
நேற்று கலைஞர் ஐயா அவர்கள் (ரொம்ப மரியாதை கொடுத்துள்ளேன்)உண்ணாவிரதம் இருக்கிறார் என்ற உடனே யோசித்தேன் என்னடா இது ஏதாவது மிகப் பெரும் புரட்சி வெடிக்க போகுதோ என்று!
அவர் உண்ணாவிரதம் இருந்தவிதம் & பின்னணி பற்றி எல்லாம் பல வலைப்பதிவுகள்/பதிவர்கள் பின்னிப் பிளந்து,பிரிச்சு மேய்ந்து,கிண்டி கிழங்கெடுத்திருப்பதனால் அது பற்றி நான் எதுவும் சொல்லப் போவதில்லை.
கொஞ்ச நேரத்திலேயே பெரும் களேபரம் பரபரப்பு..
இலங்கையில் யுத்த நிறுத்தம்..
கலைஞர் உண்ணாவிரம் முடிவு..
என்று கலைஞர் டிவி பிரமாண்ட அறிவிப்பு.
(கலைஞர் உண்ணாவிரதம் முடிவு - இலங்கையில் யுத்த நிறுத்த அறிவிப்பு என்று எழுதினாலேயே சரியாக இருக்குமா?)
அப்படியா? என்று இங்கே இலங்கை அரசிடம் உத்தியோகபூர்வமாக விசாரித்தால் அப்படி எதுவுமே இல்லை.
என்னடா நடக்குது என்று பார்த்தால் இரண்டொரு மணிநேரத்துக்குப் பின்னர் கீழ் காணும் அறிவித்தல் வெளியானது.
பாதுகாப்பு நிலவரங்கள் தொடர்பாக சனாதிபதி செயலகம் இன்று வெளியிட்டுள்ள அரசாங்கத்தின் அறிக்கை வருமாறு:-
போர் நடவடிக்கைகள் அவற்றின் முடிவை எட்டியிருப்பதாக இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் கணரக ஆயுதங்கள் மற்றும் போர் விமானங்களை பயன்படுத்துவதையும் ஆகாயமார்க்கமான தாக்குதல்களை மேற்கொள்வதையும் முடிவுக்குக் கொண்டுவருமாறு பாதுகாப்புப்படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்புப்படையினர் பணயமாக வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை மீட்கும் நடவடிக்கைகளோடு தங்களது நடவடிக்கைகளை மட்டுப்படுத்திக் கொள்வதோடு பொதுமக்களின் பாதுகாப்பு விடயத்திற்கு மிகுந்த முன்னுரிமை வழங்குவர்.
போர் நடவடிக்கைகள் அவற்றின் முடிவை எட்டியிருப்பதாக இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் கணரக ஆயுதங்கள் மற்றும் போர் விமானங்களை பயன்படுத்துவதையும் ஆகாயமார்க்கமான தாக்குதல்களை மேற்கொள்வதையும் முடிவுக்குக் கொண்டுவருமாறு பாதுகாப்புப்படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்புப்படையினர் பணயமாக வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை மீட்கும் நடவடிக்கைகளோடு தங்களது நடவடிக்கைகளை மட்டுப்படுத்திக் கொள்வதோடு பொதுமக்களின் பாதுகாப்பு விடயத்திற்கு மிகுந்த முன்னுரிமை வழங்குவர்.
ஐயாமாரே - இது தான் உங்கள் பார்வையில்,உங்கள் விளக்கத்தில் யுத்த நிறுத்தமா?
கலைஞரின் உடன் பிறப்புக்கள் பலபேருக்கு – (பல பிரபல பதிவர்கள் உட்பட) இந்த உண்மையை சொன்னால் கோபம் வருகிறது!
யுத்த நிறுத்தம் என்பது வேறு - இந்த அறிவித்தல் வேறு!
கனரக ஆயுதங்கள் பயன்படுத்தாமலும் யுத்தம் நடத்தலாம் என்பது யுத்த சூழலுக்குள்ளேயே மூழ்கியுள்ள எமக்கு நன்கு அனுபவமானது!
'மக்கள் மீட்பு' நடவடிக்கை என்றால் என்னுவென்று இலங்கைப் பத்திரிகைகள்,இணையத்தளங்கள், செய்திகள் பார்த்து பகுத்தறிந்து கொள்ளுங்கள்!
இதையும் கொஞ்சம் வாசித்துப் பாருங்கள்..
தமிழ் தான் புரியவில்லை என்றால் கீழ்காணும் ஆங்கிலத் தளங்களில் இலங்கை அரசின் உத்தியோகபூர்வ அறிவித்தலை தயவுசெய்து வாசித்துப் பார்த்து விளக்கிக் கொள்ளுங்கள்.
No ceasefire in Sri Lanka - Military
Military spokesman Udaya Nanayakkara speaking to the Daily Mirror ascertained that the government has not declared a ceasefire. He clarified that only the use of heavy weapons and combat aircraft will be halted. His comment came after some International Media claimed that Sri Lanka has declared a ceasefire with the LTTE.
Further the Defence Ministry in a statement on its web site called the misinterpretation a 'Media illusionists' twist of the government statement.
More links:
உத்தியோக பூர்வமாக இலங்கை அரசு, அமைச்சு, இராணுவம் சொன்ன பிறகும் தெளிவில்லையா? இப்போது சொல்லுங்கள் நேற்று முழுவதும் 'இலங்கையில் யுத்த நிறுத்தம்' என்று வாய் கிழிய சொல்லிக் கொண்டிருந்த இந்திய ஊடகங்கள்,அமைச்சர்கள்,அரசியல்வாதிகள்,திமுகவினரை என்ன பெயர் கொண்டு அழைத்தல் தகும்? இவர்கள் முட்டாளாகினரா? அல்லது மக்களை முட்டாளாக்கினரா?
கலைஞர் ஐயாவின் அவசரத்துக்கு இலங்கை அரசு ஆறுதல் அறிவித்தலைக் கொடுக்காது என்பதை இனியாவது புரிந்து கொள்ளுங்கள்.
