாட்டு கும்மியும் செய்து வருகிறேன்.//

தெரியும் :)



ஆனால் நான் பின்னூட்டங்களை நீங்கள் இடவில்லை எனக் குற்றம் சுமத்தியது கிடையாது.
அத்தோடு மைந்தனின் பதிவிலும் ஒரே ஒரு வார்த்தையில் கூறினேன்.
எங்கள் உறவுகளிடமிருந்து எங்கள் பதிவுகளைப் பற்றிய குறை நிறைகளை எதிர்பார்ப்பது நம் கடமையல்லவா.//

அதுவும் சரி தான்.. தப்பேதும் இல்லை

=====================

ARV Loshan said...

கார்த்தி said...
இந்த பதிவு சில தேவையற்ற குழப்பங்களை தீாத்திருக்கும் என நம்புகிறேன். //

:)


ஆனாலும் சில பதிவர்கள் சில பதிவர்களால் ஊக்குவிக்கப்படாமையே (அதற்காக எப்பவும் ஓட்டு போட்டு பின்னுாட்டம் இட நான் சொல்லவில்லை) சில பிழையான கருத்து தோற்றப்பாடுகள் எழ காரணமாயிருந்திருக்கிறது. அதாவது சில பதிவர்களுக்கு கொடுக்கும் அங்கீகாரங்களை பலரால் சிலருக்கு கொடுக்கமுடியாமல் இருந்திருக்கிறது. சிலர் பதிவு போடும்போது மட்டும் கருத்துக்களை பரிமாறும் ஒருவரால் ஏன் தன்னை மதித்த ஒருவரை கொஞ்ச அளவாவது கவனிக்க முடியவில்லை என்ற கேள்வியே சிலருக்கு ஏன் எனக்கு கூட எழுந்திருக்கிறது. உண்மையில் நீங்கள் நடுநிலையிலிருந்து பார்க்குமபோதே அல்லது ஒரு பதிவராக இல்லாமல் வெளியே இருந்து பார்க்கும்போதோ நான் சொல்வதிலும் 1% உண்மையாவது இருக்கின்றது என்பதை ஏற்றுக்கொள்ளதான் வேண்டும். சிலர் ஒருதருக்கும் பின்னுாட்டம் பதிவு போடாது வேலை பழுவில் இருக்காலாம் அது ஏற்றுக்கொள்ள கூடியதே ஆனால் சிலருக்கு மட்டும் பின்னுாட்டம் இடுபவர்களுக்கு மற்றயவர்களை கவனிக்க சிறு நேரம்கூட கிடைக்கவில்லையா என்பதே எந்தவித பக்கத்தையும் சராத என்போன்றோரின் கருத்தாக இருக்கிறது.//

இந்தக் கருத்துக்கு நான் விதண்டாவாதம் புரிவதாக எண்ணம் வேண்டாம் கார்த்தி.. ஆனால் எல்லோரும் எல்லாப் பதிவுகளையும் வாசிக்கும் ரசனை இருக்கிறதா என்று கேட்டால் இல்ல என்றே பதில் வரும்.

எனக்கு கவிதைகள் பிடிக்கும் ஆனால் எல்லா நேரமும் அல்ல.. கவிஞர்கள் பலர் நண்பர்களாக இருந்தாலும் அவர்களின் பதிவுகளைத் தொடர்ந்து வாசிப்பவனோ அல்லது வாக்களிப்பவனோ அல்ல.. இது அவர்களுக்கும் நன்றாகவே தெரியும்.

அவர்களும் எனக்கு வாக்களிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவனும் அல்ல.

எனக்கு யார் யார் பின்னூட்டுகிறார்கள், வாக்களிக்கிறார்கள் என்று பார்த்துப் பழகுபவனும் அல்ல.

ஆயினும் இனி நீங்கள் சொன்னவற்றை நான் கொஞ்சம் கவனிக்கிறேன்.


இதற்கு அதிகாரவட்டத்தை காட்டி பிரச்சனை எழுப்புகிறார். அவரின் இவரின் பக்கம் நிக்கிறார் என்று வீண் வாதங்களை தயவுசெய்து எடுத்துகொள்ளவேண்டாம்.//

:)

================


சிரிப்பு போலீஸ் said...
படத்தில் இருப்பவர்களைப் பார்க்கும் போது சிரிப்புத் தான் வருகின்றது, ஒருதனிடத்திலும் டெரர் லுக்கே இல்லை.//

அட யார்ரா இது? அதிகார மையம் என்றாலே பயம் வர வேண்டாமோ? என்ன துணிச்சல்? ;)

ARV Loshan said...

Anuthinan S said...
Follow up comments! :D //

சரிங்கோவ்..
===============

“நிலவின்” ஜனகன் said...
இப்பதிவு நீண்ட நாள் குழப்பத்தின் தீர்வாக அமையும் என எண்ணுகின்றேன்..//

அதே




தங்கள் மனக்கிடக்கையின் வெளிப்பாட்டினால் தங்களுக்கு என்றும் எதிரிகள் வரமாட்டார்கள்.. ஏனெனில் நீங்கள் அன்று தொட்டு வெளிப்படையாகவே எதையும் சொல்லி வருபவர்.. அப்போது நண்பர்களே அதிகரித்தனர்..//

:)

----------------------------------------
தங்களை யார் என நேரடியாக காட்டிக் கொள்ளாத எதிரிகள் (போலிகள்)பலர் இருக்கின்றனர்..அவர்களை நாம் அவதானிக்க வேண்டும்..

நல்ல ஞாபகம்..தங்கள் பதிவொன்றிற்கு கருத்திட்டு விட்டு சென்றதும் அதில் என்னொடு முரண்பட்ட போலி என் பதிவிற்கு வந்து என்னை கொச்சைப்படுத்திய சம்பவம்..!//

நன்றாகவே நினைவிருக்கு


அத்தோடு அண்ணா நான் தங்கள் பதிவுகளில் கருத்திட்டு வருபவன்.. படிப்பவன்.. சில விடயங்களை நேரத்திற்கேற்ப சுட்டிக்காட்டியுள்ளேன்.. உதாரணம் ஆமை-முயல் கதை.
சிலகாலம் நான் கல்விப்பழுவால் விலகியிருந்தேன்..அதை தவறான பார்வையில் சிலர் பார்த்தனர். ஏதோ நமக்குள் மோதல் என்று..தம்பியொருவர் நேரடியாகவும் கேட்டு விடயத்தை தெளிவுபடுத்திக் கொண்டார். ஏனையோருக்கு சொல்வது லோஷன் அண்ணா எங்கள் குடும்பத்தில் ஒருவர்.. எனக்கு அண்ணன் இல்லாத குறையை தீர்ப்பவர்..அனைத்துக்கும் மேல் பதிவுலகை கடந்து என் 2வது ரோல்மொடல்,பதிவுலகில் துரோணர்.(1st யார் என்று அண்ணாவுக்கு தெரியும்)//

ம்ம்ம் நன்றி அன்புக்கும் அக்கறைக்கும்

ARV Loshan said...

Anonymous said...
Again the Same Anonymous guy who has commented up..Sorry Anna..//
ha ha ha

Well, I have seen this FB status from one of my friends and i believe both this post and that status message has strong correlation.//
i dont think anyone apologised to me or at my post :)

Here is that Status Message

//"மன்னிப்புக் கேட்பதை விட, குறித்த தவறை மீண்டுமொருமுறை செய்யாமலிருப்பது முக்கியமானது.
மன்னிப்புக் கேட்டுவிட்டு அதே தவறை திரும்பச் செய்வதில் எதுவித அர்த்தமுமில்லை.
மன்னிப்பு என்பது தண்டனைகளிலிருந்தோ அல்லது கோபங்களிலிருந்தோ உங்களைத் தப்பிக்க வைப்பதற்கான ஒரு ஆயுதம் கிடையாது.
(தொப்பி அளவான அனைவரும் தயவுசெய்து போட்டுக் கொள்ளவும்)"//

இதிலே என்ன சொல்லப் பட்டிருக்கிறது?? சில தரப்பினரை மீண்டும் வம்புக்கு இழுப்பது போலத்தான் கருத வேண்டும் இதனை.. தன்னை மிகவும் பக்குவப்பட்ட பண்பாளர் எனக் காட்ட முயலும் இவர் அறிவுரை எனும் பெயரில் ஏனையவர்களை சீண்டுகிறார்.. //

அவரிடமே கேட்டேன்.. அவர் பதிலைக் கீழே தந்துள்ளார்.

ஆனால் அவர் சொன்ன அந்த விஷயத்தில் உடன்பாடு உண்டு .. அதை அனுபவபூர்வமாக உணர்ந்தும் உள்ளேன்.



உங்களுக்கு மிகவும் தெரிந்தவராக இருப்பதாலேயே இவரது நிலைத்தகவலை பற்றி கருத்திடுகிறேன்.. உங்களுக்கு நெருக்கமான இவ்வாறு பக்குவப்படாதவர்களை நீங்கள் நல்ல முறையில் வழிநடத்த வேண்டும் அண்ணா.//

அன்பின் தம்பி.. அவர் பக்குவப்பட்டவர் என்பதைத் தான் பண்பாக அப்படிக் காட்டி இருப்பதாக நான் நினைக்கிறேன். அதில் யாரொரு நல்லவரும்/அப்பாவியும் மரிமுகமாகவோ, நேரடியாகவோ தாக்கப்படவில்லை என்றும் நம்புகிறேன்

ARV Loshan said...

Shafna said...
இவ்ளோ விஷயமிருக்கா?.. இன்டர்நெட்டைக் கண்டு பிடிச்சவனை கட்டி வெச்சி அடிக்கனும்..//

நல்ல விஷயங்கள் பல தந்திருக்கே.. :) ஒரு சில இப்படியான விஷயங்களுக்காக ஏம்பா நல்லவங்களை வையணும்?



ஷப்னா.. உங்கள் தத்துவங்களுக்கும் நன்றி :)

வாழ்க்கை வாழ்வதற்கே,.. பதிவுகள் எழுதுவதற்கும் வாசிபதற்குமே..

Shafna said...

நன்றிகள்.. வாழ்க்கை வாழ்வதற்கேதான்..வாழ்வோம் சந்தோஷமாய்.. லோஷன் அண்ணன்,ஜனா அண்ணன்...இதுவும் கடந்து போகும்போது சந்தோஷமாய் வழி அனுப்பிவிட்டு... சந்தோஷமாக பதிவெழுதுங்கள்..(வாசிக்க)

ARV Loshan said...

Jana said...
ஆனால் நான் என் பதிவிலே தங்கள் பெயரை சுட்டியதை நீங்கள் சரியாக புரிந்துகொள்ளவில்லை என்பது மனவருத்தமே.//

அந்த சந்தேகம் இருந்த காரனற்ற்ஹ்தால் தான் கேள்வியாகவே அதைக் கேட்டிருந்தேன்..



இதற்குள், உள்குத்துக்கள், சில ஸ்ரேட்டஸ்கள், சில குறிப்பால் உணர்த்தும் பதிவுகள் என்பன வாசிக்கும் அனைவருக்கும் ரென்ஸனான ஒன்றே என்பதுடன், தரமான பதிவுகள் வருவதையும் அவை இல்லாமல் செய்து இந்த விடையங்களுக்காக ஒரு சர்ச்சை பதிவு எழுதவும் வழிகோருகின்றது.//

அந்த மூலகாரணங்களை இல்லாமல் செய்யவே இந்தப் பதிவை எந்த உள்குத்தும் இல்லாமல் வெளிப்படையாகவே இட்டேன்..
Jana said...
நீங்கள் சொன்னதுபோல் அதிகார மையங்கள், வட்டங்கள், குழுநிலை வாதங்கள் என்பன ஆரம்பத்தில் எனக்கு சில மனவேதனைகளை உண்டாக்கினாலும்கூட ( காரணம் இதுதானே உங்கள் இலங்கை பதிவர்களின் வேலை என்று சில வேறு பதிவர்கள் கேட்டதனால்) இருந்தது.//

இந்தியப் பதிவர்களிடம் இல்லாத இவையா?





பதிவர்களின் விருதுகள் பற்றி கதைவரவே, சென்றமுறைபோல் லோஷனுக்கு விருது வழங்கிய விசர்த்தமான நடைமுறைகள்போல அல்லாமல், //

//லோஷனுக்கு விருது வழங்கிய விசர்த்தமான நடைமுறைகள்போல// இது தான் புரியவில்லை.. ஏன் அது விசர்த்தனமான நடைமுறை என்கிறீர்கள்? நானோ,அல்லது எங்கள் 'அதிகார மையமோ' என்னைத் தெரிவு செய்யவில்லை. நான் தெரிவு செய்யச் சொல்லி சிபாரிசு செய்தவர்களில் என் பெயரும் இருக்கவில்லை.

(நான் சிபார்சி செய்தோர்- மு.மயூரன், ஜனா, சுபாங்கன், ஆதிரை, வைத்தியர் முருகானந்தன்)



இந்தமுறை புதியவர்களுக்கு, இளைய நன்றாக எழுதும் நபர்களுக்கு விருது வழங்க முயன்றுபாருங்கள் என்றுதான் சொன்னேன். இதில் கிரிக்கட் எழுதும் லோஷன் சினிமா எழுதும் லோஷன் என்ற வசனங்கள் வந்திருக்கவில்லை.//

இதை அவர்களும் ஒத்துக்கொண்டால் சரி.

ARV Loshan said...

