ஐந்தாம் வகுப்பும் அமெரிக்காவும்

ARV Loshan
21


இது நேற்று இரவு கஞ்சிபாய் எனக்கு தொலைபேசியில் சொன்ன கதை..
நாட்டு நடப்புடன் சம்பந்தப்பட்டது என்றார்..


சரி எனக்குத் தான் புரியல.. உங்களுக்காவது புரியுதா என்று பார்த்து எனக்கு சொல்லுங்களேன்..




ஒரு கிராமத்துப் பாடசாலை ஆசிரியர்.. அவரது பாடசாலையில் பல தரப்பட்ட மாணவர்கள். வருங்காலப் பட்டதாரிகள் முதல்,மாடு மேய்க்கத் தான் தகுதி எனப்படும் மக்குகள் வரை பல தரம்..


ஒரு நாள் ஆசிரியருக்கு நகர்ப்புற உயர் பாடசாலை ஒன்றில் மாற்றல் வாய்ப்புக் கிடைத்தது..
அவர் மாற்றலாகி செல்லும் போது தன்னுடன் சில மாணவர்களையும் அழைத்து சென்று அவர்களுக்கான கல்வி வாய்ப்புக்களை அதிகரிக்கலாம் என்று நினைத்தார்.


கெட்டிக்கார மாணவர்கள் சிலரைத் தேர்ந்தெடுத்த அவர், இவர்களுடன் மூன்றாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த கொஞ்சம் துறு துறு துடிப்பான பையனையும் கூட்டிக் கொண்டு போனார்.


பையன் கொஞ்சம் துடிப்பாக இருந்ததால் வகுப்பு உயர்வு (promotion) கொடுத்து ஐந்தாம் வகுப்பில் அவனை சேர்த்து விட்டார்.


நகர்ப்புற நல்ல பாடசாலையில் மற்ற மாணவர்களும் அந்த ஆசிரியரும் வசதிகளுடன் தங்கள் தகுதி,திறமையையும் பெருக்கிக் கொள்ள இவனோ ஐந்தாம் வகுப்பிலும் மூன்றாம் வகுப்பு மாணவன் போலவே நடந்துகொண்டான்;குழப்படி வேறு; மற்றவர்களுக்கும் பல தொல்லைகள்.. இன்னும் நிறையப் பிரச்சினைகள்&விவகாரங்கள் இவனால்..


பல தடவை சொல்லிப் பார்த்தும்,அறிவுரை கூறியும்,எச்சரித்தும் இந்த மாணவன் திருந்தாததால் ஒன்றும் இனி செய்ய முடியாத நிலையில் ஆசிரியர் அதிபருடன் பேசி இவனைப் பாடசாலையிலிருந்து நீக்கி வெளியே அனுப்பி விட்டார்.


இனி என்ன செய்வது என்று யோசித்த மாணவன், மீண்டும் கிராமத்திலிருந்த பாடசாலைக்குப் போனான்.அங்குள்ள அதிபரிடம் கெஞ்சிக் கூத்தாடி மூன்றாம் வகுப்பாவது தருமாறு கேட்டு மீண்டும் மூன்றாம் வகுப்பிலிருந்து படிக்க ஆரம்பித்தான்.


யாராவது ஏன் அந்த நல்ல பாடசாலையிலிருந்து வந்தாய் எனக் கேட்டால் "பாடசாலையா அது.. ஒரு வசதி இல்லை..சிறை மாதிரி.. ஒழுங்காக கற்பிப்பதும் இல்லை..அந்த ஐந்தாம் வகுப்பை விட இங்கே மூன்றாம் வகுப்பே பெட்டர்"
என்று சொல்கிறானாம் அந்த மூன்றாம் வகுப்புக்காரன்.




கலி காலம் லோஷன்.. என்று பெருமூச்செறிந்தார் கஞ்சிபாய்..
எல்லாமே சுத்த சூனியமாக இருந்தாலும்.. ம்ம் சொல்லிவிட்டு தொலைபேசியை வைத்தேன்..


இன்று அலுவலகத்தில் இந்தக் கதையை சொன்னவுடன், ஹிஷாம்(முன்பு பதிவராக இருந்தவர் - மறுபடி எப்ப தொரே எழுதப் போறீங்க) இந்தக் கதையை தான் கற்றது கையளவு நிகழ்ச்சியில் இன்று சொல்லப் போவதாக உரிமையைப் பெற்றுக் கொண்டார்.. 


ஒரு நான்கு மணியளவில் இதை அமெரிக்காவில் நடந்த கதையாக சொல்வார் அல்லது சொல்லியிருப்பார்...

ஹிஷாம் சொல்வது போலவே கந்தசாமி அண்ணே கதையைத் தவற விடாதேங்கோ..



Post a Comment

21Comments

Please Select Embedded Mode To show the Comment System.*