அமெரிக்கா, இங்கிலாந்து அரசுகளுக்கே Mind your own business சொன்னவர்களாயிற்றே நம்ம இலங்கை அரசினர்.. கலைஞர் ஐயா (இலங்கையின் பார்வையில் ஐவரும் ஒரு அரசியல் கோமாளியே தான்) எம்மாத்திரம்..
இப்படி ஏதாவது சொல்லப்போனால் -
ஜெயலலிதா வருவார் உங்களுக்கு கேட்பதெல்லாம் தருவார் என்று முத்திரை குத்தவும் ஒரு 'முழுக்கத் தெரிந்த' புத்திஜீவி கூட்டம் கண்ணுக்கு விளக்கெண்ணெய் விட்டுக் கொண்டு காத்துக் கொண்டிருக்கிறது என்றும் எனக்குத் தெரியும்!
எனக்கென்றால்(எம்மில் பலருக்கும் தான்) இந்தியா தமிழக அரசியல்வாதிகள் மீது நம்பிக்கை போய் எவ்வளவோ காலம்.
ஏதோ நடத்துங்க... நடத்துங்க...
ஆனால் எம்மையும் - தமிழக அப்பாவிகளையும் (அப்பாவி போல் நடிப்பவர்களையல்ல) இளிச்சவாயர்கள் என்று நினைத்து ஏமாற்றி விடலாம் என நினைக்காதீர்கள்!
இது தமிழக அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல.. சில வால் பிடிக்கும் பதிவர்களுக்கும் சேர்த்து தான்.. பூனைகள் கண்களை மூடிக் கொண்டால் எங்கள் உலகங்கள் இருண்டுபோவதில்லை..
52 comments:
நல்லா சொன்னீங்க லோசன்...
நம்பி நம்பி நட்டாற்றில் மூழ்கி கொண்டு இருக்கிறோம்...
தமிழ் ஈழ நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் இந்திய தமிழக அரசியல் வாதிகளின் பேச்சு செயல் அனைத்தும் ஒட்டு வங்கியை எதிர்பார்த்தே நடக்கிறது. இதில் நீங்கள் மட்டுமல்ல தமிழர்களாகிய நாங்களும் ஏமாந்து கொண்டுதான் இருக்கிறோம் வேறு வழியில்லாமல்
அடிவருடிகள் இந்நேரம் கணைகளை தயார் செய்திருப்பார்கள் ...
ஜெயலலிதா விட்ட ஒரு அறிக்கை , கழக அடிமைகளை தூங்க விடாமல் செய்திருக்கிறது. அவர்கள் பயம் என்னவென்றால் இனிமேல் ஈழத்தை வைத்து பிழைப்பு நடத்த முடியாதே என்பதுதான். ஈழ த்தை வைத்து கருணாநிதி நடத்திய ஈன பிழைப்பு நடுத்தெருவுக்கு வந்து விட்டது.
நண்பர் லோஷன் அவர்களுக்கு
உங்களது வலைப்பதிவுகளை நீண்ட காலமாக தொடர்ந்து படித்து வருகிறேன் இதுவரை கருத்து பதிந்தது இல்லை . . காரணம் புரியவில்லை நீங்கள் குறிப்பிடும் பல காரியங்களில் அல்லது கருத்துகளில் ஒன்றி விடுவது அல்லது ஒத்து போவது கூட காரணமாக இருக்கலாம். மேலும் அதிகமாக நீங்கள் விளையாட்டை பற்றி விளையாட்டாக எழுதினாலும் பல நேரங்களில் இது போன்ற சம்பவங்களை விளக்கும் போது நிமிர்ந்து நின்று விடுகிறீர்கள்.
வாழ்த்துக்கள் . .
இலங்கை போர் நிறுத்தம் என்ற செய்திகள் பல ஊடகங்களில் உலா வந்த போதும் உமது பதிவுக்காக காத்திருந்த பலரில் நானும் ஒருவன். இச்செய்தி மட்டுமல்ல பல செய்திகளையும் உமது பதிவில் படித்து உறுதி செய்யவே முனைகிறேன் . . சில சமயங்களில் அது இயலாமல் போனதும் உண்டு. காரணம் நானும் அறிவேன் (நீர் தப்பி பிழைத்த அந்த கார் பயணம் என்னை பதற வைத்த ஒன்று . இனி அதுபோன்ற நிகழ்வு நடக்காது இருக்க இறைவனை பிராத்திக்கிறேன்)
சரி விசயத்துக்கு வருவோம், கருனாநிதி தான் போரை நிறுத்தினார் என்றளவில் செய்திகளை பரப்பும் தமிழக ஊடகங்களையும் இல்லை என்று பல காரணங்களை அடுக்கும் எதிர் தரப்பு அரசியல் வாதிகளையும் என்ன செய்ய என்று நான் சிந்திக்கவில்லை . . .
அடிபட்டு ஒதுங்கிவிட்டதாக ஊடகங்கள் செய்தி பரப்பும் நிலையில் போர் நிறுத்தம் என்பது குறைந்த பட்சம் ஒரு ஓய்வாக இருக்குமே என்பதும் அந்த இடைவெளியில் ஏதேனும் செய்ய முடியுமா என்பதும்தான் எனக்கு தெரியவேண்டியது.
போர் நிறுத்தம் இல்லை என்ற நிலையில் இனி வெட்கம் கெட்ட இந்திய அரசு என்ன செய்யும் என்பதை கவனிக்க வேண்டும் காரணம் இலங்கையில் போர் நிறுத்தம் என்பது இந்திய அரசின் செய்தியாக இருக்குமே ஆனால் இந்திய அரசின் அவமானத்திற்கு அது ஒரு சான்றாக அமையுமே. அதனால் இனி இந்திய அரசின் நடவடிக்கை எப்படி இருக்கும் மேலும் பிரபாகரனை ஒப்படைப்போம் என்ற நரியின் வார்த்தைகளை நம்பி இன்னும் இந்தியா ஏமாறுமா . . . .