தங்களுக்கு விருது வழங்குவதற்கு முதலே நானும், பாலவாசகனும், சுபாங்கனும் சந்தித்து பேசும்போது, சில பல்கலைக்கழக மாணவர்கள் பதிவர்களில் ஒருவருக்கு விருதுவழங்க தன்னை கேட்டதாகவும், தன்னால் யாருக்கு வழங்க வேண்டும் என்று கூற இயலாததால், தான் உங்களிடம் கேட்கும்படியும் நீங்கள் உரியவரை தெரிவு செய்வீர்கள் என்றும் கூறியிருந்தார். அதன் பின்னர் விருது உங்களுக்கு கிடைப்பதாக நீங்கள் தெரிவித்திருந்தீர்கள்.மீண்டும் மூவரும் சந்திக்கும்போது இது பற்றி சுபாங்கனிடம் கேட்கும்போது, நான் அப்படித்தான் அவரிடம் சொல்லியிருந்தேன், விருது அவருக்கே என்று அவரே சொல்வது அவரைப்பொறுத்தது என்று அவர் பதிலளித்திருந்தார்.
இதனாலேயே மீண்டும் விசர்த்தனமாக அப்படி நடத்தவேண்டாம் என்று சொன்னேனே தவிர லோஷன் விசரன் அவன் இவன் என்று ஏகவசனத்தில் விழிக்கவில்லை.//

இதற்கு விளக்கம் மேலேயே சொல்லிவிட்டேன்.. என்னை நானே தெரிவு செய்யும் அளவுக்கு நான் இறங்க வேண்டிய தேவையில்லை. தேசிய கலை இலக்கியப் பேரவையில் வைத்து என்னிடம் சிபாரிசு கேட்கப்பட்டபோதே அவர்கள் எனக்கு விருது என்ற முடிவுடனே வந்திருந்தார்கள்.மாணவர்கள் சார்பாக சுகந்தன் என்பவரும் வந்திருந்தார். சுபாங்கனும் அங்கே இருந்தார்.

நீங்கள் குறிப்பிட்ட அதே விஷயத்தையே நானும் சொன்னேன்.. குறிப்பாக பல்கலை சார்ந்த பதிவுலகில் இருப்போருக்கே விருதைக் கொடுத்தால் நல்லது என்று சொன்னாலும், மேலே உள்ள சிபாரிசுகளைக் கொடுத்தாலும் இறுதி முடிவை அவர்கள் எடுத்தால் இதில் நான் எங்கே வருகிறேன்.
பாலவாசகனோ, சுபாங்கனோ இந்தக் குழுவில் இருந்திருப்பார்கள் என நான் நம்பவில்லை. உங்களுக்கும் அது தெரியாமல் இருக்கும் என்றும் நான் நம்பவில்லை.

ARV Loshan said...

எப்படியோ லோஷன் இன்னும் ஒன்றை வெளிப்படையாக கூறிவிடுகின்றேன், உங்களைப்பற்றியும் பலர், உங்கள் அருகில் இருக்கும் சிலா், தாறுமாறாக என்னிடம் சொன்னார்கள், நான் இந்தக்காதால் வாங்கி அந்தக்காதால் விட்டுவிட்டேன். ஆனால் மீண்டும் எப்போதாவது உங்களை சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் கண்டிப்பாக உங்களிடம் நேரடியாக அவை பற்றி கேட்கின்றேன்.//

நிஒச்சயமாக.. நான் இங்கே நேரடியாக உங்கள் பெயர் குறிப்பிட்டு எழுதியதால் அடுத்த முறை உங்களைக் காணும் பொது முறைத்துக்கொண்டு செல்வேன் என்றோ, காணாமலே செல்வேன் என்றோ நான் எண்ணவில்லை. என்னிடம் எதையும் நேராக சொல்லிவிடும் குணம் இருப்பது போலவே, யாரையும் நேரே எதிர்கொள்ளும் குணமும், உள்ளது என நம்புகிறேன்.சந்தித்தால் பேசலாம்.



அடுத்து யாவரையும் நான் நண்பர்களாகவே பார்க்கின்றேன், ஆனால் எதிரி என்ற சில விழிப்புக்களும் நான் விரும்பாது விட்டாலும் பிடித்திருக்கின்றது.
உங்கள் பதிவின் ஆரம்பத்தில் மேலே கூறப்பட்ட விடையம் உங்களுக்கு பிறர்கூற்றால் வந்த என்மேலான ஆத்திரம் என்றால், என்னை எதிரியாகவே கருதிக்கொள்ளுங்கள், துரோகிகளாய் முதுகில் குத்தாமல் எதிரியாக தூர இருப்பது எவ்வளவோ மேல் அல்லவா!//

துரோகிகள்??? ம்ம்ம்ம் கவனமாகவே இருக்கிறேன் - அப்படி யாராவது உருவாகாமல்..

எதிரிகள் இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டும்.. துரோகிகள் இல்லாமலேயே நடந்து கொள்ளப் பார்க்கிறேன்.

ARV Loshan said...

மருதமூரான். said...

எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு- இப்படி திருவள்ளுவர் சொல்லியிருப்பதை ஞாபகப்படுத்திக்கொண்டு....!//

அதே.. நானும் வள்ளுவன் வாரிசே :)

லோஷன்...! இந்தப் பதிவு தொடர்பில் எனக்கிருக்கின்ற சில விடயங்களை நேரடியாகப் பேசவேண்டியே தங்களுக்கு இன்று காலை தொலைபேசியில் அழைத்தேன். தாங்கள், வேறொரு இடத்தில் வேலையில் இருப்பதாகவும், பின்னர் பேசுவதாகவும் குறுந்தகவல் அனுப்பியிருந்தீர்கள். இந்த பதிவு தொடர்பில் கட்டாயம் நாங்கள் இருவரும், தொலைபேசியிலோ அல்லது நேரிலோ பேசவேண்டியிருக்கிறது. //

இறுதியாக இன்று காலையிலே நீண்ட நேரம் தொலைபேசித் தெளிவாகிக்கொண்டோம் என்ற மகிழ்ச்சியுடன்.....



//////மீண்டும் இந்த 'எதிரி' கதை வெளியே வந்தது அனுத்தினனின் பிறந்தநாள் விருந்தின் போது.

---------------------------
அடுத்த ஓரிரு நாட்களில் ஜனாவின் பேஸ்புக் பக்கத்தில் 'எதிரி' பற்றி ஒரு ஸ்டேட்டஸ்.
ஆகா என நினைத்துக் கொண்டேன். ///////////

இந்த விடயத்தில் எனக்கு விளக்கம் அவசியமானது. தங்களுடன் பேசிய பின்னர் பதிவுலக மகாசனங்களுக்கும் மேற்குறிப்பிட்ட விடயம் தொடர்பில் பதிலளிக்கிறேன்.//

இருவரும் பேசியதில் புரிபவை புரிந்திருக்கும் :) விளக்கம் அளிப்பதாயின் நீங்கள் சொல்லலாம் :)

ARV Loshan said...

மருதமூரான். said...
'மருதமூரான் மனம் திறந்தால் பலவிடயங்கள் வெளிவரலாம்' என்று நீங்கள் குறிப்பிட்டிருக்கிறீர்கள். இந்தவிடயத்தில் சத்தியமாக நண்பர்களுடன் பேசிக்கொண்டதையோ- நண்பர்கள் என்னுடன் பேசிக்கொண்டதையே நான் இங்கு பேசமாட்டேன். அது பொருத்தமற்றதுமாகும்.//

நான் அவ்வாறு சொல்லுமாறு வற்புறுத்தவுமில்லை என்பதைப் புரிந்துகொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன் :)

உங்களுக்கும் ஏதாவதொரு இக்கட்டான நிலை வருகையில் அவ்வாறு //'மருதமூரான் மனம் திறந்தால் பலவிடயங்கள் வெளிவரலாம்' // என்று கொள்க :)





'படுக்கையில் ஏதோவொரு நம்பிக்கையிலேயே காதலியோ, மனைவியோ காதலனுடனோ- கணவனுடனோ தன்னுடைய உணர்ச்சிகளை பகிர்ந்து கொள்கிறாள். அதனை, காதலனோ- கணவனோ படம்பிடித்து மற்றவர்களுக்கு காண்பிப்பது எப்படி அசிங்கமானதோ' அதே மாதிரியானதே நம்பிக்கை வைத்து பேசிய நண்பனின் வார்த்தைகளை பொது இடத்தில் போட்டு கொடுப்பதும். அவ்வாறான கேவலமான- முறையற்ற செயலை செய்யமாட்டேன்.//

நானும் என்னைப் பற்றியது அல்லாத வேறு எவர் பற்றி என்னை நம்பி சொல்லப்பட்ட விடயங்களைப் பிறருக்கு ஒழுக்க மாட்டேன் என்பதை என்னையறிந்த தாங்கள் உட்படப் பலரும் அறிவர்

ARV Loshan said...

மருதமூரான். said...
எப்பொழுதும் பிரச்சினைகளையும்- சந்தேகங்களையும் சம்பந்தப்பட்ட நபர்களிடமே பேசியோ- மின்னஞ்சல் வழியாகவோ தீர்த்துக் கொண்டு விடுவேன்.//

அது தேவை ஏற்படும் நேரங்களில் மட்டும்.

சிலரிடம் இவ்வாறான முறைகள் செல்லாது.. அதை பதிவுலகில் நீங்களே கண்டிருப்பீர்கள்.



அதுபோலவே, ஒருவர் மீதான விமர்சனத்தையும் அவரிடமே சொல்லிவிடுகிற மனநிலை- தைரியம் என்னிடம் இருக்கிறது. அது, லோஷனுக்கு தெரியும். அதுதவிரவும், ஒருவரின் கருத்தியலையும்- விருப்பு வெறுப்புக்களையும் நட்பு என்கிற நிலைக்குள் எடுத்துக்கொள்ளாதவன். குறிப்பாக, மற்றவனின் அந்தரங்க வாழ்க்கை குறித்த சொறிதல்களை செய்ய முயலாதவன். ஏனெனில், ஒவ்வொருடைய அந்தரங்கமும் அவர் அவருக்குரியன. அதன்மேல், மேல் அக்கறை கொண்டு அலைபவர்களை நான் ஆண்கள் என்றே நினைப்பதில்லை. //

இந்த இடத்தில் நீங்கள் = நான் எனக் கொள்க



'நடுநிலையாளர்' என்கிற வார்த்தையை நான் என்றைக்கும் வரவேற்றது கிடையாது. அந்த வார்த்தையின் மீது எனக்கு விபரம் தெரிந்த நாளிலிருந்தே உடன்பாடு கிடையாது. 'குரங்கு அப்பம் பிறித்த கதை' எனக்கு உணர்த்திய 'நடுநிலை' அது. அதன் பின்னர் இஸ்ரேல்- பலஸ்தீனப் பிரச்சினையில் அமெரிக்கா அண்ணனும், இலங்கை அரசு- விடுதலைப் புலிகளுக்கிடையில் அண்ணனின் தம்பி நோர்வே வகித்த நடுநிலையும் எங்கள் எல்லோருக்கும் தெரிந்தது தானே! ஏதாவது பிரச்சினையென்றால் சம்பந்தப்பட்டவர்கள் பேசித்தீர்த்துக் கொள்ளுங்கள். அதைவிடுத்து மூன்றாம்- நான்காம் தரப்பிடம் சென்று பிரச்சினையின் தீவிரத்தை அதிகரித்துக் கொள்ளாதீர்கள்.//

இதனால் தான் நான் வேடிக்கைக்காக உங்களுக்கு சூட்டிய பட்டம் உங்களை எரிச்சல்படுத்தியதோ என மன்னிப்பும் கேட்டேன்

ARV Loshan said...

நிரூசா said...
following...! will comment later //

என்னாது? எப்போ? எல்லாம் முடிஞ்சா பிறகா? அப்போ என்ன அதிகார மையத் தலைவரய்யா நீர்?

பேசாமல் பதவியைத் துறவும்

=============

சயந்தன் said...
ஒவ்வொரு தரவுகளையும் தரும் போது அந்தந்த லிங்குகளையும் தந்தால்தான் அவற்றையும் படித்து விரிவான விளக்கத்தை பெற முடியும்.

அனைத்துலக செயலக மையம்..//

முன்னாள் பதிவர்களை எல்லாம் அனைத்துலக மையமாக ஏற்க மாட்டோம்..

இலங்கை அதிகார மையம் சார்பாக ;)

ARV Loshan said...

sinmajan said...
:(//

ம்ம்ம்

===========


Bavan said...
#பெருமூச்சு...//

நிம்மதி? கவலை? பயம்?

===========

மைந்தன் சிவா said...
:) + :( = ???//

??? +????? = !!!

