May 03, 2010

T 20 உலகக் கிண்ணம் 2010- என் பார்வை


54 போட்டிகள் பார்த்துக் களித்த/களைத்த பிறகு மீண்டுமொரு இருபது ஓவர் கிரிக்கெட் திருவிழா கரீபியன் தீவுகளில் ஆரம்பமாகியுள்ளது.

நேரவித்தியாசம் இந்தப்போட்டிகளை எம்மை சுவாரசியமாக ரசிக்கவிடாமல் செய்கிறது. அநேக போட்டிகள் இரவு 11 மணிக்கு ஆரம்பமாகின்றன. அதிகாலை 2.30க்கும் ஆரம்பமாகின்றன.

3வது உலகக்கிண்ணப் போட்டியில் 6 போட்டிகள் இப்போது நிறைவடைந்திருக்கின்றன.

எனினும் கடந்த இரு உலகக்கிண்ணங்கள் போலல்லாமல் இம்முறை இரண்டாம் சுற்றுக்கு முன்னதாகவே முதற்சுற்றிலும் கூட விறுவிறுப்பான எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் போட்டிகள் பல அமைந்திருக்கின்றன.

காரணம் கடைநிலை அணிகள் (Minnows) கூட இம்முறை மிக மோசமான, பலவீனமான அணிகள் எனக்கருதப்பட முடியாதவை.

பங்களாதேஷ் அணி இவ்வகையான குறுகிய ஓவர்கள் போட்டிகளில் ஜாம்பவான்களையும் மண்கவ்வச் செய்யும் வல்லமை கொண்டது.

நடந்து முடிந்த பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் கூட அஷ்ரபுல், ஷகீப் அல் ஹசன் ஆகியோர் ஆடுகளத்தில் இருந்தவரை போட்டியைத் தன் வசம் வைத்திருந்ததும், கடைசி இரு ஓவர்களிலேயே போட்டியை இழந்ததையும் நாம் ஞாபகப்படுத்திப் பார்க்கலாம்.

அதுபோல இந்தப்பிரிவு Aயில் கடந்த முறை பெறுபேறுகளுக்கமைய, அவுஸ்திரேலியாவே இறுதி அணியாக வகுக்கப்பட்டுள்ளது.(Seeded)

சிம்பாப்வே அணி இப்போது அசுரப்பசியோடும், அபார formஇலும் இருக்கிறது.

3 வாரங்களுக்கு முன்னரே மேற்கிந்தியத்தீவுகள் சென்று ஆடுகளங்கள், காலநிலை என்பவற்றைப் பரிச்சயப்படுத்திக்கொண்டு பெரிய அணிகளைக் காலை வாரிவிடக் காத்திருக்கிறது.

ஏற்கனவே இடம்பெற்ற இருபயிற்சி ஓட்டங்களிலும் பெருந்தலைகளான அவுஸ்திரேலியா, நடப்புச் சம்பியன் பாகிஸ்தான் ஆகியவற்றைத் தோற்கடித்து தம் வலிமையைக் காட்டியுள்ளது.

எனக்கென்னவோ இன்று இரவு இடம்பெறும் போட்டியில் இலங்கை அணியையும் சிம்பாப்வே தோற்கடித்தாலும் ஆச்சரியமில்லை என மனம் சொல்கிறது. காரணம் கரீபியன் களங்களுக்கேற்ற அணி வியூகம் இவர்களிடம் இருக்கிறது.

புதிய அணியான ஆப்கானிஸ்தானும், அயர்லாந்தும் கூட சளைத்தவையல்ல. பெரிய அணிகள் சற்றும் கவனக்குறைவாக இருந்தாலும் கவிழ்த்துவிடும் வல்லமையுடையவை.

இந்த நான்கு அணிகளுமே களத்தடுப்பில் சில பெரிய அணிகளை விடப் பல மடங்கு சிறந்தவை என்பது இன்னொரு முக்கிய விடயம்.

இப்போது வரை நடைபெற்ற போட்டிகளின் முடிவின்படி இந்தியா மட்டுமே உறுதியாக அடுத்த சுற்றுக்குத் தெரிவாகியுள்ளது.

இம்முறை கிண்ணம் வெல்ல வாய்ப்புள்ள (favourites) அணிகளாக முறையே அவுஸ்திரேலியா, தென் ஆபிரிக்கா, இந்தியா, இலங்கை என்பன வரிசைப்படுத்தப்பட்டன.

அவுஸ்திரேலியாவும், இந்தியாவும் சரி – நிரூபித்திருக்கின்றன.