இப்படி பல கேள்விகள் இருந்தாலும் உங்கள் பதிவில் மறைமுகமாக நீங்கள் சுட்டிகாட்டும் பல விடயங்களை கவனித்து வருகிறேன் . . இன்னும் பல செய்திகளை எதிர்பார்த்து காத்திருக்கும் . .. தமிழன்
லோசன் அண்ணா போர் நிறுத்த்ம் முழுமையாக இல்லை என்றாலும்
தீவிரம் குறைந்துள்ளதா ?இல்லையா..?
போட்டுத்தாக்கு மாப்ளே...! நேற்று உண்ணாவிரதம் கைவிட்டதான அறிவிப்புக்கு பின்னர் 'மூஞ்சி புத்தகத்தில்' ஒருவர் போட்டார், "எண்ட தெருவ்வின் சொறி நாய்க்கு கருணாநிதி என்று பெயர் மாத்தியுள்ளேன்". ஹாஹாஹாஹா. DailyMirror இணையம் Karuna-Nidhi என்று படுத்திருக்கும் படத்தை போட்டது. Nidhi - சிங்களத்தில் நித்திரை. கேவலம் சிங்களவர்களுடன் நாமும் இதில் சேர்ந்து பொளந்து கட்டும் அளவிற்கு மாற வைத்து விட்டார்.
அருமையான பதிவு லோஷன்.
"எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே" என்ற பாடல் தான் நினைவுக்கு வருகிறது, போலி வேஷம் போடும் இந்திய அரசியல்வாதிகளை பார்க்கும் போது.
What u hav told is right.
உண்மையை உறைக்கிற மாதிரி சொல்லியிருக்கிங்க லோஷன் அண்ணா. நாணும் இந்தச்செய்தி கேள்விப்பட்டவுடன் கேட்ட கேள்வி இது உண்மையா! யார் சொன்னா!! என்னுதான். இங்கு சுவிஸ்வாழ்தமிழர் ஒரு சிலரிடம் பேசியபோது பெருமூச்சுடன் மகிழ்ச்சி அடைந்ததை உணரக்கூடியதாக இருந்தது. என்ன செய்வது தமிழர்க்கு இதுவரைக்கும் பெருமூச்சு மட்டும்தான் மிஞ்சியிருக்கு.என்னடா சர்வதேசத்துக்ககே நீங்க சொன்னமாதிரி Mind your own business சொன்வங்க எப்படி ஒத்துக்கிட்டாங்க என்னு ஒரு டவுட் அப்பவே வந்தது.யுத்த நிறுத்தம் உண்மையில் மகிழ்சியான செய்திதான் என்னபண்ன. இலங்கைத்தமிழரின் அவலத்தில் அரசியல் லாபம் தேடத்தான் இத்தனை கூத்தும் என்னு எங்களுக்கு தெரியும். ஒரு கவலை தழிழரின் உண்மை உணர்வை சிதைத்து இவர்கள் ஓட்டுகளாக்க முயற்சிப்பதே.
"எனக்கென்றால்(எம்மில் பலருக்கும் தான்) இந்தியா தமிழக அரசியல்வாதிகள் மீது நம்பிக்கை போய் எவ்வளவோ காலம்."
நல்லா சொன்னீங்கள் இவர்களை நம்பி ஏமாற நாங்கள் என்ன முட்டள்களா? ஒரு கேவலமான பிறவிகள் இவர்கள்.
Dear Mr. Loshan,
I don't understand...why do you expect India and Tamilnadu to help srilankan tamils.
All the lankan Tamils...sitting in abroad...and blaming Indian politicians...why don't they go to their country and fight for Tamil Eeelam. First of all none of the Srilankan Tamil can answer about the so many Tamil groups who fought among thmeselves and killed so many fellow Tamilians. First let them understand the srilankan issue properly. All these people went abroad, earned few dollars and now they are funding...Indian Tamils are the only people who are funding for more than 30 years...There is no group in Srilanka without the help of Tamil Nadu...
Please stop blaming Tamil Nadu or Karunanidhi. Everyone is writing as if Karunanidhi has done a big mistake in his life. Poor old man does not know how to handle and making all these drama.
I have always seen Srilankan Tamils making Indian Tamils...'Ilichavayarkal'....Srilankan Tamils are stimulating 'Ina unarvu' and playing with that...they will use Indian Tamils for every benefit of them and balme Tamil Nadu(and Tamils in India) for the remaining things. somewhat very thankless!
Dear Mr. Loshan...I can tell you so many things...it may look odd and I am also a Tamilian.
A common man from Tamil Nadu
தமிழ் தான் புரியவில்லை என்றால் கீழ்காணும் ஆங்கிலத் தளங்களில் இலங்கை அரசின் உத்தியோகபூர்வ அறிவித்தலை தயவுசெய்து வாசித்துப் பார்த்து விளக்கிக் கொள்ளுங்கள்.////
இவனுங்க நடத்துற நாடகத்தை ஆங்கிலத்தில் வேற படிக்கனுமா...
Dear Mr. Loshan,
Please publish my comments. I am not biased by anything. It will be helpful for other srilankan tamils to understand.
A common man from Tamil Nadu
எங்க தலைவரோட வெற்றி தான் கடைசி போட்டோல தெளிவா தெரியுதே, அதுக்காவது சந்தோசப்பட வேண்டியதுதான்!!!
ஆறில இருந்து 12 வரைக்கும் உட்காந்து கூட இருக்க முடியல இந்த மூதேவிக்கு... படுக்கை பக்கத்தில பொண்டாட்டி தேவை படுத்து
To anonymous (A common man from Tamil Nadu): You should understand the situation first. You have no idea how hard we are trying to stop the genocide against tamils.
If you are following the SL situation then you should know that we are not just asking India/tamil nadu for help, also other countries. I personally think that it is not about tamilians. It doesn't matter where you from, how you look and whether you are tamil/not. As a human, we shouldn't let this happen...
One more thing, If India (Tamil Nadu) don't want to help us then why can't they just shut their mouth and sit back..why making big dramas???
Let me tell you again, if you are happy to sit back and watch people dying then go ahead....Don't make unnecessary comments..
ஐயா ,
தமிழ் நாட்டில் ஒரு சிலரே ஈழ பற்று இருக்கிறது.
நம்ப ஊரில் “படித்த முட்டாள்கள்” அதிகம்.
ஒரு வகையினர் என்ன தான் படித்து இருந்தாலும் தனது கட்சியை கட்டிய பிடிதிருகிரர்கள்.
ஒரு வகையினர் என்ன தான் படித்து இருந்தாலும் “அரசியல் வேணாம் ப்ளீஸ்” என்று புத்திசாலியா ஒதுங்கி கொள்கிறார்கள்.
மற்றொரு வகையான அதி புத்திசாலிகள் “நோ ஐடியா” என்று ஒதுங்கி கொள்கிறார்கள்.
( இந்த படித்த முட்டாள்கள் என்று தமிழன் என்ற உணர்வு வருகிறதோ அதுவரை ஒன்னும் செய்ய முடியாது ஐயா )
இலங்கை அரசை யுத்தத்தை நிறுத்த சொல்லும் எவரும் விடுதலைப் புலிகளை மக்களை விடுமாறு கோருவதில்லையே ஏன்? பதிவர்கள் உட்பட.
விடுதலைப் புலிகள் மக்களைத் தாக்கும் ஒளிக்காட்சிகளைப் பார்த்த பின்பு கூட தைரியமாக எழுத முடியாமைக்கு என்ன காரணம்?
யதார்த்தத்தை எழுதுபவர்கள் கதைப்பவர்கள் துரோகிகள் என முத்திரை குத்தப்படுகிறார்கள்.
தமிழீழம் பற்றி இனி கதைத்து என்ன பிரயோசனம்?
விடுதலைப் புலிகள் பலமாக இருந்த போது பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தால் நாம் உரிமைகளை சலுகைகளை கேட்டுப் பெற்றிருக்கலாம். இனி அரசாங்கம் தருவதை ஏற்றுக் கொள்ள வேண்டியது தானே???
ஐயா ,
தமிழ் நாட்டில் ஒரு சிலரே ஈழ பற்று இருக்கிறது.
நம்ப ஊரில் “படித்த முட்டாள்கள்” அதிகம்.
ஒரு வகையினர் என்ன தான் படித்து இருந்தாலும் தனது கட்சியை கட்டிய பிடிதிருகிரர்கள்.
ஒரு வகையினர் என்ன தான் படித்து இருந்தாலும் “அரசியல் வேணாம் ப்ளீஸ்” என்று புத்திசாலியா ஒதுங்கி கொள்கிறார்கள்.
மற்றொரு வகையான அதி புத்திசாலிகள் “நோ ஐடியா” என்று ஒதுங்கி கொள்கிறார்கள்.
( இந்த படித்த முட்டாள்கள் என்று தமிழன் என்ற உணர்வு வருகிறதோ அதுவரை ஒன்னும் செய்ய முடியாது ஐயா )
Dear Friends,
An Exclusive Interview with South Chennai MP Candidate Mr. E. Sarathbabu Founder & CEO, FOODKING, Alumni IIM Ahmedabad & BITS, Pilani , Pepsi MTV Youth Icon 2008, Honorary Rotarian Dist. 3201
To Read in Tamil Click Below
50வது பதிவு ~சக்கரை ~ ஸ்பெஷல் - சரத்பாபுவின் கேள்வி பதில் பேட்டி - தமிழில்
To Read in English Click Below
50th Special Post - Exclusive Interview with Sarathbabu in English - Sakkarai's Special
Forward to All your Friends, Ask them to Vote for Sarath Babu in South Chennai on " SLATE" on May 13th for more info visit www.sarathbabu.co.in
Thanks - Suresh
LET’S CHANGE NOW!
இவங்க எல்லாம் எங்க நண்பா திருந்த போறாங்க
ஆட்டை கடிச்சு மாட்டை கடிச்சு கடைசியிலே நம்மவர்களையும் கடிக்க வெளிக்கிட்டினம் இந்திய அரசியல் வாதிகள் :-(
nanri loshan.
muthalil intha kedu ketta inthiya vagujana oodagangalai olikkaveendum.
manasatchi illatha oodagngal.
mathi
singapore
சரியாக சொன்னீங்க,
ஜெ தனி ஈழம் என அறிவித்தவுடனேயே இப்படி ஏதும் நடக்கும் என எலோரும் எதிர்பார்த்தது தான்.
மக்களை முட்டாளாக்குவது தான் இவங்க வேலை.
ஈழ தமிழர் இந்தியாவை நம்புவதை விட்டு பல காலம் ஆகிவிட்டது.
அதற்காக தமிழ் நாட்டு மக்களின் போராட்டங்களை மறக்கமுடியாது.
மூத்த பதிவர் பற்றி எல்லோரும் தெரிந்தது தானே,
தான் கண்ணை மூடிக்கொண்டு இருந்து மற்றவர்கள் மூடியிருப்பதாக கேலி வேறு.
சும்மா சொல்ல கூடாது. நல்லாவே கொதித்து போய் இருக்கிறார்.
ஒரு நாளைக்கு 2 நக்கல் பதிவு வேற.
இவங்க நல்லா உண்ணாவிரதம் இருக்கட்டும், யார் வேண்டாம் என்றது.
ஆனால் எம்மை முட்டாளாக்க வேண்டாம்.
அரசியலுக்கு வருவதற்கு என்னவும் செய்வார்கள்.
ஆனால் எம்மை அதற்கு பயன்படுத்தாமல் விட்டால் சரி.
எந்த ஈழதமிழரும் இப்போது இவரது நாடகத்தை நம்ப தயார் இல்லை.
இத்தனை வருடமாக எத்தனையோ உயிர்களை பலிகொடுத்துள்ள
எம்மை பார்த்தா அவருக்கு கேனையனாக தெரியுது போல.
//தமிழ் வெங்கட் said :
லோசன் அண்ணா போர் நிறுத்த்ம் முழுமையாக இல்லை என்றாலும்
தீவிரம் குறைந்துள்ளதா ?இல்லையா..? //
உங்களுக்கு போர் என்றால் என்ன என்பது தெரியாததாலேயே இப்படி கதைக்கிறீர்கள்.
அது உங்கள் பிழை இல்லை.
விமானம் பயன் படுத்தமாட்டார்களாம்.
அவர்கள் multi barrel(ஒரு தடவையில் 80 குண்டுகள்)பயன் படுத்தும் போது அதைவிட உக்கிரம் இருக்க முடியுமா?
அது தான் ndtv தலையை பிடித்தவுடன் நேரடி ஒளிபரப்பு செய்ய முல்லைதீவில் காத்துகொண்டு இருக்கிறார்களாம்.
அவர்களுக்கே இது காமடியாய் இல்லை.
ஒருவேளை வீரப்பன், சதாம் போல தலையையும் யோசித்துவிட்டார்களோ.
லோஷன் சாட்டையடிப்பதிவு. சில அல்லக்கை பதிவர்களின் கருணாநிதி விசுவாசமும் காங்கிரஸ் மோகமும் படிக்கபடிக்க ஆத்திரம் தான் வருகின்றது. சுய அறிவற்றவர்களாக இருக்கின்றார்கள். இலங்கை அரசே யுத்த நிறுத்தம் இல்லையென்று கூறுகின்றது ஆனால் இவர்களே தங்கள் டலைவனால் யுத்தம் நிறுத்தப்பட்டுவிட்டது கிழச் சிங்கத்தின் கர்ச்சனைக்கு இலங்கை அரசு பணிந்துவிட்டது என டலைவன் பாணியிலே காமெடி செய்கின்றார்கள். வடிவேலுக்கு போட்டியாக எத்தனை காமெடியன்கள்.
///"""இலங்கை அரசை யுத்தத்தை நிறுத்த சொல்லும் எவரும் விடுதலைப் புலிகளை மக்களை விடுமாறு கோருவதில்லையே ஏன்? பதிவர்கள் உட்பட.
விடுதலைப் புலிகள் மக்களைத் தாக்கும் ஒளிக்காட்சிகளைப் பார்த்த பின்பு கூட தைரியமாக எழுத முடியாமைக்கு என்ன காரணம்?""""////
பலர் விடுதலைப்புலிகள் மக்களை பிடித்து வைத்திருக்கிறார்கள் அதனால் தான் இவ்வளவு மக்கள் இறக்கின்றார்கள் என்று கூறிக்கொண்டே இருக்கிறார்கள். இந்த வெங்காயங்களைப் பார்த்து ஒரே ஒரு கேள்வி கேட்க ஆசைப்படுகின்றேன் முடிந்தால் பதிலளியுங்கள்.
சரி ஒரு பேச்சுக்கு வீடுதலைப்புலிகள் மக்களை பணயக்கைதிகளாக வைத்திருப்பது உண்மை என வைத்துக்கொள்ளுங்கள்.
பல நாடுகளில் (இந்தியா உட்பட) தீவிரவாதிகளால் மக்கள் பணயக்கைதிகளாக பிடித்த வைத்திருந்தபோது அந்த நாட்டு அரசாங்கங்கள் என்ன செய்தது. தீவிரவாதிகள் அவர்களை விடவில்லை என்ற காரணத்துக்காக மக்களையும் தீவிரவாதிகளையும் சேர்த்து ஒன்றாக அழித்தார்களா என்ன?. என்ன நடந்தமு என்று அனைவருக்குமே தெரியும்.
நீங்கள் என்ன செய்கிறீர்கள் அவர்கள் விடவில்லை அதனால் எல்லோரையும் அழிக்கின்றோம் என்கிறீர்களே என்னய்யா நியாயம் இது?
நயவஞ்சக பீலா விட்டு பிலிம் காட்டி சிங்களவனின் தோலில் செருப்பு தைத்து போடுவோம் என்று இனவாத வீரவசனம் பேசி இருபத்தையாயிரம் பிள்ளைகளை மாவீரர் என்று புதைத்தும் இருபதினாயிரம் தமிழரை துரோகிகள் என்று மண்டையில் போட்டும் நாலாயிரம் மாற்று இயக்க விடுதலை போராளிகளை கொன்று குவித்தும் லட்சக்கணக்கான முஸ்லீம்களை அவர்களின் சொத்துக்களை பறித்து அவர்களின் பூர்வீக பூமியிலிருந்து அகதிகளாக கலைத்தும் தமது கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில் இருந்தவர் ஆமாபோட மறுத்து வித்தியாசமாக கதைத்தால் மண்டையில் போட்டும் எங்கேயாவது போவது என்றால் பிணைக்கு ஒரு ஆளை வைத்து பாஸ் எடுத்து போகவேண்டிய சுதந்திரம் அத்தனையும் பறிபோன நிலையில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டு தமிழருக்கு வடக்கு கிழக்கு இணைந்த தீர்வை கொண்டு வந்து உதவ வந்த ஆயிரக்கணக்கான இந்தியப் படைகளை கொன்றும், உதவ வந்த ராஜீவ் காந்தியையும் ஆயுதமாகவும் பணமாகவும் அள்ளிக்கொடுத்து உதவிய பிறேமதாசாவையும் கொன்றும் இன்று தமிழ் மக்களை பிள்ளைகளையும் சொத்து சுகங்களையும் இழந்து நிர்க்கதியான நிலைக்கு உள்ளாகி விட்டு முப்பது வருசமாக இவர்கள் நடாத்திய பொய் பீலாக்கள் பிசுபிசுத்து புஸ் வானமாகி முழு புலுடாவாக ஆகி விட்டது.
தமிழருக்கு பிரபாகரன் நல்லாய் கேம் குடுத்திட்டார்-கேம் ஓவர்
அருமையான பதிவு EXCELLENT
To Ananymous...
/we are not just asking India/tamil nadu for help, also other countries./
But, you are not blaming other countries. When the other countries do nothing, you people keep quiet! Srilankan Tamils were not even given permission for strike in some countries and you are keeping quiet in those countries.
/Let me tell you again, if you are happy to sit back and watch people dying then go ahead....Don't make unnecessary comments../
Thats why everyone in Tamil Nadu is trying to do something! if you call this as drama....I should call all the strikes conducted by Srilankan Tamils in Europe is a Drama. I konw how many Srilankans are serious about it. Since, they all live happily due to this issue, they do something in return. Go and shout in the public as those countries are very humanitarian.
The Srilankan people who are poor and have no support from their relatives in abroad are only left out and suffering.
How can you stop the war/genocide when you continue to fund those organisation?
To another anonymous....
/Tamil nattil oru silaruke eela pattru irukiradhu/
Please see the above...None of the Srilankans in abroad have eela pattru...none of them will go back to their country even if the issue is over.
Why we(tamil nattu makkal) should have eela pattru....First, Tamils of Sri lanka should learn to respect others!
- A common man from Tamil Nadu
ஈழத்தவர்களின் அவல நிலைக்கு வைகோ, கருணாநிதி, ஜெயலலிதா, சோனியா காந்தி என்று யாருமே காரணமில்லை.
புலிகள் மட்டுமே முழுக்க முழுக்க காரணம்.
வைகோவையும் கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் நம்பியா புலிகள் போர் நடத்திக்கொண்டிருந்தார்கள்? இன்று கைவிட்டுவிட்டார்கள் என்று அழுவதற்கு?
வெற்றிபெற்றிருந்தால், காரணம் வைகோ, கருணாநிதி, ஜெயலலிதா என்று சொல்வார்களா? அப்போது தோல்வியுறும்போது ஏன் கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் வைகோவையும் காரணம் காட்டவேண்டும்?
அல்ஜஜீரா தொலைக்காட்சியில் புலிகளிடமிருந்து தப்பிவந்த ஈழ மக்களை பேட்டிகண்டார்கள். ஐநாவும் இலங்கை அரசாங்கமும் இலவசமாக அளித்த உணவுப்பொருட்களை கூட அதிக விலைக்கு அந்த மக்களிடமே விற்று காசு பண்ணினார்கள் புலிகள். அந்த விலை கொடுத்து வாங்க முடியாதவர்கள் பட்டினி கிடந்தார்கள்.
வெளியேறியவர்களை சுட்டார்கள். வெளியேற விரும்பியவர்கள் மிரட்டப்பட்டார்கள். சிறு குழந்தைகளை கூட விடாமல் பிடித்துச்சென்று ராணுவத்துடன் மோத தூக்கமுடியாத துவக்குகளை கொடுத்து போர்முனைக்கு அனுப்பினார்கள். வெளியே வந்தவர்கள் யாரோ முன்பின் தெரியாத பத்திரிக்கையாளர்களிடம் கதறுகிறார்கள்.
இவர்களை காப்பாற்ற என்ன அவசியம் கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் சோனியாவுக்கும்?
அங்குள்ள மக்களை காப்பாற்றவேண்டும். புலிகளை அல்ல. ஆகவே அந்த மக்களை வெளியே விடும்படி புலிகளை தமிழர்கள் நிர்பந்திக்கவேண்டும். அதுவே இன்று தமிழர்களின் நலம் விரும்பிகள் செய்யவேண்டியது? புலிகளையோ புலித்தலைமையையோ காப்பாற்ற அல்ல.
புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
வணக்கம் லோஷன் அண்ணா!!!
இவங்களை திருத்தவே முடியாது...
ஏங்க.. "சன்"ம் , "கலைஞர்"ம் நிலாவில் தமிழீழம் அமைக்கப்படும் என்றால் கூட நம்புற கூட்டமைய்யா....
அவிங்க போர்நிறுத்தம் (டி.வி பொட்டிக)என்னு சொன்னா அது தான் உண்மை....நம்புங்க அத விட்டுட்டு இப்பிடியெல்லாம் எழுத கூடாது.....
நாங்க மாறமாட்டம்
போரின் தீவிரம் குறைந்து விட்டதா என்று கேட்ட வெங்கட் தம்பிக்கு ,
போரின் தீவிரம் குறையவுமில்லை.,போர் நிறுத்தம் வரவுமில்லை.
கனரக ஆயுதங்களை முன்பு போல் பயன்படுத்துவதை நிறுத்தவுமில்லை.
வழக்கம் போல் வான் குண்டு பீரங்கி மூலம் ஷெல் எல்லாம் விழுந்துகொண்டுதான் இருக்கிறது கடந்த இரண்டு நாட்களாக நூற்றுக்கு மேல் மக்கள் இறந்துதான் இருக்கிறார்கள்.
தமிழ் நாட்டுப் பொதுமகன் என்று கூறிய அனானிக்கு
கலைஞர் நடத்தியது நாடகம் என்றால் ஐரோப்பாவில் தமிழர்கள் நடத்திய போராட்டம் நாடகமா என்று கேட்டுள்ளீர்கள்
ஐரோப்பா கனடா பிரித்தானிய அவுஸ்திரேலியாவில் போராட்டம் நடத்துபவர்கள் அரசியல்வாதிகள் இல்லை.முகம் தெரியாத சாதாரண பொதுமக்கள் அதைச் செய்கிறார்கள்.அவர்கள் தேர்தல் ஒன்றைக் குறிவைத்தோ அல்லது தேர்தலில் தோற்கப் போகின்றோம் என்ற பயத்திலோ இதைச் செய்யவில்லை.தங்கள் சொந்தங்கள் மேல் உள்ள அக்கறையால் அவற்றை சலிக்காமல் செய்கிறார்கள்.
மிகவும் அருமயாகவுள்ளது
A very good article loshan anna..bt b careful about writing these stuffs..என்னதான் சொன்னாலும் தூங்கிறவன எழுப்பலாம் ஆனா அப்படி னடிக்கிறவன ம்ஹும்..
Regards
KK
உண்மை நிலவரத்தை வெட்ட வெளிச்சமாகியதற்கு பாராட்டுகள்.
தேர்தல் முடியும் வரை தமிழக அரசியல்வாதிகளின் ஈனச் செயல்களை ஈழத்தமிழர்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்பதைத் தவிர வேறொன்றும் சொல்லத் தெரியவில்லை
:(
லோஷன்
இவங்கட நாடகம் எல்லாம் இந்தியா தேர்தல்கள் முடியும்வரைதான் அதன் பின்பு இந்த நடிப்புக்கு தேவை இருக்காது
good job loshan keep it up...
Making fun of Tamilnadu politicians is a enjoyable hobby for Srilankan tamils!By the way few years ago Anton Balasingam(no one talks about him and his habits now)paid a glowing tribute to MGR and how he gave lots of money to LTTE and helped them.May be that was a joke too!I can understand the frustrations,of an ordinary tamil from Tamilnadu feels about the true tamils of Srilanka
Making fun of Tamilnadu politicians is a enjoyable hobby for Srilankan tamils!By the way few years ago Anton Balasingam(no one talks about him and his habits now)paid a glowing tribute to MGR and how he gave lots of money to LTTE and helped them.May be that was a joke too!I can understand the frustrations,of an ordinary tamil from Tamilnadu feels about the true tamils of Srilanka
//பலர் விடுதலைப்புலிகள் மக்களை பிடித்து வைத்திருக்கிறார்கள் அதனால் தான் இவ்வளவு மக்கள் இறக்கின்றார்கள் என்று கூறிக்கொண்டே இருக்கிறார்கள். இந்த வெங்காயங்களைப் பார்த்து ஒரே ஒரு கேள்வி கேட்க ஆசைப்படுகின்றேன் முடிந்தால் பதிலளியுங்கள்.
சரி ஒரு பேச்சுக்கு வீடுதலைப்புலிகள் மக்களை பணயக்கைதிகளாக வைத்திருப்பது உண்மை என வைத்துக்கொள்ளுங்கள்.
பல நாடுகளில் (இந்தியா உட்பட) தீவிரவாதிகளால் மக்கள் பணயக்கைதிகளாக பிடித்த வைத்திருந்தபோது அந்த நாட்டு அரசாங்கங்கள் என்ன செய்தது. தீவிரவாதிகள் அவர்களை விடவில்லை என்ற காரணத்துக்காக மக்களையும் தீவிரவாதிகளையும் சேர்த்து ஒன்றாக அழித்தார்களா என்ன?. என்ன நடந்தமு என்று அனைவருக்குமே தெரியும்.
நீங்கள் என்ன செய்கிறீர்கள் அவர்கள் விடவில்லை அதனால் எல்லோரையும் அழிக்கின்றோம் என்கிறீர்களே என்னய்யா நியாயம் இது?//
தோழர் ஈழச் சோழனுக்கு வணக்கங்கள்.
எங்களைப் போன்றவர்களை வெங்காயங்கள் என்றால் உங்களைப் போன்றவர்களை அழுகிய வெங்காயம் என்பதா???
தீவிரவாதிகள் மக்களை பணயக்கைதிகளாக பிடித்து வைத்திருப்பது வேறு ஐயா... தமிழ் மக்களுக்காக போராடுகிறோம் என்று சொல்லிக்கொண்டு அந்த மக்களிடமே
பணத்தை பலவந்தமாக வாங்கிக்கொண்டு அவர்களையே இப்போது பணயக்கைதிகளாக பிடித்து வைத்திருப்பதைத்தான் பிழை என்கிறோம். புரிந்துகொள்ளுங்கள்...
ஆனால் விடுலைப்(?)புலிகளை பயங்கரவாதிகள் என பயங்கரவாதிகளோடு ஒப்பிடுவதன் மூலம் ஏற்றுக்கொண்டமைக்கு நன்றி.
mr.anany
I am not so sure whether you are really a tamilnadu tamil or just trying to be mischievous to put a wedge between all tamils.
probably the latter.
We are here commenting an action of a politician.
we will be doing the same to any eelam tamil politicians if they try to treat people as fools.
it is nothing to do with where do they come from ,it is to do with their actions as politicians.
By the way there are people and politicians we admire who are from Tamil nadu .
we haven't forgotten MGR ,people are still grateful for what he had done.
உண்மை விளம்பி (என்னத்தை விளப்புகிறீரோ) அவர்களே!
எனது கேள்வியை விளங்கிக்கொள்ளுங்கள் (வெங்காயம்் என்று சொல்கிறது இதுதான்). புலி செய்கிறது பிழை என்று வைத்துக்கொண்டால் என்ற அடிப்படையிலேயே அந்த கேள்வி அமைந்திருந்தது. கேள்விக்கு பதிலளியுங்கள். அதைவிட்டிட்டு புலி புலி என்று கலிபிடிக்கிறீங்கள் ஐயா. புலியை விடுங்கய்யா. எதுக்கெடுத்தாலும் புலிகளை சொல்லி சொல்லியே உங்களை மாதிரியானவர்கள் காலத்தை ஓட்டுகிறீர்கள். சரி இப்ப புலிகளின் கதையை முடித்து விட்டீர்கள் என்று சொல்கிறீர்கள். பார்ப்பம் என்ன செய்கிறீர்கள் என்று.
இந்தியாவுக்கு இனிமேல் பாகிஸ்தான் மட்டுமே எதிரியல்ல. தமிழீழ தமிழ் மக்களாகிய நாங்களும் எனி இந்தியாவின் எதிரிகளே என்று உலகில் உள்ள பல தமிழர்கள் கருதுகின்றார்கள். நானே பலமுறை பலர் கூற கேட்டிருக்கின்றேன்.
அதன் முதற்கட்டமாக ! விளையரட்டு ரசிகர்களே எனிமேல் இந்தியா விளையாடும்போது அது கோட்டை விடும் சந்தர்ப்பங்களில் சிவப்பு மஞ்சள் கொடியை காட்டி சந்தோசப்பட வேண்டும்.
தமிழர்களின் பிரச்சனை தீர ஒரெ வழி !
தமிழ் நாட்டில் உள்ள கேரள இனத்தவர்களை துரத்துவோம் என்று
கூறினால் போதும்.
இலங்கைப்பிரச்சனை மட்டுமல்ல, காவிரி,முல்லை ,பெரியாறு,மூணாறு
எனப் பல பிரச்சனை ஒரே நாளில் தீரும்.
ஆனால் அதை விடுத்து கண்டதையும்,உண்பதையும் செய்வதால்
ஒரு பயனுமில்லை.
Mr.Eela cholan...
I'm not supporting this government. But i'm opposing LTTE. Haven't you seen those videos those were showing LTTE attacking people?
You said 'let's take LTTE as a terrorist group for a talk', but you didn't say that they are terrorists. That's he point i wanted to tell you.
Anna,big shot for all poltician and all potician suppoters.Very good chance.Anyway carefull.
போர போர்க்கில வடிவெலு காமெடி எல்லாம் புஷ்வானம் ஆஜிடும் போல....... என்ன கொடுமை சார் இது....
@ Anonymous, (April 28, 2009 2:45 PM)
Dear Anonymous,
If you don’t anything just shut up read the blog or go and sleep with Karuna-(Sleeping man).
We are expecting India to help Sri Lankan Tamil, Yes 100% true. B’coz India is the main Weapon provider and the helping Sri Lanka to destroy Tamil people.
& you said, “All the Lankan’s Tamils...sitting in abroad...and blaming Indian politicians...”
What the hell, are u alive or Sleeping? Dude better you go through the international news sites/tv.
All over the world Sri Lankan Tamil people only fighting for SL Tamil. (Strike/Fasting...etc).
Mind it, Indian dumb politicians are using Sri Lankan Tamils; just to get votes (...from you). Shame on Indian Politics/You...
லோஷன் அண்ணா நிறுவன விடுமுறை, (விடுமுறைனா இது கொஞ்சம் வித்தியாசமான விடுமுறை கம்பனிகள் கொடுக்க விரும்பாத அதிக நாள் விடுமுறை. இப்பல்லாம் இலங்கையில நிறைய கம்பனிகள் இப்படி விடுமுறை விடுறாங்க, சில கம்பனிகள் நிரந்தரமாகவே ஊழியர்களுக்கு விடுமுறை விட்டுடுறாங்க) இதனால் தங்களின் பதிவை பார்க்கமுடியாமல் போனது. எப்படியோ பதிவுலகை கொஞ்சம் மறந்ததாய் கற்பனை செய்து கொண்டேன்.
லோஷன் அண்ணா இன்றுஉங்களின் பதிவை பார்த்தேன்.
நல்லதோர் விடயத்தை அனைவருக்கும் உறைக்கும் படி சொல்லியிருக்கிறீர்கள். கடந்த சில நாட்களாக இந்திய தேர்தல் மேடைகளில் கூட லோஷன் அண்ணா குறிப்பிட்டது போன்ற விடயம்தான் பல்லவி சரணம் எல்லமே.
எம் இலங்கை தமிழர்களின் உயிர் நாடிகளில் விஷம் தடவிய வாள் வைக்கப்பட்டும், அதே வாளினால் உயிர்நாடிகள் அருக்கப்பட்டும் இருக்கின்ற இப்படியான நேரங்களிலும், எம்மவர்கள் பகடைக்காய் ஆக்கப்படுவது கதறிஅழ வேண்டியவிடயம்.!
//ஏதோ நடத்துங்க... நடத்துங்க...
ஆனால் எம்மையும் - தமிழக அப்பாவிகளையும் (அப்பாவி போல் நடிப்பவர்களையல்ல) இளிச்சவாயர்கள் என்று நினைத்து ஏமாற்றி விடலாம் என நினைக்காதீர்கள்! //
நல்லா சொன்னீங்க அண்ணா..!
அண்ணா!!! வெந்த புண்ணுக்கு மருந்து போடுறதை விட்டுடு எல்லாரும் யாரு பிழை, என்ன நடந்தது என்று கதைக்கினம்... இப்ப எங்களுக்கு தேவை உயிர்ப் பயம் இல்லா வாழ்க்கை மட்டும் தான்... இலங்கை அரசாங்கம் அதை தமிழருக்கு தரவே வாய்ப்பில்லை... கையாகலாத்தனத்தில தானே உங்களை நோக்கி கை கூப்பிறம்.. கடவுளை மட்டும் நோக்கி கூப்பிய கரங்களை... இந்தியா படையையும் உதவியையும் மட்டும் திரும்பி வாங்கட்டும், அது போதுமே... எங்களுக்கும் வீரம் இருக்கு...
சோனியா கந்தி தமிழ் நாடு வரப்போறன் என்றவுடன், வந்தால் ஓரே மேடையில் இருக்க வேண்டி வந்தாலும் எண்டு இந்த பரதேசி பண்ணாடை கருனானிதி ஆஸ்பத்திரியில போய் படுத்திட்டுது... (கீழ் தரமான தமிழிற்கு மன்னிக்கவும்.. இந்த மாதிரி உயிரினத்தை விமர்சிக்க அன்புத்தமிழை பாவிக்க சிறுவன் விரும்பவில்லை) காமடி என்ற ரீதியில் அண்ணண் (சும்மா தான்.. அதுக்காக இவற்றை கதையையும் நம்பாதீங்கோ) வடிவேலு இந்த கூறுகெட்ட கருனானிதிக்கு பக்கத்தில நிக்கஏலாது...
நாய்கூட்டம்
Post a Comment