ARV Loshan said...

sharthaar said...
நான் இங்கு வந்து சம்பந்தமில்லாமல் இப்படிக்கூறுவதற்காக மன்னிக்க வேண்டும்...... //

யாருக்கும் சம்பந்தம் இல்லாமல் இல்லை :)



பதிவுகளும் கருத்து மோதல்களும் தவிர்க்க முடியாதவை..... எனவே இங்கு நீங்கள் முட்டி மோதிக்கொள்வதில் தப்பில்லை (கருத்துக்களால் மட்டும்) என்று நான் நினைக்கின்றேன்.//

சரி தான்

ஆனால் உங்கள் பதிவுகள் எமது நாட்டின் உள்ளார்ந்த பிரச்சனைகளை பேசத்தவறுகின்றது என்று நான் நினைக்கின்றேன்... வெறுமனே நுனிப்புல் மேய்வதும், அல்லது தங்களுக்கு பாதுகாப்பான விடயங்களில் மட்டுமே கருத்துக்களை பதிவதும் தொடர்கின்றாற்போல தெரிகின்றது எனக்கு. நான் உங்கள் எல்லோர் பதிவுகளையும் வாசித்ததில்லை... ஆனால் உங்களில் ஒரு சிலர் பதிவுகளை மட்டுமே வாசித்திருக்கின்றேன்..... என்றாலும் அவை உங்களிலிருக்கும் நட்சத்திரப்பதிவாளர்களது பதிவுகள். எனவே முன்னிலைப்பதிவாளர்களே பதியாத போது மற்றவர்களா பதியப்போகின்றார்கள் என்ற ஒரு ஊகத்தில் தான் இக்குற்றச்சாட்டை வைக்கின்றேன். தவறாக இருந்தால் மன்னிக்கவும். என் குற்றச்சாட்டு தவறாக இருக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பமும்.//

கொஞ்சம் தான் தவறு.. எமது கொஞ்சம் சமீப காலத்தில் பெரிதாக நாம் சமூக நடப்புக்களை கவனிக்கவில்லை என்பது சரியாக இருக்கலாம்.ஆனால் எழுதவே இல்லை என்பது தவறானது.

எழுதி இங்கே என்ன ஆகும் என்ற அங்கலாய்ப்புத் தான் காரணமோ தெரியாது என யோசிக்கவில்லையா? நாட்டு நடப்பு தெரியாத ஆளில்லை சர்தார் என்றும் எனக்குத் தெரியும்.



நாம் ஒரு முக்கியமான காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்பதை நான் சொல்லி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டுமென்பதில்லை.... முப்பது வருட போராட்டத்தை போல தமிழ் தரப்புக்கள் அனைத்தையும் அடக்கியாள இன்னுமொரு தரப்பும் முயற்சித்துக்கொண்டிருக்கின்றது.....//

இங்கே ஊடகங்களால் என்ன செய்ய முடியும் என்ற நிலை அண்மைக்காலத்தில் தெளிவாக காட்டப்பட்டிருப்பதனாலேயே நாமும் மனதில் பட்டதை பட்டும் படாமலும் எழுதும் மனநிலைக்கு வந்துவிட்டோம் என்று நான் எண்ணுகிறேன்.

எனினும் நீங்கள் சுட்டிய விஷயங்களில் நியாயம் இருக்கிறது.

நல்லதை யார் சொன்னாலும் ஏற்கவேண்டும் என்று நினைப்பவன் நான் :)


நான் ஏதும் தப்பாக சொல்லியிருந்தால் மன்னிக்கவும்.................//

நன்றி சர்தார்.

ARV Loshan said...

யோ வொய்ஸ் (யோகா) said...
பின்னூட்டங்களை வாசிப்பதற்காக//

தொடர்கிறது அமைதி :)

sinnathambi said...

=எம் இருவருக்கும் ஒத்த வயது வேறு.=
ம்ம் இதக்குள் இதுவேறயா என்ன?

சின்னப்பயல்களின் பேச்சுக்களை கேட்டு, நீங்க ரெண்டுபேரும் சின்னப்புள்ளத்தனமா மோதிக்கிறீங்களே

போய் உங்கள் வேலைகளை பாருங்கள், சின்னப்பயலுகள் உங்கள் ரெண்டுபேருக்குமே அட்வைஸ் பண்ண வச்சுட்டீங்க

சயந்தன் said...

I ill cum after read // :)

அவ்வளவு கிளுகிளுப்பலானப் பலானவாவா எழுதுறீங்க..... :) :)

Subankan said...

//அடுத்து ”லோஷனுக்கு வழங்கியதுபோல” என்று நான் கூறியதற்கான விளக்கத்தை வெளிப்படையாக பேசவேண்டும் என்ற உங்கள் வேண்டுகோளுக்கு இணங்க சொல்லிவிடுகின்றேன்,
தங்களுக்கு விருது வழங்குவதற்கு முதலே நானும், பாலவாசகனும், சுபாங்கனும் சந்தித்து பேசும்போது, சில பல்கலைக்கழக மாணவர்கள் பதிவர்களில் ஒருவருக்கு விருதுவழங்க தன்னை கேட்டதாகவும், தன்னால் யாருக்கு வழங்க வேண்டும் என்று கூற இயலாததால், தான் உங்களிடம் கேட்கும்படியும் நீங்கள் உரியவரை தெரிவு செய்வீர்கள் என்றும் கூறியிருந்தார். அதன் பின்னர் விருது உங்களுக்கு கிடைப்பதாக நீங்கள் தெரிவித்திருந்தீர்கள்.மீண்டும் மூவரும் சந்திக்கும்போது இது பற்றி சுபாங்கனிடம் கேட்கும்போது, நான் அப்படித்தான் அவரிடம் சொல்லியிருந்தேன், விருது அவருக்கே என்று அவரே சொல்வது அவரைப்பொறுத்தது என்று அவர் பதிலளித்திருந்தார் //

கொழும்பு பல்கலைகழகத்தினர் சார்பில் சுகந்தன்(கொழும்பு பல்கலைக்கழக தமிழ்ச்சங்கத் தலைவர்) அவர்கள் முதன்முதலில் சந்திக்கும் போது லோஷன் அண்ணா, நான் மற்றும் கோபி அங்கே இருந்தோம். அப்போது அவரது வேண்டுகோள், இலங்கைப் பதிவர்களுக்கு கொழும்பு பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்க முத்தமிழ் விழாவில் விருது வழங்கப்போவதாகவும், அந்த விருதை பதிவர்கள் சார்பாக லோஷன் அண்ணா பெற்றுக் கொள்ளவேண்டும் என்றே கேட்கப்பட்டது. அதற்கு லோஷன் அண்ணா பதிவர்கள் சார்பாக விருது வாங்க பல மூத்த பதிவர்கள் இருக்கிறார்கள் என்று கூறியிருந்தார்.

பின்பு கொழும்பு பல்கலைக்கழகத்தால் பதிவர்கள் சார்பாக என்றில்லாமல் குறித்த ஒருவருக்கு வழங்குவதாக மாற்றப்பட்டு அது லோஷன் அண்ணாக்கு அவ்விருது வழங்கப்பட்டிருந்தது. அவ்விடத்தில் விருதுக்கான பரிந்தரைகள் எதுவும் என்னிடமோ வேறு யாரிடமோ கோரப்பட்டிருக்கவில்லை. இதற்கு மாறாக நான் வேறு எதையும் கூறியிருக்க வாய்பேதுமில்லை :-)

கார்த்தி said...

அண்ணா உங்கள் பதில்களுக்கு நன்றி! உண்மையில் இங்க நான் சொல்லவெளிக்கிட்ட விசயம் மற்றவர்களை எங்களின் பதிவுகளையோ வேறு பதிவர்களின் தரமான ஆக்கங்களையோ வாசிக்க சொல்லியோ வற்புறுத்தவில்லை. ஆனால் மிகவும் கஸ்டப்பட்டு எழுதப்பட்ட பல எம்பதிவர்களின் பதிவுகள் இலகுவாக இண்ட்லியில் popular ஆக்கப்பட்டும் கூட [தம்பட்டம் அடிக்கிறன் எண்டு சொல்ல வேண்டாம் எனது கடந்த 13 தொடர்ச்சியான பதிவுகளும் popularஆக்கபட்டிருந்தன வாசகர்களால். அத்தோடு எனக்கு ஓட்டுப்போட் பலர் இங்கே இருப்பவர்களும் அல்லர். தெரியாதவர்கள். இத்தனைக்கும் நான் பலருக்கு ஓட்டுப்போட்தே கிடையாது. ஆனால் பின்னூட்டங்கள் இட்டிருக்கிறேன்]
அப்பதிவுகள் இலங்கை பதிவர்களால் கவனிக்கபடாமல் இருக்கும்போது பல தடவைகளில் சிறுபிள்ளைதனமாக சலிப்பு வருவதுண்டு.

இலங்கையில் இருக்கும் பதிவர்கள் அதிகம் எதிர்பார்ப்பது எம்சக இலங்கை பதிவர்களின் பதிவு தொடர்பான கருத்துக்களையே. மற்றவர்கள் எல்லாம் 2ம்பட்சம்தான். எம்மவர் வந்து எமது பதிவுபற்றி நல்லாகவோ ஏன் பிழையாகவோ கூறும்போது வரும் உற்சாகம் வேறு எங்கும் கிடைப்பதில்லை!
மீண்டும் சொல்கிறேன் வாக்குபோடு பின்னூட்ம்போடு எண்டு வற்புறுத்தவோ அதை கருத்தில்கோண்டு நண்பர்களை தீர்மானிப்பதோ இல்லை. சிலர் இங்கே கூறியது போல் எங்களுக்கு வாக்கு கிடைக்கவில்லை என்று கூச்சலிடுகின்றென்றோ இது பொருளில்லை. இவர்தான் சிறந்தவர் என்றல்லாது கொஞ்சமாவது மற்றவர்களையும் சிறந்த readerஆக கவனியுங்கள் என்றே சொல்கிறேன். இல்லாவிடில் உண்மையில் பதிவர் தொடர்பாக குழுமங்களோ சந்திப்புக்களோ தேவையற்றது!

balavasakan said...

ம்..ம். கடந்த சில நாட்களாக பதிவுலகத்தில் இருக்கும் குழப்பகரமான சூழ்நிலையை மௌனமாக பார்த்தவாறே இருந்திருக்கிறேன் இதில் சம்பந்த படுபவர்கள் அனைவரும் நண்பர்கள் என்ற வகையில் இதறகுள் தலையிட்டு எவரையும் தர்மசங்கடத்திற்குள்ளாக்க நான் விரும்ப வில்லை ஆனாலும் என்னுடைய பெயரும் பின்னூட்டங்களில் பாவிக்கபட்டிருப்பதால் இங்கு பின்னூட்டமிடுவது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது..!
லோஷன் அண்ணாவிற்கு விருது வழங்கபடுவதற்கு முனபதாக சுபாங்கன் என்னுடன் தொலேபேசியில் உரையாடும் போது பதிவர்களில் ஒருவருக்கு இந்த முறை கொழும்பு பல்கலைக்கழக தமிழ்ச்சங்கம் விருது வழங்கவிருக்கிறது என்றும் அது சம்பந்தமாக லோஷன் அண்ணாவுடன் கதைத்திருக்கிறார்கள் அவர்தான் ஒரு பதிவரை சிபாரிசு செய்வார் என்றும் கூறியிருந்தார்...
பின்னர் நான் சுபாங்கன் ஜனா அண்ணா மூவரும் நல்லூரடியல் சந்தித்தபோது விருது சம்பந்தமாக கொழும்பு பலகலைக்கழக தமிழ்ச்சங்கத்தினர் தன்னை அணுகியதாகவும் தான் லோஷன் அண்ணாவை கேளுங்கள் அவர் ஒருவரை தெரிவு செய்து தருவார் என்று கூறியதாகவும் கூறினார் ... பின்னர் லோஷன் அண்ணாவிறகு விருது வழங்கப்பட்ட பிறகு நாம்சந்தித்து கலந்துரையாடியபோது இது சம்பந்தமாக கேட்டபோது சுபாங்கன் "விருது அவருக்கே என்று அவரே சொல்வது அவரைபொறுத்தது''என்று கூறியிருந்தார்
இந்த விடயங்களை நான் இந்த பதிவில் பின்னூட்ட வேண்டிய தேவை ஒன் று ஏற்பட்டிருக்கிறது அத்துடன் பதிவிறகு பின்னர் வந்த பின்னூட்டங்கள் மேலும் என்னை இந்த பின்னூட்டத்தை இட தூண்டியிருக்கின்றன ஆனால் இந்த பின்னூட்டத்தை இடுவதன் மூலம் எனக்கும் ஜனா அண்ணாவிறகும் , லோஷன் அண்ணாவிற்கும் அல்லது சுபாங்கனினுடனான நடபிலோ எந்த விதமான மாற்றங்களும் ஏற்படாது என நம்புகிறேன்..

Kiruthigan said...

ஐயய்யோ... இன்ட்லி பிரபலமானவை படிக்கும் போது வழி மாறி இந்தப்பக்கமா வந்துட்டேன் லோஷனண்ணா...
இந்தப்பக்கமா எஸ்கேப்பாயிடறேன்...
ஆருங்கேட்டா நான் அப்ஸனாம் எண்டு சொல்லுங்கோ...!
இந்த நிலை மாறும்.
நாளை மற்றொரு நாளே...!

ஷஹன்ஷா said...

அண்ணா பதிவு குழப்பத்தை தீர்க்கும் என்று பார்த்தால் பின்னுாட்டங்கள் மாறுபட்டு மாறுபட்டு கருத்துகளாக வருவதால் குழப்பம் அதிகரிக்கின்றதே..


கொஞ்ச நேரத்துக்கு பின் வாரேன்... அப்போ குழப்பம் தீருமா...???#ஏக்கம்

Jana said...

மீண்டும் ஒருமுறை ஆனால் இந்த பதிவின் இறுதியாக என் வணக்கங்கள்.
தங்கள் ஆதங்கங்களுக்கு நான் பதில் தந்தேன் அதனுடனேயே நிறுத்திக்கொள்ளலாம் என்றுதான் நினைத்தேன் ஆனால் மீண்டும் எழும் சில விடையங்களை பேசிவிடவேண்டும் என்பதால் பேசிவிடுகின்றேன், அல்லது கேட்டு விடுகின்றேன்.

//இதை அவர்களும் ஒத்துக்கொண்டால் சரி,// என்று ஒற்றை வரியில் சொல்லிவிட்டுபோகும் விடையம் இல்லை அது. அப்படி என்றால் நான் நினைத்தேன் ஒருவர்தான் அதில் சம்பந்தப்பட்டவர் என்று ஆனால் 'அவர்கள்' என்ற உங்கள் வழிப்பில் இதில் ஒருவர் தவிர சிலர் உள்ளது தெரிகின்றது,
அவர்கள் எவராகவும் இருந்துவிட்டுபோகட்டும் அதுபற்றி கவலைபடுபவன் நான் இல்லை. ஆனால் இதை அவர்கள் ஒத்துக்கொண்டால் சரி..என்றால் மறைமுகமான நீங்கள் அவர்கள் சொல்வதுதான் சரி..என்று நினைத்திருப்பதும் திட்டமிட்டு என்னைப்பற்றி மற்றவர்களுக்கு ஒரு தப்பான அபிப்பிராயத்தை உண்டாக்கவேண்டும் என்ற அடிப்படையிலேயே இந்த பதிவு வந்திருக்கின்றது என்றே யோசிக்க வைக்கின்றது

Jana said...

ஆனால் ஜனா என்றால் எப்படி என்று பெரும்பாலான நண்பர்களுக்கு தெளிவாக தெரியும். ஓயாமல் எனக்கு எடுக்கும் பெருந்தொழைகயான அழைப்புக்களும், மின் அஞ்சல்களும், ஏன் அண்ணா..என்ற விசாரிப்புக்களும் எனக்கு பொதுமானதாக இரக்கின்றது.
அறவே நான் அனுதினனுடன் பேசவில்லை என்றோ அது சாத்தியம் இல்லை என்றோ எந்தவொரு கட்டத்திலும் சொல்லவில்லை, அந்தக்குற்றச்சாட்டை தெளிவாக விளக்கியுள்ளேன்,
ஆனால் மற்றமுறையில்

Jana said...

//அண்ணா கொழும்பு பல்கலைக்கழக பழைய மாணவர் என்ற ரீதியில் தங்களிடமிருந்தும் ஆக்கங்கள் எதிர்பார்க்கபடுகிறது....... சிரமம் பாராது தந்து உதவுங்கள்!!!!//

எனக்கு தனிப்பட்டமுறையில் அனுதினன் அனுப்பியிருந்த பேனலான மெயிலுக்கே நான் அவருக்கு தொடர்பெடுத்து அவருடன் கதைத்தேன், இது ஒருவகையில், அந்த சங்க உறுப்பினர் ஒருவருடன் தனப்பட்ட முறையில் நான் கதைத்த ஒபிஸியலான நடைமுறை, அதேவேளை ஒரு பழைய மாணவன் என்ற முறையில் சிலவற்றை ஒரு உறுப்பினருக்கு சொல்ல எனக்கு உரிமைகளும் உண்டு. அதை அவர் இதில் சம்பந்தப்படாத மட்டத்திற்கு கொண்டுசென்றது எவ்வாறானது என்பது அனைவருக்கும் தெரிந்;தவிடயம். இது பற்றி அறவே யொசிக்காமல் ஒரு வெளிப்படையான பதிவில் நீங்கள் போட்டிருந்தது என்னைப்பொறுத்தவரையில் உங்கள் குற்றமே.

Jana said...

அடுத்து லோஷன் பற்றி தவறாகவோ, அல்லது விருதுகள் வழங்கல் நடவடிக்கைப்படியோ பதிவர் என்ற முறையில் என் பதிவுகளில் எந்த சந்தர்ப்பத்திலும் நான் பதிவாக எழுதவில்லை. ஆனால் உங்கள் பதிவிலே பதிவுகள் தாண்டிய தனிப்பட்ட விடையங்களையும் சிலருடனான சொல்லாடல்களையும் நீங்கள் பதிவாகவே இட்டுள்ளது எந்த வகையில் நியாயமாக உங்களுக்கு உங்களுக்கு படுகின்றது?

அடுத்து மருதமூரானிடம் தெரிவித்திருக்கும் உங்கள் கருத்து பின்னூட்டத்தில்,
மின்-அஞ்சல் தொடர்புகள், நேரடியாக தொடர்பை எடுத்தல் என்பன சிலபேருக்கு சாத்தியமாகாது என்று போட்டிருக்கின்றீர்கள். எப்படி அது சாத்தியம் ஆகாமல்போகும்?
ஏன் நான் ஏதாவது பதிலளிக்காமல் விட்டிருக்கின்னோ? ரஜினி 10 பற்றி நீங்கள் எழுதச்சொல்லி பேசனலாக மெயில் பண்ணியவுடன் அதை மதித்து உடனடியாகவே அதை பதிவிடவில்லையா நான்?

Jana said...

//அவ்விடத்தில் விருதுக்கான பரிந்தரைகள் எதுவும் என்னிடமோ வேறு யாரிடமோ கோரப்பட்டிருக்கவில்லை. இதற்கு மாறாக நான் வேறு எதையும் கூறியிருக்க வாய்பேதுமில்லை :-//


என்று சொல்லும் சுபாங்கன் என்னிடம் இது பற்றி கதைக்கவில்லை அல்லது கதைப்பதற்கு நியாயம் இல்லை என்றால், இந்த மூவர் பற்றிய சம்பவம், லோஷன், கோபி ஆகியோர் என்னிடம் இது பற்றி கதைக்கவே இல்லை (இது அவர்களுக்கு தெளிவாக தெரியும்) அப்போ இதுபற்றி எனக்கு எப்படி தெரியும்?

Jana said...

அடுத்து வெளிப்படைக்கு உதாரணமாக ஒன்றை சொல்லியே தீரவேண்டும் என்பதால், வந்தியத்தேவனை இதில் பெயர் குறித்து பின்னூட்டுவதற்கு அவர் மன்னிக்கவேண்டும் ஏன் என்றால் இது குறித்து நான் அவரிடம் அனுமதிபெறவில்லை, அனால் பதிவுலகம் தாண்டி பல வருடங்களின் முன்பே அவர் என் நண்பர் என்றவகையில் கூறுகின்றேன்.

வந்தியின் அணுகுமுறை என்னைப்பொறுத்த்தவரை ஹாட்ஸ்சோவ் வந்தி என்று சொல்லவைக்கின்றது.
என்மேல் கருத்து வேறுபாடு என்ற ஒரு பொழுது நேரடியாக எந்த மறைவும் இன்றி என்னிடம்பேசினார், சிலவற்றைசுட்டிக்காட்னார். சிலவற்றை உணரும் வகையில் தெளிவாக பேசியிருந்தார். அதுபோல் என்னைப்பற்றி என்னைத்தவிர வேறு யாருடனும் குறைபட்டு கொண்டதாக நான் கேள்விப்பட்டதும் இல்லை. இதுவே சரியான அதேவேளை நியாயமான வழி.

Jana said...

எதுஎப்படியோ இந்த பதிவால் எனக்கு உங்கள்மீது எந்த கோபங்களும் வரப்போவதில்லை, ஆனால் லோஷன் ஏன் இப்படி செய்திருக்கலாமே என்ற நிறைவேறாத விருப்பஙற்கள் மட்டும் உண்டு.

இந்த பதிவுக்கான என்பதில்களையும், இந்த சர்ச்சையினையும் கவனிப்பதை இத்தோடு நான் விட்டு விட்டு என் வேலையினையும், என் பதிவுகளையும் கவனித்துக்கொள்கின்றேன். அதுபோல நாளை மறுதினம் வரவிருக்கும் உங்கள் பிறந்ததினத்திற்கு திறந்த மனதுடன் உங்களை வாழ்த்த தயாராகின்றேன்.

நன்றி வணக்கம்
CHEERS WITH JANA

Subankan said...

//கொழும்பு பல்கலைகழகத்தினர் சார்பில் சுகந்தன்(கொழும்பு பல்கலைக்கழக தமிழ்ச்சங்கத் தலைவர்) அவர்கள் முதன்முதலில் சந்திக்கும் போது லோஷன் அண்ணா, நான் மற்றும் கோபி அங்கே இருந்தோம். அப்போது அவரது வேண்டுகோள், இலங்கைப் பதிவர்களுக்கு கொழும்பு பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்க முத்தமிழ் விழாவில் விருது வழங்கப்போவதாகவும், அந்த விருதை பதிவர்கள் சார்பாக லோஷன் அண்ணா பெற்றுக் கொள்ளவேண்டும் என்றே கேட்கப்பட்டது. அதற்கு லோஷன் அண்ணா பதிவர்கள் சார்பாக விருது வாங்க பல மூத்த பதிவர்கள் இருக்கிறார்கள் என்று கூறியிருந்தார்.//

இந்த சம்பவம் நடந்த்து உண்மை. இதை நீங்கள் எங்கள் மூவரிடமோ, அல்ல‍து சான்காவதான சம்பந்தப்ப‍ட்ட‍ சுகந்தனிடமோ உறுதிப்ப‍டுத்திக்கொள்ள‍லாம்.

//அவ்விடத்தில் விருதுக்கான பரிந்தரைகள் எதுவும் என்னிடமோ வேறு யாரிடமோ கோரப்பட்டிருக்கவில்லை. //

இதுவும் உண்மை. அப்போது பேசப்ப‍ட்ட‍து பதிவர்களுக்குப் பொதுவான விருது பற்றி. அதற்குப் பரிந்துரைகள் எதுவுமே தேவையில்லையே ஐயா

மேலும் பதிவர்களுக்கு இப்ப‍டியான ஒரு விருது கிடைக்கப்போவது பற்றி நான் உங்களிடம் மகிழ்ச்சியுடன்‌ பகிர்ந்துகொண்டதும் உண்மை. ஆனால்...

//சில பல்கலைக்கழக மாணவர்கள் பதிவர்களில் ஒருவருக்கு விருதுவழங்க தன்னை கேட்டதாகவும், தன்னால் யாருக்கு வழங்க வேண்டும் என்று கூற இயலாததால், தான் உங்களிடம் கேட்கும்படியும் நீங்கள் உரியவரை தெரிவு செய்வீர்கள் என்றும் கூறியிருந்தார்//

இதை நான் கூறியிருக்க‍ வாய்ப்பேதும் இல்லை. மேலும்...

//"விருது அவருக்கே என்று அவரே சொல்வது அவரைபொறுத்தது''//

என்பதையும் நான் கூறவில்லை என்பதை உறுதிப்ப‍டுத்திக்கொள்கிறேன்.

இந்தத் தவறு, தவறான புரிதலால் ஏற்பட்டிருக்க‍லாம். அல்ல‍து வேறு ஏதாவது காரணங்கள் இருக்க‍லாம். நடந்தது என்ன‍ என்பது உங்களது, மற்றும் எனது மனச்சாட்சிக்கு மட்டுமே வெளிச்ச‍ம்

மேலும் லோஷன் அண்ணாபற்றிய உங்களது அபிப்பிராயமாக நீங்கள் இங்கே குறிப்பிட்ட‍ கருத்துக்க‍ ளை உங்கள் மனச்சாட்சியிடமே ஒருமுறை கேட்டு உறுதிப்ப‍டுத்திக்கொள்ளுங்கள்

பதிவுலகில் இதுவரை யாராக இருந்தாலும் முதல் சந்திப்பிலிருந்தே அவர்களுடன் நெருங்கிப் பழகுவதே எனது சுபாவம். இதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்றே நம்புகிறேன். இனிமேல் பதிவர்கள் என்றால் பத்த‍டி தள்ளியே நிற்கப் பழகிக்கொள்கிறேன்.

நன்றிகள்

தனிமரம் said...

உங்கள் பின்னூட்டங்களில் சில வெளிப்படை விசயங்களை கூறுகிறீர்கள் லோசண் அண்ணா பதிவுலகில் இப்படியுமா??

SShathiesh-சதீஷ். said...

சில பல தனிப்பட்ட காரணங்களால் தாமதமாக என் பின்னூட்டம் இடுகின்றேன். அண்மைய பதிவுகள் பலவற்றை பார்க்கும் போது சில இடங்களில் சிரிப்பும் பல இடங்களில் கோபமும் தான் வருகின்றது. சில இடங்களில் கொட்டி தீர்த்துவிட வேண்டும் போல இருக்கும் ஆனால் தொட்டால் தொடர்ந்து நான் நியாயத்தை பேச எனக்கு நேரம இன்மை போன்ற காரணங்களாலும் இதுவும் கடந்து போகும் என்ற நம்பிக்கையிலும் பேசாமல் இருந்தேன்.