தென் ஆபிரிக்கா, இலங்கை ஆகியன அரையிறுதியை அண்மிக்க மட்டுமல்ல, அடுத்த சுற்றுக்குத் தெரிவாகவும் தம் அணிகளில் சில பல டிங்கரிங் வேலைகளைச் செய்யவேண்டி இருக்கும்.

மேற்கிந்தியத்தீவுகளுக்கும் தமது ஆடுகளங்களில் போட்டிகளில் விளையாடுவதும், ரசிகர்களின் ஆதரவும் சாதகங்களாக இருந்தாலும் இவற்றை எப்படி முழுமையாகத் தமக்கு பலமாக்கிக்கொள்ளப் போகின்றார்கள் என்பது இன்றைய இங்கிலாந்துக்கெதிரான போட்டிகளிலேயே நிச்சயமாகத் தெரியும்.

பொல்லார்ட், பிராவோ, சமி, கெயில் போன்ற சகலதுறை வீரர்கள் தான் இவர்களின் துரும்புகள். ஆனாலும் மும்பை இன்டியன்ஸில் சச்சின் பொல்லார்டை நம்பிய அளவுக்கு, கெயில் நம்புகிறாரில்லை.

நியூசிலாந்து இலங்கையை வென்றிருந்தாலும் கூட, அந்த நெருக்கமான வெற்றி அவர்கள் மேல் நம்பிக்கையேற்படுத்துவதாக இல்லை.

இங்கிலாந்து 1992ம் ஆண்டு உலகக்கிண்ணப் போட்டிகளுக்குப் பின் முதற்தடவையாக ஒரு சர்வதேசத் தொடரிலே சவால்விடக்கூடிய அணியாகத் தெரிகிறது.
துடிப்பான கொலிங்வூட்டின் தலைமையிலே ஆக்ரோஷமான, போராடக்கூடிய அணியாக இங்கிலாந்து தென்படுகிறது.
போபரா, மோர்கள், யார்டி, லம்ப் என்று புது இளரத்தம் பாய்ச்சப்பட்ட அணி அரையிறுதி நோக்கிய வாய்ப்புடையது என்றே கருதுகிறேன்.


இதுவரை நடைபெற்ற ஆறு போட்டிகளில் நான் வியந்த, ரசித்த விஷயங்கள்

சுரேஷ் ரெய்னாவின் அபார, அதிரடி சதம்.

சர்வதேச T 20 போட்டிகளில் மூன்றாவது - இந்தியர்/ஆசியர் ஒருவர் பெற்ற முதல் சதம். உலக்கிண்ணத்தில் இரண்டாவது சதம்.

ஷேன் வொட்சன், டேவிட் ஹசி, மஹேல ஜெயவர்த்தன, சல்மான் பட், இம்ரன் அக்மல், அஷ்ரபுல், ஷகிப் அல் ஹசனின் அதிரடிகள்.

ஆப்கானிஸ்தானின் நூர் அலியின் அரைச்சதம் & இந்தியப் பந்துவீச்சாளருக்கு ஸ்டனிக்சாயின் சிக்ஸர்கள்.

நேஹ்ரா, ராம்போல், அயர்லாந்தின் டொக்ரல் ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சு.

முதல் நாள் இரு போட்டிகளையும் தத்தம் அணிகளுக்கு வென்று கொடுத்த சகலதுறைவீரர்கள் டரன் சமி & நேதன் மக்கலம்.

மக்கலம் : 1 விக்கெட், 16 ஓட்டங்கள் & 3 பிடிகள்
சமி : 3 விக்கெட்டுகள், 30 ஓட்டங்கள & 4 பிடிகள்



இன்னும் முக்கிய சுவாரஸ்ய விடயங்கள் பல இருந்தாலும், பதிவு நீளம் கருதி பகுதி 2 இல் (இன்று மாலையே) அவை பற்றித் தருகிறேன்.

பகுதி 2 இல் - ஆசிய அணிகள் - இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் பற்றியும் அவுஸ்திரேலியா பற்றியும்-


IPLஇலிருந்து இந்த உலகக்கிண்ணம் வேறுபடுவது பற்றியும் இதன் முக்கியத்துவம் பற்றியும் பார்க்கலாம்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு கிரிக்கெட் பதிவு போட்டிருக்கேன்ல-
ஒவ்வொரு வாக்கு எல்லாத் தளங்களிலும் குத்துறது-
குறைஞ்சா போயிடும்!

22 comments:

வந்தியத்தேவன் said...

