போடுங்கம்மா வோட்டு..

ARV Loshan
14
தேர்தல் பிரசாரங்கள் சூடு பிடித்திருக்கும் இந்த நேரத்தில் தேர்தலில் நிற்கும் எனது நண்பரொருவர் தனக்கு கொஞ்சம் காரசாரமான பிரசார உரை ஒன்றை எழுதித் தருமாறு கேட்டிருந்தார்.
அவரது அன்பைத் தட்ட முடியாமல் உரை ஒன்றை எழுதி அவரிடம் கொடுத்தேன்.


அவர் முதலிலேயே சொல்லி வைத்தது போல மக்களைக் கொஞ்சம் உற்சாகப் படுத்தி அவர்களிடமிருந்து கை தட்டல்களை வாங்குவதற்கென்றே சில விஷயங்களையும் பொடி வைத்து, சூடாக எழுதிக் கொடுத்திருந்தேன்.


பார்த்துக் கொள்ளுங்கள்;தயார்ப் படுத்தி வாசிப்பது போலல்லாமல் பேசுங்கள் என்றெல்லாம் எச்சரித்தே கொடுத்தேன்.


கூட்டம் நடைபெற்ற அடுத்த நாள் காலையில் அரசியல்வாதி நண்பரின் செயலாளரிடமிருந்து தொலைபேசி அழைப்பு..


"என்னைய்யா இப்படியா பேச்சு எழுதிக் கொடுப்பீர்.. நம்ம ஆளு நேற்று சொதப்பிட்டார் லோஷன்"


"அதிர்ச்சியுடன் ஏன் என்னாச்சு? நல்லாத் தானே எழுதிக் குடுத்தேன்"


"சும்மா எழுதிக் குடுக்க வேண்டியது தானே.. அதென்ன சிட்டுவேஷன் எல்லாம் எழுதிக் குடுத்தீங்க?" என்றார் செயலாளர்.


அதுக்குப் பிறகு தான் விஷயமே புரிந்தது..


நம்மவர் கைதட்டல் வாங்கவேண்டுமென்று எழுதிய பஞ்ச் வசனங்களுக்குப் பிறகு 'கைதட்டலுக்கு சிறு இடைவெளி கொடுங்கள்' என்று தடித்த எழுத்துக்களில் எழுதிக் கொடுத்திருந்தேன்.
நம்ம ஆள் அதையும் சேர்த்து வாசித்திருக்கிறார்..


நல்ல காலம் வாக்காளப் பெருந்தகைகள் மொத்தாமல் பக்குவமாக சிரித்துவிட்டு அனுப்பிவிட்டார்கள்.. ஆனால் வாக்கு இவருக்குத் தான் போடுவார்களா என்பது முடிவுகள் வந்த பிறகு தான் தெரியும்.
மக்கள்ஸ் கொஞ்சம் யோசித்துப் பார்த்து செய்யுங்க.. ;)


அதுக்குப் பிறகு ஒரே ஒரு நிம்மதி.. நம்ம ஆள் என்னிடம் பிரசார உரை,புண்ணாக்கு என்று எந்தவொரு விடயமும் கேட்பதில்லை..


பி.கு - அண்மையில் இன்னொரு அன்புக்குரிய & நன்றிக்குரிய அரசியல் தர்மசங்கடம் இடம்பெற்றது. அதுபற்றி பிறகு சொல்கிறேனே.அதுக்கு முதலில் தற்போதைய அரசியல்,தேர்தல் கள நிலவரங்கள் பற்றி எப்படியாவது ஒரு பதிவு இட்டுவிடுகிறேன்.


Post a Comment

14Comments

Please Select Embedded Mode To show the Comment System.*