//தங்களை 'ரொம்பவே' நல்லவர்களாக காட்டிக் கொள்ள முயலும்போது//
ஒன்றுமே எம்மால் செய்ய முடியாது

//ஊடகங்கள் பற்றி முழுக்க அறியாதவர்கள் தப்பாக எல்லாம் தெரிந்தது போல எழுதினாலோ பேசினாலோ, சரியானவற்றை நிறுவ பாய்ந்து சென்று வாதாடிய நாட்களும் இருந்தன//

உங்களை கொஞ்சமாவது அறிந்தவன் நான். அப்படயு எழுதுபவர்கள் உண்மையில் சிலவேளை தமக்கு அந்த வாய்ப்புகள் அமையவில்லை என்ற காழ்புணர்வில் எழுதலாம். சைக்கோக்கள் இங்கு தானே ஆரம்பம்

//ஆனால் இப்போது யார் யார் எதைப் பற்றி எழுதுவது என்ற விவஸ்தையே இல்லாமல் போயிருப்பதால் விமர்சனங்களாக இல்லாமல், கட்டுக்கதைகளாக (அது வேறு யாராவதைப் பற்றியே இருந்தாலும் கூட) இருந்தாலும் "அப்படியா" என சிரித்து விட்டு இருக்கப் பழகி விட்டேன்.
//

இருக்கிறம் இருக்கிறம் மன்னிக்கணும் பழைய நினைவு இருக்கினம் இருக்கினம்

//பதிவுலகுக்கு வந்த பிறகு நட்பாகி நெருக்கமாகி ஒரே அலைவரிசை கொண்டவர்களாக இருப்பதனால் (ஒரே ரசனை என்று இருப்பதில்லை) ஒத்தியங்கும் நாம் சிலர்...//

உண்மையை வெளியே சொன்னதுக்கு நன்றி அங்கிள். பின்னே சித்தப்பு அங்கிள் மாமா மருமகன் குறு சிஷ்யன் இவங்க எல்லாம் ஒரே ரசனையில் இருந்தால் நாடு தாங்காதுடா சாமி.

//அதற்காக நாம் தான் இலங்கைப் பதிவுலகை இயக்குகிறோம்.. நாம் தான் ஆசீர்வதிக்கிறோம் என்று யாராவது சொன்னால் நாம் என்ன செய்ய முடியும்?//
அண்ணே பதிவேளுதியே ரொம்ப நாளாச்சு...... ஆசிர்வதிக்கிறதா அவ்

SShathiesh-சதீஷ். said...

//இது என்னைப் பொறுத்தவரை மற்ற எல்லோருக்குமே இருக்கின்ற ஒருவிதமான தாழ்வு சிக்கலா, அல்லது அதீத உயர்வு சிக்கலா தெரியவில்லை..
எனக்கு பதிவுலகத்துக்கு நான் வந்த பிறகு கிடைத்த மிகச் சிறந்த விஷயங்களாக நான் அடிக்கடி சொல்வது என் நண்பர்களைத் தான்.//
உண்மை இன்று எனக்கு இருக்கும் மிக நெருக்கமான நான் எல்லாவிடயமும் அதிகம் பகிரும் நண்பர்கள் எங்கள் நட்பில் இணைந்த நீங்கள் குறிப்பிட்ட அத்தனை பேரும் தான்....

//இப்போது எங்கள் மின்னஞ்சல் கும்மிகளில் 'அதிகார மையம்' என்பது பிரேம்ஜியின் என்ன கொடும சார் போல ஒரு காமெடி வார்த்தை..
அதிகார மையம் என்று இப்போது நாம் அழைக்கும் நிரூசா(மாலவன்) - இறுதியாக நடந்த பதிவர் சந்திப்பை முன்னின்று நடத்தியோரில் ஒருவர் இதனை மிக ஸ்போர்ட்டிவ்வாக எடுத்துக் கொள்கிறார் என நினைக்கிறேன்.//

என்ன கொடும சார் இது.....நிரூஜா ஆண்டியை இப்படி கலாய்ப்பதை ஆண்டி ரசிகர் சங்கம் சார்ப்பாக கண்டிக்கின்றேன்.

//ஏழோ எட்டுப் பேரால் ஒரு சொதப்பலான பதிவு சூப்பர் ஹிட்டாகி விடுமா? என்னய்யா இவர்களின் லொஜிக்?//
என் பதிவு ஹிட் ஆகிறதே இல்லையே...(சரக்கு இருந்தா தானே எண்டு கண்ணை குத்தப்படாது.) .அப்புறம் நான் நம்மவர்கள் யாருக்கும் வாக்கு இடுவதும் இல்லை .....அதுக்காக எல்லாம் அதிகார மைய குழுவில் இருந்து என்னை நீக்க கூடாது....ஆமா சொல்லிபுட்டன் அப்புறம் தெரியும் தானே எதிர் பதிவெல்லாம் போடுவேன்....

//இன்னொரு செம நகைச்சுவை இப்படிக் குற்றம் சாட்டுவோரே தமக்குள் தாமே பின்னூட்டி நூறு அடிப்பதும் நூற்றைம்பது அடிப்பதும் நடக்கிறது.. நடக்கட்டுமே.. :)//

ஏன் ஏன் ஏன் ஏன்

முக்கிய குறிப்பு: என்னை கேட்காமால் என் படத்தை பாவித்தமைக்கு மான நஷ்ட வழக்கு தொடர்ப்போறேன்....எப்பிடி ஒண்டு உனக்கு இருக்கா எண்டு கேட்பிங்க அப்பிடி எல்லாம் கேட்கப்படாது ஆமா நாங்க நிசமா டேரறாவா இருக்கோம்....

கொஞ்சம் சீரியசாய் என் பதில்: பதிவுலகில் பல பிரச்சனைகள் வந்து போயிருக்கின்றன இதுவும் போகும். நாம் தான் அதிகார மையம் என இன்னொரு மையம் நினைத்தால் அது நம் பிரச்சனையல்ல கிரியேட்டிவ் பதிவை எழுதுங்கள் என சொல்பவர்கள் எங்கே சிண்டு முடியலாம் என கிரியேட்டி பண்ணாமல் பதிவுகளில் அதை காட்ட தங்கள் நேரத்தை பயன்படுத்தினால் எல்லோருக்கும் சந்தோசம்...

அடுத்தது அடுத்தவர்களால் அதிகார மையம் என தானாகவே எங்களை பாப்பா மரத்தில் ஏற்றும் அந்த உன்னத நண்பர்களே. ஒன்றை கவனத்தில் எடுங்கள்....
இங்கே லோஷன் அண்ணா நான் இருவரும் முன்னர் ஊடக துறை இப்போ நான் எங்கோ இருக்கின்றேன் மறுபுறம் கான்கொன் தன திறமையால் ஊடகத்தில் இன்று.....அவன் சாதிக்க வழி செய்தது இந்த பதிவுகள்(இந்த பதிவுலகத்தை எனக்கு தெரிந்து ஒழுங்காய் பாவித்தது இந்த சோம்பேறி கான்கொன் தான்) அதை விடுத்து சித்தப்பு ஆதிரை இலங்கையில் வேறு துறை மாம்ஸ் வந்தி என்னை போல இங்க குப்பை கொட்டுறார் புல்லட் பாட்டா குஞ்சு பவன் படிக்கின்றான் சின்ன மாமா சுபாங்கன் மது அண்ணா இன்னுமொரு பக்கம் வதீஸ் அணு என எல்லோரும் வேற வேற வயது துறை அப்படி இருந்தும் நாங்கள் நண்பர்களாக பக்கத்து வீட்டு முனியம்மாவின் நாய்க்குட்டி முதல் ஒபாமா வீட்டு பூனை பால்குடிக்கிற வரை எந்த வயது வேறு பாடின்றி நண்பர்களாக பேசுகின்றோம் என்றால் ஏன் உங்களால் பதிவுலகத்தில் இருந்து இப்படியான நண்பர்களை பெற முடியவில்லை. இது எந்த மையமும் மண்ணாங்கட்டியும் இல்லை நண்பர்கள் மனம் திறந்து ஒருவரை ஒருவர் போட்டு வாரும் இடம் மட்டுமே....உள்ளே வந்து பாருங்கள் தெரியும்...லண்டனில் நானோ மாம்சோ மன கவலையில் இருந்தால் கூட இந்த கும்மிகள் மருந்தாகி மன நிறைவை தந்திருக்கு.

இப்படியான நிறைவை நீங்களும் பெற நல்ல நண்பர்களை இனங்கான முடியாத பொறாமையா இப்படியான வெளிப்பாடுகள் என தெரியவில்லை. கும்மிக்கு வந்து விட்டால் லோஷன் அண்ணா ஒரு வானொலி பணிப்பலரோ அல்லது ஆதிரை அண்ணா ஒரு பொறியியலாலரோ அல்ல எல்லோரும் நண்பர்களே. .....தாங்கள் வேலை செய்யும் காலத்தில் தம் முகாமையாளர் ஒருவர் தன சக கீழ் ஊழியர் ஒருவருடன் நட்பாக இருப்பது யாருக்கும் கிடைக்காது எனக்கு கிடைத்தது....இதை கொடுத்த்ஹது நிச்சயம் பதிவுலகம்....இது எப்படி சாத்தியம் அங்கே லோஷன் அண்ணா என்கிற ஒரு மரியாதை எனக்குள்ளுள் இருக்கும ஆனால் கும்மியில் அவரை நான்கூட போட்டு தாக்குவேன்...இது நட்பு...இதை எல்லாம் சொல்லி புரியாது பார்த்து பொறாமைப்படுபவர்கள் நமக்கு கொடுத்த கௌரவ டாக்டர் பட்டம் போன்றது தான் இந்த அதிகார மையம்.....

ம.தி.சுதா said...

அண்ணா மிக மிகப் பிந்திய பின் ஊட்டலுக்கு மன்னிச்சுக் கொள்ளுங்கள்... இங்கே என்ன அடிப்பத என்று தெரியாமல் தான் ஒதுங்கி நின்றேன்... காரணம் இங்கு குறிப்பிட்டள்ள பலரக்கு நான் நல்ல தம்பியாகவும் அண்ணனாகவும் இருக்கிறேன்.... இருக்க விரும்புகிறேன்... நான் பதிவர்களை வாசிக்க வில்லை பதிவுகளையே வாசிக்கிறேன்... உண்மையில் பெரிய திண்டாட்டமாயிரந்தது காரணம்..

1) லோசன் - என் சிறுவயதிலிருந்தே என் மதிப்பிற்குரிய ஒரு மனிதன்.. அவன் குரலுக்கு என்றும் நான் அடிமை.. 2000 ம் ஆண்டில் முத்துக்கள் பத்தில் என் கவி வரியை அவர் வாசித்தால் நான் வரியை விட அவர் குரலையே ரசிப்பேன்.

2) ஜனா - இந்தப் பதிவுலகத்தில் நான் மிகவும் மதிக்கும் ஒருவர்.. முதல் முதல் மூலையில் இருந்த என்னை தேடி அழைத்து என் விரலை பிடித்து நடை பயில வைத்த மனிதன் அவன்...

3) நிருபன் - என் உற்ற நண்பர்களில் ஒருவன்.. எமது நட்பு வரலாறு கடந்த நட்பு... இன்றும் மதியோடை உயிரோடு ஓடக் காரணமானவன் இவன் தான்.

4) ரஜீவன் - (ஓட்டை வடை நாராயணன்) அதே போலத் தான் இவனும் என் மீது மிகுந்த பாசம் வச்சிருக்கும் ஒருவன் எங்கள் நட்பும் ஒரு வரலாறான நட்புத் தான்...

இப்ப சொல்லுங்கண்ணா நான் இங்கே என்னத்தை அடிப்பது....

ஆனால் சந்தோசமாய் போகிறேன் காரணம் நான் எதிர் பார்த்தது போலவே எல்லோரும் மனம் திறந்து பேசியது.....

ம.தி.சுதா said...

@ அஸ்பர்-இ-சீக்

சகோதரம் உங்கள் கருத்ததை என்னால் ஜீரணிக்க முடியவில்லை... ஏன் இப்படிச் சொல்கிறாய்.. நீ எழுது.. சுதந்திர இலவச மென்பொருள் வலையின் பட்டியலில் நீ உயரிய இடத்திலேயே இருக்கிறாய் நீ எழுது.. வாசிக்க நானிருக்கிறேன்

ம.தி.சுதா said...

அண்ணா தயவு செய்த எமக்கடுத்த பதிவர் சந்ததிக்காக ஒரு ஆரோக்கிய உலகத்தை கட்டியெழுப்ப ஒன்றாய் கை கோர்ப்போம்...

ஆதிரை said...

இன்றிரவு திரும்பவும் இப்பதிவையும் எல்லா பின்னூட்டங்களையும் வாசித்தேன்.

:D

பல வினாக்களுக்கு விடைகளே வந்து ஆஜராகிப்போனது போல உணர்கின்றேன்.

உங்கள் வெளிப்படைத்தன்மைக்கு ஒரு சல்யூட்...

சி.பி.செந்தில்குமார் said...

எல்லோருக்கும் அவரவர்க்கான தனி இடம் உண்டு.. யாரும் யாரையும் டாமினேட் பண்ண முடியாது.. அனைவ்ரும் ஒற்றுமையாய் இருப்போம்

Anonymous said...

பல மாதங்களுக்குப் பின்னர் பதிவுகளைப் படிக்க சந்தர்ப்பம் கிடைத்தது. மகிழ்ச்சியுடம் பதிவுகளைக் குடைந்த போது மகிழ்ச்சியை விட வேதனையே அதிகமாக தோன்றியது. உங்கள் மீது பெரு பதிப்பு வைத்திருக்கிறேன் என்று உங்களுக்குத் தெரியும். அந்த உரிமையில் உங்களுக்கு ஒன்றைச் சொல்ல ஆசைப்படுகிறேன். சிலர் மீது நீங்கள் வைத்திருக்கும் பாசத்தினால் கண்மூடித்தனமாக அவர்களை சப்போட் செய்வதை தவிர்த்துவிடுங்கோ. அருகில் இருந்து கொண்டு நேசமாகப் பேசுபவர்கள் எல்லோரும் உங்கள் மீது உண்மையான நேசமானவர்கள் என்றில்லை. வயதில் இளையவர்களுடன் உங்கள் நட்பு அழகாகவே இருந்தாலும் அவர்கள் செய்யும் தவறுகளுக்கு உங்களை சிலர் பழிக்க நியாயமுண்டு. நீங்கள் வயதில் மூத்தவர் என்பதால் அவர்களை திருத்த வேண்டும் என்று வெளி ஆட்கள் நினைப்பதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை. மேலும், சிலரை நீங்கள் அமரியாதை குறைவாக ஒருமையில் விளித்தீர்கள் என்று அறிந்தேன். உங்களிடம் இருந்து அதை உங்கள் தங்கையாக எதிர்பார்க்கவில்லை. வருத்தங்களுடன் முகில்.

lalithsmash said...