ஹாஹா எனக்கு நேரவித்தியாசம் பெரிதாக இல்லை. இரவு 11 மணிக்கு முன்னர் மட்ச் முடிந்துவிடுகின்றது. தார்மீகக் கடவை ஆற்றிவிட்டேன்.

Bavan said...

அண்ணே, இந்தமுறை என்னமோ அவுஸ்திரேலியா, இந்தியா, மேற்கிந்தியா அந்த மூன்றில் ஒன்று ஜெயிக்கும் போல இருக்கிறது.

கூடுதலாக இந்தியா, அவுஸ்திரேலியா FINAL வந்தால் விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லை..

ஆனால் தொடர்ந்து T20களைப்பார்த்து சலிப்புத்தட்டி விட்டது. ஒன்றிரண்டு டெஸ்ட் போட்டிகள் பார்த்தால் ஒரு மாறுதல் கிடைக்கும் என்று நம்புகிறேன்.. ;)

ஜனநாயகக்கடமைகள் நிறைவேற்றியாச்சு..வர்ட்டா..;)

KANA VARO said...

குத்திறம் குத்துறம்... அட! வாக்கை சொன்னான்...

Unknown said...

அண்ணே ஐ.பி.எல் 60 போட்டி இல்லையா???

இலங்கை சின்னச் சின்னத் தப்பு செஞ்சிட்டாங்க நியுசியோட... இன்னைக்கி அதே தப்பைத் திரும்ப செஞ்சா சங்குதான்...

சனத்தையும் சங்கக்கர நம்ப மாட்டேங்குறார் போல இருக்கே.. எதுவும் உள்குத்திருக்குதா??

Anonymous said...

நீங்களும் அரசியல்வாதி மாதிரி. எல்லாம் one way. வாங்குறது மட்டும்தான். எப்பவாவது குடுத்திருக்கீங்களா? வாக்கைச்சொன்னேன்.

shan shafrin said...

20-20 போட்டிகளை பார்த்து பார்த்து சலிப்படைந்து விட்டது உண்மைதான்......
ஆனாலும் உலகக் கிண்ணத்தின் ஆரம்பமே அற்புதமாய் அமைந்ததுடன் போட்டிகளும் விறுவிறுப்பாய் அமைந்திருப்பதால்....... விழித்திருந்து பார்க்க முடிகிறது..... உலகக் கிண்ணத்திட்கு பிறகு IPL அமைந்திருந்தால் இன்னும் அற்புதமாய் உலகக் கிண்ணம் களை கட்டியிருக்கும்.....

Srinivas said...

it would be very nice if all matches are Day n night games... i.e
1st match should be at 12 - 3 :30 AM and 2nd match at 4 AM - 7:30 AM :)

Anonymous said...

ஒவ்வொரு வாக்கு எல்லாத் தளங்களிலும் குத்துறது-
குறைஞ்சா போயிடும்!

same question we have to ask from you too..

கன்கொன் || Kangon said...

ம் ம் ம்....

மஹேல கலக்குகிறார்....

இலங்கை இன்று இலகுவாக வெற்றி பெறும் போலுள்ளது.
ஆகவே சிம்பாப்வே நியூசிலாந்தை பெரிய ஓட்ட வித்தியாசத்தில் வென்றாலொழிய இலங்கையின் அடுத்த கட்டத்துக்கு ஆபத்தில்லை என்று நம்புகிறேன்.
நேற்று அவுஸ்ரேலியர்கள் அசத்தினார்கள், இந்திய அணியினர் நன்றாக விளையாடினார்கள்...

பார்ப்போம்...

அதுசரி,
இந்தப் பதிவுக்கு யாரய்யா மறைவாக்குப் போட்ட புண்ணியவான்?


nbavan7 mayooran dginnah maildhinesh eksaar Loshan vsvskn kanagagopi

இதற்குள் ஒருவரைத் தெரிவுசெய்யுங்கள்.... ;)
பவன், வந்தியண்ணா, லோஷன் அண்ணா, வாசகன் அண்ணா, கன்கொன் ஆகியோரை நான் அறிவேன். ;)
மறைவாக்குப் போடுவதாயின் ஏன் போடுகிறோம் என்று போட்டால் எழுதுபவர் திருத்திக் கொள்ள முடியுமல்லவா?

KANA VARO said...

400 followers!!!!!!!!!!

அகில் பூங்குன்றன் said...

ஜெயவர்தனே... பஞ்சாப்பின் கடைசி லீக் ஆட்டங்களில் பார்முக்கு வந்தார். டிராவிடுக்கு அப்புறம் கிளாசிக்கா ஆடுவதை பார்த்துட்டே இருக்கலாம்..

நீங்க IPL பத்தி எழுதுவீங்க எழுதுவீங்க ன்னு காத்துட்டு இருந்தவங்கள்லே நானும் ஒருத்தன்.....

நீங்க கிரிக்கெட் பத்தி எழுதினா மிக அருமையாக உள்ளது..

தமிழ் மதுரம் said...

வாக்குக் குத்தியாச்செல்லோ?

கிறிக்கட் பதிவு கில்லி!

Henry J said...

Unga blog romba nalla iruku.....


Free Download File Recovery | Data Recovery | Image Recovery Software
Free Slide Show & Gallery Makers
Learn Typing
CINEMA TICKETS BOOKING Online
Free youtube Video Download
Free Web Design
Free Indian Language Typing Tool
Type anywhere in your language | Google Transliterate | Microsoft Indic Language
Free Download Google Talk | Windows Live Messenger | Skype Messenger | Yahoo Messenger
Learn Basic Maths, Algebra, Trigonometry, calculus
Online Free Ebooks
Free Antivirus Download
Search Rooms, Apartments
Free Health Tips

INDIA 2121 said...

nalla ANALYSIS
visit my blog
www.vaalpaiyyan.blogspot.com
JUNIOR VAALPAIYYAN

ARV Loshan said...

வந்தியத்தேவன் said...
ஹாஹா எனக்கு நேரவித்தியாசம் பெரிதாக இல்லை. இரவு 11 மணிக்கு முன்னர் மட்ச் முடிந்துவிடுகின்றது. தார்மீகக் கடவை ஆற்றிவிட்டேன்.//

உங்களுக்கென்னப்பா.. நீங்கள் லண்டன் வாசிகள்.. விரும்பினால் நேரே போயி பார்த்து வருவீர்கள்..நாங்கள் அப்படியா?


=======================

Bavan said...
அண்ணே, இந்தமுறை என்னமோ அவுஸ்திரேலியா, இந்தியா, மேற்கிந்தியா அந்த மூன்றில் ஒன்று ஜெயிக்கும் போல இருக்கிறது.//

முதல் இரண்டு சரி.. மூன்றாவது?? கொஞ்சம் சந்தேகமே..



கூடுதலாக இந்தியா, அவுஸ்திரேலியா FINAL வந்தால் விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லை..//

அதே. என் கருத்தும் அதே..



ஆனால் தொடர்ந்து T20களைப்பார்த்து சலிப்புத்தட்டி விட்டது. ஒன்றிரண்டு டெஸ்ட் போட்டிகள் பார்த்தால் ஒரு மாறுதல் கிடைக்கும் என்று நம்புகிறேன்.. ;)//

அதை லாகூர்,நாக்பூரில் வைக்காமல் இருந்தால் சரி.. ;)



ஜனநாயகக்கடமைகள் நிறைவேற்றியாச்சு..வர்ட்டா..;)//

நன்றி வாங்க..

ARV Loshan said...

VARO said...
குத்திறம் குத்துறம்... அட! வாக்கை சொன்னான்...//

பார்த்து குத்துங்க.. மாறிப் பட்டிடப் போகுது.. அட நானும் வாக்கை சொன்னேன்..

==================

முகிலன் said...
அண்ணே ஐ.பி.எல் 60 போட்டி இல்லையா???//

ஆமாமா.. 59 போட்டிகள் என்பதே சரி..

இலங்கை சின்னச் சின்னத் தப்பு செஞ்சிட்டாங்க நியுசியோட... இன்னைக்கி அதே தப்பைத் திரும்ப செஞ்சா சங்குதான்...//

தப்பீட்ட்டாங்க.. :)



சனத்தையும் சங்கக்கர நம்ப மாட்டேங்குறார் போல இருக்கே.. எதுவும் உள்குத்திருக்குதா??//

அட ஆமாங்க.. ஏதோ நடக்குது.. பார்க்க ஏதோ மாதிரி இருக்கு.. இவர் ஓய்வெடுத்தா பரவாயில்லை போல இருக்கு

ARV Loshan said...

Anonymous said...
நீங்களும் அரசியல்வாதி மாதிரி. எல்லாம் one way. வாங்குறது மட்டும்தான். எப்பவாவது குடுத்திருக்கீங்களா? வாக்கைச்சொன்னேன்.//

நான் முழுக்கப் படித்து எனக்குப் பிடித்திருந்தால் கட்டாயம் போட்டிருக்கேனே.. நீங்க யாருன்னு தெரிஞ்சாத் தானே போட்டேனா இல்லையான்னு தெரியும்..
என்ன கொடுமையப்பா இது.. ;)


============

shan shafrin said...
20-20 போட்டிகளை பார்த்து பார்த்து சலிப்படைந்து விட்டது உண்மைதான்......
ஆனாலும் உலகக் கிண்ணத்தின் ஆரம்பமே அற்புதமாய் அமைந்ததுடன் போட்டிகளும் விறுவிறுப்பாய் அமைந்திருப்பதால்....... விழித்திருந்து பார்க்க முடிகிறது..... உலகக் கிண்ணத்திட்கு பிறகு IPL அமைந்திருந்தால் இன்னும் அற்புதமாய் உலகக் கிண்ணம் களை கட்டியிருக்கும்.....//

ம்ம்.. ICC எப்போதுமே BCCI க்கு பிறகு தானே.. ;)

ARV Loshan said...

Srinivas said...
it would be very nice if all matches are Day n night games... i.e
1st match should be at 12 - 3 :30 AM and 2nd match at 4 AM - 7:30 AM :)//

ம்ம் சொல்ல எல்லாம் நல்லாத் தானிருக்கும்..

==========

Anonymous said...
ஒவ்வொரு வாக்கு எல்லாத் தளங்களிலும் குத்துறது-
குறைஞ்சா போயிடும்!

same question we have to ask from you too..//

reply is already given above :)

ARV Loshan said...

கன்கொன் || Kangon said...
ம் ம் ம்....

மஹேல கலக்குகிறார்....


நேற்று அவுஸ்ரேலியர்கள் அசத்தினார்கள், இந்திய அணியினர் நன்றாக விளையாடினார்கள்...//

ஆம் நினைத்தது போல இலங்கை வென்றது ..ஆஸ்திரேலியா இன்று வெல்லப் போகிறது..




அதுசரி,
இந்தப் பதிவுக்கு யாரய்யா மறைவாக்குப் போட்ட புண்ணியவான்?


nbavan7 mayooran dginnah maildhinesh eksaar Loshan vsvskn kanagagopi

இதற்குள் ஒருவரைத் தெரிவுசெய்யுங்கள்.... ;)
பவன், வந்தியண்ணா, லோஷன் அண்ணா, வாசகன் அண்ணா, கன்கொன் ஆகியோரை நான் அறிவேன். ;)
மறைவாக்குப் போடுவதாயின் ஏன் போடுகிறோம் என்று போட்டால் எழுதுபவர் திருத்திக் கொள்ள முடியுமல்லவா?//

கேள்வியையும் கேட்டு பதிலையும் சொல்லும் இந்த வித்தையை உங்கள் குருவா கற்றுக் கொடுத்தார்? ;)

ARV Loshan said...

VARO said...
400 followers!!!!!!!!!!//

ஆமாம்.. நன்றி.. :)

===============



அகில் பூங்குன்றன் said...
ஜெயவர்தனே... பஞ்சாப்பின் கடைசி லீக் ஆட்டங்களில் பார்முக்கு வந்தார். டிராவிடுக்கு அப்புறம் கிளாசிக்கா ஆடுவதை பார்த்துட்டே இருக்கலாம்..//

உண்மை தான்.. இருவரும் கிரிக்கெட்டின் களை நயமிக்க துடுப்பாட்ட சிற்பிகள் :)



நீங்க IPL பத்தி எழுதுவீங்க எழுதுவீங்க ன்னு காத்துட்டு இருந்தவங்கள்லே நானும் ஒருத்தன்.....//

அந்த நேரம் கொஞ்சம் பிசி நண்பரே..



நீங்க கிரிக்கெட் பத்தி எழுதினா மிக அருமையாக உள்ளது..//

நன்றி நன்றி.. உங்க ஆதரவில் தான் உற்சாகம் பிறக்கிறது..

ARV Loshan said...

கமல் said...
வாக்குக் குத்தியாச்செல்லோ?

கிறிக்கட் பதிவு கில்லி!//

டபிள் நன்றிகள்..


=====================

henry J said...
Unga blog romba nalla iruku.....//

நன்றி ஹென்றி..


====================

VAAL PAIYYAN said...
nalla ANALYSIS
visit my blog
www.vaalpaiyyan.blogspot.com
JUNIOR வால்பைய்யன்//
வாங்க ஜூனியர்.. வாசித்தேன்..

3rdeye said...

Nallaathan analys panreenka..ennanduthan mudiyutho..
namakku ivalavum eluthave oru naal aahumae!!

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner