மனப் பிரமை என்று நினைத்தால்.. ஒரு நிமிட இடைவெளியில் மறுபடி ஒரு தடவை.
தனியே இருந்து வேற பார்த்துக் கொண்டிருந்தேன்.. என்னடா இது ஏதாவது ஆவி-அமானுஷ்யமோ என்று பார்த்தால்..
அதற்குப் பிறகு எதுவும் இல்லை.
இது நடந்தது 12.55அல்லது ஒரு மணியளவில்.
ஆனால் போல ஊடகவியலாளரான நண்பர் விபுலன் தொலைபேசியில் அழைத்து சொன்ன பிறகு தான் விஷயமே தெரியும்.
கொழும்பில் நிலநடுக்கமாம்.
அடுக்குமாடிகளில் பெரியளவு அதிர்வு தெரிந்துள்ளது.
தெகிவளை,வெள்ளவத்தை,பம்பலப்பிட்டி பகுதிகளில் காலி வீதியில் மக்கள் பெரும் பதற்றத்தோடும் பயத்தோடும் திரண்டுள்ளார்களாம்.
மேலதிக விபரங்கள் இதுவரை தெரியவில்லை.
லேசான அதிர்வு தான்.
இலங்கையில் வேறு பகுதிகளில் எப்படி எனத் தெரியவில்லை.
அதன் பின் தான் செல்பேசியைப் பார்த்தால் ஒரு smsசில கள் வந்திருந்தன.. இந்த திடீர் அதிர்ச்சியைப் பற்றிக் கேட்டு..
What happened?
u felt a shook up?
Was it an earth quake?
Will Tsunami strike again?
இவை தான் வந்த பொதுப்படையான கேள்விகள்..
ஆனால் கொடுமை நான் அழைத்த சிலர் ஆழ்ந்த உறக்கத்தில்.அவர்களுக்கு எதுவுமே தெரியவில்லை.
சரிதான்.. உலக அழிவு நெருங்கி வருது போல..
சற்று முன்னர் காலநிலை அவதான மையத்தைத் தொடர்பு கொண்டால் அங்கும் டென்ஷனில் இருந்த ஒருவர் இலங்கைக் கரையோரப் பகுதியில் சிறு நிலா அதிர்வு ஏற்பட்ட விஷயத்தை சொன்னார்.
ஆனால் தொடர் அதிர்வுகள் இருக்காதென்றும் தாம் 'நினைப்பதாக' ஆறுதல் சொல்லியுள்ளார்.
So dont worry.. be happy.
10 comments:
நான் உணரேல... :(
//So dont worry.. be happy.//
அப்பாடா...:)))
இப்போது தான் கவனித்தேன். சென்னையிலும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.நிகழ்ந்த உடனேயே அன்புக்குரிய கேபிள் சங்கர் அண்ணர் இது பற்றிப் பதிவிட்டுள்ளார்.
http://cablesankar.blogspot.com/2010/06/blog-post_13.html
இந்த பதிவ பார்த்தபிறகுதான் எனக்கு தெரியவந்தது.. கும்பகர்ணனையும் மிஞ்சிட்டோமில்ல..
கவலை வேண்டாம்... ஆனால் எச்சரிக்கை தேவை...
அடுக்குமாடிகளில் இருந்தவர்கள்தான் அதிகமாக உணர்ந்துள்ளார்கள். இரவு கனவில் ஜெஸ்ஸிக்களைக் கண்டுகொண்டிருந்த எங்களைப்போன்றவர்கள் உணர்ந்தது வந்த தொலைபேசி அழைப்புக்களால் கனவு கலைந்ததால் இதயத்தில் ஏற்பட்ட சிறு அதிர்வு மட்டுமே :p
கணினியில் அமர்ந்து பதிவு போட்டுக்கொண்டிருந்த பொழுது உட்கார்ந்திருந்த நாற்காலி கிடு,கிடுவென ஆடியது.சட்டென பதறிப்போய் தூங்கிகொண்டிருந்த பையன் தான் எழும்பி வந்து நாற்காலியை ஆட்டுகிறானா என்று திரும்பினால் ஒருவரும் இல்லை.சரி பிரம்மையாக இருக்கும் என்று தொடர்ந்து வேலையில் மூழ்கி அடுத்த ஓரிரு நிமிடங்களில் மறுபடியும் அதே போல்...அப்பொழுதும் நிலநடுக்கத்தைப்பற்றிய ஞாபகமே வரவில்லை.காலையில் தினசரியைப்பார்க்கும் பொழுதுதான் தெரிகின்றது.சரி யாராவது இது பற்றி பதிவு போட்டு இருக்கின்றார்களா என்று கணினியை ஆன் செய்தால் உங்கள் பதிவு.இந்த பகுதியில் நிலநடுக்கம் வரைபடத்தில் zone-3 ல் உள்ளது.
எனவே பாதிப்பு ஏதும் வராதென்று நம்பி ஆறுதல் பட்டுக்கொள்வோம்.
உண்மையாவா????
இப்போது உலகின் எல்லா இடங்களிலும் பரவலாக நிலநடுக்கம் ஏற்பட்டு வருகின்றதை பார்த்தால் Global Warming Awareness Stageஐ எல்லாம் தாண்டி போய்விட்டோமோ என்று தோன்றுகிறது.
Read the today's top 20 tamil blogs on : WWW.SINHACITY.COM
Post a Comment