ஆனாலும் முன்பு சில காலம் முன் இருந்ததைப் போல எனக்குக் கோபம் வருவதில்லை. இது புதுவித நோயோ எனக் கொஞ்சம் யோசனையாக இருக்கிறது

இது நோயில்லை லோஷன் '''முதிர்ச்சி''. இது நல்ல விஷயம்தானே.
இதைப்பற்றி யோசனை வேண்டாம். இது நீங்கள் இன்னும் நல்லவர் ஆகிக்கொண்டிருக்கிறீர்கள் என்பதற்ற்கான Symptom மட்டுமே!

அப்பாவி said...

//ஆனாலும் முன்பு சில காலம் முன் இருந்ததைப் போல எனக்குக் கோபம் வருவதில்லை. இது புதுவித நோயோ எனக் கொஞ்சம் யோசனையாக இருக்கிறது

இது நோயில்லை லோஷன் '''முதிர்ச்சி''. இது நல்ல விஷயம்தானே.
இதைப்பற்றி யோசனை வேண்டாம். இது நீங்கள் இன்னும் நல்லவர் ஆகிக்கொண்டிருக்கிறீர்கள் என்பதற்ற்கான Symptom மட்டுமே!
//

கோபம் வருவது கெட்டவர்களின் குணமா? #சந்தேகம்

Shafna said...

பிறந்த நாள்! நேற்று பிறந்த நாள்! நாம் பிள்ளைகள் போலே தொல்லைகளெல்லாம் மறந்த நாள்! Happy birthday to you.... போதும்.போலாம். இன்னிக்கி போலாம். Freshஆ நாளைக்கி இன்னொரு பதிவெழுதலாம்..

சுதா SJ said...

முதல் முதல் உங்கள் ப்ளாக் பக்கம் வருகுறேன் அண்ணா,
ம்ம் அசத்தலான பதிவுகள்,
இனி அடிகடி வருகிறேன் அண்ணா

lalithsmash said...

அப்பாவி said...
''கோபம் வருவது கெட்டவர்களின் குணமா? #சந்தேகம்''

கோபம் வருவது கேட்டவர்களின் குணம் மட்டுமல்ல,
சில நல்லவர்களின் குணமும்தான்.
ஆனால் கோபம் குறையும்போது கெட்டவர்கள் நல்லவர்கள் ஆகவும்
நல்லவர்கள் மேலும் நல்லவர்களாகவும் ஆகிறார்கள்.

நீங்கள்தான் அப்பாவியாச்சே உங்களுக்கு எப்படி இது புரியும்.

ARV Loshan said...

சிரிப்பு போலீஸ் said...
அதிகார மையத்தின் அங்கத்தவர்களின் எண்ணிக்கை 12 ஆனாலும் லோஷனுக்கு தமிழ்மணத்தில் விழுந்த ஓட்டுகளின் எண்ணிக்கை வெறும் 5 தான். சிப்புசிப்பா வருது//

யோவ் சி.போ அதற்காக எனக்கு வாக்குப் போடாத ஏழு நண்பர்களுடன் நான் சண்டை போடவா?

வாக்குப் போடுவதற்காகவா இந்த நட்புகள்? ;)

=================

Anonymous said...
சிரிப்பு போலீஸ், ஏன்யா கூசாமப் புளுகுறீர்? நீரும் லோஷனின் அடி வருடியா? வடிவாப் பாரும் சுளையா 24 வாக்கு.
மறைமுக அதிகார மையமும் இருக்குப் போல இருக்கே.//

அட அட .. என்ன ஒரு கணக்கு +அக்கறை :)

=============

சிரிப்பு போலீஸ் said...
அனானி மண்டையா ஒழுங்காக வாசிக்கவும் தமிழ்மணத்தில் 5 ஓட்டுகள். தமிழ்மணத்துக்கு இன்ட்லிக்கும் வித்தியாசம் தெரியாத நீ எல்லாம் என்னாத்தை எழுதி என்னாத்தை கிழிச்சு. நல்லவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பது அடிவருடி என்றால் நான் லோஷனின் அடிவருடிதான்.//

அய்யோ அம்மா.. அடி வருடி என்றால் எனக்கு அடி வாங்கிக் கொடுப்பவன் என்று இன்னொரு அர்த்தம் இருக்கா? :)

நான் நல்லவன்.. எனக்கு அடிவருடி யாரும் கிடையாது.. எல்லாரும் கேட்டீங்களா?

ARV Loshan said...

sinnathambi said...


சின்னப்பயல்களின் பேச்சுக்களை கேட்டு, நீங்க ரெண்டுபேரும் சின்னப்புள்ளத்தனமா மோதிக்கிறீங்களே

போய் உங்கள் வேலைகளை பாருங்கள், சின்னப்பயலுகள் உங்கள் ரெண்டுபேருக்குமே அட்வைஸ் பண்ண வச்சுட்டீங்க//

மோதல் அதுவும் கருத்து மோதல் என்று வந்தபிறகு மனசில் வச்சுக் கொள்ளக் கூடாது பாருங்கோ.. அதான் நேரேயே கேட்டு நேரேயே பதில் பெற்றுக் கொள்கிறேன்/றோம் அவ்வளவு தான் :)

==========

சயந்தன் said...
I ill cum after read // :)

அவ்வளவு கிளுகிளுப்பலானப் பலானவாவா எழுதுறீங்க..... :) :)//

ஹீ ஹீ. இதெல்லாம் கிளு கிளுப்பு மாதிரித் தான் இருக்கும் உங்களை மாதிரி கொழுவி விடுற ஆக்களுக்கு ;)

===========================

ARV Loshan said...

Subankan said...


கொழும்பு பல்கலைகழகத்தினர் சார்பில் சுகந்தன்(கொழும்பு பல்கலைக்கழக தமிழ்ச்சங்கத் தலைவர்) அவர்கள் முதன்முதலில் சந்திக்கும் போது லோஷன் அண்ணா, நான் மற்றும் கோபி அங்கே இருந்தோம். அப்போது அவரது வேண்டுகோள், இலங்கைப் பதிவர்களுக்கு கொழும்பு பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்க முத்தமிழ் விழாவில் விருது வழங்கப்போவதாகவும், அந்த விருதை பதிவர்கள் சார்பாக லோஷன் அண்ணா பெற்றுக் கொள்ளவேண்டும் என்றே கேட்கப்பட்டது. அதற்கு லோஷன் அண்ணா பதிவர்கள் சார்பாக விருது வாங்க பல மூத்த பதிவர்கள் இருக்கிறார்கள் என்று கூறியிருந்தார்.//

நன்றி சுபாங்கன்.. :)

கூறியது கூறல் இங்கே அவசியத் தேவை. அதை சரியாக சொல்லியுள்ளீர்கள்.




பின்பு கொழும்பு பல்கலைக்கழகத்தால் பதிவர்கள் சார்பாக என்றில்லாமல் குறித்த ஒருவருக்கு வழங்குவதாக மாற்றப்பட்டு அது லோஷன் அண்ணாக்கு அவ்விருது வழங்கப்பட்டிருந்தது.//

அதே.. அத்துடன் மேடையில் அறிவிக்கப்பட்டது எனக்கு சிறந்த பதிவர் விருது என்று..

அங்கு வெளியிடப்பட்ட இதழும் சொல்வது அதையே



அவ்விடத்தில் விருதுக்கான பரிந்தரைகள் எதுவும் என்னிடமோ வேறு யாரிடமோ கோரப்பட்டிருக்கவில்லை. இதற்கு மாறாக நான் வேறு எதையும் கூறியிருக்க வாய்பேதுமில்லை :-)//

:)

ARV Loshan said...

கார்த்தி said...
அண்ணா உங்கள் பதில்களுக்கு நன்றி! உண்மையில் இங்க நான் சொல்லவெளிக்கிட்ட விசயம் மற்றவர்களை எங்களின் பதிவுகளையோ வேறு பதிவர்களின் தரமான ஆக்கங்களையோ வாசிக்க சொல்லியோ வற்புறுத்தவில்லை. ஆனால் மிகவும் கஸ்டப்பட்டு எழுதப்பட்ட பல எம்பதிவர்களின் பதிவுகள் இலகுவாக இண்ட்லியில் popular ஆக்கப்பட்டும் கூட [தம்பட்டம் அடிக்கிறன் எண்டு சொல்ல வேண்டாம் எனது கடந்த 13 தொடர்ச்சியான பதிவுகளும் popularஆக்கபட்டிருந்தன வாசகர்களால். அத்தோடு எனக்கு ஓட்டுப்போட் பலர் இங்கே இருப்பவர்களும் அல்லர். தெரியாதவர்கள். இத்தனைக்கும் நான் பலருக்கு ஓட்டுப்போட்தே கிடையாது. ஆனால் பின்னூட்டங்கள் இட்டிருக்கிறேன்]//

தம்பி தரமான பதிவுகளுக்கு விளம்பரமோ, வாக்குப் போடுங்கள் என்ற கூவல்களோ தேவையில்லை. உங்கள் பதிவுகளில் சரக்கும் இருக்கிறது, சுவையும் இருக்கிறது.. தானாக அவை கவனிக்கப்படும்.


அப்பதிவுகள் இலங்கை பதிவர்களால் கவனிக்கபடாமல் இருக்கும்போது பல தடவைகளில் சிறுபிள்ளைதனமாக சலிப்பு வருவதுண்டு.//

ரசனைகள் வேறுபடலாம்.. என்னுடைய தரவுகளைப் பாருங்கள். சில வகைப் பதிவுகளுக்கு இலங்கை வாசகர்களை விட இந்திய வாசகர்களே அதிகம் வருகிறார்கள்.இதைப் பொருட்படுத்திக் குழம்பாதீர்கள்.



இலங்கையில் இருக்கும் பதிவர்கள் அதிகம் எதிர்பார்ப்பது எம்சக இலங்கை பதிவர்களின் பதிவு தொடர்பான கருத்துக்களையே. மற்றவர்கள் எல்லாம் 2ம்பட்சம்தான். எம்மவர் வந்து எமது பதிவுபற்றி நல்லாகவோ ஏன் பிழையாகவோ கூறும்போது வரும் உற்சாகம் வேறு எங்கும் கிடைப்பதில்லை!/

உண்மை :)


மீண்டும் சொல்கிறேன் வாக்குபோடு பின்னூட்ம்போடு எண்டு வற்புறுத்தவோ அதை கருத்தில்கோண்டு நண்பர்களை தீர்மானிப்பதோ இல்லை. சிலர் இங்கே கூறியது போல் எங்களுக்கு வாக்கு கிடைக்கவில்லை என்று கூச்சலிடுகின்றென்றோ இது பொருளில்லை. இவர்தான் சிறந்தவர் என்றல்லாது கொஞ்சமாவது மற்றவர்களையும் சிறந்த readerஆக கவனியுங்கள் என்றே சொல்கிறேன். இல்லாவிடில் உண்மையில் பதிவர் தொடர்பாக குழுமங்களோ சந்திப்புக்களோ தேவையற்றது!//

காத்திரமான கருத்து கார்த்தி..

================

Balavasakan said...
ம்..ம். கடந்த சில நாட்களாக பதிவுலகத்தில் இருக்கும் குழப்பகரமான சூழ்நிலையை மௌனமாக பார்த்தவாறே இருந்திருக்கிறேன் இதில் சம்பந்த படுபவர்கள் அனைவரும் நண்பர்கள் என்ற வகையில் இதறகுள் தலையிட்டு எவரையும் தர்மசங்கடத்திற்குள்ளாக்க நான் விரும்ப வில்லை ஆனாலும் என்னுடைய பெயரும் பின்னூட்டங்களில் பாவிக்கபட்டிருப்பதால் இங்கு பின்னூட்டமிடுவது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது..!//

புரிகிறது. ஆனால் எனக்கு இந்த சம்பவத்தில் எப்படி நீங்கள் இணைகிறீர்கள் என்பது முன்பு தெரியாத காரணத்தால் நான் எதுவுமே சொல்லி இருக்கவில்லை.


//பின்னர் லோஷன் அண்ணாவிறகு விருது வழங்கப்பட்ட பிறகு நாம்சந்தித்து கலந்துரையாடியபோது இது சம்பந்தமாக கேட்டபோது சுபாங்கன் "விருது அவருக்கே என்று அவரே சொல்வது அவரைபொறுத்தது''என்று கூறியிருந்தார்//

அப்படி அவர் சொல்லவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.


இந்த விடயங்களை நான் இந்த பதிவில் பின்னூட்ட வேண்டிய தேவை ஒன் று ஏற்பட்டிருக்கிறது//

ம்ம்ம் :)



அத்துடன் பதிவிறகு பின்னர் வந்த பின்னூட்டங்கள் மேலும் என்னை இந்த பின்னூட்டத்தை இட தூண்டியிருக்கின்றன ஆனால் இந்த பின்னூட்டத்தை இடுவதன் மூலம் எனக்கும் ஜனா அண்ணாவிறகும் , லோஷன் அண்ணாவிற்கும் அல்லது சுபாங்கனினுடனான நடபிலோ எந்த விதமான மாற்றங்களும் ஏற்படாது என நம்புகிறேன்..//

நான் வழமை போலவே கூல் :)

ARV Loshan said...

Cool Boy கிருத்திகன். said...
ஐயய்யோ... இன்ட்லி பிரபலமானவை படிக்கும் போது வழி மாறி இந்தப்பக்கமா வந்துட்டேன் லோஷனண்ணா...
இந்தப்பக்கமா எஸ்கேப்பாயிடறேன்...
ஆருங்கேட்டா நான் அப்ஸனாம் எண்டு சொல்லுங்கோ...!//

ஹா ஹா ஹா.. புரிந்து கொண்டேன் :)

யாராவது கேட்டால் அப்படியே சொல்றேன் :)


இந்த நிலை மாறும்.
நாளை மற்றொரு நாளே...!//

:)

======================




“நிலவின்” ஜனகன் said...
அண்ணா பதிவு குழப்பத்தை தீர்க்கும் என்று பார்த்தால் பின்னுாட்டங்கள் மாறுபட்டு மாறுபட்டு கருத்துகளாக வருவதால் குழப்பம் அதிகரிக்கின்றதே..//

இல்லையே.. குழப்பங்கள் தீர்ந்துள்ளனவே.. அவதானிக்கவில்லை? :)

ARV Loshan said...

Jana said...

//இதை அவர்களும் ஒத்துக்கொண்டால் சரி,// என்று ஒற்றை வரியில் சொல்லிவிட்டுபோகும் விடையம் இல்லை அது. அப்படி என்றால் நான் நினைத்தேன் ஒருவர்தான் அதில் சம்பந்தப்பட்டவர் என்று ஆனால் 'அவர்கள்' என்ற உங்கள் வழிப்பில் இதில் ஒருவர் தவிர சிலர் உள்ளது தெரிகின்றது,
அவர்கள் எவராகவும் இருந்துவிட்டுபோகட்டும் அதுபற்றி கவலைபடுபவன் நான் இல்லை. ஆனால் இதை அவர்கள் ஒத்துக்கொண்டால் சரி..என்றால் மறைமுகமான நீங்கள் அவர்கள் சொல்வதுதான் சரி..என்று நினைத்திருப்பதும் திட்டமிட்டு என்னைப்பற்றி மற்றவர்களுக்கு ஒரு தப்பான அபிப்பிராயத்தை உண்டாக்கவேண்டும் என்ற அடிப்படையிலேயே இந்த பதிவு வந்திருக்கின்றது என்றே யோசிக்க வைக்கின்றது//

இல்லை ஜனா.. அப்படிப்பட்ட எண்ணம் கொண்டவன் நான் இல்லை.அப்படி இருந்திருந்தால் உங்களை இவ்வளவு மரியாதையாக (இன்னமும் கூட) நான் பதிவிலோ பின்னூட்டத்திலோ நான் அழைத்திருக்க மாட்டேன். உங்கள் விளக்கத்தைப் பகிரங்கமாக நான் பிரசுரித்திருக்கக் கூடிய தேவை கூட எனக்கு இருந்திராது.



Jana said...
//அண்ணா கொழும்பு பல்கலைக்கழக பழைய மாணவர் என்ற ரீதியில் தங்களிடமிருந்தும் ஆக்கங்கள் எதிர்பார்க்கபடுகிறது....... சிரமம் பாராது தந்து உதவுங்கள்!!!!//

எனக்கு தனிப்பட்டமுறையில் அனுதினன் அனுப்பியிருந்த பேனலான மெயிலுக்கே நான் அவருக்கு தொடர்பெடுத்து அவருடன் கதைத்தேன், இது ஒருவகையில், அந்த சங்க உறுப்பினர் ஒருவருடன் தனப்பட்ட முறையில் நான் கதைத்த ஒபிஸியலான நடைமுறை, அதேவேளை ஒரு பழைய மாணவன் என்ற முறையில் சிலவற்றை ஒரு உறுப்பினருக்கு சொல்ல எனக்கு உரிமைகளும் உண்டு. அதை அவர் இதில் சம்பந்தப்படாத மட்டத்திற்கு கொண்டுசென்றது எவ்வாறானது என்பது அனைவருக்கும் தெரிந்;தவிடயம். இது பற்றி அறவே யொசிக்காமல் ஒரு வெளிப்படையான பதிவில் நீங்கள் போட்டிருந்தது என்னைப்பொறுத்தவரையில் உங்கள் குற்றமே.//

இல்லை ஜனா .. இங்கே நீங்கள் தவறாக நடக்கிறீர்கள்.அவை என்ன தான் உத்தியோகபூர்வமாக இருந்தாலும் என் சம்பந்தப்பட்ட செய்திகளையே நீங்கள் அவருடன் பேசி உள்ளீர்கள்.அத்துடன் கடந்தமுறை விவகாரத்தை இம்முறை மீண்டும் நீங்கள் அவருக்கு சொல்லியுள்ளீர்கள்.அது ஒபீசியலா?

என் பற்றி நீங்கள் இன்னொருவருடன் பேசிய உண்மைக்குப் புறம்பான விஷயங்களை நான் வெளியிடுவது குற்றமா?

ARV Loshan said...

ana said...
//அவ்விடத்தில் விருதுக்கான பரிந்தரைகள் எதுவும் என்னிடமோ வேறு யாரிடமோ கோரப்பட்டிருக்கவில்லை. இதற்கு மாறாக நான் வேறு எதையும் கூறியிருக்க வாய்பேதுமில்லை :-//

என்று சொல்லும் சுபாங்கன் என்னிடம் இது பற்றி கதைக்கவில்லை அல்லது கதைப்பதற்கு நியாயம் இல்லை என்றால், இந்த மூவர் பற்றிய சம்பவம், லோஷன், கோபி ஆகியோர் என்னிடம் இது பற்றி கதைக்கவே இல்லை (இது அவர்களுக்கு தெளிவாக தெரியும்) அப்போ இதுபற்றி எனக்கு எப்படி தெரியும்?//

சுபாங்கன் இது பற்றிப் பின்னூட்டி இருப்பதால் நான் இதை மீண்டும் தெளிவக்கத் தேவையில்லை என நினைக்கிறேன்.

Jana said...

வந்தியின் அணுகுமுறை என்னைப்பொறுத்த்தவரை ஹாட்ஸ்சோவ் வந்தி என்று சொல்லவைக்கின்றது.
என்மேல் கருத்து வேறுபாடு என்ற ஒரு பொழுது நேரடியாக எந்த மறைவும் இன்றி என்னிடம்பேசினார், சிலவற்றைசுட்டிக்காட்னார். சிலவற்றை உணரும் வகையில் தெளிவாக பேசியிருந்தார். அதுபோல் என்னைப்பற்றி என்னைத்தவிர வேறு யாருடனும் குறைபட்டு கொண்டதாக நான் கேள்விப்பட்டதும் இல்லை. இதுவே சரியான அதேவேளை நியாயமான வழி.//

அதையே தான் நானும் சொல்கிறேன். வந்தியுடன் எனது நட்பு இறுகி இறுகக் காரணமும் அதுவே.. அந்த நல்ல மனிதரும் எனைப் போலவே வெளிப்படையானவர்.

நானும் அது போலவே உள்ளொன்று வைத்துப் புறமொன்று இதுவரை பேசியதுமில்லை. இதனாலேயே இவ்வளவு காலமும் மனதில் இத்தனை விஷயம் வைத்திருந்து இங்கே கொட்டினேன்

ARV Loshan said...

Jana said...
அடுத்து லோஷன் பற்றி தவறாகவோ, அல்லது விருதுகள் வழங்கல் நடவடிக்கைப்படியோ பதிவர் என்ற முறையில் என் பதிவுகளில் எந்த சந்தர்ப்பத்திலும் நான் பதிவாக எழுதவில்லை.//

நான் எங்கேயும் தவறாக நடக்கவில்லையே.. அத்துடன் உங்களைப் பற்றி இதுவரையில் எங்கேயும் யாருடனும் நான் தவறாகப் பேசவும் இல்லையே..எனவே எழுதவேண்டிய தேவை உங்களுக்கு இல்லை.



ஆனால் உங்கள் பதிவிலே பதிவுகள் தாண்டிய தனிப்பட்ட விடையங்களையும் சிலருடனான சொல்லாடல்களையும் நீங்கள் பதிவாகவே இட்டுள்ளது எந்த வகையில் நியாயமாக உங்களுக்கு உங்களுக்கு படுகின்றது?//

நடந்த விஷயங்கள், நான் அறிந்த விஷயங்கள், தெளிந்த விஷயங்களே அவை. நியாயம் தான்.



அடுத்து மருதமூரானிடம் தெரிவித்திருக்கும் உங்கள் கருத்து பின்னூட்டத்தில்,
மின்-அஞ்சல் தொடர்புகள், நேரடியாக தொடர்பை எடுத்தல் என்பன சிலபேருக்கு சாத்தியமாகாது என்று போட்டிருக்கின்றீர்கள். எப்படி அது சாத்தியம் ஆகாமல்போகும்?//

அது தான் பதிவிலே தெளிவாகவே சொல்லி இருந்தேன்...

ஜனாவுடன் நெருக்கமாகப் பழகவேண்டிய தேவையோ, இன்றில் வேறு கொடுக்கல் வாங்கலோ இல்லாத நிலையில் இதன் உண்மைத் தன்மை, காரண காரியங்கள் பற்றி அவரிடமே விசாரிக்க வேண்டிய தேவை இருக்கவில்லை.

ஆனால் ஜனாவின் பதிவில் பார்த்த என் பற்றிய இரு விஷயங்களுக்காகவும், சில பொதுவான வார்த்தைப் பிரயோகங்களுக்காக்கவுமே இதை இங்கே வெளிக்கொண்டுவருகிறேன்.


ஏன் நான் ஏதாவது பதிலளிக்காமல் விட்டிருக்கின்னோ? ரஜினி 10 பற்றி நீங்கள் எழுதச்சொல்லி பேசனலாக மெயில் பண்ணியவுடன் அதை மதித்து உடனடியாகவே அதை பதிவிடவில்லையா நான்?//

அதற்கு நன்றிகளையும் பின்னூடத்திலே சொல்லி இருந்தேன். பதிவுலகில் நான் என்றுமே நட்போடு பழக விரும்புபவன். ஆனால் ஒரு கை ஓசை எப்போதுமே பலன் இல்லையே.

ARV Loshan said...

Jana said...
எதுஎப்படியோ இந்த பதிவால் எனக்கு உங்கள்மீது எந்த கோபங்களும் வரப்போவதில்லை, ஆனால் லோஷன் ஏன் இப்படி செய்திருக்கலாமே என்ற நிறைவேறாத விருப்பஙற்கள் மட்டும் உண்டு.//

என்ன செய்வது.. என்னைப் பொறுத்தவரை இது வெளியே தெரிய வேண்டிய விஷயமாக இருந்தது. காரணம் நெருங்கிப் பழகிய நண்பன் என்றால் அவருடன் மட்டும் பேசி முடித்திருப்பேன். உங்களோடு அவ்வாறு பழகாத நேரத்தில் அப்படி செய்ய முடியாது.



இந்த பதிவுக்கான என்பதில்களையும், இந்த சர்ச்சையினையும் கவனிப்பதை இத்தோடு நான் விட்டு விட்டு என் வேலையினையும், என் பதிவுகளையும் கவனித்துக்கொள்கின்றேன். அதுபோல நாளை மறுதினம் வரவிருக்கும் உங்கள் பிறந்ததினத்திற்கு திறந்த மனதுடன் உங்களை வாழ்த்த தயாராகின்றேன்.//

வாழ்த்துக்களுக்கு நன்றி..

ஷஹன்ஷா said...

mmmm...அண்ணா ஸப்பா ஒரு வழியாக முழுக்கருத்துக்களையும் படித்துவிட்டேன்..முதலில் கவனிக்க தவறிய விடயத்தையும் கண்டு கொண்டேன்..புரிந்து கொண்டேன்..

சரி அண்ணா அனைத்தையும் மறந்து விட்டு தொடர்ந்து இதே சிறப்புடன் எழுதுங்கள்..எழுத்துகள் பொன் போன்றவை..அவை துருப்பிடிக்க கூடாது,மங்கி விடக்கூடாது...

ARV Loshan said...

Subankan said...

நன்றி சுபாங்கன் உங்கள் வெளிப்படையான கருத்து + விளக்கத்துக்கு..

மேலும் லோஷன் அண்ணாபற்றிய உங்களது அபிப்பிராயமாக நீங்கள் இங்கே குறிப்பிட்ட‍ கருத்துக்க‍ ளை உங்கள் மனச்சாட்சியிடமே ஒருமுறை கேட்டு உறுதிப்ப‍டுத்திக்கொள்ளுங்கள்//

:)

பதிவுலகில் இதுவரை யாராக இருந்தாலும் முதல் சந்திப்பிலிருந்தே அவர்களுடன் நெருங்கிப் பழகுவதே எனது சுபாவம். இதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்றே நம்புகிறேன். இனிமேல் பதிவர்கள் என்றால் பத்த‍டி தள்ளியே நிற்கப் பழகிக்கொள்கிறேன். //

:( எல்லாருடனுமா?

நான் பதிவர் மட்டும் இல்லை என்பதை இதால் சத்தமாகத் தெரிவிக்கிறேன்.

=================


Nesan said...
உங்கள் பின்னூட்டங்களில் சில வெளிப்படை விசயங்களை கூறுகிறீர்கள் லோசண் அண்ணா பதிவுலகில் இப்படியுமா??//

இப்படியும் தான்.. :) இன்னும் உள்ளன தான்

ARV Loshan said...

SShathiesh-சதீஷ். said...
சில பல தனிப்பட்ட காரணங்களால் தாமதமாக என் பின்னூட்டம் இடுகின்றேன். அண்மைய பதிவுகள் பலவற்றை பார்க்கும் போது சில இடங்களில் சிரிப்பும் பல இடங்களில் கோபமும் தான் வருகின்றது. சில இடங்களில் கொட்டி தீர்த்துவிட வேண்டும் போல இருக்கும் ஆனால் தொட்டால் தொடர்ந்து நான் நியாயத்தை பேச எனக்கு நேரம இன்மை போன்ற காரணங்களாலும் இதுவும் கடந்து போகும் என்ற நம்பிக்கையிலும் பேசாமல் இருந்தேன்.//

ம்ம்ம்ம்.. :)



//பதிவுலகுக்கு வந்த பிறகு நட்பாகி நெருக்கமாகி ஒரே அலைவரிசை கொண்டவர்களாக இருப்பதனால் (ஒரே ரசனை என்று இருப்பதில்லை) ஒத்தியங்கும் நாம் சிலர்...//

உண்மையை வெளியே சொன்னதுக்கு நன்றி அங்கிள். பின்னே சித்தப்பு அங்கிள் மாமா மருமகன் குறு சிஷ்யன் இவங்க எல்லாம் ஒரே ரசனையில் இருந்தால் நாடு தாங்காதுடா சாமி.//

ஹா ஹா.. உண்மை.. வெவ்வேறு ரசனைகள் இருந்தால் தான் வேறுபட்ட நல்ல கருத்துக்களும் வரும்.



SShathiesh-சதீஷ். said...

என்ன கொடும சார் இது.....நிரூஜா ஆண்டியை இப்படி கலாய்ப்பதை ஆண்டி ரசிகர் சங்கம் சார்ப்பாக கண்டிக்கின்றேன்.//

அவங்க நேற்றுத் தான் கொழும்பு திரும்பினாங்க.. இனிப் பாருங்க ஆக்ஷனை.. ')

//ஏழோ எட்டுப் பேரால் ஒரு சொதப்பலான பதிவு சூப்பர் ஹிட்டாகி விடுமா? என்னய்யா இவர்களின் லொஜிக்?//
என் பதிவு ஹிட் ஆகிறதே இல்லையே...(சரக்கு இருந்தா தானே எண்டு கண்ணை குத்தப்படாது.) .அப்புறம் நான் நம்மவர்கள் யாருக்கும் வாக்கு இடுவதும் இல்லை .....அதுக்காக எல்லாம் அதிகார மைய குழுவில் இருந்து என்னை நீக்க கூடாது....ஆமா சொல்லிபுட்டன் அப்புறம் தெரியும் தானே எதிர் பதிவெல்லாம் போடுவேன்....//

ஐயோ அம்மா யாராவது தமிழைக் காப்பாத்துங்கப்பா..



முக்கிய குறிப்பு: என்னை கேட்காமால் என் படத்தை பாவித்தமைக்கு மான நஷ்ட வழக்கு தொடர்ப்போறேன்...//

உங்க தலைவர் விஜயின் படத்தைக் கூட அப்பிடித் தானே பயன்படுத்துறோம்.. அவர் ஏதாவது சொன்னாரா? ;)



கொஞ்சம் சீரியசாய் என் பதில்: பதிவுலகில் பல பிரச்சனைகள் வந்து போயிருக்கின்றன இதுவும் போகும். நாம் தான் அதிகார மையம் என இன்னொரு மையம் நினைத்தால் அது நம் பிரச்சனையல்ல கிரியேட்டிவ் பதிவை எழுதுங்கள் என சொல்பவர்கள் எங்கே சிண்டு முடியலாம் என கிரியேட்டி பண்ணாமல் பதிவுகளில் அதை காட்ட தங்கள் நேரத்தை பயன்படுத்தினால் எல்லோருக்கும் சந்தோசம்...//

:)

நன்றி சதீஸ் :)

ARV Loshan said...

♔ம.தி.சுதா♔ said...
அண்ணா மிக மிகப் பிந்திய பின் ஊட்டலுக்கு மன்னிச்சுக் கொள்ளுங்கள்... இங்கே என்ன அடிப்பத என்று தெரியாமல் தான் ஒதுங்கி நின்றேன்... காரணம் இங்கு குறிப்பிட்டள்ள பலரக்கு நான் நல்ல தம்பியாகவும் அண்ணனாகவும் இருக்கிறேன்.... இருக்க விரும்புகிறேன்... நான் பதிவர்களை வாசிக்க வில்லை பதிவுகளையே வாசிக்கிறேன்... உண்மையில் பெரிய திண்டாட்டமாயிரந்தது காரணம்..//

இதிலே எந்தப் பிரச்சனையும் இல்லை சுதா.. யாரையும் கட்சி பிரிக்கவோ சாட்சிக்கு அழைக்கவோ இல்லை நான். :) எனவே யோசிக்க வேண்டிய தேவையில்லை.



1) லோசன் - என் சிறுவயதிலிருந்தே என் மதிப்பிற்குரிய ஒரு மனிதன்.. அவன் குரலுக்கு என்றும் நான் அடிமை.. 2000 ம் ஆண்டில் முத்துக்கள் பத்தில் என் கவி வரியை அவர் வாசித்தால் நான் வரியை விட அவர் குரலையே ரசிப்பேன்.//

'நன்றி உங்கள் பெரிய வார்த்தைகளுக்கு



2) ஜனா - இந்தப் பதிவுலகத்தில் நான் மிகவும் மதிக்கும் ஒருவர்.. முதல் முதல் மூலையில் இருந்த என்னை தேடி அழைத்து என் விரலை பிடித்து நடை பயில வைத்த மனிதன் அவன்...

3) நிருபன் - என் உற்ற நண்பர்களில் ஒருவன்.. எமது நட்பு வரலாறு கடந்த நட்பு... இன்றும் மதியோடை உயிரோடு ஓடக் காரணமானவன் இவன் தான்.

4) ரஜீவன் - (ஓட்டை வடை நாராயணன்) அதே போலத் தான் இவனும் என் மீது மிகுந்த பாசம் வச்சிருக்கும் ஒருவன் எங்கள் நட்பும் ஒரு வரலாறான நட்புத் தான்...

இப்ப சொல்லுங்கண்ணா நான் இங்கே என்னத்தை அடிப்பது....//

ஐயோ ஒன்றுமே நான் கேட்கவில்லை.

ஆனால் சந்தோசமாய் போகிறேன் காரணம் நான் எதிர் பார்த்தது போலவே எல்லோரும் மனம் திறந்து பேசியது.....//

:)

ARV Loshan said...

♔ம.தி.சுதா♔ said...
அண்ணா தயவு செய்த எமக்கடுத்த பதிவர் சந்ததிக்காக ஒரு ஆரோக்கிய உலகத்தை கட்டியெழுப்ப ஒன்றாய் கை கோர்ப்போம்...//

இப்ப அதுக்கென்ன வந்தது? நான் மாட்டேன் என்று எங்கும் சொல்லவில்லையே.. :)

=====================

ஆதிரை said...
இன்றிரவு திரும்பவும் இப்பதிவையும் எல்லா பின்னூட்டங்களையும் வாசித்தேன்.

:D

பல வினாக்களுக்கு விடைகளே வந்து ஆஜராகிப்போனது போல உணர்கின்றேன்.//

அதற்காகத் தானே இந்தப் பதிவு.. இதே தெளிவு அனைவருக்கும் வந்தால் மகிழ்ச்சி + நிம்மதி :)



உங்கள் வெளிப்படைத்தன்மைக்கு ஒரு சல்யூட்...//

ஆகா நன்றி.. சித்து தங்கள் வெளிப்படைத் தன்மை +துணிச்சலை விடவா?

ARV Loshan said...

சி.பி.செந்தில்குமார் said...
எல்லோருக்கும் அவரவர்க்கான தனி இடம் உண்டு.. யாரும் யாரையும் டாமினேட் பண்ண முடியாது.. அனைவ்ரும் ஒற்றுமையாய் இருப்போம்//

உண்மை சிபி.. :)


=====================

Anonymous said...
பல மாதங்களுக்குப் பின்னர் பதிவுகளைப் படிக்க சந்தர்ப்பம் கிடைத்தது. மகிழ்ச்சியுடம் பதிவுகளைக் குடைந்த போது மகிழ்ச்சியை விட வேதனையே அதிகமாக தோன்றியது. உங்கள் மீது பெரு பதிப்பு வைத்திருக்கிறேன் என்று உங்களுக்குத் தெரியும். அந்த உரிமையில் உங்களுக்கு ஒன்றைச் சொல்ல ஆசைப்படுகிறேன். சிலர் மீது நீங்கள் வைத்திருக்கும் பாசத்தினால் கண்மூடித்தனமாக அவர்களை சப்போட் செய்வதை தவிர்த்துவிடுங்கோ.//

அன்புத் தங்கை முகில்.. ஒன்று உங்களை யாரென்று எனக்குத் தெரியாது.

இரண்டு - கண்மூடித் தனமாக யாரையும் நான் சப்போர்ட் பண்ணியதும் கிடையாது அப்படி யாரை சப்போர்ட் செய்தேன் என்று தெரிந்தால் சொல்லுங்கள் நேரடியாக.



அருகில் இருந்து கொண்டு நேசமாகப் பேசுபவர்கள் எல்லோரும் உங்கள் மீது உண்மையான நேசமானவர்கள் என்றில்லை. வயதில் இளையவர்களுடன் உங்கள் நட்பு அழகாகவே இருந்தாலும் அவர்கள் செய்யும் தவறுகளுக்கு உங்களை சிலர் பழிக்க நியாயமுண்டு. நீங்கள் வயதில் மூத்தவர் என்பதால் அவர்களை திருத்த வேண்டும் என்று வெளி ஆட்கள் நினைப்பதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை.//

எது பற்றி என்ன சொல்கிறீர்கள் என்று எனக்கத் தெரியவில்லை. நீங்கள் மேலேயுள்ள பதிவை வாசித்துத் தான் பின்னூட்டுகிறீர்களா என்றும் புரியவில்லை.

அனானியாக வராமல் உங்கள் பெயருடனேயே வந்து நீங்கள் 'நினைக்கின்ற' விஷயங்களை நேரேயே சொல்லியிருக்கலாம்.



மேலும், சிலரை நீங்கள் அமரியாதை குறைவாக ஒருமையில் விளித்தீர்கள் என்று அறிந்தேன்.//

??? நீங்கள் குழம்பியுல்லீர்களா? அல்லது என்னைக் குழப்ப வந்தீர்களா?

அன்புடன் என்னுடன் பழகும் இளையோரை நான் நீ,வா, போ என்று அழைப்பேனே தவிர மரியாதைக்குரியவர்களையோ,தெரியாதவர்களையோ அவ்வாறு அழைப்பதில்லை.



உங்களிடம் இருந்து அதை உங்கள் தங்கையாக எதிர்பார்க்கவில்லை. வருத்தங்களுடன் முகில்.//

தங்கை??? நீங்கள் யார்?

ARV Loshan said...

lalithsmash said...
ஆனாலும் முன்பு சில காலம் முன் இருந்ததைப் போல எனக்குக் கோபம் வருவதில்லை. இது புதுவித நோயோ எனக் கொஞ்சம் யோசனையாக இருக்கிறது

இது நோயில்லை லோஷன் '''முதிர்ச்சி''. இது நல்ல விஷயம்தானே.
இதைப்பற்றி யோசனை வேண்டாம். இது நீங்கள் இன்னும் நல்லவர் ஆகிக்கொண்டிருக்கிறீர்கள் என்பதற்ற்கான Symptom மட்டுமே!//

'இன்னும் நல்லவர்' //

ஆகா நன்றி சகோதரா :) இது போதும்.


====================

அப்பாவி said...

கோபம் வருவது கெட்டவர்களின் குணமா? #சந்தேகம்//

தேவையற்ற கோபமும், எல்லாத்துக்கும் கோபமும் தான் கெட்டவரின் குணம்.. கோபம் வரவேண்டிய இடங்களில் கோபம் வருவது நல்லவருக்கேயான குணம்.

ரௌத்திரம் பழகு

============================

துஷ்யந்தனின் பக்கங்கள் said...
முதல் முதல் உங்கள் ப்ளாக் பக்கம் வருகுறேன் அண்ணா,
ம்ம் அசத்தலான பதிவுகள்,
இனி அடிகடி வருகிறேன் அண்ணா//

நன்றி சகோதரா உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் :)

=================

lalithsmash said...

நீங்கள்தான் அப்பாவியாச்சே உங்களுக்கு எப்படி இது புரியும்.//

அப்படியில்லை லலித்.. சில அப்பாவிகளுக்கு எல்லாம் புரியும் ;)

இது நிஜ அப்பாவியா போலி அப்பாவியா தெரியலையே..

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner